Jump to content

பிரபஞ்சப் பேரழகே..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

large.263308094_4829197163799704_607340295798998412_n.jpg.f2ebfc898ee0aa3a9f5265ad54d8a396.jpg

 

என் அன்பு யாழ் இதயங்களுக்கு..

தமிழ்நாட்டின் பிரபல ஓவியர்மாருதிஅவர்களின் ஓவியம் சிறுவயதிலிருந்தே எனக்குப் பிடிக்கும்.

அவர்களின் இந்த உயிர்ப்போடிருக்கும் ஓவியநாயகிக்கு!

படம் சொல்லும் கவிதை..! 

**********************

கொஞ்சிடும் கெஞ்சிடும் பொன்னழகே

கொவ்வையின் பழந்தந்த மென்னுதடே

மிஞ்சிடும் மேனியின் இருகனி ரசமே

மிஞ்சாத இனிமையின் கொடியிடையே!

 

கொத்தி இழுக்கின்ற மூக்குத்தி பூவே

குறும்புகள் செய்கின்ற கண் இரு விழியே

கருமேகச் சுருள் தந்த காதோர முடியே

காலோடு கவிபாடும் கொலிசின்ரஒலியே!

 

கரைதொட்டு பின் திரும்பும்

கனிவான அலைபோல்-கால்

தொடை பட்டு மேல்படரும் 

கரை போட்ட உடையே!

 

கலகலக்கும் உன் களுத்து 

நிறைவான நகையே

கண்புருவ வானவில்லின் 

அம்போடு வில்லே! 

 

கைநிறைந்த வளையல்களின் 

விரல்பேசும் மொழியே 

கரு இரவில் தேன்சுரக்கும் 

மறைவான நிலவே!

 

பெண்ணென்ற பெருமதிப்பு 

பிரபஞ்ச பேரழகே-உன்

பிறப்பால் தான் உலகெங்கும் 

உயிர்களுக்கு மகிழ்வே!

அன்புடன்-பசுவூர்க்கோபி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பசுவூர்க்கோபி said:

large.263308094_4829197163799704_607340295798998412_n.jpg.f2ebfc898ee0aa3a9f5265ad54d8a396.jpg

 

 

பெண்ணென்ற பெருமதிப்பு 

பிரபஞ்ச பேரழகே-உன்

பிறப்பால் தான் உலகெங்கும் 

உயிர்களுக்கு(ஆண்களுக்கு) மகிழ்வே!

அன்புடன்-பசுவூர்க்கோபி.

பெண் என்ற பேரழகி ஒரு புதையல், அதை தேடி தோட்டி எடுப்பது சவால். ஓவ்வொரு வீணையையும் மீண்டும் போது வரும் சுதி தனி😂

நல்லதொரு கவிதை, பாராட்டுக்கள்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையை வாசிக்கவா

சிற்பத்தை ரசித்துக் கொண்டிருக்கவா

ஒரு முடிவுக்கும் வரமுடியவில்லை.
அருமை,அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓவியர் மாருதியின் ஓவியங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை ...... இந்த ஓவியத்துக்கு ஒரு கவிதையென்ன நூறு கவிதை எழுதலாம்......அழகான கவிதை கோபி பாராட்டுக்கள்.....!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, பசுவூர்க்கோபி said:

large.263308094_4829197163799704_607340295798998412_n.jpg.f2ebfc898ee0aa3a9f5265ad54d8a396.jpg

 

என் அன்பு யாழ் இதயங்களுக்கு..

தமிழ்நாட்டின் பிரபல ஓவியர்மாருதிஅவர்களின் ஓவியம் சிறுவயதிலிருந்தே எனக்குப் பிடிக்கும்.

அவர்களின் இந்த உயிர்ப்போடிருக்கும் ஓவியநாயகிக்கு!

படம் சொல்லும் கவிதை..! 

**********************

கொஞ்சிடும் கெஞ்சிடும் பொன்னழகே

கொவ்வையின் பழந்தந்த மென்னுதடே

மிஞ்சிடும் மேனியின் இருகனி ரசமே

மிஞ்சாத இனிமையின் கொடியிடையே!

 

கொத்தி இழுக்கின்ற மூக்குத்தி பூவே

குறும்புகள் செய்கின்ற கண் இரு விழியே

கருமேகச் சுருள் தந்த காதோர முடியே

காலோடு கவிபாடும் கொலிசின்ரஒலியே!

 

கரைதொட்டு பின் திரும்பும்

கனிவான அலைபோல்-கால்

தொடை பட்டு மேல்படரும் 

கரை போட்ட உடையே!

 

கலகலக்கும் உன் களுத்து 

நிறைவான நகையே

கண்புருவ வானவில்லின் 

அம்போடு வில்லே! 

 

கைநிறைந்த வளையல்களின் 

விரல்பேசும் மொழியே 

கரு இரவில் தேன்சுரக்கும் 

மறைவான நிலவே!

 

பெண்ணென்ற பெருமதிப்பு 

பிரபஞ்ச பேரழகே-உன்

பிறப்பால் தான் உலகெங்கும் 

உயிர்களுக்கு மகிழ்வே!

அன்புடன்-பசுவூர்க்கோபி.

அருமையான கவிதை பகிர்வதற்கு நன்றிகள் தோழர்.💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2021 at 05:53, பசுவூர்க்கோபி said:

கரைதொட்டு பின் திரும்பும்

கனிவான அலைபோல்-கால்

தொடை பட்டு மேல்படரும் 

கரை போட்ட உடையே!

 

கலகலக்கும் உன் களுத்து 

நிறைவான நகையே

கண்புருவ வானவில்லின் 

அம்போடு வில்லே! 

 

 

இரசனை நிறைந்த கவிஞர்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.