Jump to content

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த கெலிக்கொப்டர் விபத்து : 7 பேர் உயிரிழப்பு ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

 

என்னப்பா இது புதினமாய் கிடக்கு....🤔

நாளைக்கு கிழக்கிலை உதிக்கிற சூரியன் மேற்கிலை உதிச்சாலும் உதிக்கும். 😁

அப்ப நீங்களும் நிலமையை உன்னிப்பாய் கவனிக்கிறீர்கள்.😁

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சுவைப்பிரியன் said:

அப்ப நீங்களும் நிலமையை உன்னிப்பாய் கவனிக்கிறீர்கள்.😁

பின்ன 😂

Link to comment
Share on other sites

On 10/12/2021 at 15:02, குமாரசாமி said:

என்னதான் குத்தி முறிஞ்சாலும் சகல மதங்களின் ஒருமித்த சிந்தனை அடுத்த பிறவி ஒன்று உண்டு.நீங்கள் இங்கே செய்த பாவ புண்ணியங்கள் அனைத்தும் அங்கே கணக்கிலெடுத்து பரிசீலிக்கப்படும்.😂

நான் ஒரு இடத்திலை சாத்திரம் கேட்ட போது அடுத்த பிறவியிலை ஜேர்மன் சீமாட்டி ஒருத்தரின் வீட்டில் நாய்குட்டியாய் இருப்பேனாம். இதை விட என்ன வேணும்?🤣

Mit dem Hund auf dem Sofa oder gar im Bett – davon raten Ärzte und Tierärzte ab. Die Gefahr der Ansteckung mir Parasiten ist zu groß

ஐயோ, உந்த ஆசை இன்னமும் போகேலையா? நாய் வேஷம் போட்டாவது அனுபவிக்கிறன் எண்டு நிக்கிறியள்.😍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/12/2021 at 21:53, tulpen said:

அவர்கள் அப்படி சொல்லா விட்டாலும் கஷ்ரப்பட்டு சொல்ல வைப்பீங்க போல இருக்கு. 😂

13வது நிமிடத்தில் சொல்வதை கேளுங்கள்.....அவரே சொன்னதை நான் எழுதினேன்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீன ஊடகங்கள்: 'பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கு இந்தியாவின் மேம்போக்கான ராணுவ அணுகுமுறையே காரணம்'

  • பத்மஜா வெங்கட்ராமன்
  • .
30 நிமிடங்களுக்கு முன்னர்
China on Indian army

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து சீன ஊடகங்களில் செய்திகளும் கருத்துகளும் வெளியாகின. அதில், இந்திய ராணுவத்திடம் ஒழுக்கமும், போருக்கான தயார்நிலையும் இல்லை என்பதை இச்சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது என்று சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த டிசம்பர் 9ம் தேதி, குளோபல் டைம்ஸ் என்ற அந்நாட்டின் சர்வதேச செய்திப் பத்திரிகையின் ஆங்கில பதிப்பில் ஒரு செய்தி வெளியாகியது. அதில், இந்த விபத்து இந்திய நாட்டின் ராணுவம் நவீனமாயமாக்கலுக்கு விழுந்த பலத்த அடி; இது நீண்ட காலம் சுணக்கத்தை ஏற்படுத்தும்", என்று சீன ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்தியாவின் முக்கிய பாதுகாப்புத்துறை விமர்சகர் பிரம்மா செல்லானி, ராவத்தின் மரணம் குறித்தும், கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 2ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தைவான் ராணுவத்தின் தலைமைத் தளபதி சீன் யி-மிங் (Shen Yi-ming) குறித்தும் ட்வீட் செய்திருந்தார். இதனை குளோபல் டைம்ஸ் பத்திரிகையின் விமர்சகர் விமர்சித்தார்.

கடந்த டிசம்பர் 8ம் தேதியன்று தமிழகத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில், பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பாதுகாப்புப் படை வீரர்கள் 11 பேர் உயிரிழந்தனர்.

China's take on Rawat Death

பட மூலாதாரம்,TWITTER (GLOBAL TIMES)

'மேம்போக்கான' ராணுவ அணுகுமுறை கூறும் சீனா

இந்த விபத்திற்கு சாத்தியமான காரணங்களாக, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஹெலிகாப்டர் என்பதை விட மனிதர்களின் செயல்களே காரணம் என்று இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகள் மூலம் தெரியவருகிறது என்று குளோபல் டைம்ஸ் பத்திரிகையிடம் சீன ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எம்.ஐ-17 ஹெலிகாப்டரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பே எம்.ஐ-17வி5 என்று பெய்ஜிங்கைச் சேர்ந்த ராணுவ நிபுணர் வை டாங்சு (Wei Dongxu) அப்பத்திரிகையில் தெரிவித்துள்ளார். இந்த ஹெலிகாப்டர் மிகவும் சக்திவாய்ந்த இன்ஜினும், சமீபத்திய மின்னணு சாதனங்களும் கொண்டது. இதனால், இது மேலும் நம்பத்தக்கதாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

ஒழுங்கற்ற ராணுவ அணுகுமுறைக்கு இந்தியா அறியப்பட்டது என்று பெயர் வெளியிட விரும்பாத ராணுவ நிபுணர் தெரிவித்துள்ளார். நிலையான நடைமுறை செயல்பாடுகளையும், ஒழுங்குமுறைகளையும் இந்தியப் படையினர் பெரும்பாலும் பின்பற்றமாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். வானிலை சரியாகும் வரை பயணத்தை ஒத்தி வைத்திருந்தாலோ அல்லது விமானி "மேலும் திறம்பட" விமானத்தை ஓட்டி இருந்தாலோ இந்த விபத்தை தவிர்த்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.

"இந்தியா-சீனா எல்லை பகுதிகளில் முகாமிட்டு இருக்கும் இந்திய படைகள் உட்பட ஒட்டுமொத்த ராணுவ அணுகுமுறையில் இப்பிரச்னை மிகவும் பொதுவானது. அவர்கள் ஆர்வத்துடன் செயல்பாடுவார்கள். ஆனால், உண்மையில் போர் நடந்தால், சீன ராணுவத்தை எதிர்கொண்டு வெற்றிப்பெற அவர்களுக்கு எந்த வாய்ப்பும் இல்லை", என்று அப்பத்திரிகையில் அந்த நிபுணர் மேலும் கூறுகிறார்.

கடந்த டிசம்பர் 9ம் தேதியன்று, இந்தியச் செய்தி நிறுவனமான, 'தி பிரிண்ட்' வலைதளத்தில் வெளியான கட்டுரையை குறிப்பிட்டு குளோபல் டைம்ஸின் சீனப் பதிப்பு ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், இந்திய விமானப்படையினருக்கு அவர்களின் பணிகளுக்கு முன்னதாக சரியான ஊட்டச்சத்து அளிக்கப்படுவது இல்லை; இதனால், அவர்களின் ரத்த குளுகோஸ் அளவு குறைந்து, அது அவர்கள் விமானம் ஒட்டும் திறனை பாதிக்கிறது; இது குறிப்பிட்ட காலத்தில் நடந்த விபத்துகளின் விசாரணையின்போது குறிப்பிடப்பட்டுள்ளது என்று அப்பத்திரிகை கூறுகிறது.

தி பிரிண்ட் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட முந்தைய இரண்டு ஹெலிகாப்டர் விபத்துகளை குறித்தும் தி குளோபல் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டுள்ளது. ஒன்று1963ம் ஆண்டில் நடந்தது; மற்றொன்று 1977ம் ஆண்டில் நடந்தது. இதனை குறிப்பிட்டு, ஆரம்ப காலகட்டத்தில் நடந்த கடுமையான விபத்துகள் மூலம் இந்திய ராணுவம் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்று அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

விமர்சிக்கப்பட்ட இந்திய விமர்சகரின் ட்வீட்

இந்தியப் பாதுகாப்புத்துறை விமர்சகர் பிரம்மா செல்லானி, டிசம்பர் 8ம் தேதி செய்த ட்வீட்டையும் சீன ஊடகங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன. ராவத்தின் மரணத்தையும், கடந்த 2020ம் ஆண்டு ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தைவான் நாட்டின் ராணுவ தலைமைத் தளபதி ஷைன், அவர்களின் 7 வீரர்கள் உயிரிழப்பை குறித்தும் அவர் "அச்சமூட்டும் வகையில் ஒப்பிட்டிருந்தது" விமர்சிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஹெலிகாப்டர் விபத்தும் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான பாதுகாப்பின் ஒரு முக்கிய அங்கத்தை அகற்றியது", என்று செல்லானி கூறியிருந்தார்.

கடந்த டிசம்பர் 9ம் தேதியன்று, குளோபல் டைம்ஸ் ஆங்கிலத்தில் ஒரு கருத்தை வெளியிட்டது: "செல்லானியின் புனைவு கருத்தியல் மூலம் இந்தியப் படைகளின் ரத்தக்கரை அவரின் கைகளில் உள்ளது", என்று கூறப்பட்டுள்ளது. மேலும், "தனது புனைவு கோட்பாட்டை காலம் தாழ்த்தாமல் அவர் கதை கட்டினார்" என்று அப்பத்திரிகை குற்றம் சாட்டியது.

"இந்தியாவின் சொந்த ராணுவ ஹெலிகாப்டரே தனது பாதுகாப்புத் தலைவரைப் பாதுகாக்கத் தவறியது என்பதை செல்லானியும் மற்ற இந்தியர் பற்றாளர்களும் நினைவுக்கூர வேண்டும். இதுபோன்ற விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. ஆனால், அது இந்தியாவில் நடந்துள்ளது." என்று அக்கட்டுரை கூறுகிறது.  "இந்தியாவின் மிகப் பெரிய எதிரி சீனா அல்ல, அதன் பின்தங்கிய நிலையே" என்பதையும் இந்த விபத்து காட்டுகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் தடைசெய்யப்பட்டுள்ள ட்விட்டர் குறுஞ்செய்தியில். செல்லானியின் ட்வீட்டின் திரைப்பிடிப்பை (ஸ்கிரீன்ஷாட்) குளோபல் டைம்ஸ் டிசம்பர் 8ஆம் தேதி பகிர்ந்துள்ளது. "இப்பார்வை அமெரிக்காவுக்கு இந்த விபத்தில் பங்குண்டு என்று சந்தேகிப்பதாக உள்ளது. ஏனென்றால், அமெரிக்கா கடுமையாக எதிர்க்கும் ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இந்தியாவுக்கு வழங்கப்படுவதுடன் இந்தியாவும் ரஷ்யாவும் முன்நோக்கி செல்கிறது".

இந்த பத்திரிகையின் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள விமர்சகர் செல்லானி, "தனது ட்வீட் தவறாகப் பயன்படுத்தபட்டது" என்று குற்றம் சாட்டினார்.

அங்கு, பைடெள கெளஜி (Paitou Guoji) என்பது தேசிய பாதுகாப்பு பத்திரிகை நடத்தும் புதிய ஊடகத்தளம். இந்த வலைதளமும் செல்லானியின் ட்வீட்டை விமர்சித்துள்ளது. ராவத்தின் மரணம் விபத்து அல்ல, ஆனால் "குறிப்பிட்ட நாடுகளின் ரகசிய சூழ்ச்சி" என்று அவர் கருத்து தெரிவித்திருப்பதாக விமர்சித்துள்ளது.

 "ராவத்தின் விமான விபத்து ஒரு சதியா என்பது தற்போது தெரியவில்லை. ஆனால் சீனா மீது பழி சுமத்துவது தற்போது சரியில்லை. ராவத்துக்கு அமெரிக்கா ஏதாவது செய்திருக்க வாய்ப்பு உள்ளது," என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு இடையேயான உச்சி மாநாட்டில், பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் இந்தியாவும் ரஷ்யாவும் 28 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்த விபத்து அச்சம்பவத்தையடுத்து நடந்துள்ளது என்று அக்கட்டுரை கூறுகிறது.

"பிரதமர் நரேந்திர மோதிக்கு அமெரிக்கா விடுக்கும் எச்சரிக்கையாகக்கூட ராவத்தின் விமான விபத்து இருக்கலாம். ஏனென்றால், இந்தியாவும் ரஷ்யாவும் நெருங்கி வருவதை அமெரிக்கா விரும்பவில்லை. ரஷ்யாவிடமிருந்து ராணுவ ஆயுதங்களை தொடர்ந்து இந்தியா வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை", என்று அந்த கட்டுரை கூறியுள்ளது.

Indian media allege 'shameful propaganda' from China

பட மூலாதாரம்,REPUBLIC TV ONLINE

'வெட்கத்தக்க பிரச்சாரம்' - சீனா விமர்சிக்கும் இந்திய ஊடகங்கள்

இந்த விவகாரம் தொடர்பாக, எதிர்பார்த்த வகையில், இந்திய ஊடகங்கள் சீன ஊடகங்களை தாக்கி பேசியுள்ளன. ஹெலிகாப்டர் விபத்தில் தலைமைத் தளபதி ராவத்தும் மற்ற வீரர்களும் உயிரிழந்த துக்கத்தில் இந்தியா உள்ள நிலையில், அந்நாடு மிகவும் கீழ்தரமாக நடத்துக்கொண்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை சீன ஊடகங்கள் கையாண்டயுள்ளதை, "வெட்கத்தக்க பிரச்சாரம்" என்று முன்னணி ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமாக, "இந்தியா டூடே" கூறியுள்ளது. இதில், இந்த விபத்து இந்திய ராணுவத்தின் தவறு என்று அழைத்த சீனா கீழ்த்தரமாக நடந்துக்கொண்டுள்ளது என்று கூறியுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலையாட்டி பொம்மையாக செயல்படும் 'குளோபல் டைம்ஸ்' என்றும் விமர்சித்துள்ளது. அறமும் மதிப்பும் சீனாவிடம் இல்லை என்று அந்த தொலைக்காட்சி நிறுவனம் கூறியுள்ளது.

அதே போல், ஆங்கில செய்தி தொலைக்காட்சியான 'ரிப்பளிக் டிவி'யின் வலைதளத்தில், தலைமைத் தளபதி ராவத்தின் மரணத்திக்கு பின், "வெட்கத்தக்க பிரச்சாரத்தை" சித்தரிக்க தனது சார்புக்குரலை கோழை சீனா பயன்படுத்தியுள்ளது என்று விமர்சித்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-59663494

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தி அவர்களின் தற்கொலை முடிவிற்கு அவரது தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரமே காரணம் என்ற ஒரு தகவல் வெளி வந்திருக்கின்றது. இந்த விவகாரம் வெளியில் வரவே கூடாது என்று நினைத்திருந்திக்கின்றார் போல....😌   https://minnambalam.com/political-news/mdmk-ganesh-murthy-last-days-secret-report-to-the-chief-minister/  
    • 'அதிர்ஷ்ட லாபச் சீட்டு' என்ற தலைப்பில் இந்த வாரம் இங்கே களத்தில் ஒரு சுய ஆக்கம் எழுதியிருந்தேன். அமெரிக்காவில் இருக்கும் லொட்டோக்களைப் பற்றியே எழுதியிருந்தாலும், உலகம் முழுவதற்கும் இது பொருந்தும் என்று நினைக்கின்றேன். அதில் இருந்து ஒரு பகுதி: 'இங்கு தினமும் மாலை நேரங்களில் இந்த சீட்டுகளில் விற்கும் கடைகளின் வாசல்களில் அன்றாடம் தொழில் முடித்து வருவோர்கள் பலர் சீட்டுகளை வாங்கி சுரண்டிக் கொண்டிருப்பார்கள். முடிவில் அவர்களின் முகங்களில் ஒரு வேதனை தெரியும். அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனையால் வரும் வருமானத்தில் இருந்து அரசாங்கம் பல நற்பணிகளை செய்கின்றது என்போர் இந்த வேதனையை பார்க்கவேண்டும்.'................😌  
    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.