Jump to content

ஸ்டார்லிங்க்: இந்தியாவில் ஈலோன் மஸ்க்கின் இணைய சேவை தடுக்கப்படுவது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டார்லிங்க்: இந்தியாவில் ஈலோன் மஸ்க்கின் இணைய சேவை தடுக்கப்படுவது ஏன்?

  • விஷ்ணு ஸ்வரூப்
  • பிபிசி தமிழ்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
Starlink

பட மூலாதாரம்,GETTY IMAGES

இணையம் - 1960-களின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது முதல் இன்று வரை, பல பரிமாணங்களைச் சந்தித்து விட்டது.

இணையத்தை முதன்முதலில் சாத்தியமாக்கிய வின்டன் செஃப், பாப் கான் போன்ற கணினி விஞ்ஞானிகளே கூட, இன்றைய வளர்ச்சியை கற்பனை செய்திருக்க மாட்டார்கள்.

20 ஆண்டுகளுக்கு முன் சாதாரண கைபேசியைப் பார்க்கையிலேயே ஆச்சர்யமாக இருந்தது. இப்போது கைபேசியே கையளவு கணினியாக மாறிவிட்டது.

இணையத்தை நம் கைகளுக்குள் கொண்டுவந்து சேர்க்க நிலவழித் தொடர்புகள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், அலைக்கற்றைகளின் வழியே பல்வேறு தொடர்புச் சாதனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், இவை எதுவுமே இல்லாமலும் விரைவில் இணையம் சாத்தியமாகும் காலம் வெகுதொலைவில் இல்லை. அதற்கான தொடக்கமே, ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் இணையத் தொடர்பு சேவை நிறுவனம். உலகின் எந்தவொரு மூலையில் இருந்தாலும் செயற்கைக் கோள் மூலமாக நேரடி இணைய சேவையை வழங்குவதே இதன் நோக்கம்.

அப்படி என்ன புதுமை?

இப்போதுள்ள தொழில்நுட்ப வசதிகளின் வழியே நமக்கு இணைய வசதி கிடைக்க வேண்டுமெனில், அதற்குப் பல நிலவழி இணைப்புச் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். தொலைத்தொடர்பு கோபுரங்கள், மின் கம்பிகள் என்று பல கட்டுமானங்கள் அதற்குத் தேவையாக இருக்கிறது.

ஆனால், "இவை எதுவுமே இல்லாமல், இணைய வசதியை செயற்கைக்கோள் மூலம் நேரடியாகப் பெறமுடியும். பொதிகை மலையின் உச்சியிலுள்ள ஒரு குக்கிராமத்தில் இருந்தாலும்கூட இந்த வசதியைப் பெறமுடியும்," என்கிறார் இணைய பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் ஸ்ரீராம்.

"இப்போது ஃபைபர் கேபிள்கள், குறைந்தளவு தொலைவுக்குள் உணர்கொம்பு மூலம் கிடைக்கக்கூடிய வயர்லெஸ் இணைப்பு, போன்றவற்றின் மூலம் இணைய சேவைகள் கிடைக்கின்றன. இவற்றிலிருந்து செயற்கைக்கோள் இணைய சேவை வேறுபடுகிறது. பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சிறு செயற்கைக்கோள்களைப் பொருத்தி, அவற்றிலிருந்து, அந்தக் குறிப்பிட்ட அலைவரிசையை ஏற்பதற்கென பயனாளர்களுக்கு வழங்கப்படும் உணர்கொம்புகளின் மூலம் இந்த இணைய சேவை சாத்தியப்படுகிறது. இது இணைய சேவையை நிலவழித் தொடர்பு மூலம் கொண்டு செல்லவே இயலாத பகுதிகளிலும் அதற்கான வசதிகள் கிடைப்பதை உறுதி செய்கிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியில் பல புரட்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. இருப்பினும் பல கிராமப்புற பகுதிகளில் வாழும் மக்கள் நினைத்த நொடியில் வெளியுலகோடு தொடர்புகொள்வது சவாலான காரியம். ஆனால், இதன் வழியே அது சாத்தியப்படும்," என்று பிபிசி தமிழிடம் ஸ்ரீராம் கூறினார்.

முன்பதிவு முயற்சியைத் தடைசெய்த இந்திய அரசு

ஸ்டார்லிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் இந்தச் சேவையை வழங்குவதற்காக ஒன்வெப், ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்கள் முயன்று வருகின்றன. ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரு படி முன்னேறி, செயற்கைக்கோள் வழி இணைய சேவைக்கான முன்பதிவுகளையே தொடங்கினார்கள்.

கடந்த நவம்பர் 1-ஆம் தேதியன்று இந்தியாவில் தொழில் செய்வதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பதிவு செய்தது. டிசம்பர் 2022-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் 12 பகுதிகளில் செயற்கைக்கோள் இணைய சேவைக்கான 200,000 டிஷ்களைக் கொண்டு சேர்க்கும் தன் திட்டத்தையும் அறிவித்தது. அதோடு, உரிய உரிமம் பெறுவதற்கும் முன்னதாகவே, இந்திய மதிப்பில் 7,400 ரூபாய்க்கு வாடிக்கையாளர்களை அதற்கான முன்பதிவுகளைச் செய்யவும் விளம்பரப்படுத்தியது.

ஆனால், அதற்குரிய முறையான உரிமங்களை இந்திய அரசாங்கத்திடம் அவர்கள் இன்னும் பெறாத காரணத்தால் முன்பதிவு செய்யக்கூடாது என்று இந்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை கூறியது. அத்துடன், ஸ்பேஸ் எக்ஸின் ஒரு பிரிவான ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவைக்கு முன்பதிவு செய்யவேண்டாம் என்று மக்களுக்கும் அரசு அறிவுறுத்தியது.

இதனால் ஸ்டார்லிங்க் நிறுவனம் தனது முன்பதிவு சேவையை தற்போதைக்கு நிறுத்தி வைத்துள்ளது. ராய்ட்டர்ஸ் செய்தியின்படி, செப்டம்பர் மாதம் வரை இந்தியாவில் 5,000 பேர் செயற்கைக்கோள் இணைய சேவைக்காக முன்பதிவு செய்திருந்தார்கள். அவர்களுடைய முன்பதிவுகள் ரத்து செய்யப்படுமா அல்லது அவர்கள் மேலும் சில காலம் காத்திருக்க வேண்டுமா என்பது குறித்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இன்னும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

ஸ்டார் லிங்க் இணையதள அறிவிப்பில், "உங்கள் பகுதியில் ஸ்டார்லிங்க் வசதி இப்போது கிடைப்பதில்லை. ஆனால், மேலதிக செயற்கைக்கோள்களை நாங்கள் ஏவுவதால், இன்னும் விரிவுபடுத்துவோம். உங்கள் பகுதிக்கு எப்போது ஸ்டார்லிங்க் இணைய வசதி கிடைக்கும் என்பதை வரும் நாட்களில் தெரிந்துகொள்ள் மீண்டும் இங்கு வாருங்கள்," என்று தெரிவித்துள்ளது.

மேலதிக விவரங்களைத் தெரிந்துகொள்ள ஸ்டார்லிங்க் நிறுவனத்தைத் தொடர்புகொண்டபோது அவர்கள் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

ஈலோன் மஸ்க் முயற்சி ஏன் தடுக்கப்படுகிறது?

ஸ்டார்லிங்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் இணைய வசதியே கிடைக்காத கிராமப்புறங்களுக்கு இதைக் கொண்டு செல்வதே தன் நோக்கம் என்று ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இதற்கான முன்பதிவுகளைச் செய்ய வரவேற்ற ஸ்டார்லிங்க் நிறுவனத்தை இந்திய அரசு தடுத்து நிறுத்தியது குறித்து, ஸ்ரீராமிடம் கேட்டபோது, "ஒவ்வொரு தொழில்நுட்பமும் ஒரு குறிப்பிட்ட நாட்டிற்குள் வரும்போது அதை அரசு நெறிப்படுத்தும். உதாரணத்துக்கு, சில செயல்கள் அமெரிக்காவில் சாதாரணமாக இருக்கலாம். ஆனால், அதுவே வேறொரு நாட்டில் குற்றமாகக் கருதப்படும்.

இப்படியிருக்க இந்தக் குறிப்பிட்ட விஷயத்தைப் பொறுத்தவரை, செயற்கைக்கோள் பயன்பாடு உள்ளது, தொலைநிலையில் இணைக்கப்படுகிறது. ஆகவே, தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன. அதனால், அதன் செயல்பாடுகளை முழுமையாக அலசி இந்தியாவிற்கு ஏற்ப அரசு நெறிப்படுத்தும்.

அதோடு, இப்போது அவர்கள் சோதனை முயற்சிக்கான உரிமம் மட்டுமே வாங்கியுள்ளார்கள். வணிகரீதியிலான உரிமம் இன்னும் பெறவில்லை. அதுவும் ஒரு காரணம்," என்று கூறினார்.

செயற்கைக்கோள் இணையம் தான் எதிர்காலமா?

செயற்கைக்கோள் இணைய சேவை என்பது எளிய மக்களுக்கு எப்படிப் பயனளிக்கும் என்பது குறித்து, தொலைத்தொடர்பு ஆய்வாளர் முனைவர் மகேஷ் உப்பல் பிபிசி தமிழுக்குப் பேசியபோது, "வாடிக்கையாளர்கள் செயற்கைக்கோள் இணைய சேவையை நேரடியாகப் பயன்படுத்துவதற்கு இன்னும் காலமாகும். இந்தச் சேவை இனிதான் தொடங்கப்படவிருக்கிறது.

அதுமட்டுமின்றி, இதற்கான செயற்கைக்கோள் ரிசீவர் தொழில்நுட்பம், இன்றைய சூழலில் எளிதில் கிடைக்கும் வகையில் இல்லை. இதன் விலையையும் குறைப்பதற்கான பல முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆகவே, மக்கள் இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்கவேண்டும்" என்றார்.

அவரிடம், இதை இன்றைய தொலைத்தொடர்புச் சாதனங்களிலேயே பயன்படுத்த முடியுமா, இது எளிமையாக அனைவருக்கும் கிடைக்க எவ்வளவு காலமாகும் என்பன குறித்துக் கேட்டபோது, "அனைத்து தட்டு மக்களும் பயன்படுத்தும் வகையில் இதன் விலை குறைய குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது ஆகும். இதன் விலை கண்டிப்பாகக் குறையும், ஆனால் உடனே நடக்காது."

நாட்டின் எல்லா மூலையிலும் இது சாத்தியப்படும்

"மேலும், இதன்மூலம் தொலைத்தொடர்பு வசதிக்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கும் நிலப்பகுதிகளில் கூட இணைய சேவையைக் கொண்டுசெல்ல முடியும். உதாரணத்திற்கு, நிலவழித் தொலைத்தொடர்பு சேவையில் செல்போன் கோபுரம் அமைப்பது போன்ற பல செலவுகளும் அதற்கான நேரமும் தேவைப்படும்.

செயற்கைக்கோள் சேவை இவற்றைக் குறைக்கிறது. ஆகவே, அத்தகைய பகுதிகளில் நிலவழிச் சேவையைவிட செயற்கைக்கோள் சேவை மலிவானதாகவும் எளிமையானதாகவும் இருக்கும். இதன்மூலம் நிலவியல் பேதமின்றி அனைவருக்குமே தொலைத்தொடர்பு வசதி கிடைக்கும்," என்று கூறினார்.

இந்தியாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) 2020-ம் ஆண்டு அறிக்கைப்படி, நாட்டின் நகர்ப்புற மக்களில் 100-க்கு 98.35 பேர் இணைய சேவை பயன்படுத்துகிறார்கள்.

கிராமப்புற மக்களில் 100-க்கு 33 பேர் மட்டுமே இணைய சேவையைப் பயன்படுத்துகிறார்கள். இந்திய கிராமப்புறங்களில் வாழும் 524.93 மில்லியன் மக்களுக்கு இணைய வசதி இல்லை.

அதில் பல கிராமங்களுக்கு நிலவழி இணையத் தொடர்பைக் கொண்டு செல்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. அத்தகைய இடங்களில் எல்லாம் செயற்கைக்கோள் இணைய சேவ் நல்வாய்ப்பாக அமையும் என்கிறார் மகேஷ் உப்பல்.

இணைய வசதி கிடைப்பதால் நன்மை என்ன?

ஸ்டார்லிங்

பட மூலாதாரம்,LSST

இணையத் தொடர்பு இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக இருந்த ஒரு கிராமத்திற்கு, அந்த வசதி கிடைப்பதால் என்ன பலன்?

"இன்று நாம் தினசரி பயன்படுத்தும் ஜி.பி.எஸ் செயல்படுவதே விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள் மூலமாகத்தான். வேகமான தகவல் பரிமாற்றம், நாட்டில் நடப்பனவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்வது, பல்வேறு விஷயங்களைப் பற்றிய சமூக விழிப்புணர்வு, மாணவர்களின் கல்வி என்று பலவற்றுக்கும் இணையம் இன்று மூலதனமாக விளங்குகிறது.

வெளியுலகத் தொடர்பே இல்லாமல் இருந்த ஒரு கிராமத்திற்கு, செயற்கைக்கோள் மூலம் இணைய வசதி கிடைத்தால் அந்த ஊரே வளரும். அதன்மூலம் இணைய வழியாக, பணப் பரிவர்த்தனை வேகமாகவும் அதிகமாகவும் நடக்கும்.

அந்த மக்கள் நாட்டில் நடப்பனவற்றை வேகமாகத் தெரிந்து விழிப்போடு இருப்பார்கள். மலைப்பகுதிகளிலுள்ள பல குக்கிராமங்களில் இந்த வசதி கிடைத்தால், அவர்களைப் பற்றியும் பலருக்கும் தெரியவரும். அது சுற்றுலா, போக்குவரத்து போன்றவற்றைப் பெருக்கும். இப்படி இன்னும் பல முன்னேற்றங்களை இன்று இணைய வசதியால் ஒரு கிராமத்திற்குக் கொடுக்க முடியும்."

அதுமட்டுமின்றி, "இந்த வசதி அனைத்து கிராமங்களுக்கும் கிடைத்தால் இணையவழிக் கல்வி பயில்வது எளிதாகும். இணையத் தொடர்புக்காக பல மைல்கள் நடந்து செல்வதும் மர உச்சியில் ஏறி அமர்வதுமாக இல்லாமல், மாணவர்கள் சிரமமின்றிப் பாடம் கற்கலாம்," என்கிறார் ஸ்ரீராம்.

https://www.bbc.com/tamil/science-59495867

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.