Jump to content

சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள நவீன எந்திரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

வெள்ளனவே போவதா? அல்லது இருந்து துன்பத்தை அனுபவிப்பதா?

அவரவர் மனநிலையை பொறுத்து இந்த தெரிவு மாறுபடும்.

எனது வாழ்கை மற்றவர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது.அது பிள்ளைகளாக இருந்தாலும் சரி
எனது கடமைகளை நானே செய்ய வேண்டும். மெல்ல மெல்ல நடந்தாவது எனது முக்கிய தேவைகளை நானே செய்ய வேணடும்.இல்லையேல் அந்த  பெட்டியை நாட வேண்டும்

மூன்றாமவர் எனக்கு உணவூட்டுவதும், பம்பஸ் மாத்துவதுமாக இருந்தால் நான் குழந்தையல்ல. மற்றவர்களுக்கு பாரமானவன்.

எனவே எனது தெரிவு சரியானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

எனது வாழ்கை மற்றவர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது.அது பிள்ளைகளாக இருந்தாலும் சரி
எனது கடமைகளை நானே செய்ய வேண்டும். மெல்ல மெல்ல நடந்தாவது எனது முக்கிய தேவைகளை நானே செய்ய வேணடும்.இல்லையேல் அந்த  பெட்டியை நாட வேண்டும்

மூன்றாமவர் எனக்கு உணவூட்டுவதும், பம்பஸ் மாத்துவதுமாக இருந்தால் நான் குழந்தையல்ல. மற்றவர்களுக்கு பாரமானவன்.

எனவே எனது தெரிவு சரியானதே.

வெளிநாட்டில இது பாரமக உங்களுக்கு தெரிந்தாலும் என் அம்மை, அப்பனை இந்த நிலை வந்தால் நான் மிகச்சிறப்பாக தாங்குவேன் எந்த தயக்கமும் இன்றி. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

எனது வாழ்கை மற்றவர்களுக்கு பாரமாக இருக்கக்கூடாது.அது பிள்ளைகளாக இருந்தாலும் சரி
எனது கடமைகளை நானே செய்ய வேண்டும். மெல்ல மெல்ல நடந்தாவது எனது முக்கிய தேவைகளை நானே செய்ய வேணடும்.இல்லையேல் அந்த  பெட்டியை நாட வேண்டும்

மூன்றாமவர் எனக்கு உணவூட்டுவதும், பம்பஸ் மாத்துவதுமாக இருந்தால் நான் குழந்தையல்ல. மற்றவர்களுக்கு பாரமானவன்.

எனவே எனது தெரிவு சரியானதே.

இந்த சிந்தனையில் இருந்து தான் விசேட தேவையுடையோருக்கான காப்பகம் அமைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. நீண்டகால நோக்கில் அது சாத்தியப்படும் என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தள்ளாத முதுமை வந்து உறவுகள் வாரிசுகளெல்லாம் அவரவர் வேலைகளை கவனிக்கவே நேரமில்லாமல் ஓடி திரிய, படுத்த படுக்கையில் இயற்கை உபாதைகளை கழித்தபடியும்...

பத்து மீட்டர் எழுந்து நடக்கவே பத்து நிமிடம் செலவிடும் நிலமை வந்தும்,  மூட்டுக்களும் தசை நார்களும் ஏற்படுத்தும் வலி தாங்காது இயலாமையின் காரணத்தால் இரவு பகலா கண்ணீர் விட்டு அழுதும் வாழும்  வாழ்வைவிட இந்த தற்கொலை இயந்திரம் மிகவும் பயனுள்ளதாக அமையகூடும்.

இளமையில் கொடிய நோய் வந்து உடம்பிற்குள் புற்றுநோய் என்ற பெயரில்  புற்றெடுத்து ஒவ்வொரு வினாடியும் மரண வலியை அனுபவித்துக்கொண்டு மூக்காலும் வாயாலும் ஆசன வாயிலினாலும் ரத்தபோக்கை அனுபவித்துக்கொண்டு வாழும் ஒரு வாழ்வைவிட இந்த தற்கொலை இயந்திரத்தை நாடுவதில் தவறில்லை என்று பலர் உணர்ந்திருக்ககூடும்,

அதனால்தான் ஒரே வருடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தாமாக பூமியைவிட்டு புறப்படும் முடிவை எடுத்திருக்கிறார்கள்.

நம்மவர்கள் ஓரளவு குடும்ப உறவுகளை பராமரிக்கும் கலாச்சாரத்தை கொண்டதினால் இறப்புவரை தம் இரத்த உறவுகளை பராமரித்து வழியனுப்பி வைக்கிறார்கள்,

ஆனால் வெள்ளையரை பொறுத்த வரையில் பல பெற்ற பிள்ளைகளே எங்கிருக்கிறார்கள் என்று தெரியாது, அதுவும் அன்னையர் தினம் தந்தையர் தினத்தில் ஒரு பூங்கொத்தை கொண்டுவந்து கொடுத்துவிட்டு கிளம்பிவிடுவார்கள், அதையும் மீறி தாய் தந்தையர் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினால் மன்னிக்கவும் நாங்கள் பிஸி இனிமேல் அழைக்க வேண்டாம் என்று கூறிவிடுவார்கள்.

அவர்கள் கொடிய நோயில் விழுந்தால் ஆஸ்பத்திரி சுவர்களும் அண்ணாந்து பாக்குற வானமும் மட்டுமே உறவுகள், அதனால் தற்கொலை இயந்திரத்தை மனமுவந்து ஏற்பார்கள்.

கேள்விபட்டதில்  உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் தற்கொலை செய்துகொள்ள தற்கொலையை அங்கீகரித்த சுவிசுக்கு மனுபோட்டிருக்கிறார்கள் என்றறிந்தேன்.

பாதிப்புக்களை பொறுத்து பலருக்கு வாழ்வு நரகமாகவும் மரணம் சொர்க்கமாகவும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில இது பாரமக உங்களுக்கு தெரிந்தாலும் என் அம்மை, அப்பனை இந்த நிலை வந்தால் நான் மிகச்சிறப்பாக தாங்குவேன் எந்த தயக்கமும் இன்றி. 

 

மன்னிக்க வேண்டும் தனி,

வெளிநாட்டில் இருப்போர் இதயத்தை, பாசத்தை வங்கியில் சேமிப்பு பெட்டியில் வைத்து விட்டு இருப்பவர்கள் அல்ல.

நான் உட்பட என்னை சுற்றி பலர் தமது பெற்றாரை ஊரில் இருந்து எடுப்பித்து வீட்டில் வைத்து பரமரிக்கவே செய்கிறோம்.

அதே சமயம் கொழும்பில் இருந்தபடி பெற்றோரை கைதடிக்கு அனுப்பியவர்களையும் கண்டுள்ளோம்.

நாம் மட்டும் அல்ல, லண்டனில் பெரிய வேலைகளை எல்லாம் விட்டு விட்டு பெற்றாரை பார்க்க ஊருக்கு போன பல வெள்ளையினத்தவரும் உள்ளார்கள்.

ஆகவே இதில் வெளிநாடு, உள்நாடு, இனம் என்ற பேதம் அதிகம் இல்லை.

ஆனால் இங்கே care home இல் இருப்பது ஒரு வாழ்க்கை முறையாகவே ஏற்கப்பட்டுள்ளது. அங்கே abuse நடக்கவில்லை என்பதல்ல, ஆனால் பலர் தம் சம வயதை ஒத்தோருடன் கூடி வாழ்ந்து கடைசி காலங்களை அமைதியாக கழிப்பதும் உண்மை. ஒருவரும் அதை பெற்றாரை கைவிட்டு விட்டார்கள் என்ற கோணத்தில் பார்ப்பதில்லை.

ஆனால் இங்கேயும் ஆசிய சமுதாயத்தில் இந்த பார்வை (நான் உட்பட) தொடரவே செய்கிறது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

மன்னிக்க வேண்டும் தனி,

வெளிநாட்டில் இருப்போர் இதயத்தை, பாசத்தை வங்கியில் சேமிப்பு பெட்டியில் வைத்து விட்டு இருப்பவர்கள் அல்ல.

நான் உட்பட என்னை சுற்றி பலர் தமது பெற்றாரை ஊரில் இருந்து எடுப்பித்து வீட்டில் வைத்து பரமரிக்கவே செய்கிறோம்.

அதே சமயம் கொழும்பில் இருந்தபடி பெற்றோரை கைதடிக்கு அனுப்பியவர்களையும் கண்டுள்ளோம்.

நாம் மட்டும் அல்ல, லண்டனில் பெரிய வேலைகளை எல்லாம் விட்டு விட்டு பெற்றாரை பார்க்க ஊருக்கு போன பல வெள்ளையினத்தவரும் உள்ளார்கள்.

ஆகவே இதில் வெளிநாடு, உள்நாடு, இனம் என்ற பேதம் அதிகம் இல்லை.

ஆனால் இங்கே care home இல் இருப்பது ஒரு வாழ்க்கை முறையாகவே ஏற்கப்பட்டுள்ளது. அங்கே abuse நடக்கவில்லை என்பதல்ல, ஆனால் பலர் தம் சம வயதை ஒத்தோருடன் கூடி வாழ்ந்து கடைசி காலங்களை அமைதியாக கழிப்பதும் உண்மை. ஒருவரும் அதை பெற்றாரை கைவிட்டு விட்டார்கள் என்ற கோணத்தில் பார்ப்பதில்லை.

ஆனால் இங்கேயும் ஆசிய சமுதாயத்தில் இந்த பார்வை (நான் உட்பட) தொடரவே செய்கிறது.

நான் வெளிநாட்டை ஏன் முன்னிலைப்படுத்துக்கிறேன் என்றால் நம்ம நாட்டை போல் அல்ல வேலை குடும்பம் , தூரம் இவை அனைத்தும் பாராமரிக்க இடம் கொடுக்குமா என்பதே எனது கேள்வியாக இருந்ததது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

நான் வெளிநாட்டை ஏன் முன்னிலைப்படுத்துக்கிறேன் என்றால் நம்ம நாட்டை போல் அல்ல வேலை குடும்பம் , தூரம் இவை அனைத்தும் பாராமரிக்க இடம் கொடுக்குமா என்பதே எனது கேள்வியாக இருந்ததது .

வெளிநாட்டில் ஒரு காலத்தில் தனியாக வந்த ஆண்கள் 3 வேலை செய்வதால் 24 மணத்தியாலத்யில் 28 மணத்தியாலம் (🤣) வேலை செய்த காலம் உண்டு தனி. அப்போ நேரப்பிரச்சனை இருந்தது ஆனால் இப்போ அப்படி வெகு குறைவு.

அநேகமானோர் சுய தொழில், வேலை என அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி விட்டார்கள்.

மற்றையபடி வேலை, குடும்பம், இயந்திர மயமாக்கம் எல்லாம் இலங்கையை விட 10% கூட என்று சொல்லலாம். அவ்வளவுதான்.

உண்மையில் வயது போனவர்களை பார்ப்பது வெளிநாட்டில் இலங்கையுடன் ஒப்பிட்டால் இலகு.

அவர்களுக்கு உடல் முடியாமல் போனால் வந்து பம்பர்ஸ் மாத்துவது முதல் குளிப்பாட்டுவது வரை அரசு ஆட்களை அனுப்பும் (பம்பார்சும் தரும் -நீங்களோ அவர்களோ எவ்வளவு செல்வந்தராக இருப்பினும்). ஒரு நாளைக்கு 3/4 முறை கூட வருவார்கள், தேவையை பொறுத்து. தகுந்த உரிமையோடு இருந்தால் மருத்துவமும் பிரச்சனை இல்லை. நமக்கு சமைக்கிற அதே சாப்பாடு, தமிழ் டிவி. இதை விட வேறு என்ன தேவைகள் அவர்களுக்கு. 

எப்படியோ 16 வயதுக்கு கீழ்பட்ட பிள்ளைகள் இருந்தால் அவர்களை வீட்டில் தனியே விட்டு போக முடியாது. ஆகவே கணவன் அல்லது மனைவி வீட்டில் நிற்பார்கள். பிள்ளைகள் வளர்ந்தால் அவர்கள் நிற்பார்கள்.

மனமுண்டானால் மார்க்கமுண்டு.

பிகு

ஆனால் நான் சுவிஸ் போகாட்டில் கேர் ஹோம் போற ஐடியாதான். போய் கொஞ்சம் வெள்ளை கிழவியள துரத்தி விளையாடலாம்🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

வெளிநாட்டில் ஒரு காலத்தில் தனியாக வந்த ஆண்கள் 3 வேலை செய்வதால் 24 மணத்தியாலத்யில் 28 மணத்தியாலம் (🤣) வேலை செய்த காலம் உண்டு தனி. அப்போ நேரப்பிரச்சனை இருந்தது ஆனால் இப்போ அப்படி வெகு குறைவு.

அநேகமானோர் சுய தொழில், வேலை என அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி விட்டார்கள்.

மற்றையபடி வேலை, குடும்பம், இயந்திர மயமாக்கம் எல்லாம் இலங்கையை விட 10% கூட என்று சொல்லலாம். அவ்வளவுதான்.

உண்மையில் வயது போனவர்களை பார்ப்பது வெளிநாட்டில் இலங்கையுடன் ஒப்பிட்டால் இலகு.

அவர்களுக்கு உடல் முடியாமல் போனால் வந்து பம்பர்ஸ் மாத்துவது முதல் குளிப்பாட்டுவது வரை அரசு ஆட்களை அனுப்பும் (பம்பார்சும் தரும் -நீங்களோ அவர்களோ எவ்வளவு செல்வந்தராக இருப்பினும்). ஒரு நாளைக்கு 3/4 முறை கூட வருவார்கள், தேவையை பொறுத்து. தகுந்த உரிமையோடு இருந்தால் மருத்துவமும் பிரச்சனை இல்லை. நமக்கு சமைக்கிற அதே சாப்பாடு, தமிழ் டிவி. இதை விட வேறு என்ன தேவைகள் அவர்களுக்கு. 

எப்படியோ 16 வயதுக்கு கீழ்பட்ட பிள்ளைகள் இருந்தால் அவர்களை வீட்டில் தனியே விட்டு போக முடியாது. ஆகவே கணவன் அல்லது மனைவி வீட்டில் நிற்பார்கள். பிள்ளைகள் வளர்ந்தால் அவர்கள் நிற்பார்கள்.

மனமுண்டானால் மார்க்கமுண்டு.

பிகு

ஆனால் நான் சுவிஸ் போகாட்டில் கேர் ஹோம் போற ஐடியாதான். போய் கொஞ்சம் வெள்ளை கிழவியள துரத்தி விளையாடலாம்🤣.

 

இந்த சலுகைகள் அனைத்தும் உள்ள நாடுகளில் இந்த மெசின் வந்ததுதான் மிக வியப்பாக உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த சலுகைகள் அனைத்தும் உள்ள நாடுகளில் இந்த மெசின் வந்ததுதான் மிக வியப்பாக உள்ளது 

மிசின் வந்தது “என்னை பார்க்க ஆட்கள் இல்லையே”, “எனக்கு வாழ பிடிக்கவில்லை” என விரக்தியில் தற்கொலை செய்பவர்களுக்காக அல்ல, உடல் உபாதைகளால் இனி எனக்கு ஏற்படப்போகும் சித்திரவதைக்கு ஒத்த வாழ்வில் இருந்து என்னை விடுவியுங்கள் என்று கோருபவர்கள் தம்மை தாமே “கருணை கொலை” செய்துகொள்ளவே.

கருணை கொலைக்கும், அவர்களை பார்க்க ஆட்கள் இருக்கிறார்களா, இல்லையா, அவர்கள் குடும்பம் அவர்களை விரும்புகிறதா என்பதற்கும் அதிக சம்பந்தமில்லை.

பிகு

இயந்திர மயபட்ட மேற்குலகை விட, குடும்ப விழுமியங்களை அதிகம் பேணும் நாடு என கருதப்படும் இலங்கையில் தற்கொலை வீதம் அதிகம் என நினைக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மெசினை அப்படி ஆசைபட்டால் வாங்கி கொள்ளுங்கள். ஆனால் இறந்த பின்பு உங்களை சொர்க்கத்தில் வாழவைத்து இனிமையான வாழ்கை தருவோம் என்கின்ற மதமாற்றிகளின் பேச்சை நம்பிவிடாதீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில இது பாரமக உங்களுக்கு தெரிந்தாலும் என் அம்மை, அப்பனை இந்த நிலை வந்தால் நான் மிகச்சிறப்பாக தாங்குவேன் எந்த தயக்கமும் இன்றி. 

 

நன்று. 
உங்கள் மனநிலை எமது நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு அநேகமாக உண்டு. தாய் தந்தையரை வயோதிபகாலத்தில் வைத்து பார்ப்பது ஒருவித மன மகிழ்ச்சிதான்.

நிற்க...

நான் சொல்ல வந்த விடயம் நீங்கள் நினைக்கும் விடயமல்ல.
 கூடுதலான மனிதர்களுக்கு வயோதிபம் வர வர நோய் நொடிகளும் தேடிவரும்..சில நோய்கள் மாற்றக்கூடியது சில நோய்களுக்கு மருந்தே இல்லை.எனது தாயாருக்கு திடீர் மரணம். அவர் சாகும் வரைக்கும் தனது தேவைகளை தானே கவனித்து வந்தார்.அவர் இறக்கும் போது 80 வயது.எனது அம்மாவிற்கும் நோய்கள் இருந்தது. ஆனால் பெரும் வலிகள் இல்லாத நோய்கள்.மாத்திரைகள் பாவித்தால் இல்லாமல் போய்விடும். அம்மா இறந்த போது என்னை பெற்றெடுத்து வளர்த்த தெய்வம் என்ற ரீதியில் நான் அழாமலே கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. இருந்தாலும் அம்மா இறக்கும் வரைக்கும் தன்னைத்தானே கவனித்து யாருக்கும் பாரமாய் இல்லாமல் போய் சேர்ந்துவிட்டார் என்றோரு உள்ளூர மகிழ்ச்சி எனக்குள் இருந்தது.

அம்மாவைப்போல் நான் வலியில்லாத வாழ்க்கை வாழமாட்டேன் என்பது எனக்கு நன்றாகவே தெரிகின்றது.ஏனெனில் எலும்புவலிகள் மூட்டுவலிகள் என பல வலிகளுக்கு இப்போதே பஞ்சவர்ண நிறங்களில் மாத்திரைகள் உணவுக்கு பதிலாக எடுக்க வேண்டிய கட்டாயம்.

எனது சந்ததிக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமைகள் முடிய வயதும் கணக்காக வர நானே அந்த  பெட்டியை தேடிச்செல்வது உதிசமானது.

நான் அருந்தி அந்தரிப்பதை மற்றவர்கள் பார்த்து கவலைப்படக்கூடாது அதே போல் நானும் வலிகளால் அவதிப்படக்கூடாது.

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இந்த சலுகைகள் அனைத்தும் உள்ள நாடுகளில் இந்த மெசின் வந்ததுதான் மிக வியப்பாக உள்ளது 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஏராளன் said:

இந்த சிந்தனையில் இருந்து தான் விசேட தேவையுடையோருக்கான காப்பகம் அமைக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. நீண்டகால நோக்கில் அது சாத்தியப்படும் என்று நினைக்கிறேன்.

நல்லமனம் வாழ்க.
வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

நன்று. 
உங்கள் மனநிலை எமது நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு அநேகமாக உண்டு. தாய் தந்தையரை வயோதிபகாலத்தில் வைத்து பார்ப்பது ஒருவித மன மகிழ்ச்சிதான்.

நிற்க...

நான் சொல்ல வந்த விடயம் நீங்கள் நினைக்கும் விடயமல்ல.
 கூடுதலான மனிதர்களுக்கு வயோதிபம் வர வர நோய் நொடிகளும் தேடிவரும்..சில நோய்கள் மாற்றக்கூடியது சில நோய்களுக்கு மருந்தே இல்லை.எனது தாயாருக்கு திடீர் மரணம். அவர் சாகும் வரைக்கும் தனது தேவைகளை தானே கவனித்து வந்தார்.அவர் இறக்கும் போது 80 வயது.எனது அம்மாவிற்கும் நோய்கள் இருந்தது. ஆனால் பெரும் வலிகள் இல்லாத நோய்கள்.மாத்திரைகள் பாவித்தால் இல்லாமல் போய்விடும். அம்மா இறந்த போது என்னை பெற்றெடுத்து வளர்த்த தெய்வம் என்ற ரீதியில் நான் அழாமலே கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது. இருந்தாலும் அம்மா இறக்கும் வரைக்கும் தன்னைத்தானே கவனித்து யாருக்கும் பாரமாய் இல்லாமல் போய் சேர்ந்துவிட்டார் என்றோரு உள்ளூர மகிழ்ச்சி எனக்குள் இருந்தது.

அம்மாவைப்போல் நான் வலியில்லாத வாழ்க்கை வாழமாட்டேன் என்பது எனக்கு நன்றாகவே தெரிகின்றது.ஏனெனில் எலும்புவலிகள் மூட்டுவலிகள் என பல வலிகளுக்கு இப்போதே பஞ்சவர்ண நிறங்களில் மாத்திரைகள் உணவுக்கு பதிலாக எடுக்க வேண்டிய கட்டாயம்.

எனது சந்ததிக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமைகள் முடிய வயதும் கணக்காக வர நானே அந்த  பெட்டியை தேடிச்செல்வது உதிசமானது.

நான் அருந்தி அந்தரிப்பதை மற்றவர்கள் பார்த்து கவலைப்படக்கூடாது அதே போல் நானும் வலிகளால் அவதிப்படக்கூடாது.

 

கடுமையான உடலை வருத்திய வேலைகள் செய்தனிங்களோ அண்ணை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2021 at 04:26, ராசவன்னியன் said:

யாராவது அப்படி போறதா இருந்தால், களத்தில் ஒரு போட்டோவையாவது பதிந்துவிட்டு செல்லுங்களப்பு..! 😉 இத்தனை நாள் நம்முடன் களமாடியது இந்த அன்பர்தான் என நினைவில் கொள்ளலாம்.

எனக்கும் இப்படி ஆசை ஒன்றுள்ளது, அதனால் உரியவர்களிடம் கூறியுள்ளேன்😁..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, goshan_che said:

 

ஆனால் இங்கே care home இல் இருப்பது ஒரு வாழ்க்கை முறையாகவே ஏற்கப்பட்டுள்ளது. அங்கே abuse நடக்கவில்லை என்பதல்ல, ஆனால் பலர் தம் சம வயதை ஒத்தோருடன் கூடி வாழ்ந்து கடைசி காலங்களை அமைதியாக கழிப்பதும் உண்மை. ஒருவரும் அதை பெற்றாரை கைவிட்டு விட்டார்கள் என்ற கோணத்தில் பார்ப்பதில்லை.

எனது வீட்டில் நான் வயதாகியபின் care homeல் இருக்கவிரும்புகிறேன் எனக்கூறிய பொழுது “ what kind of Sri Lankan woman are you???🤪” எனக்கேட்டார்கள்.. அவர்களுக்கு நான் கூறியது இதுதான் just want to live for me.!! 

Aged careல் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை, ஆனாலும் சில சமயங்களில் அப்படி போய் இருப்பது நல்லது என நினைப்பதுண்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனது வீட்டில் நான் வயதாகியபின் care homeல் இருக்கவிரும்புகிறேன் எனக்கூறிய பொழுது “ what kind of Sri Lankan woman are you???🤪” எனக்கேட்டார்கள்.. அவர்களுக்கு நான் கூறியது இதுதான் just want to live for me.!! 

Aged careல் பிரச்சனைகள் இல்லாமல் இல்லை, ஆனாலும் சில சமயங்களில் அப்படி போய் இருப்பது நல்லது என நினைப்பதுண்டு

கண்டது சந்தோசம்.

இங்கே எமது ஆக்கள் பலர் இப்படி ஹோம் நடத்துவதை வியாபாரமாக செய்கிறார்கள். அப்படி ஒன்றில் நமது அடுத்த சந்ததிகளை இறக்கி விட்டால் - கொஞ்சம் கெத்தா அதே ஹோமில இருக்கலாம் 🤣.

1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கும் இப்படி ஆசை ஒன்றுள்ளது, அதனால் உரியவர்களிடம் கூறியுள்ளேன்😁..

நானும் சொல்லி வைத்துள்ளேன். எனக்கு ஏதும் நடந்தால் யாழில் ஒரு கணக்கை திறந்து இன்னார் ஆகிவிட்டார் அன்னார் என அறிவிக்குமாறு🤣.

பிகு

இத வாசிச்சிட்டு நான் வராத நாளில எவணும் காரியம் செய்யாமல் இருக்கோணும்🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

சுவிட்சர்லாந்தில் வலி இல்லாமல் தற்கொலை செய்துகொள்ள நவீன எந்திரம்.

நமக்கு இந்த தலைப்பில் ஒரு சந்தேகம். இதில சாகும் போது வலி இருந்ததா.. இல்லையான்னு.. இதில சிக்கி செத்துப்போன எவர் வந்து சொன்னதாக.. இந்த தலைப்பை இட்டிருக்கிறார்கள்...?? அதை வேறு நம்பி இங்கு கருத்தாடுகிறார்கள்..???! 

எல்லாம் வியாபாரம்.. போலி விளம்பரம். இவர்களின் மேற்படி கூற்றைக்கூட மெய்ப்பிக்க எதுவும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nedukkalapoovan said:

நமக்கு இந்த தலைப்பில் ஒரு சந்தேகம். இதில சாகும் போது வலி இருந்ததா.. இல்லையான்னு.. இதில சிக்கி செத்துப்போன எவர் வந்து சொன்னதாக.. இந்த தலைப்பை இட்டிருக்கிறார்கள்...?? அதை வேறு நம்பி இங்கு கருத்தாடுகிறார்கள்..???! 

எல்லாம் வியாபாரம்.. போலி விளம்பரம். இவர்களின் மேற்படி கூற்றைக்கூட மெய்ப்பிக்க எதுவும் இல்லை. 

எனக்கு ஒன்றை வாங்கி தாங்கோ நான் ரெஸ்ட் பண்ணி சொல்லுறேன் புறோ.☺️🙆 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, யாயினி said:

எனக்கு ஒன்றை வாங்கி தாங்கோ நான் ரெஸ்ட் பண்ணி சொல்லுறேன் புறோ.☺️🙆 

எனக்கு இருக்கிற ஒரு நல்ல தங்கச்சியை பரிசோதனைக்கு அனுப்ப சித்தமில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ஏராளன் said:

கடுமையான உடலை வருத்திய வேலைகள் செய்தனிங்களோ அண்ணை?

அதையேன் பேசுவான்....
ஜேர்மனிக்கு வந்த புதிசிலை  வேலைசெய்ய வெளிக்கிட்டது இன்னும் ஓய்வில்லை. நெருப்புவெக்கைக்கு முன்னாலை 12- 13 மணித்தியாலம் நிண்ட நிலையிலை வேலை.வாலிப வயதிலை எதையும் யோசிக்காமல் வேலை செய்ததின்ரை பலன் இப்ப தெரியுது. 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/12/2021 at 04:44, தனிக்காட்டு ராஜா said:

வெளிநாட்டில இது பாரமக உங்களுக்கு தெரிந்தாலும் என் அம்மை, அப்பனை இந்த நிலை வந்தால் நான் மிகச்சிறப்பாக தாங்குவேன் எந்த தயக்கமும் இன்றி. 

இதில் இன்னொரு பக்கமும் இருக்கு. 

தாயகத்தில் இருந்து பிள்ளைகளால் இங்கே அழைக்கப்பட்ட பெற்றோர்கள் மிகப் பெரிய இலாபம் தரும் மூலதனம் பல பிள்ளைகளுக்கு.

அவர்களுக்கு வரும் பென்சன் பணம் மற்றும் அவர்களை பராமரிக்க கிடைக்கும் பணம் என நிரந்தர வருமானம்.

இதில் மிகப்பெரிய மோசடி அல்லது அநியாயம் என்னவென்றால் சோறும் கறியுடனும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் இவர்களுக்கு இப்படி வருமானம் வருவதோ அது எவ்வளவு என்பதோ சாகும் வரை தெரியவருவதில்லை. 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

இதில் இன்னொரு பக்கமும் இருக்கு. 

தாயகத்தில் இருந்து பிள்ளைகளால் இங்கே அழைக்கப்பட்ட பெற்றோர்கள் மிகப் பெரிய இலாபம் தரும் மூலதனம் பல பிள்ளைகளுக்கு.

அவர்களுக்கு வரும் பென்சன் பணம் மற்றும் அவர்களை பராமரிக்க கிடைக்கும் பணம் என நிரந்தர வருமானம்.

இதில் மிகப்பெரிய மோசடி அல்லது அநியாயம் என்னவென்றால் சோறும் கறியுடனும் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் இவர்களுக்கு இப்படி வருமானம் வருவதோ அது எவ்வளவு என்பதோ சாகும் வரை தெரியவருவதில்லை. 😡

உண்மைதான். இதனால் ஆளுடன் ஆள் புடுங்கு பட்ட சகோதர்கள் எல்லாம் உண்டு. 

அதே போல் சற்று உடல் நிலை சுகமாக உள்ள பெற்றார் சம்பளமில்லாத டிரைவர், பிள்ளை பாதுகாவலர், சமையல்காரர் ஆகினதும் உண்டு🤣.

இதை போல் மறு வழமாக, பிள்ளைகளுடன் செலவில்லாமல் வாழ்ந்த படி ஊரில் எவர் என்ன எண்ட கேள்வி இல்லாமல் அரசு தரும் பணத்தை £50,100 என்று விசுக்குபவர்களும், அதே பணத்தை வட்டிக்கு விடும் பெருசுகளும் கூட உண்டு🤣.

புலம்பெயர் வாழ்வின் வினோதங்கள் ஒரு நாவல் எழுதும் தரத்தில் இருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

உண்மைதான். இதனால் ஆளுடன் ஆள் புடுங்கு பட்ட சகோதர்கள் எல்லாம் உண்டு. 

அதே போல் சற்று உடல் நிலை சுகமாக உள்ள பெற்றார் சம்பளமில்லாத டிரைவர், பிள்ளை பாதுகாவலர், சமையல்காரர் ஆகினதும் உண்டு🤣.

இதை போல் மறு வழமாக, பிள்ளைகளுடன் செலவில்லாமல் வாழ்ந்த படி ஊரில் எவர் என்ன எண்ட கேள்வி இல்லாமல் அரசு தரும் பணத்தை £50,100 என்று விசுக்குபவர்களும், அதே பணத்தை வட்டிக்கு விடும் பெருசுகளும் கூட உண்டு🤣.

புலம்பெயர் வாழ்வின் வினோதங்கள் ஒரு நாவல் எழுதும் தரத்தில் இருக்கிறது.

தனித்த பெற்றோரை வைத்து பராமரிப்பது கூட சில வேளைகளில் சம்பந்படாத,படக் கூடாத உறவுகளால் சகோதரர்களுக்குள் புடுங்குப் பாடுகளை ஏற்படுத்தப் பார்க்கிறது.என்ன செய்வது வீட்டுக்கு வீடு வாசற் படி என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப் பட்டுள்ளேன். அந்த நிலை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையளுக்குள்ளை வயது போன தாய் தேப்பனை வைச்சு பராமரிக்கிற பிரச்சனை ஊரிலையும் எக்கச்சக்கம். தாங்களாய் உணர்ந்து வயோதிபமடம் போன பெற்றோரும் உண்டு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.