Jump to content

இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு

53 நிமிடங்களுக்கு முன்னர்
இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு

பட மூலாதாரம்,SANGARAN

இலங்கையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில், தமிழர் பிரதேசங்களில் இன்று (27) ''மாவீரர் தினம்'' அனுசரிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட ஈழப் போராட்டத்தில், முதலாவதாக உயிர்நீத்த போராளி என கூறப்படும் லெப்டினன்ட் சங்கர் (சத்தியநாதன்), 1982ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி உயிரிழந்தார். அவர் உயிர்நீத்த தினம், மாவீரர் தினமாக வருடா வருடம் நவம்பர் மாதம் 27ம் தேதி அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. ஈழப் போராட்டத்தில் உயிர்நீத்த உறவுகள் அனைவரையும், நவம்பர் மாதம் 27ம் தேதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இலங்கை தமிழர்கள் நினைவுகூர்கின்றனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் ராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் தினம் அனுசரிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவு தூபிகள் மற்றும் நினைவிடங்களில் ராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், முக்கிய சந்திகள் மற்றும் பிரதேச நுழைவாயில்களிலும் இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை காண முடிகின்றது.

மாவீரர் தினம் அனுஷ்டிப்பதற்கு முன்னதாக நீதிமன்றங்கள் தடை விதித்திருந்த போதிலும், தமிழர் தரப்பு நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூற அனுமதி கோரியிருந்தனர்.

இந்த நிலையில், சில நீதிமன்றங்கள் தடை விதித்த போதிலும், மேலும் சில நீதிமன்றங்கள் யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூற அனுமதி வழங்கியிருந்தன.

இந்த நிலையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த தமிழர் தரப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

நினைவேந்தல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் மாவீரர் என்று அழைக்கப்படும் லெப்டினன்ட் சங்கரின் வீட்டில் இன்று முற்பகல் ஈகை சுடரேற்றி நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது.

வவுனியா அஞ்சலி நிகழ்வு

பட மூலாதாரம்,KOGULAN

 
படக்குறிப்பு,

வவுனியா அஞ்சலி நிகழ்வு

இந்த நினைவேந்தல் நிகழ்வில் கேப்டன் பண்டிதரின் தாயாரும் கலந்துகொண்டுள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு ஈகை சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தி, அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

அத்துடன், வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதி யுத்தம் இடம்பெற்ற நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதேபோன்று, உயிர்நீத்த உறவுகளின் ஆத்மா சாந்தி வேண்டி, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலும் வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளன.

நந்திக்கடல் பகுதியில் அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, துரைராசா ரவிகரன், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு வருகைத்தந்த வழிபாடுகளை நடத்தியுள்ளார்.

இதேவேளை, உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதை நீதிமன்றம் தடுத்தது போன்று தெரியவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கின்றார்.

நீதிமன்றத்தின் முடிவு என்பது, அஞ்சலி செலுத்துவதற்கான தீர்ப்புதான் எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பின் எஸ்.சிறிதரனும், இன்றைய தினம் ''மாவீரர்கள்'' என்று விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் போற்றப்படும் முன்னாள் போராளிகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார்.

மேலும், வட மாகாண சபையின் முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம், உயிர்நீத்தவர்களை நினைவு கூர்ந்திருந்தார்.

வவுனியா அஞ்சலி நிகழ்வு

பட மூலாதாரம்,KOGULAN

 
படக்குறிப்பு,

வவுனியா அஞ்சலி நிகழ்வு

இதேவேளை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், மாணவர்களினால் மாவீரர்களுக்கு ஈகை சுடரேற்றி, முழந்தாளிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

முல்லைத்தீவு - கடற்படை பகுதியில் பெருந்திரளாக ஒன்று கூடிய மக்கள், யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கடுமையான பாதுகாப்புக்கு மத்தியிலும், மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மக்கள், யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து இன்று மாலை கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

''மாவீரர்கள்'' என்று அழைக்கப்படுபவர்கள் நினைவு இல்லங்களை தமிழ்த் தேசியக் கட்சிகள் அண்மையில் துப்புரவு செய்திருந்தன.

இதன்போது ராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்திய போதும், தாம் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டதாக தமிழர் தரப்பு கூறியிருந்தது.

மாவீரர் தினத்திற்கு நீதிமன்றங்கள் தடை விதிக்குமானால், நீதிமன்ற உத்தரவிற்கு அமைய, வீடுகளில் மாத்திரம் நினைவேந்தல்கள் நடத்தப்படும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்தது.

எனினும், பாதுகாப்பு தரப்பு இதற்கு தடை விதிக்குமானால், அந்த தடைகளையும் மீறி, மாவீரர் தினத்தை தாம் அனுஷ்டிப்பதாக செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டார்.

ஊடகவியலாளர் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு

தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறும் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன்.
 
படக்குறிப்பு,

தம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறும் ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன்.

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் செய்தி சேகரிப்பதற்காக சென்ற ஊடகவியலாளர் மீது ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியிருந்தனர் என்று குற்றம் சாட்டப்படுகிறது..

முள்ளிவாய்க்கால் பெயர் பலகையை காணொளிப் பதிவு செய்துகொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளருக்கு உடம்பின் பல்வேறு பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

எனினும், ராணுவ வீதி தடையைக் காணொளியாகப் பதிவு செய்துகொண்டிருந்த நபரை விசாரணை செய்ய முயற்சித்த போது, அவர் ராணுவத்திடமிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த வேளையிலேயே தடுமாறி வீழ்ந்ததாக ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

ராணுவத்தினர், ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவத்தை அடுத்து, ஊடகவியலாளரை போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளதாகவும், போலீஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-59445766

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கெடுபிடிகளுக்கு மத்தியில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை தீருவில் திடலில் இன்று மாலை 6.05 மணியளவில் பாதுகாப்பு தரப்பினரின் நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் திட்டமிட்டபடி இடம்பெற்றது.

IMG-20211127-WA0025.jpg

பருத்தித்துறை நீதிமன்றில் தடை உத்தரவை பெறுவதற்கு வல்வெட்டித்துறை பொலிஸார் இறுதி வரை முயன்று பலனளிக்காத நிலையில், நினைவு அஞ்சலி செலுத்துவதற்கு வந்தோரை அச்சுறுத்தும் பாணியில் பொலிசாரும் இராணுவத்தினரும் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.

பல்வேறு அச்சுறுத்தல் தடைகளையும் தாண்டி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே திடலுக்குள் இராணுவத்தால் உள்நுழைய அனுமதிக்கப்பட்ட உறவுகள் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்ததுடன் பொதுச் சுடர் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

IMG-20211127-WA0028.jpg

இதன்போது உறவுகளை இழந்தவர்கள், மதத் தலைவர்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை,இதனை கண்டு அஞ்சலி செய்ய தீருவில் திடலுக்கு வெளியே ஒன்று கூடி தீபங்களை ஏற்றி பொதுமக்கள் அஞ்சலித்த பொழுது மிகக் கேவலமான முறையில் சிவில் உடையில் இருந்த புலனாய்வுப் பிரிவினர் தீபங்களை தட்டி விட்டதுடன் அநாகரிகமான முறையில் செயற்பட்டனர்.

IMG-20211127-WA0027.jpg

இதேவேளை இந் அஞ்சலி நிகழ்வில் பங்குபற்றியவர்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவத்தினரும் பொலிசாரும் நடந்து கொண்டதுடன் ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மாமனிதர் நடராஜா ரவிராஜின் இல்லத்தில் சுடரேற்றி அஞ்சலி

பலத்த இராணுவ கண்காணிப்புக்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணம், சாவகச்சேரியிலுள்ள மாமனிதர் நடராஜா ரவிராஜின் இல்லத்தில் 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

3__4_.jpeg

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சி.சிவநேசன் ஆகியோர் தீபம் ஏற்றி அஞ்சலி செய்தனர்.

3__1_.jpeg

அஞ்சலி நிகழ்வில் பிரதான ஈகைச்சுடரினை மூன்று மாவீரர்களின் சகோதரன் சிவஞானம் சிவநேசன் ஏற்றி வைத்தார்.

இதனையடுத்து இராணுவத்தினர், போலீசார், மற்றும் இராணுவ  புலனாய்வாளர்களும் ரவிராஜின் வீட்டை சுற்றிவளைத்து வீட்டுக்குள்  நுழைந்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர். 

3__3_.jpeg

பின்னர் சாவகச்சேரி  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  சம்பவ இடத்திற்கு வருகை தந்து தடைசெய்யப்பட்ட நினைவுச் சின்னங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்களா என்று விசாரணை பின்னரே இராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றனர். 

யாழ்ப்பாணம் - சாட்டி

 

பலத்த இராணுவ கண்காணிப்புக்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் யாழ்ப்பாணம், சாட்டி பகுதியில் இன்று 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி பொதுமக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Chatty___10_.jpeg

Chatty___9_.jpeg

Chatty___12_.jpeg

Chatty___7_.jpeg

Chatty___8_.jpeg

Chatty___6_.jpeg

Chatty___5_.jpeg

Chatty___1_.jpeg

Chatty___2_.jpeg

Chatty___4_.jpeg

 

https://www.virakesari.lk/article/117994

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கெடுபிடிகளுக்கு மத்தியில் உணர்வெழுச்சியுடன் முல்லைத்தீவில் மாவீரர் நாள் நினைவேந்தல் !

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. 

IMG_9228__1_.jpg

முல்லைத்தீவு கடற்கரையில் தமிழரசு கட்சியின் பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் அவரது மனைவி உள்ளிட்டவர்கள் நினைவேந்தலை மேற்கொள்வதற்காக முற்பட்ட வேளை பீற்றர் இளஞ்செழியனை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

IMG_9223.jpg

இந்நிலையில் அவரது மனைவி வீதியில் இருந்து போராட்டம் மேற்கொண்டதுடன் என்ன தடைவந்தாலும் நினைவேந்தல் மேற்கொள்வேன் எனக் கூறி நினைவேந்தலை மேற்கொள்ள ஆயத்தங்களை மேற்கொண்ட நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் முல்லைத்தீவு கடற்கரையில் அவருக்கு ஆதரவாக ஒன்றுகூடினர்.

IMG_9220.jpg

IMG_9229.jpg

இதையடுத்து மக்கள் 06.05 மணிக்கு உணர்வெழுச்சியுடன் சுடர் ஏற்றி அஞ்சலி மேற்கொண்டனர்.

a37f48ba-e9c2-42d5-a1ee-586a33ddf363.jpg

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லம் , வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லம் ஆகிய இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன .

IMG_9234.jpg

IMG_9239.jpg

முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில்  உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல் !

 

முல்லைத்தீவு - அளம்பில் பகுதியில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாவீரர்களுக்காக  சுடரேற்றி  தனது அஞ்சலியை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டார்.

IMG_0964_resized_4_-_Copy.JPG

IMG_0923_resized_2_-_Copy.JPG

IMG_0931_resized_2_-_Copy.JPG

மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், சமூகசெயற்பாட்டாளர் பத்மநாதன் சுபாகரன் ஆகியோர் பங்குகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/117993

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னாரில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் நினைவேந்தல்

மன்னார் மாவட்டத்தில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்று சனிக்கிழமை மாலை 6.15 மணி அளவில் சுடர் ஏற்றி தாயக விடுதலைக்காக மரணித்தவர்களுக்கு நினைவேந்தல் செலுத்தப்பட்டது.

bf83da35-f6bc-49e1-a939-0633c19194ca.jpg

இன்று (27) காலை தொடக்கம் மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மாவீரர் தினத்தை கட்டுப்படுத்தும் வகையில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்த பட்டுருந்த நிலையில் தமிழர் தேசிய  வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் தலைமையில் மாவீரர்களுக்கான நினைவு அஞ்சலி இடம் பெற்றது. 

301e6047-2c06-476a-a233-1169f8b11a96.jpg

401369f7-e6b5-4ae7-b717-c8f5d0069432.jpg

5329b0ee-4144-4f07-b0a9-16b1414e56bd.jpg

36f0cd09-7817-4e1e-8aa5-3e73183f2321.jpg

இதன் போது அருட்தந்தை ஜெயபாலன் அடிகளார், மன்னார் நகர சபை தலைவர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,,மன்னார் நகரசபை உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

 

சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் நினைவேந்தல்

 

இலங்கை தமிழரசுக்கட்சியின் மன்னார் மாவட்ட அலுவலகத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை மாலை மாவீரர் நினைவேந்தல் இடம் பெற்றது.

1667d3d1-019e-481e-a408-cce1c63b31e1.jpg

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் குறித்த நினைவேந்தல் இடம் பெற்றது.

413df506-0976-4a6c-aae3-c73a9b6de7d9.jpg

e64f4317-87b4-4a92-b5f5-3cfc39d55a0b.jpg

5db0a6ee-716b-457e-844f-a4423b2b79e4.jpg

07cbd3b8-6722-4ad0-904b-73c4e424d205.jpg

90ec478c-67ea-4343-9f1d-854c63aa534a.jpg

இதன் போது மாலை  தமிழரசுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மாவீரர்களை நினைவு கூர்ந்து சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மன்னாரில் கடும் கெடுபிடிகளுக்கு மத்தியில் மாவீரர் நினைவேந்தல் | Virakesari.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் மாவீரர்தினம் அனுஸ்டிப்பு

காணாமல்போன உறவினர்களால் வவுனியாவில் மாவீரர்தினம் அனுஸ்டிப்பு

 

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மாவீரர்தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கபட்டது.  

IMG_6611.jpeg

மாலை 6.05மணிக்கு அகவணக்கம் செலுத்தபட்டு பிரதான ஈகைசுடர் ஏற்றிவைக்கபட்டது. 

மாவீரரின் தந்தை ஒருவரால் பிரதான ஈகை சுடர்ஏற்றி வைக்கபட்டது. அதனை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டது.  

IMG_6571.jpeg

9eb9b0a7-8825-49d8-b727-c85e003a6e92.jpg

de76cd6d-70d4-4f93-88cc-30574730a0d9.jpg

IMG_6613.jpg

மகாறம்பைக்குளம் பகுதியில் பிரத்தியேகமான இடம் ஒன்றில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

 

வவுனியா

 

மரணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வவுனியாவின் பல ஆலயங்களிலும் மணி ஒலிக்கச் செய்யப்பட்டதுடன் மக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

IMG20211127180651_01.jpg

பொது இடங்களில் ஒன்றுகூடி நினைவேந்தல் செய்வதற்கு நீதிமன்றம் ஊடாக பொலிசார் தடை விதித்திருந்ததுடன் இராணுவமும் பொலிசாரும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

IMG20211127180713_01.jpg

IMG20211127180956_01.jpg

IMG20211127180856_01.jpg

IMG20211127181149_01.jpg

இந்நிலையில் மரணித்த தமது உறவுகளுக்காக வவுனியாவில் உள்ள பல இந்து, கிறிஸ்தவ ஆலயங்களில் மணி ஒலிக்கப்பட்டதுடன் 6.07 இற்கு வீடுகளில் மக்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை, புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அரசியல் கைதியாக இருந்து விடுதலை செய்யப்பட்ட செ.அரவிந்தன் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் அவரது வீட்டிற்கு முன்பாக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தார். சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரித்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தினர்.

 

 

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் "தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள்" 

 

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஒழுங்கமைப்பில் வவுனியாவில் மாவீரர் மற்றும் போராளி குடும்பங்கள் கலந்து கொண்ட 2021ம் ஆண்டுக்கான "தமிழீழ தேசிய மாவீரர் எழுச்சிநாள்" நவம்பர் 27 இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

IMG_20211127_181751.jpg

கடற்புலி கப்டன் கிருபன், மேஜர் நகுலன் ஆகியோரின் உறவினரும், முன்னாள் போராளியுமாகிய பார்த்தீபன் பொதுச்சுடரை ஏற்றி வைத்தார். 

IMG_20211127_181045.jpg

IMG_20211127_181102.jpg

IMG_20211127_181130.jpgIMG_20211127_181143.jpgவவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவரும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் தமிழர் தாயக சங்கச் செயலாளருமாகிய கோ.ராஜ்குமார் அவர்களுக்கு நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கு வவுனியா பொலிஸார் நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெற்றிருந்த நிலையில், வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைமைக்குழு உறுப்பினர்களால் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 2021ம் ஆண்டுக்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் எழுச்சி நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.

 

சிறீதரன் கொழும்பில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி

 

தமிழ் தேசிய மாவீரர் நாளான இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கொழும்பில் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்.

01__2___2_.jpg

01__3___2_.jpg

 

01__1___2_.jpg

 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவ கெடுபிடிகளே மாவீரர் நினைவுகளை மக்கள் மனதில் அணையாமல் சுடர்விட்டு எரியச் செய்கின்றன,  நம் மாவீரரின் தியாகங்களை, மக்கள் மனதில் அவர்களுக்காய் ஏங்கும் ஏக்கத்தை உலகெங்கும் பறைசாற்றுகின்றன. அதே நேரம் இராணுவத்தினரின் மிலேச்சத்தனத்தையும் வெளிக்கொண்டு வருகிறது. அவர்கள் இறந்தாலும் மக்களின் விடுதலையையே உணர்த்துகிறார்கள். எதற்காக மடித்தார்களோ அதையே திரும்ப திரும்ப ஒவ்வொரு வருடமும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஏராளன் said:

இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு

ஏன் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று எழுதப்பட்டுள்ளது?

பிபிசி இன்னமும் கோர்த்துவிடுவதிலே தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

தமிழ் மக்களால் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு என்று எழுதினால் அப்படி என்ன தான் குறைந்து போய்விடும்.

எமது கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள், தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்டோம். என்று கூவிக்கூவி திரிந்தாலும் யதார்த்தம் அதுவல்ல நமக்கு வேண்டிய விடுதலை இன்னும் கிடைக்கவில்லை, மக்கள் அதற்காக போராடிக்கொண்டிருகிறார்கள்  என்பதையே இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

நாங்கள், தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்டோம். என்று கூவிக்கூவி திரிந்தாலும் யதார்த்தம் அதுவல்ல நமக்கு வேண்டிய விடுதலை இன்னும் கிடைக்கவில்லை, மக்கள் அதற்காக போராடிக்கொண்டிருகிறார்கள்  என்பதையே இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன!

முன்னரை விட இப்போது உலகெங்கும் ஆடம்பரமில்லாமல் அதிகளவு மாவீரர் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்து விட்டது. அதாவது உண்மையான தமிழன் எங்கிருக்கின்றானோ அங்கெல்லாம் மாவீரர் நிகழ்வுகள் அனுஷ்டிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chatty___1_.jpeg

 

மாவீரர்களுக்கு சிங்கள இராணுவம் அணிவகுப்பு மரியாதை... என்று எடுத்துக்கொண்டு இச்சூழலை கடந்து செல்வதே சிறப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்று கையறு நிலையில் நின்ற எம் வீரர்களை, போர்தர்மம் அறியாதவர்கள் இவ்வாறே கூடி நின்று அவர்களின் துகிலுரிந்து, கைகளையும் கண்ணையும் கட்டி, சித்திரவதை செய்து குதூகலித்து கொன்று கொண்டாடியது. ஆனால் அந்த காட்சிகளை மக்கள் பார்ப்பதை தடுப்பதிலிருந்து அவர்கள் தங்களை மறைத்து தங்கள் முகங்களை  புனிதர்களாக காண்பிக்க முனைந்தாலும், செயற்பாடுகள் இரத்தத்தை உறிஞ்ச காத்திருக்கும் கழுகுக் கூட்டங்கள் இவர்கள் என்பது மறைக்க முடியாத உண்மை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

ஏன் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று எழுதப்பட்டுள்ளது?

பிபிசி இன்னமும் கோர்த்துவிடுவதிலே தான் கண்ணும் கருத்துமாக இருக்கிறது.

தமிழ் மக்களால் மாவீரர் தினம் அனுஸ்டிப்பு என்று எழுதினால் அப்படி என்ன தான் குறைந்து போய்விடும்.

எமது கண்டனங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

BBC இந்திய/பார்ப்பன ஊதுகுழலாக மாறி நீண்ட காலமாகிவிட்டது.

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

முன்னரை விட இப்போது உலகெங்கும் ஆடம்பரமில்லாமல் அதிகளவு மாவீரர் நிகழ்வுகள் நடக்க ஆரம்பித்து விட்டது. அதாவது உண்மையான தமிழன் எங்கிருக்கின்றானோ அங்கெல்லாம் மாவீரர் நிகழ்வுகள் அனுஷ்டிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இல்லை அண்ணர்....உலகெங்கும் ..பேப்பர் ,வதிவிட  அந்தஸ்து இல்லாத குண்டர்,....--- --- ---- கேசுகள்தான் 

இதனைக் கொண்டாடுகினம்...கனடாவில் தமிழ்க்கடைகள்  பூட்டு  இவையும் அந்தக் கேசுகள்தான்..இன்று..கிரவுண்டிலை குவிந்த சனமும் அதே....வரப்போகினம் இப்ப..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இல்லை அண்ணர்....உலகெங்கும் ..பேப்பர் ,வதிவிட  அந்தஸ்து இல்லாத குண்டர்,....--- --- ---- கேசுகள்தான் 

இதனைக் கொண்டாடுகினம்...கனடாவில் தமிழ்க்கடைகள்  பூட்டு  இவையும் அந்தக் கேசுகள்தான்..இன்று..கிரவுண்டிலை குவிந்த சனமும் அதே....வரப்போகினம் இப்ப..

நீங்கள் கூறுவது தவறு அல்வாயன்.

உலகெங்கிலும் உள்ள தமிழர் எல்லோரும் மனப்பூர்வமாக மாவீரர் தினத்தைக் கொண்டாடுகின்றனர். 

குண்டர்கள் காசு மட்டும் சேர்ப்பினம். தாங்கள் கொண்டாட.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு

 

https://www.bbc.co.uk/send/u50853736

இந்த இணைப்பிலே எமது கண்டத்தை பதிவு செய்யலாம். உறவுகள்  களத்திலே சுட்டுவதைவிட இவர்களுக்கு எழுதவும்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி அனுப்பப்பட்டது

தொடர்பு கொண்டதற்கு நன்றி

 

Back to BBC News தமிழ்

இந்த விவரங்களை நீங்கள் குறிப்பெடுத்துக் கொள்ளலாம்

குறிப்பு எண்0c0a738b-44ae-440f-ad32-8d8e47a99a79

We'll keep your submission for up to 270 days – and if we don't use it we'll then delete it and any other information you sent us.

உங்கள் மனம் மாறி இதை பயன்படுத்த வேண்டாம் என நினைத்தால் குறிப்பு எண்ணை சுட்டி, bbctamil_puhaar@bbc.co.uk என்ற மின்னஞ்சலை தொடர்புகொள்ளவும். If you submitted something for a programme or online, we won’t be able to remove it once we use it.

கவலை வேண்டாம் உங்கள் தரவுகளை நாங்கள் பாதுகாப்போம். மேலதிக தகவல்களுக்கு அந்தரங்க அந்தரங்க கொள்கைகளை படிக்கவும்.

14 minutes ago, nochchi said:

https://www.bbc.co.uk/send/u50853736

இந்த இணைப்பிலே எமது கண்டத்தை பதிவு செய்யலாம். உறவுகள்  களத்திலே சுட்டுவதைவிட இவர்களுக்கு எழுதவும்.

நன்றி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

செய்தி அனுப்பப்பட்டது

தொடர்பு கொண்டதற்கு நன்றி

 

Back to BBC News தமிழ்

இந்த விவரங்களை நீங்கள் குறிப்பெடுத்துக் கொள்ளலாம்

குறிப்பு எண்0c0a738b-44ae-440f-ad32-8d8e47a99a79

We'll keep your submission for up to 270 days – and if we don't use it we'll then delete it and any other information you sent us.

உங்கள் மனம் மாறி இதை பயன்படுத்த வேண்டாம் என நினைத்தால் குறிப்பு எண்ணை சுட்டி, bbctamil_puhaar@bbc.co.uk என்ற மின்னஞ்சலை தொடர்புகொள்ளவும். If you submitted something for a programme or online, we won’t be able to remove it once we use it.

கவலை வேண்டாம் உங்கள் தரவுகளை நாங்கள் பாதுகாப்போம். மேலதிக தகவல்களுக்கு அந்தரங்க அந்தரங்க கொள்கைகளை படிக்கவும்.

 

நன்றி,
ஈழப்பியனவர்களைப்போல் களஉறவுகள் தங்கள் கண்டணங்களைப் பதிவுசெய்வது நன்மைபயக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.