Jump to content

வளர்ச்சிக் குறியீடு: இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாமிடம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அரசின் பொது கொள்கைக் குழுவான 'நிதி ஆயோக்' (NITI AYOG), சமீபத்தில் நீடித்த நிலைத்த வளர்ச்சியை 2030ஆம் ஆண்டுக்குள் அடையவேண்டும் என்ற இலக்கில் வெற்றிகரமாகச் செயல்படும் நகரங்களைப் பட்டியலிட்டது. அந்தப் பட்டியலில் இந்தியளவில் கேரளா முதலிடத்தையும் தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

நீடித்த நிலைத்த வளர்ச்சியில் கேரளா, தமிழ்நாட்டைத் தொடர்ந்து இமாச்சல பிரதேசம், ஆந்திர பிரதேசம் ஆகியவை முறையே மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன.

நீடித்த நிலைத்த வளர்ச்சியில் இந்திய மாநிலங்களும் நகரங்களும் என்ன நிலையில் உள்ளன, கவனம் செலுத்த வேண்டியது எங்கே என்பன போன்றவற்றை உள்ளடக்கி இந்தப் பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில், 75 மதிப்பெண்களோடு கேரளா முதலிடத்திலும் 74 மதிப்பெண்களோடு தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேசம்(74), ஆந்திர பிரதேசம் (72), உத்தராகண்ட் (72), கோவா (72), கர்நாடகா (72), சிக்கிம் (71), மகாராஷ்டிரா (70), குஜராத் (69) ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன.

மேலும், நகரவாரியாக நீடித்த நிலைத்த வளர்ச்சி குறித்து மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வில் முன்னிலை வகிக்கும் நகரங்களின் தரவரிசையில், கோயம்புத்தூர் இரண்டாவது இடத்தையும் திருச்சி எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன.

 

இரண்டாவது இடத்தில் கோயம்புத்தூர்

Coimbatore

நாடு முழுவதும் இருந்து 56 நகரங்களை 77 அளவுகோல்களின் அடிப்படையில் கணக்கில் எடுத்து இந்த பட்டியலைத் தயார் செய்துள்ளது.

தேசிய குற்ற ஆவண காப்பகம், தேசிய குடும்ப சுகாதர கணக்கெடுப்பு (NFHS), பள்ளிகள் தொடர்பான தரவுத் தளமாக செயல்படும் யூ-டைஸ் (U-DISE) போன்றவற்றின் தரவுகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் அதிகாரபூர்வ தரவுகள் ஆகியவற்றின் உதவியோடு நிதி ஆயோக் இந்தப் பகுப்பாய்வை மேற்கொண்டுள்ளது.

2030ஆம் ஆண்டுக்கான காலநிலை இலக்குகளில் ஒவ்வொரு நகரமும் எந்த அளவுக்கு முன்னிலை வகிக்கின்றன என்பதைப் பொறுத்து நகரங்களுக்கு 0-100 வரையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்தியளவில் முன்னிலை வகிக்கும் முதல் நகரமாக 75.50 மதிப்பெண்களோடு இமாச்சல பிரதேசத்திலுள்ள சிம்லா தேர்வாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து 73.29 மதிப்பெண்களோடு கோயம்புத்தூர் இரண்டாவது இடத்தையும் 72.36 மதிப்பெண்களோடு சண்டீகர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள இந்த பட்டியலிலுள்ள முதல் 10 நகரங்களில் தமிழ்நாட்டிலிருந்து கோயம்புத்தூர், திருச்சி மற்றும் கேரளாவிலிருந்து திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.

பட்டியலிடப்பட்டுள்ள 56 நகரங்களில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தான்பாத், உத்தர பிரதேசத்திலுள்ள மீரட், அருணாச்சல பிரதேசத்தின் இடாநகர், அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி, பிகாரிலுள்ள பாட்னா ஆகிய நகரங்கள் கடைசி ஐந்து இடங்களில் உள்ளன.

"தேசிய அளவில் மட்டுமின்றி நகர அளவிலும் நீடித்த நிலைத்த வளர்ச்சியை கண்காணிப்பதோடு, நிலைத்த வளர்ச்சியை உள்ளூர்மயப்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதன்மூலம், நிலைத்தன்மை மிக்க வளர்ச்சிக்கான பாதையில் நகர்ப்புறங்களின் நிலை, அவை எதில் சிறந்து விளங்குகின்றன், எங்கு இன்னும் கவனம் தேவை என்பன போன்றவற்றைப் புரிந்துகொள்ள முடியும்" என்று இந்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் முனைவர். ராஜீவ் குமார், இந்த அறிக்கை குறித்துப் பேசியபோது, "நகரங்கள் வேகமாக வளர்ச்சிக்கான இன்ஜின்களாக மாறிக் கொண்டேயிருக்கின்றன.

இந்த தரவரிசை பட்டியல் இதோடு நின்றுவிடாமல், எதிர்காலத்திற்குப் பயனளிக்கும் வகையிலும் அமையும். நம்முடைய நகரங்களில், அதற்கான கண்காணிப்பு மையங்கள் நிறுவப்படும். நீடித்த நிலைத்த வளர்ச்சியை உள்ளூர்மயபடுத்துவதில் இதுவொரு முக்கியமான மைல்கல்" என்று அவர் கூறியுள்ளார்.

Chennai

பட மூலாதாரம்,GETTY IMAGES

46 இலக்குகளை உள்ளடக்கிய 77 அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பகுப்பாய்வை மேற்கொண்டுள்ளனர்.

இந்தத் தரவரிசையில் 56 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. அதில் 44 நகரங்கள் ஒரு மில்லியனுக்கும் மேலான மக்கள் தொகையைக் கொண்டவை. அவற்றோடு ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள் தொகையைக் கொண்ட 12 மாநிலத் தலைநகரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

மாசுபாடுதான் அடிப்படைக் காரணம்

பசி மற்றும் வறுமையின்மை, ஆரோக்கியம், கல்வித் தரம், பாலின சமத்துவம், சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதாரம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், காலநிலை செயல்பாடுகள் ஆகிய அளவுகோல்களின் அடிப்படையில் இந்த நகரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய 'கேர் எர்த்' அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ஜெயஸ்ரீ வெங்கடேசன், "திருச்சியும் கோயம்புத்தூரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றது ஆச்சர்யப்படக்கூடிய விஷயமல்ல. ஏனெனில், ஓரளவுக்குத் திட்டமிட்டு வளர்ந்தவற்றில் இந்த இரண்டு நகரங்களையும் ஆரம்பக் காலத்திலிருந்தே குறிப்பிடமுடியும். நிலைத்தன்மை என்பதே பன்மைத்துவம் வாய்ந்த ஓர் அளவுகோல். ஒவ்வொரு நகரத்திற்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் இருக்கும். ஒரு சில நகரங்களில் 90 விழுக்காடு கழிவுநீர் பிரச்னையைச் சரிசெய்ய வேண்டியிருக்கும்.

வேறு சில நகரங்களில் அது 50 விழுக்காடு இருக்கும். இப்படியாக இருக்கும் சூழலில், இதுபோன்ற பல காரணிகளை உள்ளடக்கிய தரவரிசையின் மூலம் துல்லியமாகச் சொல்ல முடியும். பெருநகரங்களைப் பொறுத்தவரை, நிச்சயத்தன்மை இருக்காது. எதையுமே உறுதியாகச் சொல்லிவிட முடியாத அளவுக்கு நிச்சயமற்ற தன்மையோடு இருக்கும். இப்படியிருக்கும் சூழலில், இதுபோன்ற முயற்சிகளின் மூலம் ஓரளவுக்குத் துல்லியமாக அவற்றின் நிலையைச் சொல்லி விட முடியும்" என்று கூறினார்.

Chennai Pollution

பட மூலாதாரம்,GETTY IMAGES

 
படக்குறிப்பு,

திடக்கழிவு மாசுபாடு - தீராத நகர்ப்புற சிக்கல்.

"மேலும் சென்னை, திருப்பூர் போன்ற தமிழ்நாட்டின் மற்ற நகரங்கள் இதுபோன்ற முன்னேற்றத்தை அடைவதில் இருக்கக்கூடிய சவால்கள் குறித்து கேட்டபோது, "சென்னையைப் பொறுத்தவரை, நகரம் வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதன் வளர்ச்சி இன்னும் முழுமையடையவில்லை. இலக்கு நிர்ணயித்து அதை நோக்கிச் செல்லவேண்டுமெனில், அதற்கு இன்னும் காலம் பிடிக்கும். அதிலிருக்கும் அடிப்படையான சிக்கல் மாசுபாடு.

நகர்ப்பகுதிகளின் அனைத்து பிரச்னைகளுக்குமே மாசுபாடுதான் அடிப்படை. கழிவுநீர், திடக்கழிவு, காற்று, ஒலி மாசுபாடு என்று அனைத்துமே அதில் அடங்கும். அதற்கென திறன்மிக்க செயல்திட்டத்தை உருவாக்காதவரை இதைச் சரி செய்ய முடியாது. திருப்பூரைப் பொறுத்தவரை, அங்கு எந்தளவுக்கு நல்லது நடக்கிறதோ அதை சரிக்கட்டும் அளவுக்கு மாசுபாடுகளும் ஏற்படுகின்றன.

இருப்பினும், திருப்பூர் சமாளிக்கக்கூடிய நிலையில்தான் இருக்கிறது. அடுத்த 6 ஆண்டுகளில் சரியான செயல்திட்டத்தை வடிவமைத்தால், நிலைத்தன்மை வாய்ந்த வளர்ச்சியைச் சாத்தியப்படுத்தலாம்.

முதலில், தமிழ்நாடு முழுக்கவே மறையிடர் மதிப்பீட்டைச் (Risk Assessment) செய்யவேண்டும். நம்முடைய நகரங்களில் இருக்கும் பிரச்னைகள் என்னவென்பதே நமக்கு முழுமையாகத் தெரியாது. அதையும் மாநிலம் முழுக்க மேம்போக்காகச் செய்யாமல், நகரவாரியாகச் செய்யவேண்டும். அதைத்தொடர்ந்து, நகரவாரியாகத் தெளிவான இலக்குகளை, அடுத்த இரண்டு ஆண்டுகளில் செய்யவேண்டியது, ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டியது, எட்டு ஆண்டுகளில் செய்ய வேண்டியது என்று தனித்தனியாக நிர்ணயித்துச் செயல்படுத்தவேண்டும்," என்று அவர் கூறினார்.

நிதி ஆயோக் வளர்ச்சிக் குறியீடு: இந்திய அளவில் தமிழ்நாடு இரண்டாமிடம் - கோவை, திருச்சி முன்னிலை - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

தமிழகத்துக்கு மனமார்ந்த பாராட்டுகள். 

தென் மானிலங்கள் முதல் இரண்டை பிடித்ததும் காவிக் கட்சியின் கோட்டையான குஜராத் 10 ஆம் இடத்தில் நிற்பதும் மகிழ்ச்சியான விடையங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.