Jump to content

அரசுப் பணியாளர் தேர்வுகளில் தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ்நாட்டினர் அல்லது தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம் என்கிற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களும் பங்கேற்கலாம் என்று கடந்த 2016ம் ஆண்டு வழிவகை செய்யப்பட்டது. இதன்படி,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெளி மாநிலத்தவர்களும் பங்கேற்கலாம். தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசுப் பணிகளில் சேரலாம் என்கிற நிலை ஏற்பட்டது. இது தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயல் என்று அதிமுக மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளை தவிர பெரும்பான்மையான அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழ்நாடு சட்டபேரவையில், கடந்த செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின் போது, "தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் 100 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் தகுதித்தேர்வாக நடத்தப்படும்" என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர்.

தேர்வு எழுதும் மாணவர்கள் கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

இந்நிலையில், இந்த அறிவிப்பு தற்போது அரசாணையாக வெளியாகியுள்ளது. இதன்படி, டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள் கட்டாயம் இடம் பெறும். தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் 10 வகுப்பு நிலையில் இருக்கும். கட்டாய தமிழ் தாள் தேர்வில், குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் பெறாதவர்களின் பிற தாள்கள் திருத்தப்படாது.

தற்போது நடைமுறையில் உள்ள தமிழ் பொதுத் தமிழ்/ பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலம் தாள் தேர்வு நீக்கப்படுகிறது. பொதுத்தமிழ் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக இருக்கும். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் உள்ளிட்ட மாநிலத்தின் பிற தேர்வு முகமைகளில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை நடத்துவது தொடர்பான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் சம்மந்தப்பட்ட நிர்வாகத் துறைகளால் வெளியிடப்படும்" இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சியில் இனி கட்டாய தமிழ் தேர்வு - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • பிழம்பு changed the title to அரசுப் பணியாளர் தேர்வுகளில் தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம்!
  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தரம்.. மிகச்சரியானதும் மிகநீதியானதும்… யூகே வரோணும் எண்டாலே ielts கேக்குது யூகே கவர்மெண்ட்.. அரசவேலைக்கே தமிழ்தேவை இல்லை நிலமை தமிழ்நாட்டில இவ்வளா நாளும்.. நல்லவேளை சீமான் இல்லை.. இதை சீமான் சொல்லி இருந்தா தீவிரவாதி எண்டு தொடங்கி இருப்பானுக..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க அரசு ஆரவாரமில்லாமல் பல முன்னெடுப்புகளை தமிழ் வளர்ச்சிக்காகச் செய்து வருகிறது. மேலெ இருக்கிற நடவடிக்கை மூலம், வேற்று மாநிலத்திலிருந்து குடியேறிகளாக வந்தோரின் இரண்டாம் தலைமுறையினர் கூட தமிழை உரிய முறையில் கற்க வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்! 

திராவிடன் , தெலுங்கன், கன்னடன் என்று யூ ரியூப் சனல்களில் திட்டிக் கொண்டிருப்பதை விட இது போன்ற உள்ளீர்க்கும் நடவடிக்கைகளே தமிழை வளர்க்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

இதென்ன சீமானின் செல்வாக்கை இவ்வளவு சுருக்கி விட்டீர்கள்? சீமானின் இயற்கை சூழல் பாதுகாப்பு திட்டங்களைத்  தான் மேற்கு நாடுகளின் பசுமை இயக்கங்களும், லிபரல் கட்சிகளும் அமல்படுத்துகின்றன!🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியொரு அறிவிப்பை கொடுத்துவிட்டு டாஸ்க் மாஸ்க் மதுக்கடையை கூடிய நேரத்துக்கு திறக்க அறிவித்து உள்ளார்கள் .

Link to comment
Share on other sites

இதே போல தமிழ் நாட்டில் முதலாம் வகுப்பில் இருந்து ஜந்தாம் வகுப்புவரை ஆரம்ப பாடசாலைகளில் தமிழில் மட்டுமே கல்வி கற்பிக்க வேண்டுமென்ற அரசாணை 1996 ல் பதவிக்கு வந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட போது சீமான் என்ற நபர் யாரென்றே தெரியாது. அந்த அரசாணை 2001 ல் பதவிக்கு வந்த ஜெயலலிதா ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. அத்த ஜெயலலிதா ஈழத்தாய் என்று சீமானால் கொண்டாடப்பட்டார். 

இதே போல் ஈழத்தமிழ் அகதிகளின் பிள்ளைகள் உயர்கல்வி கற்கும் வசதியும்  ஜெயலலிதாவால்  தடுக்கப்பட்டது. 

ஊழல் ஊழல் என்று வாய் கிழிய கத்தும் சீமான் ஊழல் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட சசிகலா என்று வரும் போது அந்தம்மா அந்தம்மா என்று குழைகிறார். பம்முகிறார். சிறையால் வெளியே வந்த பின் அவரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு திராவிட தலைகளும் ஒன்றுக்கொன்று ஊழலிலும்,தமிழர் துரோகத்திலும் சளைத்தவர்களல்ல. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அடிமைகளுக்கு இப்போதிருக்கும் ஸ்டாலின் இதுவரை பரவாயில்லை எனலாம். தமிழர்களின் சாபக்கேடு எந்தக் கொள்ளி பரவாயில்லை என தெரிவு செய்வதில்தான் நிலைமை உள்ளது.
 

பெரும்பான்மை பெற்று சீமான் தலையெடுக்க கனகாலம் ஆகும், அல்லது அவருக்கு வாய்ப்பே இல்லாமலும் போகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இதே போல தமிழ் நாட்டில் முதலாம் வகுப்பில் இருந்து ஜந்தாம் வகுப்புவரை ஆரம்ப பாடசாலைகளில் தமிழில் மட்டுமே கல்வி கற்பிக்க வேண்டுமென்ற அரசாணை 1996 ல் பதவிக்கு வந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட போது சீமான் என்ற நபர் யாரென்றே தெரியாது. அந்த அரசாணை 2001 ல் பதவிக்கு வந்த ஜெயலலிதா ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. அத்த ஜெயலலிதா ஈழத்தாய் என்று சீமானால் கொண்டாடப்பட்டார். 

உங்களின் சிந்தனைகளை  மாற்றுவது நல்லது ஐந்தாம் வகுப்பென்ன அந்த அந்த மாநிலங்களில் அவர்களின் மொழி கட்டாயமாக படிப்பிப்பது அவர்களின் அடிப்படை உரிமை இந்த உண்மை கூட விளங்காமல் அல்லது உங்கள் பார்வையில் மற்ற மொழிக்காரர்கள் மேன்மையானவர்கள் எண்ணம் சிறுவயதிலே பதிந்து இருக்கனும் ஆனபடியால்தான் ஒன்றில் இருந்து ஐந்து மட்டும் தமிழ் கட்டாய பாடமாகினது பெரிதாக தெரிகின்றது .

கீழே தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள மலையாளம் 

Malayalam made compulsory in Kerala schools from classes 1 to 10......

https://english.mathrubhumi.com/news/kerala/malayalam-made-compulsory-in-kerala-schools-from-classes-1-to-10-malayalam-language-learning-1.2797814
 

அடுத்து தெலுங்கு 

AP Makes Telugu Compulsory in Schools: Details Inside

https://english.sakshi.com/news/andhrapradesh/ap-makes-telugu-compulsory-schools-details-inside-140546

ஹிந்தி இங்கு ஹிந்தி இல்லாவிட்டால் பட்ட படிப்பு கிடையாது எனும் நிபந்தனையை போட்டு ஹிந்தியை கட்டாயம் ஆக்கியுள்ளார்கள் 

https://www.hindustantimes.com/delhi/du-circular-makes-hindi-test-compulsory-for-graduation-degrees/story-6wRYoEUzaVXnXJa6eRqdKI.html#:~:text=Students of Delhi University (DU,a circular said on Thursday.&text=Hindi was not compulsory in,CBCS)%2C implemented last year.

என்னசெய்வது கொடிபிடிக்காதே போராடாதே அவர்கள் தருவதை அமைதியாக இருந்து வாங்கிக்கொள்ளுங்கள் நூற்றாண்டு அடிமைகளுக்கு போதிக்கப்பட்ட இலவச விடயம் இலகுவில் மாறாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

இரண்டு திராவிட தலைகளும் ஒன்றுக்கொன்று ஊழலிலும்,தமிழர் துரோகத்திலும் சளைத்தவர்களல்ல. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அடிமைகளுக்கு இப்போதிருக்கும் ஸ்டாலின் இதுவரை பரவாயில்லை எனலாம். தமிழர்களின் சாபக்கேடு எந்தக் கொள்ளி பரவாயில்லை என தெரிவு செய்வதில்தான் நிலைமை உள்ளது.

இந்த பக்கத்தில் இப்படி அறிவிக்கிறார்கள் அடுத்த பக்கம் அதே கட்சியினர்  உலகின் தொன்மை மிக்க தூங்கா  நகர் மதுரையில்  அவமானகரமான பெண்களுக்கு மட்டும் மதுபான விடுதி திறக்கின்றார்கள் இதுவரை தமிழ்நாட்டு குடிமகன்கள் மது மயக்கம் இனி தமிழ் பெண்களும் வெறியில்  .

இந்த மதுக்கடைகளுக்கு சப்பிளை செய்யப்படும் 95 வீத மதுப்போத்தல்கள் அதே கட்சியினரின் ஆலைகளில் தயாரிக்கப்பட்டவை என்பது உங்களுக்கு தெரியாதா ?

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

 

பெருமாள் இயல்பாக நடக்கும் விடயங்களை சீமான் கூறி தான் செய்கிறார்கள் என்று கூறப்படுவதற்கே அப்படி அல்ல என்பதை ஆதாரத்துடன் கூறியிருந்தேன்.  மற்றபடி எந்த அரசியல் கட்சிக்கும் தலைவர்களுக்கும் வக்காலத்து வாங்குமளவுக்கு எவரும் சுத்தமானவர்கள் அல்ல.  ஸ்ராலின், எடப்பாடி போலவே சீமானும் ஒரு சாதாரண பதவி ஆசை பிடித்த ஒரு அரசியல் வாதியே. ஏற்கனவே கூறியது போல ஊழலுக்காக தண்டனை பெற்ற ஜெயலிதாவையோ சசிகலாவையோ பற்றிப பேச்சு எழும்பது பம்முவது அந்தம்மா அந்தம்மா என்று குழைவது போன்ற செயல்களே சீமான் நேர்மையற்றவர்கள் என்பதை காட்ட போதுமானது. ராச வன்னியன் கூறியது போல உள்ளதற்குள் இப்போதைக்கு பரவாயில்லை என்றால் அது ஸ்ராலின் தான். சில வேளை எதிர் காலத்தில் நிலைமை மாறலாம். 

மற்றப்படி ஊழல்கள் என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.  பொதுவான தெற்காசிய நாடுகள் முழுவதும் இப்படியான அரச ஊழல்கள் பிரபலம் மிகுந்தவை.   ஊழல்களுக்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல ஆசிய நாடுகளில் வாழும்  மக்களும் காரணம். ஊழல் கலாச்சாரத்தில் வளர்ந்த மக்கள் உள்ள இடத்தில் பொது துறை ஊழல் என்பது சாதாரணமானது.   

ஊழலுக்கும் திருட்டுக்கும் இன மத பேதம் இல்லை.  சீமான் கட்சியிலும் நிறைய திருடர்கள் இருக்கிறார்கள். என்ன அந்த திருடர்களுக்கு திருட சான்ஸ் கிடைக்கவில்லை.  அதனால் அவர்கள் ஆட்சிக்கு  வந்தால் ஏதோ திருட்டே நடக்காத  சுத்தமான ஆட்சி நடக்கும் என்பது போல் புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசியவாதிகள் பரப்புரை செய்கிறார்கள். அதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி பரப்புரை செய்வர்களில் பெரும்பாலோனோர் போராட்டத்தை வைத்து மக்கள் பணத்தை திருடிய திருடர்களே. 

அண்மையில் சீமான் கட்சியின் துரைமுருகனின் ரெலிபோன் பேச்சு கேட்டேன்.  சாக்கடையை விட மோசமான கீழ்தர தூசண உரையாடல். இப்படியான சாக்கடை தண்ணீரே வெட்க்படும் அளவுக்கு தரம் தாழ்ந்து உரையாடும் இவர்கள் தான் இன்று தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் என்று அவர்களால் அழைக்கபடும் இனவெறி பேசும் தரம் தாழ்ந்த நபர்கள்.  அதற்ஆக திமுக சரியா அதிமுக சரியா என்று கேட்கவேண்டாம். எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. அனால் திமுக, அதிமுகவை விட தரம் மோசமான தரம் தாழ்ந்த கலாச்சாரத்தை கொண்டவர்களே நாம் தமிழர் கட்எசியினர். அவர்களை  தேர்தலில் விரட்டிய தமிழக மக்களுக்கு மீண்டும் நன்றி. 🙏🏻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இந்த பக்கத்தில் இப்படி அறிவிக்கிறார்கள் அடுத்த பக்கம் அதே கட்சியினர்  உலகின் தொன்மை மிக்க தூங்கா  நகர் மதுரையில்  அவமானகரமான பெண்களுக்கு மட்டும் மதுபான விடுதி திறக்கின்றார்கள் இதுவரை தமிழ்நாட்டு குடிமகன்கள் மது மயக்கம் இனி தமிழ் பெண்களும் வெறியில்  .

இந்த மதுக்கடைகளுக்கு சப்பிளை செய்யப்படும் 95 வீத மதுப்போத்தல்கள் அதே கட்சியினரின் ஆலைகளில் தயாரிக்கப்பட்டவை என்பது உங்களுக்கு தெரியாதா ?

ஸ்டாலின் சுத்தம், நல்லவற்றை மட்டுமே செய்கிறாரென சொல்ல வரவில்லை. இன்று இருக்கும் கழிசடைகளில் அவர் பரவாயில்லை ரகம் மட்டுமே!

சீமானின் உணர்ச்சி அரசியல் பேச்சு, இளசுகளின் வெறும் கைதட்டலோடு முடிந்துவிடுகிறது. வெகுசன மக்களின் நம்பிக்கையை பெற இன்னும் பல காலமெடுக்கும் ஐயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசின் செயல் - மிக சிறப்பு.

தம்பிகள் - எரியுதடி மாலா🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஸ்டாலின் சுத்தம், நல்லவற்றை மட்டுமே செய்கிறாரென சொல்ல வரவில்லை. இன்று இருக்கும் கழிசடைகளில் அவர் பரவாயில்லை ரகம் மட்டுமே!

சீமானின் உணர்ச்சி அரசியல் பேச்சு, இளசுகளின் வெறும் கைதட்டலோடு முடிந்துவிடுகிறது. வெகுசன மக்களின் நம்பிக்கையை பெற இன்னும் பல காலமெடுக்கும் ஐயா.

நான் சீமான் பக்தன் கிடையாது அதேபோல் ஸ்டாலின் எதிர் ஆளும் கிடையாது அரசியலில் எந்த விடயம் நடந்தாலும் உடனே கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு கொடுக்க முடியாது தமிழ்நாடு என்று பெயரை வைத்துக்கொண்டு தமிழில் compulsory(கட்டாயம்) படிக்கணும் போட்டி தேர்வுக்கு தமிழ் கட்டாயம்  என்ற சட்டம் கொண்டுவருவது மிக தாமதமானது  அதுவும் இவ்வளவு காலம் போனபின் இவர்கள் எடுக்கும் நடவடிக்கை என்றாலும்  வரவேற்க கூடியது .

முன்பும் தமிழ் படிப்பிக்கணும் என்று  கொண்டுவந்தவர்கள் தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தில் தான் படிப்பிப்போம் என்று கோர்ட் ஏறி தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம் என்பது இல்லாமல் ஆக்கினார்கள் அந்த தனியார் கல்லூரி உரிமையாளர்கள் அதே கட்சியினர் தான் என்பதும் உங்களுக்கு தெரியும் . அவர்களே சட்டம் கொண்டு வந்தார்கள் அவர்களே கோர்ட் ஏறி அந்த சட்டத்தை செல்லாது ஆக்கினார்கள் . அதே போல் இந்த அரச ஆணையும் நீர்த்து போகுமோ ?

இங்கு குதிரைகள் ஓடியபின் லயத்தை பூட்டுவதுபோல அரசவேலைகளில் வெளிமாநிலத்தவர் நிரப்பிய பின் இந்த அரச ஆணை வந்துள்ளது ஒருபக்கம் தமிழ் மக்களை மகிழ்ச்சி படுத்தியபடி  சிந்தனையை மழுங்கடிக்கும் விதமாக மதுபான கடைகளை அதிக  நேரம் திறக்க அனுமதி கொடுத்தது மட்டுமல்லாது உலகிலே முதன்முதல் பெண்கள் மட்டும் மது அருந்தும் பார் அதுவும் தமிழர்  கலாசார பெருமைமிக்க மதுரை  நகரில் திறந்து உள்ளார்கள் . மதுபான ஆலைகள் யார் முதலாளிகள் என்று நான் இங்கு சொல்லதேவையில்லை அனைவருக்கும் தெரிந்த விடயம் .

மேல் உள்ள எதிர்வு கூறல்களை தாண்டி தமிழுக்கு நல்லது நடக்கணும் என்று மனம் விரும்புது ஆனால் கடந்த கால கசப்பான அனுபவங்கள் மனதில் நின்றபடி உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

கட்சிகளில் மட்டுமல்ல வெண்திரைகளிலும் காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

கட்சிகளில் மட்டுமல்ல வெண்திரைகளிலும் காணலாம்.

இன்றைய தமிழ்நாட்டின் நிலை கவனமாக பாருங்கள் .

இன்றைய தக்காளி விலை நிலவரம், கிலோ ஒன்றிற்கு:

1. news7 - ரூ. 35
2. One India - ரூ. 30
3. புதிய தலைமுறை - ரூ. 25
4. தந்தி - ரூ. 20
5. கலைஞர் டிவி - ரூ. 15
6. நக்கீரன் - ரூ. 10
6. கோயம்பேடு மார்க்கெட் - ரூ. 130

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

பெருமாள் இயல்பாக நடக்கும் விடயங்களை சீமான் கூறி தான் செய்கிறார்கள் என்று கூறப்படுவதற்கே அப்படி அல்ல என்பதை ஆதாரத்துடன் கூறியிருந்தேன்.  மற்றபடி எந்த அரசியல் கட்சிக்கும் தலைவர்களுக்கும் வக்காலத்து வாங்குமளவுக்கு எவரும் சுத்தமானவர்கள் அல்ல.  ஸ்ராலின், எடப்பாடி போலவே சீமானும் ஒரு சாதாரண பதவி ஆசை பிடித்த ஒரு அரசியல் வாதியே. ஏற்கனவே கூறியது போல ஊழலுக்காக தண்டனை பெற்ற ஜெயலிதாவையோ சசிகலாவையோ பற்றிப பேச்சு எழும்பது பம்முவது அந்தம்மா அந்தம்மா என்று குழைவது போன்ற செயல்களே சீமான் நேர்மையற்றவர்கள் என்பதை காட்ட போதுமானது. ராச வன்னியன் கூறியது போல உள்ளதற்குள் இப்போதைக்கு பரவாயில்லை என்றால் அது ஸ்ராலின் தான். சில வேளை எதிர் காலத்தில் நிலைமை மாறலாம். 

மற்றப்படி ஊழல்கள் என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.  பொதுவான தெற்காசிய நாடுகள் முழுவதும் இப்படியான அரச ஊழல்கள் பிரபலம் மிகுந்தவை.   ஊழல்களுக்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல ஆசிய நாடுகளில் வாழும்  மக்களும் காரணம். ஊழல் கலாச்சாரத்தில் வளர்ந்த மக்கள் உள்ள இடத்தில் பொது துறை ஊழல் என்பது சாதாரணமானது.   

ஊழலுக்கும் திருட்டுக்கும் இன மத பேதம் இல்லை.  சீமான் கட்சியிலும் நிறைய திருடர்கள் இருக்கிறார்கள். என்ன அந்த திருடர்களுக்கு திருட சான்ஸ் கிடைக்கவில்லை.  அதனால் அவர்கள் ஆட்சிக்கு  வந்தால் ஏதோ திருட்டே நடக்காத  சுத்தமான ஆட்சி நடக்கும் என்பது போல் புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசியவாதிகள் பரப்புரை செய்கிறார்கள். அதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி பரப்புரை செய்வர்களில் பெரும்பாலோனோர் போராட்டத்தை வைத்து மக்கள் பணத்தை திருடிய திருடர்களே. 

அண்மையில் சீமான் கட்சியின் துரைமுருகனின் ரெலிபோன் பேச்சு கேட்டேன்.  சாக்கடையை விட மோசமான கீழ்தர தூசண உரையாடல். இப்படியான சாக்கடை தண்ணீரே வெட்க்படும் அளவுக்கு தரம் தாழ்ந்து உரையாடும் இவர்கள் தான் இன்று தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் என்று அவர்களால் அழைக்கபடும் இனவெறி பேசும் தரம் தாழ்ந்த நபர்கள்.  அதற்ஆக திமுக சரியா அதிமுக சரியா என்று கேட்கவேண்டாம். எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. அனால் திமுக, அதிமுகவை விட தரம் மோசமான தரம் தாழ்ந்த கலாச்சாரத்தை கொண்டவர்களே நாம் தமிழர் கட்எசியினர். அவர்களை  தேர்தலில் விரட்டிய தமிழக மக்களுக்கு மீண்டும் நன்றி. 🙏🏻

முதல்லை தமிழ்நாட்டு அரசியல் தேவையில்லை எண்டுறது.....பிறகு சீமானை கண்டவுடனை தமிழ்நாட்டு அரசியல் வியாக்கியானம் பண்ணுறது.கருணாநிதி எப்படியான வார்த்தைகளை உதிர்த்தவர் எண்டு தெரிஞ்சும் திருப்பி திருப்பி வெள்ளை அடிக்கிற அடி இருக்கெல்லே சொல்லி வேலையில்லை.தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாம்  சரியில்லையாம். இருந்தாலும் சீமான் கட்சி இதுவரைக்கும் குற்றங்கள் ஏதும் செய்யாட்டிலும் கட்சி சரியில்லையாம்......தூசண வார்த்தைகள் கதைக்கினமாம். இருக்கலாம் திருந்த வேண்டும் திருந்துவார்கள்.திருத்துவார்கள். ஆனால் ஏனைய கட்சிகளின் மூடத்தன அசிங்கங்களையும் அலசி ஆராயுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

முதல்லை தமிழ்நாட்டு அரசியல் தேவையில்லை எண்டுறது.....பிறகு சீமானை கண்டவுடனை தமிழ்நாட்டு அரசியல் வியாக்கியானம் பண்ணுறது.கருணாநிதி எப்படியான வார்த்தைகளை உதிர்த்தவர் எண்டு தெரிஞ்சும் திருப்பி திருப்பி வெள்ளை அடிக்கிற அடி இருக்கெல்லே சொல்லி வேலையில்லை.தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாம்  சரியில்லையாம். இருந்தாலும் சீமான் கட்சி இதுவரைக்கும் குற்றங்கள் ஏதும் செய்யாட்டிலும் கட்சி சரியில்லையாம்......தூசண வார்த்தைகள் கதைக்கினமாம். இருக்கலாம் திருந்த வேண்டும் திருந்துவார்கள்.திருத்துவார்கள். ஆனால் ஏனைய கட்சிகளின் மூடத்தன அசிங்கங்களையும் அலசி ஆராயுங்கள்.

அட விடுங்கண்ண  தமிழ்நாடு பற்றி எழுத அந்தாள் என்னை இழுத்து சீமான் புராணம் பாடுகிறார் அதனால் வேலைக்கு ஆவாது என்று பதில் கருத்து  போடாமல் கடந்து செல்லவேண்டியதாக போயிற்று . மேலும் சில தமிழின தலைவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்பவர்களின் தூஷண பேச்சுக்களை இங்கு இணைக்க  முடியாத நாகரீகம் கொண்டவை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தமிழக அரசின் செயல் - மிக சிறப்பு.

தம்பிகள் - எரியுதடி மாலா🤣.

என்னது தமிழக அரசின் சிறப்பா?

இன்னும் கனிமள கடத்தல் அதிகமாகி விட்டதாம் கேள்விப்பட்டியளோ? 😂

எல்லாத்தையும் விட இது இன்னும் சிறப்பு...🤣

Bild

எரிஞ்சு பொரியுதடி பாத்திமா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 minute ago, குமாரசாமி said:

Bild

கருமம், கருமம்..! 🥵

கண்மணிகள், கண்றாவியாகி விடக்கூடாது.

'ஆண்கள் மட்டும் குடிக்கலாம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், பெண்கள் ஏன் அவற்றை செய்யக்கூடாது..?' என தோன்றும், பலரும் கேட்கலாம்..நாடு தாங்குமா..? 

ஆனால் 'பெண்களை நம்பித்தான் குடும்ப வாழ்வியலே சுழல்கிறது' என்பதை அவசியம் ஒத்துக்கொள்ள வேண்டும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

முதல்லை தமிழ்நாட்டு அரசியல் தேவையில்லை எண்டுறது.....பிறகு சீமானை கண்டவுடனை தமிழ்நாட்டு அரசியல் வியாக்கியானம் பண்ணுறது.கருணாநிதி எப்படியான வார்த்தைகளை உதிர்த்தவர் எண்டு தெரிஞ்சும் திருப்பி திருப்பி வெள்ளை அடிக்கிற அடி இருக்கெல்லே சொல்லி வேலையில்லை.தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாம்  சரியில்லையாம். இருந்தாலும் சீமான் கட்சி இதுவரைக்கும் குற்றங்கள் ஏதும் செய்யாட்டிலும் கட்சி சரியில்லையாம்......தூசண வார்த்தைகள் கதைக்கினமாம். இருக்கலாம் திருந்த வேண்டும் திருந்துவார்கள்.திருத்துவார்கள். ஆனால் ஏனைய கட்சிகளின் மூடத்தன அசிங்கங்களையும் அலசி ஆராயுங்கள்.

 

18 minutes ago, பெருமாள் said:

அட விடுங்கண்ண  தமிழ்நாடு பற்றி எழுத அந்தாள் என்னை இழுத்து சீமான் புராணம் பாடுகிறார் அதனால் வேலைக்கு ஆவாது என்று பதில் கருத்து  போடாமல் கடந்து செல்லவேண்டியதாக போயிற்று . மேலும் சில தமிழின தலைவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்பவர்களின் தூஷண பேச்சுக்களை இங்கு இணைக்க  முடியாத நாகரீகம் கொண்டவை .

👇 உங்கள் இருவருக்கும் முதலில் "சீமான்" என்ற பெயரை இந்த திரியில் உச்சரித்தது யாரென்று மறக்கிற அளவுக்கு வெள்ளிக் கிழமை என்ன தான் நடந்தது?😂

17 hours ago, குமாரசாமி said:

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

உங்கள் இருவருக்கும் முதலில் "சீமான்" என்ற பெயரை இந்த திரியில் உச்சரித்தது யாரென்று மறக்கிற அளவுக்கு வெள்ளிக் கிழமை என்ன தான் நடந்தது?😂

யார் உச்சரித்தது ? நான் தேவையற்று பெயர்களை இழுப்பது கிடையாது வெள்ளிக்கிழமை பிரச்சனையில் யாருடனோ கொள்ளுப்பட்டுவிட்டு கடைசியாக பக்கத்து இலைக்கு சொதி  திரியில் நின்றநீங்கள் வெள்ளி மரக்கறி சாப்பாடு கோசான் வேறை  வந்து ஆட்டுக்கால் பாயா போட்டுகொண்டு நின்றவர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

என்னது தமிழக அரசின் சிறப்பா?

இன்னும் கனிமள கடத்தல் அதிகமாகி விட்டதாம் கேள்விப்பட்டியளோ? 😂

எல்லாத்தையும் விட இது இன்னும் சிறப்பு...🤣

Bild

எரிஞ்சு பொரியுதடி பாத்திமா 😁

Tamil_News_large_1653743.jpg

 

மதுரை: மதுரையில் உள்ள ஒரு மாலில் பெண்களுக்கு தனியாக பார் துவக்கப்பட்டுள்ளது என்ற தகவல் சமூக வலதளங்களி்ல் பரபரப்பாக பரவியது. ஆனால் இதை நிர்வாகம் மறுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் உள்ள "விஷால் டி மால்" என்ற மாலில் 'Ladies Night' என்ற பெயரில் பெண்களுக்கான மதுபானக் கூடம் திறக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக, அந்த ரெஸ்ட்டாரண்டின் ஜெனரல் மேனேஜர் வீர ராஜேஷ் கூறியதாவது:

இது தொடர்பாக, வெளியான விளம்பரத்தில் டிரிங்க்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. டிரிங்க்சிற்கு ஆல்கஹால் மட்டும் அர்த்தம் இல்லை. குடிப்பது அனைத்தும் டிரிங்க்ஸ்தான். மாக்டெயில், ஜூஸ் இப்படி எல்லாமே டிரிங்க்ஸ் வகையில்தான் வரும். குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் வந்தால் அவர்களுக்கு இவ்வளவு இலவசம் என விளம்பரப்படுத்தியுள்ளோம். பெண்கள் தனியா வரமாட்டார்கள். தங்களது குழந்தை, குடும்பத்தினர் என அனைவரையும் அழைத்து வரவே விருப்பப்படுவார்கள். இதனால் தான் அந்த விளம்பரம்.

கேடு விளைவிக்க மாட்டோம்:

மதுரையின் மானத்துக்கு ஒருபோதும் கேடு விளைவிக்க நாங்கள் நினைத்ததில்லை. எல்லா ஊரிலும் மால், ரெஸ்ட்டாரண்ட் என வளர்ந்துகொண்டிருக்கும்போது, மதுரையில் ஏன் வரக்கூடாது என்றுதான் விஷால் ஹோட்டல்ஸ் தொடங்கி நடத்திவருகிறோம். ஆனால் மதுரையின் கலாச்சாரத்துக்கு எந்தவிதத்திலும் பங்கம் வர எண்ணியதில்லை. இந்த சம்பவத்தால் மதுரை மக்களின் மனதை எந்தவிதத்திலாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுமாறு மக்களை கேட்டுக் கொள்கிறோம். மதுரையின் மானத்துக்கு எங்களால் எந்தச் சூழ்நிலையிலும், எப்போதும் களங்கம் வராது என்றார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=1653743

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

யார் உச்சரித்தது ? நான் தேவையற்று பெயர்களை இழுப்பது கிடையாது வெள்ளிக்கிழமை பிரச்சனையில் யாருடனோ கொள்ளுப்பட்டுவிட்டு கடைசியாக பக்கத்து இலைக்கு சொதி  திரியில் நின்றநீங்கள் வெள்ளி மரக்கறி சாப்பாடு கோசான் வேறை  வந்து ஆட்டுக்கால் பாயா போட்டுகொண்டு நின்றவர் .

வடிவாகப் பாருங்கோ கீழே👇! நீங்கள் சீமானை இழுத்த குமாரசாமியைத் திட்டிக் கொண்டிருக்கிறியள்😂. அவரை உச்சரிக்கிற அளவு பெரிதாக இந்த திரியில் அவர் தொடர்பான எதுவும் இல்லை! 

 

17 hours ago, குமாரசாமி said:

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

 

3 minutes ago, ராசவன்னியன் said:

Tamil_News_large_1653743.jpg

 

மதுரை: மதுரையில் உள்ள ஒரு மாலில் பெண்களுக்கு தனியாக பார் துவக்கப்பட்டுள்ளது என்ற தகவல் சமூக வலதளங்களி்ல் பரபரப்பாக பரவியது. ஆனால் இதை நிர்வாகம் மறுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் உள்ள "விஷால் டி மால்" என்ற மாலில் 'Ladies Night' என்ற பெயரில் பெண்களுக்கான மதுபானக் கூடம் திறக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக, அந்த ரெஸ்ட்டாரண்டின் ஜெனரல் மேனேஜர் வீர ராஜேஷ் கூறியதாவது:

இது தொடர்பாக, வெளியான விளம்பரத்தில் டிரிங்க்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. டிரிங்க்சிற்கு ஆல்கஹால் மட்டும் அர்த்தம் இல்லை. குடிப்பது அனைத்தும் டிரிங்க்ஸ்தான். மாக்டெயில், ஜூஸ் இப்படி எல்லாமே டிரிங்க்ஸ் வகையில்தான் வரும். குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் வந்தால் அவர்களுக்கு இவ்வளவு இலவசம் என விளம்பரப்படுத்தியுள்ளோம். பெண்கள் தனியா வரமாட்டார்கள். தங்களது குழந்தை, குடும்பத்தினர் என அனைவரையும் அழைத்து வரவே விருப்பப்படுவார்கள். இதனால் தான் அந்த விளம்பரம்.

கேடு விளைவிக்க மாட்டோம்:

மதுரையின் மானத்துக்கு ஒருபோதும் கேடு விளைவிக்க நாங்கள் நினைத்ததில்லை. எல்லா ஊரிலும் மால், ரெஸ்ட்டாரண்ட் என வளர்ந்துகொண்டிருக்கும்போது, மதுரையில் ஏன் வரக்கூடாது என்றுதான் விஷால் ஹோட்டல்ஸ் தொடங்கி நடத்திவருகிறோம். ஆனால் மதுரையின் கலாச்சாரத்துக்கு எந்தவிதத்திலும் பங்கம் வர எண்ணியதில்லை. இந்த சம்பவத்தால் மதுரை மக்களின் மனதை எந்தவிதத்திலாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுமாறு மக்களை கேட்டுக் கொள்கிறோம். மதுரையின் மானத்துக்கு எங்களால் எந்தச் சூழ்நிலையிலும், எப்போதும் களங்கம் வராது என்றார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=1653743

பெருமாள் செய்தி கொண்டு வந்தால் அனேகமாக இப்படித் தான் ஏதாவது திரித்தல் இருக்கும். இதை நீங்கள் சீரியசாக எடுத்துத் தேடியிருக்கிறீங்கள் -  கரும சிரத்தை👍!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

நீங்கள் சீமானை இழுத்த குமாரசாமியைத் திட்டிக் கொண்டிருக்கிறியள்😂. அவரை உச்சரிக்கிற அளவு பெரிதாக இந்த திரியில் அவர் தொடர்பான எதுவும் இல்லை! 

நான் எங்கு குமராசாமியை வைது  கொண்டு இருக்கிறன் ? உங்களுக்கு தெரிந்துகொண்டே வார்த்தை ஜாலம் பண்ணி ஆட்களை குழப்புவது உங்கள் வாடிக்கை குட்டையை குழப்பி மீன்  பிடிக்கும் விளையாட்டு .

இதேபோன்ற அறிக்கையை தானே அதே கட்சியை சேர்ந்த தலைவர் 2006ல் அறிவித்தவர் என்ன நடந்தது ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.