Jump to content

2 ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

2 ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை

December 11, 2021
 

 

spacer.png
இலங்கை ராணுவம் பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளநிலையில் மனித உரிமை மீறலுக்காக 2 இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2008/2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 8 தமிழர்களை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கே இவ்வாறு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு ள்ளது. மேலும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வாவிற்கும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் எங்கு நடந்தாலும் அவற்றின் மீது கவனத்தை ஈர்க்கவும் பொறுப்பை மேம்படுத்தவும் அதிகாரங்களை பயன்படுத்துவது மூலம் அந்த உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதாக இது தொடா்பில் அமெரிக்கா தொிவித்துள்ளது

 

https://globaltamilnews.net/2021/170233

Link to comment
Share on other sites

தமிழர்கள் கொலை, இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்தது அமெரிக்கா

பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இலங்கை இராணுவ அதிகாரிகள் இருவருக்கு எதிராக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகளை விதித்துள்ளது.
Navy-Sampath-700x375.jpg

இலங்கை கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2008 முதல் 2009 வரை, மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கூறியுள்ளது.

இலங்கை கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கமாண்டர் சந்தன ஹெட்டியாராச்சி குறித்த காலப் பகுதியில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழர்களை படுகொலை செய்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தெரிவித்து சுனில் ரத்நாயக்கவிற்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடை விதித்துள்ளது.

மேலும் இலங்கையில் நடந்த மொத்த மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு ஆதரவாக அமெரிக்க எடுக்கும் நடவடிக்கையே இந்த தடை என அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் எங்கு நடந்தாலும் அவற்றுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கும் என்ற உறுதிப்பாட்டினையும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் வழங்கியுள்ளார்.

மிருசுவில் பகுதியில் 8 தமிழர்களை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த சுனில் ரத்நாயக்கவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வருடம் பொது மன்னிப்பை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2021/1255876

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

11 பேரை 8 பேரை கொன்றவங்களுக்கு மட்டுமல்ல.. நூற்றுக்கணக்கில் கொன்றுவங்களுக்கு ஆயிரக்கணக்கில் கொன்றவங்களுக்கு ஏன் இன்னும் தடை போடவில்லை..??!

செம்மணி புதைகுழிகளின் சூத்திரதாரியான.. சரத் பொன்சேகாவுக்கும் குடும்பத்திற்கும்.. முற்றாகத் தடை விதிக்கனும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லப்போனால் தமிழரை கொன்று குவித்த சிங்கள அரசுகள், இராணுவம், ஊக்குவித்த புத்த சங்கத்தினர் இப்படி பல அடங்கும். குறைந்தது மனித உரிமை மீறலில் ஈடுபட்ட கட்டளைத்தளபதி, பாதுகாப்பு அமைச்சர் எந்த தடையுமில்லாமல் பாதுகாப்பாய் உலகம் சுத்துறார்கள். தமக்கு இட்ட கட்டளையை செயற்படுத்தியவர்களுக்கு தடை, தண்டனை அனுபவிக்க வேண்டியவர் தான் அரசியல் சுகம் அனுபவிக்க, தன் கட்டளையை செயற்படுத்தியவர்கள் தண்டனை அனுபவிப்பதை  ஏற்காமல்,  தானும் சிறை செல்லாமல் தடுப்பதற்கு சட்டத்தை மாற்றி, அவர்களுக்கு விடுதலையும், பதவியும் கொடுத்து கேள்விக்கே இடமில்லாமல் செய்து தப்பிக்கொண்டார். இவர்களோ தளபதிகளை தண்டித்தால் தாங்களும் சிக்கிக்கொள்வோம் என்பதற்காக சில சுலோகங்களை பிடித்துக்கொண்டு "மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் எங்கு நடந்தாலும் அவற்றுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கையை அமெரிக்கா எடுக்கும்"   நடிக்கிறார்கள் அவ்வளவே!                          

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க   ....இவருக்கு அமேரிக்கா தடை விதித்தால் தான் என்ன இல்லை என்றால் தான் என்ன....நிச்சயமாக இவரிடம் பாஸ்போர்ட்டே இருக்காது ...பிறகு ஏன் தடை...சாப்பிடவே பணம் இருக்காது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையோட பேரம் படியல்ல  போல tw_lol:

Link to comment
Share on other sites

13 hours ago, putthan said:

சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க   ....இவருக்கு அமேரிக்கா தடை விதித்தால் தான் என்ன இல்லை என்றால் தான் என்ன....நிச்சயமாக இவரிடம் பாஸ்போர்ட்டே இருக்காது ...பிறகு ஏன் தடை...சாப்பிடவே பணம் இருக்காது....

8 தமிழர்களை கொன்றமையால் கோத்தாவும் சிங்கள தேசியவாதிகளும் வெகுமதிகளை அள்ளிக் கொடுத்து கோடீஸ்வரனாக்கி இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நிழலி said:

8 தமிழர்களை கொன்றமையால் கோத்தாவும் சிங்கள தேசியவாதிகளும் வெகுமதிகளை அள்ளிக் கொடுத்து கோடீஸ்வரனாக்கி இருப்பார்கள்.

இருக்கும் இருக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.