Jump to content

பெண்கள் உடல்நலம், உணவு: மாதவிடாயின்போது என்னென்ன உணவுகளை எப்போது சாப்பிட வேண்டும்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பெண்கள் உடல்நலம், உணவு: மாதவிடாயின்போது என்னென்ன உணவுகளை எப்போது சாப்பிட வேண்டும்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
மாதவிடாய்

தசைப் பிடிப்பு, தாழ் மனநிலை, உணவு மீது ஏக்கம் என பலருக்கு மாதவிடாய் சுழற்சியின் போது விரும்பத்தகாத அறிகுறிகள் இருக்கும். இவையெல்லாம் உங்களுக்கும் இருப்பது போலத் தோன்றினால் சில உணவுப் பழக்கங்களை மாற்றுவதன் மூலம் அவற்றைச் சரி செய்யலாம்.

ஆரோக்கியமான, சரிவிகித உணவை உண்பது உடல் நலத்தைப் பராமரிப்பதில் ஒரு முக்கியப் பகுதி. அது உங்களைச் சிறந்தவர் என உணருவதற்கும் உதவும் என்று பிரிட்டன் சுகாதாரத் துறையான NHS-இன் வலைத்தளம் கூறுகிறது.

சில உணவுகள் அல்லது உண்ணும் முறைகள் உங்கள் மாதவிடாய் சுழற்சி முழுக்க பல்வேறு நிலைகளிலும் உங்களை நல்விதமாகவோ மோசமாகவோ பாதிக்கலாம்.

மாதவிடாய்க்கு முன்னர்

உங்கள் மாதவிடாய்க்கு முந்தைய கருவணு வெளிப்பட்டு வளரும் காலத்தை Luteal Phase என்கிறார்கள். இந்தக் கட்டத்தின் பிற்பகுதியில் மாதவிடாய் முன் நோய்க்குறி (PMS) பலருக்கு ஏற்படுகிறது. மனநிலை மாற்றங்கள், சோர்வு, எரிச்சல் மற்றும் உணவுத் தேடல் போன்ற உடல் மற்றும் உணர்ச்சி அறிகுறிகள் ஏற்படலாம்.

சிலருக்கு இந்த அறிகுறிகள் தீவிரமாகவும் இருக்கும். இதற்குச் சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் மாதவிடாய் சுழற்சியின் போது ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் இதற்குத் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

இந்த கட்டத்தில் தான் பலருக்கு தீவிரமான பசி மற்றும் உணவு மீதான ஏக்கம் ஏற்படுகிறது. குறிப்பாக இனிப்பு மற்றும் உப்பு சார்ந்த உணவுகளை நோக்கி இது இருக்கும்.

பசி அதிகரிப்புக்கு ஓய்வு நேர வளர்சிதை மாற்ற விகிதத்தில் தற்காலிக அதிகரிப்பு காரணமாக இருக்கலாம். உங்கள் மாதவிடாய் சுழற்சி வாரத்தில் ஒவ்வொரு நாளும் 100 முதல் 300 கூடுதல் கலோரிகளை உடல் பயன்படுத்துவதாக ஆராய்ச்சி கூறுகிறது.

இந்தக் காலகட்டத்தில் முழு தானிய கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவைத் தேர்ந்தெடுப்பது, பசியார்வம், உணவு ஏக்கம் மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இனிப்புகள் மற்றும் தின்பண்டங்கள் மீதான ஏக்கங்கள் நம் மனநிலையின் பக்கவிளைவுகளாக இருக்கலாம்.

மாதவிடாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"மனநிலையில் தாழ்வாக இருக்கும்போது நம்மை மகிழ்ச்சியாக அல்லது ஆறுதலடையச் செய்பவற்றை நாம் அடிக்கடி விரும்புகிறோம். இது ஆறுதல் தரும் உணவுகளாக இருக்கலாம்" என்று ஊட்டச் சத்து நிபுணர் ஹன்ட்ரிஸ் கூறுகிறார்.

ஆனால் இந்த உணவுகள் உங்கள் உடல் நலத்தை மோசமாக்கக் கூடும். நொறுக்குத் தீனிகளை உண்பது வலிகள், சோர்வு மற்றும் தூக்கப் பிரச்சினைகள் உள்ளிட்ட PMS இன் உடல் அறிகுறிகளுடன் தொடர்புடையது.

சில ஆய்வுகள் பழங்களை சாப்பிடுவது PMS இன் தீவிரத்தை குறைக்கும் என்றும், பழங்கள் மற்றும் மாவுச்சத்து இல்லாத காய்கறிகள், ஏராளமான நார்ச்சத்து உணவு போன்றவை அறிகுறிகளின் தீவிரத்தன்மை மற்றும் அளவைக் குறைக்கும் என்றும் கூறுகின்றன.

"சில ஆய்வுகள் அதிக காஃபின் உட்கொள்வது மாதவிடாய்க்கு முந்தைய தசைப் பிடிப்புகளுக்கான காரணியாக இருக்கலாம் என்று முடிவு செய்திருக்கின்றன" என்று ஹன்ட்ரிஸ் கூறுகிறார்.

அதே நேரத்தில் காஃபினை முற்றாக நிறுத்துவது தலைவலி போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். எனவே நீங்கள் ஒரு நாளைக்கு சில கப் சாப்பிடும் பழக்கம் இருந்தால் உடனடியாக அதை குறைக்க வேண்டாம்.

மாதவிடாய் வந்த பிறகு என்ன சாப்பிட வேண்டும்?

"தண்ணீர் உட்கொள்வது மாதவிடாய் ரத்தப்போக்கு, தேவைப்படும் வலி நிவாரணிகளின் அளவு மாதவிடாய் காலத்திற்கு முந்தைய தசைப்பிடிப்பு ஆகியவற்றைக் குறைக்கும்" என்று ஹன்ட்ரிஸ் கூறுகிறார்.

ஹன்ட்ரிஸ்ஸின் கூற்றுப்படி, மது அருந்துவது நீரிழப்புக்கு ஆளாக்கும். ஏனெனில் அது சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கிறது. மேலும் மனநிலையைத் தாழ்த்தி, தலைவலி போன்ற அறிகுறிகளையும் ஏற்படுத்தலாம்.

ஒரு ஆய்வின்படி, ஒமேகா -3 கொழுப்பு கொண்ட உணவுகள் மாதவிடாய் வலியைப் போக்க உதவும். இறைச்சி, பால் மற்றும் ரொட்டி ஆகியவற்றில் காணப்படும் துத்தநாகம் வலியைக் குறைக்கும்.

"மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தத்தை இழக்கும் பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாட்டு ரத்த சோகை ஏற்படும் ஆபத்து அதிகம்" என்று NHS இணையதளம் கூறுகிறது. இவர்கள் இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

மாதவிடாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இறைச்சி, கீரைகள், கொட்டைகள் மற்றும் விதைகள் ஆகியவற்றில் இரும்புச் சத்து நிறைந்திருக்கிறது. வைட்டமின் சி கொண்ட உணவுகளான சிட்ரஸ் பழங்கள் மற்றும் சில காய்கறிகள், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் சாப்பிடும்போது இரும்புச் சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகின்றன.

"நீங்கள் சைவ உணவு உண்பவராக இருந்தால், உணவு உண்பவராகவோ இருந்தால், இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் தாவர அடிப்படையிலான இரும்புச்சத்தை உறிஞ்சுவது கடினம்" என்று ஹன்ட்ரிஸ் கூறுகிறார்.

வேகவைத்த முட்டைக்கோஸ் மீது எலுமிச்சைப் பழத்தைப் பிழிவது அல்லது காலை உணவுடன் ஒரு கிளாஸ் ஆரஞ்சு சாறு குடிப்பது போன்ற எளிய வழிகளைப் பின்பற்றலாம்.

அதே நேரத்தில், அதிக அளவு இரும்புச் சத்து உட்கொள்வதால் மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். எனவே உட்கொள்ளும் இரும்புச் சத்தின் அளவைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.

கருமுட்டை வெளியாகும் காலம் (Ovulation)

அடுத்த மாதவிடாய்க்கு பன்னிரெண்டு முதல் பதினான்கு நாட்களுக்கு முன்பு அண்டவிடுப்பு எனப்படும் ovulation நிகழ்கிறது. இது கருத்தரிப்புக்கு ஏற்ற காலம் என்பார்கள்.

"ஃபோலேட் கொண்ட உணவுகளை உட்கொள்வது இந்தக் காலத்தை வளமானதாக்க உதவும். பச்சை இலைக் காய்கறிகள், ப்ரோக்கோலி, வெண்ணெய்ப் பழம், கொண்டைக்கடலை, பீன்ஸ், சிட்ரஸ் பழங்கள், பட்டாணி. பீட்ரூட் ஆகியவை இதில் அடங்கும்" என்கிறார் ஹன்ட்ரிஸ்.

மாதவிடாய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

உடல் எடையும் மாதவிடாயும்

"ஒட்டுமொத்த ஆரோக்கியமான எடையை பராமரிப்பது மாதவிடாய் சுழற்சியை சீராக வைத்திருக்க உதவும்" என்று ஹன்ட்ரிஸ் கூறுகிறார்.

எடையைக் குறைப்பது அல்லது அதிகரிப்பது உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கலாம். அதிக அல்லது மிகக் குறைந்த விகிதத்தில் கொழுப்பு உடலில் இருந்தால் ஈஸ்ட்ரோஜன் உள்ளிட்ட இனப்பெருக்க ஹார்மோன்களின் அளவுகளில் மாற்றங்கள் ஏற்படும். இது அண்டவிடுப்பு உள்ளிட்ட மாதவிடாய் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/global-59667874

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.