Jump to content

ஒருமித்த கோரிக்கை தற்காலத்தின் தேவை என்கிறார் சம்பந்தன்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒருமித்த கோரிக்கை தற்காலத்தின் தேவை என்கிறார் சம்பந்தன்!

 

இப்போதைய நிலைமையில் தமிழ் பேசும் மக்களின் கோரிக்கையை ஒருமித்த நிலைப்பாட்டுடனும், ஒன்றுமையுடனும் முன்வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதற்காகவே தமிழ்க் கட்சிகள் இடையே இந்தக் கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அனைவரும் ஒருமித்த கருத்துடன், ஒன்றுமையுடன் இருக்கின்றோம். இந்த விடயம் தொடர்பாக நாம் மேலும் கூடி ஆராய்ந்து அறிக்கைகளை வெளியிடுவோம். இந்த முயற்சிக்கு அனைவரது ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.
இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நேற்று கொழும்பில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே நடந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசமைப்புத் தொடர்பாக பேசப்படுகின்றது. அதேநேரம் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கருத்தும் வெளியாகியுள்ளது. இலங்கை அரசின் நடவடிக்கைகளை நம்ப முடியாது. கடந்த காலங்களிலும் இவ்வாறு நடந்துள்ளன. அரசின் செயற்பாடுகள் திடீரெனக் கடும்போக்காக மாறலாம்.

1983 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தியா, இலங்கைத் தமிழ் மக்கள் விடயத்தில் அக்கறையாக இருக்கின்றது. தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. பல விதமான நிகழ்வுகள் இந்தியாவின் தலையீட்டால் நடைபெற்றன. 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் 1988ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 13ஆவது அரசமைப்புத் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 13ஆம் திருத்தச் சட்டத்தில் இருந்து சில அதிகாரங்களை நீக்குவதற்கான செயற்பாடுகளும், அவற்றை மத்திய அரசு கையாள்வதற்கான சூழலுமே இப்போது காணப்படுகின்றது.

இந்திய உயர் அதிகாரிகள் இங்கு வருகின்றபோது 13ஆவது அரசமைப்புத் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆயினும் இதுவரை அது நடக்கவில்லை.
இவற்றையெல்லாம் உன்னிப்பாக அவதானிக்கும்போது எம்மிடையே ஒன்றுமை, ஒருமித்த கோரிக்கையை தமிழ் பேசும் மக்கள் சார்பாக முன்வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. – என்றார்.
 

 

https://newuthayan.com/ஒருமித்த-கோரிக்கை-தற்கால/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சுடலை ஞானம் என்பார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

1983 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தியா, இலங்கைத் தமிழ் மக்கள் விடயத்தில் அக்கறையாக இருக்கின்றது. தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. பல விதமான நிகழ்வுகள் இந்தியாவின் தலையீட்டால் நடைபெற்றன. 13 ஆவது அரசமைப்புத் திருத்தம் 1988ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 13ஆவது அரசமைப்புத் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. 13ஆம் திருத்தச் சட்டத்தில் இருந்து சில அதிகாரங்களை நீக்குவதற்கான செயற்பாடுகளும், அவற்றை மத்திய அரசு கையாள்வதற்கான சூழலுமே இப்போது காணப்படுகின்றது.

இந்திய உயர் அதிகாரிகள் இங்கு வருகின்றபோது 13ஆவது அரசமைப்புத் திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆயினும் இதுவரை அது நடக்கவில்லை.
இவற்றையெல்லாம் உன்னிப்பாக அவதானிக்கும்போது எம்மிடையே ஒன்றுமை, ஒருமித்த கோரிக்கையை தமிழ் பேசும் மக்கள் சார்பாக முன்வைக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. – என்றார்.

என்ன ஐயா கதறுறாப்ல ...? 
இந்திய அதிகாரிகள் வந்து வலியுறுத்துவது இலங்கை அரசிடம், நடைமுறைப்படுத்த வேண்டியது இலங்கை அரசு இது ஏற்கனவே எழுதப்பட்ட உடன்படிக்கை .... இதற்கும் ஒருமித்த கோரிக்கைக்கும் என்ன சம்பந்தம்,        ஓ ...கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆவது போல் கூத்தமைப்பு சூம்பிக்கொண்டு செல்வதால் மக்களை உசுப்பேத்தி சைக்கிள் கப்பில் கூத்தமைப்பிற்கு பூஸ்ட்டர் ஊசி அடிக்க நூல் விடுறார் ஐயா. 
ஐயா நீங்க இனி என்ன குத்தி முறிச்சாலும் ஒரு நாடு ஒரு சட்டம் மட்டுமே, உறுமல், வருவல்களை நீங்களே உங்களுக்குள் எழுப்பிவிட்டு சுருண்டு படுக்கவேண்டியதுதான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, கிருபன் said:

1983 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தியா, இலங்கைத் தமிழ் மக்கள் விடயத்தில் அக்கறையாக இருக்கின்றது. தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. பல விதமான நிகழ்வுகள் இந்தியாவின் தலையீட்டால் நடைபெற்றன.

ஸ்ஸ்ஸ்.. மிடியல .. படுத்துறாங்கப்பா..😢

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர்.
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
    • அப்படியாயின் மாற்று ஆட்சி ஒன்று வரட்டும். அது பாஜகாவை விட நாம் தமிழர் கட்சியாக இப்போதைக்கு இருக்கட்டும். அதை தமிழ்நாட்டு மக்கள்பரீட்சித்து பார்க்கட்டும். சரி இல்லையேல் அடுத்த நான்கு வருடத்தில் ஆட்சியை மாற்றட்டும். சந்ததி சந்ததியாக மற்ற கட்சிகளின் குறைபாடுகளை எதிர்வு கூறியே மீண்டும் மீண்டும் விட்ட தொட்ட பிழைகளை தொடராமல்....
    • எழுதுங்கள்…எதோ நான் பானுமதி, விஜி, பாத்திமாவோடு டீலில் இருந்தமாரி போகுது கதை🤣. நான் எப்போதும் சீமானை என்ன சொல்வேன்? சின்ன கருணாநிதி….. சின்ன கருணாநிதியே இவ்வளவு கேலவலமானவர் என எழுதும் எனக்கு பெரிய கருணாநிதி, எம்ஜிஆர், ஸ்டாலின், ஜெ., சசி, உதய் எல்லாரும் அதை ஒத்த கள்ளர்கள் என்பது தெரியாமலா இருக்கும். உங்களையும் சகாக்களையும் போல சீமான் மட்டும் தங்கம், ஏனையோர் பித்தளை என பசப்புபவன் நான் இல்லை. இவர்கள் எல்லாரும் ஒரே குட்டையில் நாறிய மட்டைகள் என்பது நான் 1ம் நாளில் இருந்து எழுதி வருவதே. பிகு நல்ல சுவாரசியமாக படத்தோடு எழுதுங்கள். சும்மா “சரோஜா தேவி” பலான கதைகள் போல தெறிக்க விடுங்கள்🤣.  ஆவலோடு காத்திருக்கிறேன்🤣 ஆருக்கு தெரியும். ஆம் என்கிறனர் விஜி. இல்லை என்கிறார் அண்ணன். 
    • சீமான் விஜலட்சுமியின் சட்டப்படியான கணவரா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.