Jump to content

நான் எனும் நான் - நிழலி


Recommended Posts

நான் எனும் நான்
------------

நான் இன்னும்
எனக்கும் நானே
சொல்லாத வார்த்தைகள்
என்னிடம் உள்ளன
அந்த வார்த்தைகளின் அடியில்
தேங்கி கிடக்கின்றது
பெருங் காடென விரியும்
துரோகம்

நான் எனக்கு
எழுதாத சொற்கள் 
நிறைய உள்ளன
அதன் உச்சரிப்புகளில்
மறைந்து கிடக்கின்றன
நான் பலரை தூற்ற நினைத்த
வசவுகள்

நான் பார்க்க விரும்பாத
பல பக்கங்கள் உள்ளன
அதன் வரிகளில் 
நிறைந்து கிடக்கின்றன
இரக்கமற்ற நினைவுகளும்
ஈரம் காய்ந்த என்
உணர்வுகளும்

நான் கேட்க மறுக்கும்
பாடல்கள் உள்ளன
தன் வரிகளில் 
கண்ணீரையும்
துரோகங்களையும்
காட்டாறு எனப் பாயும்
தோல்விகளின் வரிகளையும்
சுமந்த படி

நான் பார்க்க விரும்பாத
ஒரு முகம் எனக்குள்ளது
அதன் அத்தனை கண்களிலும்
வழிகின்றது ஊழிப்
பெருங்கடலும்
பெருங் காமமும்

இன்னும் முழுமை பெறாத
விம்பம் ஒன்று எனக்கு
உள்ளது
தினமும் செதுக்கியும்
சிதைத்தும்
ரணப்படுத்தியும்
முழுமை பெற்றும்
உடைந்தும் உடையாமலும்
தளம்பிக் கொண்டு...

- நிழலி

December 11,2021

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எல்லோருக்குள்ளும் ஒரு ஊத்தையனும் நல்லவனும் இருப்பதாக எஸ்.பொ எழுதியது நினைவில் வந்தது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தன்னை உணர்ந்தவன் ஞானி ......நீங்கள் இப்பொழுது ஞானியாகிக் கொண்டு வருகின்றீர்கள்.... அடிக்கடி இப்படி எழுதாதீர்கள் இளைஞிகள் உங்கள் வயதை கண்டு பிடித்து விடுவார்கள்.......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

தன்னை உணர்ந்தவன் ஞானி ......நீங்கள் இப்பொழுது ஞானியாகிக் கொண்டு வருகின்றீர்கள்.... அடிக்கடி இப்படி எழுதாதீர்கள் இளைஞிகள் உங்கள் வயதை கண்டு பிடித்து விடுவார்கள்.......!  👍

நிழலியானந்தா என்று சும்மாவா சொல்கிறோம்....😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

தன்னை உணர்ந்தவன் ஞானி ......நீங்கள் இப்பொழுது ஞானியாகிக் கொண்டு வருகின்றீர்கள்.... அடிக்கடி இப்படி எழுதாதீர்கள் இளைஞிகள் உங்கள் வயதை கண்டு பிடித்து விடுவார்கள்.......!  👍

மனிதவாழ்வின் பருவமாற்றம் மனிதர்களின் எழுத்துகள் ஊடாகவும் பிரதிபிலிப்பதை பலியாக்கிவிடாதீர்களையா!  தன்னிலையூடாக மற்றையோரை சிந்திக்கவைத்தலும் ஒருவகை. அதுவே ஒரு படைப்பாளனின் திறனும் ஆகும். 

Link to comment
Share on other sites

நாம் எங்களை வடித்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும் முற்றுப்பெறாத சிற்பங்களாக உள்ளோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் நாங்கள் விலங்குகள், பல்லாயிரம் ஆண்டுகால தொடர் சங்கிலி அவ்வளவு சீக்கிரம் அறாது தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, suvy said:

தன்னை உணர்ந்தவன் ஞானி ......நீங்கள் இப்பொழுது ஞானியாகிக் கொண்டு வருகின்றீர்கள்.... அடிக்கடி இப்படி எழுதாதீர்கள் இளைஞிகள் உங்கள் வயதை கண்டு பிடித்து விடுவார்கள்.......!  👍

தோழர் அடுத்து பிரம்மத்தை எட்டிப்பார்க்கும் சமாதி நிலைதான்..👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் அடுத்து பிரம்மத்தை எட்டிப்பார்க்கும் சமாதி நிலைதான்..👌

நான் நினைக்கேல்ல தோழர், அவர் கார் கழுவுறதற்கே இங்குதான் போறவர்......பிரமத்துக்கு போறதற்கு  இடையில்  வழுக்கி விழுந்திடுவார்......!   😂

Win A Wash | 106.9 The Wolf

Link to comment
Share on other sites

 

On 11/12/2021 at 04:27, கிருபன் said:

 

எல்லோருக்குள்ளும் ஒரு ஊத்தையனும் நல்லவனும் இருப்பதாக எஸ்.பொ எழுதியது நினைவில் வந்தது!

உண்மை... எல்லா ஊத்தைகளையும் கவிதையில் கொண்டு வந்தால் 200 வரிகளுக்கும் மேலாகிவிடும் என்பதால் மிச்சசொச்சம் ஒன்றையும் எழுதவில்லை

 

On 11/12/2021 at 04:59, suvy said:

தன்னை உணர்ந்தவன் ஞானி ......நீங்கள் இப்பொழுது ஞானியாகிக் கொண்டு வருகின்றீர்கள்.... அடிக்கடி இப்படி எழுதாதீர்கள் இளைஞிகள் உங்கள் வயதை கண்டு பிடித்து விடுவார்கள்.......!  👍

இப்பவெல்லாம் பழுத்த அனுபவசாலிகள் மீதுதான் இளைஞிகளுக்கு ஆர்வம் அதிகமாம் என்று வேதாளமுனி சொல்கின்றார்.

 

On 11/12/2021 at 06:38, Nathamuni said:

நிழலியானந்தா என்று சும்மாவா சொல்கிறோம்....😁

என் சிஷ்யனாக சேரும் எண்ணம் உள்ளதா? 

 

On 11/12/2021 at 08:58, nochchi said:

மனிதவாழ்வின் பருவமாற்றம் மனிதர்களின் எழுத்துகள் ஊடாகவும் பிரதிபிலிப்பதை பலியாக்கிவிடாதீர்களையா!  தன்னிலையூடாக மற்றையோரை சிந்திக்கவைத்தலும் ஒருவகை. அதுவே ஒரு படைப்பாளனின் திறனும் ஆகும். 

உண்மை நொச்சி,

எம்மை ஓரளவுக்காவது உணரத் தொடங்குவதற்கே பாதி ஆயுளுக்கும் மேல் ஆகின்றது. எம் பிம்பம் எதுவென்று நாம் அறியும் போது தான் மற்றவர்கள் பற்றி நாம் வைத்திருக்கும் கணிப்பீடுகள் எல்லாம் மாறுகின்றது. தன்னையே சரியாக உணரமுடியுது இல்லை, இதுக்குள் எப்படி நாம் மற்றவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கின்றோம் என்ற கேள்வி எழுகின்றது.

On 11/12/2021 at 10:18, nunavilan said:

நாம் எங்களை வடித்துக் கொண்டு இருக்கிறோம். இன்னும் முற்றுப்பெறாத சிற்பங்களாக உள்ளோம்.

அப்படி முற்றுப் பெறும் போது, நாம் இந்தவுலகில் இருக்க மாட்டோம்.

On 11/12/2021 at 11:35, ஏராளன் said:

அடிப்படையில் நாங்கள் விலங்குகள், பல்லாயிரம் ஆண்டுகால தொடர் சங்கிலி அவ்வளவு சீக்கிரம் அறாது தானே!

உண்மையில் ஏனைய விலங்குகள் தம்மைப் பற்றிய போலி விம்பங்களைக் கொண்டு இருப்பதில்லை. ஆனால் மனுசர் நாம் தான் எல்லா போலிகளையும் சுமந்து கொண்டு எம் முகத்தையே நாம் மறந்து விடுகின்றோம்.

On 12/12/2021 at 01:13, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தோழர் அடுத்து பிரம்மத்தை எட்டிப்பார்க்கும் சமாதி நிலைதான்..👌

பிரம்மமும் அ-பிரமும் எல்லாம் இருப்பது நாம் வாழும் வாழ்வில் தானே. சமாதி அடைந்த பின் எதுவுமில்லை.

On 12/12/2021 at 04:08, suvy said:

நான் நினைக்கேல்ல தோழர், அவர் கார் கழுவுறதற்கே இங்குதான் போறவர்......பிரமத்துக்கு போறதற்கு  இடையில்  வழுக்கி விழுந்திடுவார்......!   😂

Win A Wash | 106.9 The Wolf

அன்றைக்கு போன பின் அந்தப் பக்கம் போக மனிசி விடுகிறார் இல்லை.🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, நிழலி said:

 

உண்மை... எல்லா ஊத்தைகளையும் கவிதையில் கொண்டு வந்தால் 200 வரிகளுக்கும் மேலாகிவிடும் என்பதால் மிச்சசொச்சம் ஒன்றையும் எழுதவில்லை

 

இப்பவெல்லாம் பழுத்த அனுபவசாலிகள் மீதுதான் இளைஞிகளுக்கு ஆர்வம் அதிகமாம் என்று வேதாளமுனி சொல்கின்றார்.

 

என் சிஷ்யனாக சேரும் எண்ணம் உள்ளதா? 

 

உண்மை நொச்சி,

எம்மை ஓரளவுக்காவது உணரத் தொடங்குவதற்கே பாதி ஆயுளுக்கும் மேல் ஆகின்றது. எம் பிம்பம் எதுவென்று நாம் அறியும் போது தான் மற்றவர்கள் பற்றி நாம் வைத்திருக்கும் கணிப்பீடுகள் எல்லாம் மாறுகின்றது. தன்னையே சரியாக உணரமுடியுது இல்லை, இதுக்குள் எப்படி நாம் மற்றவர்களைப் பற்றி மதிப்பீடு செய்கின்றோம் என்ற கேள்வி எழுகின்றது.

அப்படி முற்றுப் பெறும் போது, நாம் இந்தவுலகில் இருக்க மாட்டோம்.

உண்மையில் ஏனைய விலங்குகள் தம்மைப் பற்றிய போலி விம்பங்களைக் கொண்டு இருப்பதில்லை. ஆனால் மனுசர் நாம் தான் எல்லா போலிகளையும் சுமந்து கொண்டு எம் முகத்தையே நாம் மறந்து விடுகின்றோம்.

பிரம்மமும் அ-பிரமும் எல்லாம் இருப்பது நாம் வாழும் வாழ்வில் தானே. சமாதி அடைந்த பின் எதுவுமில்லை.

அன்றைக்கு போன பின் அந்தப் பக்கம் போக மனிசி விடுகிறார் இல்லை.🤣

இதை எல்லாம் வீட்ல சொல்லலாமா....!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி @கந்தப்பு நீங்களும் கலந்துகொள்ளவேண்டும்😀 @முதல்வன், 19 ஆவது கேள்விக்கு அணியின் பெயரைத் தாருங்கள் அல்லது RR என்று போட்டுக்கொள்ளவா?
    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.