Jump to content

ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி

spacer.png

தான்சானியா நாட்டின் ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு உள்ளனர்.  

இதில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்து உள்ளதுடன்,  22 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  

கடல் ஆமைக்கறியில் விஷம் உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது.  இதனை தொடர்ந்து, பொலிஸார் அதன் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர்.  

பெம்பா தீவு பகுதியில் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் உள்ளன.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்து உள்ளது.  38 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் பலர் வீடு திரும்பியுள்ளனர்.  

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் கடந்த மார்ச் மாதம் ஆமைக்கறியை சாப்பிட்ட 19 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.thaarakam.com/news/838873b7-38c6-4e35-9c6d-bbac600f8dda

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சே, நானும் ஏதோ ஹொற் மேற்றர் எண்டு ஓடி வந்தால் ஸப்பை மேட்டர்! இறந்தோருக்கு அனுதாபங்கள்!

(கிருபனுக்கு லொள்ளு கூடிப் போச்சுது!😎)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமைக் கறிக்கு நல்லா  மிளகாய் தூள் போட்டு வெந்து வரேக்க லைட்ட உப்பும் மிளகும் போட்டு பிரட்டிச் சாப்பிட்டால் ஆக்கள் சாக மாட்டினம்

இவேல் வேறமாதிரி செய்ஞ்சு சாப்ட்டிருக்கினம் அது food poison ஆகீட்டுது

🐢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க நியுசுல தீய வைக்க.. ஆபிரிக்காவில ஆமைய துன்னு செத்தா எங்களை ஏண்டா படுத்துறீங்க..நானும் ஓரளவிற்குதான் பொறுமை காக்க முடியும்…😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வழமையாக பால்ஆமை, உடும்பு, முயல், உக்கிளான், பன்றி , அலுங்கு சாதாரண  இறைச்சி வகைகள் அடிக்கடி சாப்பிடுவோம்.

புழுங்கல் அரிசி சோறு என்றால் கொஞ்சம் கூடுதலாக சாப்பிடுவோம். பச்சை அரிசி ஏனெனில் கொஞ்சம் குறைவு.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா குசா,

நான் நகைச்சுவைக்காக கூறினேன். யாரையும் சீண்டும் நோக்கம் இல்லை.

😀

Link to comment
Share on other sites

3 hours ago, வாலி said:

ஆமைக் கறிக்கு நல்லா  மிளகாய் தூள் போட்டு வெந்து வரேக்க லைட்ட உப்பும் மிளகும் போட்டு பிரட்டிச் சாப்பிட்டால் ஆக்கள் சாக மாட்டினம்

இவேல் வேறமாதிரி செய்ஞ்சு சாப்ட்டிருக்கினம் அது food poison ஆகீட்டுது

🐢

அப்ப நம்ம கபாலி நீங்கள் சொன்ன றிசெப்பில சமைச்சத தான் சாப்பிறிருக்காரு. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஐயோ நம்ம மைண்ட் அங்கயே போகுதே….🤣.

 

எங்கை போகுது?
அந்த வரைபடத்தை இங்கு இணைக்க முடியுமா சார்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MullaiNilavan said:

நாங்கள் வழமையாக பால்ஆமை, உடும்பு, முயல், உக்கிளான், பன்றி , அலுங்கு சாதாரண  இறைச்சி வகைகள் அடிக்கடி சாப்பிடுவோம்.

புழுங்கல் அரிசி சோறு என்றால் கொஞ்சம் கூடுதலாக சாப்பிடுவோம். பச்சை அரிசி ஏனெனில் கொஞ்சம் குறைவு.😆

முல்லை,

பகிடி இல்லை, உண்மையாகவே பல நாட்களாக தேடி திரியும் ஒரு விடயம் இது.

1996-98 காலப்பகுதியில் புலிகள் கடலாமை பிடிப்பதை தடைசெய்தார்கள் என்பது என் நினைவு. இது சம்பந்தமாக ஒரு கொழும்பு ஊடகத்தின் செய்தியையும் வாசித்த நினைவு.

இது பற்றிய தகவல் தெரியுமா?

@நன்னிச் சோழன்நீங்களும் முடிந்தால் தேடிப்பார்க்கவும்.

சூழலியல் சம்பந்தமாக அவர்கள் எடுத்த பல நல்ல முயற்சிகள் ஆதாரம் இல்லாமல் வரலாற்றில் அழிந்து போவது கவலைக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஐயா குசா,

நான் நகைச்சுவைக்காக கூறினேன். யாரையும் சீண்டும் நோக்கம் இல்லை.

😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

 

செமை..👍 ஈழத்தமிழர்கள் 90வீதமானவர்களுக்கு சீமான் சொன்னதன் உண்மை தெரியும்.. மிச்சம் எழுதுற எங்கட ஆக்கள் சும்மா சீமானை சொறிராத்த எழுதுரவை.. ஆனா தமிழக மக்கள் பலருக்கு அது தெரியாது.. அதனால் சீமான் அதை சொன்னபோது புரியவில்லை.. கிண்டலடிக்கிறார்கள்.. சீமானும் அதை தமிழக மக்களின் மனநிலையில் இருந்து கவனமாக யோசிச்சு பேசி இருக்கலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

செமை..👍 ஈழத்தமிழர்கள் 90வீதமானவர்களுக்கு சீமான் சொன்னதன் உண்மை தெரியும்.. மிச்சம் எழுதுற எங்கட ஆக்கள் சும்மா சீமானை சொறிராத்த எழுதுரவை.. ஆனா தமிழக மக்கள் பலருக்கு அது தெரியாது.. அதனால் சீமான் அதை சொன்னபோது புரியவில்லை.. கிண்டலடிக்கிறார்கள்.. சீமானும் அதை தமிழக மக்களின் மனநிலையில் இருந்து கவனமாக யோசிச்சு பேசி இருக்கலாம்..

சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்து முன்னேற நினைத்தால் ஆயிரம் வழிகள் உண்டு.

ஈழத்தமிழர் பிரச்சனை வல்லரசுகளுக்கே சவாலான தாய விளையாட்டு பிரச்சனை.ஈழ போலி அரசியல் செய்து மோதுப்பட சீமான் ஒன்றும் முட்டாள் அல்ல.
 

ஓமோ இல்லையோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

ஐயா குசா,

நான் நகைச்சுவைக்காக கூறினேன். யாரையும் சீண்டும் நோக்கம் இல்லை.

😀

போனா மயிர்

வந்தா மலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, goshan_che said:

முல்லை,

பகிடி இல்லை, உண்மையாகவே பல நாட்களாக தேடி திரியும் ஒரு விடயம் இது.

1996-98 காலப்பகுதியில் புலிகள் கடலாமை பிடிப்பதை தடைசெய்தார்கள் என்பது என் நினைவு. இது சம்பந்தமாக ஒரு கொழும்பு ஊடகத்தின் செய்தியையும் வாசித்த நினைவு.

இது பற்றிய தகவல் தெரியுமா?

@நன்னிச் சோழன்நீங்களும் முடிந்தால் தேடிப்பார்க்கவும்.

சூழலியல் சம்பந்தமாக அவர்கள் எடுத்த பல நல்ல முயற்சிகள் ஆதாரம் இல்லாமல் வரலாற்றில் அழிந்து போவது கவலைக்குரியது.

 

அண்ணை, உதுவந்து நாளிதள்கள் மாதயிதழ்களுக்குள்தான் கிடைக்கும். பொது வெளியளில் நான் எங்குமே கண்டதில்லை. தேடியும் கிடைக்கவில்லை. 

பின்னாளிலை ஏதேனும் தேடிப்போகும்போது கிடைத்தான் தெரியப்படுத்துகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

செமை..👍 ஈழத்தமிழர்கள் 90வீதமானவர்களுக்கு சீமான் சொன்னதன் உண்மை தெரியும்.. மிச்சம் எழுதுற எங்கட ஆக்கள் சும்மா சீமானை சொறிராத்த எழுதுரவை.. ஆனா தமிழக மக்கள் பலருக்கு அது தெரியாது.. அதனால் சீமான் அதை சொன்னபோது புரியவில்லை.. கிண்டலடிக்கிறார்கள்.. சீமானும் அதை தமிழக மக்களின் மனநிலையில் இருந்து கவனமாக யோசிச்சு பேசி இருக்கலாம்..

நான் இந்த ஆமை கறி விடயத்தில் அதிகம் மினகெடுவதில்லை.

எமது ஊர் சந்தையில் கோடாலியால் கடலாமையை ரத்தம் ஆறாக வடிய கொத்தி பங்கு போட்டதை கண்டுள்ளேன்.

ஆகவே இலங்கையில் வாழ்ந்த யாரும் ஆமைகறி என்று ஒன்று இல்லவே இல்லை என சொல்லமாட்டார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் புலிகள் தடை செய்திருந்தால் - அதை தாமே மீறி இருப்பார்களா? ((மான், மரையை உணவுக்காக (விற்பனைக்கு அல்ல) கொல்வதை புலிகள் தடை செய்யவில்லை என நினைக்கிறேன்)). ஆனால் புலிகள் கடலாமை பிடிப்பதை, கொல்வதை தடை செய்தார்கள் என என்னால் (இன்னும்) ஆதாரபூர்வமாக நிறுவ முடியவில்லை. 

சரி யுத்த நேரம் உணவுக்கு பஞ்சம் அதனால் மீறினார்கள் என்றே வைத்துகொள்வோம்.

ஆனால் ஆமை ஓட்டை கவிழ்த்து போட்டு, அதை படகாக புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற கதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீகள்?

இது விஞ்ஞான, பெளதீகவியல் முறைப்படி சாத்தியமா?

ஆமை ஓட்டில் படகு போல் சவாரி போகும் பயணம் ஈழத்தில் வழமையான ஒன்றா?

90% (சும்மா நானும் ஒரு சதவீத கணக்கை அடிச்சி விடுறன் நண்பா🤣). ஈழமக்கள் இந்த ஆமை ஓட்டு படகு பயணம் பற்றி என்ன நினைக்கிறார்கள், என நீங்கள் நினைகிறீர்கள்?

உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூல வியாதி உள்ளாக்கள் ஆமை இறைச்சி சாப்பிட்டால் நல்லமாம். ஆமை இறைச்சி நல்ல குளிர்மையாம் உடம்புக்கு!😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாலி said:

மூல வியாதி உள்ளாக்கள் ஆமை இறைச்சி சாப்பிட்டால் நல்லமாம். ஆமை இறைச்சி நல்ல குளிர்மையாம் உடம்புக்கு!😁

வாலி யாழில் கனக்க ஆமை தேவையாக இருக்கிறதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

எமது ஊர் சந்தையில் கோடாலியால் கடலாமையை ரத்தம் ஆறாக வடிய கொத்தி பங்கு போட்டதை கண்டுள்ளேன்.

கடலாமை  சாப்பிட்டால் ஆறுமாதம் கோவில் பக்கம் அனுமதிக்க மாட்டார்கள் என்ற கதையும் உண்டு தலை கேள்விப்படலையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

மூல வியாதி உள்ளாக்கள் ஆமை இறைச்சி சாப்பிட்டால் நல்லமாம். ஆமை இறைச்சி நல்ல குளிர்மையாம் உடம்புக்கு!😁

🤣…சிலவேளை மேடை பேச்சின் தொனியை பார்த்து விட்டு, ஒரு மருந்தாக செய்து கொடுத்திருப்பார்களோ?🤣.

47 minutes ago, பெருமாள் said:

கடலாமை  சாப்பிட்டால் ஆறுமாதம் கோவில் பக்கம் அனுமதிக்க மாட்டார்கள் என்ற கதையும் உண்டு தலை கேள்விப்படலையா ?

கோவிலுக்கு போறெண்டு போய் நேரா ஐஸ்கிறீம் கடை, பிறகு ஆமி செட், துவக்கு எண்டு திரிஞ்சதால இந்த விடயம் கேள்விபடேல்ல🤣.

ஆனால் சாப்பிடுற ஆக்களுக்கு தோல் தடிக்கும், மருந்து ஊசியும் ஏறாதாம் எண்டு கேள்வி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

வாலி யாழில் கனக்க ஆமை தேவையாக இருக்கிறதே?

ஆமா!  ஆபிரிக்கன் ஆமையை இறக்குதி செய்யத்தான் வேணும்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஆனால் ஆமை ஓட்டை கவிழ்த்து போட்டு, அதை படகாக புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற கதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீகள்?

இது விஞ்ஞான, பெளதீகவியல் முறைப்படி சாத்தியமா?

ஆமை ஓட்டில் படகு போல் சவாரி போகும் பயணம் ஈழத்தில் வழமையான ஒன்றா?

90% (சும்மா நானும் ஒரு சதவீத கணக்கை அடிச்சி விடுறன் நண்பா🤣). ஈழமக்கள் இந்த ஆமை ஓட்டு படகு பயணம் பற்றி என்ன நினைக்கிறார்கள், என நீங்கள் நினைகிறீர்கள்?

உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன். 

உண்மையாகவே, தெரியாமல் கேட்கிறீர்கள் என்பதை நம்பி.....

ஈழமக்கள், பரிசில், வத்தைகளில், கட்டுமரங்களில், படகுகளில் பயணிக்கும் அளவுக்கு, பெரிய குளங்கள், ஏரிகள், ஆறுகள், இல்லையே.

அங்கே.... குக்கிராமங்கள் இல்லை. நகர் சார்ந்த, கிராமப்புறமே உள்ளது.

யுத்தகாலத்தில், கிளாலி, அராலி ஊடாக படகுப்பயணம் இருந்தது.

ரொபிடோ என்றபெயரில், தனி ஒருவர், ஒத்தைக் கரும்புலி பயணிக்கும், முதலில் நிஜ ஆமை ஓட்டில் ஒரு குறியீடாக ஆரம்பித்து பின்னர், வேறு உலோகத்திலும் வந்து, சிங்களத்தை, கடற்படையை கதிகலங்க வைத்ததாக, இது குறித்த டிபிஎஸ் ஜெயராஜ் கட்டுரை வாசித்துள்ளேன்.

புலிகளின் ராணுவ தளபாட, தொழிற்பட்டறைக்கு வந்த சீமானுக்கு, அங்கே, குறியீடாக, இருந்த ஆமையோட்டை காட்டியே விளக்கமளிக்கப்பட்டதாக அறிகிறேன்.

நன்னிச்சோழன் இது குறித்து கருத்து சொல்லுவார் என நிணைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

உண்மையாகவே, தெரியாமல் கேட்கிறீர்கள் என்பதை நம்பி.....

ஈழமக்கள், பரிசில், வத்தைகளில், கட்டுமரங்களில், படகுகளில் பயணிக்கும் அளவுக்கு, பெரிய குளங்கள், ஏரிகள், ஆறுகள், இல்லையே.

அங்கே.... குக்கிராமங்கள் இல்லை. நகர் சார்ந்த, கிராமப்புறமே உள்ளது.

யுத்தகாலத்தில், கிளாலி, அராலி ஊடாக படகுப்பயணம் இருந்தது.

ரொபிடோ என்றபெயரில், தனி ஒருவர், ஒத்தைக் கரும்புலி பயணிக்கும், முதலில் நிஜ ஆமை ஓட்டில் ஒரு குறியீடாக ஆரம்பித்து பின்னர், வேறு உலோகத்திலும் வந்து, சிங்களத்தை, கடற்படையை கதிகலங்க வைத்ததாக, இது குறித்த டிபிஎஸ் ஜெயராஜ் கட்டுரை வாசித்துள்ளேன்.

புலிகளின் ராணுவ தளபாட, தொழிற்பட்டறைக்கு வந்த சீமானுக்கு, அங்கே, குறியீடாக, இருந்த ஆமையோட்டை காட்டியே விளக்கமளிக்கப்பட்டதாக அறிகிறேன்.

நன்னிச்சோழன் இது குறித்து கருத்து சொல்லுவார் என நிணைக்கிறேன்.

 

அந்த டி பி எஸ் ஜெயராஜ் கட்டுரையை இணைக்க முடியுமா?

நான் அறிந்தவரையில் புலிகள் ஆமை போன்ற தோற்றத்தை ஒத்த ஒரு படகை வடிவமைத்தார்களே ஒழிய (modeled on a turtle shell) ஆமை ஓட்டையே கறியை சாப்பிட்டுவிட்டு கவிட்டு பாவிக்கவில்லை.

கடற்புலிகள் பற்றிய @நன்னிச் சோழன்யின் கட்டுரையிலும் இந்த தகவல் இடம்பெறவில்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அந்த டி பி எஸ் ஜெயராஜ் கட்டுரையை இணைக்க முடியுமா?

நான் அறிந்தவரையில் புலிகள் ஆமை போன்ற தோற்றத்தை ஒத்த ஒரு படகை வடிவமைத்தார்களே ஒழிய (modeled on a turtle shell) ஆமை ஓட்டையே கறியை சாப்பிட்டுவிட்டு கவிட்டு பாவிக்கவில்லை.

கடற்புலிகள் பற்றிய @நன்னிச் சோழன்யின் கட்டுரையிலும் இந்த தகவல் இடம்பெறவில்லை.

 

 

நானும் கவுட்டு பாவித்தாக சொல்லவில்லையே..... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

ஈழமக்கள், பரிசில், வத்தைகளில், கட்டுமரங்களில், படகுகளில் பயணிக்கும் அளவுக்கு, பெரிய குளங்கள், ஏரிகள், ஆறுகள், இல்லையே.

இருக்கிறது. வன்னியில் குளங்கள், யாழில் கடல்நீரேரி, மட்டில் வாவி - எமது காலத்தில் எல்லாம் fibreglass boat ஆகி விட்டது. முன்னர் வத்தை, பரிசல், கட்டுமரம்தான் - நீரின் தன்மையை பொறுத்து.

4 hours ago, Nathamuni said:

ரொபிடோ என்றபெயரில், தனி ஒருவர், ஒத்தைக் கரும்புலி பயணிக்கும், முதலில் நிஜ ஆமை ஓட்டில் ஒரு குறியீடாக ஆரம்பித்து பின்னர்,

ஆமை ஓடு மிதக்குமா?

ஒத்தை கரும்புலி ஆமை ஓட்டில் ஏறி, அலைகடலாடும் இந்து மா சமுத்துரத்தில் நேவி கப்பலை அணுகினாரா?

4 hours ago, Nathamuni said:

புலிகளின் ராணுவ தளபாட, தொழிற்பட்டறைக்கு வந்த சீமானுக்கு, அங்கே, குறியீடாக, இருந்த ஆமையோட்டை காட்டியே விளக்கமளிக்கப்பட்டதாக அறிகிறேன்.

 

ஆனால் சீமான் தான் ஆமை ஓட்டில் பயணித்ததை கண்ணால் கண்டதாக அல்லவா அந்த பேச்சில் கூறினார்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
    • `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்கச் சென்ற வயதான வாக்காளரின் பெயர், இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்ததால், வாக்களிக்க முடியாமல் அதிர்ச்சியடைந்து திரும்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.   ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி, பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜக கூட்டணி சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், திமுக கூட்டணி சார்பில் நவாஸ்கனியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் இன்று காலை முதல் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் விருவிருப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 3 மணி வரை ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 52.46 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராமேஸ்வரத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் வாக்களிக்க சென்ற வயது முதிர்ந்த பெண் ஒருவரின் பெயர், இறந்தபோன வாக்காளர் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்தததால் வாக்களிக்க முடியாமல் திரும்பினார். துளசிபாவா மடம் பகுதியை சேர்ந்த காளியம்மாள் (65) என்பவர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் சிலிப்புடன் தனது பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வாக்களிக்க சென்றுள்ளார்.         வாக்குப்பதிவு மையம் உ.பாண்டி     வாக்குச்சாவடி உ.பாண்டி வரிசையில் காத்திருந்த காளியம்மாள் வாக்குப்பதிவு மையத்தினுள் சென்று தனது பூத் சிலிப்பைக் கொடுத்துள்ளார். அதனை வாங்கிப் பார்த்த தேர்தல் பணியாளர், வாக்காளர் பட்டியலில் தேடி பார்த்தபோது, காளியம்மாளின் பெயர் இறந்தவர்களின் லிஸ்ட்டில் சேர்க்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து காளியம்மாளிடம் கூறிய தேர்தல் பணியாளர், அவரை வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பினார். உயிரோடு இருந்து ஓட்டுப்போட ஆர்வத்தோடு வந்த தன்னை, இறந்தவர்கள் லிஸ்ட்டில் சேர்த்திருப்பதை அறிந்த காளியம்மாள் அதிர்ச்சியடைந்ததுடன், வாக்களிக்க முடியாமல் போன வேதனையுடனும் வாக்குப்பதிவு மையத்திலிருந்து வெளியேறினார். `உங்க பேரு இறந்தவங்க லிஸ்ட்ல இருக்கு; ஓட்டுப்போட முடியாது!' - அதிர்ச்சியில் உறைந்த பெண் வாக்காளர்! | name in the dead voters list ramanathapuram woman failed to cast her vote - Vikatan
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.