Jump to content

ஐ.நாவில் ஈழத்து பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரும் கெளரவம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நாவில் ஈழத்து பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரும் கெளரவம்

யுனிசெஃப் இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து பெண் செல்வி. G.சாதனா (G. Sadhana) தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் Tamil Diaspora Alliance சார்பாக உரையாற்றுகிறார்.

Tamil Diaspora Alliance என்ற அமைப்பை புலம் பெயர் சமூகங்களின் இளைய தலைமைத்துவ அமைப்பாக இந்த சர்வதேச மாநாட்டுக்கு அழைப்பு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) விடுத்திருக்கிறது.

மேலும், இந்த சர்வதேச மாநாட்டில் பிரதிநிதியாக அமைப்பின் செயல் திட்டக்குழு பிரதி இயக்குனர் G.சாதனா (G. Sadhana) கலந்துகொள்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் உட்பட ஐ. நா சபையின் பல அங்கத்துவ அமைப்பின் இயக்குனர்களும் உரையாற்றவுள்ளனர்.

இதேவேளை, புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்று சிறந்த தலைமைத்துவத்திற்காக சர்வதேச மாநாட்டிற்காக கலந்து கொள்ள அழைக்கப்படுவது இதுவே முதல்முறை என்று தெரியவந்துள்ளது.

மேலும், வெவ்வேறு அமர்வுகளாக நடக்கும் இந்த மாநாட்டில் வரும் 7ஆம் திகதி G.சாதனா உரையாற்றுகிறார் என்று யுனிசெஃப் இன் இணையப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
 

 

https://www.thaarakam.com/news/191b5e2c-0096-4d83-a0fd-4a2953565e24

Link to comment
Share on other sites

39 minutes ago, கிருபன் said:

யுனிசெஃப் இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து பெண் செல்வி. G.சாதனா (G. Sadhana) தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் Tamil Diaspora Alliance சார்பாக உரையாற்றுகிறார்.

'சிறுபான்மையினர்', 'சிறுபான்மை இனக்குழு' என்று இலங்கையிலுள்ள தமிழர்களைக் குறிப்பிட்டு அவர்களை ஒரு தேசிய இனமாக போராடத் தகுதியற்றவர்களாக்கிப் பெரும்பான்மை இனத்துக்கு அடிபணிந்து வாழவைக்க, சிறீலங்க, இந்திய அரசுகளும், அவர்களின் நட்புநாடுகளும் முயன்றுவரும் வேளையில், இலங்கைத் தமிழரையும் ஒரு தேசிய இனமாகக் கருதக்கூடியவாறு, "சிறுபான்மைத் தமிழர்" என்று உலகப் பெரும் வல்லரசான அமெரிக்காவையே அழைக்க வைத்தவர்கள்தான் இந்த தமிழ் டயசுபோறா அலையன்சு இளைஞர்கள். வாழ்த்துவோம்.🙌 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்க இருக்குன்னே தெரியாதா கைலாசா நாட்டுக்கு நித்தியானந்தா கைலாசா சார்பா தன்னோட நாட்டோட பிரதிநிதியையே அனுப்பிட்டாரு.. இயக்க காசை அடிச்ச அமைப்புகளை சேந்த கள்ளனுவள் என்ன செய்யுரானுவள் இவ்வளவு நாளும்..? 15 வருசத்தும் ஆகுது.. மூணாவது தலைமுறைதான் இது ஆவது  செய்யுது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamil Diaspora Alliance க்கு பாராட்டுக்கள்.
தவல்களை இணைத்த கிருபனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்குள் புளுகி புளுகி உசுப்பேத்துவதும், பப்பாவில் ஏற்றி அழகு பார்ப்பதும் பலருக்கு வாய்வந்த, கைவந்த கலை. கடந்த இரு தசாப்தங்களில் இப்படி பல இளையவர்கள் வந்து போய்விட்டார்கள்.

இவர்களின் தமிழ் தேசிய செயற்பாடுகள் எல்லாம் பசையான வேலை ஒன்று எடுக்கவும், தமது ரெசுமி/சிவியை அலங்கரிக்கவும், நல்ல வாழ்க்கை துணையை தேடவும், தமது சொந்த இருப்புக்களை வளப்படுத்தவும் விஸ்தாரணம் செய்யவும் உதவும்.

நிற்க...

அங்காள ஆனந்தி அக்கா கோபிக்க போறா தன்னை கேட்காமல் யாரோ நேற்று முளைச்ச இளசுகள் கையில் மைக்கை எடுத்துவிட்டுதுகள் என்று. எதற்கும் அக்காவையும் வணங்கி ஆசீர்வாதம் வாங்கினால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த இளையோர் அமைப்பு 2021 இல் (சில மாதங்கள் முன்பு) தான் ஆரம்பிக்கப் பட்டிருக்கிறது. இதன் அறிமுகம் மாதாந்த சங்கம் குளோபல் நவம்பர் மாத நிகழ்ச்சியில் வழங்கப் பட்டதைப் பார்த்தேன். பல நிகழ்ச்சித் திட்டங்கள் செய்கிறார்கள் - தற்போது தாயகத்திலும் பொருளாதார உதவி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். இதன் அர்த்தம் அங்கே இந்த அமைப்பை அல்லது கிளையை பதிவு செய்ய வேண்டிய ஒரு நிலை வரும் - இதன் போது சில விட்டுக் கொடுப்புகள் , சமாளிப்புகள் அரச அமைப்புடன் செய்ய வேண்டியும் வரலாம். அந்தக் கணத்தில் இந்த அமைப்பை சிலர் எப்படி விமர்சிப்பார்கள் என்று காண நான் ஆவலுடன் இருக்கின்றேன்.

நான் அறிந்த வரையில், இவர்கள் செயற்பாட்டு ரீதியான வழியில் செல்ல முனையும் நபர்களாக தெரிகிறார்கள் - இது இப்போது புகழ்மாலை சூட்டும் சிலருக்கு புளிப்பாக மாறும் என்பது என் கணிப்பு!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

17 hours ago, கிருபன் said:

ஐ.நாவில் ஈழத்து பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரும் கெளரவம்

ஒரு தமிழ் பெண்மணி ஐ.நா வில் உரையாற்றுவதை தனி நபர் ஒருவருக்கு கிடைத்த பெருமையாக இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை எங்களில் சிலர் சிறிய கண்ணோட்டத்தில் பார்ப்பது மிக துரதிஷ்டம்.

நிறுவனத்தின் இணையதளத்தில் இவர்கள் பல வெவ்வேறு நாடுகளில் உள்ள தமிழ் இஸ்தாபனங்களின் ஒன்றியமாகவும்  தாய் நாட்டில் பாதிக்கப்பட்டோருக்கு சேவையாற்றும் அதேவேளை அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்  நீண்டகால செயற்திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படிருப்பதுடன் அங்கத்துவ மட்டத்திலோ நிர்வாகிகளின் வரிசையிலோ தமிழ் இளயோரை மட்டும் உள்ளடக்கியதாக இல்லை என்பதும் தெளிவாகிறது.

ஐ.நா(UNICEF) வை தங்களின் முக்கிய அனுசரணையாளர் என்றும் காட்டியிருக்கிறார்கள். முக்கிய அம்சங்களாக கூட்டுறவு, மனித உரிமை என்பவற்றை தங்கள் பிரதான நோக்கம் என்று கோடிட்டு சொல்லப்பட்டிருப்பதுடன் இந்த இஸ்தாபனம் சீரான முறையிலும் மிக நேர்த்தியாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள விதம் மிகப் பாராட்டுக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/12/2021 at 05:54, vanangaamudi said:

 

ஒரு தமிழ் பெண்மணி ஐ.நா வில் உரையாற்றுவதை தனி நபர் ஒருவருக்கு கிடைத்த பெருமையாக இந்த நிறுவனத்தின் செயற்பாடுகளை எங்களில் சிலர் சிறிய கண்ணோட்டத்தில் பார்ப்பது மிக துரதிஷ்டம்.

நிறுவனத்தின் இணையதளத்தில் இவர்கள் பல வெவ்வேறு நாடுகளில் உள்ள தமிழ் இஸ்தாபனங்களின் ஒன்றியமாகவும்  தாய் நாட்டில் பாதிக்கப்பட்டோருக்கு சேவையாற்றும் அதேவேளை அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்  நீண்டகால செயற்திட்டங்களைக் கொண்டிருப்பதாகவும் சொல்லப்படிருப்பதுடன் அங்கத்துவ மட்டத்திலோ நிர்வாகிகளின் வரிசையிலோ தமிழ் இளயோரை மட்டும் உள்ளடக்கியதாக இல்லை என்பதும் தெளிவாகிறது.

ஐ.நா(UNICEF) வை தங்களின் முக்கிய அனுசரணையாளர் என்றும் காட்டியிருக்கிறார்கள். முக்கிய அம்சங்களாக கூட்டுறவு, மனித உரிமை என்பவற்றை தங்கள் பிரதான நோக்கம் என்று கோடிட்டு சொல்லப்பட்டிருப்பதுடன் இந்த இஸ்தாபனம் சீரான முறையிலும் மிக நேர்த்தியாகவும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள விதம் மிகப் பாராட்டுக்குரியது.

நன்றி. சரியானதொரு புரிதல்.முதலில் வாழ்த்துவோம். அவர்களது முயற்சிகளை அவதானித்து எம்மாலான பங்களிப்பை செய்வதும் கலந்துரையாடுதல். ஆலோசனை கூறுதல்.(ஏற்பது, ஏற்காதது அவர்களின் விடயம்)புலத்திலே தனித்துவமாக  இருந்த அமைப்புகள்(எ-டு நா.க.த.அ...) இதுவரை பெரிதாக என்ன செய்தார்கள். முதலில் இளையோரைச் செயற்பட விடவேண்டும். தவழ முன் நடக்க ஆசைப்படமுடியாது. இளையோரை குறைத்து மதிப்பிட முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

https://tamildiasporaalliance.org/

 

 

"எங்கள் சந்ததி தன்னது

பங்கினைச் செய்தது

என்றது மகிழ்ந்திடும் பார்..."

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் டயஸ்போரா அலையன்ஸ் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. 

அவர்களின் நோக்கம் என பின்வருமாறு கூறுகிறார்கள்.

ஒருங்கிணைதல் ஒத்துழைத்தல் ஒன்றியமாதல் எனும் அடிப்படையில் இயங்குவது தமிழ் புலம்பெயர் கூட்டமைப்பு. (Tamil Diaspora Alliance) தமிழ் தேசத்தின் அங்கமான  புலம்பெயர் மக்களை சமூகமாக இயங்க வழி செய்வதே இதன் நோக்கம். உரிமை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி இவையே இதன் குறிக்கோள்.

எங்களை நாங்களே உருவாக்கி கொள்ளுதல் என்ற புதுமையான கருத்தியல் வடிவத்தை அரசியல் செயல் நெறியாக கொண்டு அதற்காக ஒன்று படுதல் (united) ஒற்றுமையடைதல் (unity) கூட்டுறவை வளர்த்தல் (co-operative) அதன் மூலம் தமிழ் தேசம் என்ற கூட்டுணர்வால் (collective sense) தேச கட்டுமானத்தை உருவாக்கி அதிகாரம் அளித்து (empowerment) பாதுகாத்து வளர்ப்பது எமது நோக்கம்.

பரஸ்பர புரிந்துணர்வு பரஸ்பர உதவி, பரஸ்பர ஒத்துழைப்பு என்பதன் மூலம் தனி மனித மேம்பாட்டையும் கூட்டுணர்வினால் கூட்டு அமைப்பு, கூட்டு முயற்சி, கூட்டு வெற்றி என்பதை அடைவதன் மூலம் தமிழ் தேச மேம்பாட்டையும் உருவாக்கி எம்மை நாமே கட்டமைத்துக் கொள்வது.

தேசிய கட்டமைப்பு அதன் பலம், கௌரவம், மேம்பாடு (Enhancement) என்பவற்றின் மூலம் தனி நபர் பாதுகாப்பு, கௌரவம், மேம்பாடு என்பவற்றை அடைய வேண்டும் என்பதே எமது கருத்தியல் அடிப்படை.

தமிழ்தேச கட்டுமானத்தின் அங்கமாகவும் பலமாகவும் துணையாகவும் TAMIL DIASPORA என்பதை ஒரு சமூக சக்தியாக உருவாக்கிக் கொள்வதே எமது அமைப்பின் நோக்கம்.

இதில் எங்கேயும் தமிழ் தேசிய அரசியல், தாயகத்தில் மக்களுக்கான தீர்வுக்கு முனைதல், என்பன பற்றி எதுவும் சொல்லபடவில்லை.

நாம் டயஸ்போராவில் ஒன்றிணைய வேண்டிய தேவை இருப்பதே தாயக மக்களுக்காத்தான். அதை தவிர வெளிநாட்டில் நாம் ஒன்றிணைந்து தீர்க்கும் அளவுக்கு இங்கே எமக்கு பிரச்சனைகள் இல்லை.

அப்படி இருக்க அவர்களை பற்றி இலக்கு பிரகடனத்தில் கூட எதுவும் இல்லை என்றால்? 

அடுத்த விசயம், இவர்களாக செய்கிறார்களா அல்லது சுமந்திரனுக்கு பெயர் போக கூடாது என்பதால் ஏனையவர்கள் செய்லிறார்களா தெரியவில்லை - அமெரிகாவின் “சிறுபான்மை குழு” என்ற சொற்பிரயோகம் மாற்றபட்டது இவர்களால்தான் என்பதற்கு என்னால் ஒரு ஆதாரத்தையும் காண முடியவில்லை. 

எந்த அமெரிக்க அதிகாரியிடம் எங்கே கோரிக்கை வைத்தார்கள்?

எப்போது சந்தித்து இந்த மாற்றத்தை வலியுறுத்தினார்கள்?

நேற்று முளைத்த ஒரு அமைப்பின் அறிக்கையால் அமெரிக்கா நிலைபாட்டை மாற்றும் என நான் நினக்கவில்லை.

தம்மால்தான் இது சாதிக்கபட்டதாக இந்த அமைப்பு உரிமை கோரியதாயும் தெரியவில்லை. ஆனால் தமது பெயரை இலங்கை தமிழ் அரசியலில் பக்கசார்ப்பாக பயன்படுத்துவதை மறுப்பதாயும் தெரியவில்லை. இது ஒரு நல்ல சகுனம், தலைமைத்துவ பண்பு அல்ல.

நிச்சயமாக இந்த அமைப்பை பலர் கொம்பு சீவி விடுகிறார்கள். இந்த செய்தியையே பாருங்கள் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் நடத்தும் மாநாட்டிற்க்கு அழைப்பு என்பதை ஏதோ “ஐநாவில் பொதுசபையில் பேச்சு” என்ற அளவுக்கு பில்டப் கொடுத்து எழுதியுள்ளார்கள்.

அடுத்து மேலே வணங்காமுடி சொல்வது போல் - அவர்களின் அனுசரணையாளராக யுனிசெப் யு எஸ் ஏ இருக்கிறது. யுனிசெப் அனுசரணையுடன் செயல்படும் அமைப்பு, உறுப்பு நாடான இலங்கையின் உள்நாட்டு அரசியலில் தலையிட முடியுமா?

ஆகவே இது ஒரு அரசியல் சாரா அமைப்பா?

மேலும் இங்கே இந்த பெண்மணி எதை பற்றி பேசுகிறார் -தலைமைதுவத்தை பற்றி. எமது இனப்பிரச்சனையை பற்றி அல்ல. இதனால் இவருக்கும் அமைப்புக்கும் கெளரவம்தான். வாழ்த்துக்கள்.

ஆனால் இனத்துக்கு?

எல்லாவற்றிலும் விட முக்கியமாக, டயஸ்போரா ஒன்றுபடவேண்டும், இளையோர் தலைமை கொள்ள வேண்டும் என்பதில் இரு கருத்து இல்லை, ஆனால் இதன் அடிப்படை நோக்கம் தாயக்கதில் தமிழ் தேசிய அடிப்படையில் ஒரு தீர்வை அடைவதாக இருக்க வேண்டும். 

இந்த அடிப்படையை அடிப்படை நோக்கமாக இவர்கள் ஏன் கொள்ளவில்லை என்பது - பல வினாக்களை எழுப்புகிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தமிழ் டயஸ்போரா அலையன்ஸ் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. 

 

 

 

கோசான், உங்களுக்கு மட்டுமல்ல- யாருக்கும் இந்த அமைப்புப் பற்றி அதிகம் தெரியாது - ஏனெனில் உத்தியோகபூர்வமாக உருவாகி ஒரு மாதம் இருக்கும் என நினைக்கிறேன்.

ஆனால், தலைமையில் இருக்கும் சில இளையோரின் குடும்பப் பெயர்கள் அமெரிக்க வாழ் ஈழத்தமிழர்களிடையே பழக்கமான பெயர்கள். உருவாகியிருக்கும் காரணம் என்னவென்று எனக்கும் தெரியவில்லை:

ஊகங்கள்: நூறாய் உடைந்து போய் இருக்கும் எங்கள்/முன்னைய தலைமுறையினரின் அமைப்புகளால் சலிப்படைந்து தாங்களே இரண்டாம் தலைமுறை ஆரம்பித்திருக்கிறது?. அல்லது தமிழக அரசியல் பாரம்பரியம் போல, தங்கள் பிள்ளைகளை அடுத்த தலைமுறைத் தலைமையாக முன்னுக்கு விட பழசுகளே ஆரம்பித்திருக்கலாம்?

ஆனால், நான் திறந்த மனத்துடன் இவர்கள் பற்றிய முடிவெதுவும் அற்று அவதானிக்கிறேன். 

NB: அமெரிக்காவுடன் இவர்கள் என்ன பேசி, எப்படி அந்த சொற் சிலம்பம் விளையாடினார்கள் என்று எனக்கும் தெரியவில்லை - அப்படி ஒன்றும் ஆவணமாகவும் இல்லை! இது வெறும் பப்பா ஏத்தலாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Justin said:

கோசான், உங்களுக்கு மட்டுமல்ல- யாருக்கும் இந்த அமைப்புப் பற்றி அதிகம் தெரியாது - ஏனெனில் உத்தியோகபூர்வமாக உருவாகி ஒரு மாதம் இருக்கும் என நினைக்கிறேன்.

ஆனால், தலைமையில் இருக்கும் சில இளையோரின் குடும்பப் பெயர்கள் அமெரிக்க வாழ் ஈழத்தமிழர்களிடையே பழக்கமான பெயர்கள். உருவாகியிருக்கும் காரணம் என்னவென்று எனக்கும் தெரியவில்லை:

ஊகங்கள்: நூறாய் உடைந்து போய் இருக்கும் எங்கள்/முன்னைய தலைமுறையினரின் அமைப்புகளால் சலிப்படைந்து தாங்களே இரண்டாம் தலைமுறை ஆரம்பித்திருக்கிறது?. அல்லது தமிழக அரசியல் பாரம்பரியம் போல, தங்கள் பிள்ளைகளை அடுத்த தலைமுறைத் தலைமையாக முன்னுக்கு விட பழசுகளே ஆரம்பித்திருக்கலாம்?

ஆனால், நான் திறந்த மனத்துடன் இவர்கள் பற்றிய முடிவெதுவும் அற்று அவதானிக்கிறேன். 

NB: அமெரிக்காவுடன் இவர்கள் என்ன பேசி, எப்படி அந்த சொற் சிலம்பம் விளையாடினார்கள் என்று எனக்கும் தெரியவில்லை - அப்படி ஒன்றும் ஆவணமாகவும் இல்லை! இது வெறும் பப்பா ஏத்தலாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது!

மேலதிக தகவல்களுக்கு நன்றி அண்ணா.

உங்களை போலவே நானும் திறந்த மனத்துத்துடந்தான் இவர்களை அணுகுகிறேன்.

அடுத்த தலைமுறையை தட்டி விட கூடாது என்ற பொறுப்பும் உள்ளது.

பார்க்கலாம்.

எனக்கு எவரையும் தெரியவில்லை. அமெரிக்க தமிழ் சங்கம் என்ற பெயர் மட்டும் பரிச்சயமாக இருந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யுனிசெப்பில் பேசுவது மிகப்பெரிய கெளரவம் என்றால்.. யூஎன்னில் ஆடுவது பற்றி உங்கள் கருத்து என்ன? 🙃

 

 

Link to comment
Share on other sites

இந்த விடயத்தில் எனது கருத்து,  தாயகத்திலோ அல்லது புலம் பெயர் நாடுகளிலோ வாழும் இளைய தலைமுறையினர்,  தமிழர் போராட்டம் தொடர்பான விடயங்களை கூடிய அளவுக்கு சுயாதீனமான பலவேறு தரப்புகளின் தகவல்களை பெற்று அதனை ஆய்வு செய்து தமக்கான கொள்கையினையும் செயற்திட்டத்தினையும் வகுத்து கொள்ள வேண்டும்.

அவர்களுக்கு போராட்ட அறிவூட்டுகின்றோம், வரலாறு கூறுகிறோம்  என்ற போர்வையில் பழைய அரசியல் சித்தாந்தங்களையும் வழிமுறைகளையும் ஒற்றைத்தன்மையுடன் அவர்களின் தலைக்குள் திணித்து, அவர்களை மூளைச்சலவை செய்வது எந்த பயனையும் தரப்போவதில்லை என்பதோடு எதிமறையான விளைவுகளையே ஏற்படுத்தும். 

ஒருகாலத்தில் இளைஞர்கள் ஆயுத போரை தொடங்கிய போது, இதே போல் மாபெரும் நம்பிக்கை தமிழ் மக்கள் மத்தியில் உருவானது. அந்த நம்பிக்கை பொய்த்துக் கானல் நீரானதற்கு முக்கிய காரணம் போரட்டத்தை தொடங்கிய இளைஞர்கள் அனைவரும் பழைய அரசியல் தலைமைகளின் உரைகளையும் அறிவூட்டல்களையும் மட்டுமே உள்வாங்கி தமது போராட்ட கொள்கையை வகுத்து கொண்டதாலே ஆகும். காலப்போக்கில் உலக அரசியல் மாற்றங்களை கூட கிரகித்து கொள்ளாத/ கொள்ள விரும்பாத கோட்பாட்டு ரீதியாக ஒரு இடத்தில் ஸதம்பித்து நின்ற போராட்ட முறையாலேயே இன்று அடுத்த தலைமுறை இன்னும் அதிகளவு பாரத்தை சுமக்க வேண்டிய துர்ப்பாக்கிய  நிலையை எமக்கு ஏற்படுத்தியுள்ளது. 

ஆகவே இளையோர் தமக்கான தகவல்கள், அறிவூட்டல்கள் ஆகியவற்றை சுயாதீனமாக பலவேறு வித்தியாசமான sources இலிருந்து தேடி சுய ஆய்வுக்குட்படுத்தி தமது கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் வகுத்து கொண்டு காத்திரமான அரசியல் தீர்வை நோக்கி பயணிப்பதே நல்லது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, tulpen said:

ஆகவே இளையோர் தமக்கான தகவல்கள், அறிவூட்டல்கள் ஆகியவற்றை சுயாதீனமாக பலவேறு வித்தியாசமான sources இலிருந்து தேடி சுய ஆய்வுக்குட்படுத்தி தமது கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் வகுத்து கொண்டு காத்திரமான அரசியல் தீர்வை நோக்கி பயணிப்பதே நல்லது. 

அதென்ன அந்த வித்தியாசமான sources நேரடியாக சொன்னால் நல்லதல்லதல்லவா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/12/2021 at 16:15, நியாயத்தை கதைப்போம் said:

நிற்க...

அங்காள ஆனந்தி அக்கா கோபிக்க போறா தன்னை கேட்காமல் யாரோ நேற்று முளைச்ச இளசுகள் கையில் மைக்கை எடுத்துவிட்டுதுகள் என்று. எதற்கும் அக்காவையும் வணங்கி ஆசீர்வாதம் வாங்கினால் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

ஏன் அவாவை  தேவையற்று இங்கு இழுக்கிறீங்கள் ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.