Jump to content

டிராஃபிக் லைட் சிஸ்டம்' மூலம் பத்திரிகையாளர்களை கண்காணிக்கும் சீனா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

'டிராஃபிக் லைட் சிஸ்டம்' மூலம் பத்திரிகையாளர்களை கண்காணிக்கும் சீனா

  • ஜேம்ஸ் கிளட்டன்
  • வட அமெரிக்க தொழில்நுட்ப செய்தியாளர்
4 மணி நேரங்களுக்கு முன்னர்
முகங்கள்

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் ''கவனிக்கத்தக்க பிற நபர்களை'' முக ஸ்கேனிங் தொழில் நுட்பத்தின் மூலம் கண்காணிக்கும் அமைப்பை கட்டமைத்து வருகின்றனர்.

பிபிசிக்கு கிடைத்த ஆவணங்களின்படி, ட்ராபிக் லைட் அமைப்பினுள் பச்சை, ஆம்பர், சிகப்பு ஆகிய வண்ணங்களில் அவர்கள் வகைப்படுத்தப்படுகிறார்கள். சிவப்பு பட்டியலில் வரும் பத்திரிகையாளர்கள், அதற்கேற்ப நடத்தப்படுவார்கள். இது குறித்து கருத்து கேட்டதற்கு, ஹெனான் பொது பாதுகாப்பு பிரிவு பதில் தரவில்லை.

வெளிநாட்டு மாணவர்கள், புலம்பெயர்ந்த பெண்கள் உள்ளிட்டோர் ''கவனிக்கத்தக்க நபர்கள்'' என்கிற வரையரைக்குள் கண்காணிப்பு பகுப்பாய்வு அமைப்பான ஐபிவிஎம் வைத்துள்ளது.

இதற்கான அமைப்பை ஏற்படுத்த சீன நிறுவனங்கள் ஒப்பந்த புள்ளி கோர ஜுலை 29ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில், நீயூசாப்ட் நிறுவனம் வெற்றி பெற்றது. இது குறித்து பிபிசிக்கு கருத்து தெரிவிக்க அந்நிறுவனம் மறுத்து விட்டது. கவனித்தக்க நபர்களின் முகத்தை வைத்து அடையாளம் காணும் தொழில்நுட்பத்துடன் கூடிய ஆயிரக்கணக்கான கேமராக்கள் ஹெனான் நகரில் உள்ளன. பதிவாகும் படங்கள் ஏற்கெனவே உள்ள தகவல் தொகுப்புடன் ஒப்பிடப்படும். இவை சீன தேசிய தகவல் தொகுப்புடனும் இணைக்கப்படும்.

கவனித்தக்கவை

ஹெனான் பொதுப் பாதுகாப்பு பிரிவின் ஆவணப்படி, வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் பத்திரிகையாளர்களும் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டு பட்டியலிடப்படுகின்றனர். சிவப்பு குறியிடப்படுகிறவர்கள் மிக முக்கியமாக கவனித்தக்க வகையில் வருவார்கள். மஞ்சள் வண்ணக் குறியிடப்படுவோர் பொதுவான பட்டியலிலும், ஆபத்தில்லாத பத்திரிகையாளர்கள் மூன்றாவது வகையான பச்சை வண்ணத்திலும் குறியிடப்படுவார்கள். சிகப்பு, மஞ்சள் குறியீடு பெற்ற குற்ற தண்டனை பெற்ற, கவனிக்கத்தக்க பத்திரிகையாளர்கள் ஹெனான் மாகாணத்துக்குள் வர டிக்கெட் பதிவு செய்தால் எச்சரிக்கை சமிக்ஞை வெளியாகும். இவை வெளிநாட்டு மாணவர்களுக்கும் பொருந்தும். அவர்களும் மூன்று வகையான கண்காணிப்பின் கீழ் வருவார்கள். அவர்களுடைய தினசரி வருகை, தேர்வு முடிவுகள், வருகை தரும் நாடு, பள்ளியில் நடத்தை உள்ளிட்டவை இந்த பாதுகாப்பு கண்காணிப்பில் இருக்கும்.

தேசிய மக்கள் காங்கிரஸ் சந்திப்பு போன்ற முக்கிய அரசியல் நிகழ்வுகளின் போது, முக்கியமாக கவனிக்கத்தக்கவர்கள் மீதான கண்காணிப்பு மேலும் தீவிரப்படுத்தப்படும்.

கண்காணிப்பு அமைப்பிற்கு கீழ்கண்டவற்றின் மூலம் தகவல் திரட்டும்.

  • செல்போன்
  • சமூக வலைதளம் - வெப் சாட், வெய்போ போன்றவை.
  • வாகன விவரம்
  • விடுதி தங்கல்
  • பயணச்சீட்டு
  • சொத்து
  • புகைப்படங்கள்.

சிக்கிக்கொண்ட பெண்கள், சீனாவில் வாழ உரிமையற்ற புலம் பெயர்ந்த பெண்கள் ஆகியோரும் கண்காணிக்கப்படுவர். அண்டை நாடுகளில் இருந்து ஏராளமான பெண்கள் சீனாவுக்குள் வந்துள்ளனர். பலர் கடத்தப்பட்டுள்ளனர். இந்த அமைப்பானது, தேசிய குடியேற்றப்பிரிவு, பொது பாதுகாப்பு அமைச்சகம், ஹெனான் போலீஸ் ஆகியற்றுடன் சேர்ந்திருக்கும்.

சீனா போலீஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஐபிவிஎம் அரசு இயக்குநர் கானர் ஹீலி கூறுகையில், மிகப் பெரிய கண்காணிப்பு அமைப்பிற்கான தொழில்நுட்ப கட்டமைப்பு, தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால், வழக்கமான பொது கண்காணிப்பிற்கு இது புதியது" என்கிறார்.

சீனாவின் பொது பாதுகாப்பு அதிகாரிகள் மக்கள் கண்காணிப்பு குறித்து என்ன விரும்புகிறார்கள் என்பதை இந்த ஆவணங்கள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. முக அடையாளம் காணும் தொழில்நுட்பம் சீனா முழுவதும் பல்வேறு இடங்களில் பயன்பாட்டில் உள்ளது.

கடந்த ஆண்டு, தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், வீகர் சிறுபான்மையினரை செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மூலம் கண்டறிந்து எச்சரித்தது குறித்து கூறப்பட்டுள்ளது.

"இந்த நடவடிக்கை அச்சமூட்டுகிறது. ஒவ்வொருவரும் தாங்கள் கண்காணிப்பில் உள்ளது தெரிகிறது. என்ன செய்தால் கடும் விளைவுகள் ஏற்படலாம் என்று யாருக்கும் தெரியவில்லை," ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பின் சீன இயக்குநர் சோஃபி ரிச்சர்ட்சன் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/global-59473053

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.