Jump to content

பார்க்கர்: சூரியனுக்கு மிகவும் அருகில் சென்று நாசா விண்கலம் சாதனை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கர்: சூரியனுக்கு மிகவும் அருகில் சென்று நாசா விண்கலம் சாதனை

  • ஜோனாதன் அமோஸ்
  • பிபிசி அறிவியல் செய்தியாளர்
2 மணி நேரங்களுக்கு முன்னர்
Parker Solar Probe

பட மூலாதாரம்,NASA-JHU-APL

சூரியனின் புற வளிமண்டலத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் விண்கலம் ஒன்று கடந்து சென்றுள்ளது. இது ஒரு வரலாற்றுத் தருணம் என்று நாசா தெரிவித்துள்ளது.

நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் (Parker Solar Probe) விண்கலம் இவ்வாறு சூரியனின் புற வளிமண்டலம் வழியாகக் கடந்து சென்றுள்ளது.

'கொரோனா' என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியின் வழியாக பார்க்க சோலார் ப்ரோப் கடந்து சென்றுள்ளது. (கொரோனா என்றால் லத்தீன் மொழியில் கிரீடம் என்று பொருள்.)

இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே இது நிகழ்ந்திருந்தாலும் அந்த விண்கலம் கொரோனா வழியாகத்தான் கடந்து சென்றது என்பது, தரவுகளின் பகுப்பாய்வுகள் மூலம் இப்போதுதான் உறுதி செய்யப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

மிகவும் அதிகமான வெப்பம் மற்றும் கதிர்வீச்சு ஆகியவற்றை பார்க்கர் விண்கலம் தாங்கிக் கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் சூரியன் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்த புதிய தகவல்களை இதன் மூலம் தற்போது பெற முடிந்துள்ளது.

நிலவில் மனிதன் கால் பதித்ததைப் போல...

"நிலவில் மனிதன் தரையிறங்கியது நிலவு எவ்வாறு உருவானது என்பதை அறிவியலாளர்கள் அறிந்துகொள்ள எவ்வாறு உதவியதோ, அதைப்போல சூரியனின் புற வளிமண்டலத்தைத் தொட்டதும் மனித குலத்துக்கு ஒரு மிகப்பெரிய முன்னேற்றம். பூமிக்கு மிக அருகில் இருக்கும் நட்சத்திரமான சூரியன் குறித்தும், அது சூரிய மண்டலத்தின் மீது செலுத்தும் தாக்கம் குறித்தும் அறிந்து கொள்ள இது உதவும்," என்று நாசாவின் சூரிய இயற்பியல் பிரிவில் இயக்குநர் நிக்கோலா ஃபாக்ஸ் தெரிவித்துள்ளார்.

நாசாவால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விண்வெளித் திட்டங்களில் பார்க்கர் சோலார் ப்ரோப் திட்டம் சாகசம் மிகுந்த திட்டங்களில் ஒன்றாக உள்ளது.

பார்க்கர் விண்கலனை திரும்பத் திரும்ப சூரியனுக்கு மிகவும் அருகில் அனுப்பி, அதைக் கடந்துசெல்ல வைப்பதே மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த விண்வெளித் திட்டத்தின் நோக்கமாகும்.

ஒரு மணி நேரத்திற்கு 5 லட்சம் கிலோ மீட்டர் எனும் மிக அதிக வேகத்தில் இந்த விண்கலம் பறந்து செல்லும்.சூரியனின் வளிமண்டலத்தில் மிகவும் வேகமாக நுழைந்து விட்டு வேகமாக வெளியேற வேண்டும் என்பதே இந்த விண்கலத்தை அதிக வேகத்தில் பயணிக்க வைப்பதற்கான நோக்கமாக உள்ளது.

Artwork: Parker Solar Probe

பட மூலாதாரம்,NASA

சூரியனைச் சுற்றி இருக்கும் சூழல் குறித்து அளப்பதற்கான கருவிகள் இந்த விண்கலத்தின் பொருத்தப்பட்டுள்ளன. வெப்பத்தை தாங்கும் அடர்த்தியான ஓர் அறனும் பார்க்கரின் வெளிப் பகுதியில் உள்ளது.

ஆல்வேன் கிரிட்டிக்கல் பவுண்டரி ( Alfvén critical boundary) என்று அழைக்கப்படும் சூரியனின் புற வளிமண்டலப் பகுதியின் விளிம்பு ஒன்றை, இந்த ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி பார்க்கர் விண்கலம் கடந்து சென்றது.

இது கொரோனா என்று அழைக்கப்படும் பகுதியில் புறவெளியாகும். சூரியனின் ஈர்ப்பு விசை மற்றும் காந்தவிசையால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் சூரியப் பொருட்கள் இந்த விளிம்பிலிருந்துதான் விண்வெளிக்குள் நுழைகின்றன.

1.3 கோடி கிலோ மீட்டர் தொலைவில்

ஃபோட்டோஸ்பியர் (photosphere) என்று அழைக்கப்படும் பூமியிலிருந்து தென்படக்கூடிய சூரியனின் மேற்பரப்பிலிருந்து 1.3 கோடி கிலோ மீட்டர் தொலைவில் பார்க்கர் விண்கலம் பறந்து சென்றுள்ளது.

பார்க்கர் விண்கலத்தில் இருந்து திரட்டப்பட்ட தரவுகள் மூலம் இந்த விண்கலம் ஆல்வேன் கிரிட்டிக்கல் பவுண்டரிக்கு, மேலும் கீழும் ஐந்து மணி நேரத்தில் மூன்று முறை கடந்து சென்றுள்ளது என்பது தெரியவந்துள்ளதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர் ஸ்டூவர்ட் பேல் தெரிவிக்கிறார்.

Parker Solar Probe makes historic pass through Sun's atmosphere

பட மூலாதாரம்,S R HABBAL AND M DRUCKMÜLLER

 
படக்குறிப்பு,

சூரிய கிரகணத்தின்போது மட்டுமே பூமியில் இருந்து கொரோனா தென்படும்

"இந்தப் பகுதிக்குள் சூரியனின் நிலை முற்றிலும் மாறுவதை எங்களால் காண முடிந்தது. கொரோனாவுக்கு உள்ளே சூரியனின் காந்தப்புலம் வலிமை மிக்கதாக உள்ளது. இது சூரிய துகள்களின் நகர்வின் மீது ஆதிக்கம் செலுத்தியது. இங்கு பார்க்கர் நுழைந்தபோது சூரியனுடன் உண்மையாகவே தொடர்பில் இருந்த பொருட்கள், இந்த விண்கலத்தை சூழ்ந்திருந்தன," என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

கொரோனா - புரியாத புதிர்

இந்தக் கொரோனா எனும் மண்டலம் மீது அறிவியலாளர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் இதற்குள் நிகழும் சில முக்கிய நிகழ்வுகள் விளக்கங்களுக்கு அப்பாற்பட்டவையாக உள்ளன.

சூரியனின் மேற்பரப்பில் வெப்பநிலை சுமார் 6000 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கிறது. ஆனால் கொரோனாவில் நிலவும் வெப்பநிலை பல கோடி டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது. இந்தப் பகுதியில்தான் மின்னூட்டபட்ட துகள்களான எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் ஆகியவையும் ஐயனிகளும் திடீரென வேகம் எடுத்து ஒலியை விட அதிகமான வேகத்தில் வீசும் சூரியக் காற்றில் நகர்கின்றன.

இது எவ்வாறு நடக்கிறது என்பதும் அறிவியலாளர்களுக்கு இதுவரை புரியாத புதிராகவே உள்ளது.

"பூமி மற்றும் பூமியை கடந்து பயணிக்கும் சூரிய காற்றின் இயக்கத்தின் சுவடுகள், அந்த காற்று சூரியனை கடந்து பயணிக்கும் பொழுது அழிக்கப்பட்டு விடுகின்றன என்பதுதான் பிரச்னையாக உள்ளது," என ஜான் ஹாப்கின்ஸ் அப்ளைடு ஃபிசிக்ஸ் லெபோரட்டரி என்னும் ஆய்வகத்தின் நூர் ரோவாஃபி கூறுகிறார்.

இதனால்தான் இதுவரை விவரங்கள் அறியப்படாத இந்த பகுதி வழியாக பார்க்கர் விண்கலம் பயணிப்பது, கொரோனாவுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதைக் கண்டறிய உதவும் என்று அவர் தெரிவிக்கிறார்.

NASA Enters the Solar Atmosphere for the First Time

பட மூலாதாரம்,NASA'S GODDARD SPACE FLIGHT CENTER/MARY P. HRYBYK-

இனிவரும் காலங்களில் பார்க்கர் விண்கலம் கொரோனாவின் ஆழமான பகுதிகளுக்கு கடந்து செல்லும் பொழுது இன்னும் மேலதிகமான தரவுகளை வழங்கும் என்று அதைக் கட்டுப்படுத்தும் அறிவியலாளர்களால் அறியமுடியும்.

2025ஆம் ஆண்டு வாக்கில் சூரியனின் மேற்பரப்புக்கு மேலே 70 லட்சம் கிலோ மீட்டர் வரை இந்த விண்கலம் கடந்து செல்ல முடியும்.

பார்க்கர் விண்கலனில் மட்டுமல்ல, பிற சூரிய வான் நோக்கு நிலையங்களில் இருந்து பெறப்படும் தகவல்கள் அனைத்தும் பூமியில் உள்ள ஒவ்வோர் உயிர்களுடனும் நேரடித் தொடர்புடையதாக இருக்கும்.

நமக்கு பார்க்கர் விண்கலத்தால் என்ன பயன்?

சூரியனின் வெளிப்புறத்தில் நிகழும் மிகப்பெரிய வெடிப்புகள் பூமியின் காந்தப் புலத்தையே அதிர வைக்கும் தன்மை உடையவை.

அப்படி நடந்தால் பூமியை சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் அனைத்தும் செயலிழக்கும்; பூமியில் தொலைத்தொடர்புகள் அனைத்தும் பாதிக்கப்படும்; மின்சார எழுச்சி காரணமாக பூமியில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடையக் கூடும்.

இவ்வாறான சூரியப் 'புயல்கள்' உண்டாவதை முன்கூட்டியே கணிக்க அறிவியலாளர்கள் முயன்று வருகிறார்கள்.

அவற்றை பற்றிய புதிய மற்றும் மதிப்புமிக்க தகவல்களை அறிந்து கொள்வதற்கு பார்க்கர் விண்கலம் பெரிதும் உதவியாக இருக்கும்.

பார்க்கர் விண்கலம் மூலம் திரட்டப்பட்ட சமீபத்திய தகவல்கள் நியூ ஆர்லியன்சில் நடக்கும் அமெரிக்ன் ஜியோபிசிகல் யூனியனின் இலையுதிர்காலக் கூட்டத்தில் பகிரப்பட்டு வருகின்றன.

https://www.bbc.com/tamil/science-59664950

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூரியனில் இருந்து 8 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளது.. எப்படி சூரியனை தொடும். சூரியனை தொட முதலே அது பொசிங்கிப் போயிடும். ஒரு குறிப்பிட்ட எல்லை வரை தான் இந்த ஆட்டம். அதற்கு பின் எல்லாம் சுபம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.