Jump to content

நான் எனும் நான் - நிழலி


Recommended Posts

நான் எனும் நான்
------------

நான் இன்னும்
எனக்கும் நானே
சொல்லாத வார்த்தைகள்
என்னிடம் உள்ளன
அந்த வார்த்தைகளின் அடியில்
தேங்கி கிடக்கின்றது
பெருங் காடென விரியும்
துரோகம்

நான் எனக்கு
எழுதாத சொற்கள் 
நிறைய உள்ளன
அதன் உச்சரிப்புகளில்
மறைந்து கிடக்கின்றன
நான் பலரை தூற்ற நினைத்த
வசவுகள்

நான் பார்க்க விரும்பாத
பல பக்கங்கள் உள்ளன
அதன் வரிகளில் 
நிறைந்து கிடக்கின்றன
இரக்கமற்ற நினைவுகளும்
ஈரம் காய்ந்த என்
உணர்வுகளும்

நான் கேட்க மறுக்கும்
பாடல்கள் உள்ளன
தன் வரிகளில் 
கண்ணீரையும்
துரோகங்களையும்
காட்டாறு எனப் பாயும்
தோல்விகளின் வரிகளையும்
சுமந்த படி

நான் பார்க்க விரும்பாத
ஒரு முகம் எனக்குள்ளது
அதன் அத்தனை கண்களிலும்
வழிகின்றது ஊழிப்
பெருங்கடலும்
பெருங் காமமும்

இன்னும் முழுமை பெறாத
விம்பம் ஒன்று எனக்கு
உள்ளது
தினமும் செதுக்கியும்
சிதைத்தும்
ரணப்படுத்தியும்
முழுமை பெற்றும்
உடைந்தும் உடையாமலும்
தளம்பிக் கொண்டு...

- நிழலி

December 11,2021

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எல்லோருக்குள்ளும் ஒரு ஊத்தையனும் நல்லவனும் இருப்பதாக எஸ்.பொ எழுதியது நினைவில் வந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னை உணர்ந்தவன் ஞானி ......நீங்கள் இப்பொழுது ஞானியாகிக் கொண்டு வருகின்றீர்கள்.... அடிக்கடி இப்படி எழுதாதீர்கள் இளைஞிகள் உங்கள் வயதை கண்டு பிடித்து விடுவார்கள்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

தன்னை உணர்ந்தவன் ஞானி ......நீங்கள் இப்பொழுது ஞானியாகிக் கொண்டு வருகின்றீர்கள்.... அடிக்கடி இப்படி எழுதாதீர்கள் இளைஞிகள் உங்கள் வயதை கண்டு பிடித்து விடுவார்கள்.......!  👍

நிழலியானந்தா என்று சும்மாவா சொல்கிறோம்....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

தன்னை உணர்ந்தவன் ஞானி ......நீங்கள் இப்பொழுது ஞானியாகிக் கொண்டு வருகின்றீர்கள்.... அடிக்கடி இப்படி எழுதாதீர்கள் இளைஞிகள் உங்கள் வயதை கண்டு பிடித்து விடுவார்கள்.......!  👍

மனிதவாழ்வின் பருவமாற்றம் மனிதர்களின் எழுத்துகள் ஊடாகவும் பிரதிபிலிப்பதை பலியாக்கிவிடாதீர்களையா!  தன்னிலையூடாக மற்றையோரை சிந்திக்கவைத்தலும் ஒருவகை. அதுவே ஒரு படைப்பாளனின் திறனும் ஆகும். 

Link to comment
Share on other sites

நாம் எங்களை வடித்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும் முற்றுப்பெறாத சிற்பங்களாக உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் நாங்கள் விலங்குகள், பல்லாயிரம் ஆண்டுகால தொடர் சங்கிலி அவ்வளவு சீக்கிரம் அறாது தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

தன்னை உணர்ந்தவன் ஞானி ......நீங்கள் இப்பொழுது ஞானியாகிக் கொண்டு வருகின்றீர்கள்.... அடிக்கடி இப்படி எழுதாதீர்கள் இளைஞிகள் உங்கள் வயதை கண்டு பிடித்து விடுவார்கள்.......!  👍

தோழர் அடுத்து பிரம்மத்தை எட்டிப்பார்க்கும் சமாதி நிலைதான்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் அடுத்து பிரம்மத்தை எட்டிப்பார்க்கும் சமாதி நிலைதான்..👌

நான் நினைக்கேல்ல தோழர், அவர் கார் கழுவுறதற்கே இங்குதான் போறவர்......பிரமத்துக்கு போறதற்கு  இடையில்  வழுக்கி விழுந்திடுவார்......!   😂

Win A Wash | 106.9 The Wolf

Link to comment
Share on other sites

 

On 11/12/2021 at 04:27, கிருபன் said:

 

எல்லோருக்குள்ளும் ஒரு ஊத்தையனும் நல்லவனும் இருப்பதாக எஸ்.பொ எழுதியது நினைவில் வந்தது!

உண்மை... எல்லா ஊத்தைகளையும் கவிதையில் கொண்டு வந்தால் 200 வரிகளுக்கும் மேலாகிவிடும் என்பதால் மிச்சசொச்சம் ஒன்றையும் எழுதவில்லை

 

On 11/12/2021 at 04:59, suvy said:

தன்னை உணர்ந்தவன் ஞானி ......நீங்கள் இப்பொழுது ஞானியாகிக் கொண்டு வருகின்றீர்கள்.... அடிக்கடி இப்படி எழுதாதீர்கள் இளைஞிகள் உங்கள் வயதை கண்டு பிடித்து விடுவார்கள்.......!  👍

இப்பவெல்லாம் பழுத்த அனுபவசாலிகள் மீதுதான் இளைஞிகளுக்கு ஆர்வம் அதிகமாம் என்று வேதாளமுனி சொல்கின்றார்.

 

On 11/12/2021 at 06:38, Nathamuni said:

நிழலியானந்தா என்று சும்மாவா சொல்கிறோம்....😁

என் சிஷ்யனாக சேரும் எண்ணம் உள்ளதா? 

 

On 11/12/2021 at 08:58, nochchi said:

மனிதவாழ்வின் பருவமாற்றம் மனிதர்களின் எழுத்துகள் ஊடாகவும் பிரதிபிலிப்பதை பலியாக்கிவிடாதீர்களையா!  தன்னிலையூடாக மற்றையோரை சிந்திக்கவைத்தலும் ஒருவகை. அதுவே ஒரு படைப்பாளனின் திறனும் ஆகும். 

உண்மை நொச்சி,

எம்மை ஓரளவுக்காவது உணரத் தொடங்குவதற்கே பாதி ஆயுளுக்கும் மேல் ஆகின்றது. எம் பிம்பம் எதுவென்று நாம் அறியும் போது தான் மற்றவர்கள் பற்றி நாம் வைத்திருக்கும் கணிப்பீடுகள் எல்லாம் மாறுகின்றது. தன்னையே சரியாக உணரமுடியுது இல்லை, இதுக்குள் எப்படி நாம் மற்றவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கின்றோம் என்ற கேள்வி எழுகின்றது.

On 11/12/2021 at 10:18, nunavilan said:

நாம் எங்களை வடித்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும் முற்றுப்பெறாத சிற்பங்களாக உள்ளோம்.

அப்படி முற்றுப் பெறும் போது, நாம் இந்தவுலகில் இருக்க மாட்டோம்.

On 11/12/2021 at 11:35, ஏராளன் said:

அடிப்படையில் நாங்கள் விலங்குகள், பல்லாயிரம் ஆண்டுகால தொடர் சங்கிலி அவ்வளவு சீக்கிரம் அறாது தானே!

உண்மையில் ஏனைய விலங்குகள் தம்மைப் பற்றிய போலி விம்பங்களைக் கொண்டு இருப்பதில்லை. ஆனால் மனுசர் நாம் தான் எல்லா போலிகளையும் சுமந்து கொண்டு எம் முகத்தையே நாம் மறந்து விடுகின்றோம்.

On 12/12/2021 at 01:13, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் அடுத்து பிரம்மத்தை எட்டிப்பார்க்கும் சமாதி நிலைதான்..👌

பிரம்மமும் அ-பிரமும் எல்லாம் இருப்பது நாம் வாழும் வாழ்வில் தானே. சமாதி அடைந்த பின் எதுவுமில்லை.

On 12/12/2021 at 04:08, suvy said:

நான் நினைக்கேல்ல தோழர், அவர் கார் கழுவுறதற்கே இங்குதான் போறவர்......பிரமத்துக்கு போறதற்கு  இடையில்  வழுக்கி விழுந்திடுவார்......!   😂

Win A Wash | 106.9 The Wolf

அன்றைக்கு போன பின் அந்தப் பக்கம் போக மனிசி விடுகிறார் இல்லை.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நிழலி said:

 

உண்மை... எல்லா ஊத்தைகளையும் கவிதையில் கொண்டு வந்தால் 200 வரிகளுக்கும் மேலாகிவிடும் என்பதால் மிச்சசொச்சம் ஒன்றையும் எழுதவில்லை

 

இப்பவெல்லாம் பழுத்த அனுபவசாலிகள் மீதுதான் இளைஞிகளுக்கு ஆர்வம் அதிகமாம் என்று வேதாளமுனி சொல்கின்றார்.

 

என் சிஷ்யனாக சேரும் எண்ணம் உள்ளதா? 

 

உண்மை நொச்சி,

எம்மை ஓரளவுக்காவது உணரத் தொடங்குவதற்கே பாதி ஆயுளுக்கும் மேல் ஆகின்றது. எம் பிம்பம் எதுவென்று நாம் அறியும் போது தான் மற்றவர்கள் பற்றி நாம் வைத்திருக்கும் கணிப்பீடுகள் எல்லாம் மாறுகின்றது. தன்னையே சரியாக உணரமுடியுது இல்லை, இதுக்குள் எப்படி நாம் மற்றவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கின்றோம் என்ற கேள்வி எழுகின்றது.

அப்படி முற்றுப் பெறும் போது, நாம் இந்தவுலகில் இருக்க மாட்டோம்.

உண்மையில் ஏனைய விலங்குகள் தம்மைப் பற்றிய போலி விம்பங்களைக் கொண்டு இருப்பதில்லை. ஆனால் மனுசர் நாம் தான் எல்லா போலிகளையும் சுமந்து கொண்டு எம் முகத்தையே நாம் மறந்து விடுகின்றோம்.

பிரம்மமும் அ-பிரமும் எல்லாம் இருப்பது நாம் வாழும் வாழ்வில் தானே. சமாதி அடைந்த பின் எதுவுமில்லை.

அன்றைக்கு போன பின் அந்தப் பக்கம் போக மனிசி விடுகிறார் இல்லை.🤣

இதை எல்லாம் வீட்ல சொல்லலாமா....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.