Jump to content

கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்

  • தாம் போல்
  • பிபிசி
6 டிசம்பர் 2021, 02:38 GMT
தடுப்பூசி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சீன மருத்துவர்கள் முதன்முதலில் மர்மமான சளி, காய்ச்சல் பாதிப்புடன் வந்த நோயாளிகளைப் பார்த்தார்கள். அப்போதிருந்து, கோவிட்-19 இன்னும் நம்மிடையே இருக்கிறது. அதற்கும் மேலாக, மிகவும் அச்சுறுத்தக்கூடிய புதிய திரிபு என்று விவரிக்கப்படுவதும் வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வது இதற்கு ஒரு தீர்வாக இருக்கமுடியுமா?

ஏற்கெனவே, உலகின் பல பகுதிகளில் பொது வாழ்க்கைக்கு கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியமாக உள்ளது.

ஒரு பிரெஞ்சு மருத்துவராகவோ, நியூசிலாந்து ஆசிரியராகவோ அல்லது கனடாவின் அரசு ஊழியராகவோ இருந்தால், பணிக்குச் செல்ல கட்டாயமாகத் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசியை மறுக்கும் மக்களுக்கு இந்தோனீசியா, அரசு பலன்களை மறுக்கலாம். க்ரீஸ் நாடு, 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியைக் கட்டாயமாக்குகிறது.

பிப்ரவரி மாதத்திற்குள் அனைவருக்கும் கட்டாய தடுப்பூசி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த ஆஸ்திரியா தயாராக உள்ளது.

ஆஸ்திரியர்களுக்கு தடுப்பூசி வலுக்கட்டாயமாகப் போடப்படும் என்று இதற்கு அர்த்தமில்லை. மருத்துவ மற்றும் மத விதிவிலக்குகள் இருக்கும். இருப்பினும், தடுப்பூசி போடாத பெரும்பகுதி மக்கள், அதை செலுத்திக் கொள்ளாமல் இருப்பதால் அபராதத்தை எதிர்கொள்கிறார்கள்.

ஜெர்மனியும் இதேபோன்ற நடவடிக்கையைத் திட்டமிடுகிறது. இப்போதைய அச்சம் என்ன, ஆபத்து என்ன என்பதைத் தெரிந்துகொள்ள, நான் சுகாதாரத் துறை மற்றும் இதர வல்லுநர்களிடம் பேசினேன்.

ஆதரவு: தடுப்பூசி உயிர்களைக் காப்பாற்றுகிறது

கோவிட்-19 தடுப்பூசியைக் கட்டாயமாக்குவதற்கு ஆதரவான வாதம் மிகவும் எளிமையானது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம், நோயின் தீவிரத்தைக் குறைக்கலாம். நோயின் தீவிரம் குறைந்தால், நோய்த் தாக்குதலால் ஏற்படும் மரணங்களும் குறைகின்றன. மேலும், மருத்துவமனைகளிலும் நெருக்கடி குறையும்.

வரலாற்று ரீதியாக, நோய்த்தடுப்பு பிரசாரங்கள் பெரியளவு வெற்றியைக் கண்டுள்ளன. பெரியம்மை போன்ற நோய்களின் பரவலைக் கட்டுப்படுத்தியதோடு, மற்ற நோய்களிலும் உயிரிழப்பு விகிதத்தைக் குறைத்துள்ளன.

"தேவைகள், அதிக தடுப்பூசி விகிதங்களைப் பெறுதல் மற்றும் தனிநபர்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி சமூகங்களைப் பாதுகாப்பது ஆகியவற்றுக்கு இடையிலான நேரடி உறவைக் காட்டக்கூடிய நல்ல உதாரணங்கள் எங்களிடம் உள்ளன," என்கிறார் யேல் பல்கலைக்கழகத்தின் மருத்துவ வரலாறு துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜேசன் ஸ்வார்ட்ஸ்.

"தடுப்பூசிகள் முற்றிலுமாக வேலை செய்கின்றன அதைக்காட்ட எங்களிடம் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன." என்கிறார் ஜேசன்.

ஆஸ்திரியா தற்போது முன்மொழிந்துள்ளவற்றை விட மென்மையான கட்டுப்பாடுகள் மூலமாகவே, தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் இலக்கை அடைந்துள்ளது.

தடுப்பூசி

பட மூலாதாரம்,PA MEDIA

பிரான்ஸ் நாட்டின் உணவகங்கள் மற்றும் பிற பொது இடங்களில் செல்வதற்கு தேவையான தடுப்பூசி பாஸ், கட்டாய தடுப்பூசி விதியைத் தவிர்க்க முடியும் என்று அரசு நம்பும் அளவுக்கு செலுத்திக் கொண்டவர்களின் விகிதத்தை உயர்த்துவதாக நம்பப்படுகிறது.

எதிர்ப்பு: தடுப்பூசியின் மீது சந்தேகம்

லண்டனில், ஜூலை மாதம் ஊரடங்கு எதிர்ப்பாளர்கள் தெருக்களில் இறங்கி சில மணிநேரங்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்தனர். அரசு எதைச் செய்தாலும் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்பதே இதன் கருத்து. குறிப்பாக, கோவிட் கட்டுப்பாடுகள் உலகம் முழுவதும் எதிர்ப்புகளை ஈர்த்துள்ளன. அதோடு கட்டாய முகக்கவசம் என்பதைவிட ஒரு படி மேலே கட்டாய தடுப்பூசி விதிமுறை இருக்கிறது.

"தடுப்பூசியைப் பொறுத்தவரை, மக்கள் மிகவும் வினோதமாகச் சிந்திக்கிறார்கள்," என்கிறார் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியிலுள்ள குளோபல் ஹெல்த் நிறுவனத்தின் பொது சுகாதார மருத்துவர் வகீஷ் ஜெயின்.

"தம்முடைய உடலில் செலுத்தப்படும் எதையும், மக்கள் ஒரே மாதிரியாகச் எடுத்து கொள்வது கிடையாது. கல்வியாளர்களும் மற்றவர்களும் கோட்பாட்டளவில் இதை ஒரு கட்டுப்பாடு என்று நினைத்தாலும், மக்கள் இதை உணர்ச்சிகரமாக எதிர்கொள்கிறார்கள்." என்கிறார்.

தடுப்பூசி போட ஒருபோதும் வற்புறுத்தாத சிலர் எப்போதும் இருப்பார்கள். அதேநேரம், தடுப்பூசி எதிர்ப்பாளராக இல்லாமலே கூட, தடுப்பூசியின் மீது சந்தேகம் கொள்ளமுடியும்.

ஆஸ்திரிய ஆய்வு ஒன்றின்படி, நாட்டின் ஒன்பது மில்லியன் மக்கள்தொகையில் 14.5 விழுக்காடு பேர் தடுப்பூசி போடத் தயாராக இல்லாதவர்கள். கூடுதலாக, 9 விழுக்காடு பேர் முழு முற்றான தடுப்பூசி எதிர்ப்பாளர்களாக இருந்தாலும், செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டுகிறார்கள்.

'This is a war': A protester holds up a needle sign in Melbourne, Australia

பட மூலாதாரம்,ANADOLU AGENCY

 
படக்குறிப்பு,

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடந்த பேரணி

கட்டாய தடுப்பூசிகளுக்கு எழும் எதிர்ப்புகளைவிட அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகமாக உள்ளதா என்பதை அரசுகள் எடைபோட வேண்டும். ஆனால், கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் சட்டப் பேராசிரியரான கேத்லீன் பவல் சொல்வது படி, சட்டரீதியாக வழக்கு ஒன்றுள்ளது.

"தான் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை முடிவு செய்ய ஒரு தனி நபருக்கு உரிமை இருப்பது போல ஒரு மோசமான நோயால் பாதிக்கப்படக்கூடாது என்று விரும்பும் உரிமை எதிரில் உள்ளவர்களுக்கும் உண்டு." என்கிறார் கேத்லீன்.

ஆதரவு: மற்ற வழிகளில் முயன்று பார்த்துவிட்டோம்

கோவிட் சில காலமாக நம்மிடையே உள்ளது. தடுப்பூசிகளும்தான்.

ஐரோப்பாவில் குறைந்தபட்சம், பல மாதங்களாக தடுப்பூசி செலுத்த முயன்றும்கூட, பரவலாக இன்னமும் குறிப்பிடத்தக்க அளவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களின் எண்ணிக்கையும் இருக்கிறது. இப்போதைய கடுமையான கட்டுப்பாடுகளின் வேகம், இவ்வளவு கால முயற்சிகளுக்குப் பின்னணியிலுள்ள ஏமாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

ஐரோப்பிய கண்டம் முழுக்கவே மேற்கிலிருந்து கிழக்கு வரை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விகிதத்தில் பெரிய வேறுபாடு உள்ளது.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வாண்டெர் லேயன், கட்டாய தடுப்பூசிகள் பற்றி சிந்திக்கவேண்டிய நேரம் இது என்று கூறினார். இருப்பினும், தனிப்பட்ட அரசுகள் அதுபற்றி முடிவு செய்யும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

"எங்களிடம் உயிர் காக்கும் தடுப்பூசிகள் உள்ளன. ஆனால், அவை எல்லா இடங்களிலும் போதுமான அளவு பயன்படுத்தப்படவில்லை," என்று அவர் கூறினார்.

எதிர்ப்பு: பிற வழிகள் இருக்கின்றன

கட்டாய தடுப்பூசிக்கு ஆதரவாக வலுவான சுகாதார வாதம் இருந்தாலும்கூட, தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இதுமட்டுமே ஒரே வழி இல்லை.

தடுப்பூசி

பட மூலாதாரம்,MORSA IMAGES

"அரசியல்வாதிகள் கட்டாய தடுப்பூசி முடிவையே எடுக்க விரும்புகிறார்கள் என்பது கடந்த காலத்தை பார்த்தால் தெரிகிறது. அது பிரச்னைக்கு விரைவான பதிலைக் கொடுப்பதாலேயே இந்த முடிவை எடுக்கிறார்கள்," என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு தடுப்பூசி குழுவின் சமூக அறிவியல் ஆய்வாளரான சமந்தா வாண்டஸ்லாட்.

"மக்கள் உண்மையில் தடுப்பூசிகளை அணுகுவதை உறுதிசெய்யத் தேவைப்படும் பிற விஷயங்களை அரசு புறக்கணிப்பதை நான் விரும்பவில்லை."

பிப்ரவரி வரை ஆஸ்திரியா தடுப்பூசிகளை கட்டாயமாக்காது, இன்னும் வேறு வழிகளைப் பயன்படுத்துகிறது. "பயப்படுபவர்களுக்கு, நம்பிக்கை இல்லாதவர்களுக்கு, ஆபத்து குறைவாக இருப்பவர்களுக்கு - அவர்களுடைய கேள்விகள் மற்றும் கவலைகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்" என்று பல்கலைக்கழகத்தின் சுகாதார உளவியலாளர் பார்பரா ஜூன். தேசிய ஒளிபரப்பாளர் ஓஆர்எஃபிடம் கூறினார்.

தென்னாப்பிரிக்காவில், 24 விழுக்காடு மக்கள் தடுப்பூசி போட்டுள்ளார்கள். ஐரோப்பிய சராசரியைவிட பாதிக்கும் குறைவானவர்கள். ஆனால், ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட 7 விழுக்காடு சராசரியை விட அதிகம். தடுப்பூசிகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால், அதைப் போட்டுக்கொள்பவர்கள் குறைவாக இருப்பதற்கு தவறான தகவல் பரவுவது காரணமாக இருப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

அரசு சில சூழ்நிலைகளில் தடுப்பூசிகளைக் கட்டாயமாக்குகிறது. ஆனால், ஓமிக்ரான் திரிபு கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து தடுப்பூசி செலுத்தப்படுவது அதிகமாகியுள்ளது. இதை அரசுகள் மட்டுமே செய்வதில்லை.

ஆதரவு: ஊரடங்கு சுழற்சி முடிவுக்கு வரவேண்டும்

கட்டாய தடுப்பூசி என்பது மட்டுமே ஒரே கட்டுப்பாடு அல்ல. பெரும்பாலான அரசுகள் கோவிட் பாஸ் முதல் பயணத் தடை வரை சில வகையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. உயிர்கள் காப்பாற்றப்படுவது மட்டுமின்றி, ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளுக்கு முடிவு வரும்.

"உங்கள் சுதந்திரம் கிடைப்பது மட்டுமின்றி, பொருளாதார சேதங்கள், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் ஏற்படும் பாதிப்புகள் அனைத்திலும் மாற்றத்தைக் கொண்டுவருவது பற்றியது," என்கிறார் ஆக்ஸ்ஃபோர்ட் உய்ஹிரோ மையத்தின் ஆல்பர்ட்டோ கியூபிலினி. கொரோனா நச்சுயிரியால் மிகவும் பாதிக்கப்படக் கூடியவர்களுக்குச் சாதகமான கட்டுப்பாடுகளாஇ இவர் ஆதரிக்கிறார்.

தடுப்பூசி

பட மூலாதாரம்,ANDRIY ONUFRIYENKO/GETTY IMAGAES

"கையில் வேறொரு வழி இருக்கும்போது, மக்கள் மீது ஊரடங்கு உட்பட பெரிய சுமைகளைச் சுமத்த வேண்டியதில்லை."

எதிர்ப்பு: கட்சிகள் அரசியல் வாய்ப்பாகப் பார்க்கின்றன

இந்தத் திட்டத்தின் வெற்றி எதிர்கால பிரசாரங்களில் அவநம்பிக்கையை உருவாக்கமுடியுமா என்பது போன்ற நீண்டகால விளைவுகள் குறித்த கவலைகள் உள்ளன.

"நெருக்கடியின்போது கொண்டுவரப்படும் கட்டாயத் திட்டங்கள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்" என்று தொற்றுநோய் மீட்பு குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆலோசனை வழங்கும் தொற்றுநோயியல் நிபுணர் Dr.டிக்கி புடிமேன் அல்-ஜசீராவிடம் கூறினார்.

"மக்களிடையே சதிக் கோட்பாடுகள், தவறான நம்பிக்கைகள், தவறான புரிதல்கள் இருக்கையில், [இத்தகைய திட்டங்கள்] அவர்களுடைய கருத்துகளைத்தான் வலுப்படுத்தும்."

அரசியல் சூழலைச் சுட்டிக்காட்டும் வாண்டெஸ்லாட், "குறிப்பாக, ஐரோப்பாவில் கட்சிகள் தடுப்பூசி எதிர்ப்பைத் தட்டிக் கொடுப்பதையும் வாக்குகளைப் பெற இது ஒரு வழியாக இருக்குமென்று கருதுவதையும் நாங்கள் கண்டிக்கிறோம்," என்று அவர் கூறுகிறார்.

"பல கட்சிகள், வலதுசாரி என்று சொல்லிக்கொண்டு, அரசியல் பிரசாரத்தில் இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு, கட்டாய தடுப்பூசி நடவடிக்கைகளை நீக்க விரும்புவதாகக் கூறுவதைப் பார்க்கிறோம். அதுதான் அச்சமாக இருக்கிறது. அது நடந்துவிட்டால், இதை ஒரு கொள்கை நடவடிக்கையாகப் பயன்படுத்தும் வாய்ப்பு எங்கள் கையில் இருக்காது." என்கிறார்.

https://www.bbc.com/tamil/science-59540429

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.