Jump to content

யாழ் கடற்கரைகளில் 6 சடலங்கள் - பொலிஸ், கடற்படை மீது அச்சம்!


Recommended Posts

யாழ் கடற்கரைகளில் 6 சடலங்கள் -  பொலிஸ், கடற்படை மீது அச்சம்!

யாழ் கடற்கரைகளில் 6 சடலங்கள் - பொலிஸ், கடற்படை மீது அச்சம்!

 

யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் சடலங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரமேசந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்ட கரையோரங்களில் கடந்த வாரம் ஆறு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன. இது தொடர்பில் எந்த விதமான தகவல்களும் வெளிவரவில்லை. அதனால் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்கள் வெளிவராத நிலையில் இந்த சடலங்கள் கரை ஒதுங்குகின்றன.

கடற்கரைகளில் சடலங்கள் ஒதுங்கி வருகின்றன எனில் கடலில் விபத்துக்கள் நடைபெற்று இருக்க வேண்டும். ஒன்றில் இலங்கை மீனவர்கள், அல்லது இந்திய மீனவர்களினது மீன் பிடி படகுகள் விபத்துக்கு உள்ளாகி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு விபத்துக்கள் நடைபெற்றதாக தகவல் இல்லை.

இதனால் காணாமல் போனவர்களின் உறவுகள் அச்சத்தில் உள்ளனர். ஆனால் அரசாங்கம் எந்த விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை. மக்களுக்கு விபரங்களை விரைந்து கொடுக்க வேண்டும். பொலிஸ் , கடற்படை மீது அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே பொலிசார் மற்றும் கடற்படை ஆகியவை இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை தீவிரப்படுத்தி, அதன் உண்மை தன்மைகளை விபரங்களை விரைவாக வெளிப்படுத்த வேண்டும் என கோரினார்.
 

-யாழ். நிருபர் பிரதீபன்-

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

 

யாழ் கடற்கரைகளில் 6 சடலங்கள் - பொலிஸ், கடற்படை மீது அச்சம்!

யாழ். மாவட்ட கடற்கரைகளில் கரையோதுங்கும் சடலங்கள் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரமேசந்திரன் தெரிவித்தார்.

 

-யாழ். நிருபர் பிரதீபன்-

பிரேமதாச யுகத்தை நினைவூட்டுவதாக உள்ளது. தெற்கில் தினமும் சடலங்கள் எரிவதும் மிதப்பதும் தொடர்கதையானதொருகாலம். தற்போது கோத்தாவின் யுகத்தில் வடக்கில் ....................... அரசியல் தலைமைகள் தமது பங்காளிச் சண்டைகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு மக்களின் விடயங்களைக் கையிலெடுக்கவேண்டும். வெறும் ஊடகச் சந்திப்புகள் பயன்தரா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனவர்கள் இப்போதுதான் காணாமல் போய்கொண்டு இருக்கின்றார்களோ என்று நினைக்கத் தோன்றுகின்றது......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று அம்பாறை மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்ட்க நிலையில் ஒரு சடலம் கடலில் பயணம் செய்த்வர்களா அல்லது நாட்டை விட்டு தப்ப முயன்றவர்களா ஒன்றுமே விளங்காத தீவா இருக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தனிக்காட்டு ராஜா said:

நேற்று அம்பாறை மருதமுனை கடற்கரையில் உருக்குலைந்ட்க நிலையில் ஒரு சடலம் கடலில் பயணம் செய்த்வர்களா அல்லது நாட்டை விட்டு தப்ப முயன்றவர்களா ஒன்றுமே விளங்காத தீவா இருக்கு 

பாருங்கள் தனிக்காட்டுராசா அவர்களே, தமிழர் உயிராவது***ராவது. எமக்கு சீமான் ஆமைக்கறிச்சாப்பிடுவது முதல்  சுமந்திரன் சோலிப்பையைத் தூக்குவது வரை மட்டுமே நாங்கள் கவனிப்போம். 
நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, nochchi said:

பாருங்கள் தனிக்காட்டுராசா அவர்களே, தமிழர் உயிராவது***ராவது. எமக்கு சீமான் ஆமைக்கறிச்சாப்பிடுவது முதல்  சுமந்திரன் சோலிப்பையைத் தூக்குவது வரை மட்டுமே நாங்கள் கவனிப்போம். 
நன்றி. 

எதுவும் சொல்வதற்கில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எதுவும் சொல்வதற்கில்லை

நன்றி,

தமிழினத்தின் இப்படியான ஒதுங்கிப்போதலே இன்றைய அரசியலவத்துக்குக் கரணியமான அடிப்படை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nochchi said:

நன்றி,

தமிழினத்தின் இப்படியான ஒதுங்கிப்போதலே இன்றைய அரசியலவத்துக்குக் கரணியமான அடிப்படை. 

தற்போது ஒதுங்குதலே மிகவும் பொருத்தமாகிறது காலத்துக்கேற்ப

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.