Jump to content

மொழியால் ஒன்றுபட்ட தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் அரசியல் தளத்தில் ஒன்றுபடவேண்டும் : கனேடியவாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் சுமந்திரன் உரை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மொழியால் ஒன்றுபட்ட தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் அரசியல் தளத்தில் ஒன்றுபடவேண்டும் : கனேடியவாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் சுமந்திரன் உரை

(நா.தனுஜா)

இலங்கையில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கின்ற, மொழியால் ஒன்றுபட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் ஒன்றிணைந்து செயலாற்றுவதன் ஊடாக மாத்திரமே பேரினவாதத்தின் அடக்குமுறைகளை வெற்றிகொள்ளமுடியும்.

தமிழ்பேசுபவர்கள் வாழ்கின்ற, 'தமிழ்' என்ற மொழி அடையாளத்தைக்கொண்ட பிரதேசத்தில்தான் நாங்கள் அதிகாரப்பகிர்வைக் கேட்கின்றோம். எனவே இவ்விடயத்தில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைவதன் ஊடாக அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான வாய்ப்பு பன்மடங்காக உயரும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் இலங்கை முஸ்லிம் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்த்தேசியக்ககூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கும் கனடாவில் வசிக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் புதன்கிழமை கனடாவிலுள்ள அமானா நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு புலம்பெயர் இலங்கை முஸ்லிம்கள் முன்னிலையில் உரையாற்றுகையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

எம்மால் முன்னெடுக்கப்பட்ட பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி, காத்தான்குடியை வந்தடைந்தபோது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் திரண்டுவந்து எம்மைச் சந்தித்தது. 

ஆனால் ஒரு அரசியல் தலைவர்கூட வரவில்லை. அதனைத்தொடர்ந்து ஓட்டமாவடி உள்ளடங்கலாக முஸ்லிம்கள் செறிந்துவாழும் அனைத்துப் பகுதிகளிலும் அதேபோன்ற வரவேற்பைப் பெற்றோம். கிண்ணியாவில் மாத்திரமே ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினர் துணிந்துவந்து எம்முடன் கலந்துரையாடினார்.

நாங்கள் இஸ்லாமியர்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுப்பதாகப் பாராட்டுகின்றார்கள். அந்தப் பாராட்டு எமக்கு மனநிறைவைத் தருகின்றது. அதேவேளை தமிழ்மக்களின் உரிமைகளுக்காக முஸ்லிம் குரல்கள் எப்போது எழும் என்று நாங்கள் ஏக்கத்தோடு காத்திருக்கின்றோம். 

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் ஒவ்வொரு கிராமங்களிலிருந்தும் எம்மை வந்து சந்தித்த முஸ்லிம் மக்கள் அவர்களது கிராமத்தின் எல்லையுடன் நின்றுவிட்டார்கள். 

அப்போது பேரணியில் மாத்திரமல்ல, அரசியல் பயணத்திலும் எம்மோடு இணைந்து கைகோர்த்து முழுத்தூரத்திற்கும் வரவேண்டும் என்று அவர்களிடம் கூறினேன். அப்போதுதான் எமது இரு சமூகங்களும் இலங்கையில் தலைநிமிர்ந்து வாழமுடியும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கென வௌ;வேறு அடையாளங்கள் இருக்கின்றன. முஸ்லிம் சமூகத்திற்கென தனித்த அடையாளங்கள் காணப்படுகின்றன என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். 

ஆனால் இலங்கையில் எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மையினராக இருக்கின்ற, மொழியினால் ஒன்றுபட்ட எமது இரு சமூகங்களும் ஒன்றிணைந்து செயற்படாவிட்டால் எமக்கு விடிவு கிடையாது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேவேளை குறித்த பேரணியில் உரையாற்றியபோது தமிழர்களை 'சிறுபான்மையினர்' என்று கூறவேண்டாம் என்றும் 'மக்கள்' என்று கூறுமாறும் நான் வலியுறுத்தியிருந்தேன். அது தற்போது பூதாகரமான பிரச்சினையாக மாறியிருக்கின்றது. 

கடந்த வாரம் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்திருந்தோம். அதுபற்றி அவர்கள் தமது டுவிட்டர் பக்கத்தில் செய்த பதிவில் 'இலங்கையின் சிறுபான்மையின தமிழர்களின் உரிமைகளை உறுதிசெய்வதற்காக அமெரிக்கா துணைநிற்கும்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். 

எனவே தமிழர்களை அமெரிக்கா 'சிறுபான்மையினர்' என்றே கூறுகின்றது என்றும் அதனை நாம் எதிர்க்கவில்லை என்றும் சிலர் விமர்சித்தார்கள்.

இந்நிலையில் மீண்டும் திங்கட்கிழமை அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்தோம். அதுகுறித்து அவர்கள் செய்திருக்கும் டுவி;ட்டர் பதிவில் 'சிறுபான்மையினர்' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அந்த சுருக்கமான டுவிட்டர் பதிவில் எமக்கு நம்பிக்கையளிக்கக்கூடிய பல்வேறு விடயங்கள் உள்ளடங்கியிருந்தாலும், அவையனைத்தையும் விட்டுவிட்டு வெளியக அழுத்தங்களின் விளைவாகவே தற்போது 'மக்கள்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகின்றது.

அவற்றைக் கருத்திலெடுக்காவிடினும், இவ்வாறானவர்கள் மத்தியிலேயே நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். மக்களுக்கு நன்மையளிக்கின்ற நியாயமானதும் நீதியானதுமான விடயங்களைச் செய்வதில் நாம் ஒருபோதும் பின்நிற்கமாட்டோம். 

அதேவேளை இலங்கைவாழ் சிங்களவர்கள் உள்ளடங்கலாக எந்தவொரு இனக்குழுமத்திற்கும் தீமையை ஏற்படுத்துகின்ற விடயங்களை நாங்கள் செய்யமாட்டோம். நாம் பெரிதாக எதனையும் கேட்கவில்லை. இலங்கையில் சமபிரஜைகளாக வாழ்வதற்கான உரிமையையே கோருகின்றோம்.

சமத்துவமான பிரஜைகளாக வாழ்வதென்பது 'ஒரே நாடு, ஒரே சட்டம்' என்ற கொள்கைக்கு அமைவானதல்ல. மாறாக 'இலங்கையர்கள்' என்ற பொதுவான அடையாளம் அனைவருக்கும் இருக்கலாம். ஆனால் அதற்குள்ளே இருக்கக்கூடிய தனித்துவமான, பிரத்யேகமான அடையாளங்கள் உறுதிசெய்யப்படவேண்டும். அதனூடாகவே இலங்கையர் என்ற அடையாளம் வலுவடையும்.

இவ்வாறானதொரு பின்னணியில் அடுத்த தேர்தலிலே இஸ்லாமிய சகோதரர்கள் எமக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். மக்கள் மத்தியிலே அவ்வாறானதொரு நிலை உருவாகிக்கொண்டிருக்கின்றது. 

ஆயுதப்போராட்டத்திற்கு முன்னரான காலப்பகுதியில் தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான உறவு மிகநெருக்கமானதாகக் காணப்பட்டது. இருப்பினும் ஆயுதப்போராட்டத்தினால் இரு சமூகங்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டன. 

அப்போராட்டம் முடிவடைந்து தற்போது 12 வருடங்கள் கடந்துள்ளன. தமிழ் - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான நல்லுறவை முன்னரைப்போன்று மாற்றியமைப்பதற்கு எமக்கு பன்னிரு வருடங்கள் தேவையா? மொழியால் ஒன்றுபடுவதென்பது மிகமுக்கியமானதாகும். மதம் சார்ந்த அடையாளங்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டவையாகும். 

ஆனால் மொழிதான் எம்மை ஒன்றுபடுத்தியிருக்கின்றது. தமிழ்பேசுபவர்கள் வாழ்கின்ற, 'தமிழ்' என்ற அடையாளத்தைக்கொண்ட பிரதேசத்தில்தான் நாங்கள் அதிகாரப்பகிர்வைக் கேட்கின்றோம். எனவே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இதனை முன்னெடுக்கும் பட்சத்தில், அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான வாய்ப்பு பன்மடங்காக உயரும்.

இலங்கையிலே நாங்கள் ஒன்றாக வாழ்வதற்கான சவாலாக இருக்கின்ற ஒரேயொரு விடயம் பேரினவாதமாகும். ஆகவே அதனை எதிர்கொள்வதற்கு நாங்கள் நாளாந்தம் வசிக்கின்ற பகுதியிலே எமக்கென தீர்மானங்களை மேற்கொள்கின்ற, நிர்வகிக்கின்ற அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும். 

அவ்வாறு வழங்கப்படும் அதிகாரங்கள் உச்சபட்சமானவையாக இருக்கவேணடும் என்ற இலக்கை முன்னிறுத்தி தமிழ், முஸ்லிம் சமூகங்கள் செயற்படுமானால், அது வெகுவிரைவில் எம்மை வந்தடையும். 

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்படும் மிகமோசமான அடக்குமுறையின் விளைவாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலேயே உருவாகியிருக்கக்கூடிய ஒற்றுமை அரசியல் தளத்தை நோக்கி விரிவடையவேண்டும் என்று வலியுறுத்தினார். 

 

https://www.virakesari.lk/article/117916

Link to comment
Share on other sites

3 hours ago, கிருபன் said:

இந்நிலையில் மீண்டும் திங்கட்கிழமை அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள அதிகாரிகளைச் சந்தித்தோம். அதுகுறித்து அவர்கள் செய்திருக்கும் டுவி;ட்டர் பதிவில் 'சிறுபான்மையினர்' என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

மனித உரிமைக்கும் சமாதானத்துக்குமான அமைப்புகள், சிறீலங்காவில் உள்ள தமிழர்களை சிறுபான்மைக் குழு (Minority Groups) என்றே குப்பிட்டுள்ளதை, இந்த வீடியோவில் 4:44 வது நிமிடத்திலும், 4:56 வது நிமிடத்திலும் காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் கனடாவில போய் நின்று கத்திப்பிரயோசனம் இல்லை காரணம் கடந்த காலத்தை இவர் மறந்திட்டார் இல்லையேல் சம்பந்தரோட சேர்ந்து அவருக்கு இருந்த அறளை நோய் தொற்றுவியாதியாகி இவருக்கும் வந்திட்டுது.

கிழக்கில் மாகாணசபைத் தேர்தலில் ராவூப் கக்கீம் தலைமையிலான முஸ்லீம்காங்கிரஸ் கூடிய ஆசனங்களையும் தமிழர்தரப்பு அடுத்ததாகவு, சிங்களத்தரப்பு அதற்கு அடுத்ததாகவும் வந்தபோது சம்பந்தர் கக்கீமிடம் கேட்டுக்கொண்டார் நாம் கூட்டாகச்சேர்ந்து ஆட்சி அமைப்போம் முதல் அமைச்சர் பதவியையும் முக்கிய அமைச்சுக்களையும் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கோ என ஆனால் கக்கீம் என்ன செய்தார் எண்டால் மகிந்தவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துவிட்டார் 

இப்படியான தொப்பி பிரட்டியளிடம் சுமந்திரன் அரசியல் செய்கிறார்.

சிங்களம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மேற்குலகத்துக்கும் தண்ணிகாட்டுவதுபோல் 

இலங்கை முஸ்லீம்களும் சுங்களத்துக்கும் தமிழருக்க்கும் தண்ணிகாட்டி தங்கட காரியத்தைச் சரிவரக்கொண்டுபோவினம் இப்போது முஸ்லீம்களுக்கு சிங்களவனை மடக்க தமிழர் தரப்புத்தேவைப்படுகுது சுமந்திரன் வழக்கமான தனது தரகு வேலையை ஆரம்பித்துவிட்டார் அப்பதானே எதிர்வரும் சுதந்திர தினத் தேனீர் விருந்தில் கலந்துகொள்ள மகிந்ததரப்பு அழைப்புவிடுக்கும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Elugnajiru said:

இப்படியான தொப்பி பிரட்டியளிடம் சுமந்திரன் அரசியல் செய்கிறார்

குணம் குணத்தோடுதான் சேரும். இவர் கெஞ்சினால் அவர்கள் மிஞ்சுவார்கள். போனால் போங்கள் என்று விட்டுப் பாருங்கள் தானாக வருவார்கள். நாங்களே சிங்களத்துக்கு தோள் கொடுத்து போரை வெற்றியடையச் செய்தோம் என்று பங்களிப்பார்கள். நாங்கள் தனிநாடு கேட்டால் தங்களுக்கும் வேண்டும் பங்கு என்று வரிஞ்சு கட்டிக்கொண்டு வருவார்கள். புலம் பெயர் நாட்டில் தாங்கள் தமிழரின் உரிமைக்காக போராடுகிறோம், உழைக்கிறோம் என்று கூவுவார்கள். உள்நாட்டிலோ ஏக்கய என்பார்கள். இரண்டு  கணக்கும் கூட்டிப்பார்த்தால் சரியாத்தான் வருது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 எதிர்ப்பு வெளியிட்ட பின்தான் சிறு  குழுக்கள் தமிழ் மக்களாக மாறியிருக்கிறது என்பது ஐயாவுக்கு தெரியேல்லை. அதில் மாற்றம் தேவை என ஏற்றுக்கொண்டபடியாற்தான் மாற்றியிருக்கிறார்கள். இப்படித்தான் ஏக்கய என்கிற சொல்லையும் மாற்றி விளக்கம் கொடுத்துக்கொண்டு திரிந்தவர். அது சரி தங்களுக்கு காத்தான் குடியில் இரண்டு மாலை விழுந்ததாம் அதேன் அப்படி நடந்ததென்றால்! தாங்கள்தானாம் முஸ்லீம்களுக்காக குரல் கொடுக்கிறார்களாம். இருக்காதா? அவர்களுக்கு கதைப்பதற்கு அவர்களால் தெரிவு செய்யபட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்,  முஸ்லீம் நாடுகள் இருக்கின்றன. ஆனால் எங்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு, வசதி வாய்ப்புகளை அனுபவித்துக்கொண்டு, எங்களை நடுவீதியில் அலையவிட்டு, கண்ட ஓநாய்களுக்கு பின்னால் ஓடவிட்டு சென்றால் இரண்டு மாலை என்ன ஆயிரம் மாலைகள் விழும். அதுசரி உங்களுக்கு முஸ்லீம்களோ அல்லது சிங்களவரோ வாக்கு அளிப்பதில்லையே! அல்லது உங்கள் கட்சியின் பெயரில் ஒரு சிங்களவரோ, முஸ்லீமோ தேர்தலில் நின்று வென்று தமிழ் மக்களுக்காக உழைப்பார்களா? அல்லது தங்கள் கட்சியிலே இருந்து கொண்டு ஒடுக்கப்பட்ட எமக்காக குரல் கொடுப்பார்களா?  உங்கள் பேச்சு கைத்தட்டலுக்கு நன்றாக இருக்கும், நடைமுறைக்கு  சாத்தியமில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2021 at 17:20, கிருபன் said:

மொழியால் ஒன்றுபட்ட தமிழ் - முஸ்லிம் சமூகங்கள் அரசியல் தளத்தில் ஒன்றுபடவேண்டும் : கனேடியவாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் மத்தியில் சுமந்திரன் உரை

கிழக்கு மாதிரியே வடக்கிற்கு முதல்வர் வேட்பாளராக முசுலீம் சமூகத்தை சார்ந்த ஒருவரை தெரிவு செய்யும் பட்சத்தில் ஒன்றுபட சான்ஸ் உள்ளது அதுவும் குறுகிய காலத்திற்கு..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி தெரிஞ்சுதான் இப்படி கூனி குறுகிப்போய் உள்ளோம். இதற்கு மேல் முதுகும் வளையாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/11/2021 at 12:50, கிருபன் said:

ஆனால் மொழிதான் எம்மை ஒன்றுபடுத்தியிருக்கின்றது. தமிழ்பேசுபவர்கள் வாழ்கின்ற, 'தமிழ்' என்ற அடையாளத்தைக்கொண்ட பிரதேசத்தில்தான் நாங்கள் அதிகாரப்பகிர்வைக் கேட்கின்றோம். எனவே தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து இதனை முன்னெடுக்கும் பட்சத்தில், அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான வாய்ப்பு பன்மடங்காக உயரும்.

முதலில் இலங்கை முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரு அணியில் சேர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு பலமுள்ள. அணியாக மாற முயற்சி செய்யுங்கள் தனியா வடக்கு கிழக்கு  மட்டும் தேர்தலில் போட்டி இடமால். நாடுமுழுவதும் போட்டியிடவும். மலையகத்தமிழர்...அமைப்புகளையுமிணைந்து...தமிழர்களிடம் ஆயிரம். பிரிவுகளை வைத்துக்கொண்டு முஸ்லிம்களை இணை என்றால்  எப்படி இணைவார்கள். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kandiah57 said:

முதலில் இலங்கை முழுவதும் உள்ள தமிழர்கள் ஒரு அணியில் சேர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு பலமுள்ள. அணியாக மாற முயற்சி செய்யுங்கள் தனியா வடக்கு கிழக்கு  மட்டும் தேர்தலில் போட்டி இடமால். நாடுமுழுவதும் போட்டியிடவும். மலையகத்தமிழர்...அமைப்புகளையுமிணைந்து...தமிழர்களிடம் ஆயிரம். பிரிவுகளை வைத்துக்கொண்டு முஸ்லிம்களை இணை என்றால்  எப்படி இணைவார்கள். ?

இல்லாத நாய் வாலை நிமிர்த்துவது எப்படி?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/11/2021 at 01:07, Elugnajiru said:

சுமந்திரன் கனடாவில போய் நின்று கத்திப்பிரயோசனம் இல்லை காரணம் கடந்த காலத்தை இவர் மறந்திட்டார் இல்லையேல் சம்பந்தரோட சேர்ந்து அவருக்கு இருந்த அறளை நோய் தொற்றுவியாதியாகி இவருக்கும் வந்திட்டுது.

கிழக்கில் மாகாணசபைத் தேர்தலில் ராவூப் கக்கீம் தலைமையிலான முஸ்லீம்காங்கிரஸ் கூடிய ஆசனங்களையும் தமிழர்தரப்பு அடுத்ததாகவு, சிங்களத்தரப்பு அதற்கு அடுத்ததாகவும் வந்தபோது சம்பந்தர் கக்கீமிடம் கேட்டுக்கொண்டார் நாம் கூட்டாகச்சேர்ந்து ஆட்சி அமைப்போம் முதல் அமைச்சர் பதவியையும் முக்கிய அமைச்சுக்களையும் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கோ என ஆனால் கக்கீம் என்ன செய்தார் எண்டால் மகிந்தவுடன் சேர்ந்து ஆட்சி அமைத்துவிட்டார் 

இப்படியான தொப்பி பிரட்டியளிடம் சுமந்திரன் அரசியல் செய்கிறார்.

சிங்களம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் மேற்குலகத்துக்கும் தண்ணிகாட்டுவதுபோல் 

இலங்கை முஸ்லீம்களும் சுங்களத்துக்கும் தமிழருக்க்கும் தண்ணிகாட்டி தங்கட காரியத்தைச் சரிவரக்கொண்டுபோவினம் இப்போது முஸ்லீம்களுக்கு சிங்களவனை மடக்க தமிழர் தரப்புத்தேவைப்படுகுது சுமந்திரன் வழக்கமான தனது தரகு வேலையை ஆரம்பித்துவிட்டார் அப்பதானே எதிர்வரும் சுதந்திர தினத் தேனீர் விருந்தில் கலந்துகொள்ள மகிந்ததரப்பு அழைப்புவிடுக்கும்.

 

தமிழ்தேசியக் கூட்டமைப்பே கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தது. அப்படியிருந்தும் ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் முஸ்லிம் காங்கிரசுக்கு முதலi;ச்சர் பதவியை விட்டுத்தருவதாக கேட்டும் முஸ்லிம் ;காங்கிரஸ் மகிந்தவின் கட்சியோடு சேர்ந்து ஆட்சி அமைத்துக் கொண்டது.அதே நேரம் பிள்ளையான் ஆதரவு தருவதாக கேட்டும் சம்பந்தர் இணங்கவில்லை. முஸ்லிம் காங்கிரசை முதலமைச்சர் பதவியை விட்டுத்தருவதாகக் கூறி ஆதரவு கேட்டவர்கள் புpள்ளையாhனின் ஆதரவை ஏன் மநறுத்தார்கள். அதுவும் கிழக்கு மாகாணம் வடக்கைப் போல அல்ல சில விட்டுக் கொடுப்புகளை செய்து ஆட்சி அமைத்திருந்தால் திட்டமிட்ட சிங்க முஸ்லிம் குடியேற்றங்களையும் தடுத்திருக்கலாம். அதே சேரம் வடக்கில் பல உள்ளூராட்சி சபைகளை டக்ளசுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைத்த கூத்தும் நடந்திருக்கிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.