Jump to content

தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்கினால் மாத்திரமே அரசாங்கம் எதிர்பார்க்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கான உரிமையை வழங்கினால் மாத்திரமே அரசாங்கம் எதிர்பார்க்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியும் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்)

தமிழ் மக்களுக்கான உரிமையை பெற்றுக் கொடுத்தால் மாத்திரமே நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப  முடிவதுடன் அரசாங்கம்  எதிர்பார்க்கும் இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என தமிழ தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு மற்றும் சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சுக்கள் மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் உண்மைகளை மறைக்கும் வரை,அதிலிருந்து தப்பலாம் என்ற எண்ணத்துடன் செயற்படும்  வரை நாட்டில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியாது. நாடு முழுவதிலும் அனைவருக்கும் பாதுகாப்பு என்ற நிலை இல்லாவிட்டால் அரசாங்கம் எதிர்பார்க்கும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது. மக்களைப் பிரித்து இனவாதம் மூலம் வாக்குகளுக்காக செயற்படும் நிலை மாற வேண்டும். அரசாங்கம் தெரிவிக்கும் பொய் தொடர்பில் தற்போது சிங்கள மக்கள் கேள்விகேட்க ஆரம்பித்துவிட்டனர்.

மேலும் அதிகாரப் பகிர்வு என்றால் என்ன எனத் தெரியாத ஒருவரே தற்போது மக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருக்கின்றார். அமைச்சர் சரத் வீரசேகரவின் நடவடிக்கைகள் குறித்து வெட்கப்படுகின்றோம். அரசாங்கம் கடந்த எழுபத்தி நான்கு வருடங்கள் பயணித்த பாதையிலிருந்து மாற வேண்டும். அதே பாதையில் தொடர்ந்து பயணித்து பன்மை வாதத்தை உணராத வகையில் நாட்டை உருவாக்க முடியாது .

இனப்படுகொலை என்பது வெறுமனே மக்களை கொலை செய்வது மாத்திரமல்ல. 4 இலட்சம் மக்கள் நிர்க்கதியாகி இருந்த நிலையில், 70 ஆயிரம் பேருக்கே  உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்பினீர்கள். யுத்தம் தீவிரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கையில் பொது மக்களை பாதுகாக்கும் நோக்கில் 2009 மே 16ஆம் திகதி யுத்த நிறுத்தம் மேற்கொள்ள நானே அன்று மத்தியஸ்தராக இருந்து செயற்பட்டேன். யுத்தத்தை நிறுத்த பசில் ராஜபக்ஷ்விடன் நான் கதைத்தேன். ஆனால் பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானிப்பதாக தெரிவித்தார். ஆனால் ஒன்றும் இடம்பெறவில்லை. விடுதலைப்புலிகள் யுத்த நிறுத்தத்தை அறிவித்து ஆயுதங்களை கீழே வைத்த பின்னரும் இராணுவத்தினர் தாக்குல் மேற்கொண்டனர்.

அத்துடன் யுத்தம் முடிவடைந்து 12 வருடங்கள் கடந்த நிலையிலும் நாடு இன்னும் கட்டி எழுப்பப்படவில்லை. பங்களாதேஷ் போன்ற நாடுகளிடம் உதவி கேட்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. கடந்த 12 வருடங்களில் அரசாங்கம் பெற்றுக் கொண்ட பயன் இதுதான். 

எனவே நாம் சர்வதேச விசாரணை பற்றி பேசினால் அரசாங்கம் ஏன் பயப்பட வேண்டும் என கேட்கின்றேன். தமிழ் மக்கள் எதிரிகள் அல்ல. அவர்களது உரிமைகளையே அவர்கள் கேட்கின்றனர். அவர்கள் அதற்கான அருகதை உடையவர்கள். அதை அரசாங்கம் புரிந்து செயல்படாவிட்டால் ஒருபோதும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்றார்.
 

https://www.virakesari.lk/article/118415

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா  கஜேந்திரகுமார் அவர்கள,

நாட்டை கட்டியெளுப்ப உங்களுக்கு assignment கொடுக்கப்படவில்லயே. TNA யை உடைத்து இல்லாதொழிக்கும் assignment அல்லவா உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனைச் செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் எசமானர்கள் மகிழ்வடைவார்கள். 

☹️

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Kapithan said:

ஐயா  கஜேந்திரகுமார் அவர்கள,

நாட்டை கட்டியெளுப்ப உங்களுக்கு assignment கொடுக்கப்படவில்லயே. TNA யை உடைத்து இல்லாதொழிக்கும் assignment அல்லவா உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனைச் செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் எசமானர்கள் மகிழ்வடைவார்கள். 

☹️

ரிஎன்ஏ இல் இருந்து இவர்களை வெளியேற்றி கூட்டணியை உடைத்ததே சம்பந்தர் தானே.

அப்புறம் இல்லாததொன்றை இவர்கள்களால் உடைக்கலாம்.

தம்பிக்கு இருந்தா போல் கூட்டணியில பாசமாயிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கபிதான் இலகுவாக உங்களது குற்றச்சாட்டைக் கடந்துபோக முடியாது அவர்களது எஜமானர்கள் யார் என்பதை உங்களால் நிரூபணத்துடன் கூறமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

ரிஎன்ஏ இல் இருந்து இவர்களை வெளியேற்றி கூட்டணியை உடைத்ததே சம்பந்தர் தானே.

அப்புறம் இல்லாததொன்றை இவர்கள்களால் உடைக்கலாம்.

தம்பிக்கு இருந்தா போல் கூட்டணியில பாசமாயிருக்கு.

கூட்டணியில் பாசம் அல்ல.

அண்மையில் நாடாளுமன்றத்தில் வைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறிய வார்த்தைகள்  இவை.

"அடுத்த 10 வருடத்திற்குள் TNA யை இல்லாது ஒழிப்பேன்"

இப்போது எமக்குள் ஒற்றுமையே தேவை. ஆனால் நாங்கள் நம்பும் அல்லது எதிர்பாற்கும் அரசியல்வாதிகள் எல்லோரும் தத்தமெக்கென்று ஒரு நிகழ்ச்சி நிரலை வைத்து மிக இழிவான அரசியலைச் செய்கிறார்கள்.

இவர்களுடன் ஒப்பிடுகையில் சிங்கள அரசியல்வாதிகள் எவ்வளவோ மேல். 

அவர்கள் தங்கள் இனத்திற்கு விசுவாசமாக இருக்கிறார்கள்.

18 minutes ago, Elugnajiru said:

கபிதான் இலகுவாக உங்களது குற்றச்சாட்டைக் கடந்துபோக முடியாது அவர்களது எஜமானர்கள் யார் என்பதை உங்களால் நிரூபணத்துடன் கூறமுடியுமா?

மேலே கூறப்பட்ட பதில் உங்களுக்கும் பொருந்தும். 

நாடாளுமன்றத்தில் வைத்து கஜேந்திரகுமார் யாருக்கு  கூறினார் என்பதையும் என்னால் கூற முடியும். 

என்னுடைய இந்தத் தகவல் / குற்றச்சாட்டை நீங்களே விசாரித்து உறுதிப்படுத்த முடியும். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

இப்போது எமக்குள் ஒற்றுமையே தேவை. ஆனால் நாங்கள் நம்பும் அல்லது எதிர்பாற்கும் அரசியல்வாதிகள் எல்லோரும் தத்தமெக்கென்று ஒரு நிகழ்ச்சி நிரலை வைத்து மிக இழிவான அரசியலைச் செய்கிறார்கள்.

இத்தனைக்கும் பிள்ளையார் சுழி போட்டது யாரையா?
மற்றையவர்கள் சொல்லாமல் செய்ததை செய்வதை கஜன் குழு சொல்லி செய்யுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Kapithan said:

ஐயா  கஜேந்திரகுமார் அவர்கள,

நாட்டை கட்டியெளுப்ப உங்களுக்கு assignment கொடுக்கப்படவில்லயே. TNA யை உடைத்து இல்லாதொழிக்கும் assignment அல்லவா உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதனைச் செய்யுங்கள். அப்போதுதான் உங்கள் எசமானர்கள் மகிழ்வடைவார்கள். 

☹️

இதைத்தானே சுமந்திரன் கனகச்சிதமாக செய்துகொண்டிருக்கிறார்! பிறகென்னத்திற்கு வேற ஆக்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Eppothum Thamizhan said:

இதைத்தானே சுமந்திரன் கனகச்சிதமாக செய்துகொண்டிருக்கிறார்! பிறகென்னத்திற்கு வேற ஆக்கள்??

என்னிடமும் அதே கேள்விதான்..🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒண்டில் புல்லா அபிவிருத்தி அரசியலுக்க நுழைஞ்சு எப்படியாவது கிடைக்க கூடியவற்றை கஸ்ரப்பட்ட தமிழ்சனத்துக்கு பெற்றுகுடுத்து ஒருமாரி தமிழனை வள்த்துவிடோனும்..

இல்லை எண்டால் எப்படியாவது வெளிநாடுகளின் காலைப்பிடிச்சாவது ஒரு தீர்வு பெற்றுக்குட்த்திருக்கோனும்..

பன்னெண்டு பதின்மூண்டு வருசமாகுது நாங்கள் நம்பியவர்கள் இல்லாமல் போய்.. அண்டேல இருந்து இண்டு வரைக்கும் இதே பல்லவிதான் தமிழ்தேசிய அரசியல்வாதிகள்..

போறது பாளிமெண்ட் கன்ரில்ல தின்னுறது இப்பிடி ஏதும் அறிக்கைவிடுறது வந்து வடிவாவீட்டிலசமைச்சு தண்ணி அடிச்சு பிரெண்ட்ஸ் ஓட என்யாய் பண்றது.. பிளைட் டிக்கட் ஆரும் ஓசில போட்டு கூட்டத்துக்கு கூப்பிட்டா கனடா அவுஸ்திறேலியா எண்டு போறது.. இடையில ரான்சிற்ல லண்டனுக்கும் போறது… எம்பி பெனிபிற் எடுக்கிறது…

பேசாம தமிழர்களுக்கு சிங்கள பாளிமென்டில பதவி இல்லை எண்டு இலங்கை அரசு அறிவிச்சு விட்டுதெண்டா எங்களபுடிச்ச தொல்லைகள் ஒழிஞ்சுதெண்டு நிம்மதியா இருக்கலாம்..🤦🏻

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.