Jump to content

கற்கண்டு -Dr. T. கோபிசங்கர்


Recommended Posts

கற்கண்டு 

அம்மம்மா மறிச்சுக் கேட்டதுக்கு “ இப்பிடியே நேர போய் இடது பக்கம் திரும்பினா வரும், 20 ம் வாட்டு எண்டு கேட்டாக் காட்டுவினம்“ எண்டு ஒரு வெள்ளை உடுப்புக்காரர் சொல்ல , நான் இவரும் டொக்டரோ எண்டு கேட்டன். 

“பறையாம வா அது ஓடலி” எண்ட படி அம்மம்மா இழுத்துக்கொண்டு போனா. ஆஸ்பத்திரியில வெள்ளை உடுப்போட திரியிற பொம்பிளை எண்டால் நேர்ஸ் , ஆம்பிளை எண்டால் டொக்டர் எண்டு தான் நான் நெச்சிருந்தனான். 

முந்தி மூண்டு தலைமுறைக்கு Dr.கங்கம்மா தான் இணுவிலில பிள்ளைப் பெறு பாத்தவ எண்டு சொல்லிறவை. எழுவதுகளில தான் பெரியாசுபத்திரிக்கு பிள்ளைப்பெறுக்கு கூட ஆக்கள் வாறது. ஊரில அப்ப பொலீஸ் ஸ்டேசன் போனாலும் பெரியாசுப்பத்திரிக்குப் போனாலும் ஏதோ கதை முடிஞ்சிது எண்டு மாதிரித்தான் சனம் பயப்பிடிறது. அப்பப்ப நான் சண்டை பிடிச்சால் அம்மா கொண்ணனை பெத்தது , உன்னை வாங்கினது எண்டு பேசேக்க , ஆஸ்பத்தரீல பிள்ளை விக்கறதோ எண்ட சந்தேகம் வந்து போனது . 

“தண்ணியைப் பாத்து நட “ எண்டு சொன்ன அம்மம்மாவை நிமிந்து பாத்தன் ஏனெண்டால் நடக்கிற எல்லா இடமும் தண்ணியாத்தான் இருந்தது. ஒவ்வொரு வாட்டையும் தாண்டி நடக்க ஏதோ மூக்குக்க துளைக்கும் , பாத்துரூம் நாத்தம் கிட்டப்போகாமலே மணக்கும். 

இதை எல்லாம் தாண்டிப் போக, 20 ம் வாட் விறாந்தையில வயித்தையும் நாரியையும் பிடிச்சுக்கொண்டு கொஞ்சப்பேர் நடக்காமல் முக்கி முனகி சுவருகளை பிடிச்சபடி நிண்டிச்சினம். “ நல்லா நடவுங்கோ இல்லாட்டி வெட்டித்தான் எடுக்க வேணும்” எண்டு midwife சொல்லி வெருட்ட, பயத்தில மூக்கால நடக்கிற (முக்கிற) அம்மாக்களையும் தாண்டிப் போய் மாமியைத் தேடினம். 

நடக்கிற மகள்மாருக்கு பின்னால நடந்தும் நடக்காமலும் அலையிற அம்மா மாரையும் விலத்திப் போய்த் தேட 

“பிள்ளை பிறந்தா அந்தப் பக்கம் மாத்தீடுவினம் எண்டு “ ஒரு ஆச்சி சொல்லவும் , மாமா எங்களைக் கண்டிட்டு கையைக் காட்ட நாங்கள் உள்ள போனம். 

உள்ள போனால் ,இளம் மஞ்சள் paint விட்டு விட்டு அடிச்சு மாதிரி பாதிப் paint உரிஞ்ச இரும்புக் கட்டில் , அதின்டை நுனியில net ஆல மூடின தொட்டில் , அதுக்குப் பக்கத்தில ஒரு சின்ன அலுமாரி. உள்ள இருக்கிற எல்லா கட்டிலும் அதில இருக்கிற அம்மா மாரும் ஒரே மாதிரித்தான் Bed Jacket ம் லுங்கியும் போட்டு கொண்டு இருந்திச்சினம் . 

எது எங்கடை அலுமாரி எண்டு கேட்டு , அதில Thermos பிளாஸ்க்கை எடுத்து இதுக்க கோப்பி இருக்கு , இது இடியப்பமும் அரைச்ச மீன் தீயலும் , இது சொதிப் போத்தில் எண்டு அடுக்கி வைச்சா அம்மம்மா. அப்ப ஆஸ்பத்திரீல இருக்கிற எல்லாருக்கும் , Thermos flask இல வேர்க்கொம்புக் கோப்பி, காலமை இரவு இடியப்பம், சோறுக்கு மீன் தீயல் , சொதி . இது தான் standard சாப்பாடு . வருத்தம் பாக்க வாறாக்கள் horlicksம் , வீட்டை போறவை சிலர் விறாத்து கோழிக்குஞ்சும் கொண்டு போறவை.

அவருக்கும் ஒரு கோப்பியைக் குடுங்கோ காலமை முழுக்க வெளீல தான் நிண்டவர் எண்டு சொன்னபடி மாமாவைப் பாத்தா மாமி. நான் அம்மாவைத் தேட , ஊசி போட பிள்ளையக் கொண்டு போக பிள்ளையோட body guard ஆப் போட்டு வந்தா அம்மா. 

போன கிழமை பேப்பரில யன்னலுக்கால பிள்ளையைத்தூக்கி குடுத்து பிள்ளை காணாமப் போனது எண்டு பெரிய கதை ஒண்டு இருந்தபடியால் midwife ஐ நம்பாமல் அம்மாவும் போட்டு வந்தவ. அம்மா “ இந்தா தூக்கப்போறியே மச்சானை “ எண்டு கேக்க விருப்பம் இருந்தாலும் பயத்தில வேணாம் எண்டு சொன்னன். 

பிள்ளை பிறந்தா ஆஸ்பத்திரீல போய் பாக்கிறது தான் முறை எண்டு எல்லாரும் படை எடுத்து வந்திச்சினம். நீயா நானா கோபிநாத் இல்லாமல் பிள்ளை அம்மா மாதிரியா அப்பா மாதிரியா தலைப்பு விவாதம் ஜெயாராஜ் அண்ணையின்டை தலைமை debate மாதிரி முடிவு தெரியாம முடிஞ்சுது. 

பாக்க வந்த ரதி மாமி எத்தினை மணிக்குப் பிறந்தது எண்டு தொடங்கினா. 2.35 எண்டு தான் சொன்னவை எண்டு கதை தொடங்க , வடிவாக் கேள் 2.20 க்கு முதல் அச்சுவினி பிறகு எண்டா பரணி, “ பரணி பார் ஆழும்” எண்டு ரதி மாமி சொல்ல ,நேர்ஸ் சரியா பதிஞ்சருக்க வேண்டும் எண்டு நம்பிக்கையில் பார் ஆழப்போகும் மகனின் நேரம் பாக்க மாமா போனார். 

ந, ம, மு வில பேர் வந்தா நல்லம் , முருகன்டை பேர் எண்டாத் திறம் எண்ட சொல்ல , பேர் பாக்கும் படலம் தொடங்கிச்சுது. முருகனே நல்ல பேர் தானே எண்டு நான் நெக்க , போன வருசம் லண்டனில இருந்து வந்த மாமீன்டை தங்கச்சி சொன்னவவாம் இப்ப “ ஸ் “ இல முடியிறதான் style எண்டு மாமீ முதலே தான் பேர் முடிவெடுத்திட்டன் எண்டதை சொல்லாமல் சொன்னா. 

எல்லாரும் கொண்டந்த Horlicks போத்தில் , Johnson & Johnson பேபி செட்டை எல்லாம் மாமா கூடைக்க அடுக்கி வைச்சார். அப்ப வெள்ளை, நீலம் , மஞ்சள், pink எண்டு கன கலரில வாறது baby set எண்டாலும் பிள்ளை பிறந்தா pink colour set தான். அனேமான ஆம்பிளைப்பிள்ளைகள் கூட pink சட்டை தான் போடிறவை. Baby pink , அது எப்படி பொம்பிளைப்பிள்ளைக்கு மட்டும் சொந்தமானது எண்டு தெரியேல்லை. அம்மம்மா பழைய பேப்பரில சுத்தி அம்மா தந்த ரத்தம் படிஞ்ச பார்சலை கவனமா வைச்சிட்டு , தோய்க்க வேற ஏதும் இருக்கே எண்டு கேட்டு வாங்கிக் கொண்டு வெளிக்கிட்டா. இந்தா கற்கண்டு வீட்டையும் கொண்டே குடு எண்டு மாமா ஒரு சுருளில ஆம்பிளை பிள்ளையை பெத்த பெருமையோட சுத்தித் தந்தார் .

அம்மாமாருக்கு மூத்த பிள்ளை அதிலேயும் ஆம்பிளைப்பிள்ளை எண்டா கொஞ்சம் extra பாசம், கலியாணத்துக்கு பிறகு அது தான் தனக்கு சபை சந்தீல நிக்க promotion தந்த படியால் தான் அப்பிடி எண்டு sigmund Freud சொல்லுவார் எண்டு நெக்கிறன். அதே போல் தன் இளமைக்கும் திறமைக்கு சான்றாக பிறந்த கடைசிப்பிள்ளை அப்பான்டை செல்லமா இருக்கும் . ஆனா இதுக்குள்ள பிறக்கிற ரெண்டு மூண்டு தானாப்பிறந்து தானா வளர்ந்திருக்கும். 

“ வெளீல சனம் கதைக்கிற மாதிரி இல்லை , இங்க நல்ல நேர்ஸ் மார் ஒருத்தரும் பேசேல்லை அவைக்கு போகேக்க ஏதாவது வாங்கிக் குடுக்கோணும் “ எண்டு மாமி சொல்ல , மாமாவும் தலையை ஆட்டினார்.

பிள்ளைப்பெறு பாத்திட்டு வந்தா துடக்கு போய் தோய் எண்டு வீட்டை வரச் சொல்லிச்சினம். துடக்கில்லாத கற்கண்டை எடுத்து வைச்சிட்டு நான் மட்டும் தோஞ்சிட்டு வந்தன் .

Dr. T. கோபிசங்கர்

யாழ்ப்பாணம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அம்மாமாருக்கு மூத்த பிள்ளை அதிலேயும் ஆம்பிளைப்பிள்ளை எண்டா கொஞ்சம் extra பாசம், கலியாணத்துக்கு பிறகு அது தான் தனக்கு சபை சந்தீல நிக்க promotion தந்த படியால் தான் அப்பிடி எண்டு sigmund Freud சொல்லுவார் எண்டு நெக்கிறன். அதே போல் தன் இளமைக்கும் திறமைக்கு சான்றாக பிறந்த கடைசிப்பிள்ளை அப்பான்டை செல்லமா இருக்கும் . ஆனா இதுக்குள்ள பிறக்கிற ரெண்டு மூண்டு தானாப்பிறந்து தானா வளர்ந்திருக்கும். 

நிழியவர்களே இணைப்புக்கு நன்றி.

இந்தப் பந்தியை வாசித்து சிரிசிரியென்று சிரித்தேன். நகையுடன் எழுதினாலும் அங்கும் ஒரு சோகம் இளையோடுவதையும் காணலாம். அதேன் அப்படி முதல் - கடைக்கு இருக்கிற மவுசு இடைக்கு இல்லையென்பதை உணர்த்தியுமுள்ளார் படைப்பாளர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது இளைய மகளை மனைவி பிரசவித்த நேரம் என்னால் முழுநேரமும் மனைவியுடன் கூடவே இருக்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.

 தொப்புள் கொடியை வெட்டியதும் நான் தான்.

 அது ஒரு மிக நீண்ட நேரத்தை எடுத்துக் கொண்ட பிரசவம் . அந்த வலி அனுபவம் சொல்லி விளங்காது அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும் என்று என்னால் விளங்கிக் கொள்ளக்  கூடுமாயிருத்த நேரங்கள் அவை.

 இன்றைக்கும் எனது மனைவியுடன் ஏதும் கருத்து வேறுபாடுகள் வாக்குவாதங்கள் வரும் நேரங்களில் அந்த பிரசவ நேரங்கள் மனதில் ஆட , சரி பிழைக்கு அப்பால் விட்டுக் கொடுத்து விடுவது வழமை.

இல்லாவிட்டாலும் வேறுதெரிவுகள் ஏதும் இருக்கின்றதா என்பது வேறு கதை....😜

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.