Jump to content

அரசுப் பணியாளர் தேர்வுகளில் தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) நடத்தும் போட்டி தேர்வுகளில் தமிழ்நாட்டினர் அல்லது தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம் என்கிற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர்களும் பங்கேற்கலாம் என்று கடந்த 2016ம் ஆண்டு வழிவகை செய்யப்பட்டது. இதன்படி,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெளி மாநிலத்தவர்களும் பங்கேற்கலாம். தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசுப் பணிகளில் சேரலாம் என்கிற நிலை ஏற்பட்டது. இது தமிழ்நாடு இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயல் என்று அதிமுக மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகளை தவிர பெரும்பான்மையான அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழ்நாடு சட்டபேரவையில், கடந்த செப்டம்பர் 13ம் தேதி நடைபெற்ற மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையின் போது, "தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் 100 சதவீதம் தமிழக இளைஞர்களை நியமனம் செய்யும் வகையில், அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தாள் தகுதித்தேர்வாக நடத்தப்படும்" என்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். பலரும் இதற்கு வரவேற்பு தெரிவித்தனர்.

தேர்வு எழுதும் மாணவர்கள் கோப்புப் படம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

இந்நிலையில், இந்த அறிவிப்பு தற்போது அரசாணையாக வெளியாகியுள்ளது. இதன்படி, டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித் தாள் கட்டாயம் இடம் பெறும். தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் 10 வகுப்பு நிலையில் இருக்கும். கட்டாய தமிழ் தாள் தேர்வில், குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் பெற வேண்டும். குறைந்தபட்ச மதிப்பெண் பெறாதவர்களின் பிற தாள்கள் திருத்தப்படாது.

தற்போது நடைமுறையில் உள்ள தமிழ் பொதுத் தமிழ்/ பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில் பொது ஆங்கிலம் தாள் தேர்வு நீக்கப்படுகிறது. பொதுத்தமிழ் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக இருக்கும். மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் உள்ளிட்ட மாநிலத்தின் பிற தேர்வு முகமைகளில் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வினை நடத்துவது தொடர்பான மேற்படி வழிகாட்டு நெறிமுறைகள் சம்மந்தப்பட்ட நிர்வாகத் துறைகளால் வெளியிடப்படும்" இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சியில் இனி கட்டாய தமிழ் தேர்வு - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • பிழம்பு changed the title to அரசுப் பணியாளர் தேர்வுகளில் தமிழ் தெரிந்தவர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு கட்டாயம்!
  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தரம்.. மிகச்சரியானதும் மிகநீதியானதும்… யூகே வரோணும் எண்டாலே ielts கேக்குது யூகே கவர்மெண்ட்.. அரசவேலைக்கே தமிழ்தேவை இல்லை நிலமை தமிழ்நாட்டில இவ்வளா நாளும்.. நல்லவேளை சீமான் இல்லை.. இதை சீமான் சொல்லி இருந்தா தீவிரவாதி எண்டு தொடங்கி இருப்பானுக..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தி.மு.க அரசு ஆரவாரமில்லாமல் பல முன்னெடுப்புகளை தமிழ் வளர்ச்சிக்காகச் செய்து வருகிறது. மேலெ இருக்கிற நடவடிக்கை மூலம், வேற்று மாநிலத்திலிருந்து குடியேறிகளாக வந்தோரின் இரண்டாம் தலைமுறையினர் கூட தமிழை உரிய முறையில் கற்க வேண்டிய நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்! 

திராவிடன் , தெலுங்கன், கன்னடன் என்று யூ ரியூப் சனல்களில் திட்டிக் கொண்டிருப்பதை விட இது போன்ற உள்ளீர்க்கும் நடவடிக்கைகளே தமிழை வளர்க்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, குமாரசாமி said:

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

இதென்ன சீமானின் செல்வாக்கை இவ்வளவு சுருக்கி விட்டீர்கள்? சீமானின் இயற்கை சூழல் பாதுகாப்பு திட்டங்களைத்  தான் மேற்கு நாடுகளின் பசுமை இயக்கங்களும், லிபரல் கட்சிகளும் அமல்படுத்துகின்றன!🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியொரு அறிவிப்பை கொடுத்துவிட்டு டாஸ்க் மாஸ்க் மதுக்கடையை கூடிய நேரத்துக்கு திறக்க அறிவித்து உள்ளார்கள் .

Link to comment
Share on other sites

இதே போல தமிழ் நாட்டில் முதலாம் வகுப்பில் இருந்து ஜந்தாம் வகுப்புவரை ஆரம்ப பாடசாலைகளில் தமிழில் மட்டுமே கல்வி கற்பிக்க வேண்டுமென்ற அரசாணை 1996 ல் பதவிக்கு வந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட போது சீமான் என்ற நபர் யாரென்றே தெரியாது. அந்த அரசாணை 2001 ல் பதவிக்கு வந்த ஜெயலலிதா ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. அத்த ஜெயலலிதா ஈழத்தாய் என்று சீமானால் கொண்டாடப்பட்டார். 

இதே போல் ஈழத்தமிழ் அகதிகளின் பிள்ளைகள் உயர்கல்வி கற்கும் வசதியும்  ஜெயலலிதாவால்  தடுக்கப்பட்டது. 

ஊழல் ஊழல் என்று வாய் கிழிய கத்தும் சீமான் ஊழல் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட சசிகலா என்று வரும் போது அந்தம்மா அந்தம்மா என்று குழைகிறார். பம்முகிறார். சிறையால் வெளியே வந்த பின் அவரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு திராவிட தலைகளும் ஒன்றுக்கொன்று ஊழலிலும்,தமிழர் துரோகத்திலும் சளைத்தவர்களல்ல. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அடிமைகளுக்கு இப்போதிருக்கும் ஸ்டாலின் இதுவரை பரவாயில்லை எனலாம். தமிழர்களின் சாபக்கேடு எந்தக் கொள்ளி பரவாயில்லை என தெரிவு செய்வதில்தான் நிலைமை உள்ளது.
 

பெரும்பான்மை பெற்று சீமான் தலையெடுக்க கனகாலம் ஆகும், அல்லது அவருக்கு வாய்ப்பே இல்லாமலும் போகலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இதே போல தமிழ் நாட்டில் முதலாம் வகுப்பில் இருந்து ஜந்தாம் வகுப்புவரை ஆரம்ப பாடசாலைகளில் தமிழில் மட்டுமே கல்வி கற்பிக்க வேண்டுமென்ற அரசாணை 1996 ல் பதவிக்கு வந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட போது சீமான் என்ற நபர் யாரென்றே தெரியாது. அந்த அரசாணை 2001 ல் பதவிக்கு வந்த ஜெயலலிதா ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. அத்த ஜெயலலிதா ஈழத்தாய் என்று சீமானால் கொண்டாடப்பட்டார். 

உங்களின் சிந்தனைகளை  மாற்றுவது நல்லது ஐந்தாம் வகுப்பென்ன அந்த அந்த மாநிலங்களில் அவர்களின் மொழி கட்டாயமாக படிப்பிப்பது அவர்களின் அடிப்படை உரிமை இந்த உண்மை கூட விளங்காமல் அல்லது உங்கள் பார்வையில் மற்ற மொழிக்காரர்கள் மேன்மையானவர்கள் எண்ணம் சிறுவயதிலே பதிந்து இருக்கனும் ஆனபடியால்தான் ஒன்றில் இருந்து ஐந்து மட்டும் தமிழ் கட்டாய பாடமாகினது பெரிதாக தெரிகின்றது .

கீழே தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள மலையாளம் 

Malayalam made compulsory in Kerala schools from classes 1 to 10......

https://english.mathrubhumi.com/news/kerala/malayalam-made-compulsory-in-kerala-schools-from-classes-1-to-10-malayalam-language-learning-1.2797814
 

அடுத்து தெலுங்கு 

AP Makes Telugu Compulsory in Schools: Details Inside

https://english.sakshi.com/news/andhrapradesh/ap-makes-telugu-compulsory-schools-details-inside-140546

ஹிந்தி இங்கு ஹிந்தி இல்லாவிட்டால் பட்ட படிப்பு கிடையாது எனும் நிபந்தனையை போட்டு ஹிந்தியை கட்டாயம் ஆக்கியுள்ளார்கள் 

https://www.hindustantimes.com/delhi/du-circular-makes-hindi-test-compulsory-for-graduation-degrees/story-6wRYoEUzaVXnXJa6eRqdKI.html#:~:text=Students of Delhi University (DU,a circular said on Thursday.&text=Hindi was not compulsory in,CBCS)%2C implemented last year.

என்னசெய்வது கொடிபிடிக்காதே போராடாதே அவர்கள் தருவதை அமைதியாக இருந்து வாங்கிக்கொள்ளுங்கள் நூற்றாண்டு அடிமைகளுக்கு போதிக்கப்பட்ட இலவச விடயம் இலகுவில் மாறாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ராசவன்னியன் said:

இரண்டு திராவிட தலைகளும் ஒன்றுக்கொன்று ஊழலிலும்,தமிழர் துரோகத்திலும் சளைத்தவர்களல்ல. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அடிமைகளுக்கு இப்போதிருக்கும் ஸ்டாலின் இதுவரை பரவாயில்லை எனலாம். தமிழர்களின் சாபக்கேடு எந்தக் கொள்ளி பரவாயில்லை என தெரிவு செய்வதில்தான் நிலைமை உள்ளது.

இந்த பக்கத்தில் இப்படி அறிவிக்கிறார்கள் அடுத்த பக்கம் அதே கட்சியினர்  உலகின் தொன்மை மிக்க தூங்கா  நகர் மதுரையில்  அவமானகரமான பெண்களுக்கு மட்டும் மதுபான விடுதி திறக்கின்றார்கள் இதுவரை தமிழ்நாட்டு குடிமகன்கள் மது மயக்கம் இனி தமிழ் பெண்களும் வெறியில்  .

இந்த மதுக்கடைகளுக்கு சப்பிளை செய்யப்படும் 95 வீத மதுப்போத்தல்கள் அதே கட்சியினரின் ஆலைகளில் தயாரிக்கப்பட்டவை என்பது உங்களுக்கு தெரியாதா ?

Link to comment
Share on other sites

1 hour ago, பெருமாள் said:

 

பெருமாள் இயல்பாக நடக்கும் விடயங்களை சீமான் கூறி தான் செய்கிறார்கள் என்று கூறப்படுவதற்கே அப்படி அல்ல என்பதை ஆதாரத்துடன் கூறியிருந்தேன்.  மற்றபடி எந்த அரசியல் கட்சிக்கும் தலைவர்களுக்கும் வக்காலத்து வாங்குமளவுக்கு எவரும் சுத்தமானவர்கள் அல்ல.  ஸ்ராலின், எடப்பாடி போலவே சீமானும் ஒரு சாதாரண பதவி ஆசை பிடித்த ஒரு அரசியல் வாதியே. ஏற்கனவே கூறியது போல ஊழலுக்காக தண்டனை பெற்ற ஜெயலிதாவையோ சசிகலாவையோ பற்றிப பேச்சு எழும்பது பம்முவது அந்தம்மா அந்தம்மா என்று குழைவது போன்ற செயல்களே சீமான் நேர்மையற்றவர்கள் என்பதை காட்ட போதுமானது. ராச வன்னியன் கூறியது போல உள்ளதற்குள் இப்போதைக்கு பரவாயில்லை என்றால் அது ஸ்ராலின் தான். சில வேளை எதிர் காலத்தில் நிலைமை மாறலாம். 

மற்றப்படி ஊழல்கள் என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.  பொதுவான தெற்காசிய நாடுகள் முழுவதும் இப்படியான அரச ஊழல்கள் பிரபலம் மிகுந்தவை.   ஊழல்களுக்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல ஆசிய நாடுகளில் வாழும்  மக்களும் காரணம். ஊழல் கலாச்சாரத்தில் வளர்ந்த மக்கள் உள்ள இடத்தில் பொது துறை ஊழல் என்பது சாதாரணமானது.   

ஊழலுக்கும் திருட்டுக்கும் இன மத பேதம் இல்லை.  சீமான் கட்சியிலும் நிறைய திருடர்கள் இருக்கிறார்கள். என்ன அந்த திருடர்களுக்கு திருட சான்ஸ் கிடைக்கவில்லை.  அதனால் அவர்கள் ஆட்சிக்கு  வந்தால் ஏதோ திருட்டே நடக்காத  சுத்தமான ஆட்சி நடக்கும் என்பது போல் புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசியவாதிகள் பரப்புரை செய்கிறார்கள். அதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி பரப்புரை செய்வர்களில் பெரும்பாலோனோர் போராட்டத்தை வைத்து மக்கள் பணத்தை திருடிய திருடர்களே. 

அண்மையில் சீமான் கட்சியின் துரைமுருகனின் ரெலிபோன் பேச்சு கேட்டேன்.  சாக்கடையை விட மோசமான கீழ்தர தூசண உரையாடல். இப்படியான சாக்கடை தண்ணீரே வெட்க்படும் அளவுக்கு தரம் தாழ்ந்து உரையாடும் இவர்கள் தான் இன்று தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் என்று அவர்களால் அழைக்கபடும் இனவெறி பேசும் தரம் தாழ்ந்த நபர்கள்.  அதற்ஆக திமுக சரியா அதிமுக சரியா என்று கேட்கவேண்டாம். எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. அனால் திமுக, அதிமுகவை விட தரம் மோசமான தரம் தாழ்ந்த கலாச்சாரத்தை கொண்டவர்களே நாம் தமிழர் கட்எசியினர். அவர்களை  தேர்தலில் விரட்டிய தமிழக மக்களுக்கு மீண்டும் நன்றி. 🙏🏻

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இந்த பக்கத்தில் இப்படி அறிவிக்கிறார்கள் அடுத்த பக்கம் அதே கட்சியினர்  உலகின் தொன்மை மிக்க தூங்கா  நகர் மதுரையில்  அவமானகரமான பெண்களுக்கு மட்டும் மதுபான விடுதி திறக்கின்றார்கள் இதுவரை தமிழ்நாட்டு குடிமகன்கள் மது மயக்கம் இனி தமிழ் பெண்களும் வெறியில்  .

இந்த மதுக்கடைகளுக்கு சப்பிளை செய்யப்படும் 95 வீத மதுப்போத்தல்கள் அதே கட்சியினரின் ஆலைகளில் தயாரிக்கப்பட்டவை என்பது உங்களுக்கு தெரியாதா ?

ஸ்டாலின் சுத்தம், நல்லவற்றை மட்டுமே செய்கிறாரென சொல்ல வரவில்லை. இன்று இருக்கும் கழிசடைகளில் அவர் பரவாயில்லை ரகம் மட்டுமே!

சீமானின் உணர்ச்சி அரசியல் பேச்சு, இளசுகளின் வெறும் கைதட்டலோடு முடிந்துவிடுகிறது. வெகுசன மக்களின் நம்பிக்கையை பெற இன்னும் பல காலமெடுக்கும் ஐயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசின் செயல் - மிக சிறப்பு.

தம்பிகள் - எரியுதடி மாலா🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

ஸ்டாலின் சுத்தம், நல்லவற்றை மட்டுமே செய்கிறாரென சொல்ல வரவில்லை. இன்று இருக்கும் கழிசடைகளில் அவர் பரவாயில்லை ரகம் மட்டுமே!

சீமானின் உணர்ச்சி அரசியல் பேச்சு, இளசுகளின் வெறும் கைதட்டலோடு முடிந்துவிடுகிறது. வெகுசன மக்களின் நம்பிக்கையை பெற இன்னும் பல காலமெடுக்கும் ஐயா.

நான் சீமான் பக்தன் கிடையாது அதேபோல் ஸ்டாலின் எதிர் ஆளும் கிடையாது அரசியலில் எந்த விடயம் நடந்தாலும் உடனே கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு கொடுக்க முடியாது தமிழ்நாடு என்று பெயரை வைத்துக்கொண்டு தமிழில் compulsory(கட்டாயம்) படிக்கணும் போட்டி தேர்வுக்கு தமிழ் கட்டாயம்  என்ற சட்டம் கொண்டுவருவது மிக தாமதமானது  அதுவும் இவ்வளவு காலம் போனபின் இவர்கள் எடுக்கும் நடவடிக்கை என்றாலும்  வரவேற்க கூடியது .

முன்பும் தமிழ் படிப்பிக்கணும் என்று  கொண்டுவந்தவர்கள் தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தில் தான் படிப்பிப்போம் என்று கோர்ட் ஏறி தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயம் என்பது இல்லாமல் ஆக்கினார்கள் அந்த தனியார் கல்லூரி உரிமையாளர்கள் அதே கட்சியினர் தான் என்பதும் உங்களுக்கு தெரியும் . அவர்களே சட்டம் கொண்டு வந்தார்கள் அவர்களே கோர்ட் ஏறி அந்த சட்டத்தை செல்லாது ஆக்கினார்கள் . அதே போல் இந்த அரச ஆணையும் நீர்த்து போகுமோ ?

இங்கு குதிரைகள் ஓடியபின் லயத்தை பூட்டுவதுபோல அரசவேலைகளில் வெளிமாநிலத்தவர் நிரப்பிய பின் இந்த அரச ஆணை வந்துள்ளது ஒருபக்கம் தமிழ் மக்களை மகிழ்ச்சி படுத்தியபடி  சிந்தனையை மழுங்கடிக்கும் விதமாக மதுபான கடைகளை அதிக  நேரம் திறக்க அனுமதி கொடுத்தது மட்டுமல்லாது உலகிலே முதன்முதல் பெண்கள் மட்டும் மது அருந்தும் பார் அதுவும் தமிழர்  கலாசார பெருமைமிக்க மதுரை  நகரில் திறந்து உள்ளார்கள் . மதுபான ஆலைகள் யார் முதலாளிகள் என்று நான் இங்கு சொல்லதேவையில்லை அனைவருக்கும் தெரிந்த விடயம் .

மேல் உள்ள எதிர்வு கூறல்களை தாண்டி தமிழுக்கு நல்லது நடக்கணும் என்று மனம் விரும்புது ஆனால் கடந்த கால கசப்பான அனுபவங்கள் மனதில் நின்றபடி உள்ளது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

கட்சிகளில் மட்டுமல்ல வெண்திரைகளிலும் காணலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

கட்சிகளில் மட்டுமல்ல வெண்திரைகளிலும் காணலாம்.

இன்றைய தமிழ்நாட்டின் நிலை கவனமாக பாருங்கள் .

இன்றைய தக்காளி விலை நிலவரம், கிலோ ஒன்றிற்கு:

1. news7 - ரூ. 35
2. One India - ரூ. 30
3. புதிய தலைமுறை - ரூ. 25
4. தந்தி - ரூ. 20
5. கலைஞர் டிவி - ரூ. 15
6. நக்கீரன் - ரூ. 10
6. கோயம்பேடு மார்க்கெட் - ரூ. 130

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

பெருமாள் இயல்பாக நடக்கும் விடயங்களை சீமான் கூறி தான் செய்கிறார்கள் என்று கூறப்படுவதற்கே அப்படி அல்ல என்பதை ஆதாரத்துடன் கூறியிருந்தேன்.  மற்றபடி எந்த அரசியல் கட்சிக்கும் தலைவர்களுக்கும் வக்காலத்து வாங்குமளவுக்கு எவரும் சுத்தமானவர்கள் அல்ல.  ஸ்ராலின், எடப்பாடி போலவே சீமானும் ஒரு சாதாரண பதவி ஆசை பிடித்த ஒரு அரசியல் வாதியே. ஏற்கனவே கூறியது போல ஊழலுக்காக தண்டனை பெற்ற ஜெயலிதாவையோ சசிகலாவையோ பற்றிப பேச்சு எழும்பது பம்முவது அந்தம்மா அந்தம்மா என்று குழைவது போன்ற செயல்களே சீமான் நேர்மையற்றவர்கள் என்பதை காட்ட போதுமானது. ராச வன்னியன் கூறியது போல உள்ளதற்குள் இப்போதைக்கு பரவாயில்லை என்றால் அது ஸ்ராலின் தான். சில வேளை எதிர் காலத்தில் நிலைமை மாறலாம். 

மற்றப்படி ஊழல்கள் என்பது தமிழ் நாட்டுக்கு மட்டும் சொந்தமானது அல்ல.  பொதுவான தெற்காசிய நாடுகள் முழுவதும் இப்படியான அரச ஊழல்கள் பிரபலம் மிகுந்தவை.   ஊழல்களுக்கு அரசியல்வாதிகள் மட்டும் காரணம் அல்ல ஆசிய நாடுகளில் வாழும்  மக்களும் காரணம். ஊழல் கலாச்சாரத்தில் வளர்ந்த மக்கள் உள்ள இடத்தில் பொது துறை ஊழல் என்பது சாதாரணமானது.   

ஊழலுக்கும் திருட்டுக்கும் இன மத பேதம் இல்லை.  சீமான் கட்சியிலும் நிறைய திருடர்கள் இருக்கிறார்கள். என்ன அந்த திருடர்களுக்கு திருட சான்ஸ் கிடைக்கவில்லை.  அதனால் அவர்கள் ஆட்சிக்கு  வந்தால் ஏதோ திருட்டே நடக்காத  சுத்தமான ஆட்சி நடக்கும் என்பது போல் புலம்பெயர் நாடுகளில் உள்ள தேசியவாதிகள் பரப்புரை செய்கிறார்கள். அதில் வேடிக்கை என்னவென்றால் அப்படி பரப்புரை செய்வர்களில் பெரும்பாலோனோர் போராட்டத்தை வைத்து மக்கள் பணத்தை திருடிய திருடர்களே. 

அண்மையில் சீமான் கட்சியின் துரைமுருகனின் ரெலிபோன் பேச்சு கேட்டேன்.  சாக்கடையை விட மோசமான கீழ்தர தூசண உரையாடல். இப்படியான சாக்கடை தண்ணீரே வெட்க்படும் அளவுக்கு தரம் தாழ்ந்து உரையாடும் இவர்கள் தான் இன்று தமிழ் நாட்டில் தமிழ் தேசியம் என்று அவர்களால் அழைக்கபடும் இனவெறி பேசும் தரம் தாழ்ந்த நபர்கள்.  அதற்ஆக திமுக சரியா அதிமுக சரியா என்று கேட்கவேண்டாம். எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. அனால் திமுக, அதிமுகவை விட தரம் மோசமான தரம் தாழ்ந்த கலாச்சாரத்தை கொண்டவர்களே நாம் தமிழர் கட்எசியினர். அவர்களை  தேர்தலில் விரட்டிய தமிழக மக்களுக்கு மீண்டும் நன்றி. 🙏🏻

முதல்லை தமிழ்நாட்டு அரசியல் தேவையில்லை எண்டுறது.....பிறகு சீமானை கண்டவுடனை தமிழ்நாட்டு அரசியல் வியாக்கியானம் பண்ணுறது.கருணாநிதி எப்படியான வார்த்தைகளை உதிர்த்தவர் எண்டு தெரிஞ்சும் திருப்பி திருப்பி வெள்ளை அடிக்கிற அடி இருக்கெல்லே சொல்லி வேலையில்லை.தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாம்  சரியில்லையாம். இருந்தாலும் சீமான் கட்சி இதுவரைக்கும் குற்றங்கள் ஏதும் செய்யாட்டிலும் கட்சி சரியில்லையாம்......தூசண வார்த்தைகள் கதைக்கினமாம். இருக்கலாம் திருந்த வேண்டும் திருந்துவார்கள்.திருத்துவார்கள். ஆனால் ஏனைய கட்சிகளின் மூடத்தன அசிங்கங்களையும் அலசி ஆராயுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

முதல்லை தமிழ்நாட்டு அரசியல் தேவையில்லை எண்டுறது.....பிறகு சீமானை கண்டவுடனை தமிழ்நாட்டு அரசியல் வியாக்கியானம் பண்ணுறது.கருணாநிதி எப்படியான வார்த்தைகளை உதிர்த்தவர் எண்டு தெரிஞ்சும் திருப்பி திருப்பி வெள்ளை அடிக்கிற அடி இருக்கெல்லே சொல்லி வேலையில்லை.தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாம்  சரியில்லையாம். இருந்தாலும் சீமான் கட்சி இதுவரைக்கும் குற்றங்கள் ஏதும் செய்யாட்டிலும் கட்சி சரியில்லையாம்......தூசண வார்த்தைகள் கதைக்கினமாம். இருக்கலாம் திருந்த வேண்டும் திருந்துவார்கள்.திருத்துவார்கள். ஆனால் ஏனைய கட்சிகளின் மூடத்தன அசிங்கங்களையும் அலசி ஆராயுங்கள்.

அட விடுங்கண்ண  தமிழ்நாடு பற்றி எழுத அந்தாள் என்னை இழுத்து சீமான் புராணம் பாடுகிறார் அதனால் வேலைக்கு ஆவாது என்று பதில் கருத்து  போடாமல் கடந்து செல்லவேண்டியதாக போயிற்று . மேலும் சில தமிழின தலைவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்பவர்களின் தூஷண பேச்சுக்களை இங்கு இணைக்க  முடியாத நாகரீகம் கொண்டவை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தமிழக அரசின் செயல் - மிக சிறப்பு.

தம்பிகள் - எரியுதடி மாலா🤣.

என்னது தமிழக அரசின் சிறப்பா?

இன்னும் கனிமள கடத்தல் அதிகமாகி விட்டதாம் கேள்விப்பட்டியளோ? 😂

எல்லாத்தையும் விட இது இன்னும் சிறப்பு...🤣

Bild

எரிஞ்சு பொரியுதடி பாத்திமா 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1 minute ago, குமாரசாமி said:

Bild

கருமம், கருமம்..! 🥵

கண்மணிகள், கண்றாவியாகி விடக்கூடாது.

'ஆண்கள் மட்டும் குடிக்கலாம், எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், பெண்கள் ஏன் அவற்றை செய்யக்கூடாது..?' என தோன்றும், பலரும் கேட்கலாம்..நாடு தாங்குமா..? 

ஆனால் 'பெண்களை நம்பித்தான் குடும்ப வாழ்வியலே சுழல்கிறது' என்பதை அவசியம் ஒத்துக்கொள்ள வேண்டும்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

முதல்லை தமிழ்நாட்டு அரசியல் தேவையில்லை எண்டுறது.....பிறகு சீமானை கண்டவுடனை தமிழ்நாட்டு அரசியல் வியாக்கியானம் பண்ணுறது.கருணாநிதி எப்படியான வார்த்தைகளை உதிர்த்தவர் எண்டு தெரிஞ்சும் திருப்பி திருப்பி வெள்ளை அடிக்கிற அடி இருக்கெல்லே சொல்லி வேலையில்லை.தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் எல்லாம்  சரியில்லையாம். இருந்தாலும் சீமான் கட்சி இதுவரைக்கும் குற்றங்கள் ஏதும் செய்யாட்டிலும் கட்சி சரியில்லையாம்......தூசண வார்த்தைகள் கதைக்கினமாம். இருக்கலாம் திருந்த வேண்டும் திருந்துவார்கள்.திருத்துவார்கள். ஆனால் ஏனைய கட்சிகளின் மூடத்தன அசிங்கங்களையும் அலசி ஆராயுங்கள்.

 

18 minutes ago, பெருமாள் said:

அட விடுங்கண்ண  தமிழ்நாடு பற்றி எழுத அந்தாள் என்னை இழுத்து சீமான் புராணம் பாடுகிறார் அதனால் வேலைக்கு ஆவாது என்று பதில் கருத்து  போடாமல் கடந்து செல்லவேண்டியதாக போயிற்று . மேலும் சில தமிழின தலைவர்கள் என்று தங்களை தாங்களே சொல்லிக்கொள்பவர்களின் தூஷண பேச்சுக்களை இங்கு இணைக்க  முடியாத நாகரீகம் கொண்டவை .

👇 உங்கள் இருவருக்கும் முதலில் "சீமான்" என்ற பெயரை இந்த திரியில் உச்சரித்தது யாரென்று மறக்கிற அளவுக்கு வெள்ளிக் கிழமை என்ன தான் நடந்தது?😂

17 hours ago, குமாரசாமி said:

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

உங்கள் இருவருக்கும் முதலில் "சீமான்" என்ற பெயரை இந்த திரியில் உச்சரித்தது யாரென்று மறக்கிற அளவுக்கு வெள்ளிக் கிழமை என்ன தான் நடந்தது?😂

யார் உச்சரித்தது ? நான் தேவையற்று பெயர்களை இழுப்பது கிடையாது வெள்ளிக்கிழமை பிரச்சனையில் யாருடனோ கொள்ளுப்பட்டுவிட்டு கடைசியாக பக்கத்து இலைக்கு சொதி  திரியில் நின்றநீங்கள் வெள்ளி மரக்கறி சாப்பாடு கோசான் வேறை  வந்து ஆட்டுக்கால் பாயா போட்டுகொண்டு நின்றவர் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

என்னது தமிழக அரசின் சிறப்பா?

இன்னும் கனிமள கடத்தல் அதிகமாகி விட்டதாம் கேள்விப்பட்டியளோ? 😂

எல்லாத்தையும் விட இது இன்னும் சிறப்பு...🤣

Bild

எரிஞ்சு பொரியுதடி பாத்திமா 😁

Tamil_News_large_1653743.jpg

 

மதுரை: மதுரையில் உள்ள ஒரு மாலில் பெண்களுக்கு தனியாக பார் துவக்கப்பட்டுள்ளது என்ற தகவல் சமூக வலதளங்களி்ல் பரபரப்பாக பரவியது. ஆனால் இதை நிர்வாகம் மறுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் உள்ள "விஷால் டி மால்" என்ற மாலில் 'Ladies Night' என்ற பெயரில் பெண்களுக்கான மதுபானக் கூடம் திறக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக, அந்த ரெஸ்ட்டாரண்டின் ஜெனரல் மேனேஜர் வீர ராஜேஷ் கூறியதாவது:

இது தொடர்பாக, வெளியான விளம்பரத்தில் டிரிங்க்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. டிரிங்க்சிற்கு ஆல்கஹால் மட்டும் அர்த்தம் இல்லை. குடிப்பது அனைத்தும் டிரிங்க்ஸ்தான். மாக்டெயில், ஜூஸ் இப்படி எல்லாமே டிரிங்க்ஸ் வகையில்தான் வரும். குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் வந்தால் அவர்களுக்கு இவ்வளவு இலவசம் என விளம்பரப்படுத்தியுள்ளோம். பெண்கள் தனியா வரமாட்டார்கள். தங்களது குழந்தை, குடும்பத்தினர் என அனைவரையும் அழைத்து வரவே விருப்பப்படுவார்கள். இதனால் தான் அந்த விளம்பரம்.

கேடு விளைவிக்க மாட்டோம்:

மதுரையின் மானத்துக்கு ஒருபோதும் கேடு விளைவிக்க நாங்கள் நினைத்ததில்லை. எல்லா ஊரிலும் மால், ரெஸ்ட்டாரண்ட் என வளர்ந்துகொண்டிருக்கும்போது, மதுரையில் ஏன் வரக்கூடாது என்றுதான் விஷால் ஹோட்டல்ஸ் தொடங்கி நடத்திவருகிறோம். ஆனால் மதுரையின் கலாச்சாரத்துக்கு எந்தவிதத்திலும் பங்கம் வர எண்ணியதில்லை. இந்த சம்பவத்தால் மதுரை மக்களின் மனதை எந்தவிதத்திலாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுமாறு மக்களை கேட்டுக் கொள்கிறோம். மதுரையின் மானத்துக்கு எங்களால் எந்தச் சூழ்நிலையிலும், எப்போதும் களங்கம் வராது என்றார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=1653743

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெருமாள் said:

யார் உச்சரித்தது ? நான் தேவையற்று பெயர்களை இழுப்பது கிடையாது வெள்ளிக்கிழமை பிரச்சனையில் யாருடனோ கொள்ளுப்பட்டுவிட்டு கடைசியாக பக்கத்து இலைக்கு சொதி  திரியில் நின்றநீங்கள் வெள்ளி மரக்கறி சாப்பாடு கோசான் வேறை  வந்து ஆட்டுக்கால் பாயா போட்டுகொண்டு நின்றவர் .

வடிவாகப் பாருங்கோ கீழே👇! நீங்கள் சீமானை இழுத்த குமாரசாமியைத் திட்டிக் கொண்டிருக்கிறியள்😂. அவரை உச்சரிக்கிற அளவு பெரிதாக இந்த திரியில் அவர் தொடர்பான எதுவும் இல்லை! 

 

17 hours ago, குமாரசாமி said:

சீமானின் கொள்கையையும் தேர்தல் பிரச்சாரங்களையும் வேறொரு கட்சி அமுல் படுத்துது....அவ்வளவுதான்🤪

 

3 minutes ago, ராசவன்னியன் said:

Tamil_News_large_1653743.jpg

 

மதுரை: மதுரையில் உள்ள ஒரு மாலில் பெண்களுக்கு தனியாக பார் துவக்கப்பட்டுள்ளது என்ற தகவல் சமூக வலதளங்களி்ல் பரபரப்பாக பரவியது. ஆனால் இதை நிர்வாகம் மறுத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் மதுரையில் உள்ள "விஷால் டி மால்" என்ற மாலில் 'Ladies Night' என்ற பெயரில் பெண்களுக்கான மதுபானக் கூடம் திறக்கப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக, அந்த ரெஸ்ட்டாரண்டின் ஜெனரல் மேனேஜர் வீர ராஜேஷ் கூறியதாவது:

இது தொடர்பாக, வெளியான விளம்பரத்தில் டிரிங்க்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது. டிரிங்க்சிற்கு ஆல்கஹால் மட்டும் அர்த்தம் இல்லை. குடிப்பது அனைத்தும் டிரிங்க்ஸ்தான். மாக்டெயில், ஜூஸ் இப்படி எல்லாமே டிரிங்க்ஸ் வகையில்தான் வரும். குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் வந்தால் அவர்களுக்கு இவ்வளவு இலவசம் என விளம்பரப்படுத்தியுள்ளோம். பெண்கள் தனியா வரமாட்டார்கள். தங்களது குழந்தை, குடும்பத்தினர் என அனைவரையும் அழைத்து வரவே விருப்பப்படுவார்கள். இதனால் தான் அந்த விளம்பரம்.

கேடு விளைவிக்க மாட்டோம்:

மதுரையின் மானத்துக்கு ஒருபோதும் கேடு விளைவிக்க நாங்கள் நினைத்ததில்லை. எல்லா ஊரிலும் மால், ரெஸ்ட்டாரண்ட் என வளர்ந்துகொண்டிருக்கும்போது, மதுரையில் ஏன் வரக்கூடாது என்றுதான் விஷால் ஹோட்டல்ஸ் தொடங்கி நடத்திவருகிறோம். ஆனால் மதுரையின் கலாச்சாரத்துக்கு எந்தவிதத்திலும் பங்கம் வர எண்ணியதில்லை. இந்த சம்பவத்தால் மதுரை மக்களின் மனதை எந்தவிதத்திலாவது காயப்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுமாறு மக்களை கேட்டுக் கொள்கிறோம். மதுரையின் மானத்துக்கு எங்களால் எந்தச் சூழ்நிலையிலும், எப்போதும் களங்கம் வராது என்றார்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=1653743

பெருமாள் செய்தி கொண்டு வந்தால் அனேகமாக இப்படித் தான் ஏதாவது திரித்தல் இருக்கும். இதை நீங்கள் சீரியசாக எடுத்துத் தேடியிருக்கிறீங்கள் -  கரும சிரத்தை👍!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

நீங்கள் சீமானை இழுத்த குமாரசாமியைத் திட்டிக் கொண்டிருக்கிறியள்😂. அவரை உச்சரிக்கிற அளவு பெரிதாக இந்த திரியில் அவர் தொடர்பான எதுவும் இல்லை! 

நான் எங்கு குமராசாமியை வைது  கொண்டு இருக்கிறன் ? உங்களுக்கு தெரிந்துகொண்டே வார்த்தை ஜாலம் பண்ணி ஆட்களை குழப்புவது உங்கள் வாடிக்கை குட்டையை குழப்பி மீன்  பிடிக்கும் விளையாட்டு .

இதேபோன்ற அறிக்கையை தானே அதே கட்சியை சேர்ந்த தலைவர் 2006ல் அறிவித்தவர் என்ன நடந்தது ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.