Jump to content

"தமிழ் மக்களில் கொஞ்சம் விசரக்கூட்டம் "


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப விடுதலைப் போர் சுமந்திரனுக்கு எதிரான போராட்டமாக மாறிப் போட்டுது. ஏன் சுமந்திரன் இல்லாமல் அல்லது சுமந்திரனை கணக்கெடுக்காமல் புறக்கணித்து விட்டு போராட்டத்தை முன்னெடுக்க முடியாதா? 👀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, வாலி said:

இப்ப விடுதலைப் போர் சுமந்திரனுக்கு எதிரான போராட்டமாக மாறிப் போட்டுது. ஏன் சுமந்திரன் இல்லாமல் அல்லது சுமந்திரனை கணக்கெடுக்காமல் புறக்கணித்து விட்டு போராட்டத்தை முன்னெடுக்க முடியாதா? 👀

சுமந்திரனைப் புறக்கணித்தால் அல்லது சும்மின் தகுதிக்கு நிகரான அல்லது சும்மை விட அதிக தகுதியுடைய ஒருவரை/பலரை TNA க்குள்ளீர்த்தால்  இந்த எதிர்ப்பிற்கான தேவை குறைந்து போகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

😂மண்டையால போகுது!

முழுவதும் கேட்காமல் இந்த "சொற் சிலம்பம்" பற்றி  2 கேள்விகள்:

1. சாம்ராஜ்ஜியம் (empire), இராச்சியம் (kingdom), தேசம்/நாடு (nation-state) இவையிடையேயான வேறு பாடுகள் என்ன? 

2. வரலாற்றில் இருந்த ஏதாவதொரு சாம்ராஜ்ஜியத்தில் மக்கள் சிறுபான்மை பெரும்பான்மை என வகுக்கப் பட்ட உதாரணங்கள் இருக்கின்றனவா? முக்கியமாக அந்த வகுப்பிற்கான தேவை இருந்ததா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரன் “விசர்க்கூட்டங்கள்” என்று தட்டிக் கழிப்பது அபத்தமானது. ஆனால் அதைவிட அபத்தமானது தமிழர்களாகிய நாம் எங்களை ஒரு தேசிய இனம் என்று கட்டியெழுப்பமுடியாமல் இருப்பது. இந்த இலட்சணத்தில் இன்னும் மூன்று வருடங்களுக்குள் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற மேற்குநாடுகள் எப்படி தமிழரைத் தேடி வருவார்கள் என்பது புரியவில்லை.

ராஜபக்‌ஷக்கள் தமது சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்த 13வது திருத்தத்தில் வந்த மாகாணசபையையே நீக்கி ஒரே நாடு ஒரே சட்டம் என்று சிங்கள மேலாதிக்கத்தை தமிழ், முஸ்லிம் இனங்கள்மீது கொண்டுவருவதுதான் நடக்கவாய்ப்புள்ளது.

 

Link to comment
Share on other sites

அண்மையில் சுமந்திரன் IBC தமிழுக்கு வழங்கிய செவ்வி இங்கே பகிரப்படுகிறது.

இச் செவ்வியின் போது சுமந்திரன் நம்பும் தமிழ் தேசியம், உள்ளக சுயநிர்ணயம் இலங்கை நாட்டில் சட்டரீதியாக பெற்றுக்கொவதற்கான சாத்தியப்பாடும், அது தொடர்ந்தும் மறுக்கப்படுகின்ற பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் இது தொடர்பில் தமிழ்த் தலைமைகளின் முயற்சிகள் மற்றும் அதில் சர்வதேச சமூகத்தின் வகிபாகத்தை பற்றி கலந்துரையாடி இருந்தார்.

மேலும் பிராந்திய மற்றும் உலக வல்லரசு நாடுகள் தமிழர் பிரச்சினையை ஒரு துருப்புசீட்டாக பாவிப்பதை எமக்கு சாதகமாக எவ்வாறு மாற்றிக்கொள்வது பற்றியும் வடகிழக்கில் சீனாவின் ஆதிக்கத்திற்கான எதிர்ப்பிற்கும் இந்தியவின் பாதுகாப்பு கரிசனைகளை ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களையும் விளக்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழர் பிரதேசங்களில் ஹிந்துத்துவ கொள்கைகள் நிலைகொள்வதற்கான சாத்தியப்பாடுகள், 2020 தேர்தலில், சுமந்திரனுக்கான விருப்பு வாக்குகள் அரைவாசியாக சரிவதற்கான காரணங்கள், வடகிழக்கில் இந்தியாவின் ஆக்கிரமிப்பின் விளைவுகள், தமிழ் அரசியலில் அப்புக்காத்து அரசியலின் செல்வாக்கு, மற்றும் ஆயுத போராட்டத்தின் நியாயத்தன்மை பற்றி கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளக சுயநிர்ணய கோரிக்கை மறுக்கப்பட்டால் வெளியக சுயநிர்ணய உரிமை கோருவோம் என்று சுமந்திரன் பாராளுமன்றத்தில் உரையாற்றி இருப்பது உண்மையா??

Link to comment
Share on other sites

1 hour ago, கிருபன் said:

சுமந்திரன் “விசர்க்கூட்டங்கள்” என்று தட்டிக் கழிப்பது அபத்தமானது. ஆனால் அதைவிட அபத்தமானது தமிழர்களாகிய நாம் எங்களை ஒரு தேசிய இனம் என்று கட்டியெழுப்பமுடியாமல் இருப்பது. இந்த இலட்சணத்தில் இன்னும் மூன்று வருடங்களுக்குள் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற மேற்குநாடுகள் எப்படி தமிழரைத் தேடி வருவார்கள் என்பது புரியவில்லை.

தமிழ்நாட்டு தமிழரை தேடிவருவார்கள். அவர்களே பெரும்பான்மை தமிழர், அதோடு அவர்கள் இந்தியாவில் ஒரு பலம்பொருந்திய தேசிய இனம்.
 

Link to comment
Share on other sites

குணாவின் நஞ்சுண்ட காட்டை வாசித்த போது அவர் எமது விடுதலை போராட்டத்தில்  ஏற்பட்ட தவறுகளை சீர்பார்த்து, சுயவிமர்சனம் செய்து முன்செல்வார் என்று பார்த்தால், திரும்பவும், குண்டு சட்டிக்கில் குதிரை ஓடுகின்றார். அன்ரன் பாலசிங்கம் என்று நினைத்து தமிழ்ச்செல்வன் ரேஞ்சுக்கு அரசியல் விமர்சனம் செய்கிறார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

அண்மையில் சுமந்திரன் IBC தமிழுக்கு வழங்கிய செவ்வி இங்கே பகிரப்படுகிறது.

இச் செவ்வியின் போது சுமந்திரன் நம்பும் தமிழ் தேசியம், உள்ளக சுயநிர்ணயம் இலங்கை நாட்டில் சட்டரீதியாக பெற்றுக்கொவதற்கான சாத்தியப்பாடும், அது தொடர்ந்தும் மறுக்கப்படுகின்ற பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளும் இது தொடர்பில் தமிழ்த் தலைமைகளின் முயற்சிகள் மற்றும் அதில் சர்வதேச சமூகத்தின் வகிபாகத்தை பற்றி கலந்துரையாடி இருந்தார்.

மேலும் பிராந்திய மற்றும் உலக வல்லரசு நாடுகள் தமிழர் பிரச்சினையை ஒரு துருப்புசீட்டாக பாவிப்பதை எமக்கு சாதகமாக எவ்வாறு மாற்றிக்கொள்வது பற்றியும் வடகிழக்கில் சீனாவின் ஆதிக்கத்திற்கான எதிர்ப்பிற்கும் இந்தியவின் பாதுகாப்பு கரிசனைகளை ஏற்றுக்கொள்வதற்கான காரணங்களையும் விளக்கியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழர் பிரதேசங்களில் ஹிந்துத்துவ கொள்கைகள் நிலைகொள்வதற்கான சாத்தியப்பாடுகள், 2020 தேர்தலில், சுமந்திரனுக்கான விருப்பு வாக்குகள் அரைவாசியாக சரிவதற்கான காரணங்கள், வடகிழக்கில் இந்தியாவின் ஆக்கிரமிப்பின் விளைவுகள், தமிழ் அரசியலில் அப்புக்காத்து அரசியலின் செல்வாக்கு, மற்றும் ஆயுத போராட்டத்தின் நியாயத்தன்மை பற்றி கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்.

இயக்கங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் காலம் காலமாக உள்ளக சுயநிர்ணய உரிமையத்தானே தமிழ் அரசியல் தலைவர்கள் கேட்டு போராடினார்கள்?
உள்ளக சுயநிர்ணய உரிமை கேட்டு களைத்த பின்னர்தானே தனிநாட்டைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவை அன்றைய தமிழின தலைவர்கள் முடிவெடுத்தார்கள்.

இனி மீண்டும் ஆரம்பத்திலிருந்து என்றால் சுமந்திரனும் தனித்தமிழீழம் என்ற கோட்பாட்டுக்கு  வருவாரா?

ஏனெனில் சிங்கள இனவாத அரசின் செயல்பாடுகள் அப்படி.

தலைவர் பிரபாகரன் என்றுமே இந்தியாவிற்கு குரோதமில்லாத சர்வதேச அரசியல் நிலைப்பாட்டையே விரும்பியிருந்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

இயக்கங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர் காலம் காலமாக உள்ளக சுயநிர்ணய உரிமையத்தானே தமிழ் அரசியல் தலைவர்கள் கேட்டு போராடினார்கள்?
உள்ளக சுயநிர்ணய உரிமை கேட்டு களைத்த பின்னர்தானே தனிநாட்டைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவை அன்றைய தமிழின தலைவர்கள் முடிவெடுத்தார்கள்.

1) இனி மீண்டும் ஆரம்பத்திலிருந்து என்றால் சுமந்திரனும் தனித்தமிழீழம் என்ற கோட்பாட்டுக்கு  வருவாரா?

ஏனெனில் சிங்கள இனவாத அரசின் செயல்பாடுகள் அப்படி.

தலைவர் பிரபாகரன் என்றுமே இந்தியாவிற்கு குரோதமில்லாத சர்வதேச அரசியல் நிலைப்பாட்டையே விரும்பியிருந்தார்.

1) எதிர்காலத்தில் "தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று சுமந்திரன் சொல்லாதவரைக்கும் okeyதான் 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Kapithan said:

1) எதிர்காலத்தில் "தமிழ் மக்களை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்" என்று சுமந்திரன் சொல்லாதவரைக்கும் okeyதான் 😂

இல்லை நாங்கள் எல்லோரும் மக்கள்.🤣

ஐசே உமக்கு சர்வதேச சட்டங்கள் லோக்கள் தெரியுமா? 😎
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தேசிய இன மக்களை அவர்கள் வாழும் நாட்டின் சனத்தொகையினை வைத்து பெரும்பான்மையென்றோ அல்லது சிறுபான்மையென்றோ வகைபிரிப்பது சரியானதாகப் படவில்லை. ஒரு நாட்டில் வாழும் பல தேசிய இனங்களில் அவர்கள் தனித்தன்மையான மொழியும், கலாசாரமும், மதவழிபாட்டு முறையும் கொண்ட மக்கள் கூட்டம் என்று அடையாளப்படுத்தப்படுவதே சரியானது என்பது எனது எண்ணம். 

அதனாலேயே தேசியச் சிறுபான்மையினர் என்பது எந்தவொரு இன, மத, கலாசார தனித்துவம் கொண்ட மக்கள் கூட்டத்தையும் குறிப்பதற்குப் பாவிக்கப்படல் ஆகாது என்று நினைக்கிறேன். தேசியச் சிறுபான்மையினர் எனும்போது அந்த தேசத்தினுள் வாழும் எண்ணிக்கையில் பெரும்பான்மையினருக்குள் இந்தச் சிறுபான்மையினரும் அடக்கப்பட்டு ஈற்றில் உள்வாங்கப்படுவதற்கு வாய்ப்புண்டு. அதுமட்டுமல்லாமல், அந்த நாட்டில் இருப்பது ஒற்றைத்தேசியமே என்று நாளடைவில் வாதிக்கவும் வாய்ப்புண்டு. 

தேசியம் என்பது தேசத்திலிருந்து வருவது. தேசம் என்பது ஒரு இன, மத, சமய தனித்துவத்தைக் கொண்ட மக்கள் பூர்வீக காலம் தொட்டு வாழ்ந்து வரும் தாயகப் பகுதி. 

இலங்கை ஒரு தேசம் அல்ல. ஆனால், இரு தேசங்களைக்கொண்ட நிலத்தால் ஒன்றுபட்ட நாடு. இன்னொரு வகையில் சொல்வதானால், இரு தேசிய இனங்கள் தங்களின் தனித்துவமான பூர்வீக வாழிடங்களை ஒரு நிலப்பரப்பில் கொண்டிருக்கும் பகுதி, அவ்வளவே.

சிறுபான்மைத் தேசிய இனங்கள், சிறுபான்மையினர், இனச்சிறுபான்மையினர் என்று சர்வதேசத்தில் பாவிக்கப்பட்டு வரும் பல சொற்பதங்கள் தொடர்பான பாரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான ஆய்வுகளில் சிறுபான்மையினர் எனும் பதம் பாவிக்கப்படுதல் தவறானது எனும் பொதுவான எண்ணக்கரு உருப்பெற்று வருகிறது. முடிந்தவர்கள் தேடிப்பாருங்கள்.

குணா சொல்வதில் அர்த்தம் இருக்கிறது.

கொசுறு : சிறுபான்மைக் குழுக்கள் அல்லது சிறுபான்மை இனக்குழுக்கள் எனும் சொற்பதம், பெரும்பான்மையினர் அனுபவிக்கும் சலுகைகளை, உரிமைகளை அதேயளவில் அனுபவிக்க முடியாத நிலையில் அல்லற்படும் ஒரு இனக்குழுமம் என்றும் சிலர் அர்த்தப்படுத்துகிறார்கள். அண்மையில் இங்கிலாந்தின் தென்னாசிய விவகாரச் செயலாளர் பாவித்த பதம் கூட இதன் அடிப்படையில் பாவிக்கப்பட்டிருக்கலாம். இதுகூட எனது அனுமானம்தான். அல்லது, அவர் இதுபற்றிய எந்த பிரக்ஞையுமில்லாமல் வெறுமனே சிறுபான்மையினர் ( சுமந்திரனின் மொழியில் சொல்வதானால் எண்ணிக்கையில் குறைந்த மக்கள்) எனும் தொனியில் கூடப் பாவித்திருக்கலாம். 

Ethnic minority, minority ethnic or minoritised ethnic

These terms usually refer to racial and ethnic groups that are in a minority in the population. In the UK, they usually cover all ethnic groups except White British. For example, they include White minority ethnic groups such as Polish or Gypsy, Roma and Irish Traveller.

‘Minority ethnic’ is sometimes preferred over ‘ethnic minority’. Use of minority ethnic was proposed to help counter the use of the term ‘ethnic’ when referring to people who are not White British. Some felt that by not putting ‘ethnic’ first, ‘minority ethnic’ better recognised the fact that everyone has an ethnicity including White British people.

‘Minoritised ethnic’ (or the similar term ‘racially minoritised’) has been recommended more recently as it recognises that individuals have been minoritised through social processes of power and domination rather than just existing in distinct statistical minorities. It also better reflects the fact that ethnic groups that are minorities in the UK are majorities in the global population.

As we discuss further below, you should take care when using umbrella terms such as these. Users should be aware of the negative consequences of grouping all minoritised individuals together in this way, especially when there is significant diversity between them.

Always consider use of these terms carefully and be sure and prepared to clarify which races and/or ethnicities you are actually speaking about.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மை, பெரும்பான்மை எனும் பதங்கள் பாவிக்கப்படும்போதே ஒரு தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்தின் மீது தனது செல்வாக்கினைச் செலுத்துதல் என்பது இலகுவாக ஆகிவிடுகிறது. அல்லது அதற்கான அந்தஸ்த்தினை பெரும்பான்மையினத்திற்கு கொடுத்து விடுகிறது.

அப்படியானால், இலங்கையர்கள் என்று பொதுவாக அழைக்கப்படுதல் சாத்தியமா? இல்லை. ஏனென்றால், இலங்கை என்பது ஒரு நாடேயன்றி, தேசமல்ல. ஆகவே இலங்கையில் வாழும் தமிழர்கள் அல்லது இலங்கையில் வாழும் சிங்களவர்கள் என்கிற பதங்களே சரியானதாக இருக்கும் என்பது எனது எண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

சுமந்திரன் “விசர்க்கூட்டங்கள்” என்று தட்டிக் கழிப்பது அபத்தமானது. ஆனால் அதைவிட அபத்தமானது தமிழர்களாகிய நாம் எங்களை ஒரு தேசிய இனம் என்று கட்டியெழுப்பமுடியாமல் இருப்பது. இந்த இலட்சணத்தில் இன்னும் மூன்று வருடங்களுக்குள் இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற மேற்குநாடுகள் எப்படி தமிழரைத் தேடி வருவார்கள் என்பது புரியவில்லை.

கிருபண்ணை 
யு டோன்ட் ஒரி ...அம்பிகா அண்ட்ரியை இறக்குறோம், மனித உரிமை பற்றி கலர் கலராக பீலா விட்டு இலங்கை அரசாங்கத்தை பேதிபுடுங்க வைத்து  தீர்வை அள்ளுறோம்... ஓகே  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, அக்னியஷ்த்ரா said:

கிருபண்ணை 
யு டோன்ட் ஒரி ...அம்பிகா அண்ட்ரியை இறக்குறோம், மனித உரிமை பற்றி கலர் கலராக பீலா விட்டு இலங்கை அரசாங்கத்தை பேதிபுடுங்க வைத்து  தீர்வை அள்ளுறோம்... ஓகே  

அம்பிகா ஆன்ரியின் தலைமைத்துவத்தையும், வழிகாட்டுதல்களையும் பெற்றுக்கொள்ளும் தகுதி இன்னமும் தமிழ் மக்களிடம் இல்லை.! அம்பிகா ஆன்ரியின் பெறுமதி தெரியும்போது காலம் கடந்திருக்கும் ஏனெனில் அவர் சர்வதேச அளவில் பெரிய ஆளாகிவிடுவார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, கிருபன் said:

அம்பிகா ஆன்ரியின் தலைமைத்துவத்தையும், வழிகாட்டுதல்களையும் பெற்றுக்கொள்ளும் தகுதி இன்னமும் தமிழ் மக்களிடம் இல்லை.! அம்பிகா ஆன்ரியின் பெறுமதி தெரியும்போது காலம் கடந்திருக்கும் ஏனெனில் அவர் சர்வதேச அளவில் பெரிய ஆளாகிவிடுவார்!

அப்போதும் டோன்ட் வொரி ...
கமலா ஹரிசுக்கே தமிழச்சி என்ற  நேம் பிளேட் அடிச்சு ஒட்டி கதிகலங்க வைத்த ஆக்கள் நாம், அம்பிகா அன்ரி அந்தளவுக்கு போயிருவரோ, போனாலும் நோ பிராப்லம் ஏகப்பட்ட சமாச்சாரம் கைவசம் இருக்கு, கைவரிசையை காட்டி  அன்ரியை அப்படியே அபேஸ் பண்ணிவிடலாம்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, வாலி said:

ஏன் சுமந்திரன் இல்லாமல் அல்லது சுமந்திரனை கணக்கெடுக்காமல் புறக்கணித்து விட்டு போராட்டத்தை முன்னெடுக்க முடியாதா?

முடியவே முடியாது 
காரணம் அவர் ஒரு  தரப்பட்ட தலைவர் (proxy)
நீங்கள் அவரை தவிர்த்து எதனை முன்னெடுத்தாலும் அதற்குள் சில அகப்புறக்காரணிகளால் மீண்டும் அவர்  வலுவாக செருகப்பட்டு  அதனை ஹை ஜாக் செய்து திரும்பவும் முன் கொண்டுசெல்பவராக முன்னிலைப்படுத்தப்படுவார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, அக்னியஷ்த்ரா said:

முடியவே முடியாது 
காரணம் அவர் ஒரு  தரப்பட்ட தலைவர் (proxy)
நீங்கள் அவரை தவிர்த்து எதனை முன்னெடுத்தாலும் அதற்குள் சில அகப்புறக்காரணிகளால் மீண்டும் அவர்  வலுவாக செருகப்பட்டு  அதனை ஹை ஜாக் செய்து திரும்பவும் முன் கொண்டுசெல்பவராக முன்னிலைப்படுத்தப்படுவார் 

அப்படிச் செருகப்படும் பலவீனமான நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். 

நன்மையான விடயம். 

எமது பலவீனமான நிலையை ஏற்றுக்கொள்வதுதான் (சுய)  விடுதலைக்கான முதற்படி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரஞ்சித் said:

ஒரு தேசிய இன மக்களை அவர்கள் வாழும் நாட்டின் சனத்தொகையினை வைத்து பெரும்பான்மையென்றோ அல்லது சிறுபான்மையென்றோ வகைபிரிப்பது சரியானதாகப் படவில்லை. ஒரு நாட்டில் வாழும் பல தேசிய இனங்களில் அவர்கள் தனித்தன்மையான மொழியும், கலாசாரமும், மதவழிபாட்டு முறையும் கொண்ட மக்கள் கூட்டம் என்று அடையாளப்படுத்தப்படுவதே சரியானது என்பது எனது எண்ணம். 

அதனாலேயே தேசியச் சிறுபான்மையினர் என்பது எந்தவொரு இன, மத, கலாசார தனித்துவம் கொண்ட மக்கள் கூட்டத்தையும் குறிப்பதற்குப் பாவிக்கப்படல் ஆகாது என்று நினைக்கிறேன். தேசியச் சிறுபான்மையினர் எனும்போது அந்த தேசத்தினுள் வாழும் எண்ணிக்கையில் பெரும்பான்மையினருக்குள் இந்தச் சிறுபான்மையினரும் அடக்கப்பட்டு ஈற்றில் உள்வாங்கப்படுவதற்கு வாய்ப்புண்டு. அதுமட்டுமல்லாமல், அந்த நாட்டில் இருப்பது ஒற்றைத்தேசியமே என்று நாளடைவில் வாதிக்கவும் வாய்ப்புண்டு. 

தேசியம் என்பது தேசத்திலிருந்து வருவது. தேசம் என்பது ஒரு இன, மத, சமய தனித்துவத்தைக் கொண்ட மக்கள் பூர்வீக காலம் தொட்டு வாழ்ந்து வரும் தாயகப் பகுதி. 

இலங்கை ஒரு தேசம் அல்ல. ஆனால், இரு தேசங்களைக்கொண்ட நிலத்தால் ஒன்றுபட்ட நாடு. இன்னொரு வகையில் சொல்வதானால், இரு தேசிய இனங்கள் தங்களின் தனித்துவமான பூர்வீக வாழிடங்களை ஒரு நிலப்பரப்பில் கொண்டிருக்கும் பகுதி, அவ்வளவே.

சிறுபான்மைத் தேசிய இனங்கள், சிறுபான்மையினர், இனச்சிறுபான்மையினர் என்று சர்வதேசத்தில் பாவிக்கப்பட்டு வரும் பல சொற்பதங்கள் தொடர்பான பாரிய ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான ஆய்வுகளில் சிறுபான்மையினர் எனும் பதம் பாவிக்கப்படுதல் தவறானது எனும் பொதுவான எண்ணக்கரு உருப்பெற்று வருகிறது. முடிந்தவர்கள் தேடிப்பாருங்கள்.

குணா சொல்வதில் அர்த்தம் இருக்கிறது.

கொசுறு : சிறுபான்மைக் குழுக்கள் அல்லது சிறுபான்மை இனக்குழுக்கள் எனும் சொற்பதம், பெரும்பான்மையினர் அனுபவிக்கும் சலுகைகளை, உரிமைகளை அதேயளவில் அனுபவிக்க முடியாத நிலையில் அல்லற்படும் ஒரு இனக்குழுமம் என்றும் சிலர் அர்த்தப்படுத்துகிறார்கள். அண்மையில் இங்கிலாந்தின் தென்னாசிய விவகாரச் செயலாளர் பாவித்த பதம் கூட இதன் அடிப்படையில் பாவிக்கப்பட்டிருக்கலாம். இதுகூட எனது அனுமானம்தான். அல்லது, அவர் இதுபற்றிய எந்த பிரக்ஞையுமில்லாமல் வெறுமனே சிறுபான்மையினர் ( சுமந்திரனின் மொழியில் சொல்வதானால் எண்ணிக்கையில் குறைந்த மக்கள்) எனும் தொனியில் கூடப் பாவித்திருக்கலாம். 

Ethnic minority, minority ethnic or minoritised ethnic

These terms usually refer to racial and ethnic groups that are in a minority in the population. In the UK, they usually cover all ethnic groups except White British. For example, they include White minority ethnic groups such as Polish or Gypsy, Roma and Irish Traveller.

‘Minority ethnic’ is sometimes preferred over ‘ethnic minority’. Use of minority ethnic was proposed to help counter the use of the term ‘ethnic’ when referring to people who are not White British. Some felt that by not putting ‘ethnic’ first, ‘minority ethnic’ better recognised the fact that everyone has an ethnicity including White British people.

‘Minoritised ethnic’ (or the similar term ‘racially minoritised’) has been recommended more recently as it recognises that individuals have been minoritised through social processes of power and domination rather than just existing in distinct statistical minorities. It also better reflects the fact that ethnic groups that are minorities in the UK are majorities in the global population.

As we discuss further below, you should take care when using umbrella terms such as these. Users should be aware of the negative consequences of grouping all minoritised individuals together in this way, especially when there is significant diversity between them.

Always consider use of these terms carefully and be sure and prepared to clarify which races and/or ethnicities you are actually speaking about.

ரஞ்சித், நன்றி. உங்கள் வாதங்கள் பெரும்பாலானவை மறுக்க இயலாதவையாக இருக்கின்றன. விரிவான கருத்தை மாலையில் இடுகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, அக்னியஷ்த்ரா said:

கமலா ஹரிசுக்கே தமிழச்சி என்ற  நேம் பிளேட் அடிச்சு ஒட்டி கதிகலங்க வைத்த ஆக்கள் நாம்

🤣

அதை மறக்க தான் முடியுமா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kapithan said:

அப்படிச் செருகப்படும் பலவீனமான நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதை ஏற்றுக்கொள்கிறீர்கள். 

நன்மையான விடயம். 

இந்தியாவில் போனை அணைத்துவிட்டு குப்புறப்படுத்துகிடந்துவிட்டு 
தமிழர்களுக்கு தீர்வு வாங்கித்தரவந்த கூத்தாடி Proxy க்களை அப்போதே அடித்து திரத்தாமல் 
அவர்களோடு சேர்ந்து 11 வருடங்களாக கூத்தாடிய அனைவரும் இந்தப்பலவீனமான நிலைக்கு காரணம் 
அதாவது யானை தன்மீதே மண்ணை வாரியிறைத்தது போல..... ஏற்றுக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன் 
என்று சிந்திய இரத்தச் சூடு அடங்கும் முன் கூத்தாடிகளுடன் சேர்ந்து  கூத்தாடி யுத்தக்குற்றவாளி  பொன்சேகாவுக்கு குத்தோ குத்து என்று குத்தினோமோ அன்றோடு எல்லாமே கம்மாஸ். தேசியமெல்லாம் ஜஸ்டு புஸ்வாணம், ICU இல் மூச்சை இழுக்கும் 13 இற்கு இந்திய ,அமெரிக்க  CPR கொடுத்து கொஞ்சம் எழுப்பி பார்க்கலாம் அம்புட்டுத்தே ,பார்த்து  13 இற்கு மூச்சு வருதாம் என்ற விடயம்  இலங்கை அரசு காதில் விழுந்தாலே போதும்  பியூஸயே புடுங்கிடும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வாழும் நாட்டிலும் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக்கும் கானாக்காரனுக்கும் பொம்பிளைப் பிள்ளை ஒன்று பிறந்திருக்கு.

எதுக்கும் ஒரு சலாம் போட்டு வைப்பம் எதிர்காலத்தில் அது கமலா கரீஸாக வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Elugnajiru said:

நான் வாழும் நாட்டிலும் ஒரு இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக்கும் கானாக்காரனுக்கும் பொம்பிளைப் பிள்ளை ஒன்று பிறந்திருக்கு.

எதுக்கும் ஒரு சலாம் போட்டு வைப்பம் எதிர்காலத்தில் அது கமலா கரீஸாக வரக்கூடிய சந்தர்ப்பம் இருக்கு 

நடந்தது எதுவோ அது நன்றாகவே நடந்தது. நடக்கப்போவது எதுவோ, அதுவும் நன்றாகவே நடக்கும். 🙏

இத நா சொல்லலீங்க. பக்வான் கிஸ்ணர் சொல்லீக்லாப்ல..😂

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.