Jump to content

சடுதியாக அதிகரித்த அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய மொத்த விலைகள் குறித்த விபரம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சடுதியாக அதிகரித்த அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய மொத்த விலைகள் குறித்த விபரம்!

நாட்டில் அண்மைக்காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் தற்போதைய மொத்த விலைகள் குறித்த விபரம்…

  • கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 109 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சம்பா அரிசி தற்போது 162 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 48% அதிகமாகும்.
  • கடந்த ஆண்டு 93 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கோதுமை மா தற்போது 123 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • கடந்த ஆண்டு 183 ரூபாயாக இருந்த ஒரு கிலோ பருப்பு தற்போது 259 ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • கடந்த ஆண்டு 550 ரூபாயாக இருந்த ஒரு கிலோ உலர் மீன் தற்போது, 935 ரூபாயாக அதிகரித்துள்ளது.
  • 2020 நவம்பரில் 430 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோழிக்கறி தற்போது 690 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • கடந்த ஆண்டை விட 400 கிராம் பால் பவுடர்கள் 100 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
  • அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், தக்காளி விலை 164%, வெண்டைக்காய் 188%, போஞ்சி 70%, கேரட் 70%ஆக அதிகரித்துள்ளது.
  • கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் எரிவாயு சிலிண்டர் ஒன்று 1257 ரூபாயினால் அதிகரித்துள்ளது.

 

https://athavannews.com/2021/1254013

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

“கருவாடு” உள்ளபோது உலர் மீன் எதற்கு???? 

Link to comment
Share on other sites

இந்த விலை உயர்வுகள் சிறீலங்காவின் கடன் சுமையைக் கூட்டுமா...? குறைக்குமா...?? 🤔

Link to comment
Share on other sites

1 hour ago, Paanch said:

இந்த விலை உயர்வுகள் சிறீலங்காவின் கடன் சுமையைக் கூட்டுமா...? குறைக்குமா...?? 🤔

இலங்கையின் கடன்சுமை கூடுவதுதையும் குறைவதையும் வெளிநாட்டிலிருந்து பார்ப்பவர்களுக்கு விளையாட்டாக இருக்கலாம்.

இலங்கையின் பண வீக்கம் எங்கள் உறவுகளின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இணையவன் said:

இலங்கையின் கடன்சுமை கூடுவதுதையும் குறைவதையும் வெளிநாட்டிலிருந்து பார்ப்பவர்களுக்கு விளையாட்டாக இருக்கலாம்.

இலங்கையின் பண வீக்கம் எங்கள் உறவுகளின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

யுத்தகாலத்தில், சிங்கள அரசின் பெரும் தடைகளுக்கு முகம் கொடுத்த எங்கள் உறவுகள் இதை சமாளிப்பர்.

இ்போது, சுமந்திரன் உள்பட, நெல் உற்பத்தி, வீட்டுக்கு வீடு மரக்கறி தோட்டம் என்று கிடைக்கும் இடமெல்லாம் விவசாயம்.

போனவருடம், கொழும்பில் இருக்கும் எனது மச்சான், ஊரில் விதைத்து..... வித்தது போக மிச்சத்தை பன்னிரண்டு மூடை அரிசியாய் கொழும்பு கொண்டு போய் வைத்துள்ளார். அவருக்கும், தங்கை குடும்பத்துக்கும் மாதம் அரை மூடை வீதம் போதுமாம்.

கொழும்பில் கூட வீட்டின் பின் மரக்கறி போட்டுள்ளார்.

சிங்களவர் சமாளிக்க முடியாமல் தெருவில் இறங்குவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

போனவருடம், கொழும்பில் இருக்கும் எனது மச்சான், ஊரில் விதைத்து..... வித்தது போக மிச்சத்தை பன்னிரண்டு மூடை அரிசியாய் கொழும்பு கொண்டு போய் வைத்துள்ளார். அவருக்கும், தங்கை குடும்பத்துக்கும் மாதம் அரை மூடை வீதம் போதுமாம்.

நெல்லாக வைத்திருந்தால் நீண்டகாலம் வைத்திருக்கலாம்.
ஆனால் அரிசி அப்படி வைத்திருக்கலாமோ?
இல்லை என்றே எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நெல்லாக வைத்திருந்தால் நீண்டகாலம் வைத்திருக்கலாம்.
ஆனால் அரிசி அப்படி வைத்திருக்கலாமோ?
இல்லை என்றே எண்ணுகிறேன்.

உங்கை கப்பலில வாற, புழங்கல் அரிசி... சிவத்தைப் பச்சையரிசி நம்மட பிளேட்டுக்கு வந்து சேர....எட்டில இருந்து பதினைந்து மாசம் ஆகுதே...

விக்காட்டி, ஸ்ரிக்கரை மாத்தி, புது எக்பயரி டேற்டோட வேற வருகுது.....

நம்ம பெருமாளை கேட்டால் கதை, கதையா சொல்லுவார். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Nathamuni said:

உங்கை கப்பலில வாற, புழங்கல் அரிசி... சிவத்தைப் பச்சையரிசி நம்மட பிளேட்டுக்கு வந்து சேர....எட்டில இருந்து பதினைந்து மாசம் ஆகுதே...

விக்காட்டி, ஸ்ரிக்கரை மாத்தி, புது எக்பயரி டேற்டோட வேற வருகுது.....

நம்ம பெருமாளை கேட்டால் கதை, கதையா சொல்லுவார். :grin:

நாதம்ஸ் கப்பலில் வாற பொருட்களுக்கு fumigation என்ட ஒண்டு இருக்குதல்லோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

இலங்கையின் கடன்சுமை கூடுவதுதையும் குறைவதையும் வெளிநாட்டிலிருந்து பார்ப்பவர்களுக்கு விளையாட்டாக இருக்கலாம்.

இலங்கையின் பண வீக்கம் எங்கள் உறவுகளின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

 

நீங்கள் சொல்வது எவ்வளவு  உண்மையோ

அதே  அளவு  உண்மை

அடிக்கொரு  குண்டை எம்  மக்கள்  மீதும் மண்மீதும் கொட்டி 

எம்மக்களையும்  மண்ணையும்  ஆக்கிமித்துக்கொண்டிருந்தபோது.....

இந்த  நிலை  வரும்  என தமிழர்  ஒப்பாரியிட

சிங்களவர்கள் வெடி  கொழுத்திக்கொண்டாடிக்கொண்டிருந்ததும்...........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, MEERA said:

நாதம்ஸ் கப்பலில் வாற பொருட்களுக்கு fumigation என்ட ஒண்டு இருக்குதல்லோ

பயிர் பச்சை வளரும் போதே, அடிக்கிற மருத்துக்களால வாற சுகாதார பிரச்சினையால் தானே கோத்தா, ஆர்கானிக் விவசாயம் எண்டு கிளம்பினவர்.

ஈழப்பிரியன் சொன்னது... பழைய காலத்து... அரிசி.... நெல்லு கதை.

இது இப்ப... Genetically Modified DNA காலம்... 

இறைச்சி, மீன் வகைகளுக்கு ஒரு கதை சொல்லுவினம். உயிரோட இருந்த காலத்திலும் பார்க்க, பிரீஸிருக்க கனகாலம் இருக்கும் எண்டு.... அந்த காலத்திலை பிரீஸிர் இருக்கவில்லையே... அது போல தான்...🤑

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலை உயர்வு அங்கு மட்டுமல்ல இங்கு கனடாவிலும் தான்.  பல பொருட்கள் Covid  க்கு முன்னர் இருந்த விலையிலிருந்து கிட்டத்தட்ட இருமடங்காகி விட்டது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

நெல்லாக வைத்திருந்தால் நீண்டகாலம் வைத்திருக்கலாம்.
ஆனால் அரிசி அப்படி வைத்திருக்கலாமோ?
இல்லை என்றே எண்ணுகிறேன்.

அரிசியாய் கனகாலம் வைச்சிருக்கேலாது.....புளு கூடு கட்டீடும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

யுத்தகாலத்தில், சிங்கள அரசின் பெரும் தடைகளுக்கு முகம் கொடுத்த எங்கள் உறவுகள் இதை சமாளிப்பர்.

இ்போது, சுமந்திரன் உள்பட, நெல் உற்பத்தி, வீட்டுக்கு வீடு மரக்கறி தோட்டம் என்று கிடைக்கும் இடமெல்லாம் விவசாயம்.

போனவருடம், கொழும்பில் இருக்கும் எனது மச்சான், ஊரில் விதைத்து..... வித்தது போக மிச்சத்தை பன்னிரண்டு மூடை அரிசியாய் கொழும்பு கொண்டு போய் வைத்துள்ளார். அவருக்கும், தங்கை குடும்பத்துக்கும் மாதம் அரை மூடை வீதம் போதுமாம்.

கொழும்பில் கூட வீட்டின் பின் மரக்கறி போட்டுள்ளார்.

சிங்களவர் சமாளிக்க முடியாமல் தெருவில் இறங்குவார்கள்.

இந்த விலையேற்றம் பலரையும் இந்திய நாடகங்களை மறந்து இருக்கும் துண்டு நிலங்களில் வீட்டுத்தோட்டம் போட வைத்து விட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, MEERA said:

“கருவாடு” உள்ளபோது உலர் மீன் எதற்கு???? 

உலர்ந்த மீன் கருவாடு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.