Jump to content

சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தரமாட்டார்கள்! – யோகரட்ணம் யோகி.


Recommended Posts

சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழ் மக்களுக்கு தீர்வைத் தரமாட்டார்கள்! – யோகரட்ணம் யோகி.
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஒரு விடயத்தை திரும்ப, திரும்பக் கூறி வருகிறார். அது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் போதும் தெரிவிக்கப்பட்டதுதான். இந்திய-இலங்கை ஒப்பந்தங்களை நாங்கள் ஏற்காதபோதும் ஏதோ ஒரு வகையில் அதனைச் செயற்படுத்தி தமிழ் மக்களினது விருப்பங்களைத் தீர்க்குமாக இருந்தால் நாங்கள் ஒத்துழைக்கிறோம் என்று தலைவர் பிரபாகரன் கூறிய போதும் ஒன்றைச் சுட்டிக்காட்டினார். சிங்கள இனவாத பூதமானது இதனையெல்லாம் விழுங்கிவிடும் என்றார். ஆனால் அப்போது அதனைக் கேட்கவில்லை. பலர் அதனைச் சாட்டாக வைத்துக்கொண்டு ஆயுதங்களை ஒப்படைத்து விட்டதாகவும் மக்களாட்சி முறைக்கு வந்து விட்டதாகவும் பலர் நாடகமாடினார்கள்.
ஆனால் அந்த ஒப்பந்தம் என்பது ஒரு நாளிலே தூக்கி எறியப்பட்டு வெற்று காகிதமானது.
தமிழர்கள் தனிநாட்டில்தான் உரிமைகளோடு வாழ முடியும் என்பது முடிந்த முடிவு.
ஆனாலும் நாம் தனியாக இயங்க முடியாது. அனைத்துலகம் என்பது உள்ளது. ஏதோ ஒரு தீர்வைப் பெற்றுவிட முடியும் என்று அந்த அனைத்துலகம் கூறுகிறது. அதனூடே அமைதியைப் பெற்றுவிட முடியும்- தமிழர்கள் தங்களது உரிமையைப் பெற்றுவிட முடியும் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
சிங்கள தேசம் உண்மையில் எதனையும் செய்யாது என்று அந்த அனைத்துலகம் நம்பும் வரை அவர்கள் சொல்லுகிற இந்த நாடகத்துக்குள்ளே நாங்களும் நடிக்க வேண்டியதுள்ளது.
சிங்கள தேசமானது சமாதானமாக வாழ விரும்பி ஏதாவது ஒரு தீர்வை முன்வைக்குமேயானால் நாம் அதனை பரிசீலிப்போம் என்று கூறியுள்ளோம். அந்த வகையில்தான் தற்போதைய “அரசியல்” நடைபெறுகிறது.
ரணில் வந்தால் தீர்வைத் தருவாரா?
கடினமான பாதையூடாக பயணிக்கின்ற போது வேறு ஒரு பக்கத்தை காண்பிக்கின்ற போது அதனூடே தப்பித்து வாழ்க்கையை நிறைவு செய்து கொள்ளலாம் என்பதைப் போன்ற நிலை சிக்கலானது.
கடந்த கால தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியினர் இத்தகையதொரு நிலைப்பாட்டில்தான் மாவட்ட சபை, மாகாண சபை என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தன. அவர்களுக்கு ஒன்றுமே நடைபெறாது என்பது தெரியும்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை மிகத் தீவிரமாக எதிர்த்தவர் ரணில் விக்கிரமசிங்க.
ஒற்றையாட்சிக்கு வெளியே வந்து சந்திரிகா கொண்டு வந்த ஒரு தீர்வுத் திட்டத்தை எதிர்த்தவர் ரணில் விக்கிரமசிங்க.
தமிழ் மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க ஏதும் செய்துவிடுவார் என்று கருதுவது பொய்யானது.
மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான போராட்டம் நடத்தும் ஆளுமையற்றவர் ரணில் விக்கிரமசிங்க. ஆளுமையுடன் அவர் போராட்டம் நடத்தியது இல்லை.
தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பது என்றால்
2 ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்து வந்து அவர்களின் மரபணுக்களுக்குள்ளே ஊறிவிட்ட சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக நிமிர்ந்து நிற்க வேண்டும். ரணிலுக்கு அது கொஞ்சம் கூட கிடையாது.
ஆக ரணில் வந்தால் தீர்வுத் திட்டம் வந்திருக்கும் என்று கருதுவது கடினமான பாதையூடே செல்லும் போது தப்பித்தல் போன்றதாகும்.
ரணில் வந்தால் என்ன? மகிந்த ராஜபக்ச வந்தால் என்ன? அடுத்த தலைமுறை தலைவராக இருந்தால் என்ன? எல்லாமும் ஒன்றுதான்.
கடந்த அரச தலைவர் தேர்தலில் விடுதலைப் புலிகள் முடிவெடுத்தது என்பது மகிந்தவோ ரணிலோ வெல்ல வேண்டும் என்பதற்கல்ல. அரச தலைவர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தமிழர்களுக்கு ஏதும் நிகழ்ந்து விடப் போவதில்லை என்கிற கொள்கை சார்ந்த முடிவுதான் அது.
அன்று ரணிலோடு நின்று சமாதானத்தில் கெட்டிக்காரர்களாக காட்டிக்கொண்ட மிலிந்த மொறகொடவும் ஜி.எல்.பீரிசும் இன்று பேசுகின்ற பேச்சுக்கள் என்ன? பதவிக்காக கட்சி மாறிப் போகின்றார்கள். அவர்கள் அனைவருமே ஒரு நாடகத்தின் மிகப்பெரும் நடிகர்கள்.
ஆகவே அவர் வந்தால் தீர்வு கிடைக்கும்? இவர் வந்தால் தீர்வு கிடைக்கும் என்று குழம்பக்கூடாது.
அமைதிப் பேச்சுகள் என்பது அனைத்துலக ஒழுங்கின் கீழ் நடைபெறுவதானது. சிங்களவர்கள் யாராக இருந்தாலும் தமிழர்களுக்கு ஒரு தீர்வைத் தரமாட்டார்கள் என்பதை அந்த அனைத்துலகம் உணர வேண்டும். அதிலே அனைத்துலகம் சரியாக இருந்தால் இந்தப் போராட்டத்தில் பல சிக்கல்கள் வராது .
May be an image of 1 person and standing
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

யாழ் களத்தில் இருக்கும் சில பேருக்கு தமிழ் வாசிக்கத்தெரியாது என்பதை இன்றுதான் அறிந்துகொண்டேன்.  

ஆகக் குறைந்தது செவிடில்லை என்டாவது நினைக்கிறன்! 😏

 

https://eelam.tv/watch/ய-ய-க-அவர-கள-ன-ப-ங-க-தம-ழ-உர-y-yogi-039-s-speech-for-pongku-tamil_SLhrsbpK37HnCWC.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நன்னிச் சோழன் said:

யாழ் களத்தில் இருக்கும் சில பேருக்கு தமிழ் வாசிக்கத்தெரியாது என்பதை இன்றுதான் அறிந்துகொண்டேன்.  

 

சீச்சீ நீங்கள் அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது. நாங்கள் நாட்டுக்கு நல்லவற்றை திரும்பியும் பாரோம் என்று விரதமிருப்போராக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
8 hours ago, nochchi said:

சீச்சீ நீங்கள் அப்படியெல்லாம் நினைக்கக் கூடாது. நாங்கள் நாட்டுக்கு நல்லவற்றை திரும்பியும் பாரோம் என்று விரதமிருப்போராக்கும். 

விளிம்பிலும் திருந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனால்தான் கவலையும், வேதனையும், ஆத்திரமும் வருகிறது. புதிதாய் வந்த அரசியல் மேதைகளுக்கு இது தெரியாது. நாங்கள் தோற்று விட்டோம் என்பதனால் திரும்ப அது சுழலுகிறது.

Link to comment
Share on other sites

எல்லா மனிதர்களுக்கும் சொந்தமாக சிந்திக்கும் மூளை இருக்கும் போது யோகி தனது தரப்பை, தங்கள் அரசியல் தவறை நியாயப்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்தின் பெயரில் அமைப்பு ரீதியாக, பரப்புரை ரீதியாக  கூறியதை ஒரு வேத வாக்காக கொள்ள வேண்டியதில்லை. 

நாம் விரும்பியோ விரும்பாமலோ சிங்களவரகள் தான் அங்கு ஆட்சியில் இருப்பார்கள். தீர்வுக்கு அவர்களிடம் தான் Negotiation செய்யவேண்டும். இல்லை என்றால் உலகில் பலம் வாய்ந்த அரசாங்ககளுடன் நட்பை வளர்தது  அரசியல் பலமுள்ளவர்களாக மாற வேண்டும்.  

அடைந்தால் மகாதேவி அன்றேல் மரண தேவி என்ற உணர்சசி அரசியல் அதனுடன் இணைந்த போர் இரண்டும்  பேரழிவையே தந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/11/2021 at 17:46, tulpen said:

எல்லா மனிதர்களுக்கும் சொந்தமாக சிந்திக்கும் மூளை இருக்கும் போது யோகி தனது தரப்பை, தங்கள் அரசியல் தவறை நியாயப்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்தின் பெயரில் அமைப்பு ரீதியாக, பரப்புரை ரீதியாக  கூறியதை ஒரு வேத வாக்காக கொள்ள வேண்டியதில்லை. 

நாம் விரும்பியோ விரும்பாமலோ சிங்களவரகள் தான் அங்கு ஆட்சியில் இருப்பார்கள். தீர்வுக்கு அவர்களிடம் தான் Negotiation செய்யவேண்டும். இல்லை என்றால் உலகில் பலம் வாய்ந்த அரசாங்ககளுடன் நட்பை வளர்தது  அரசியல் பலமுள்ளவர்களாக மாற வேண்டும்.  

அடைந்தால் மகாதேவி அன்றேல் மரண தேவி என்ற உணர்சசி அரசியல் அதனுடன் இணைந்த போர் இரண்டும்  பேரழிவையே தந்தது.

மிகத்தவறான

பொய்யான

வலராற்றுடன்  பயணிக்காத எழுத்து

அடைந்தால்  மகாதேவி

ஆனால்  சிறீதேவியை  தந்தாலும்  பரிசோதிப்போம்  என்று  தான் சொல்லப்பட்டது

ஆனால் சரளாவும்  இல்லை  என்பதால்  தான் .......???

Link to comment
Share on other sites

41 minutes ago, விசுகு said:

மிகத்தவறான

பொய்யான

வலராற்றுடன்  பயணிக்காத எழுத்து

அடைந்தால்  மகாதேவி

ஆனால்  சிறீதேவியை  தந்தாலும்  பரிசோதிப்போம்  என்று  தான் சொல்லப்பட்டது

ஆனால் சரளாவும்  இல்லை  என்பதால்  தான் .......???

எல்லாத்தையும் ஏதோ குறை சொல்லி நிராகரித்து காலத்தை கடத்தி இருந்த வலு எலஙாத்தையும் இழந்ம பின்  சரளாவை கட்டினாலும்  ஒரு  பிரயோசனம் இல்லை. சரி அதை விடுங்க.  சிங்களவர் யாராக இருந்தாலும் தீர்வு தர மாட்டார்கள் என்றால் யாரிட்ட தீரவை பெறுவது. யாருடன் Negotiation செய்வது என்பதையாவது சொல்லியிருக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 30/11/2021 at 17:46, tulpen said:

எல்லா மனிதர்களுக்கும் சொந்தமாக சிந்திக்கும் மூளை இருக்கும் போது யோகி தனது தரப்பை, தங்கள் அரசியல் தவறை நியாயப்படுத்தவேண்டிய நிர்ப்பந்தத்தின் பெயரில் அமைப்பு ரீதியாக, பரப்புரை ரீதியாக  கூறியதை ஒரு வேத வாக்காக கொள்ள வேண்டியதில்லை. 

நாம் விரும்பியோ விரும்பாமலோ சிங்களவரகள் தான் அங்கு ஆட்சியில் இருப்பார்கள். தீர்வுக்கு அவர்களிடம் தான் Negotiation செய்யவேண்டும்.

இப்போது தான் கண்டேன் நல்லதொரு விளக்கம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

எல்லாத்தையும் ஏதோ குறை சொல்லி நிராகரித்து காலத்தை கடத்தி இருந்த வலு எலஙாத்தையும் இழந்ம பின்  சரளாவை கட்டினாலும்  ஒரு  பிரயோசனம் இல்லை. சரி அதை விடுங்க.  சிங்களவர் யாராக இருந்தாலும் தீர்வு தர மாட்டார்கள் என்றால் யாரிட்ட தீரவை பெறுவது. யாருடன் Negotiation செய்வது என்பதையாவது சொல்லியிருக்கலாம்.

மீண்டும் மீண்டும் தவறான வரலாற்றுடன் பயணிக்காத வரலாற்றுத்திரிப்பு

புலிகள்  நோர்வேயிடமும் சர்வதேசத்திடமும்  கொண்டு வந்து விட்டார்கள்

இப்ப  நீங்க  எங்க  நிற்கிறீர்கள்

மீண்டும்  சுப்பற்ற  கொல்லைக்குள்ளயா???

 

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

மீண்டும் மீண்டும் தவறான வரலாற்றுடன் பயணிக்காத வரலாற்றுத்திரிப்பு

புலிகள்  நோர்வேயிடமும் சர்வதேசத்திடமும்  கொண்டு வந்து விட்டார்கள்

இப்ப  நீங்க  எங்க  நிற்கிறீர்கள்

மீண்டும்  சுப்பற்ற  கொல்லைக்குள்ளயா???

 

பிரான்ஸ் உங்களின் அகதி புகலிட விண்ணப்பதை ஏற்றுக் கொண்டவுடன் உங்களுக்கு தீர்வு கிடைத்து விட்டது.

நான் கூறியது எங்களை போல் வெளியே வராமல் அல்லது வர முடியாமல் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் தமக்கு ஒரு அரசியல் தீர்வுக்காக சிங்களவருடன் தான் Negotiation செய்ய வேண்டும் என்ற ஜதார்தத்தை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

பிரான்ஸ் உங்களின் அகதி புகலிட விண்ணப்பதை ஏற்றுக் கொண்டவுடன் உங்களுக்கு தீர்வு கிடைத்து விட்டது.

நான் கூறியது எங்களை போல் வெளியே வராமல் அல்லது வர முடியாமல் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள் தமக்கு ஒரு அரசியல் தீர்வுக்காக சிங்களவருடன் தான் Negotiation செய்ய வேண்டும் என்ற ஜதார்தத்தை. 

மீண்டும் மீண்டும்  தனி  மனிதத்தாக்குதல்????

Link to comment
Share on other sites

7 minutes ago, விசுகு said:

மீண்டும் மீண்டும்  தனி  மனிதத்தாக்குதல்????

இதிலென்ன தனிமனித தாக்குதல்?

ஶ்ரீலங்காவுடன் பேசாமல் தனியே நோர்வே சர்வதேசத்துடன் பேசி தீர்வை கொண்டுவர முடியும் என்று நீங்கள் செம ஜோக்கடிகலாம். நான் ஜோக் அடிக்க கூடாதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் “தாமாக” தீர்வை தரமாட்டார்கள். 

என்பதே உண்மை.

ஆகவே தீர்வை எப்படி பெறலாம்?

2 வழியில்.

1. அவர்கள் தர தேவையில்லை என நாமே தீர்வை பறித்து எடுத்தல் (தனிநாடு). இந்த முறை தலைவரால் கூட முடியவில்லை. இப்போ இருக்கும் (புலத்திலும், வெளியிலும்) தலைமைகளை வைத்து இது சாத்தியமில்லை என நாம் எல்லாரும் ஏற்போம் என நினைகிறேன்.

2. எதோ ஒரு வகையில் அவர்களை தீர்வை தர “நெருக்க” வேண்டும்.

இதுதான் இப்போதைய கள யதார்த்தம்.

2009 க்கு முன் ஒரு இராணுவ சமநிலையோடு, நிழல் அரசை கொண்டிருந்த போது புலிகள் 1ம் வழியை தேர்ந்து எடுத்து அதற்கு யோகி அவர்கள் கொடுத்த கொள்கை விளக்கத்தை, தலை கீழான களயதார்தம் உள்ள இன்றைய நிலையில் பாவிக்க முடியாது.

ஆனால் அவர்களை ஒரு தீர்வை தர நெருக்குவது கூட எவ்வளவு கஸ்டமான விடயம் என்பதை விளங்கிகொள்ள யோகி அவர்களின் இந்த கட்டுரை உதவும்.

Link to comment
Share on other sites

1 hour ago, goshan_che said:

ஆனால் அவர்களை ஒரு தீர்வை தர நெருக்குவது கூட எவ்வளவு கஸ்டமான விடயம் என்பதை விளங்கிகொள்ள யோகி அவர்களின் இந்த கட்டுரை உதவும்.

கோஷான், 

இன்றைய நிலையில்  அவர்களை தீர்வை நோக்கி நெருக்குவது கடினமான விடயம் தான். நான் மறுக்கவில்லை. ஆனால் முன்பு அப்படி இருக்கவில்லை. தமிழ் மக்கள் அனைவரினதும் ஒட்டுமொத்தமான அரப்பணிப்புகளால் உருவான பலமான நிலையில் அவர்கள் ஒரளவுக்கு இறங்கி வர தயாராக இருத்தனர் என்ற உணமையை தமிழ் மக்களுக்கு மறைத்து இவ்வறான பழைய,  காலத்துக்கொவ்வாத கூற்றுக்களை  ஏதோ வேத வாக்குகள் பொல பரப்புவதால் எமக்கு கிடைக்கப்போகும் நன்மையை விட தீமை தான் அதிகம்.  

ஓரு அமைப்பின் தவறுகளை முழுவதுமாக மூடி மறைத்து, தமிழ் மக்களை சுதந்திரமாக சிந்திக்க விடாமல் பழைய பிடிவாத அரசியல் கொள்கையுடன் கட்டிப்போடும் செயல் எதிர்காலத்தில் ஒரு அரசியல் தீர்வை காண மிகப்பெரும் தடையாக இருக்கும் என்பது எனது அபிப்பிராயம்.

ஆகவே எதிர்கால சந்ததியை தாமாக சிந்திக்க விடுவோம். எமது முன்முடிவுகளை அவர்கள் மீது திணித்து அவர்களை மூளைச்சலவை செய்வது அவர்களுக்கு நாம் செய்யும் தீமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, tulpen said:

பழைய,  காலத்துக்கொவ்வாத கூற்றுக்களை  ஏதோ வேத வாக்குகள் பொல பரப்புவதால் எமக்கு கிடைக்கப்போகும் நன்மையை விட தீமை தான் அதிகம்.  

உண்மை தான் தேவனால் அருளப்பட்ட கூற்றுக்கள் மாதிரி இவற்றை சொல்லி கொண்டிருந்தால் நன்மை வரப்போவதில்லை. தீமைகள் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

ஓரு அமைப்பின் தவறுகளை முழுவதுமாக மூடி மறைத்து, தமிழ் மக்களை சுதந்திரமாக சிந்திக்க விடாமல் பழைய பிடிவாத அரசியல் கொள்கையுடன் கட்டிப்போடும் செயல்

அப்ப  மற்றைய அமைப்புக்கள் என்ன புத்தன் போல் இருந்தனவா ? அதெந்த அமைப்பு பெயரை சொல்ல முடியவில்லையா ? அந்த அமைப்பை இயங்கவிடாமல் மற்றைய அமைப்புகள் கொடுத்த தொந்தரவு நிச்சயம் நமது எதிர்கால சந்ததிக்கு சொல்லுபட  வேணும் . மற்றய  அமைப்புக்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழ் ஈழ கனவுடன் வந்த உறுப்பினர்களை தமிழ்நாட்டு கடற்கரையோர சவுக்கம் காட்டுக்குள் அரை  உயிருடன் புதைத்த கதைகளும் நமது அடுத்த சந்ததிக்கு முதலில் சொல்லணும் அடுத்து வரும் சந்ததிகள் புத்திசாலிகள் பொய்யான தரவுகளை புறம் தள்ளுவார்கள் .

Link to comment
Share on other sites

6 hours ago, பெருமாள் said:

அப்ப  மற்றைய அமைப்புக்கள் என்ன புத்தன் போல் இருந்தனவா ? அதெந்த அமைப்பு பெயரை சொல்ல முடியவில்லையா ? அந்த அமைப்பை இயங்கவிடாமல் மற்றைய அமைப்புகள் கொடுத்த தொந்தரவு நிச்சயம் நமது எதிர்கால சந்ததிக்கு சொல்லுபட  வேணும் . மற்றய  அமைப்புக்கள் இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழ் ஈழ கனவுடன் வந்த உறுப்பினர்களை தமிழ்நாட்டு கடற்கரையோர சவுக்கம் காட்டுக்குள் அரை  உயிருடன் புதைத்த கதைகளும் நமது அடுத்த சந்ததிக்கு முதலில் சொல்லணும் அடுத்து வரும் சந்ததிகள் புத்திசாலிகள் பொய்யான தரவுகளை புறம் தள்ளுவார்கள் .

எந்த அமைப்புமே பத்தன் என்று நான் கூறவில்லை. அப்படி கூறுவதற்கு நான் எந்த அமைப்பிலும் பக்தி  வைத்த பூசாரியல்ல. 

போராட வந்த இளைஞரகளை போட்டுத் தள்ளிய விடயத்தில் எல்லா இயக்கங்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. எல்லா இயக்க தலைவர்களின் கையிலும் மக்களின் இரத்தகறை சம அளவில் உள்ளது. 

ஆனால் நான் இங்கு எனது முன்னய கருத்து அது பற்றியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

போராட வந்த இளைஞரகளை போட்டுத் தள்ளிய விடயத்தில் எல்லா இயக்கங்களும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல. எல்லா இயக்க தலைவர்களின் கையிலும் மக்களின் இரத்தகறை சம அளவில் உள்ளது. 

இதை நான் மறுக்கிறேன் ஊர் சண்டியர்களும்  தெரு கொள்ளையர்களும் இயக்கம் நடத்துகின்றோம் எனும் போர்வையில் கிளம்பி தென்னிந்திய இலங்கை வடகிழக்கு பொதுமக்களுக்கு சொல்லென தொல்லைகளை கொடுத்தது வரலாறு சிங்கள ராணுவத்தை விட பொதுமக்கள் அதிகம் பயந்தது இந்த மாற்று இயக்கங்களை பார்த்துதான் இவர்களின் கோழைத்தனமான செயற்பாடுகளை இங்கு எழுதினால் 1000 பக்கம் போகும் பொறுத்து பார்த்தே புலிகள் இவர்களையெல்லாம் தடை செய்தார்கள் என்பது வரலாறாக இருக்கின்றது சந்தடி சாக்கில் கொலைகாரர்களையும் கொள்ளக்காரர்களும் உள்ள குழுக்கள் தங்களை இயக்கம் என்று அழைத்துக்கொண்ட குழுக்களையும்  உண்மையில் போராட என்று கிளம்பி ஆகுதியானவர்களையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது .

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

இதை நான் மறுக்கிறேன் ஊர் சண்டியர்களும்  தெரு கொள்ளையர்களும் இயக்கம் நடத்துகின்றோம் எனும் போர்வையில் கிளம்பி தென்னிந்திய இலங்கை வடகிழக்கு பொதுமக்களுக்கு சொல்லென தொல்லைகளை கொடுத்தது வரலாறு சிங்கள ராணுவத்தை விட பொதுமக்கள் அதிகம் பயந்தது இந்த மாற்று இயக்கங்களை பார்த்துதான் இவர்களின் கோழைத்தனமான செயற்பாடுகளை இங்கு எழுதினால் 1000 பக்கம் போகும் பொறுத்து பார்த்தே புலிகள் இவர்களையெல்லாம் தடை செய்தார்கள் என்பது வரலாறாக இருக்கின்றது சந்தடி சாக்கில் கொலைகாரர்களையும் கொள்ளக்காரர்களும் உள்ள குழுக்கள் தங்களை இயக்கம் என்று அழைத்துக்கொண்ட குழுக்களையும்  உண்மையில் போராட என்று கிளம்பி ஆகுதியானவர்களையும் ஒரே தட்டில் வைத்து பார்க்க முடியாது .

பெருமாள் உங்க பிரச்சனை என்ன?  வெள்ளிடை மலையாக தமிழ்மக்கள் அறிந்த விடயத்தை பற்றி இங்கு நீங்கள் வந்து தேவையில்லாமல் மறுப்பறிக்கை விடுவது  ஏனோ? இந்த மறுப்பறிக்கையை உங்கள் மனச்சாட்சி  கூட நம்பாது.😂 மகிந்த, கோட்டாவும் கூட இப்படி தான் மறுப்பறிக்கை விடுவார்கள். 

 ஆனால் இந்த  உரையாடல் அது பற்றியல்லவே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, tulpen said:

பெருமாள் உங்க பிரச்சனை என்ன?  வெள்ளிடை மலையாக தமிழ்மக்கள் அறிந்த விடயத்தை பற்றி இங்கு நீங்கள் வந்து தேவையில்லாமல் மறுப்பறிக்கை விடுவது  ஏனோ? இந்த மறுப்பறிக்கையை உங்கள் மனச்சாட்சி  கூட நம்பாது.😂 மகிந்த, கோட்டாவும் கூட இப்படி தான் மறுப்பறிக்கை விடுவார்கள். 

 ஆனால் இந்த  உரையாடல் அது பற்றியல்லவே! 

நடந்த உண்மைகளை சொல்வது தவறா ?

மாற்று இயக்கங்கள் எனும் போர்வையில் இருப்பவர்களால்  தமிழர்களின்  தேசிய விடுதலை போராட்டம் எப்படி சிதைக்கப்பட்டது என்பதை  அடுத்து வரும் தலைமுறைகள் அறியனும் என்பதில் உங்களுக்கோ எனக்கோ அனைத்து தமிழருக்கும் மாற்று கருத்து  இருக்காது என்று நினைக்கிறன் .

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

நடந்த உண்மைகளை சொல்வது தவறா ?

மாற்று இயக்கங்கள் எனும் போர்வையில் இருப்பவர்களால்  தமிழர்களின்  தேசிய விடுதலை போராட்டம் எப்படி சிதைக்கப்பட்டது என்பதை  அடுத்து வரும் தலைமுறைகள் அறியனும் என்பதில் உங்களுக்கோ எனக்கோ அனைத்து தமிழருக்கும் மாற்று கருத்து  இருக்காது என்று நினைக்கிறன் .

உண்மைகளை கூறுவது நிச்சயமாக தவறில்லை. ஆனால்  தனி ஒரு இயக்க விசுவாசம் இல்லாமல் போதுவாக அனைத்து உண்மைகளையும் கூறவேண்டும். பழைய அரசியல்வாதிகள் என்ன தவறு செய்தார்கள் புலிகள் உட்பட ஆயுத இயக்கங்கள் அனைத்தும் போராட்டத்தை எப்படி சிதைத்து பேரழிவை உண்டாக்கி பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலைக்கு மக்களை கொண்டுவந்தார்கள் என்பது அடுத்துவரும் தலைமுறைகள் அறியவேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதை நான் வரவேற்கிறேன். 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.