Jump to content

காலநிலை மாற்றத்தின் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெளிநாட்டு பறவை இனங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலநிலை மாற்றத்தின் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வெளிநாட்டு பறவை இனங்கள்.

அம்பாறை மாவட்டம் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக வெளிநாட்டு பறவை இனங்கள் சஞ்சரிப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

பொத்துவில் ,அக்கரைப்பற்று ,அட்டாளைச்சேனை, சம்மாந்துறை ,நாவிதன்வெளி, மத்தியமுகாம் ,சவளக்கடை ,நற்பிட்டிமுனை, ஆகிய பிரதேசங்களில் உள்ள நீர் நிலைகளை நாடி புதிய கறுப்பு நிறத்தினை உடைய வெளிநாட்டு பறவை இனங்கள் வருகை தருகின்றன.

குறித்த பறவையினங்களை இரசிப்பதற்காக அப்பகுதிகளுக்கு பலரும் வருவதோடு அங்கு புகைப்படம் எடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்

இம் மாதக் கடைசியில் அம்பாறை மாவட்டத்தில் பல நாட்டுப் பறவைகளும் இங்கு வந்து தங்குகின்றன. இங்கு டிசம்பர் மாதம் வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி ,பெப்ரவரி ,மாதம் கூடு கட்ட துவங்கும். மேற்குறித்த பறவைகள் 2000 மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை. ஆஸ்திரேலியா , சுவிட்சர்லாந்து,ரஷியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ்,நைஜரியா,சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதில் செங்கால் நாரை, பூநாரை, கூழைக்கடா, கடல்காகம், கடல்ஆலா, கூழைக்கடா,பாம்புத்தாரா,சாம்பல்நாரை, வெட்டிவாயன், கரன்டிவாயன்,வெள்ளை அரிவாள் மூக்கன், நாரை இனங்கள் அன்னப்பறவை உள்ளிட்ட கொக்கு இனங்கள் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இப்பகுதிக்கு விதவிதமான பறவைகள், இங்கேயே கூடுகட்டி தங்கி, முட்டையிட்டு, குஞ்சு பொறித்து, குஞ்சுகளுக்கு பறக்க கற்றுக்கொடுத்து, மார்ச் மாத இறுதியில் புதிய குடும்பமாய் சொந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதும் வழமையாகிவிட்டது.

மேலும் இப்பறவைகள் யாவும் இயற்கை சூழலை பாதுகாப்பதிலும் வேளாண்மை செய்கைக்கு விவசாயிகளுக்கு உதவுவனவாகவும் செயற்படுகின்றன.

spacer.png

 

spacer.png

spacer.png

spacer.png

 

 


https://www.meenagam.com/காலநிலை-மாற்றத்தின்-கார/

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி......நன்றி கிருபன்.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

இங்கு டிசம்பர் மாதம் வரும் வெளிநாட்டு பறவைகள் ஜனவரி ,பெப்ரவரி ,மாதம் கூடு கட்ட துவங்கும். மேற்குறித்த பறவைகள் 2000 மைல் தூரம் பறந்து செல்லும் வல்லமை படைத்தவை. ஆஸ்திரேலியா , சுவிட்சர்லாந்து,ரஷியா, ஜெர்மனி, பிலிப்பைன்ஸ்,நைஜரியா,சைபிரியா ஆகிய நாடுகளிலிருந்து பறவைகள் இங்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள பறவைகளுக்கும் விண்டர் பிடிக்காமல் கொலிடே போகுதுகள் இங்கு கொரனோ அது இது என்று இரண்டு வருடமாய் அடைத்து  வைத்திருக்கான்கள் இன்னும் ஒருவருடம் இப்படியே போனால் மண்டை பிழைத்து  அவனவன் கத்தியும் துவக்குடனும் திரிவான்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சுவாரசியமான செய்தி. பறவைகளிடம் நாம் வாழ்க்கை பற்றி சிறிது கற்று கொள்வோமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு வலசை போகும் பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் அம்பாறை மட்டுமன்றி வடக்கில் தொண்டமனாறு, வல்லை வெளி, மண்டைதீவு ஆகிய பகுதிகளுக்கும் வந்து தங்கிச் செல்கின்றன (இதனால் தான் மாணவர்களுக்கான வெளிக்கள ஆய்வு நிலையமொன்று தொண்டமானாற்றில் இருக்கிறது - இந்த வெளிக்கள ஆய்வு நிலையம் அடிச்சு விடும் முன்னோடி ஓ.லெவல் விஞ்ஞானப் பரீட்சைத் தாள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஒரிஜினல் பேப்பரை விடக் கடினமாக இருக்கும். தொண்டமானாறுப் பேப்பரில் பாஸ் மார்க்ஸ் எடுத்தால் ஓ.லெவல் நிச்சயம் தாண்டலாம் என்ற அளவுக்கு கடினம்!😂). 

இந்த பறவைகள் பற்றி சுவாரசியமான பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன. உதாரணமாக, ஆயிரக் கணக்கான மைல்கள் ஓய்வின்றிப் பறக்கும் போது, இவை பயன்படுத்தும் சக்தி இவற்றின் உடலில் இருக்கும் கொழுப்பை எரித்து உருவாகிறது. கொழுப்பு, கிளைகோஜன் என்ற சேமிப்பு மாப்பொருளை விட அதிக சக்தியைத் தருவதால் இந்த ஏற்பாடு. அதே நேரம் கொழுப்பை எரிக்கும் போது உருவாகிற தண்ணீர் மூலக் கூறுகளும் பறவைகளுக்கு உதவும். 

எனவே, இந்த வலசை போகும் பறவைகளின் இறைச்சி மிகவும் எண்ணைத் தன்மையானது. இது எப்படி எனக்குத் தெரியும்? 90 களில் வலசை போன ஒரு கூழைக்கடா, ஏதோ காரணத்தால் திசை மாறி கந்தர்மடத்தில் இருந்த ஐங்கரன் வாத்தியாரின் யுனிவேர்சல் கல்வி நிலயத்தின் தண்ணீர் தடாகத்தின் மீது இறங்கி விட்டது. வெளிப்படையாக எந்த காயங்களும் இருக்கா விட்டாலும் அடுத்த 3 வாரங்கள் வரை பறவை எங்கும் போகாமல் தடாகத்திலேயே தங்கி விட்டது. 3 வாரங்களின் பின்னர் ஐங்கரன் வாத்தியோடு நின்ற சில மாணவர்கள் இறைச்சியாக்கி சமைக்க முயற்சித்த போது தான்  இந்த எண்ணை விடயம்  தெரியவந்தது.   

வடக்கில் வலசை போகும் பறவைகள் பற்றிய தகவல்:   

http://www.mangrovesforthefuture.org/news-and-media/news/sri-lanka/2015/international-migratory-bird-day-inspires-jaffna-youth-in-ecosystem-conservation/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இவ்வாறு வலசை போகும் பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் அம்பாறை மட்டுமன்றி வடக்கில் தொண்டமனாறு, வல்லை வெளி, மண்டைதீவு ஆகிய பகுதிகளுக்கும் வந்து தங்கிச் செல்கின்றன (இதனால் தான் மாணவர்களுக்கான வெளிக்கள ஆய்வு நிலையமொன்று தொண்டமானாற்றில் இருக்கிறது - இந்த வெளிக்கள ஆய்வு நிலையம் அடிச்சு விடும் முன்னோடி ஓ.லெவல் விஞ்ஞானப் பரீட்சைத் தாள் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் ஒரிஜினல் பேப்பரை விடக் கடினமாக இருக்கும். தொண்டமானாறுப் பேப்பரில் பாஸ் மார்க்ஸ் எடுத்தால் ஓ.லெவல் நிச்சயம் தாண்டலாம் என்ற அளவுக்கு கடினம்!😂). 

இந்த பறவைகள் பற்றி சுவாரசியமான பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன. உதாரணமாக, ஆயிரக் கணக்கான மைல்கள் ஓய்வின்றிப் பறக்கும் போது, இவை பயன்படுத்தும் சக்தி இவற்றின் உடலில் இருக்கும் கொழுப்பை எரித்து உருவாகிறது. கொழுப்பு, கிளைகோஜன் என்ற சேமிப்பு மாப்பொருளை விட அதிக சக்தியைத் தருவதால் இந்த ஏற்பாடு. அதே நேரம் கொழுப்பை எரிக்கும் போது உருவாகிற தண்ணீர் மூலக் கூறுகளும் பறவைகளுக்கு உதவும். 

எனவே, இந்த வலசை போகும் பறவைகளின் இறைச்சி மிகவும் எண்ணைத் தன்மையானது. இது எப்படி எனக்குத் தெரியும்? 90 களில் வலசை போன ஒரு கூழைக்கடா, ஏதோ காரணத்தால் திசை மாறி கந்தர்மடத்தில் இருந்த ஐங்கரன் வாத்தியாரின் யுனிவேர்சல் கல்வி நிலயத்தின் தண்ணீர் தடாகத்தின் மீது இறங்கி விட்டது. வெளிப்படையாக எந்த காயங்களும் இருக்கா விட்டாலும் அடுத்த 3 வாரங்கள் வரை பறவை எங்கும் போகாமல் தடாகத்திலேயே தங்கி விட்டது. 3 வாரங்களின் பின்னர் ஐங்கரன் வாத்தியோடு நின்ற சில மாணவர்கள் இறைச்சியாக்கி சமைக்க முயற்சித்த போது தான்  இந்த எண்ணை விடயம்  தெரியவந்தது.   

வடக்கில் வலசை போகும் பறவைகள் பற்றிய தகவல்:   

http://www.mangrovesforthefuture.org/news-and-media/news/sri-lanka/2015/international-migratory-bird-day-inspires-jaffna-youth-in-ecosystem-conservation/

பறவைகளின் உலகம் விசித்திரமானது அதிலும் காகங்கள் இன்னும் புத்தி கூர்மையானவை மூன்றாய் இருந்த எண்ணிக்கையை பத்துக்கு  மேல் கொண்டுவந்துள்ளேன் இந்தவிடயத்தில் விவசாயி விக்குக்கு நன்றி சொல்லணும் .

தொண்டமானறு வெளிக்கள நிலையத்தில் ஒருவாரம் தங்கி இருக்க வேண்டி வந்தது ஒவ்வொரு விடியலும் சொர்க்கம் மறு  ஆண்டு ஆமி ஆக்கிரமித்தது அங்கிருந்த அரிதான பொருட்களை இடைக்காடில் உள்ள நாட்சார் வீடொன்றில் கொண்டுபோய் அடுக்கியது நியாபகம் உள்ளது .ஆனால் காட்டுக்கூட்டம் போல் இடை ஆறுதல் தேடிவந்த பறவையை என் கண்பார்வையில் யாரும் கொல்லவில்லை  கொல்லவும்  விடவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறை மாவட்டத்தில் இருக்கிறம் இதெல்லாம் நமக்கு தெரியாமல் இருக்கிறது

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.