Jump to content

இராணுவத்தின் ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே - சரத் பொன்சேகா


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவத்தின் ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே - சரத் பொன்சேகா

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண, கரன்னாகொட ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே.

இவர்கள் தவறிழைத்தனர், கண்டிப்பாக  இவர்களை தண்டிக்க வேண்டும் என்பதை சபையில் வலியுறுத்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழக்குகளை மீண்டும் கையில் எடுப்பதுடன்,  கரன்னாகொடவிற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (3) இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சு ,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ,அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு,சமூக பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கான  குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

இலங்கை இராணுவத்திற்கு எதிராக யுத்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து நாம் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. எமது இராணுவத்தில் ஒருவர் இருவர் தவறிழைத்துள்ளனர் என்பதை நாமும் கூறியுள்ளோம்.

அதற்காக நானும் விளைவுகளை அனுபவித்துக்கொண்டுள்ளேன். மேற்கத்தேய நாடுகளுக்கு செல்ல எனக்கும் வீசா வழங்குவதில்லை. இராணுவ ஜெனரல்கள் 58 பேருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய இராணுவ தளபதி, பாதுகாப்பு செயலாளருக்கும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் இருந்த ஒருவர் இருவர் செய்த தவறுக்காக நாமும் சேர்ந்து தண்டனை அனுபவித்துக்கொண்டுள்ளோம். ஜகத் ஜெயசூரிய, கபில எந்தவிதாரண ஆகியோர் உண்மையில் குற்றவாளிகளே.

இவர்கள் தவறிழைத்தனர், கண்டிப்பாக இவர்கள் குற்றவாளிகளே, இவர்களை தண்டிக்க வேண்டும். இவர்களை தண்டித்து ஏனைய இரண்டு இலட்சம் இராணு வீரர்களையும் தூய்மையாக்குங்கள்.

இதனை செய்வதன் மூலமாக வெளிவிவகார அமைச்சரும் நெருக்கடியில் இருந்து தப்பிக்கலாம். ஆகவே அதற்காகவேனும் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். இராணுவம் குற்றமிழைத்தால் அவர்களை தண்டிப்பது தவறில்லை.

அதேபோல் முன்னாள் கடற்படை தளபதி கரன்னாகொட மிகப்பெரிய குற்றமொன்றை செய்துள்ளார். பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி  அவர்களின் பெற்றோரிடம் கப்பம் பெற்று இறுதியாக கொலையும் செய்தார்.

இந்த 11 பேரில் சிங்கள மாணவர் ஒருவரும், முஸ்லிம் மாணவர் ஒருவரும் இருந்தார்கள். இவர்கள் அனைவரும் பாடசாலை மாணவர்கள். குறிப்பாக பெரேரா என்ற சிங்கள மாணவன் இங்கிலாந்து பல்கலைக்கழகத்திற்கு செல்ல இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலைசெய்யப்பட்டார்.

இவர்களை கொலைசெய்து கடலில் வீசியதற்கான சாட்சியங்களும் நிருபிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நபர்களை பாதுகாக்க வேண்டாம். நாம் ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழக்குகளை மீண்டும் கையில் எடுப்போம். கரன்னாகொடவிற்கு எதிராக நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

அதுமட்டுமல்ல நான் பார்த்த மிகத் தகுதியான கடற்படை தளபதியாக சின்னையாவை கூறுவேன். விடுதலைப்புலிகளின் ஒன்பது படகுகளுக்கும் வெடிவைத்து தகர்த்தது அவர்தான்.

அதுமட்டுமல்ல கடற்படையின் பல தவறான செயற்பாடுகளுக்கு அவர் எதிராக செயற்பட்டார். அதற்காகவே அவர் விரைவாக வெளியேற்றப்பட்டார்.

கப்பம் பெற்ற பல்வேறு செயற்பாடுகளுக்கு அவர் தடையாக இருந்த காரணத்தினால் தான் அவர் வீட்டுக்கு துரத்தியடிக்கப்பட்டார். ஆனால் கரன்னாகொட அவ்வாறு அல்ல.

மேலும், கைது செய்யப்பட்டு சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களை விடுவிக்க நாமும் இணக்கம் தெரிவிக்கின்றோம்.

அவ்வாறு விடுவிக்கும் வேளையில் என்னை கொலை செய்ய முயற்சித்த மொரிஸ் என்ற நபரை முதலில் விடுதலை செய்யுங்கள் என்றே நானும் கேட்டுக்கொள்கின்றேன். அரசாங்கத்திற்கு இதனை கோரிக்கையாக முன்வைக்கின்றேன் என்றார். 
 

https://www.virakesari.lk/article/118379

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவை குற்றவாளின்னா.. அவை குற்றவாளிகள் தான்.. அதில் சந்தேகமில்லை.. இவர் அப்ப என்ன செய்து கொண்டிருந்தவர். அவர்களை விட உயர் பதவியில்.. அவர்களுக்கு கட்டளையிடும் தரத்தில் தானே இருந்தவர். அப்போ.. இவரும் அவர்களின் குற்றங்களில் கூட்டுப்பங்காளி தானே. அப்ப இவரையும் அவையோட சேர்த்து தண்டிக்கனும். அதில் கோத்தாவும் கூட வருவார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, nedukkalapoovan said:

அப்ப அவை குற்றவாளின்னா.. அவை குற்றவாளிகள் தான்.. அதில் சந்தேகமில்லை.. இவர் அப்ப என்ன செய்து கொண்டிருந்தவர். அவர்களை விட உயர் பதவியில்.. அவர்களுக்கு கட்டளையிடும் தரத்தில் தானே இருந்தவர். அப்போ.. இவரும் அவர்களின் குற்றங்களில் கூட்டுப்பங்காளி தானே. அப்ப இவரையும் அவையோட சேர்த்து தண்டிக்கனும். அதில் கோத்தாவும் கூட வருவார். 

சிங்களம் இறுதியாக யாரையாவது பலிகொடுத்து தனது தேசிய ஒருமைப்பாடென்ற போர்வையிலான தமிழர்தாயக அக்கிரமிப்பைத் தொடரும். ஆனால் அதற்குமுன் தனது எல்லாவகையான தடுத்தாடும் ஆட்டங்களை ஆடும். அது தோல்வியுறும்போது இப்படி பெரிய அளவிற் பேசப்பட்ட இனங்கானப்பட்ட வழக்குகளையுடையோரை பலிபீடத்திற்கு அனுப்பிவிட்டு ( அங்கு ஒன்றும் சாவொறுப்பு வழங்கப்படப்போவதில்லை. அப்படிக் கொடுத்தாலும் புத்தர் பரிநிர்வாணமடைந்த ஒருநாளில் அவர்கள் மன்னிக்கப்படுவர்) உயர்பதவிகளில் இருந்தோரையும் காப்பாற்றிவிடும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.