Jump to content

எனக்கு 48, உனக்கு 50; நடுத்தர வயதிலும் தாம்பத்யம் இனிக்க இதைச் செய்யுங்கள்! - காமத்துக்கு மரியாதை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனையோ பிரச்னைகள் மனசுக்குள்ள ஓடிட்டிருந்தாலும், மனசுக்குப் பிடிச்ச பாட்டு காதுல விழறப்போ அதை ரசிக்கிறோம்தானே... அதே மாதிரிதான் தாம்பத்திய உறவும். வாய்ப்பு கிடைக்கிறப்போ பார்த்துக்கலாம்னு இல்லாம, வாய்ப்பை ஏற்படுத்தி உறவு வெச்சுக்கணும்.

 

இந்த வார காமத்துக்கு மரியாதை நடுத்தர வயதினருக்கானது என்பதை தலைப்பே உங்களுக்குச் சொல்லும். மனமும் உடலும் நிறைந்து காமத்தை அனுபவிக்கிற வயது வாழ்வின் மத்தியில்தான் என்கிறார்கள் பாலியல் நிபுணர்கள். யதார்த்தமாக யோசித்தாலும் நடுத்தர வயதில்தான், தாம்பத்திய உறவில் சம பகிர்தல், `என்ன நினைச்சுப்பாளோ / நினைச்சுப்பாரோ' என்ற பயமற்ற ஈடுபாடு, அனுபவம் என்று பல ப்ளஸ் இருக்கும். ஆனால், நம் நாட்டில் நிலைமையே வேறு மாதிரிதான் இருக்கிறது.

``பிள்ளைங்க எல்லாம் வளர்ந்துட்டாங்க. இனிமே இதையெல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்கணும் அல்லது தவிர்த்துடணும்'' என்று முடிவெடுத்து விடுகிறார்கள் பலர். பிள்ளைகளுக்குத் திருமணமாகியிருந்தாலோ `பேரன், பேத்தி எடுக்கிற வயசுல இதென்ன கருமம்' என்று அருவருப்பு காட்டுகிறார்கள் சிலர். இதில் இன்னொரு வகையும் இருக்கிறது.

`இந்த ஆளு சின்ன வயசுல தினமும் தண்ணியடிச்சிட்டு வந்து என்னை அடிப்பான். எனக்கு விருப்பமில்லைன்னாலும் விட மாட்டான். இப்பதான் நான் நிம்மதியா இருக்கேன்.'

இள வயதில் மனைவியை அவமரியாதையாக நடத்துகிற கணவர்களுக்கு, மத்திம வயதிலும் இறுதியிலும் மனைவியின் பராமரிப்பு வேண்டுமானால் கிடைக்கலாம். நட்பும் காமமும் அவ்வளவாகக் கிடைப்பதில்லை. விதிவிலக்குகள் இருக்கலாம்.

திருமணமான புதிதில், பல காலம் அடக்கி வைத்த உணர்வை வெளிப்படுத்துகிற வேகத்துடன் இருக்கிற காமம், கருத்தரிப்பு, குழந்தை என்னும் அடுத்தகட்டத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்கும். குழந்தைகள் வளர ஆரம்பிக்கையில், `ஒரு வாரம், இல்ல பத்து நாளைக்கு முன்னாடி சேர்ந்திருந்தோமா' என்று ஞாபகப்படுத்திக் கொள்கிற அளவில்தான் பெரும்பாலும் தாம்பத்திய உறவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நடுத்தர வயதிலிருந்துதான், காமத்தை நிதானமாக அனுபவிக்க முடியும். ஆனால், இன்றைக்கு நாற்பதுகளின் இறுதியிலும், ஐம்பதுகளிலும் இருக்கிற தம்பதிகளிடையேயான செக்ஸ் வாழ்க்கை பெரும்பாலும், காமத்தை நிதானமாக அனுபவிப்பதாக இல்லை.

 

மனநல மருத்துவர் அசோகன் பேசுகையில், ``இளவயசுல கணவனும் மனைவியும் டூ வீலர்ல போறப்போ பார்த்தீங்கன்னா, அவங்களுக்கு நடுவுல இடைவெளியே இருக்காது. சில வருடங்கள்ல குழந்தைகள் நடுவுல உட்கார்ந்து சின்ன இடைவெளியை ஏற்படுத்தினாலும் கணவரோட தோள் மேல மனைவியோட கை இருக்கும். நடுத்தர வயசுல இருக்கிற கணவன் - மனைவி டூ வீலர்ல போறப்போ கவனிச்சா, நடுவுல ஒருத்தர் உட்காரலாம்கிற அளவுக்கு இடைவெளி இருக்கும். அப்படியே நெருங்கி உட்கார்ந்திருந்தாலும், வீட்டு சம்பந்தமான ஏதோவொரு விவாதம் ஓடிட்டு இருக்கும். பிள்ளைகளோட மேற்படிப்பு, கல்யாணம்னு எத்தனையோ பிரச்னைகள் மனசுக்குள்ள ஓடிட்டிருந்தாலும், மனசுக்குப் பிடிச்ச பாட்டு காதுல விழறப்போ அதை ரசிக்கிறோம்தானே... அதே மாதிரிதான் தாம்பத்திய உறவும். வாய்ப்பு கிடைக்கிறப்போ பார்த்துக்கலாம்னு இல்லாம, வாய்ப்பை ஏற்படுத்தி உறவு வெச்சுக்கணும்.

மனநல மருத்துவர் அசோகன்
 

நடுத்தர வயசு காமம் பத்தி பேசுறப்போ, `கிளிஞ்சல்கள்' படத்துல வர்ற ஒரு சீனும், `வரவு நல்ல உறவு' படத்துல வர்ற ஒரு சீனும் எனக்கு நினைவுக்கு வருது. கிளிஞ்சல்கள் படத்துல சுமனோட அப்பா கேரக்டர், ``எங்க ரூம்ல ஒருநாளும் விளக்கு எரிஞ்சதில்லை. நானும் உங்க அம்மாவும் அந்தளவுக்கு செக்ஸ்க்கு மரியாதை கொடுக்கிறோம்" என்பார்.

வரவு நல்ல உறவுல விசு கேரக்டர் தன்னோட மனைவி கேரக்டருக்கிட்ட, ``நமக்குன்னு தனியா ஒரு ரூம் இருக்கணும்" என்பார்.

அந்தப் படங்கள்ல ஆண் கேரக்டர்கள் பேசினாலும் நிஜத்துல இந்த உணர்வு கணவன், மனைவி ரெண்டு பேருக்குமே இருக்கணும். ரெண்டு பேருமே எமோஷனலா அட்டாச் ஆகியிருக்கணும். அப்படியிருந்தா, சாதாரணமா பேசுறப்போவே உடம்புக்குள்ள குறுகுறுன்னு ஏதோ பொங்கும். பல வருஷங்களுக்கு முன்னாடி நிகழ்ந்த முதலிரவெல்லாம் நினைவுக்கு வரும்.

வளர்ந்த பிள்ளைகளுக்கு பெற்றோர் ஆயிட்டதாலேயே வீட்டுக்குள்ள பாடக்கூடாது, ஒருத்தருக்கு ஒருத்தர் சாப்பாடு பரிமாறிக்கக்கூடாது, அப்படி பரிமாறுறப்போ சாப்பிடுற கணவன் / மனைவி தோள் மேல கை வைக்கக்கூடாது அப்படின்னு எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. சின்ன வயசுல அரை வேக்காடு உணவும் பிடிக்கும்; ஜீரணிக்கும். அதுவே நடுத்தர வயசுல நீரிழிவு, ரத்த அழுத்தத்துக்கு ஏத்தபடி பக்குவமா சமைச்சுதானே சாப்பிடணும். அந்த மாதிரிதான் தாம்பத்திய உறவும். வேகம் குறைச்சலா இருக்கும். உறுப்பு வறட்சியா இருக்கும். ஆனா, அன்பு அதிகமா இருந்தா இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. தோணும்போதெல்லாம் உங்க பெட்ரூம் லைட்ஸ் அணைக்கப்படட்டும்'' என்கிறார்.

எனக்கு 48, உனக்கு 50; நடுத்தர வயதிலும் தாம்பத்யம் இனிக்க இதைச் செய்யுங்கள்! - காமத்துக்கு மரியாதை 10| how can we have better sex life after 50-s - expert explains - Vikatan

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமத்துக்கு மரியாதை நல்ல தலைப்புதான் ஆனால் மரியாதையை விட்டால்தான் காமம் சோபிக்கும்.......!  👍

நன்றி நிழலி.....!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

மரியாதையை விட்டால்தான் காமம் சோபிக்கும்.......!  👍

உது எனக்கு துண்டற விளங்கேல்லை. பூரண விளக்கம் எனக்கு வேணும்.😂
தாங்ஸ் பண்ணின அனுபவஸ்தரும் வெட்கப்படாமல் விளக்கம் தரலாம் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உது எனக்கு துண்டற விளங்கேல்லை. பூரண விளக்கம் எனக்கு வேணும்.😂
தாங்ஸ் பண்ணின அனுபவஸ்தரும் வெட்கப்படாமல் விளக்கம் தரலாம் 🤣

பேரப்பிள்ளைகள் எடுத்த பின்னும்

poornam.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

உது எனக்கு துண்டற விளங்கேல்லை. பூரண விளக்கம் எனக்கு வேணும்.😂
தாங்ஸ் பண்ணின அனுபவஸ்தரும் வெட்கப்படாமல் விளக்கம் தரலாம் 🤣

கீழே பாருங்கள் அவருக்கு விளங்கீட்டுது......!  👇  😂

10 minutes ago, ராசவன்னியன் said:

பேரப்பிள்ளைகள் எடுத்த பின்னும்

poornam.png

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

48 ஐயும் 50 ஐயும் கடந்தவர்கள் காமத்தையும் தாம்பத்திய உறவையும் எத்தனை தடவை பார்த்து பேசி பழகி அண்டாகுண்டாவை உருட்டி களை பிடுங்கி நாற்று நட்டு அறுவடை பண்ணி விவசாயம் செய்து  கடந்து வந்திருப்பார்கள், அவர்களுக்கு இந்த விரிவாக்க கட்டுரை எந்த விதத்தில் பிரயோசனபடும்?

காமமும் கலவியும் கட்டுரை படிச்சும் கல்குலேட்டர் வைச்சு தட்டி கணக்கு பார்த்தும் எவரிடமும்  ஆலோசனைகள் கேட்டும் வருவதல்ல.

இவையெல்லாம் இணையவெளியில் கிளுகிளுப்பு எழுத்து வியாபாரம் செய்து தமது பக்கத்தின் பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக மேற் கொள்ளும் சமாச்சாரங்கள் என்றே எண்ண தோன்றும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே கூறிய வயதில் கிளி செத்துடுமே! அப்புறம் செத்த கிளிக்கு எதுக்கு சிங்காரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Elugnajiru said:

மேலே கூறிய வயதில் கிளி செத்துடுமே! அப்புறம் செத்த கிளிக்கு எதுக்கு சிங்காரம்.

 

 img?regionKey=KDDtH82rfu4BZIGM6qB9Og==

Link to comment
Share on other sites

1 hour ago, valavan said:

48 ஐயும் 50 ஐயும் கடந்தவர்கள் காமத்தையும் தாம்பத்திய உறவையும் எத்தனை தடவை பார்த்து பேசி பழகி அண்டாகுண்டாவை உருட்டி களை பிடுங்கி நாற்று நட்டு அறுவடை பண்ணி விவசாயம் செய்து  கடந்து வந்திருப்பார்கள், அவர்களுக்கு இந்த விரிவாக்க கட்டுரை எந்த விதத்தில் பிரயோசனபடும்?

காமமும் கலவியும் கட்டுரை படிச்சும் கல்குலேட்டர் வைச்சு தட்டி கணக்கு பார்த்தும் எவரிடமும்  ஆலோசனைகள் கேட்டும் வருவதல்ல.

இவையெல்லாம் இணையவெளியில் கிளுகிளுப்பு எழுத்து வியாபாரம் செய்து தமது பக்கத்தின் பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக மேற் கொள்ளும் சமாச்சாரங்கள் என்றே எண்ண தோன்றும். 

 

"இஞ்ச பாரு, பிள்ளைகள் தோளுக்கு மேல் வளர்ந்த பிறகும் இதுகள் ஒன்றாக படுக்குதுகள்" என்று 40+ அல்லது 50+ ஆன தம்பதிகள் ஒன்றாக ஒரு அறைக்குள் படுப்பதை பார்த்து நக்கலடிக்கும் மனிதர்களை அடிக்கடி காண்கின்றோம்.  வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் வீட்டில் கணவனும் மனைவியும் ஒரே அறையில் படுப்பதை கூட தவறு என்று சொல்லுகின்றவர்களையும் கொண்ட சமூகமாக இருக்கின்றோம்.  50+ ஆன தாய் தந்தையரை ஊரில் இருந்து அழைத்து வந்து விட்டு, அம்மாவை ஒரு பிள்ளையும் அப்பாவை இன்னொரு பிள்ளையும் பொறுப்பெடுத்து தத்தம் வீடுகளுக்கு கொண்டு சென்று பிரித்து வைப்பதைக் கூட எம் புலம்பெயர் நாடுகளில் கண்டிருப்போம் (இவ்வாறு பிரித்து வைத்து இருக்கும் இருவரை நட்பு வட்டாரத்தில் காண்கின்றேன்). 

இவ்வாறான செயல்களுக்கும் எண்ணங்களுக்கும் அடிப்படையே காமம் ஒரு குறிப்பிட்ட வயதின் பின் தவிர்க்கப்படல் வேண்டும் என்ற தவறான கற்பிதம் தான். அந்தக் கற்பிதங்களை உடைத்தெறிய இவ்வாறான கட்டுரைகளும் அவசியம்.

காமம் உணவு போன்றது. 40 அல்லது 50 வயது வரைக்கும் நல்லா சாப்பிட்டு விட்டோம் என்பதற்காக புதிய ருசியான உணவை நாம் தவிர்ப்பது இல்லை. எத்தனை முறை சாப்பிட்டாலும் பசி எடுக்கும் போது உணவு தேவைப்படுவது போன்றதுதானே காமமும். சாப்பிடும் அளவுகள் மாறுபடலாம், ஆனால் பசி எப்போதுமே தன்னை போக்க உணவை தேடும்.

என்னைப் பொறுத்தவரைக்கும் 20 வயதுகளில் தோன்றும் காமம் T20 match போன்றது. கனக்க சிக்ஸர்கள் அடிக்கலாம், ஆனால் நிதானித்து விளையாட முடியாததுடன் விரைவில் அவுட் ஆகி மைதானத்தை விட்டு வெளியேறி விடவேண்டி வந்து விடும். 30 வயதுகளின் பின் தோன்றும் காமம் One day match போன்றது. வேகமாக விளையாடிக் கொண்டு இருக்கும் போது இடைக்கிடை நிதானமாகவும் விளையாடும் match இது கெதியன அவுட்டாக சந்தர்ப்பம் இதிலும் அதிகம். ஆனால் 40+ பின் வரும் காமம் தான் Test match போன்றது. நின்று நிதானித்து ஒவ்வொரு பந்தாக அவதானித்து புரிந்து நின்று ஆடலாம். விரைவில் அவுட் ஆக சந்தர்ப்பம் குறைவு. சக batsman இன் உணர்வுகளையும் தெளிவாக புரிந்து ஆடும் அருமையான ஆட்டம் இது.

இப்படிக்கு
நிழழியானந்தா ஜீ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

 

 img?regionKey=KDDtH82rfu4BZIGM6qB9Og==

“”and Jogi says he is not finished yet””

🤣🤣

3 hours ago, valavan said:

48 ஐயும் 50 ஐயும் கடந்தவர்கள் காமத்தையும் தாம்பத்திய உறவையும் எத்தனை தடவை பார்த்து பேசி பழகி அண்டாகுண்டாவை உருட்டி களை பிடுங்கி நாற்று நட்டு அறுவடை பண்ணி விவசாயம் செய்து  கடந்து வந்திருப்பார்கள், அவர்களுக்கு இந்த விரிவாக்க கட்டுரை எந்த விதத்தில் பிரயோசனபடும்?

காமமும் கலவியும் கட்டுரை படிச்சும் கல்குலேட்டர் வைச்சு தட்டி கணக்கு பார்த்தும் எவரிடமும்  ஆலோசனைகள் கேட்டும் வருவதல்ல.

இவையெல்லாம் இணையவெளியில் கிளுகிளுப்பு எழுத்து வியாபாரம் செய்து தமது பக்கத்தின் பார்வையாளர்களை அதிகரிப்பதற்காக மேற் கொள்ளும் சமாச்சாரங்கள் என்றே எண்ண தோன்றும். 

வயித்தெரிச்சல்....🤣🤣

3 hours ago, Elugnajiru said:

மேலே கூறிய வயதில் கிளி செத்துடுமே! அப்புறம் செத்த கிளிக்கு எதுக்கு சிங்காரம்.

தம்பி இன்னும் (அந்த) வயசுக்கு வரவில்லையோ...🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, suvy said:

காமத்துக்கு மரியாதை நல்ல தலைப்புதான் ஆனால் மரியாதையை விட்டால்தான் காமம் சோபிக்கும்.......!  👍

 

பிந்தின காம காதலுக்கு எங்கடை புங்கையர் முந்தியொருக்கால் நல்ல விளக்கம் தந்தவர் தெரியுமோ?  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது எப்பிடி இருந்தாலும் இமாஜினேஷன் வலு முக்கியம்; இபுதிது புதிதாக கண்டு பிடித்து ஆர்வத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.


 சற்றே பிரத்தியேகம் தான் என்றாலும் மூத்த பிரசைகளின் நன்மைக்காக ..


இன்று அதிகாலை எழுந்த வேளை மனம் சற்றே உல்லாசமாக இருந்தது .


பக்கத்தில இருந்த ஆளை தட்டி எழுப்பி “ இனி என்னை மச்சான் எண்டு கூப்பிடுமன் எண்டு கேட்டேன்.
 ஆள் முழித்துப் பார்த்து “ இப்ப என்ன மகளுக்கும் மருமகனுக்கும் கோல் எடுக்கிறதோ" எண்டு விட்டு அங்காலப்பக்கம் திரும்பிப் படுத்திட்டுது.


 நான் விடேல்லை.  

காலை ஆஃபீஸ் போற மட்டும் ஒரு பத்து தரம் எண்டாலும் திருப்பி திருப்பி கேட்டிருப்பேன்.


 கடைசியில காரில ஏறுற கடைசிக்கநதாயத்திலே ஆள் அங்கால பக்கம் திரும்பி  ஓ மச்சான்”  எண்டு மெதுவாத்தான் சொல்லிச்சுது .


 சக்ஸஸ் … சக்ஸஸ் …


என்ன மாதிரி முன்னேறும் எண்டு பின்னேரம் தெரிந்து விடும்.😍


 வெள்ளி மாலைகள் இனிமையானவை……
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

“”and Jogi says he is not finished yet””

🤣🤣

கில்லாடியப்பு, யாரும் கவனித்திருக்க மாட்டார்களென நினைத்தேன்.

 

5 hours ago, சாமானியன் said:

சக்ஸஸ் … சக்ஸஸ் …

 

அதை இப்படியல்லோ சொல்ல வேணும்..! 😍  (Thanks to தங்கப் பதக்கம் movie)

test.png

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.