Jump to content

அன்று வன்னியில் பொருளாதாரத் தடையை புலிகள் எவ்வாறு முறியடித்து இருந்தனர்? கற்க வேண்டிய பாடம்


Recommended Posts

1991 ஆம் ஆண்டு இலங்கை அரசு, விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பகுதிகளுக்கான பொருளாதாரத் தடையை விதித்தது. அதன்படி எரிபொருள் வரத்துத் தடைப்பட்டது. எரிபொருள் தடைப்பட்டால், விவசாயம் நேரடியாகப் பாதிக்கப்படும். இதனால் பட்டினியால் வாடும் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு வழிக்கு வருவார்கள் என்பதே அரசின் திட்டம்.
இந்தத் திட்டத்தைப் புலிகள் எப்படி முறியடித்தனர் என்பதை அவ்வியக்கப் போராளியொருவர் 1991 ஆம் ஆண்டில் வெளிவந்த தினசரியொன்றில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்.
 
“...உழவு இயந்திரத்தின் தேவையை எமது சொந்த வளத்தால் மாற்றீடு செய்ய நாம் யோசித்தோம். வன்னிப் பிராந்தியத்தின் இன்னொரு பெரும் வளமான காளை மாடுகளைப் பயன்படுத்த எண்ணினோம். இதன்படி 1991 ஆம் ஆண்டு ஆடி, ஆவணி மாதங்களில் 200 சோடி காளை மாடுகளை உழவிற்குப் பழக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நல்ல முறையில் செயற்படுத்தப்பட்டது.
இத்திட்டத்தின் பயனாக, உழவு இயந்திரம் – உதிரிப்பாகங்கள், எரிபொருள் ஆகியவற்றின் கொள்வனவிற்காகச் செலவிடப்படும் பல கோடி பணம் எமது பிரதேசத்திற்கு வெளியில் செல்வது தவிர்க்கப்பட்டது.
கூலி விவசாயிகள் அதிமாகத் தொழில் வாய்ப்பைப் பெறுகிறார்கள். இதன் மூலம் அவர்களின் குடும்ப வாழ்க்கை மேம்படுகிறது.
 
இதுவரை காலமும் வெறும் இறைச்சிக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த காளை மாடுகளின் பெறுமானம் உயர்ந்துள்ளது. இந்த விலை அதிகரிப்பின் பயனை விவசாயிகளான கால்நடை உரிமையாளர்களே பெறுவர்.
உழவு மாடுகளிற்கு திடீரென ஏற்பட்ட வரவேற்பை அவதானித்த தனிப்பட்ட விவசாயிகள் நிலமையை உணர்ந்து கொண்டு தாமாகவே காளை மாடுகளை உழவிற்கு பழக்குவதற்கு தொடங்கினார்கள். இதன் மூலம் தேசத்தின் தேவையை உணர்ந்து – தன்னம்பிகையுடன் எமது விவசாயிகள் உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள்....”
இந்த முயற்சிதான், 2006 ஆம் ஆண்டு வரை வன்னிக்குள் அரிசியின் விலையை 16 ரூபாவுக்கு மேல் அதிகரிக்காமல் வைத்திருந்தது. உள்ளூர் வளத்தை மிகச் சரியாகக் கணிப்பிட்டு அதனைச் சரியாக – வினைத்திறனோடு பயன்படுத்தியன் விளைவினால்தான் வன்னிப் பெருநிலம் நிமிர்ந்த நின்றது. இந்த நிமிர்வுக்கு தியாக மனப்பான்மையுடன் கூடிய அர்ப்பணிப்பே முதுகெலும்பாக இருந்தமையை யாரும் மறுக்க முடியாது.
எனவே சுதேசிய பொருளாதாரத்தில்தான் நிற்கப்போகிறோம் எனப் போராடும் தேசங்கள் முதலில் மக்கள் நலன்சார் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பைக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு கடுகளவிற்காவது தியாக மனப்பான்மை வேண்டும். அதற்கு அடுத்து நம்மிடம் என்ன வளமிருக்கிறதென்பதையும், அதனை எப்படி பயன்படுத்தப்போகிறோம் என்பதையும் அனுபவசாலிகளிடமிருந்து கற்க வேண்டும்.
 
 
ஊடகவியலாளர் ஜெரா தம்பியின் முகனூலில் இருந்து எடுக்கப்பட்ட பதிவு
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இத சீமான் சொன்னா பைத்தியக்காரன் எண்டுராஙக..

புலிகள் தேவையான இடத்தில் தேவையான இயந்திரமயமாக்கலை செய்தார்கள். 

மேலே சொல்லப்பட்டிருப்பது இயந்திரமயமாக்கலை தடை போட்டு தடுத்த போது அதை எப்படி மாற்று வழியால் வெற்றி கொண்டார்கள் என்று.

சமாதான காலத்தில், தடைகள் தளர்ந்த போது, டிரக்டர் வாங்கும் விவசாயிகளை தடுத்து காளை மாட்டை ஓட்டுங்கோ என அவர்கள் பைத்தியகாரத்தனம் பண்ணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

இத சீமான் சொன்னா பைத்தியக்காரன் எண்டுராஙக..

 அந்த நிலத்தில்  இன்றும் மாடுகளுக்கு பெருமதி பெறுமதி குறையவில்லை.

நன்றி நிழலி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த கால கட்டத்தில் பல முயற்சிகளில் ஈடுபட்டார்கள்,  எவராவது ஒருவரின் நிலம் தரிசாக இருந்தால் விவசாயத்தில் ஆர்வம் இருந்தும் நிலம் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவர்க்ளிடம் தொடர்பு கொண்ட்டால் அதனை விவசாயத்திற்காகப்பெற்றுத்தருவது அத்துடன் இந்தியாவிலிருந்து வறட்சியை தாங்க கூடிய குறைந்த கால நெல் இனங்களை தருவித்தல் போன்ற சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் உள்ளடங்கலாக.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல செயல் செய்பவர்கள் உயர்ந்த குலம் , நாசவேலை செய்பவர்கள் செயலால் தாழ்ந்த குலம் . அதைத்தான் குலவழக்கம் என்றேன் . சுமாவினை இன்னும் கேவலமாக தான் நான் சொல்வேன் , பொதுவெளி மரியாதைக்காக இத்துடன் முடிக்கிறேன் .... என் அயல் ஊர் தான் அவர், சந்து பொந்து எல்லாம் தெரியும் அவரை பற்றி. ஒரு நாகரீகத்துக்காக வேண்டாம் .
    • எனக்கு பெரேரா அண்ட் சன்ஸ் களில் நடந்ததில்லை. ஆனால் புதுக்கடையில் இரு பெண்கள், ஒருவர் மத்திய வயது இன்னொருவர் வயசாளி, சாப்பிட்டு கொண்டிருக்கும் போது வந்து கையை நீட்டுவார்கள். அசெளகரியம்தான் ஆனால் aggressive begging என சொல்லமுடியாது. அதே போல் ரோயல் பேக்கரி அடியிலும் ஒரு ஐயா நிரந்தர டியூட்டி. நிற்க, இது 90,2000,2010 களிலும் இருந்தது. எனது கேள்வி -  இப்போ கூடியுள்ளதாக உணர்கிறீர்களா? எத்தனை சதவீதத்தால்? பிகு என்னுடன் இலண்டன் - இலங்கை வந்த நண்பரை இன்று காலை கேட்டேன். 10% அளவில் கூடி உள்ளதாக அவர் நினைக்கிறார். ப் பா….பெரிய ஆள்தான் வாப்போ😀. சும்மா ஓளட் போடும் ஶேர்யக்ஹ் கணக்கா கம கமப்பிங்க போல🤣 எத்தனை வருடம் கழித்து போகிறீர்கள் ? யாழ் களத்தில் ஒரு சிட்சுவேஷன் ரிப்போர்ட் போட்டு விடவும்🙏. இனிய பயணமாகட்டும்.
    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.