Jump to content

ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் நுழைந்தது புதிய கொரோனா வைரஸ்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் சில மாவட்டங்களில் புதிய கொரோனா கொத்தணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல்!

ஐரோப்பிய நாடுகளுக்குள்ளும் நுழைந்தது புதிய  கொரோனா வைரஸ்

ஜேர்மனியிலும் முதல் முறையாக ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸானது பல்வேறு உருமாற்றங்களை அடைந்துள்ளது.  டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வடிவங்களுடன் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கிடையே, தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்துள்ள புதிய வைரஸிற்கு ஒமிக்ரோன் என உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்திலும் ஒமிக்ரோன் என்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்பி வந்த இருவரே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேபோன்று ஜேர்மனியிலும் முதல் முறையாக 2 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://athavannews.com/2021/1252798

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

‘ஒமிக்ரோன்’ வைரஸ்: நோய் அறிகுறிகள் என்ன?

தென்னாபிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அடையாளம் காணப்பட்டு வரும் ஒமிக்ரோன் புதிய கொவிட் பிறழ்வு தொற்றியவர்களிடம் சிறியளவு நோய் அறிகுறி மாத்திரமே தென்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதுவரை கண்டறியப்பட்ட நோயாளர்களிடம் சுவை இழப்பு மற்றும் வாசனைகளை உணர முடியாமை போன்ற நோய் அறிகுறிகள் தென்படவில்லை என தென் ஆபிரிக்க மருத்துவ சம்மேளனத்தின் தலைமை அதிகாரி, வைத்தியர் எஞ்சலிக் கொட்சி கூறியுள்ளார்.

புதிய பிறழ்வு தொற்றியவர்களிடம் தசை வலி, சோர்வுத் தன்மை சுமார் இரு நாட்கள் காணப்படும் எனவும் சிறிதளவு இருமல் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு ஒமிக்ரோன் பிறழ்வு எத்தகையை தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை மதிப்பீடு செய்வதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் தேவை என்பதே அவரது நிலைப்பாடாகும்.

எவ்வாறாயினும் தற்போதைய தகவல்களுக்கு அமை இந்த தொற்று பரவுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக தென் ஆபிரிக்க மருத்துவ சம்மேளனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 

http://www.samakalam.com/ஒமிக்ரோன்-வைரஸ்-நோய்-அறி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள் வெள்ளை ஜேர்மன்காரர் பெரிய நாடகம் போடுறாங்கள்....என்ன கோதாரிக்கு எண்டு தெரியேல்லை....உண்மை பொய்யும் தெரியேல்லை 😷

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, குமாரசாமி said:

இவங்கள் வெள்ளை ஜேர்மன்காரர் பெரிய நாடகம் போடுறாங்கள்....என்ன கோதாரிக்கு எண்டு தெரியேல்லை....உண்மை பொய்யும் தெரியேல்லை 😷

large.Loyality.jpg.cddbe6d611e01bb96aeacc0bb8538458.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஜேர்மனியிலை போற வாற இடங்களுக்கெல்லாம் ஊசிக்காட்டு காட்ட வேணுமாம் 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

இனி ஜேர்மனியிலை போற வாற இடங்களுக்கெல்லாம் ஊசிக்காட்டு காட்ட வேணுமாம் 😎

இண்டைக்கு ஊரில அம்மாவும் அப்பாவும் மூணாவது டோஸ் போட்டவை.. எனக்கு அதுகூட அதிசயமில்லை யாழ்ப்பாணத்தில பைசர் ஊசி மூண்டாவது ஊசியா கிடைச்சிருக்கு அவைக்கு.. என்னால நம்ப முடியேல்ல இன்னும்.. முதல் ரெண்டும் சினோபாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இண்டைக்கு ஊரில அம்மாவும் அப்பாவும் மூணாவது டோஸ் போட்டவை.. எனக்கு அதுகூட அதிசயமில்லை யாழ்ப்பாணத்தில பைசர் ஊசி மூண்டாவது ஊசியா கிடைச்சிருக்கு அவைக்கு.. என்னால நம்ப முடியேல்ல இன்னும்.. முதல் ரெண்டும் சினோபாம்..

எனக்கு வாற கிழமை மூண்டாவது குத்து விழப்போகுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

எனக்கு வாற கிழமை மூண்டாவது குத்து விழப்போகுது

அய்யோ இனி மூண்டாவது ஊசிகுத்தோணும் எண்டத நினைச்சா எனக்கு சீவன்போகுது.. இப்பிடியே ஊசியும்கையுமா எங்கட காலம் முடியப்போகுது போல கிடக்கு..😢😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

அய்யோ இனி மூண்டாவது ஊசிகுத்தோணும் எண்டத நினைச்சா எனக்கு சீவன்போகுது.. இப்பிடியே ஊசியும்கையுமா எங்கட காலம் முடியப்போகுது போல கிடக்கு..😢😢

கொஞ்சமாவது நடவுங்க அல்லது சைக்கிள் ஒடுங்க அது பத்து நிமிடமாக கூட இருந்தால் பரவாயில்லை .மனதில் உடம்புக்கு வலிமை தர ஏதோ செய்கிறோம் என்று நினைத்து கொள்ளுங்க அது காணும் .

கொல்லர் பட்டறையில் வேலை செய்பவரை  உங்கள் அனைவருக்கும் தெரியும் பத்து கிலோ மடத்தலால் போட்டு மாதம் முழுதும்  தாக்குவார் அவரின் உடலமைப்பு சாதரண மனிதர்கள் போல் இருக்கும் ஆனால் ஜிம் போன்றவற்றில் எடை தூக்குபவர் மல்லாதி மல்லன் போல் இருப்பார் காரணம் மனதில் உள்ள நினைப்பே .இங்கு வெளிநாடுகளில் உள்ள ஜிம் அநேக இடங்கள் கண்ணாடியால் இருக்கும் காரணம் அதுதான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

சைக்கிள் ஒடுங்க அது பத்து நிமிடமாக கூட இருந்தால் பரவாயில்லை

சயிக்கிள் ஓடினால் கையுறை எல்லே அடிக்கடி துலைஞ்சு போகுதாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, குமாரசாமி said:

சயிக்கிள் ஓடினால் கையுறை எல்லே அடிக்கடி துலைஞ்சு போகுதாம்

கையுரையை சைக்கிளில் பெர்மேனன்ட் ஆக கட்டி போட  சொல்லுங்க துளையாது லண்டன் அதை விட மோசம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

எனக்கு வாற கிழமை மூண்டாவது குத்து விழப்போகுது

நான் நாலாவது எப்ப வருமென்று பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இனிமேல் இதுதான் வாழ்க்கை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இரண்டு சினோபார்ம் இரண்டு பைசர் டோஸ் போட்டாச்சுது, இனி நான் ஐந்தாவது தடுப்பூசியும் போட வேணுமா..?

10 நாட்களுக்கு முன் தான் ரஷீத் வைத்தியசாலைக்கு சென்று விசாரித்தபோது, "ஒண்டும் இனி பிரச்சினை இல்லை.. ஒங்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவைப்படாது" என்றார்கள்..

கணணிக்கு, வைரசை சிலர் உருவாக்கி பரவவிட்டு, பின்னர் அவர்களே ஆன்டி-வைரஸ் மென்பொருளை தயாரித்து சந்தையில் விற்று காசு பார்ப்பது போல, கொரானா திரிபுகளும் ஆகிவிடும்போல தெரியுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

சயிக்கிள் ஓடினால் கையுறை எல்லே அடிக்கடி துலைஞ்சு போகுதாம்

தம்பி வேற ஒரு  உறைய கனக்க  கவனமாக  வைத்திருக்கிறதால  தான் 

இது  துலைய  வாய்ப்பு  அதிகமாக  இருக்குமோ  அண்ணை???😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

கையுரையை சைக்கிளில் பெர்மேனன்ட் ஆக கட்டி போட  சொல்லுங்க துளையாது லண்டன் அதை விட மோசம் .

பேசாமல் இப்பிடியொண்டை வாங்கி கொழுவி விட்டால் கையுறை துலைக்கிறவைக்கும் பிரச்சனை இல்லை.கறுத்த குடை துலைக்கிறவைக்கும் பிரச்சனை இல்லை கண்டியளோ...😎

Schals & Handschuhe für Babys | Alle Marken, günstig im Preisvergleich

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சமாவது பயிற்சிகள் செய்துகொள்வது  கொஞ்சமாவது நன்மையை  தர ஆரம்பிக்கிறதாம்.

6 hours ago, ராசவன்னியன் said:

10 நாட்களுக்கு முன் தான் ரஷீத் வைத்தியசாலைக்கு சென்று விசாரித்தபோது, "ஒண்டும் இனி பிரச்சினை இல்லை.. ஒங்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவைப்படாது" என்றார்கள்..

 

அவர்கள் சொன்னது சரி தானே. உங்களுக்கு முதலே ரொக்கெட் பூஸ்டர் போட்டாச்சு கொரோனா உங்களுக்கு வந்ததை சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

தம்பி வேற ஒரு  உறைய கனக்க  கவனமாக  வைத்திருக்கிறதால  தான் 

இது  துலைய  வாய்ப்பு  அதிகமாக  இருக்குமோ  அண்ணை???😜

அப்படியென்ன உறை? 😲  துண்டற விளங்கேல்ல..!

உள்ளே பொன்னான பொக்கிசம் ஏதும் இருக்குமோ? 🙃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ராசவன்னியன் said:

ஏற்கனவே இரண்டு சினோபார்ம் இரண்டு பைசர் டோஸ் போட்டாச்சுது, இனி நான் ஐந்தாவது தடுப்பூசியும் போட வேணுமா..?

10 நாட்களுக்கு முன் தான் ரஷீத் வைத்தியசாலைக்கு சென்று விசாரித்தபோது, "ஒண்டும் இனி பிரச்சினை இல்லை.. ஒங்களுக்கு பூஸ்டர் டோஸ் தேவைப்படாது" என்றார்கள்..

கணணிக்கு, வைரசை சிலர் உருவாக்கி பரவவிட்டு, பின்னர் அவர்களே ஆன்டி-வைரஸ் மென்பொருளை தயாரித்து சந்தையில் விற்று காசு பார்ப்பது போல, கொரானா திரிபுகளும் ஆகிவிடும்போல தெரியுது.

இனிமேல் கொஞ்ச காலம் வருடம் ஒரு பூஸ்டர்.

இன்னும் 100 மில்லியனுக்கும் மேலான டோசை பைசரிடம் வாங்கியுள்ளது யூகே.

https://www.dailymail.co.uk/news/article-10266893/Pfizer-boss-says-annual-jabs-needed-maintain-high-protection.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

இனிமேல் கொஞ்ச காலம் வருடம் ஒரு பூஸ்டர்.

இன்னும் 100 மில்லியனுக்கும் மேலான டோசை பைசரிடம் வாங்கியுள்ளது யூகே.

https://www.dailymail.co.uk/news/article-10266893/Pfizer-boss-says-annual-jabs-needed-maintain-high-protection.html

இது ஒரு பேராசையான கொள்ளையடிக்கும் வியாபார தந்திரம்.

கார்களாகட்டும், கணணிகளாகட்டும், கைப்பேசிகளாகட்டும், கண்டுபிடித்த செயல்திறன் அம்சங்களை முழுமையாக விற்பனை சந்தைக்கு தரமாட்டாட்ர்கள். சில முக்கிய அம்சங்களில் பாதியை மட்டும் கொடுத்துவிட்டு, மீதமுள்ளவற்றை 'அடுத்த வெர்சனில்' என சொல்லி மறைத்துவிடுவார்கள். மக்களை நிரந்தரமாக அவர்கள் கொடுக்கும் பொருளை தொடர்ந்து வாங்கவே அடிமைபடுத்தி வைத்திருப்பார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ராசவன்னியன் said:

இது ஒரு பேராசையான கொள்ளையடிக்கும் வியாபார தந்திரம்.

கார்களாகட்டும், கணணிகளாகட்டும், கைப்பேசிகளாகட்டும், கண்டுபிடித்த செயல்திறன் அம்சங்களை முழுமையாக விற்பனை சந்தைக்கு தரமாட்டாட்ர்கள். சில முக்கிய அம்சங்களில் பாதியை மட்டும் கொடுத்துவிட்டு, மீதமுள்ளவற்றை 'அடுத்த வெர்சனில்' என சொல்லி மறைத்துவிடுவார்கள். மக்களை நிரந்தரமாக அவர்கள் கொடுக்கும் பொருளை தொடர்ந்து வாங்கவே அடிமைபடுத்தி வைத்திருப்பார்கள்.

 

உண்மைதான். 

புதிய விகாரிகளை தடுக்கும் தன்மையையும் முதல் டோசிலேயே புகுத்தி இருக்கலாம் என்றே நானும் நினைகிறேன்.

விகாரிகள் எப்படி உருவாகும் என எதிர்வு கூறுவது அவ்வளவு கடினமா?

ஆனால் உண்மையிலேயே விகாரிகள் உருவாகிய பின்னர்தான் தடுப்பை கண்டு பிடிக்க முடியுமோம் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ராசவன்னியன் said:

இது ஒரு பேராசையான கொள்ளையடிக்கும் வியாபார தந்திரம்.

கார்களாகட்டும், கணணிகளாகட்டும், கைப்பேசிகளாகட்டும், கண்டுபிடித்த செயல்திறன் அம்சங்களை முழுமையாக விற்பனை சந்தைக்கு தரமாட்டாட்ர்கள். சில முக்கிய அம்சங்களில் பாதியை மட்டும் கொடுத்துவிட்டு, மீதமுள்ளவற்றை 'அடுத்த வெர்சனில்' என சொல்லி மறைத்துவிடுவார்கள். மக்களை நிரந்தரமாக அவர்கள் கொடுக்கும் பொருளை தொடர்ந்து வாங்கவே அடிமைபடுத்தி வைத்திருப்பார்கள்.

 

எல்லாம் வியாபார மயம்.

ஜேர்மனியில் தற்போது கோரோனா கூடிவிட்டது என பதறுகிறார்கள் அலறுகிறார்கள். ஒரு சில இடங்களில் விசாரித்தால் வேறு காரணங்களை சொல்கின்றார்கள்.நான் சொல்ல விளைவது என்னவெனில் கொரோனா எனும் பிரச்சனை இருக்கின்றது.ஆனால்  ஜேர்மனியில்...?????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ராசவன்னியன் said:

அப்படியென்ன உறை? 😲  துண்டற விளங்கேல்ல..!

உள்ளே பொன்னான பொக்கிசம் ஏதும் இருக்குமோ? 🙃

செல்லக் குஞ்சுகளாம் உறையினிலே...
செவ்வந்தி பூக்களாம் உறையினிலே...

பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலை உண்டு அங்கே...
நாளைய உலகை ஆளும் சிங்கங்கள் உண்டு அங்கே....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Graphic explaining how blood clots form

https://www.bbc.co.uk/news/health-59418123

சரியான கால அவகாசத்தோடு செய்யப்படாத தடுப்பூசிகளின் நீண்ட கால விளைவு ஆபத்தாக அமையுமோ என்ற கேள்விக்கள் பலமாக ஆரம்பித்துள்ளன.

நோய் பரவலை.. கடும் பாதிப்புக்கள் ஏற்படுவதை குறைக்க வேண்டிய அவசியத்தில் தடுப்பூசிகள் அவசியமானாலும்.. தனிநபர்.. மற்றும் பொது சுகாதாரப் பழக்க வழக்கங்களை ஊக்குவிக்காமல்.. மாஸ்கை கழட்டு.. போடு என்று அரைகுறை தனமாக அறிவுறுத்துவது மேற்கு நாடுகளில்.. கொரோனாவின் தாக்கம் அது உருவாகிய நாடாக கருதப்படும் சீனாவை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.

சீனாவில் தடுப்பூசிக்கு மேலதிகமாக கடும் தனிநபர்.. பொதுச் சுகாதார மட்டங்களை கொண்டிருப்பதால்.. அங்கு நோய் தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

செல்லக் குஞ்சுகளாம் உறையினிலே...
செவ்வந்தி பூக்களாம் உறையிலே...

பூவும் பொன்னும் பொருந்தி வாழும் மழலை உண்டு அங்கே...
நாளைய உலகை ஆளும் சிங்கங்கள் உண்டு அங்கே....:cool:

சாமிகளே, இதைத்தான் "கிழட்டு குசும்பு" என எங்கள் கிராமத்தில் சொல்வார்கள்..! 🤣

இருந்தாலும் இது ஓவர்..

4 minutes ago, nedukkalapoovan said:

 

...சரியான கால அவகாசத்தோடு செய்யப்படாத தடுப்பூசிகளின் நீண்ட கால விளைவு ஆபத்தாக அமையுமோ என்ற கேள்விக்கள் பலமாக ஆரம்பித்துள்ளன.

நோய் பரவலை.. கடும் பாதிப்புக்கள் ஏற்படுவதை குறைக்க வேண்டிய அவசியத்தில் தடுப்பூசிகள் அவசியமானாலும்.. தனிநபர்.. மற்றும் பொது சுகாதாரப் பழக்க வழக்கங்களை ஊக்குவிக்காமல்.. மாஸ்கை கழட்டு.. போடு என்று அரைகுறை தனமாக அறிவுறுத்துவது மேற்கு நாடுகளில்.. கொரோனாவின் தாக்கம் அது உருவாகிய நாடாக கருதப்படும் சீனாவை விட பல மடங்கு அதிகமாக உள்ளது.

சீனாவில் தடுப்பூசிக்கு மேலதிகமாக கடும் தனிநபர்.. பொதுச் சுகாதார மட்டங்களை கொண்டிருப்பதால்.. அங்கு நோய் தாக்கம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 

நான் சுவிஸ் வந்தபொழுது சாலையில் மாஸ்க் அணிந்தவாறு நடந்தேன். எல்லா வெள்ளைகளும் என்னை சற்றே விநோதமாக பார்த்தார்கள்.

சூரிட்சில் யாரும் மாஸ்க் அணிவதில்லை போலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ராசவன்னியன் said:

நான் சுவிஸ் வந்தபொழுது சாலையில் மாஸ்க் அணிந்தவாறு நடந்தேன். எல்லா வெள்ளைகளும் என்னை சற்றே விநோதமாக பார்த்தார்கள்.

சூரிட்சில் யாரும் மாஸ்க் அணிவதில்லை போலும்.

மேற்கு நாடுகளில் அரசாங்க அறிவிப்புக்கள் மக்களின் சுகாதார நலனைக் காட்டிலும்.. நாட்டின் பொருளாதார நலனை அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றன. உண்மையான நடைமுறை என்றால்.. அந்தந்த நாடுகளில் வைத்தியசாலைகள்.. மட்டத்தில் இருக்கும் நடைமுறையை மக்கள் பின்பற்றினால் (இலங்கை.. ஹிந்தியாவில் நிலைமை எப்படி என்று தெரியவில்லை.. இலங்கையில் பல தனியார் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு சென்றவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது)... தொற்றை வெகுவாகக் குறைக்கலாம். வைத்தியசாலைகளில் உள்ளகத் தொற்று வெகு சில வீதங்களாக இருக்க.. வெளியில் மக்கள் மத்தியில் அது பல மடங்காக உள்ளது. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.