Jump to content

தோல்விக்கு பொறுப்பேற்று கூட்டமைப்பு தலைவர்களான சம்பந்தன், மாவை, சுமந்திரன் பதவி விலகுவார்களா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Courtesy: திபாகரன்

 

ஜனநாயகத்தின் உயரிய விழுமியமாகவும், கூர்முனையாகவும் அமைவது தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவதாகும். அவ்வாறு பதவி விலகும்போது மற்றவர்களுக்குப் பொறுப்பு உணர்வு இயல்பாகவே ஏற்படும். அது தோல்வியிலிருந்து மீண்டு எழுந்து வெற்றியின் பக்கம் செல்வதற்கான புதிய வழிகளை அவர்கள் கண்டுபிடிக்க உதவும் அல்லது கண்டு பிடிக்க முயற்சிப்பார்கள். இதன் மூலம் புதிய ஆளுமைகள் பல முனைகளிலிருந்தும் தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதே இதனுடைய அடிப்படைத் தத்துவமாகும்.

தோல்விக்குப் பொறுப்பேற்றல் என்பது ஜனநாயகத்தின் உயரிய விழுமியமும், நாகரிகமுமாகும். அது ஒரு மனிதனின் பொதுவாழ்வில் தனக்கு இருக்கின்ற பொறுப்புக்களையும், பண்பாட்டையும், உயரிய சமூகப் பொறுப்பையும், முன்னுதாரணத்தையும் வெளிக்காட்டி நிலைநிறுத்தும். அத்தோடு மற்றவர்களுக்கு உயர்ந்த வழிகாட்டியாகவும் அமையும். இவ்வாறு செய்வதன் மூலம் ஈழத்தமிழரின் அரசியல் வரலாற்றில் புதிய செல்வழி ஒன்றை ஆரம்பிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் தற்போது வரலாறு தமிழ் தலைமைகளிடம் கையளித்து இருக்கிறது.

உலகின் ஜனநாயக பண்பியல் வரலாற்றில் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகியவர்கள் என்ற பட்டியல் மிக நீண்டது. அது ஜனநாயக நாடுகளிலும் சரி, கூடவே இராணுவ ஆட்சியாளர்களாக இருந்தவர்களும் அத்தகைய முன்னுதாரணங்களைக் கொண்டிருப்பதை எம் கண்முன்னே காண்கிறோம். ""ஒரு வருடத்துக்குள் அரசியல் தீர்வு இல்லையேல் பதவி விலகுவோம்"". என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் பல முறை பகிரங்கமாகப் பத்திரிகைகளுக்கும், காணொளி நேர்காணல்களுக்கும் செவ்விகள் வழங்கியிருப்பதை இணைய வழியாகவும், இலத்திரனியல் ஊடகங்களிலும் இன்றும் யாவரும் பார்க்க முடியும்.

இவ்வாறு சுமந்திரன் குறிப்பிடுவது போலவே திரு. சம்பந்தனும் "தைப் பொங்கலுக்கு முன் தீர்வு, தீபாவளிக்கு முன் தீர்வு, வருட இறுதிக்குள் தீர்வு" எனக் கடந்த 12 வருடங்களாக ஓயாது இத்தகைய வாக்குறுதிகளை வாய்கூசாமல் சொல்லி வருவதைப் பார்த்து தமிழினம் சலிப்படைந்து போய் கிடக்கிறது. இவ்வாறு இவர்கள் வாக்குறுதிகளை வழங்கினாலும் இவர்கள் கடந்த காலத்தில் அங்கம் வகித்த நல்லாட்சி அரசாங்கத்தில் ஒரு குண்டுமணியைத் தானும் தமிழ் மக்களுக்காகப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. மாறாக தனக்குக் கிடைத்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு காலத்தைக் கழித்து பதவிக்கான அனைத்து சலுகைகளையும் அனுபவிப்பதிலேயே காலத்தைக் கடத்தி விட்டார். இத்தகைய தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகவும் இல்லை. இப்படியான ஒரு ஜனநாயக முறைமை இருக்கின்றது என்பதைக்கூட அவர் மனதில் எழுந்திருக்கவில்லை என்பது வேதனைக்குரியது.

அவ்வாறு சுமந்திரனும் ""இந்த வருட இறுதிக்குள் புதிய அரசியலமைப்பு வரும் இல்லையேல் பதவி விலகுவேன்"" எனக் காணொளியில் சத்தியம் செய்தார். ஆனால் அத்தகைய ஒரு தோல்விக்குப் பொறுப்பேற்கும் மனப்பக்குவம் அவரிடம் சிறிதும் கிடையாது என்பதை தற்போது அவர் எடுத்துவரும் அரசியல் முனைப்புக்கள் சான்று பகர்கிறன. தங்கள் தோல்விகளுக்குப் பொறுப்பேற்காமல் தங்களைச் சிங்களத் தலைவர்கள் ஏமாற்றிவிட்டார்கள் என்று சிறிதும் வெட்கமின்றி பேசுவது மிகவும் அநாகரீகமான மானரோசமற்ற செயல். அது அவருடைய தன்மானத்துக்கு பெரும் இழிவானது.

இதனைக்கூட இவர்கள் புரியாமல் இருக்கிறார்களா என்பது கேள்விக்குரியது. இவர்களைப் போலவே மாவை சேனாதிராஜாவும் எந்தக் குற்ற உணர்வும் அற்று மேடைகளில் முழங்குவதைக் காணமுடிகிறது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட மாவை சேனாதிராஜா மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோல்வி அடைந்திருக்கிறார். தான் தலைமை தாங்கி வழி நடத்தும் கூட்டமைப்பு என்கின்ற முகமூடி அணிந்திருக்கும் தமிழரசுக் கட்சி மக்களால் புறக்கணிக்கப்பட்டு தோல்வி அடைந்து இருக்கும் நிலையில் மாவை சேனாதிராஜா தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற பதவியை தன்னுடைய தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டும்.

ஆனால் அவரோ தொடர்ந்து அந்தப் பதவியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு தலைவர் நாற்காலியில் குந்தியிருப்பதிலேயே குறியாக இருக்கிறார் என்பது வெட்கம் கெட்ட செயல். தோல்விக்குப் பொறுப்பேற்பது என்ற அடிப்படை மனிதப் பண்புகள் எதுவும் அற்றவர்களாக இவர்கள் இருப்பது தமிழ்ச் சமூகத்தின் உயரிய பண்பாட்டுக்கும், விழுமியத்திற்கும், பொறுப்புணர்வுக்கும் தீங்கான செயலாகும்.இது எதிர்கால சந்ததியினரைத் தவறான பாதைக்கு இட்டுச் செல்கின்ற தவறான அரசியல் நடத்தை என்கின்ற நச்சு விதைகளை விதைக்கின்ற செயலாகவுமே அமையும்.   

இத்தகைய தோல்விக்குப் பொறுப்பேற்று பதவிவிலகல் என்ற ஜனநாயக பண்பையும் முறைமையையும் தென்னாசிய அரசியல் பண்பாட்டில் பார்ப்போமேயானால் இந்தியாவின் முன்னாள் பிரதமராக விளங்கிய லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் நேரு காலத்தில் இந்தியாவின் முக்கியமான அதாவது ஆறாவது பொறுப்பு வாய்ந்த அமைச்சுப் பதவி ஆகிய ரயில்வே அமைச்சராகப் பதவியில் இருந்த காலத்தில் [ 1) பிரதமர், 2) உள்துறை அமைச்சர், 3) பாதுகாப்பு அமைச்சர், 4) வெளி விகார அமைச்சர் , 5) நிதி அமைச்சர், 6) ரயில்வே அமைச்சர்]

ரயில்வே போக்குவரத்து விபத்தொன்றில் நூற்றுக்கணக்கான மக்கள் இறந்தபோது அந்த தவற்றுக்குப் பொறுப்பேற்று பதவி விலகினார். அப்போது பலரும் அவரை பதவி விலக வேண்டாம் என வற்புறுத்திய போதும் அவர் பதவி விலகினார். அவ்வாறு 1962ல் சீன-இந்திய யுத்தத்தின்போது அமைச்சராகவிருந்த கிருஷ்ணமேனன் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிச் சென்றார்.

அவ்வாறு இந்திரா காந்தி அவர்களின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த வி பி சிங் சாம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களை டிசம்பர் 31ம் திகதிக்குள் முற்றாக அடக்கி விடுவேன் என வாக்குறுதி அளித்தார். அவ்வாறு அந்த காலக்கெடு முடிவடைந்த அன்று பேட்டி வழங்கிக் கொண்டிருக்கின்ற போதே சாம்பல் பள்ளத்தாக்கில் பெரும் கொள்ளை சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதனைக் கேள்வியுற்ற மறுகணமே வி.பி.சிங் தன்னுடைய பதவியை இராஜினாமா செய்து வெளியேறினர்.

அப்போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவரைப் பதவி விலக வேண்டாம் எனக் கேட்கப்பட்டபோதும் தான் ""ஜனநாயகத்துக்கும் மக்களுக்கும் மனித விழுமியங்களுக்கும் பொறுப்பு உள்ளவனாக இருக்கிறேன்"" என்று கூறியே பதவியைத் துறந்தார். இவ்வாறு இந்திய அரசியல் ஜனநாயகத்தில் மூன்று முக்கிய முன்னுதாரணங்களைக் கூற முடிகின்றது. ஆசியாவின் ஜனநாயகத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகின்றன பாகிஸ்தானிய அரசியலிலும் இத்தகைய ஜனநாயக முன்னுதாரணங்களைக் காணமுடியும்.

1965 இந்தியப் பாகிஸ்தானிய எல்லைப் பகுதி யுத்தத்தின்போது பாகிஸ்தானின் தோல்விக்குப் பொறுப்பேற்று அயூப்கான் தனது ஜனாதிபதி பதவியைத் துறந்தார். அவ்வாறே பாகிஸ்தானிய ஜனாதிபதியாக இருந்த ஜெஹியாகான்1971ல் இந்திய-பாகிஸ்தான் யுத்தத்தில் பங்களாதேஷ் பிரிக்கப்பட்டதனால் அந்த தோல்விக்குப் பொறுப்பேற்று தன் ஜனாதிபதி பதவியைத் துறந்தார். இவ்வாறு இந்திய உபகண்டத்தில் இந்தியாவில் மூன்று அமைச்சர்களும், பாகிஸ்தானில் இரண்டு ஜனாதிபதிகளும் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகி இருக்கிறார்கள்.

இத்தகைய செயல்கள் இந்தப் பிராந்தியத்தின் ஜனநாயக முறைமைக்கு முன்னுதாரணமாகவும், வழிகாட்டியாகவும் ஜனநாயக அரசியல் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கிறன என்பதை இங்கே நாம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். இந்தப் பிராந்தியத்தின் ஜனநாயக மீட்சிக்கும், ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்கும், ஜனநாயகத்தின் வளர்ச்சிக்கும் அவர்கள் நல்ல முன்னுதாரணங்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.

இவ்வாறு பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிச் சென்ற பிரதமர்கள் அமைச்சர்கள் என்ற வரிசை மிக நீண்டது. இத்தகைய ஜனநாயக பண்புகள் தமிழ் அரசியல் பரப்பில் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும். இத்தகைய ஜனநாயக முறைமை என்ற ஒரு பண்பியல்பை தமிழ் அரசியல் வாதிகளின் மனதில் புகுத்தப்பட வேண்டும். கடந்த 12 ஆண்டுக்கால ஈழத்தமிழ் அரசியல் செயல்முறையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தங்களை இனங்காட்டி ஜனநாயகவாதிகளாகக் கூக்குரலிடும் தமிழரசுக் கட்சியின் முதன்மை தலைவர்கள் தாம் அங்கம் வகித்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் தமிழர் தாயக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களால் நிரப்பப்பட்டன.

பௌத்த விகாரைகளுக்காக தமிழர் நிலங்கள் அபகரிக்கப்பட்டும், யாழ் குடாவில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் பாதுகாப்பு வளையத்துக்குள் சட்டத்தின் பெயரால் சுவீகரிக்கப்பட்டதனை தடுப்பதற்கான விதத்தில் இவர்களால் செயல்பட முடியவில்லை என்பது இவர்களுடைய தோல்வியை வெளிக்காட்டி நிற்கின்றது. மேலும் இவர்களுடைய வழிநடத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மூன்றாக உடைந்துவிட்டது. கஜேந்திரகுமார் அணி, விக்னேஸ்வரன் அணி, சம்பந்தன் அணி என்ற மூன்று பிரிவினராகத் தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டுவிட்டது.

மூன்று பிரிவாகத் தமிழ்த் தேசியத்தை உடைத்துவிட்டு இப்போது தமிழ்த் தேசியத் தளத்தில் இருந்துதான் நாம் பேசுகிறோம் என்று சிறிதும் வெட்கமின்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது களத்தில் சம்பந்தன் அணியில் இருந்த கூட்டமைப்புக்குள் மேலும் இரண்டு பிரிவாக உடைவதற்கான உணர்வுகளும் கூச்சல்களும், சலசலப்புக்களும் வெளிப்படுகின்றன. இதனால் தமிழ் மக்களின் பலம் மேலும் மழுங்கடிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியம் பாரதூரமான பலவீனத்தைச் சந்தித்திருக்கிறது.

அத்தோடு கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலிலும் நாடாளுமன்ற தேர்தலிலும் தமிழரசுக் கட்சி என்ற ரீதியில் அது பெரும் சரிவை, தோல்வியைச் சந்தித்திருக்கிறது. இப்போது புதிய அரசியலமைப்பு, அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படும் என இவர்கள் கூறுவது முற்றிலும் அபத்தமானது. ஏனெனில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மாகாணசபைத் தேர்தல், மாகாண சபைகளை ஒழித்தல் என்பதையே தனது தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் முன்வைத்து ""மக்கள் ஆணையை"" ஜனாதிபதி பெற்றிருக்கிறார்.

எனவே 13ஆம் திருத்தச் சட்டமோ, அல்லது மாகாண சபையோ தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ச தீர்வாகத்தானும் இந்த புதிய அரசியலமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. மாறாக ""ஒரு நாடு, ஒரு சட்டம், ஒரு மக்கள் "" என்ற அடிப்படையில் ஒற்றையாட்சி முறையிலான அரசியல் அமைப்பு உருவாக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது, எனவே அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசாங்கம் தரும் என்று கூறி தமிழ் மக்களைக் காத்திருக்கும்படி கூறுவது ஒரு குற்றச் செயலே.

இத்தகைய குற்றங்களுக்கும் தோல்விகளுக்கும் சம்மந்தன், சேனாதிராஜா, சுமந்திரன் ஆகிய மூவருமே பொறுப்புக்கூற வேண்டியவர்கள். இவர்கள் தமது தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிச் சென்றால் இந்தக் கட்சியில் பொறுப்பு வாய்ந்தவர்கள் முன்னே வந்து பொறுப்பேற்பர். அவ்வாறு பொறுப்பேற்பவர்கள் கட்சியைச் சரியான வழியில் வழிநடத்துவர்.

தமிழ் அரசியல் பரப்பில் தலைமை தாங்குவதற்குத் தகுந்தவர்கள் யாரும் இல்லை என இவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. தமிழர்களை வழிநடத்துவதற்கு ஏராளமான ஆளுமை மிக்கவர்களைத் தமிழ்த்தாய் பிரசவித்திருக்கிறாள். அத்தகைய புதிய ஆளுமை மிக்கவர்களை வழிநடத்த வழிவிட்டு, தமிழ்த்தேசிய அரசியல் தரப்பிற்கு புதிய இரத்தத்தைப் பாய்ச்சி தமிழ் மக்களுக்கான தேசிய அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளை அளிக்குமாறு இவ்வளவு காலமும் இனத்துக்காக மாண்டுபோன மக்களினதும், மாவீரர்களினதும் பெயராலும் பதவிவிலகிச் செல்லும்படி வரலாறு இவர்களுக்குக் கட்டளையிடுகிறது.

- திபாகரன் -

https://tamilwin.com/article/artical-about-tamil-nation-alliance-1639057533

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி தலைப்பை பார்த்த போதே ஊகித்தேன் இது தமிழ்வின் ஊடக வியாபாரிகள் செய்தி போலும் என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

தோல்விக்கு பொறுப்பேற்று கூட்டமைப்பு தலைவர்களான சம்பந்தன், மாவை, சுமந்திரன் பதவி விலகுவார்களா?

மேலை நாடுகளில் அரசியல் தோல்வியென்றால் அந்தந்த அரசியல் தலைவர்கள் பதவி விலகி மற்றவர்களுக்கு இடம் கொடுப்பார்கள். சிறிலங்கா இந்தியாவிலை அப்பிடியில்லை....சாகும் வரை உண்ணாவிரத நாடகம் மாதிரி  தங்கடை பதவியையும் சாகும் வரைக்கும் வைத்திருப்பார்கள். 

இதிலை பகிடி என்னவெண்டால் மேலைத்தேய அரசியல் திட்டத்திலை வாழுற புலம்பெயர் தமிழ்ச்சனங்களும் இப்பவும் சம்பந்தன் கொம்பனிக்கு வடைமாலை போட்டுக்கொண்டு இருக்குதுகள்.....:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, பெருமாள் said:

மூன்று பிரிவாகத் தமிழ்த் தேசியத்தை உடைத்துவிட்டு இப்போது தமிழ்த் தேசியத் தளத்தில் இருந்துதான் நாம் பேசுகிறோம் என்று சிறிதும் வெட்கமின்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது களத்தில் சம்பந்தன் அணியில் இருந்த கூட்டமைப்புக்குள் மேலும் இரண்டு பிரிவாக உடைவதற்கான உணர்வுகளும் கூச்சல்களும், சலசலப்புக்களும் வெளிப்படுகின்றன. இதனால் தமிழ் மக்களின் பலம் மேலும் மழுங்கடிக்கப்படுகிறது. தமிழ்த் தேசியம் பாரதூரமான பலவீனத்தைச் சந்தித்திருக்கிறது.

 சிங்களத்தின் திட்டத்தை முழுமையாக  நிறைவேற்றி விட்டார்கள், அடுத்து நிறைவேற்ற வேண்டியது .....

 

19 hours ago, பெருமாள் said:

13ஆம் திருத்தச் சட்டமோ, அல்லது மாகாண சபையோ தமிழ் மக்களுக்கான குறைந்தபட்ச தீர்வாகத்தானும் இந்த புதிய அரசியலமைப்பில் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது. மாறாக ""ஒரு நாடு, ஒரு சட்டம், ஒரு மக்கள் "" என்ற அடிப்படையில் ஒற்றையாட்சி முறையிலான அரசியல் அமைப்பு உருவாக்கப்படும்

இதற்காகவே மக்களை காத்திருக்கச் சொன்னார்கள். கரையில் இருக்கும்போது காப்பாற்ற முடியாதவர்கள் நடுக்கடலுக்கு அடித்துச் செல்லப்பட்டபின் காப்பாற்றுவார்களா? அல்லது காப்பாற்றத்தான் முடியுமா இவர்களால்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

செய்தி தலைப்பை பார்த்த போதே ஊகித்தேன் இது தமிழ்வின் ஊடக வியாபாரிகள் செய்தி போலும் என்று. 

வெறுமனே ஊடக வியாபாரிகள் என்று சொல்வதை விட்டு சம்பந்தர் சுமத்திரன் மாவை செய்த உருப்படியான காரியங்களை சொல்லமுடியுமா ?

ஆதரவாளராய்  இருப்பது தப்பில்லை உண்மை எதுவென்பதை அறிந்து அதற்கேற்ப தலைவர்களை நடக்குமாறு நீங்க கேட்கணும் நல்ல ஆதரவாளர் என்பது தங்கள் தலைமையை நல்வழிப்படுத்துபவர்களாக இருக்கனும் உங்களால் முடியாது சம்பந்தனோ சுமத்திரனோ சிங்கள தலைமை என்ன சொல்லுதோ அதைத்தான்  செய்வார்களோ ஒழிய உங்களை ஒரு பொருட்டாகவே கவனத்தில் கொள்ளமாட்டார்கள் .

அதை விட்டு இங்கு வந்து மறுத்தான் ஆட்டம் ஆடுவது வீண் வேலை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில சோனவரதும் மலையகத்தமிழரதும் நகர்வை எங்கட தமிழ் அரசியல்(வா)வியாதிகள் கொஞ்சம் அவதானிக்கவேணும். இல்லை நாங்க எங்கட அரசியலை, அதாவது யாழ் மேட்டுக்குடி அரசியல்தானென்று மேதாவித்தன அடம்பிடிப்பில் அழிந்துவருவது தமிழர்களே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெருமாள் said:

வெறுமனே ஊடக வியாபாரிகள் என்று சொல்வதை விட்டு சம்பந்தர் சுமத்திரன் மாவை செய்த உருப்படியான காரியங்களை சொல்லமுடியுமா ?

ஆயுதம் தூக்கி ஆட்களுக்கு மண்டையில் போடாமல் சொந்த நாட்டிலேயே வாழ்ந்து பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியில் அரசியலில் ஈடுபடுகின்றார்கள்.

லிபரா மோபைல் கூட்டணியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர ரொம்பத்தான் முக்குகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

ஆயுதம் தூக்கி ஆட்களுக்கு மண்டையில் போடாமல் சொந்த நாட்டிலேயே வாழ்ந்து பல்வேறு மிரட்டல்களுக்கு மத்தியில் அரசியலில் ஈடுபடுகின்றார்கள்.

இதானே வேணாங்கிறது ஊர்ல இருந்து தமிழர்க்கு  அரசியல் செய்தால் பரவாயில்லை  சிங்கள அரசுக்கு  அடிமை அரசியல் செய்பவர்களுக்கு மிரட்டலா ? சிரிக்க  முடியலை வேணாம் இப்படியெல்லாம் பகிடி விடக்கூடாது நியாயத்தை கதைப்பம் என்று புனைபெயரில் வரும் நீங்க அநியாயத்தை கதைக்கக்கூடாது .....

Link to comment
Share on other sites

கட்டுரையாளர் எதிர்பார்ப்பது போல் தமிழர் அரசியலில் கடந்த 70 ஆண்டுகளாக எவருமே தமது ஒரு அரசியல் செயற்திட்டத் தோல்வியடைந்தவுடன் தோல்விக்கு பொறுபேற்று மற்றவர்களுக்கு வழிவிட்டு தாம் விலகி கொண்ட சம்பவம் நடைபெறவில்லை.  

ஆயுத போராட்டதிற்கு முன்பும் தமிழ் அரசியல் கட்சிகள் அப்படி தான் இருந்தனர்.  ஆயுத இயக்கமும் அதே போல் தலைக்கு மேல்வெள்ளம் வந்து அனைத்துமே நாசமாகும் நிலை வரும்போது கூட அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. 

 இப்படி நிலைமை இருக்க அதே தமிழர் அரசியல் ஜீனில் இருந்து வந்த சம்பந்தனும் சுமந்திரனும் பழைய தமிழர் அரசியல் தலைமைகளின் முன்மாதிரியையே பின்பற்றுவர் என்பது கூட  தெரியாத அரசியல் கற்று குட்டியா இந்த கட்டுரையாளர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, tulpen said:

கட்டுரையாளர் எதிர்பார்ப்பது போல் தமிழர் அரசியலில் கடந்த 70 ஆண்டுகளாக எவருமே தமது ஒரு அரசியல் செயற்திட்டத் தோல்வியடைந்தவுடன் தோல்விக்கு பொறுபேற்று மற்றவர்களுக்கு வழிவிட்டு தாம் விலகி கொண்ட சம்பவம் நடைபெறவில்லை.  

 

அப்போதைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு வெளிநாடு வரதேவையில்லை  இப்ப இருக்கிறவையால் புலம்பெயரிகளிடம் தானே தேடி வருகிறார்கள் கட்டுரையாளர் இங்குள்ள அரசியல் நடைமுறையை சொல்லி கொள்கிறார் சம்பந்தன் சுமத்திரன் அனைவரும் தீர்வு இல்லையென்றால் தாங்கள்  அரசியலில் இருந்து ஒதுங்குவதாய் எத்தனை முறை சொல்லி தமிழ் மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் இப்படி ஆயுதப்போராட்டத்துக்கு முன்பான தமிழர் அரசியலில் சொல்லி விட்டு செயலில் காட்டாமல் பதவியை அனுபவித்த சம்பவங்கள் இருந்ததா ?

 

17 minutes ago, tulpen said:

ஆயுத போராட்டதிற்கு முன்பும் தமிழ் அரசியல் கட்சிகள் அப்படி தான் இருந்தனர்.  ஆயுத இயக்கமும் அதே போல் தலைக்கு மேல்வெள்ளம் வந்து அனைத்துமே நாசமாகும் நிலை வரும்போது கூட அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. 

இந்த கருத்தை எல்லாத்திரிகளிலும் செருகுவது  சேர்வருக்கு தேவையற்ற சுமை என்பதை உணருங்கள் .

Link to comment
Share on other sites

21 minutes ago, பெருமாள் said:

அப்போதைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு வெளிநாடு வரதேவையில்லை  இப்ப இருக்கிறவையால் புலம்பெயரிகளிடம் தானே தேடி வருகிறார்கள் கட்டுரையாளர் இங்குள்ள அரசியல் நடைமுறையை சொல்லி கொள்கிறார் சம்பந்தன் சுமத்திரன் அனைவரும் தீர்வு இல்லையென்றால் தாங்கள்  அரசியலில் இருந்து ஒதுங்குவதாய் எத்தனை முறை சொல்லி தமிழ் மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள் இப்படி ஆயுதப்போராட்டத்துக்கு முன்பான தமிழர் அரசியலில் சொல்லி விட்டு செயலில் காட்டாமல் பதவியை அனுபவித்த சம்பவங்கள் இருந்ததா ?

 

இந்த கருத்தை எல்லாத்திரிகளிலும் செருகுவது  சேர்வருக்கு தேவையற்ற சுமை என்பதை உணருங்கள் .

பெருமாள் சம்பந்தன் சுமந்திரன் மட்டுமல்ல,  மக்களை முட்டாளாக்கும் நடவடிக்கைகளை கடந்த 70 வருடங்களாக இருந்த எல்லா  அத்தனை அரசியல் ஆயுத தலைமைகளுமே செய்தன. சம்பந்தர், சுமந்திரன் அதை தொடர்கின்றனர் என்று கூறலாம். 

அது சரி பெருமாள் உங்களுக்கு  தானே உங்கள் அரசியல் கொள்கையோடு ஒத்துப்போகும் பாரளுமன்றுக்கு பின்கதவால் வந்த, சவப்பெட்டி புகழ் கஜேந்திரன் என்ற அரசியல்வாதி   இருக்கிறாரே. அவரோடு சேர்ந்து தீர்வுக்கு முயற்சிக்கலாமே! 

Link to comment
Share on other sites

35 minutes ago, பெருமாள் said:

இந்த கருத்தை எல்லாத்திரிகளிலும் செருகுவது  சேர்வருக்கு தேவையற்ற சுமை என்பதை உணருங்கள் .

 நடந்த வரலாற்று சம்பவலழங்களை  மறைக்காது பொது மக்கள் பார்வையில்  உண்மைகளை பேசுவது  உங்களுக்கு சுமை என்பது புரிகிறது.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

அது சரி பெருமாள் உங்களுக்கு  தானே உங்கள் அரசியல் கொள்கையோடு ஒத்துப்போகும் பாரளுமன்றுக்கு பின்கதவால் வந்த, சவப்பெட்டி புகழ் கஜேந்திரன் என்ற அரசியல்வாதி   இருக்கிறாரே. அவரோடு சேர்ந்து தீர்வுக்கு முயற்சிக்கலாமே! 

அண்ணே எதிர் கீரைக்கடை சரியாய் இல்லையென்று எத்தனைமுறை எழுதுவது உங்களை போல ஒவ்வொரு திரியிலும் என்னால் முடியாது . அவரும் பேருக்கு சவுண்டு விடுகிறார் என்பது உண்மை .

யார் குற்றியும் அரிசி ஆகட்டும் அங்குள்ள  தமிழ் பேசும் மக்கள் நிம்மதியாக இருக்கனும் இனி நானோ நீங்களோ ஊர் போய்  இருக்கப்போவதில்லை அங்கு இருப்பவர்கள் நிம்மதியாக இருக்கட்டும் .

Link to comment
Share on other sites

Just now, பெருமாள் said:

அண்ணே எதிர் கீரைக்கடை சரியாய் இல்லையென்று எத்தனைமுறை எழுதுவது உங்களை போல ஒவ்வொரு திரியிலும் என்னால் முடியாது . அவரும் பேருக்கு சவுண்டு விடுகிறார் என்பது உண்மை .

பெருமாள் நானும் நீங்களும் அதை தான் கூறுகிறோம். எல்லோருமே சவுண்டு பேர்வழிகள் தான். உந்த தீர்வு மண்ணாங்கட்டிகளை விட்டுவிட்டு முடியுமான வரை  ஏராளனின்  “புலர்” போன்ற அமைப்புகளுக்கு முடிந்த அளவுக்கு உதவி செய்து மக்களின் வாழ்க்கை தரத்தையும் கலவியையும் உயர்ததுவதே எம்மால் செய்யக் கூடிய ஆகக் கூடிய வினைதிறனான செயல். அதற்கு மேல் செய்யக்கூடிய வலு நமது தலைமுறைக்கு இல்லை. 

எதிர்கால சந்ததி அவர்களின் அறிவை உபயோகித்து அவர்களின் சொந்த ஐடியாவில் சிங்கவருடன் சமரசம் பேணி தீர்வை பெறட்டும்.  இந்த சந்ததியால் அது முடியாது என்பது உறுதி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, tulpen said:

நடந்த வரலாற்று சம்பவலழங்களை  மறைக்காது பொது மக்கள் பார்வையில்  உண்மைகளை பேசுவது  உங்களுக்கு சுமை என்பது புரிகிறது.  

தவறுகள் எல்லாப்பக்கமும் இருக்குது குறிப்பிட்டவர்களை மட்டும் திரும்ப திரும்ப சொல்லிக்கொள்வது மற்றைய தவறிழைத்தவர்களை தப்பிக்க வழிவகுத்து விடும் .

Link to comment
Share on other sites

3 minutes ago, பெருமாள் said:

தவறுகள் எல்லாப்பக்கமும் இருக்குது குறிப்பிட்டவர்களை மட்டும் திரும்ப திரும்ப சொல்லிக்கொள்வது மற்றைய தவறிழைத்தவர்களை தப்பிக்க வழிவகுத்து விடும் .

நான் எல்லோரையும் சேர்தது தான் கூறுகிறேன் பெருமாள். எந்த பேதமும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இதானே வேணாங்கிறது ஊர்ல இருந்து தமிழர்க்கு  அரசியல் செய்தால் பரவாயில்லை  சிங்கள அரசுக்கு  அடிமை அரசியல் செய்பவர்களுக்கு மிரட்டலா ? சிரிக்க  முடியலை வேணாம் இப்படியெல்லாம் பகிடி விடக்கூடாது நியாயத்தை கதைப்பம் என்று புனைபெயரில் வரும் நீங்க அநியாயத்தை கதைக்கக்கூடாது .....

சிங்கள அரசியல் மட்டுமா ? 

இந்தியாவை மறந்துவிட்டீர்களே(இலகுவாக)?

 

1 hour ago, tulpen said:

கட்டுரையாளர் எதிர்பார்ப்பது போல் தமிழர் அரசியலில் கடந்த 70 ஆண்டுகளாக எவருமே தமது ஒரு அரசியல் செயற்திட்டத் தோல்வியடைந்தவுடன் தோல்விக்கு பொறுபேற்று மற்றவர்களுக்கு வழிவிட்டு தாம் விலகி கொண்ட சம்பவம் நடைபெறவில்லை.  

ஆயுத போராட்டதிற்கு முன்பும் தமிழ் அரசியல் கட்சிகள் அப்படி தான் இருந்தனர்.  ஆயுத இயக்கமும் அதே போல் தலைக்கு மேல்வெள்ளம் வந்து அனைத்துமே நாசமாகும் நிலை வரும்போது கூட அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. 

 இப்படி நிலைமை இருக்க அதே தமிழர் அரசியல் ஜீனில் இருந்து வந்த சம்பந்தனும் சுமந்திரனும் பழைய தமிழர் அரசியல் தலைமைகளின் முன்மாதிரியையே பின்பற்றுவர் என்பது கூட  தெரியாத அரசியல் கற்று குட்டியா இந்த கட்டுரையாளர்.

இதில் சந்தேகம் வேறு.... ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சனநாயகப் பண்பு சொறீலங்கா வாழ் அரசியல் வியாதிகளிடம் இல்லை. அதுவும் தமிழ் கட்சிகள்.. ஒட்டுக்குழுக்களிடம் அறவே இல்லை.

தோற்றாலும் வென்றாலும் ஏன் துரோகங்களைச் செய்தாலும் கூட.. சாகும் வரை இவர்கள் அரசியல் வியாதிகளாக மக்களைப் பீடித்துக்கொண்டே இருப்பர். அதுதான் சாபக்கேடு அந்த மக்களின். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

மேலை நாடுகளில் அரசியல் தோல்வியென்றால் அந்தந்த அரசியல் தலைவர்கள் பதவி விலகி மற்றவர்களுக்கு இடம் கொடுப்பார்கள்.

என்னுடைய இந்த நம்பிக்கையை உடைத்தவர்கள் டிரம்பும், ஜோன்சனும்.

மூன்றாம் உலக தலைவர்கள் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு விதி மீறல், ஊழல், பொய், களவு, செயல்பாட்டீனம், (பொறுப்பை சரி வர கையாளமல்) மறைமுகமாக ஆயிரகணக்கில் சொந்த மக்கள் சாவுக்கு பொறுப்பு… இப்படி பலது நடந்தும் வெட்கம் கெட்டு பதவியில் ஒட்டி கொண்டிருக்க எல்லா முயற்சியும் செய்தார், செய்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணத்தின் விளிம்பில் நின்று உதவிக்காய் மக்கள் அலறியபோது இவர்கள் எங்கே போய் ஒளிந்து இருந்தார்கள்? ஆறுதல் சொல்ல யாருமற்று இறந்த உறவுகளின் உடல்களோடு புலம்பியபோது இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? மக்களின் அழிவில் அரசியல் செய்யும் விபச்சாரிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

என்னுடைய இந்த நம்பிக்கையை உடைத்தவர்கள் டிரம்பும், ஜோன்சனும்.

மூன்றாம் உலக தலைவர்கள் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவுக்கு விதி மீறல், ஊழல், பொய், களவு, செயல்பாட்டீனம், (பொறுப்பை சரி வர கையாளமல்) மறைமுகமாக ஆயிரகணக்கில் சொந்த மக்கள் சாவுக்கு பொறுப்பு… இப்படி பலது நடந்தும் வெட்கம் கெட்டு பதவியில் ஒட்டி கொண்டிருக்க எல்லா முயற்சியும் செய்தார், செய்கிறார்.

உலகில் பலர் அரசியல்வாதிகள் உட்பட  நீங்கள் சொன்ன அந்த இருவரையும் அரசியல் தலைவர்களாக கணிப்பதே இல்லை.அந்த நாட்டின் மீதுள்ள மரியாதையின் நிமித்தம் கைகுலுக்கி உரையாடுகின்றார்கள். 

நீங்கள் என்னடாவெண்டால்......? 🤣

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.