Jump to content

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் விபத்து : 7 பேர் உயிரிழப்பு ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் விபத்து : 7 பேர் உயிரிழப்பு ?

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Image

குறித்த விபத்து இந்தியாவின் தமிழ்நாடு குன்னூர் நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தி இராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான கெலிக்கொப்டரே இவ்வாறு இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து இரு ஹெலிகொப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த கெலிகொப்டரில் ஒன்று குன்னூர் அருகே விபத்தில் சிக்கியது.

Image

விபத்தில் சிக்கிய இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் சென்றதாகக் கூறப்படுகிறது. அவருக்கு என்ன நடந்தது என்பது பற்றி உறுதியாகத் தெரியவில்லை.

உடனடியாக உயிரிழப்புகள் பற்றி எதுவும் உறுதிசெய்யப்படாத போதிலும் 5 பேர் உயிரிழந்திருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Image

கெலிகொப்டர் விழுந்த இடத்தில் மீட்பு பணியில் இந்திய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

நீலகிரியில் நிகழ்ந்த இராணுவ கெலிக்கொப்டர் விபத்தில் 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், 3 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

Image

விபத்தில் சிக்கிய இராணுவ கெலிக்கொப்டரில் 14 பேர் வரை பயணம் செய்ததாகவும், அதில் பயணம் செய்த 4 இராணுவ உயரதிகாரிகளின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

இறுதி நிலைவரப்படி,

முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவருடன் இராணுவ அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பயணித்த எம் ஐ-வகை இராணுவ கெலிக்கொப்டர் தமிழகத்தில் கோவை அருகே விபத்துக்குள்ளானதாகவும், விபத்து நடந்த இடத்தில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

https://www.virakesari.lk/article/118650

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிபின் ராவத்தும் அவருடைய மனைவியும் போய் சேர்ந்துவிட்டதாக பிந்திக்கிடைத்த தகவலொன்று தெரிவிக்கிறது. இதை வாசிக்கும் போது IPKF நினைவுக்கு வந்து போகிறது, கொஞ்சநாளாகவே கர்மாவின் ஆட்டம் தாங்க முடியவில்லை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, அக்னியஷ்த்ரா said:

பிபின் ராவத்தும் அவருடைய மனைவியும் போய் சேர்ந்துவிட்டதாக பிந்திக்கிடைத்த தகவலொன்று தெரிவிக்கிறது. இதை வாசிக்கும் போது IPKF நினைவுக்கு வந்து போகிறது, கொஞ்சநாளாகவே கர்மாவின் ஆட்டம் தாங்க முடியவில்லை  

அவலச்சாவுகள் கவலைக்குரியனதான். ஆனால் உத்தரவிடுவோர் தப்பித்துவிட நிறைவேற்றுவோர் பலியாவதே நடைபெறுகிறது. மோடி+அமிர்சாவின் கூட்டுக்கர்மா(அவர்களது பாசாவில்) அவர்களது தளபதியை பலிவாங்கிவிட்டதுபோலும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, அக்னியஷ்த்ரா said:

பிபின் ராவத்தும் அவருடைய மனைவியும் போய் சேர்ந்துவிட்டதாக பிந்திக்கிடைத்த தகவலொன்று தெரிவிக்கிறது. இதை வாசிக்கும் போது IPKF நினைவுக்கு வந்து போகிறது, கொஞ்சநாளாகவே கர்மாவின் ஆட்டம் தாங்க முடியவில்லை  

கர்மா.... சும்மா இல்லை....

சோனியாம்மாவையும்...... மகன்காரரையும்..... ஓரமா ஒக்காத்தி வைச்சிருக்கு.....

இந்திராகாந்தி ஸ்ரைலில மகளை இறக்குவம் எண்டால்...... வேலைகாகுதில்லை.... மகன் அமேதியி்ல் இரானியால் தோற்கடிக்கப்படுவோம் என்று முதலே தெரிந்து கேரளாவிலும் நிண்டு வெல்ல வேண்டியிருந்தது.

முதலே ஒரு பாவம் நிரம்பி வழியும் குடும்பம்...... தகப்பன் பெரோஸ் காந்தி (கானை.... காந்தி ஆக்கினார்களாமே), சஞ்ஜய் காந்தி, இந்திராகாந்தி  அவல மரணம்.....

இந்திரா காந்திக்கு பொற்கோவில், ராஜிவ் காந்திக்கு ஈழம்...

அதே ஈழப் புதைகுழியில்..... சோனியா..... பிள்ளைகள்....

கர்மா நீளும்...

அங்கால ராஜபக்சேக்கள் அலங்கோலம்.....

சிலிண்டர் வியாபாரம்..... இஸ்லாமியர் கையில் என்று சொல்ல முடியாமல் போறதுதான் பிரச்சணை....

ஆட்டம் அருமை.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கர்மா.... சும்மா இல்லை....

சோனியாம்மாவையும்...... மகன்காரரையும்..... ஓரமா ஒக்காத்தி வைச்சிருக்கு.....

இந்திராகாந்தி ஸ்ரைலில மகளை இறக்குவம் எண்டால்...... வேலைகாகுதில்லை.... மகன் அமேதியி்ல் இரானியால் தோற்கடிக்கப்படுவோம் என்று முதலே தெரிந்து கேரளாவிலும் நிண்டு வெல்ல வேண்டியிருந்தது.

முதலே ஒரு பாவம் நிரம்பி வழியும் குடும்பம்...... தகப்பன் பெரோஸ் காந்தி (கானை.... காந்தி ஆக்கினார்களாமே), சஞ்ஜய் காந்தி, இந்திராகாந்தி  அவல மரணம்.....

இந்திரா காந்திக்கு பொற்கோவில், ராஜிவ் காந்திக்கு ஈழம்...

அதே ஈழப் புதைகுழியில்..... சோனியா..... பிள்ளைகள்....

கர்மா நீளும்...

அங்கால ராஜபக்சேக்கள் அலங்கோலம்.....

சிலிண்டர் வியாபாரம்..... இஸ்லாமியர் கையில் என்று சொல்ல முடியாமல் போறதுதான் பிரச்சணை....

ஆட்டம் அருமை.....

தோழர் ஹெலி ரஷ்ய தயாரிப்பாம் .. மோசமான கால நிலையிலும் துல்லியமாக பயணிக்க கூடியதாம் ..👍

டிஸ்கி

அண்மையில் புடின் வந்து முக்கிய சரத்துக்களில் கையொப்பம் இட்டுள்ளமை குறிப்பிட்ட தக்கது..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விபத்தைப் பார்க்கின்றபோது, இலங்கையில் புலிகளுக்கெதிரான போரில் இந்தியாவின் மறைகரம் இருந்ததையும், அதனாலேயே இலங்கையினால் போரில் வெற்றியீட்ட முடிந்ததாகவும் இந்தியன் டிபென்ஸ் வீக்லி எனும் ராணுவத்துறை சம்பந்தமான தகவல்களை வெளியிட்டு வரும் இணையத்தளப் பத்திரிக்கையொன்றில் கட்டுரைகளை வரையும் நிதின் கோக்ளே, இந்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி கட்டுரை ஒன்றினை 2012 இல் வெளியிட்டிருந்தார். அக்கட்டுரையின் ஒரு பகுதியினை இங்கு தமிழில் இணைக்கிறேன்.

"இலங்கையில் புலிகளுக்கெதிரான போரில் கனரக ஆயுதங்களை இந்தியா வெளிப்படையாக தர மறுத்தாலும்கூட அப்பயங்கரவாத இயக்கத்தை அழிக்கும் போரில் இந்தியா திரைமறைவில் அதிகளவான ராணுவ உதவிகளைச் செய்திருப்பது அண்மையில் வெளிவந்துள்ள புத்தகம் ஒன்றில் தெளிவாகக் கூறப்பட்டிருக்கிறது".

"ஆரம்பத்தில் புலிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றின்மூலமான தீர்வுக்கே இந்தியா ஆதரவினை நல்கி வந்தாலும் கூட, மகிந்த ராஜபக்ஷ அதிகாரத்திற்கு வந்தபின்னர் அவர் தொடர்ச்சியாகக் கூறிவந்த "புலிகள் பேச்சுவார்த்தையினை தம்மைப் பலப்படுத்தவே பாவிக்கின்றனர், தம்மைப் பலப்படுத்திக்கொண்டபின்னர் மீண்டும் போரிற்குள் இறங்கிவிடுவர்" என்னும் கூற்றினை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிய இந்தியா, அதன் பின்னர் மகிந்தவின் போருக்கான தனது ஆதரவினை வழங்க முடிவெடுத்தது என்று நிதின் கூறுகிறார்".

தந்திரோபாய வியூகங்கள் மற்றும் பாதுகாப்புத்துறை ஆசிரியராக என் டி டி வி சேவையில் பணியாற்றிய நிதின் சுமார் 33 மாதங்களாக இலங்கையில் நடைபெற்ற போரினை பிந்தொடர்ந்து வந்திருக்கிறார். 

இந்திய விமானப்படையினரால் இலங்கை ராணுவத்திற்கு வழங்கப்பட்ட குறைந்தது 8 எம் ஐ  - 17 உலங்குவானூர்திகள் மற்றும் 2002 இற்குப் பின்னர் இந்திய கடற்படையினரால் சுகன்யா ரக ரோந்துக் கப்பல்கள் ஆகியன ராணுவத்தினரின் வெற்றியில் பெரும்பங்காற்றின என்று நிதின் குறிப்பிடுகிறார். குறிப்பாக இந்திய விமானப்படியினரால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 8 எம் ஐ  - 17 உலங்கு வானூர்திகள் இலங்கை ராணுவத்தின் விசேட படைப்பிரிவின் 8 பேர் அடங்கிய ஆள ஊடுருவும் படையணிகளை புலிகளின் பகுதிகளுக்குள் இறக்கிவிடவும், அவர்களின் தாக்குதல்கள் வெற்றிகரமாக முடிவடைந்ததன் பின்னர் பாதுகாப்பாக அக்குழுக்களை அங்கிருந்து வெளியே அழைத்துவரவும்  உதவியதாக இந்திய விமானப்படியினரை மேற்கோள் காட்டி நிதின் கூறுகிறார். 

"தமிழ்நாட்டிலிருந்து எழக்கூட்டிய எதிர்ப்பினைச் சமாளிக்க இலங்கைக்கு தாம் வழங்கிய கனரக ராணுவத் தளபாடங்கள் குறித்து மூச்சுவிட இந்தியா விரும்பவில்லை. அதனால் தற்காப்பு ஆயுதங்கள் என்று அழைக்கப்பட்ட தாழப்பறக்கும் விமானங்களைக் கண்டறியும் இந்திரா ராடர்களை மட்டுமே தாம் வழங்கியதாக இந்தியா அன்று சொல்லவேண்டியிருந்தது" என்று நிதின் கூறுகிறார். 

இலங்கைப் போர்பற்றிய செய்திகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த என் டி டி வி, நிதின் மூலமாக இலங்கை ராணுவ அதிகாரிகளுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இந்த ராணுவ அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியாவினால் வழங்கப்பட்ட எம் ஐ 17 உலங்குவானூர்திகளுக்காக தாம் பெரும் நன்றிக்கடன் பட்டிருப்பதாகக் கூறிய அதிகாரிகள், ஆழ ஊடுருவும் படையணியினருக்கு தாம் போர்க்களத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேற தமக்கு இந்த உலங்கு வானூர்திகள் உற்றதுணையாக இருக்கும் என்கிற நம்பிக்கையே மீண்டும் மீண்டும் புலிகளின் பகுதிகளுக்குள் சென்று தாக்குதல்களை நடத்தும் உத்வேகத்தினைத் தந்ததாக தெரிகிறது. ஆகவே, புலிகளின் தளபதிகளின், முக்கியஸ்த்தர்களின் சுதந்திரமான போக்குவரத்தினை முடக்கி, பல தளபதிகளைக் கொன்று, ஈற்றில் அவர்களின் இயக்கத்தை முடக்கிய ராணுவத்தினரின் இந்த உத்தியின் வெற்றியில் இந்திய உலங்குவானூர்திகளே பெரும் பங்காற்றியிருந்தன என்று இலங்கை அதிகாரிகள் தன்னிடம் கூறியதாக நிதின் மேலும் கூறுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிபின் ராவத்: இந்தியாவின் முப்படை தலைமை தளபதி மரணம் - இந்திய விமானப்படை

நீலகிரி விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய நிகழ்வில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளார் என்று இந்திய விமானப்படை அலுவல்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் இன்று குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

க்ரூப் கேப்டன் வருண் சிங் எனும் விமானப்படை அதிகாரி இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு படைகளின் ஊழியர்களுக்கான கல்லூரியில் நடக்க இருந்த ஒரு நிகழ்வுக்காக பிபின் ராவத் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது.

 

பிபின் ராவத் மற்றும் பிறரின் மரணத்துக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

யார் இந்த பிபின் ராவத்?

இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.

ஜெனரல் பிபின் ராவத், சிம்லாவில் உள்ள செயிண்ட் எட்வர்ட் பள்ளியில் படித்தார். பின்னர் கடக்வாஸ்லாவில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் படித்தார். அவர் 1978-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி அகாடமியில் உள்ள பதினோராவது கூர்கா ரைஃபிள்ஸ் பிரிவின் ஐந்தாவது படையணியில் சேர்ந்தார். அவருடைய தந்தை இருந்த அதே பிரிவில் அவர் தன் ராணுவப் பயணத்தைத் தொடங்கினார்.

டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி நிலையத்தில் இந்திய ராணுவ இயக்குநரகத்தின் தலைமை அதிகாரி உட்பட பயிற்சி அளிக்கும் பொறுப்பை அவர் வகித்தார். மத்திய பிராந்தியத்தில் தளவாடங்கள் பிரிவு அலுவலராக அவர் பணியாற்றினார். ராணுவ செயலர் பிரிவில், துணை ராணுவ செயலாளர் மற்றும் கர்னல் அந்தஸ்தில் ராணுவ செயலாளராக பிபின் ராவத் பணியாற்றினார்.

வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவை உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு கல்லூரியிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சி பெற்றார். அமெரிக்காவின் ஃபோர்ட்லீவன்வொர்த்தில் உள்ள ராணுவ தளபதிகளுக்கான பயிற்சி வகுப்புகளிலும் பிபின் ராவத் பங்கெடுத்துள்ளார்.

ஜெனரல் பிபின் ராவத், தேசிய பாதுகாப்பு மற்றும் தலைமைப் பண்பு குறித்து பல்வேறு கட்டுரைகளை எழுதியுள்ளார். அது பல பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ளது. சென்னை பல்கலைகழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் அவருக்கு எம்.ஃபில் பட்டம் வழங்கப்பட்டது. மேலாண்மை மற்றும் கணிணி அறிவியலில் பட்டயப்படிப்பை முடித்துள்ளார்.

அதி உயரத்தில் நிகழும் போர்முறைகளில் அதிக அனுபவம் கொண்டவர். யூரி, ஜம்மு & காஷ்மீர் ஆகிய பகுதிகளில் மேஜராகப் பணியாற்றியுள்ளார். ப்ரிகேடியராக பதவி உயர்வு பெற்றபிறகு, சர்வதேச படைப்பிரிவுக்குத் தலைமையேற்று காங்கோ குடியரசில் நடைபெற்ற ஆபரேஷன்களை (MONUSCO) நடத்தினார். அதற்காக இரண்டு முறை ஃபோர்ஸ் கமாண்டர் கமெண்டேஷன் விருது பெற்றார்.

அந்த ஆபரேஷனுக்காக காங்கோவிற்கு அனுப்பப்பட்ட இரண்டு வாரங்களிலேயே, அவருடைய படை கிழக்கிலிருந்து கடுமையான தாக்குதலை எதிர்கொண்டது. வடக்கு கிவு, கோமா ஆகிய பகுதிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின.

அதில், தன்னுடைய ராணுவ தந்திரத்தின் மூலம் காங்கோ படைகளுக்கு உதவினார். அதோடு, உள்ளூர் மக்களோடு ஒருங்கிணைந்து செயல்பட்டதன் மூலம் அவர்களுடைய பாதுகாப்பையும் உறுதி செய்ததில் இவருடைய பங்கு குறிப்பிடத்தக்கது. நான்கு மாதங்களுக்கு நீண்ட இந்த ஆபரேஷனில், ராவத் மற்றும் அவருடைய படையின் முழு ஆற்றலும் வெளிப்பட்டது. அவருடைய தலைமைப்பண்பு, துணிச்சல், அனுபவம் ஆகியவை வெற்றிக்கும் அடிகோலியது.

ஜெனரல் பிபின் ராவத்

பட மூலாதாரம்,@ADGPI

31 டிசம்பர், 2016 அன்று ராணுவ தலைமைத் தளபதியாகப் பதவியேற்றார். இதன்மூலம், கூர்கா படையிலிருந்து ராணுவ தலைமைத் தளபதியாகப் பதவியேற்ற முதல்அதிகாரி என்ற பெருமையையும் பெற்றார். அதோடு, 2017-ம் ஆண்டிலிருந்து நேபாள ராணுவத்தின் கௌரவத் தளபதியாகவும் இருந்து வருகிறார்.

1987-ம் ஆண்டு பிபின் ராவத்தின் படை, சும்டொரோங் ச்சூ பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தை நேருக்கு நேராக எதிர்கொண்டது.

2015-ம் ஆண்டு ஜூன் மாதம், மணிப்பூரில் மேற்கு தென்கிழக்கு ஆசியாவின் ஐக்கிய விடுதலை முன்னணியின் (United National Liberation Front of Western South East Asia) படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 18 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள். அதற்கான இந்திய ராணுவத்தின் எதிர்வினையில், பிபின் ராவத் தலைமையில், 21-வது படைப்பிரிவின் பாராசூட் படை ராணுவ ஆபரேஷனை மேற்கொண்டது.

அவருடைய 40 ஆண்டுகளுக்கும் மேலான ராணுவப் பணியில், பரம் விஷிஸ்ட் சேவா, உத்தம் யுத் சேவா, அதி விஷிஸ்ட் சேவா, யுத் சேவா, சேனா, விஷிஸ்ட் சேவா, சிறப்புச் சேவை விருது, ஆபரேஷன் பராக்ரம், சைன்ய சேவா உட்படப் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார்.

1978-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று அவருடைய தந்தை பணியாற்றிய படையிலேயே இரண்டாவது லெப்டினென்ட்டாகப் பதவியேற்றவர், லெப்டினென்ட் (1980), கேப்டன் (1984), மேஜர் (1989), லெப்டினென்ட் காலனெல் (1998), காலனெல் (2003), ப்ரிகேடியர் (2007), மேஜர் ஜெனரல் (2010), லெப்டினென்ட் ஜெனரல் (2014), தலைமைத் தளபதி (2017), என்று பல்வேறு படிநிலைகளில் உயர்ந்து, 2019-ம் ஆண்டு முப்படைகளுக்குமான தளபதியாகப் பதிவி ஏற்றார் பிபின் ராவத்.

பிபின் ராவத்: இந்தியாவின் முப்படை தலைமை தளபதி மரணம் - இந்திய விமானப்படை - BBC News தமிழ்

பிபின் ராவத் பயணித்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் அருகே விபத்து - 13 பேர் பலி

நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி, அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 11.00 - 11.30 மணியளவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் இதுவரை 13 பேர் இறந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

க்ரூப் கேப்டன் வருண் சிங் எனும் விமானப்படை அதிகாரி இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பிபின் ராவத்

இந்த ஹெலிகாப்டர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்துக்கு சென்றபோது குன்னூர் காட்டேரி பார்க் அருகே விழுந்து நொறுங்கியுள்ளது.

பிபின் ராவத் பயணித்த IAF Mi-17V5 ஹெலிகாப்டர் விமானம் விபத்துக்குள்ளானதை இந்திய விமானப் படையும் உறுதிசெய்துள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. தமது அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

விமானம் விழுந்து நொறுங்கிய இடம் வெலிங்டனில் இருந்து சுமார் 3.85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

நீலகிரியில் பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிக்காப்டர் விபத்துக்குள்ளானது

.

பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்துக்கு இந்திய விமானப் படையின் தலைமைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர். சவுத்தரி விரைகிறார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும் இன்று மாலை அங்கு செல்லவுள்ளார்.

பிபின் ராவத் பயணித்த இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் அருகே விபத்து - 13 பேர் பலி - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்மை அழிக்க எம் ஐ - 17 ரக உலங்கு வானூர்திகளை வழங்கியது இந்தியா. இன்று அதே உலங்கு வானூர்தியில் தனது தளபதியை இழந்திருக்கிறது. தமிழர்கள் நிச்சயமாக மகிழ்ந்து கொண்டாட வேண்டிய தருணம் இது. எம்மை அழிக்கத் துணைபோன தி மு க வினர் ஆட்சியில் இருக்கும்போதே இந்த விபத்து நடந்ததில் இரட்டிப்புச் சந்தோசம் !!!

இந்திய இலங்கை கொலையாளிகளால் கொல்லப்பட்ட எமது மக்களினதும், மாவீரர்களினது ஆத்மாக்கள் சாந்தியடையட்டும் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்.ஐ.17வி-5 ரக ஹெலிகாப்டர்கள் இதுவரை சந்தித்த விபத்துகள்

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் சென்ற Mi-17v5 ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்துள்ளது . இதற்கு முன் எம்.ஐ.17வி-5 ரக ஹெலிகாப்டர்கள் விபத்துக்கு உள்ளான நிகழ்வுகள் என்னென்ன?

எம் ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர்கள் உலகம் முழுக்க பல நாட்டு ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது உலகின் நவீன ராணுவ போக்குவரத்து ஹெலிகாப்டர்களில் ஒன்றாக கருதப்படுகிறது என்றாலும், எம் ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர் கடந்த காலங்களில் பல்வேறு விபத்துகளில் சிக்கி ராணுவ அதிகாரிகள், பொதுமக்கள், காவல்துறை என பல தரப்பினர் பலியாகி உள்ளனர்.

2017, ஆகஸ்ட் 23 உத்தராகண்ட் மாநிலத்தில் பத்ரிநாத்தில் ஒரு ஹெலிபேட் தளத்திலிருந்து புறப்பட்ட இந்திய விமானப்படையின் எம் ஐ-17 வி5 ஹெலிகாப்டர் அடுத்த சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. ஏ என் ஐ தகவல்கள் படி ஹெலிகாப்டரில் பயணித்த யாரும் உயிரிழக்கவில்லை.

2017, அக்டோபர் 6 அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின், சீனாவுக்கு அருகில் உள்ள தவாங் பகுதியில் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த எம் ஐ-17 வி5 ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானப் படையைச் சேர்ந்த ஐந்து பேரும், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த இருவரும் உயிரிழந்தனர்.

2019, பிப்ரவரி 27 காஷ்மீரில் ஸ்ரீநகர் விமானப்படைத் தளத்திலிருந்து காலை 10 மணிக்கு புறப்பட்ட எம் ஐ 17 வி5 ரக ஹெலிகாப்டர், அடுத்த சில நிமிடங்களில் தரையில் விழுந்து நொறுங்கியது. வழக்கமான ரோந்துப் பணிக்குப் புறப்பட்ட விமானத்தில் இருந்த ஆறு விமானப்படை அதிகாரிகள் மற்றும் ஒரு சிவிலியன் இந்த விபத்தில் பலியாயினர்.

 

2013 ஜூன் 25 உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் காலத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த எம் ஐ 17 வி5 ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர்.

இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் எம் ஐ 17 வி 5 ரக ஹெலிகாப்டர் விபத்துகள் நிகழ்ந்துள்ளன.

2014 ஜூலை 11 மாசிடோனியா காவல்துறை எம் ஐ 17 வி5 ரக ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வந்தது. ஸ்ட்ரோமிகா நகரத்தில் இரவுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்த ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் நான்கு விமானிகள் பலியாயினர்.

வி 5 ரக ஹெலிகாப்டர்கள் மட்டுமே இத்தனை விபத்துகளை எதிர்கொண்டுள்ளது, உலகம் முழுக்க பல்வேறு எம் ஐ 17 ரக ஹெலிகாப்டர்கள் பல்வேறு விபத்துகள் பதிவாகியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பிபின் ராவத்: எம்.ஐ.17வி-5 ரக ஹெலிகாப்டர்கள் இதுவரை சந்தித்த விபத்துகள் - BBC News தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் ஹெலி ரஷ்ய தயாரிப்பாம் .. மோசமான கால நிலையிலும் துல்லியமாக பயணிக்க கூடியதாம் ..👍

டிஸ்கி

அண்மையில் புடின் வந்து முக்கிய சரத்துக்களில் கையொப்பம் இட்டுள்ளமை குறிப்பிட்ட தக்கது..👌

புடின் வருகை, S400 கொள்வனவு, மேலும் இரஸ்யாவுடன் பல்வேறு ஒப்பந்தங்கள்....

இந்த மரணங்கள் இந்தியாவுக்கு சொல்லப்பட்ட செய்தியாகக் கொள்ள முடியுமா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் ஹெலி ரஷ்ய தயாரிப்பாம் .. மோசமான கால நிலையிலும் துல்லியமாக பயணிக்க கூடியதாம் ..👍

டிஸ்கி

அண்மையில் புடின் வந்து முக்கிய சரத்துக்களில் கையொப்பம் இட்டுள்ளமை குறிப்பிட்ட தக்கது..👌

எனக்கென்னவோ தோழர்... சிலோன் பக்கத்தில இருந்து சீனாக்காரன் ஏதோ.... விளையாட்டைக் காட்டியிருக்கிறான் போலை கிடக்குது....

முந்தி நாகலாந்தில டிரை பண்ணி.... இப்ப இங்க இருந்து நடத்தின மாதிரி தெரியுது....

முக்கியமான சம்பவம் என்பதால.... ஸ்ராலின் ஸ்ப்பாட்டுக்கு போறார்...... 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

எங்கட நாட்டுச் சண்டையிலேயே கிட்டத்தட்ட 10 எம்.ஐ.-17 வீழ்ந்தது/வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Link to comment
Share on other sites

3 hours ago, Nathamuni said:

கர்மா.... சும்மா இல்லை....

சோனியாம்மாவையும்...... மகன்காரரையும்..... ஓரமா ஒக்காத்தி வைச்சிருக்கு.....

இந்திராகாந்தி ஸ்ரைலில மகளை இறக்குவம் எண்டால்...... வேலைகாகுதில்லை.... மகன் அமேதியி்ல் இரானியால் தோற்கடிக்கப்படுவோம் என்று முதலே தெரிந்து கேரளாவிலும் நிண்டு வெல்ல வேண்டியிருந்தது.

முதலே ஒரு பாவம் நிரம்பி வழியும் குடும்பம்...... தகப்பன் பெரோஸ் காந்தி (கானை.... காந்தி ஆக்கினார்களாமே), சஞ்ஜய் காந்தி, இந்திராகாந்தி  அவல மரணம்.....

இந்திரா காந்திக்கு பொற்கோவில், ராஜிவ் காந்திக்கு ஈழம்...

அதே ஈழப் புதைகுழியில்..... சோனியா..... பிள்ளைகள்....

கர்மா நீளும்...

அங்கால ராஜபக்சேக்கள் அலங்கோலம்.....

சிலிண்டர் வியாபாரம்..... இஸ்லாமியர் கையில் என்று சொல்ல முடியாமல் போறதுதான் பிரச்சணை....

ஆட்டம் அருமை.....

நாத முனி, இது எல்லாம் கர்மா என்றால் ஈழப்போரில் இறந்தவர்களும் முள்ளிவாய்காலில் பலியானவர்களுக்கும் அவர்களது கர்மாதான் காரணம் என்று கூறுவீர்கள் போலிருக்கிறது.  

கர்மாவும் இல்லை ஒரு மண்ணும்இல்லை.  இது Just accidents. இது யாருக்கும் நடக்கலாம். நாளை எனக்கும் நடக்கலாம், உங்களுக்கும் நடக்கலாம். இது இயல்பானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Nathamuni said:

எனக்கென்னவோ தோழர்... சிலோன் பக்கத்தில இருந்து சீனாக்காரன் ஏதோ.... விளையாட்டைக் காட்டியிருக்கிறான் போலை கிடக்குது....

முந்தி நாகலாந்தில டிரை பண்ணி.... இப்ப இங்க இருந்து நடத்தின மாதிரி தெரியுது....

முக்கியமான சம்பவம் என்பதால.... ஸ்ராலின் ஸ்ப்பாட்டுக்கு போறார்...... 😎

👍..

IMG-20211208-201201.jpg

சூனா பாணாவின் முழுமையான பேட்டி ..

https://tamil.oneindia.com/news/delhi/subramanian-swamy-reacts-on-cds-bipin-rawat-iaf-mi-17v5-helicopter-crash-in-tamil-nadu-441689.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, அக்னியஷ்த்ரா said:

பிபின் ராவத்தும் அவருடைய மனைவியும் போய் சேர்ந்துவிட்டதாக பிந்திக்கிடைத்த தகவலொன்று தெரிவிக்கிறது. இதை வாசிக்கும் போது IPKF நினைவுக்கு வந்து போகிறது, கொஞ்சநாளாகவே கர்மாவின் ஆட்டம் தாங்க முடியவில்லை  

தக்கன பிழைக்கும்.

 

????????????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கர்மாவும் கடவுளும் ஏன் இவ்வளவு காலமெடுத்துக் கொள்கிறார்கள்?😂

முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப் பட்டுக் கொண்டிருந்த போது இது போல ஒரு திருப்பு முனை விபத்து நடந்திருந்தாலாவது கடவுள்/கர்மா காப்பாற்றினார் எனலாம்! இப்படி லேட்டாக வரும் கர்மாக் கடவுளருக்கும் தேர்தல் நேரங்களில் மட்டும் மக்களைப் பார்க்க வரும் அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம்? இதை வைத்துக் கொண்டு கர்மாக் கடவுளின் முகவர்கள் கல்லாவை நிரப்புவர்- அவ்வளவு தான் விளைவு!

மேலே ருல்பென் சுட்டிக் காடியது போல சும்மா விபத்தையெல்லாம் பார்த்துக் குதூகலிக்காமல் முதிர்ச்சியுடன் எங்கள் வேலையைப் பார்ப்போம்! 

Link to comment
Share on other sites

59 minutes ago, நன்னிச் சோழன் said:

எங்கட நாட்டுச் சண்டையிலேயே கிட்டத்தட்ட 10 எம்.ஐ.-17 வீழ்ந்தது/வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

44 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

👍..

IMG-20211208-201201.jpg

சூனா பாணாவின் முழுமையான பேட்டி ..

https://tamil.oneindia.com/news/delhi/subramanian-swamy-reacts-on-cds-bipin-rawat-iaf-mi-17v5-helicopter-crash-in-tamil-nadu-441689.html

நன்னி,

என்ன, உங்கடை ஆக்கள் இப்ப சீனனோடையோ? கே.பி. காலத்து கொனெக்சன் வேலை செய்யுது போல….

 

Link to comment
Share on other sites

1 hour ago, நன்னிச் சோழன் said:

எங்கட நாட்டுச் சண்டையிலேயே கிட்டத்தட்ட 10 எம்.ஐ.-17 வீழ்ந்தது/வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

எங்கள் நாட்டு சண்டையில் ஒரு தலைமுறை மக்களின் உயிர், உடமை, கல்வி, காதல்,  அன்புக்குரிய பல ஆயிரம் உறவுகள் எந்த பலனும் இன்றி  வீழ்ததப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும். மேற்கண்ட செய்தியை வாசிக்கும்போது இந்திய அமைதிப்படையின் மூஞ்சூறு வானில் நின்று மக்கள் குடியிருப்பு மீது, பொது மக்கள் வாழ்விடங்களில் வான் தாக்குதல் செய்யும் காட்சிகளையும் மறக்க முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சும்மாவே யாழ்கள சின்னராசுகளை பிடிக்க முடியாது.

இப்ப இது வேறையா?

சீனா, ரஸ்யா, அமெரிக்கா, ஏலியன் எண்டு தேள், சிலந்தி, கரப்பொத்தான், நட்டுவாக்காலி வடிவ வியூகங்களை அலசி, ஆராய்ந்து, அல்லு சில்லு படுத்த போறாங்ய்களே சாமீ🤣.

4 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

விபத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும். மேற்கண்ட செய்தியை வாசிக்கும்போது இந்திய அமைதிப்படையின் மூஞ்சூறு வானில் நின்று மக்கள் குடியிருப்பு மீது, பொது மக்கள் வாழ்விடங்களில் வான் தாக்குதல் செய்யும் காட்சிகளையும் மறக்க முடியவில்லை.

மூஞ்சூறா, முதலையா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, goshan_che said:

மூஞ்சூறா, முதலையா?

முதலை(MI-24?), நானறிந்த வரை 

1 hour ago, கற்பகதரு said:

 

நன்னி,

என்ன, உங்கடை ஆக்கள் இப்ப சீனனோடையோ? கே.பி. காலத்து கொனெக்சன் வேலை செய்யுது போல….

 

ஓமோம், 

 

 

45 minutes ago, tulpen said:

எங்கள் நாட்டு சண்டையில் ஒரு தலைமுறை மக்களின் உயிர், உடமை, கல்வி, காதல்,  அன்புக்குரிய பல ஆயிரம் உறவுகள் எந்த பலனும் இன்றி  வீழ்ததப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ஓமோம், வீழ்த்தப்பட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

நாத முனி, இது எல்லாம் கர்மா என்றால் ஈழப்போரில் இறந்தவர்களும் முள்ளிவாய்காலில் பலியானவர்களுக்கும் அவர்களது கர்மாதான் காரணம் என்று கூறுவீர்கள் போலிருக்கிறது.  

கர்மாவும் இல்லை ஒரு மண்ணும்இல்லை.  இது Just accidents. இது யாருக்கும் நடக்கலாம். நாளை எனக்கும் நடக்கலாம், உங்களுக்கும் நடக்கலாம். இது இயல்பானது. 

நீங்கள் என்ன காரணம் சொன்னாலும்..... அதே முள்ளிவாய்காலில் நானோ.... நீங்களோ இருக்காமல் போனதன் காரணம் கர்மா.....

போராட்டத்தை தேர்த்தெடுத்த, தலைவருக்கு, வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்கும், பிள்ளைகளுக்கும்..... அப்படி ஒரு முடிவு.... கர்மா.....

இந்திரா காந்திக்கும்....... இரண்டு மகன்மாருக்கும் நடந்த அகால முடிவும் கர்மா தானே.

இராணியம்மாவின் பெரியப்பா, ராசாவாகிய பின்.... இரண்டு தரம் விவாகரத்து பெற்ற வேலைக்கார பெண்ணை விரும்பி..... முடி துறந்ததால்....தம்பி அரசராகி.....தம்பி மகள் அரசியாகியதும் கர்மா.....

ஆக..... கர்மா வேறு..... just an accident வேறு.

பின்னது.... நடக்க... கர்மா.... காரணமாக இருக்கும்....

நாம... எமுதிப் பதியிற கருமங்களை எல்லாம் வாசித்து.... பெருமூச்சுடன் கத்தியை போட வேண்டிய இடத்திலை ஓங்கிப் போடுற...... நிழலி..... செய்யும்.... உதவிகள் கர்மாவா....just an accident ஆ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

👍..

IMG-20211208-201201.jpg

சூனா பாணாவின் முழுமையான பேட்டி ..

https://tamil.oneindia.com/news/delhi/subramanian-swamy-reacts-on-cds-bipin-rawat-iaf-mi-17v5-helicopter-crash-in-tamil-nadu-441689.html

அட பாவியளே...... நான் பகிடிக்கு தானே போட்டேன்....

உண்மையா அதுதான் கதையா?🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நன்றி - யூரூப்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.