Jump to content

யுத்த சாட்சியம்! தியாவின் "எறிகணை" நாவல்! - பொன்.புத்திசிகாமணி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
erikanai-1024x763.jpg
 
இந்த நாவலைப் பல நாட்களுக்கு முன் வாசித்திருந்தேன்.எனது கருத்தைப் பதிவு செய்யலாம் என்றிருந்த வேளையில் தான் அந்தக் கருத்துப் பகிர்வு முகநூலில் வெளிவந்தது.
 
அதுதான் பிரதம எழுத்தாளரும்,எனக்கும் பிடித்தவரான "நிலக்கிளி"தந்த ஆசிரியர் திரு பாலமனோகரன் அவர்களது விமர்சனம்.
இதைவிட நான் என்னதான் எழுதப் போகிறேன் என்று தள்ளிப்போட்டேன்.
 
அவர் மிகவும் சிறப்பாகப் பதிவு செய்திருந்தார். அதன் பிறகும் எழுதலாம் என்றிருந்த வேளையில் மீண்டும் ஒரு விமர்சனம் வந்தது.
மேலும் கொஞ்சம் தாமதமானது. அவர்கள் சொல்லாததை நான் என்ன சொல்லிவிடப் போகிறேன் .
 
இனியும் தாமதமாக்கக் கூடாது என்பதை நினைத்தே இதனைப் பதிவு செய்கிறேன். இது ,நடந்து முடிந்த யுத்தத்திற்கான சாட்சி யென்றே சொல்லலாம்.
சொந்தப் பிரதேசத்திலிருந்து,அதுவும் சொந்த வீட்டிலிருந்து இடம்பெயர்வதான கொடுமை மிகவும் மோசமானது.யுத்தகாலத்தில் தமிழர் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் அவர்கள் பட்ட அவஸ்த்தைகள் சொல்லி மாளாது. அதனை இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது.
 
குடும்பத் தலைவனை இழந்த ஒரு குடும்பம் படுகின்ற சோதனையும்,வேதனையும் இந்நாவலின் முக்கிய கருவாகும். கணவன் சிவா ,யுத்தத்தால் கொலை செய்யப்பட்ட பின். குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மனைவி ,புவனா,தனது பிள்ளைகளுடன் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் ஆசிரியரால் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
 
வயிற்றுக்கும்,வாழ்வுக்குமான சோதனை மிகுந்த இவர்களது வாழ்க்கை கத்திபோல் நடப்பது போல் சொல்லப்பட்டிருக்கிறது. இராணுவம் செல்லடிக்கும் நேரங்களில் அவர்கள் பாதுகாப்பைத் தேடி ஓடும் காட்சிகள்,ஐயோ அந்தக் குடும்பத்திற்கு எதுவுமே நடந்து விடக் கூடாது ,என வாசிப்பவர்களுக்கு ஒரு பரதவிப்பை ஏற்படுத்துகிறது.
 
இது ஆசிரியரின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதலாம்.சின்ன வாக்கியங்கள்,யதார்த்த மொழிநடை.கஸ்ரங்களைச் சந்தித்த ஒரு பிரதிநிதியாலேயே தான் இவ்வாறு பதிவு செய்ய முடிந்திருக்கிறது.
 
இந்தக் கதையின் கதாநாயகி புவனா என்றே எடுத்துக் கொண்டேன்.எத்தனை இழப்புகளைச் சந்தித்த போதும்,அதனைச் சவாலாக எடுத்துக்கொண்டு ,பருந்திற்கு பயந்து,குஞ்சுகளை தனது இறகிற்குள் பாது காக்கும் தாய்க்கோழி போல் ,அந்தத் தாயை என்னால் நோக்க முடிந்தது. தாயின் சுமையைக் குறைப்பதற்காக படிக்கின்ற சின்னவயதில் பொறுப்போடு நடந்து கொள்கிற மூத்த மகன் செல்வனின் பாத்திரப் படைப்பு பெரு மரியாதையைத் தருகிறது.
 
பாதிக்குமேல் அவனே கதாநாயகனாகி விடுகிறான்.இடம் விட்டு இடம் மாறும் போதெல்லாம் சைக்கிள் பிரயாணத்தில் அவர்கள் படும் பாடுகள் ,அதனை இயல்பாக எடுத்துக் கொள்ளும் போக்கு. கதாபாத்திரங்களோடு எங்களையும் பயணிக்க வைக்கிறது.
 
ரேணு,நதி என்கிற சகோதரிகளை பாதுகாக்கும் பொறுப்புள்ள அண்ணனாக மாறும் செல்வன் .தாய்க்கும் நம்பிக்கைக்குரிய தனயனாக மாறிவருது கதைக்கு வலுச்சேர்க்கிறது.
 
வன்னியப் பற்றிய காட்சிப் பகிர்வும்,வளங்கள் பற்றிய செய்திகளும் வாசிக்கும் போது. மகிழ்ச்சியைத் தருகிறது. கோழிய குளம்,கொம்பறுத்த மடு,விளக்குவைச்ச குளம்,மல்லாவி,கோட்டைகட்டிய குளம்,வன்னேரி,தென்னியன் குளம் போன்ற பகுதிகளில் எனக்குப் பரிச்சியம் வாய்ந்த படியால் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது.
 
புலம்பெயர்ந்து சென்ற போதும்,அந்த குடும்பத்தை ஆதரித்து உதவிகள் புரியும் ஏனைய கதாபாத்திரங்களும் கதைக்கு வலுச்சேர்க்கின்றன. பருவப்பெண்கள் இல்லாமல் கதைக்குச் சுவையே இருக்காது என்பதை உணர்ந்த ஆசிரியர். அதனை இதற்குள் புகுத்தியிருப்பதும் அழகு. சந்திப்புகளும், திடீர் திருப்பங்களும் காதலின் மனமுறிவும்.சுகமாக முடிவதும் ஆரோக்கியம்.
 
உழைப்பால் உயரும் செல்வனின் பொறுப்பான படைப்பு .அடுத்தவர்க்கு உத்வேகத்தைத் தருகிறது. சுரபியின் காதலை நயமாகச் சொல்லி சுகமாக முடித்து விடுகிறார். தாய் புவனாவின் ஆசை.யுத்தத்தின் இறுதிநாள் கடுமையும்,உறவுகளைப் பிரித்துவிடும் சோகமும். கலங்க வைக்கிறது. வாசகர்கள் வாசிக்கவேண்டிய நாவலிது.
 
ஆழிப்பேரலை சுனாமி என்ற யப்பான் சொல்லை உலகெங்கும் அறியத்தந்தது போல்.அப்பாவிகளாக கிராமங்களில் வாழ்ந்த நம் மக்களுக்கு இந்த யுத்தம் நவீன கொடிய ஆயதங்களை அறியவைத்துச் சென்றிருக்கிறது .
 
"எறிகணை" இதுவும் ஒரு ஆயுதம் என்பதை நாம் அறிவோம். 
 
தியாவுக்கு எமது வாழ்த்துகள். இனியும் அவரிடமிருந்து நல்ல ஆக்கங்களை எதிர் பார்க்கிறோம்.
 
 
நன்றி,
பொன்.புத்திசிகாமணி,
யேர்மனி.
1 minute ago, theeya said:
erikanai-1024x763.jpg
 
இந்த நாவலைப் பல நாட்களுக்கு முன் வாசித்திருந்தேன்.எனது கருத்தைப் பதிவு செய்யலாம் என்றிருந்த வேளையில் தான் அந்தக் கருத்துப் பகிர்வு முகநூலில் வெளிவந்தது.
 
அதுதான் பிரதம எழுத்தாளரும்,எனக்கும் பிடித்தவரான "நிலக்கிளி"தந்த ஆசிரியர் திரு பாலமனோகரன் அவர்களது விமர்சனம்.
இதைவிட நான் என்னதான் எழுதப் போகிறேன் என்று தள்ளிப்போட்டேன்.
 
அவர் மிகவும் சிறப்பாகப் பதிவு செய்திருந்தார். அதன் பிறகும் எழுதலாம் என்றிருந்த வேளையில் மீண்டும் ஒரு விமர்சனம் வந்தது.
மேலும் கொஞ்சம் தாமதமானது. அவர்கள் சொல்லாததை நான் என்ன சொல்லிவிடப் போகிறேன் .
 
இனியும் தாமதமாக்கக் கூடாது என்பதை நினைத்தே இதனைப் பதிவு செய்கிறேன். இது ,நடந்து முடிந்த யுத்தத்திற்கான சாட்சி யென்றே சொல்லலாம்.
சொந்தப் பிரதேசத்திலிருந்து,அதுவும் சொந்த வீட்டிலிருந்து இடம்பெயர்வதான கொடுமை மிகவும் மோசமானது.யுத்தகாலத்தில் தமிழர் பிரதேசங்களில் வாழ்ந்த தமிழ்க் குடும்பங்கள் அவர்கள் பட்ட அவஸ்த்தைகள் சொல்லி மாளாது. அதனை இந்த நாவல் பதிவு செய்திருக்கிறது.
 
குடும்பத் தலைவனை இழந்த ஒரு குடும்பம் படுகின்ற சோதனையும்,வேதனையும் இந்நாவலின் முக்கிய கருவாகும். கணவன் சிவா ,யுத்தத்தால் கொலை செய்யப்பட்ட பின். குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மனைவி ,புவனா,தனது பிள்ளைகளுடன் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் ஆசிரியரால் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
 
வயிற்றுக்கும்,வாழ்வுக்குமான சோதனை மிகுந்த இவர்களது வாழ்க்கை கத்திபோல் நடப்பது போல் சொல்லப்பட்டிருக்கிறது. இராணுவம் செல்லடிக்கும் நேரங்களில் அவர்கள் பாதுகாப்பைத் தேடி ஓடும் காட்சிகள்,ஐயோ அந்தக் குடும்பத்திற்கு எதுவுமே நடந்து விடக் கூடாது ,என வாசிப்பவர்களுக்கு ஒரு பரதவிப்பை ஏற்படுத்துகிறது.
 
இது ஆசிரியரின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே கருதலாம்.சின்ன வாக்கியங்கள்,யதார்த்த மொழிநடை.கஸ்ரங்களைச் சந்தித்த ஒரு பிரதிநிதியாலேயே தான் இவ்வாறு பதிவு செய்ய முடிந்திருக்கிறது.
 
இந்தக் கதையின் கதாநாயகி புவனா என்றே எடுத்துக் கொண்டேன்.எத்தனை இழப்புகளைச் சந்தித்த போதும்,அதனைச் சவாலாக எடுத்துக்கொண்டு ,பருந்திற்கு பயந்து,குஞ்சுகளை தனது இறகிற்குள் பாது காக்கும் தாய்க்கோழி போல் ,அந்தத் தாயை என்னால் நோக்க முடிந்தது. தாயின் சுமையைக் குறைப்பதற்காக படிக்கின்ற சின்னவயதில் பொறுப்போடு நடந்து கொள்கிற மூத்த மகன் செல்வனின் பாத்திரப் படைப்பு பெரு மரியாதையைத் தருகிறது.
 
பாதிக்குமேல் அவனே கதாநாயகனாகி விடுகிறான்.இடம் விட்டு இடம் மாறும் போதெல்லாம் சைக்கிள் பிரயாணத்தில் அவர்கள் படும் பாடுகள் ,அதனை இயல்பாக எடுத்துக் கொள்ளும் போக்கு. கதாபாத்திரங்களோடு எங்களையும் பயணிக்க வைக்கிறது.
 
ரேணு,நதி என்கிற சகோதரிகளை பாதுகாக்கும் பொறுப்புள்ள அண்ணனாக மாறும் செல்வன் .தாய்க்கும் நம்பிக்கைக்குரிய தனயனாக மாறிவருது கதைக்கு வலுச்சேர்க்கிறது.
 
வன்னியப் பற்றிய காட்சிப் பகிர்வும்,வளங்கள் பற்றிய செய்திகளும் வாசிக்கும் போது. மகிழ்ச்சியைத் தருகிறது. கோழிய குளம்,கொம்பறுத்த மடு,விளக்குவைச்ச குளம்,மல்லாவி,கோட்டைகட்டிய குளம்,வன்னேரி,தென்னியன் குளம் போன்ற பகுதிகளில் எனக்குப் பரிச்சியம் வாய்ந்த படியால் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியது.
 
புலம்பெயர்ந்து சென்ற போதும்,அந்த குடும்பத்தை ஆதரித்து உதவிகள் புரியும் ஏனைய கதாபாத்திரங்களும் கதைக்கு வலுச்சேர்க்கின்றன. பருவப்பெண்கள் இல்லாமல் கதைக்குச் சுவையே இருக்காது என்பதை உணர்ந்த ஆசிரியர். அதனை இதற்குள் புகுத்தியிருப்பதும் அழகு. சந்திப்புகளும், திடீர் திருப்பங்களும் காதலின் மனமுறிவும்.சுகமாக முடிவதும் ஆரோக்கியம்.
 
உழைப்பால் உயரும் செல்வனின் பொறுப்பான படைப்பு .அடுத்தவர்க்கு உத்வேகத்தைத் தருகிறது. சுரபியின் காதலை நயமாகச் சொல்லி சுகமாக முடித்து விடுகிறார். தாய் புவனாவின் ஆசை.யுத்தத்தின் இறுதிநாள் கடுமையும்,உறவுகளைப் பிரித்துவிடும் சோகமும். கலங்க வைக்கிறது. வாசகர்கள் வாசிக்கவேண்டிய நாவலிது.
 
ஆழிப்பேரலை சுனாமி என்ற யப்பான் சொல்லை உலகெங்கும் அறியத்தந்தது போல்.அப்பாவிகளாக கிராமங்களில் வாழ்ந்த நம் மக்களுக்கு இந்த யுத்தம் நவீன கொடிய ஆயதங்களை அறியவைத்துச் சென்றிருக்கிறது .
 
"எறிகணை" இதுவும் ஒரு ஆயுதம் என்பதை நாம் அறிவோம். 
 
தியாவுக்கு எமது வாழ்த்துகள். இனியும் அவரிடமிருந்து நல்ல ஆக்கங்களை எதிர் பார்க்கிறோம்.
 
 
நன்றி,
பொன்.புத்திசிகாமணி,
யேர்மனி.

 

 

 

"எறிகணை" நாவல் பற்றி பொன். புத்திசிகாமணி ஐயா அவர்கள் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட மதிப்பாய்வு- நன்றி

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்+

வாழ்த்துக்கள் தியா💖

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 31/12/2021 at 15:30, பாலபத்ர ஓணாண்டி said:

தொடர்ந்து எழுதுங்கள் தியா..  வாழ்த்துக்கள்..

நன்றி 

On 31/12/2021 at 15:38, நன்னிச் சோழன் said:

வாழ்த்துக்கள் தியா💖

நன்றி 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.