Jump to content

சைக்கிளும் நானும்....  


putthan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிளும் நானும்....

 

அப்பா அரச உத்தியோகம், அவரிடம் ஒர் றலி சைக்கிள் இருந்தது அதில் தான் அவர் வேலைக்கு சென்று வருவார் .அந்த சைக்கிளில் தான் நான் சைக்கிள் ஒட கற்றுக்கொண்டது.அப்பா வேலையால் வந்தவுடன்  வீட்டு சுவரின் சாத்திவிட்டு  செல்வார் சைக்கிளுக்கு ஸ்டாண்டு வாங்கி பூட்டுவது வீண் செலவு என நினைத்திருக்கலாம் ...அவர் வைத்து விட்டு சென்றவுடன்   வீட்டு முற்றத்தில உருட்டிக்கொண்டு திரிவேன் ,பிறகு பெடலில் காலை ஊண்டி ஒரு பக்கமாக ஒடி திரிந்தேன் ஒரு படி முன்னேறி

பாருக்கு கீழே காலை போட்டு மற்ற பக்க பெடலை மிதிச்சு பலன்ஸ் பண்ணி அடுத்த காலையும் பெடலில் வைத்து ஓடதொடங்கி விட்டேன்.அந்த காலத்தில் ஆண்களின் சைக்கிள் தான் அதிகம் விற்பனையில் இருந்தது ,பெண்கள் சைக்கிள் யாழ் மாவட்டத்தில் குறைவு பொருளாதாரத்தில் அதிக உச்சத்தில் இருந்த ஒரு சிலர் வாங்கி வைத்திருந்தாரகள் அவர்களும் வீதிகளில் சைக்கிளை ஓடுவதில்லை.

இரண்டு மூன்று தடவை விழுந்து எழும்பி கையில் காலில் இரத்தம் வந்து அதை பாரத்த அம்மா நாளையிலிருந்து நீ சைக்கிளை தொடக்கூடாது என கட்டளை போட , அதை அப்பா தனது அன்பான வீட்டோ அதிகாரத்தால் "அவன் ஆண்பிளை பெடியன் இப்படி விழுந்து எழும்பினால் தான் சைக்கிள் பழக முடியும் நீ எடுத்து ஓடு கவனமா ஒடு "என்றார் .

"இவன் சைக்கிளை உடைச்சு கிடைச்சு போட்டான் என்றால்"

" அது றலி சைக்கிள் லெசில உடையாது நீர் பயப்படாதையும்"

"நான் சொன்னா யார் தான் கேட்கிறீயள் "

அம்மா அப்பாவின் செல்ல சண்டையில் காலமும் ஓட நானும் சைக்கிள் ஓட கற்றுக்கொண்டேன் .

கடைகளுக்கு  சென்று வர அனுமதி அப்பா தந்தார் அம்மா தரவில்லை .

அம்மாவின் அந்த தடையை அப்பாவும் மீறவில்லை.

அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி கேட்டபின்பு ஒரு நாள் அனுமதி தந்தார் ,தான் நடந்து பின்னுக்கு வருவதாகவும் என்னை மெல்லமாக கரையால் ஓடிக்கொண்டு செல்லும் படி.

எனக்கு ஒரே புளுகம் ,அப்பொழுது எனது வயது பத்து அல்லது பன்னிரெண்டாக இருக்கும் என நினைக்கிரேன்..அடுத்த நாள் பாடசாலை சென்று நண்பர்களிடம் நான் தனியா றோட்டில் சைக்கிள் ஒடி கடைக்கு போனனான் என பெரிய பில்டப் கொடுத்தேன்.சிலருக்கு அது பொறாமையாக இருந்தது சிலர் கண்டு கொள்ளவில்லை காரணம் அவர்கள் ஏற்கனவே சைக்கிள் ஓட தெரிந்தவர்கள்.

 

ஒரு நாள்  அம்மா

 "தம்பி கடைக்கு போய் உப்பு வாங்கி கொண்டு வா" 

"நடந்து போக மாட்டேன்"

"நடந்து போகமுடியாட்டி உன்ட சின்ன காலால் ஒடி போய் வாங்கி கொண்டுவா"

"அம்மா சைக்கிளில் ஓடி போய் வாங்கிட்டு வரட்டே"

" உந்த மூலைகடைக்கு போறதற்கு ஏன்டா சைக்கிள்"

"அம்மா பீளிஸ் அம்மா பீளிஸ்"

"கரையால போய் கரையால வரவேணும்,றோட்டுக்கு போக கூடாது ,வா நான் படலையடியில் பார்த்து கொண்டு நிற்கிறேன் "

" தேவையில்லையம்மா  நீங்கள் சமையலை பாருங்கோ நான் ஒடி போயிட்டு ஒடி வாரன்"

"வந்திட்டார் முளைச்சு மூணு இலை விடவில்லை எனக்கு பாடம் எடுக்க,

வா சைக்கிளை எடுத்துக்கொண்டு"

அம்மா படையலடியில் நின்று பார்க்க நான் சைக்கிளில் போய் பொருட்களை வாங்கி வருவது வழக்கமாகி விட்டது சிறுதுகாலம் போக அம்மா என்னை தனியாக சென்று வர அனுமதித்தார்.அதாவது "பி " பிளேட் கிடைத்த மாதிரி .

"அம்மா நாளைக்கு ஸ்கூளுக்கு சைக்கிளில் போகட்டா"

"மெல்ல மெல்ல தொடங்கிட்டாய் என்ன,கடைக்கு போக,ஸ்கூலுக்கு போக சைக்கிள் வேணும் எண்டு"

"அம்மா பிளீஸ் பிளீஸ்"

"அப்பரை போய் கேள் ...தனியா கடைக்கு அனுப்பினதுக்கு என்னை ஏசினவர்"

தந்தைகள் வழமையாக தாய்மார்கள் ஊடாக தான் தங்கள் பிள்ளைகளை கட்டுப்பட்டுத்துவார்கள் என்பது நான் தந்தையான பின்பு தான் புரிந்தது.

."பி"பிளேட் கழட்டி ஏறிந்து விட்டு முழு லைசன்ஸ் உடன் ஓடுவது போன்ற சந்தோசம்.

அடுத்த நாள் தயங்கியபடி போய்

" பப்பா இன்றைக்கு ஸ்கூலுக்கு உங்கன்ட சைக்கிளை கொண்டு போகட்டே"

அவர் முழுசி பார்த்தார், பிறகு  சமதானமாகி

"பெரியவர் சைக்கிளை கொண்டு போனால் நான் வேலைக்கு நடந்தே போவது"

"நீங்கள் பஸ்சில் போங்கோ"

" நான் ரிடையர் ஆன பின்பு நீ சைக்கிளில் போகலாம் அது வரை நடந்து போ"

"எப்ப ரிடையர் ஆக போறீயள்"

"பெரியவர் நீங்களே அதையும் சொல்லுங்கோ"

"பப்பா"

என செல்லமா அழைத்து விட்டு ஓடிசென்று விட்டேன்.

அப்பாவிடம் எனது பேச்சு எடுபாடாது என தெரிந்த கொண்டு மீண்டும் அம்மாவிடம் தஞ்சம் புகுந்தேன்.

"அம்மா எனக்கு ஒரு சைக்கிள் வாங்கி தாங்கோவன் ஸ்கூலுக்கு போக"

" அடே சும்மா விளையாடதே சைக்கிளின் விலை எவ்வளவு என உனக்கு தெரியுமா?"

"இல்லை அம்மா "

"ஆயிரம் ரூபா வரும் இப்ப அவ்வளவு காசுக்கு எங்கே போவது"

"பப்பாவிடம் கேளுங்கோ "

"அவர் வரட்டும் கேட்கிறேன் ,அவரே பதினைந்து வருசமா ஒரே சைக்கிளை வைத்து கொண்டு ஒடுறார் இரண்டு மாதமா சைக்கிள் டயர் புதுசு போட வேணும் காசு இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார் நீ புது சைக்கிளுக்கு நிற்கிறாய்"

எனது சைக்கிள் கனவு பேச்சுவார்த்தையிலயே போய் கொண்டிருந்த்தது....தீர்வு இல்லாத தமிழர் பிரச்சனை போல..

ஒரு நாள் உறவுக்கார் புது சைக்கிளில் எங்கன்ட வீட்டுக்கு வந்தார் எனக்கு மீண்டும் ஆசை வந்து விட்டது அவரிடம் சென்று சைக்கிளின் விலை விபரங்களை கேட்டேன்.

அவரது கொம்பனியில் பணி புரிபவர்களுக்கு, ஐந்நூறு முற்பணம் கட்டி மாதம் மாதம் நூறு கட்டினால் கொடுப்பதாக கூறினார்.

"அப்ப எனக்கும் அப்படி எடுத்து தரமுடியுமா?"

"வை நொட் ,அப்பரிட்ட கேள் அவர் சரி என்றால் ஒழுங்கு படுத்தி தாரன்"

அம்மாவிடம் கேட்டு அப்பரின் சம்மதம் பெற்று கொண்டேன்.

அம்மாவின் கணக்கு புத்தகத்திலிருந்து ஐநூறு பணமும் எடுத்து வைத்துகொண்டு எனது புது சைக்கிள்  உறவுக்காரனை காத்துகொண்டிருந்தேன் ஒரு கிழமையல்ல ஒரு மாதமல்ல ....ஐந்தாறு மாதங்கள்

அவரும் வீட்டுபக்கம் வரவில்லை,இறுதிவரை நானும் புது சைக்கிள் ஒடவில்லை.

அப்பாவுக்கு தூர இடத்துக்கு மாற்றலாகி செல்ல வேண்டி வந்தது அப்பாவின் சைக்கிள் எனது சைக்கிள் ஆனது.

அம்மா அல்லது அப்பாவிடம் சொல்லி அனுமதி எடுத்து சைக்கிளை ஓடும் காலம் போய் நானே என்னுடைய விருப்பம் போல சைக்கிளை எடுத்து ஓடும் வயசு வந்துவிட்டது.

சைக்கிள் டயர் அடிக்கடி பஞ்சராகும் உருட்டிகொண்டு சைக்கிள் கடைக்கு போனால் கடைக்காரர் சொல்லுவார்

"அடுத்த முறை வரும் புது டயரும் டியுப்பும் போட காசோட வாரும் இந்த டயர் நல்ல வழுக்கையா போய்விட்டது என்ட மண்டையை மாதிரி .டியூப்பில்   ஒட்டு போட இடமில்லை"

"அண்ணே பார்த்து ஒட்டி தாங்கோ"

"இது தான் கடைசியா போடுறது இதற்கு பிறகு இதை திருத்த ஏலாது"

"சரி அண்ணே"

பிறகு ஒரு மாதிரி அம்மாவிடம் காசு வாங்கி ஒரு டயரும் டியுபுப்பும் போட்டேன் .ஒன்றை திருத்த அடுத்த திருத்த வேலை வந்து விடும் சீட் பிய்ந்து போகும்,பெடல் கழன்று விழும்,சைக்கிள் செயின் அறுந்து போகும் இப்படி பல செலவுகள் அதை எல்லாம் திருத்த காசு வீட்டை கேட்க மனசாட்சி இடம் கொடுக்கவில்லை.

பாடசாலலை,டியுசன் போன்றவற்றுக்கு பாவிப்பதற்காக கிடைத்த சைக்கிளை பின்பு நான் ஊர் சுற்றுவதற்கும் பெண்களின் பின் சுற்றுவதற்கும் பயன்படுத்த தொடங்கி விட்டேன் .கல்விக்கு பயன்படுத்தியதை விட காதல் ஒட்டத்திற்கு காதல் வாகனமாக பயன் படுத்தியது அதிகம் .இறுதியில் கல்வியிலும் வெற்றியில்லை காதலிலும் வெற்றியில்லை .

வழமையா நேரம் கிடைக்கும் பொழுது யாழ்.கொமில தான் பொழுதை போகிறனான்....இப்ப கொஞ்ச காலமா உந்த யூடியுப்பில மினக்கெட வெளிக்கிட்டன்..

அப்படி அன்றும் யாழ்ப்பாணத்து யூடியுப்பர்களின் சனலை நோண்டி கொண்டிருந்தேன் பலர் செய்யும் நல்ல சேவைகளை பார்த்து ரசித்துகொண்டிருந்தேன் .....புலம் பெயர்ந்த உறவுகளின் உதவிகள் அந்த மாதிரி போய் சேர்ந்து கொண்டிருந்தது.....

தாயக உறவுகளில் அநேகர் தங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு  போக சைக்கிள் வேணும் என்ற கோரிக்கையை வைத்து கொண்டிருந்தார்கள் ....புலம் பெயர் உறவுகளும் பணத்தை வாரி இறைத்து சைக்கிளை வாங்கி கொடுக்க யூப்டியுப்பர்களுக்கு துணையாக இருந்தார்கள் ...

 

அன்று ஆயிரம் ரூபாவுக்கு சைக்கிள் வாங்கி ஓட முடியாமல்  இருந்த பலர்   ....இன்று ஊர் பெயர் தெரியாத பலருக்கு இருபதாயிரம் ரூபாவுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கின்றனர்.....எல்லாம் அவன் செயல் ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கிள் அனுபவங்கள் பற்றி சொல்லப் போனால் சொல்லி மாளாது, நேரம் காலமின்றி நண்பர்களாக சேர்ந்து  கீரிமலைக்கு குளிக்கப் போவது, அவர்களின் முக்கியமான வேலை கூவிலுக்கு போய் கள்ளுக் குடிப்பது, நான் கருப்பணி மட்டும் குடிப்பேன்.....!  😁

நல்ல நினைவுகள் நன்றி புத்ஸ்.....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறக்க முடியாத சிறுவயது அனுபவம்.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
ஆனாலும் அனேகமாக இது வீட்டுக்கு வீடு வாசல்படி என்ற மாதிரியே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

அப்படி அன்றும் யாழ்ப்பாணத்து யூடியுப்பர்களின் சனலை நோண்டி கொண்டிருந்தேன் பலர் செய்யும் நல்ல சேவைகளை பார்த்து ரசித்துகொண்டிருந்தேன் .....புலம் பெயர்ந்த உறவுகளின் உதவிகள் அந்த மாதிரி போய் சேர்ந்து கொண்டிருந்தது.....

தாயக உறவுகளில் அநேகர் தங்கள் பிள்ளைகள் பாடசாலைக்கு  போக சைக்கிள் வேணும் என்ற கோரிக்கையை வைத்து கொண்டிருந்தார்கள் ....புலம் பெயர் உறவுகளும் பணத்தை வாரி இறைத்து சைக்கிளை வாங்கி கொடுக்க யூப்டியுப்பர்களுக்கு துணையாக இருந்தார்கள் ...

 

அன்று ஆயிரம் ரூபாவுக்கு சைக்கிள் வாங்கி ஓட முடியாமல்  இருந்த பலர்   ....இன்று ஊர் பெயர் தெரியாத பலருக்கு இருபதாயிரம் ரூபாவுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கின்றனர்.....எல்லாம் அவன் செயல் ....

கறள் புடிச்ச றலி சைக்கிள் கதைக்கு  நன்றி புத்தன்.😁
எண்டாலும் பட்டும் படாமலும் நாசுக்காய் ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறியள்.அதுதான் உந்த யூரியூப்பர்மாரை பற்றி
 யாழ்ப்பாணத்து யூரியூப்பர்மார் நல்ல விசயங்களை செய்யினம் போலதான் கிடக்கு. போற போக்கை பாத்தால் இனி  முழுநேர தொழிலாயும் செய்வினம் போல கிடக்கு. நல்லது நடந்தால் சந்தோசம்.
இருந்தாலும் நானும் ஒரு விசயத்தை பட்டும் படாமலும் சொல்லீட்டு ஓடுவம்.
நேற்று யாழ்ப்பாணத்தார்ரை யூரியூப் பாத்தன். வீடு கழுவுற வீடியோ....அதிலை ஒரு இடத்திலை ஒரு பிள்ளை ஒரு பொடியனை பாத்து சொல்லுது " டேய் நீ நல்லாய் கழுவுறாயடா உனக்கு வெளிநாட்டிலை நல்ல எதிர்காலம் இருக்குதடா" இதுக்கு நான் என்னத்தை சொல்ல....நான் என்ன செய்யட்டும்?:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

இருந்தாலும் நானும் ஒரு விசயத்தை பட்டும் படாமலும் சொல்லீட்டு ஓடுவம்.
நேற்று யாழ்ப்பாணத்தார்ரை யூரியூப் பாத்தன். வீடு கழுவுற வீடியோ....அதிலை ஒரு இடத்திலை ஒரு பிள்ளை ஒரு பொடியனை பாத்து சொல்லுது " டேய் நீ நல்லாய் கழுவுறாயடா உனக்கு வெளிநாட்டிலை நல்ல எதிர்காலம் இருக்குதடா" இதுக்கு நான் என்னத்தை சொல்ல....நான் என்ன செய்யட்டும்?:cool:

பிள்ளை உண்மையைத் தானே சொல்லியிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2021 at 21:51, விளங்க நினைப்பவன் said:

மிகவும் தகவல்கள் கொண்ட interesting பதிவு

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி விளங்க நினைப்பவன்

On 1/12/2021 at 22:39, suvy said:

சைக்கிள் அனுபவங்கள் பற்றி சொல்லப் போனால் சொல்லி மாளாது, நேரம் காலமின்றி நண்பர்களாக சேர்ந்து  கீரிமலைக்கு குளிக்கப் போவது, அவர்களின் முக்கியமான வேலை கூவிலுக்கு போய் கள்ளுக் குடிப்பது, நான் கருப்பணி மட்டும் குடிப்பேன்.....!  😁

நல்ல நினைவுகள் நன்றி புத்ஸ்.....!  

 

On 1/12/2021 at 22:39, suvy said:

சைக்கிள் அனுபவங்கள் பற்றி சொல்லப் போனால் சொல்லி மாளாது, நேரம் காலமின்றி நண்பர்களாக சேர்ந்து  கீரிமலைக்கு குளிக்கப் போவது, அவர்களின் முக்கியமான வேலை கூவிலுக்கு போய் கள்ளுக் குடிப்பது, நான் கருப்பணி மட்டும் குடிப்பேன்.....!  😁

நல்ல நினைவுகள் நன்றி புத்ஸ்.....!  

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி சுவி.....நான் பால் தான் குடிப்பேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2021 at 01:38, ஈழப்பிரியன் said:

மறக்க முடியாத சிறுவயது அனுபவம்.
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
ஆனாலும் அனேகமாக இது வீட்டுக்கு வீடு வாசல்படி என்ற மாதிரியே.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி ஈழப்பிரியன் ....நீங்கள் சொல்வது போல் வீடுக்கு வீடு வாசற்படான்று.....ஆனால் இன்று வீட்டுக்கு வீடு புலம்பெயர் உ ழைப்பாளிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/12/2021 at 02:06, குமாரசாமி said:

கறள் புடிச்ச றலி சைக்கிள் கதைக்கு  நன்றி புத்தன்.😁
எண்டாலும் பட்டும் படாமலும் நாசுக்காய் ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறியள்.அதுதான் உந்த யூரியூப்பர்மாரை பற்றி
 யாழ்ப்பாணத்து யூரியூப்பர்மார் நல்ல விசயங்களை செய்யினம் போலதான் கிடக்கு. போற போக்கை பாத்தால் இனி  முழுநேர தொழிலாயும் செய்வினம் போல கிடக்கு. நல்லது நடந்தால் சந்தோசம்.
இருந்தாலும் நானும் ஒரு விசயத்தை பட்டும் படாமலும் சொல்லீட்டு ஓடுவம்.
நேற்று யாழ்ப்பாணத்தார்ரை யூரியூப் பாத்தன். வீடு கழுவுற வீடியோ....அதிலை ஒரு இடத்திலை ஒரு பிள்ளை ஒரு பொடியனை பாத்து சொல்லுது " டேய் நீ நல்லாய் கழுவுறாயடா உனக்கு வெளிநாட்டிலை நல்ல எதிர்காலம் இருக்குதடா" இதுக்கு நான் என்னத்தை சொல்ல....நான் என்ன செய்யட்டும்?:cool:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி கு.சா...நானும் அந்த யூ டியுப்பை பார்த்தேன் ....

On 2/12/2021 at 11:19, உடையார் said:

மறக்க முடியாத சிறுவயது அனுபவம்👍

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க உடையார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2021 at 10:00, putthan said:

பாருக்கு கீழே காலை போட்டு மற்ற பக்க பெடலை மிதிச்சு பலன்ஸ் பண்ணி அடுத்த காலையும் பெடலில் வைத்து ஓடதொடங்கி விட்டேன்

எனது சைக்கிள் ஓட்டும் அனுபவமும் இப்படித்தான் ஆரம்பித்தது. அப்பாவின் அப்பா காலத்து Humber சைக்கிள் ஃபிரேம் வீட்டில் இருந்தது. அதற்கு ஸ்ரிரிங் லொக் இருக்கும். லொக் பண்ணினால் ஹாண்டிலை திருப்பேலாது! அத்தான் இரண்டு சில்லுகளையும் சீற்றையும் வாங்கி தானே பூட்டி சைக்கிளாக்கிவிட்டார்.

புத்தர் யூரியூப்பில் பொழுதை ஒரேயடியாக போக்காமல் யாழிலும் அடிக்கடி கிறுக்கல்களை எழுதலாம்தானே!

spacer.png

அண்ணனும் நானும் சேர்ந்தே பழகினோம். இரண்டு பேருமே கெந்திப் பழகி, கவுட்டுக்குள்ளால் (பாருக்குக் கீழே) காலை வைத்துத்தான் ஓடினோம்😁 புதுப் பெடல் வலது காலில் வெட்டி அது இப்போதும் பெரிய வடுவாக இருக்கின்றது. இடது காலை இடது பெடலில் வைத்து கெந்தி வலக்காலை சீற்றுக்குப் பின்பக்கமாக உயர்த்தி பாருக்கு மேலால் கொண்டுவந்து வலது பெடலில் வைத்து முதன்முதலாக ஓடியது இப்போதும் சந்திரனுக்கு ரொக்கெட்டில் போகும் உணர்வுடன் அப்படியே இருக்கின்றது.😀

அதன் பின்னர் அத்தான் ஒரு பழைய ரலி சைக்கிளின் ஃபிரேமை வாங்கி சில்லுகள் பூட்டி எனக்குச் சைக்கிளாக்கித் தந்தார். அதுதான் நான் ஊரில் இருக்கும்வரை எனது சைக்கிள். இறுதியாக ஊரை விட்டு அந்த சைக்கிளில்தான் தனங்கிளப்பு  வெளிக் காத்துக்குள்ளால் அப்பாவுடன் டபிள்ஸில் பூநகரியூடாக வெள்ளாங்குளம், மல்லாவி, பாண்டியன்குளம், இரணை இலுப்பங்குளம் என்று ஏ9 பாதையைப் பார்க்காமலேயே வவுனியா வந்தேன்.

எனது சைக்கிளுக்கும் என்னைப் பற்றிய ஆயிரம் கதைகள் இருக்கும். இப்போது துருப்பிடித்திருக்கின்றதா அல்லது அழிந்தே போய்விட்டதா என்றே தெரியாது!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2021 at 10:06, குமாரசாமி said:

கறள் புடிச்ச றலி சைக்கிள் கதைக்கு  நன்றி புத்தன்.😁
எண்டாலும் பட்டும் படாமலும் நாசுக்காய் ஒரு விசயத்தை சொல்லியிருக்கிறியள்.அதுதான் உந்த யூரியூப்பர்மாரை பற்றி
 யாழ்ப்பாணத்து யூரியூப்பர்மார் நல்ல விசயங்களை செய்யினம் போலதான் கிடக்கு. போற போக்கை பாத்தால் இனி  முழுநேர தொழிலாயும் செய்வினம் போல கிடக்கு. நல்லது நடந்தால் சந்தோசம்.
இருந்தாலும் நானும் ஒரு விசயத்தை பட்டும் படாமலும் சொல்லீட்டு ஓடுவம்.
நேற்று யாழ்ப்பாணத்தார்ரை யூரியூப் பாத்தன். வீடு கழுவுற வீடியோ....அதிலை ஒரு இடத்திலை ஒரு பிள்ளை ஒரு பொடியனை பாத்து சொல்லுது " டேய் நீ நல்லாய் கழுவுறாயடா உனக்கு வெளிநாட்டிலை நல்ல எதிர்காலம் இருக்குதடா" இதுக்கு நான் என்னத்தை சொல்ல....நான் என்ன செய்யட்டும்?:cool:

நானும் பார்த்தேன்.  பரவாயில்லாமல் செய்யிற ஒன்று இரண்டில் அவர்களும் ஒன்று என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/12/2021 at 05:00, putthan said:

அன்று ஆயிரம் ரூபாவுக்கு சைக்கிள் வாங்கி ஓட முடியாமல்  இருந்த பலர்   ....இன்று ஊர் பெயர் தெரியாத பலருக்கு இருபதாயிரம் ரூபாவுக்கு சைக்கிள் வாங்கி கொடுக்கின்றனர்.....எல்லாம் அவன் செயல் ....

நல்ல கதை புத்தன் அண்ணா. கிட்டத்தட்ட என் கதையும் அது தான்.  அந்த காலத்தில பலருக்கு இப்படித்தான் இருக்கும்.  வெளியிடப் பாடசாலைக்கு 6ம் வகுப்பில் சேர்ந்ததும் வீட்டில ஒரு புதுசா பழசோ சைக்கிள் கேக்க தொடங்கி ஒரு வருசத்துக்கு பிறகு நடந்தது.  அதுவரை ஊரில் இருந்து அந்த பாடசாலைக்கு செல்லும் அண்ணா மாரிடம் கதைத்து விடுவார்கள்.  விடிய வெள்ளன அவர்கள் சொல்லுற நேரத்திலும் பார்க்க 5 நிமிடம் முதலே அவர்கள் வீட்டிற்கு சென்று அவர்களுடன் சென்று வந்தேன்.  அப்படி ஏற்றிச் சென்ற அண்ணன் ஒருத்தர் உங்கள் நாட்டிலும் இருக்கிறார் :)

இந்த u-tubers ஐ நானும் சில வாரங்களாக பார்க்கிறேன்.  அவர்களுக்கும் அட் வருமானம் வரட்டுமென்று பார்ப்பேன்.  சிலர் மிகவும் சிறப்பாக செய்வது போன்று தான் தோன்றுகிறது.    நீங்கள் பயன்தரு மரங்கள் வளர்க்க உதவிய காணொளி பார்த்தேன் அதன் பின்னர் நன்றாக பராமரிப்பவர்களுக்கு வழங்கிய பரிசுத்தொகை காணொளியும் பார்த்தேன்.

சில நேரங்களில் கஸ்ர பட்டு வேலை செய்வது கஸ்ரம் போன்ற தொனியில் உதவிகள் கேக்கும் போது கொஞ்சம் கடுப்பாகத்தான் செய்கிறது.  சிலரது சூழ்நிலையை புரிந்து கொண்டாலும், பலர் கஸ்ர பட்டு வேலை செய்வதே ஒரு பிரச்சனையாக கூறுகிறார்கள்.  சிலர் அடிப்படை உதவியாக என்ன வேணுமென்று கேட்டல், வலு சிம்பிளா ஒரு சைக்கிள் எண்டு சொல்லுகினம். பெடியை பார்த்தா 3-4 ஆம் வகுப்பா தான் இருக்கும்.  O/L அல்லது  A/L படிக்கிற பிள்ளை என்றால் பரவாய் இல்லை.  நானா கொடுக்கிறேன் ...குடுக்கிறவை குடுக்கட்டும் என்று கடந்து போகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இவர்களுடைய இனிமையான சைக்கிள் அனுபவங்களை படிக்கும் போது அப்போது யாழ்பாணம் உலக அளவிலேயே மிகவும் குறைந்த அளவு  CO 2 வை வெளியேற்றிய ஒரு பகுதியாக இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் சைக்கிள் பற்றிய நினைவுமீட்டல் அந்தநாள் ஊர் ஞாபகங்களை கொண்டு வந்தது.

பத்து பன்னிரண்டு  வயசிலேயே ஒரு வாகனத்துக்கு சொந்தக்காரராக இருப்பது சைக்கிளுக்கு மட்டும்தான். அதை ஓடிக்கொண்டு ஒழுங்கை வழிய திரிவதும் பெல் அடிப்பதும், போட்டிக்கு ஓடுவதும், சுகானுபவங்கள், அந்த சுகம் இப்போ பென்ஸ் கார் ஓடிக்கொண்டு திர்ந்தாலும் வருவதில்லை.

 

                              Screenshot-7.png                          

பிளையிங் பிஜன் ,றல்லி, ஹீரோ ,ஏசியா, லுமாலா, ஷொப்பர் .

உங்களில் யார் பிரபுதேவா என்பதுபோல் எங்களில் யாரும் இதில் ஒரு சைக்கிளுடன் ஓடி திரிந்திருப்போம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சைக்கில் என்டா என்ன சும்மாவா.அந்தக் காலத்து காதல் வாகனம் எல்லோ.கிறுக்கல் அந்த மாதிரி புத்தன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, valavan said:

புத்தனின் சைக்கிள் பற்றிய நினைவுமீட்டல் அந்தநாள் ஊர் ஞாபகங்களை கொண்டு வந்தது.

பத்து பன்னிரண்டு  வயசிலேயே ஒரு வாகனத்துக்கு சொந்தக்காரராக இருப்பது சைக்கிளுக்கு மட்டும்தான். அதை ஓடிக்கொண்டு ஒழுங்கை வழிய திரிவதும் பெல் அடிப்பதும், போட்டிக்கு ஓடுவதும், சுகானுபவங்கள், அந்த சுகம் இப்போ பென்ஸ் கார் ஓடிக்கொண்டு திர்ந்தாலும் வருவதில்லை.

 

                              Screenshot-7.png                          

பிளையிங் பிஜன் ,றல்லி, ஹீரோ ,ஏசியா, லுமாலா, ஷொப்பர் .

உங்களில் யார் பிரபுதேவா என்பதுபோல் எங்களில் யாரும் இதில் ஒரு சைக்கிளுடன் ஓடி திரிந்திருப்போம்.

 

அப்போது ரலி சைக்கிளுக்கு சமனாக ரட்ச் என்ற சைக்கிளும் இருந்தது.ரீகல் என்ற சைக்கிளும் ஞாபகம் வருது......வளவன் ........!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதும் போல நகைசுவையான ஒரு பதிவு..பல பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்க வைத்துள்ளது. எனது சைக்கிளை மட்டும் என் அப்பா ஒருவருக்கும் கொடுக்காமல் வைத்திருக்கிறார்(இதில் எனது சகோதரிகளுக்கு கொஞ்சம் கடுப்பு). இந்த lockdownல் பொழுது போகாமல் இருக்க அதை வளவிற்குள் ஓடுவதும் வழமை.. 

spacer.png

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.