-
Tell a friend
-
Topics
-
Posts
-
By nedukkalapoovan · Posted
தோற்றுப்போன சனாதிபதியாக நான் பதவி விலகமாட்டேன்..எனது பதவிக் காலத்தை நிறைவு செய்தே வெளியேறுவேன் அல்லது தொடர்ந்து தேர்தலில் நின்று வெல்வேன் என்று இறுமாப்புப் பேசிக் கொண்டிருந்தவர்.. இன்று... தோற்று ஓடிப்போன முன்னாள் சனாதிபதி மட்டுமல்ல.. அகதியாக அலைகிறார். ஆனால்.. இந்த இனக்கொலைஞனுக்கு.. மனிதாபிமான உதவி செய்ய தாய்லாந்துக்கு எப்படி மனசு வந்திச்சோ. இவர் மீது ஐநா அமைப்பும் போர்க்குற்றம் சுமத்தியுள்ளதை தாய்லாந்து பிரதமர் அறிவாரா..?! தாய்லாந்து பேச்சுக்கள் தான் புலிகளின் கடைசிப் பேச்சாகவும் அமைந்தது.. தாய்லாந்தில் வைச்சுத்தான் புலி அழிப்புச் சதியே தீட்டப்பட்டது. தாய்லாந்துக்கும் ராஜபக்ச குடும்பத்திற்கும் மறைமுக தொடர்புகளும் உள்ளன.. என்ற சந்தேகம் இப்போ தீவிரமாகிறது. -
By தமிழ் சிறி · Posted
கூச்சம் இல்லாமால், வெத்திலை போட்டு... துப்பி இருக்கிறார்கள். 😡 -
By ராசவன்னியன் · Posted
யார் செய்ததோ..? யார் சொல்வதோ..! யார் சொல்வதோ..!! -
By தமிழ் சிறி · பதியப்பட்டது
தெற்கிலும், வடக்கிலும்.... இந்திய உதவியுடன், வீடமைப்புத் திட்டங்கள்-பிரசன்ன ரணதுங்க. வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவிற்கு அமைய தெற்கிலும் வடக்கிலும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. அதற்கமைய ஹம்பாந்தோட்டையில் 24 வீடமைப்புத் திட்டங்களும், மாத்தறையில் ஒன்றும் மேற் கொள்ளப்படுகின்றதோடு... அம்பாந்தோட்டையில் மேலும் 26 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், தெற்கில் நிர்மாணிக்கப்படவுள்ள மொத்த வீடுகளின் எண்ணிக்கை 1200 ஆகும். இந்தத் திட்டங்களுக்காக இந்தியாவிலிருந்து 600 மில்லியன் ரூபாய் பெறப்பட உள்ளது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதே வேளை வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் மொத்த திட்டங்களின் எண்ணிக்கை 24 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1294330 -
By தமிழ் சிறி · Posted
நவம்பர் மாதம்... இலங்கை திரும்புகின்றார், கோட்டா! முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்ஷ, 90 நாள் தாய்லாந்து விசா முடிந்து நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கோட்டபாய ராஜாக்ஷ இன்று சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு இன்று தாய்லாந்துக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அங்கு 90 நாட்கள் தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மனிதாபிமான அடிப்படையில் கோட்டபாய ராஜாக்ஷவிற்கு தாய்லாந்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என தாய்லாந்து பிரதமர் நேற்று கூறியியிருந்தார். பதவி நீக்கம் செய்யப்பட்ட ராஜபக்ஷவின் சார்பில் இலங்கை அரசாங்கம் தாய்லாந்திடம் இந்த விசா கோரிக்கையை முன்வைத்ததாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியது. அவர் நாட்டை விட்டு வெளியேறியதில் இருந்து அவருக்கான பல செலவுகளை அவரும் அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷவும் ஏற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அவரையும் அவரது மனைவியையும் ஏற்றிச் செல்ல விமானப்படை விமானத்தை தவிர வேறு எந்த அரச நிதியும் கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்தவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் தஞ்சம் கோருவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு சாதகமான பதில் கிடைக்காத காரணத்தினால், கோட்டபாய ராஜபக்ஷ மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2022/1294331
-
Recommended Posts