Jump to content

ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆமைக்கறி சாப்பிட்ட 7 பேர் பரிதாப பலி

spacer.png

தான்சானியா நாட்டின் ஜன்ஜிபாரில் உள்ள பெம்பா தீவு பகுதியில் வசித்து வரும் சிலர் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு உள்ளனர்.  

இதில் ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் உடல்நலம் பாதித்து உயிரிழந்து உள்ளதுடன்,  22 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.  

கடல் ஆமைக்கறியில் விஷம் உள்ளது என சந்தேகிக்கப்படுகிறது.  இதனை தொடர்ந்து, பொலிஸார் அதன் மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர்.  

பெம்பா தீவு பகுதியில் கடல் ஆமைக்கறியை சாப்பிட்டு பலர் உயிரிழந்த சம்பவங்கள் கடந்த காலங்களில் உள்ளன.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு 7 ஆக உயர்ந்து உள்ளது.  38 பேர் சிகிச்சை பெற்ற நிலையில் பலர் வீடு திரும்பியுள்ளனர்.  

கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் கடந்த மார்ச் மாதம் ஆமைக்கறியை சாப்பிட்ட 19 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

https://www.thaarakam.com/news/838873b7-38c6-4e35-9c6d-bbac600f8dda

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சே, நானும் ஏதோ ஹொற் மேற்றர் எண்டு ஓடி வந்தால் ஸப்பை மேட்டர்! இறந்தோருக்கு அனுதாபங்கள்!

(கிருபனுக்கு லொள்ளு கூடிப் போச்சுது!😎)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமைக் கறிக்கு நல்லா  மிளகாய் தூள் போட்டு வெந்து வரேக்க லைட்ட உப்பும் மிளகும் போட்டு பிரட்டிச் சாப்பிட்டால் ஆக்கள் சாக மாட்டினம்

இவேல் வேறமாதிரி செய்ஞ்சு சாப்ட்டிருக்கினம் அது food poison ஆகீட்டுது

🐢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்க நியுசுல தீய வைக்க.. ஆபிரிக்காவில ஆமைய துன்னு செத்தா எங்களை ஏண்டா படுத்துறீங்க..நானும் ஓரளவிற்குதான் பொறுமை காக்க முடியும்…😂

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வழமையாக பால்ஆமை, உடும்பு, முயல், உக்கிளான், பன்றி , அலுங்கு சாதாரண  இறைச்சி வகைகள் அடிக்கடி சாப்பிடுவோம்.

புழுங்கல் அரிசி சோறு என்றால் கொஞ்சம் கூடுதலாக சாப்பிடுவோம். பச்சை அரிசி ஏனெனில் கொஞ்சம் குறைவு.😆

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா குசா,

நான் நகைச்சுவைக்காக கூறினேன். யாரையும் சீண்டும் நோக்கம் இல்லை.

😀

Link to comment
Share on other sites

3 hours ago, வாலி said:

ஆமைக் கறிக்கு நல்லா  மிளகாய் தூள் போட்டு வெந்து வரேக்க லைட்ட உப்பும் மிளகும் போட்டு பிரட்டிச் சாப்பிட்டால் ஆக்கள் சாக மாட்டினம்

இவேல் வேறமாதிரி செய்ஞ்சு சாப்ட்டிருக்கினம் அது food poison ஆகீட்டுது

🐢

அப்ப நம்ம கபாலி நீங்கள் சொன்ன றிசெப்பில சமைச்சத தான் சாப்பிறிருக்காரு. 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

ஐயோ நம்ம மைண்ட் அங்கயே போகுதே….🤣.

 

எங்கை போகுது?
அந்த வரைபடத்தை இங்கு இணைக்க முடியுமா சார்? 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MullaiNilavan said:

நாங்கள் வழமையாக பால்ஆமை, உடும்பு, முயல், உக்கிளான், பன்றி , அலுங்கு சாதாரண  இறைச்சி வகைகள் அடிக்கடி சாப்பிடுவோம்.

புழுங்கல் அரிசி சோறு என்றால் கொஞ்சம் கூடுதலாக சாப்பிடுவோம். பச்சை அரிசி ஏனெனில் கொஞ்சம் குறைவு.😆

முல்லை,

பகிடி இல்லை, உண்மையாகவே பல நாட்களாக தேடி திரியும் ஒரு விடயம் இது.

1996-98 காலப்பகுதியில் புலிகள் கடலாமை பிடிப்பதை தடைசெய்தார்கள் என்பது என் நினைவு. இது சம்பந்தமாக ஒரு கொழும்பு ஊடகத்தின் செய்தியையும் வாசித்த நினைவு.

இது பற்றிய தகவல் தெரியுமா?

@நன்னிச் சோழன்நீங்களும் முடிந்தால் தேடிப்பார்க்கவும்.

சூழலியல் சம்பந்தமாக அவர்கள் எடுத்த பல நல்ல முயற்சிகள் ஆதாரம் இல்லாமல் வரலாற்றில் அழிந்து போவது கவலைக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

ஐயா குசா,

நான் நகைச்சுவைக்காக கூறினேன். யாரையும் சீண்டும் நோக்கம் இல்லை.

😀

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

 

செமை..👍 ஈழத்தமிழர்கள் 90வீதமானவர்களுக்கு சீமான் சொன்னதன் உண்மை தெரியும்.. மிச்சம் எழுதுற எங்கட ஆக்கள் சும்மா சீமானை சொறிராத்த எழுதுரவை.. ஆனா தமிழக மக்கள் பலருக்கு அது தெரியாது.. அதனால் சீமான் அதை சொன்னபோது புரியவில்லை.. கிண்டலடிக்கிறார்கள்.. சீமானும் அதை தமிழக மக்களின் மனநிலையில் இருந்து கவனமாக யோசிச்சு பேசி இருக்கலாம்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பாலபத்ர ஓணாண்டி said:

செமை..👍 ஈழத்தமிழர்கள் 90வீதமானவர்களுக்கு சீமான் சொன்னதன் உண்மை தெரியும்.. மிச்சம் எழுதுற எங்கட ஆக்கள் சும்மா சீமானை சொறிராத்த எழுதுரவை.. ஆனா தமிழக மக்கள் பலருக்கு அது தெரியாது.. அதனால் சீமான் அதை சொன்னபோது புரியவில்லை.. கிண்டலடிக்கிறார்கள்.. சீமானும் அதை தமிழக மக்களின் மனநிலையில் இருந்து கவனமாக யோசிச்சு பேசி இருக்கலாம்..

சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்து முன்னேற நினைத்தால் ஆயிரம் வழிகள் உண்டு.

ஈழத்தமிழர் பிரச்சனை வல்லரசுகளுக்கே சவாலான தாய விளையாட்டு பிரச்சனை.ஈழ போலி அரசியல் செய்து மோதுப்பட சீமான் ஒன்றும் முட்டாள் அல்ல.
 

ஓமோ இல்லையோ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

ஐயா குசா,

நான் நகைச்சுவைக்காக கூறினேன். யாரையும் சீண்டும் நோக்கம் இல்லை.

😀

போனா மயிர்

வந்தா மலை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 hours ago, goshan_che said:

முல்லை,

பகிடி இல்லை, உண்மையாகவே பல நாட்களாக தேடி திரியும் ஒரு விடயம் இது.

1996-98 காலப்பகுதியில் புலிகள் கடலாமை பிடிப்பதை தடைசெய்தார்கள் என்பது என் நினைவு. இது சம்பந்தமாக ஒரு கொழும்பு ஊடகத்தின் செய்தியையும் வாசித்த நினைவு.

இது பற்றிய தகவல் தெரியுமா?

@நன்னிச் சோழன்நீங்களும் முடிந்தால் தேடிப்பார்க்கவும்.

சூழலியல் சம்பந்தமாக அவர்கள் எடுத்த பல நல்ல முயற்சிகள் ஆதாரம் இல்லாமல் வரலாற்றில் அழிந்து போவது கவலைக்குரியது.

 

அண்ணை, உதுவந்து நாளிதள்கள் மாதயிதழ்களுக்குள்தான் கிடைக்கும். பொது வெளியளில் நான் எங்குமே கண்டதில்லை. தேடியும் கிடைக்கவில்லை. 

பின்னாளிலை ஏதேனும் தேடிப்போகும்போது கிடைத்தான் தெரியப்படுத்துகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

செமை..👍 ஈழத்தமிழர்கள் 90வீதமானவர்களுக்கு சீமான் சொன்னதன் உண்மை தெரியும்.. மிச்சம் எழுதுற எங்கட ஆக்கள் சும்மா சீமானை சொறிராத்த எழுதுரவை.. ஆனா தமிழக மக்கள் பலருக்கு அது தெரியாது.. அதனால் சீமான் அதை சொன்னபோது புரியவில்லை.. கிண்டலடிக்கிறார்கள்.. சீமானும் அதை தமிழக மக்களின் மனநிலையில் இருந்து கவனமாக யோசிச்சு பேசி இருக்கலாம்..

நான் இந்த ஆமை கறி விடயத்தில் அதிகம் மினகெடுவதில்லை.

எமது ஊர் சந்தையில் கோடாலியால் கடலாமையை ரத்தம் ஆறாக வடிய கொத்தி பங்கு போட்டதை கண்டுள்ளேன்.

ஆகவே இலங்கையில் வாழ்ந்த யாரும் ஆமைகறி என்று ஒன்று இல்லவே இல்லை என சொல்லமாட்டார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் புலிகள் தடை செய்திருந்தால் - அதை தாமே மீறி இருப்பார்களா? ((மான், மரையை உணவுக்காக (விற்பனைக்கு அல்ல) கொல்வதை புலிகள் தடை செய்யவில்லை என நினைக்கிறேன்)). ஆனால் புலிகள் கடலாமை பிடிப்பதை, கொல்வதை தடை செய்தார்கள் என என்னால் (இன்னும்) ஆதாரபூர்வமாக நிறுவ முடியவில்லை. 

சரி யுத்த நேரம் உணவுக்கு பஞ்சம் அதனால் மீறினார்கள் என்றே வைத்துகொள்வோம்.

ஆனால் ஆமை ஓட்டை கவிழ்த்து போட்டு, அதை படகாக புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற கதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீகள்?

இது விஞ்ஞான, பெளதீகவியல் முறைப்படி சாத்தியமா?

ஆமை ஓட்டில் படகு போல் சவாரி போகும் பயணம் ஈழத்தில் வழமையான ஒன்றா?

90% (சும்மா நானும் ஒரு சதவீத கணக்கை அடிச்சி விடுறன் நண்பா🤣). ஈழமக்கள் இந்த ஆமை ஓட்டு படகு பயணம் பற்றி என்ன நினைக்கிறார்கள், என நீங்கள் நினைகிறீர்கள்?

உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன். 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மூல வியாதி உள்ளாக்கள் ஆமை இறைச்சி சாப்பிட்டால் நல்லமாம். ஆமை இறைச்சி நல்ல குளிர்மையாம் உடம்புக்கு!😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, வாலி said:

மூல வியாதி உள்ளாக்கள் ஆமை இறைச்சி சாப்பிட்டால் நல்லமாம். ஆமை இறைச்சி நல்ல குளிர்மையாம் உடம்புக்கு!😁

வாலி யாழில் கனக்க ஆமை தேவையாக இருக்கிறதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

எமது ஊர் சந்தையில் கோடாலியால் கடலாமையை ரத்தம் ஆறாக வடிய கொத்தி பங்கு போட்டதை கண்டுள்ளேன்.

கடலாமை  சாப்பிட்டால் ஆறுமாதம் கோவில் பக்கம் அனுமதிக்க மாட்டார்கள் என்ற கதையும் உண்டு தலை கேள்விப்படலையா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

மூல வியாதி உள்ளாக்கள் ஆமை இறைச்சி சாப்பிட்டால் நல்லமாம். ஆமை இறைச்சி நல்ல குளிர்மையாம் உடம்புக்கு!😁

🤣…சிலவேளை மேடை பேச்சின் தொனியை பார்த்து விட்டு, ஒரு மருந்தாக செய்து கொடுத்திருப்பார்களோ?🤣.

47 minutes ago, பெருமாள் said:

கடலாமை  சாப்பிட்டால் ஆறுமாதம் கோவில் பக்கம் அனுமதிக்க மாட்டார்கள் என்ற கதையும் உண்டு தலை கேள்விப்படலையா ?

கோவிலுக்கு போறெண்டு போய் நேரா ஐஸ்கிறீம் கடை, பிறகு ஆமி செட், துவக்கு எண்டு திரிஞ்சதால இந்த விடயம் கேள்விபடேல்ல🤣.

ஆனால் சாப்பிடுற ஆக்களுக்கு தோல் தடிக்கும், மருந்து ஊசியும் ஏறாதாம் எண்டு கேள்வி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

வாலி யாழில் கனக்க ஆமை தேவையாக இருக்கிறதே?

ஆமா!  ஆபிரிக்கன் ஆமையை இறக்குதி செய்யத்தான் வேணும்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ஆனால் ஆமை ஓட்டை கவிழ்த்து போட்டு, அதை படகாக புலிகள் பயன்படுத்தினார்கள் என்ற கதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீகள்?

இது விஞ்ஞான, பெளதீகவியல் முறைப்படி சாத்தியமா?

ஆமை ஓட்டில் படகு போல் சவாரி போகும் பயணம் ஈழத்தில் வழமையான ஒன்றா?

90% (சும்மா நானும் ஒரு சதவீத கணக்கை அடிச்சி விடுறன் நண்பா🤣). ஈழமக்கள் இந்த ஆமை ஓட்டு படகு பயணம் பற்றி என்ன நினைக்கிறார்கள், என நீங்கள் நினைகிறீர்கள்?

உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறேன். 

உண்மையாகவே, தெரியாமல் கேட்கிறீர்கள் என்பதை நம்பி.....

ஈழமக்கள், பரிசில், வத்தைகளில், கட்டுமரங்களில், படகுகளில் பயணிக்கும் அளவுக்கு, பெரிய குளங்கள், ஏரிகள், ஆறுகள், இல்லையே.

அங்கே.... குக்கிராமங்கள் இல்லை. நகர் சார்ந்த, கிராமப்புறமே உள்ளது.

யுத்தகாலத்தில், கிளாலி, அராலி ஊடாக படகுப்பயணம் இருந்தது.

ரொபிடோ என்றபெயரில், தனி ஒருவர், ஒத்தைக் கரும்புலி பயணிக்கும், முதலில் நிஜ ஆமை ஓட்டில் ஒரு குறியீடாக ஆரம்பித்து பின்னர், வேறு உலோகத்திலும் வந்து, சிங்களத்தை, கடற்படையை கதிகலங்க வைத்ததாக, இது குறித்த டிபிஎஸ் ஜெயராஜ் கட்டுரை வாசித்துள்ளேன்.

புலிகளின் ராணுவ தளபாட, தொழிற்பட்டறைக்கு வந்த சீமானுக்கு, அங்கே, குறியீடாக, இருந்த ஆமையோட்டை காட்டியே விளக்கமளிக்கப்பட்டதாக அறிகிறேன்.

நன்னிச்சோழன் இது குறித்து கருத்து சொல்லுவார் என நிணைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

உண்மையாகவே, தெரியாமல் கேட்கிறீர்கள் என்பதை நம்பி.....

ஈழமக்கள், பரிசில், வத்தைகளில், கட்டுமரங்களில், படகுகளில் பயணிக்கும் அளவுக்கு, பெரிய குளங்கள், ஏரிகள், ஆறுகள், இல்லையே.

அங்கே.... குக்கிராமங்கள் இல்லை. நகர் சார்ந்த, கிராமப்புறமே உள்ளது.

யுத்தகாலத்தில், கிளாலி, அராலி ஊடாக படகுப்பயணம் இருந்தது.

ரொபிடோ என்றபெயரில், தனி ஒருவர், ஒத்தைக் கரும்புலி பயணிக்கும், முதலில் நிஜ ஆமை ஓட்டில் ஒரு குறியீடாக ஆரம்பித்து பின்னர், வேறு உலோகத்திலும் வந்து, சிங்களத்தை, கடற்படையை கதிகலங்க வைத்ததாக, இது குறித்த டிபிஎஸ் ஜெயராஜ் கட்டுரை வாசித்துள்ளேன்.

புலிகளின் ராணுவ தளபாட, தொழிற்பட்டறைக்கு வந்த சீமானுக்கு, அங்கே, குறியீடாக, இருந்த ஆமையோட்டை காட்டியே விளக்கமளிக்கப்பட்டதாக அறிகிறேன்.

நன்னிச்சோழன் இது குறித்து கருத்து சொல்லுவார் என நிணைக்கிறேன்.

 

அந்த டி பி எஸ் ஜெயராஜ் கட்டுரையை இணைக்க முடியுமா?

நான் அறிந்தவரையில் புலிகள் ஆமை போன்ற தோற்றத்தை ஒத்த ஒரு படகை வடிவமைத்தார்களே ஒழிய (modeled on a turtle shell) ஆமை ஓட்டையே கறியை சாப்பிட்டுவிட்டு கவிட்டு பாவிக்கவில்லை.

கடற்புலிகள் பற்றிய @நன்னிச் சோழன்யின் கட்டுரையிலும் இந்த தகவல் இடம்பெறவில்லை.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

அந்த டி பி எஸ் ஜெயராஜ் கட்டுரையை இணைக்க முடியுமா?

நான் அறிந்தவரையில் புலிகள் ஆமை போன்ற தோற்றத்தை ஒத்த ஒரு படகை வடிவமைத்தார்களே ஒழிய (modeled on a turtle shell) ஆமை ஓட்டையே கறியை சாப்பிட்டுவிட்டு கவிட்டு பாவிக்கவில்லை.

கடற்புலிகள் பற்றிய @நன்னிச் சோழன்யின் கட்டுரையிலும் இந்த தகவல் இடம்பெறவில்லை.

 

 

நானும் கவுட்டு பாவித்தாக சொல்லவில்லையே..... 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Nathamuni said:

ஈழமக்கள், பரிசில், வத்தைகளில், கட்டுமரங்களில், படகுகளில் பயணிக்கும் அளவுக்கு, பெரிய குளங்கள், ஏரிகள், ஆறுகள், இல்லையே.

இருக்கிறது. வன்னியில் குளங்கள், யாழில் கடல்நீரேரி, மட்டில் வாவி - எமது காலத்தில் எல்லாம் fibreglass boat ஆகி விட்டது. முன்னர் வத்தை, பரிசல், கட்டுமரம்தான் - நீரின் தன்மையை பொறுத்து.

4 hours ago, Nathamuni said:

ரொபிடோ என்றபெயரில், தனி ஒருவர், ஒத்தைக் கரும்புலி பயணிக்கும், முதலில் நிஜ ஆமை ஓட்டில் ஒரு குறியீடாக ஆரம்பித்து பின்னர்,

ஆமை ஓடு மிதக்குமா?

ஒத்தை கரும்புலி ஆமை ஓட்டில் ஏறி, அலைகடலாடும் இந்து மா சமுத்துரத்தில் நேவி கப்பலை அணுகினாரா?

4 hours ago, Nathamuni said:

புலிகளின் ராணுவ தளபாட, தொழிற்பட்டறைக்கு வந்த சீமானுக்கு, அங்கே, குறியீடாக, இருந்த ஆமையோட்டை காட்டியே விளக்கமளிக்கப்பட்டதாக அறிகிறேன்.

 

ஆனால் சீமான் தான் ஆமை ஓட்டில் பயணித்ததை கண்ணால் கண்டதாக அல்லவா அந்த பேச்சில் கூறினார்?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.