Jump to content

இலங்கை விஞ்ஞானியின் புகலிடக் கோரிக்கை உள்துறை அலுவலகம் மாற்றிக்கொண்டு உள்ளது( U-Trun)


Recommended Posts

டாக்டர் நடராஜா முகுந்தனும் அவரது குடும்பத்தினரும், இலங்கையில் சித்திரவதைகளை அனுபவித்தனர்  பிரித்தானியாவில் இருந்து அவர்கள்  நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டு  இருந்தனர். 

Nadarajah and Sharmila Muhunthan with their three children.

https://www.theguardian.com/uk-news/2021/nov/30/home-office-u-turn-on-sri-lankan-scientists-asylum-claim

Link to comment
Share on other sites

  • Replies 186
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் எதுக்கு அசைலம் கேட்டு மினக்கெட்டுக்கொண்டிருந்தது எண்டே விளங்கேல்ல.. ரலெண்ட் விசா கட்டக்கரிக்க பிரித்தானியா உட்பட அபிவிருத்தி அடைந்த எந்த நாட்டுக்கு அப்பிளை பண்ணி இருந்தாலும் விசா கூப்பிட்டு குடுத்திருப்பானுங்கள்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இந்தாள் எதுக்கு அசைலம் கேட்டு மினக்கெட்டுக்கொண்டிருந்தது எண்டே விளங்கேல்ல.. ரலெண்ட் விசா கட்டக்கரிக்க பிரித்தானியா உட்பட அபிவிருத்தி அடைந்த எந்த நாட்டுக்கு அப்பிளை பண்ணி இருந்தாலும் விசா கூப்பிட்டு குடுத்திருப்பானுங்கள்.. 

உங்களுக்கு எல்லாம் புட்டுப் புட்டு வைக்கோணும், ஓணாண்டியரே.

முதலாவது, ரலண்ட் விசாவில, நிரந்தர குடியுரிமை கிடைக்கிறது கஸ்டம். இரண்டு வருசத்தில நாடு போகவேண்டும்... மாத்திவிட்டார்கள். ஆறு மாசம், வேலை இல்லாவிடில், எல்லாம் கான்சல்..... பெனிபிற் ஓபிஸ் பக்கம் தலைக்கறுப்பே காட்டப்படாது... கோத்தாவிடம் போகவேண்டியது தான்.

இரண்டாவது, அகதிகளுக்கு, அரச மானியம்.... வீட்டு வசதி..... அதாவது பெனிபிற் ஓபிசில.... காலை நீட்டி படுத்திருக்கலாம்...

குடியுரிமை, கடவுச்சீட்டு உண்டு.

மூன்று பிள்ளைகள் உடன் எது முக்கியம்?

Link to comment
Share on other sites

11 hours ago, Nathamuni said:

உங்களுக்கு எல்லாம் புட்டுப் புட்டு வைக்கோணும், ஓணாண்டியரே.

முதலாவது, ரலண்ட் விசாவில, நிரந்தர குடியுரிமை கிடைக்கிறது கஸ்டம். இரண்டு வருசத்தில நாடு போகவேண்டும்... மாத்திவிட்டார்கள். ஆறு மாசம், வேலை இல்லாவிடில், எல்லாம் கான்சல்..... பெனிபிற் ஓபிஸ் பக்கம் தலைக்கறுப்பே காட்டப்படாது... கோத்தாவிடம் போகவேண்டியது தான்.

இரண்டாவது, அகதிகளுக்கு, அரச மானியம்.... வீட்டு வசதி..... அதாவது பெனிபிற் ஓபிசில.... காலை நீட்டி படுத்திருக்கலாம்...

குடியுரிமை, கடவுச்சீட்டு உண்டு.

மூன்று பிள்ளைகள் உடன் எது முக்கியம்?

பாலபத்ர ஓணாண்டி அவர்கள் தன் கருத்தை பின்னூட்டம் செய்திராதிருந்தால் ...... முனிவரே! நீங்களும் சட்டங்கள் பற்றிய விபரங்களை எழுதவேண்டி வந்திராது என்றே எண்ணுகிறேன். பலரும், நானுட்பட இதுபற்றி அறிந்துகொள்வதற்கு ஓணாண்டி முதல் காரணமாகிறார். அவருக்குப் புட்டுப் புட்டு வைக்கத் தேவையில்லை, பூப்போட வேண்டும். பூவானது புட்டை அளவளவாகப் பிரித்துக் கொடுக்கும்.🤗 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Paanch said:

பாலபத்ர ஓணாண்டி அவர்கள் தன் கருத்தை பின்னூட்டம் செய்திராதிருந்தால் ...... முனிவரே! நீங்களும் சட்டங்கள் பற்றிய விபரங்களை எழுதவேண்டி வந்திராது என்றே எண்ணுகிறேன். பலரும், நானுட்பட இதுபற்றி அறிந்துகொள்வதற்கு ஓணாண்டி முதல் காரணமாகிறார். அவருக்குப் புட்டுப் புட்டு வைக்கத் தேவையில்லை, பூப்போட வேண்டும். பூவானது புட்டை அளவளவாகப் பிரித்துக் கொடுக்கும்.🤗 

ஐயனுக்கு ரலன்ட் விசாவிலை பெரிய பிரித்தானியா பக்கம் போற பிளான் போலை..........😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

ஐயனுக்கு ரலன்ட் விசாவிலை பெரிய பிரித்தானியா பக்கம் போற பிளான் போலை..........😁

கறுப்பன் குசும்பன்…பெரிய பிரித்தானிய போக ஜடியா கேக்குரான்…😀

13 hours ago, Nathamuni said:

உங்களுக்கு எல்லாம் புட்டுப் புட்டு வைக்கோணும், ஓணாண்டியரே.

முதலாவது, ரலண்ட் விசாவில, நிரந்தர குடியுரிமை கிடைக்கிறது கஸ்டம். இரண்டு வருசத்தில நாடு போகவேண்டும்... மாத்திவிட்டார்கள். ஆறு மாசம், வேலை இல்லாவிடில், எல்லாம் கான்சல்..... பெனிபிற் ஓபிஸ் பக்கம் தலைக்கறுப்பே காட்டப்படாது... கோத்தாவிடம் போகவேண்டியது தான்.

இரண்டாவது, அகதிகளுக்கு, அரச மானியம்.... வீட்டு வசதி..... அதாவது பெனிபிற் ஓபிசில.... காலை நீட்டி படுத்திருக்கலாம்...

குடியுரிமை, கடவுச்சீட்டு உண்டு.

மூன்று பிள்ளைகள் உடன் எது முக்கியம்?

நன்றி தெய்வமே.. இதுக்குத்தான் நான் சொல்லுறது கோசானும் நாதமும் யாழ்கள் விக்கிபீட்யாக்கள் எண்டு..

1 hour ago, Paanch said:

பாலபத்ர ஓணாண்டி அவர்கள் தன் கருத்தை பின்னூட்டம் செய்திராதிருந்தால் ...... முனிவரே! நீங்களும் சட்டங்கள் பற்றிய விபரங்களை எழுதவேண்டி வந்திராது என்றே எண்ணுகிறேன். பலரும், நானுட்பட இதுபற்றி அறிந்துகொள்வதற்கு ஓணாண்டி முதல் காரணமாகிறார். அவருக்குப் புட்டுப் புட்டு வைக்கத் தேவையில்லை, பூப்போட வேண்டும். பூவானது புட்டை அளவளவாகப் பிரித்துக் கொடுக்கும்.🤗 

உண்மைதான் பாஞ்.. நான் வெக்கம் துக்கம் பாக்காம மனசுல பட்டதெல்லாம் எழுதுறதால அசிங்கப்படுரதுக்கு நடுவிலையும் இப்புடி நல்ல விசயஙகளும் வருது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் லண்டன் தமிழ் லோயர் மாரின் திட்டமிட்டபடி நடத்திருக்கு. இது தான் அவையிட வகையான அரசியல் தஞ்ச ஏற்பாடே.

வந்தவர்.. திடீரென்று.. மனிசி பிள்ளையை விட்டிட்டு.. சொறீலங்காவுக்கு போய்.. வருத்தக்கார அம்மாவை பார்த்திட்டு.. வரேக்க பிடிபட்டு.. சரி.. எனி கதையை எழுத வேண்டியது தானே.

அடிப்படையில்.. இவரின் அகதி அந்தஸ்து நிராகரிப்பு சரியானதாகவே இருந்திருக்கும். ஆனால்.. இவரின் சேவை நாட்டுக்கு அவசியமானது என்ற காரணத்தால்.. தேசிய பொது நலனுக்கு தேவை என்ற ரீதியில்.. இவரின் விண்ணப்பம் வழங்கப்பட்ட உயர் நிலை பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். 

இதே சாதாரண தமிழர்களுக்கு ஆகுமா.. என்றால் கேள்விக்குறிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nedukkalapoovan said:

இதெல்லாம் லண்டன் தமிழ் லோயர் மாரின் திட்டமிட்டபடி நடத்திருக்கு. இது தான் அவையிட வகையான அரசியல் தஞ்ச ஏற்பாடே.

வந்தவர்.. திடீரென்று.. மனிசி பிள்ளையை விட்டிட்டு.. சொறீலங்காவுக்கு போய்.. வருத்தக்கார அம்மாவை பார்த்திட்டு.. வரேக்க பிடிபட்டு.. சரி.. எனி கதையை எழுத வேண்டியது தானே.

அடிப்படையில்.. இவரின் அகதி அந்தஸ்து நிராகரிப்பு சரியானதாகவே இருந்திருக்கும். ஆனால்.. இவரின் சேவை நாட்டுக்கு அவசியமானது என்ற காரணத்தால்.. தேசிய பொது நலனுக்கு தேவை என்ற ரீதியில்.. இவரின் விண்ணப்பம் வழங்கப்பட்ட உயர் நிலை பரிந்துரைகளையும் கருத்தில் கொண்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். 

இதே சாதாரண தமிழர்களுக்கு ஆகுமா.. என்றால் கேள்விக்குறிதான்.

👍உதையேதான் நானும் நினைச்சன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nedukkalapoovan said:

இதெல்லாம் லண்டன் தமிழ் லோயர் மாரின் திட்டமிட்டபடி நடத்திருக்கு. இது தான் அவையிட வகையான அரசியல் தஞ்ச ஏற்பாடே.

வந்தவர்.. திடீரென்று.. மனிசி பிள்ளையை விட்டிட்டு.. சொறீலங்காவுக்கு போய்.. வருத்தக்கார அம்மாவை பார்த்திட்டு.. வரேக்க பிடிபட்டு.. சரி.. எனி கதையை எழுத வேண்டியது தானே.

நெடுக்கர்.... முன்பு மாதிரி சும்மா கதை சொல்ல முடியாது. village visit  என்று, பிரித்தானியா மட்டுமல்லாது, மேல்நாட்டு தூதரகங்கள், தனியார் கொம்பனிகளை வைத்து, அகதி விண்ணப்பத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை விசாரிக்கின்றன. வீடு எரிச்சவங்கள், அப்பாவை காணவில்லை, அண்ணாவை பிடித்து வைத்திருக்கினம், தம்பியை கொண்டு போய் விட்டார்கள் என்று கண பேரின், கதைகளை,, படங்களுடன், பொய் என்று நீருபித்ததுடன், கேஸ் டிஸ்மிஸ் பண்ணி, நிராகரித்திருக்கிறார்கள்.

போலீஸ் ரிப்போர்ட் எடுத்து, பின்னணி அறிகிறார்கள். கொலை, களவு, பயங்கரவாதம்..... criminal பின்னணி இருந்தால்.... deport தான். ஒரு சிறு விடயத்தில் பொய் என்று பிடித்தால், முழு கேசும் காலி.

அகதி அந்தஸ்து சும்மா கொடுப்பதில்லை, இப்போது....

ஸ்காலர்ஷிப்பிலே படிக்க வந்தவர்..... முதலே அகதியாக வரவில்லை. மிக அண்மையில் என்பதால், இவருக்கு ஊர் போனபோது இலங்கையில் ஏதோ சிக்கல் நடந்திருக்க வேண்டும். அதனை சாதுரியமாக பயன்படுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.  ஆனாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவரது கல்வி தகமை காரணமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

நெடுக்கர்.... முன்பு மாதிரி சும்மா கதை சொல்ல முடியாது. village visit  என்று, பிரித்தானியா மட்டுமல்லாது, மேல்நாட்டு தூதரகங்கள், தனியார் கொம்பனிகளை வைத்து, அகதி விண்ணப்பத்தில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை விசாரிக்கின்றன. வீடு எரிச்சவங்கள், அப்பாவை காணவில்லை, அண்ணாவை பிடித்து வைத்திருக்கினம், தம்பியை கொண்டு போய் விட்டார்கள் என்று கண பேரின், கதைகளை,, படங்களுடன், பொய் என்று நீருபித்ததுடன், கேஸ் டிஸ்மிஸ் பண்ணி, நிராகரித்திருக்கிறார்கள்.

போலீஸ் ரிப்போர்ட் எடுத்து, பின்னணி அறிகிறார்கள். கொலை, களவு, பயங்கரவாதம்..... criminal பின்னணி இருந்தால்.... deport தான். ஒரு சிறு விடயத்தில் பொய் என்று பிடித்தால், முழு கேசும் காலி.

அகதி அந்தஸ்து சும்மா கொடுப்பதில்லை, இப்போது....

ஸ்காலர்ஷிப்பிலே படிக்க வந்தவர்..... முதலே அகதியாக வரவில்லை. மிக அண்மையில் என்பதால், இவருக்கு ஊர் போனபோது இலங்கையில் ஏதோ சிக்கல் நடந்திருக்க வேண்டும். அதனை சாதுரியமாக பயன்படுத்தி இருக்கிறார் என்று நினைக்கிறேன்.  ஆனாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவரது கல்வி தகமை காரணமாகவே கொடுக்கப்பட்டுள்ளது. 

இங்கு ஒருவர் படிக்க வந்திட்டு.. கொலிடேன்னு.. ஊருக்கு திரும்பிப் போய்.. தானே தனக்கு முதுகில காயம் போட்டிட்டு.. பேப்பரில ஒரு செய்தி போட்டு.. கட்டம் கட்டி அதோடு.. திரும்பி வந்து.. அசைலம் அடிச்சு.. இப்ப ஆள் செற்றில்.  நீங்க என்னடான்னா..!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, nedukkalapoovan said:

இங்கு ஒருவர் படிக்க வந்திட்டு.. கொலிடேன்னு.. ஊருக்கு திரும்பிப் போய்.. தானே தனக்கு முதுகில காயம் போட்டிட்டு.. பேப்பரில ஒரு செய்தி போட்டு.. கட்டம் கட்டி அதோடு.. திரும்பி வந்து.. அசைலம் அடிச்சு.. இப்ப ஆள் செற்றில்.  நீங்க என்னடான்னா..!!

பேப்பரில் வந்தா, தாரும்.... நம்பிவினம் தானே.... இவர்கள் இங்கே உள்ள தரத்தில் பார்ப்பார்கள்.

மேலும்.... வெள்ளை ஜட்ஜ் அய்யா, பேப்பரில் சந்தேகம் தெரிவித்தால்..... கதை வேற மாதிரி போயிடுமெல்லே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

பேப்பரில் வந்தா, தாரும்.... நம்பிவினம் தானே.... இவர்கள் இங்கே உள்ள தரத்தில் பார்ப்பார்கள்.

மேலும்.... வெள்ளை ஜட்ஜ் அய்யா, பேப்பரில் சந்தேகம் தெரிவித்தால்..... கதை வேற மாதிரி போயிடுமெல்லே....

அவருக்கு உள்துறை செயலக மட்டத்திலேயே அசைலம் அடிச்சிட்டாங்கள். நீங்க வேற.. ஜட்ஜ்... கோட் என்று கொண்டு. உள்துறை செயலகம் எல்லா கேசையும் கிண்டிறதில்லைப் போல. செலவு பார்ப்பாங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, nedukkalapoovan said:

அவருக்கு உள்துறை செயலக மட்டத்திலேயே அசைலம் அடிச்சிட்டாங்கள். நீங்க வேற.. ஜட்ஜ்... கோட் என்று கொண்டு. உள்துறை செயலகம் எல்லா கேசையும் கிண்டிறதில்லைப் போல. செலவு பார்ப்பாங்கள். 

உங்களுக்கு இந்த கேஸ் தெரிஞ்ச மாதிரி எனக்கு தெரிந்ததை நான் சொன்னேன்....

விக்கியர்... மகன்..... திருப்பி அனுப்பப்பட்ட கதை தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@Nathamuni  உள்வீட்டு திணைக்களம் ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் village report மற்றும் பின்னணி & இதர அறிக்கைகள் எடுப்பதில்லை. ஓர் அறிக்கையை வைத்து சில வேளைகளில் ஒரு வருடத்தையே ஓட்டுவார்கள்.

 

ஓர் தமிழனுக்கு நல்லது நடந்துள்ளது என்று  சந்தோசமாக கடந்து செல்வோம் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

ஓர் தமிழனுக்கு நல்லது நடந்துள்ளது என்று  சந்தோசமாக கடந்து செல்வோம்

அதே கார்டியனில் He said :“This is an important victory which recognises there is systematic torture of Tamils going on in Sri Lanka. தமிழர்கள் சிங்கள அரசால் திட்டமிட்ட சித்திரவதைக்கு ஆளாகிறார்கள் என்ற பதம் இங்கு விசா இல்லாமல் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம் . ஏனோ வின் கின் போன்ற தளம்கள் இந்த செய்தியை இருட்டடிப்பு செய்கிறது போல் ஒரு பிரமை .

கிஹானியா Gihaniya என்ற பெயர் சிங்களமா தமிழா அதன் அர்த்தம் யாருக்கும் தெரிந்தால் சொல்லவும்  இந்த நாசமா போன கார்டியன் காரன் அவரின்  மூத்த  மகளின்  பெயரை இப்படி சொல்கிறான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

அதே கார்டியனில் He said:“This is an important victory which recognises there is systematic torture of Tamils going on in Sri Lanka. தமிழர்கள் சிங்கள அரசால் திட்டமிட்ட சித்திரவதைக்கு ஆளாகிறார்கள் என்ற பதம் இங்கு விசா இல்லாமல் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம் . ஏனோ வின் கின் போன்ற தளம்கள் இந்த செய்தியை இருட்டடிப்பு செய்கிறது போல் ஒரு பிரமை .

கிஹானியா Gihaniya என்ற பெயர் சிங்களமா தமிழா அதன் அர்த்தம் யாருக்கும் தெரிந்தால் சொல்லவும்  இந்த நாசமா போன கார்டியன் காரன் அவரின்  மூத்த  மகளின்  பெயரை இப்படி சொல்கிறான் .

Gighani  என்பது சிங்களப் பெயராகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

விக்கியர்... மகன்..... திருப்பி அனுப்பப்பட்ட கதை தெரியுமா?

புது கதையா இருக்கு சொல்லுங்கோ கேட்பம்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

ஒன்றரை ஆகுது தலை நித்திரைக்கு போகவில்லியோ ?

நித்திரை கொள்ள எண்டு போக நாதம் இப்படி ஒரு புதிய கதையோட வாறார் - அதுதான் என்னெண்டு கேப்பம் எண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

நித்திரை கொள்ள எண்டு போக நாதம் இப்படி ஒரு புதிய கதையோட வாறார் - அதுதான் என்னெண்டு கேப்பம் எண்டு.

அவர் எங்காவது செய்தியை தூக்கி இருப்பார் சரியாக இணைக்க  தெரியாமல் குட்டு  வாங்குவார் உங்களிடம் வெய்ட் பண்ணுவம் நாளைக்கு சொல்வார் .

Link to comment
Share on other sites

2 hours ago, பெருமாள் said:

 

கிஹானியா Gihaniya என்ற பெயர் சிங்களமா தமிழா அதன் அர்த்தம் யாருக்கும் தெரிந்தால் சொல்லவும்  இந்த நாசமா போன கார்டியன் காரன் அவரின்  மூத்த  மகளின்  பெயரை இப்படி சொல்கிறான் .

எங்கட ஆக்கள் எண்சாஸ்திரம் பார்த்து, எங்கட  வாயிலே  பூராத பெயர் வைப்பதிலே வின்னர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

புது கதையா இருக்கு சொல்லுங்கோ கேட்பம்🤣.

என்னப்பா @Nathamuni கதை எழுதி முடியேல்லையோ?

@பெருமாள் வேற ஆர்வமாய் இருக்கிறார்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

என்னப்பா @Nathamuni கதை எழுதி முடியேல்லையோ?

@பெருமாள் வேற ஆர்வமாய் இருக்கிறார்🤣.

இங்கு பக்கத்து இலைக்கு சொதி  விடுங்கோ .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤣

போடுறதுதான் போடுறியள் ஒரு ஆட்டுக்கால் சூப்பா போடுங்கோ. 

சொதி, இடியப்பம் எண்டாமல்🤣

12 minutes ago, பெருமாள் said:

இங்கு பக்கத்து இலைக்கு சொதி  விடுங்கோ .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

🤣

போடுறதுதான் போடுறியள் ஒரு ஆட்டுக்கால் சூப்பா போடுங்கோ. 

சொதி, இடியப்பம் எண்டாமல்🤣

 

எனக்கும் ஒரு சொட்டுப் போடுங்கோ நாதம்! பெருமாளுக்குப் பக்கத்தில இருந்து சாப்பிட்டுக் கனகாலம்! வாய் துரு துருக்குது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.