Jump to content

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்!

யாழ் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
அவர் மெலும் தெரிவிக்கையில்,
எங்களுடைய அமைப்பு குறித்த பாதீட்டை எதிர்க்கும். அது அனைவருக்கும் தெரிந்த விடயம். புதிய விடயம் அல்ல. ஆனால் எங்களைப்பொறுத்தவரையில் மாநகர சபை ஊழலுக்குரிய கோட்டையாக மாறியுள்ளது. அது மிக விரைவில் வெளிவரும்.
ஊழல் செய்து தனிபர் உழைப்பதற்கான ஓர் இடமாக மாறியுள்ளது. இதனை மக்கள் மிக விரைவிலே உணர தொடங்குவார்கள். அந்த கலாச்சாரத்தை வைத்துக்கொண்டு ஒருநாளும் முடிவுக்கு வர முடியாது. ஒரு கோடி ரூபாவில் அரைவாசியை செலவழித்துக்கொண்டு மிகுதியை தமது பொக்கட்டுக்குள் போடும் நிலைதான் இருக்கின்றது என்றால் அது ஒருபோதும் மக்களிற்கு சார்பான விடயமாக மாறப்போவதில்லை.
Gajendrakumar-Ponnambalam-300x227.jpg
அந்த மாநகர சபை ஊடாக எத்தனையோ விடயங்களை சரிப்படுத்தியிருக்கலாம். இன்று உலக வங்கி கோடி டொலர் கணக்கில் உதவிகளை செய்துவருகின்ற நிலையில், அந்த உதவிகளை சிறிலங்கா அரசும் ஏனைய தரப்புக்களும் ஊழல் மற்றும் வேறு காரணங்களிற்காகவும் சரியான ஆய்வுகளை செய்யாமல் க்கின்ற இடத்தில், மாநகர சபை அதில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி நவீன நகரமாக மாற்றியமைப்பதற்கு இந்த நிதிகளை பயன்படுத்துவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடியதாக இருந்திருக்க வேண்டும்.
மாநகர சபை எல்லைக்குள் இருக்கின்ற மத்திய அரசு செய்யக்கூடிய வேலைகளைக்கூட சரியான முறையில் நிபுணத்துவம் இன்றி ஆய்வுகள் செய்யாமல் வெறுமனே கண் துடைப்புக்காக செய்ததாக இல்லாமல், உண்மையி்ல் ஆக்கபூர்வமான அபிவிருத்தியாக மாற்றியமைக்கக்கூடிய கண்காணிப்பாக செயற்பட்டிருக்க வேண்டும்.
இன்று மழைவந்தால் கோடிக்கணக்கில் அதனை சீர் செய்வதற்காக நிதியை செலவு செய்கின்றார்கள். ஆனால் வெள்ளம் அப்படியே நிக்கின்றது. ஏனேனில், ஏற்றம் தாழ்வு தொடர்பில் எந்தவித கணிப்பும் இல்லாது, வெறுமனே வீதியில் வாய்க்காலை கட்டியிருக்கின்றார்கள்.
இவ்வாறான மிக மோசமான மோசடிகள் எல்லாமே, மாநகர சபைக்குள் மாத்திரமல்ல, உள்ளுராட்சி சபைகளிற்குள்ளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான விடயங்களில் தேசிய சிந்தனை இல்லாமல், வெறுமனே உழைக்கின்ற சிந்தனையோடு செயற்படுவதாக அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
 

https://thinakkural.lk/article/155627

 

Link to comment
Share on other sites

இவர் பாராட்டிய ஒரு விடயம் ஏதும் உள்ளதா? எல்லாக் கட்சிகளுடனும் முரண், எல்லாவற்றிலும் ஒரு குறை....

Link to comment
Share on other sites

39 minutes ago, நிழலி said:

இவர் பாராட்டிய ஒரு விடயம் ஏதும் உள்ளதா? எல்லாக் கட்சிகளுடனும் முரண், எல்லாவற்றிலும் ஒரு குறை....

கஜேந்தரகுமாரும் தமிழர் தானே. பிறகேன் யோசிக்கிறீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜாவின் அலப்பறைகள் ஆரம்பம் 
இன்னும் எங்க ஆதரவான சக்திகளை காணோம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

தங்களது சுயநலனுக்காய்  மணியை எப்படியாவது தோக்கடிக்க நினைக்கிற சைக்கிள் , கூட்டமைப்பினரை விட டக்கி, அங்கஜன் எவ்வளவோ மேல் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ரதி said:

 

தங்களது சுயநலனுக்காய்  மணியை எப்படியாவது தோக்கடிக்க நினைக்கிற சைக்கிள் , கூட்டமைப்பினரை விட டக்கி, அங்கஜன் எவ்வளவோ மேல் 

 

உண்மைதான் ஊழல் மோசடி மலை விழுங்கிகளுக்கு முண்டு கொடுக்கும் இவர்கள் எவ்வளவோ மேல்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

உண்மைதான் ஊழல் மோசடி மலை விழுங்கிகளுக்கு முண்டு கொடுக்கும் இவர்கள் எவ்வளவோ மேல்..

ஏன் என்றால் இவர்கள் ஊழலே செய்யாத சுத்த தங்கங்கள் தானே 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரதி said:

ஏன் என்றால் இவர்கள் ஊழலே செய்யாத சுத்த தங்கங்கள் தானே 

ஆமாம் சனாதிபதி பிரதமர் முதற்கொண்டு டக்கி வரை செய்யாத ஊழலா…

அதன் பிரதிபலனை இன்று நாடே அனுபவிக்கின்றது

கடைசியில் பாதிப்பு அப்பாவி மக்கள் தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

ஆமாம் சனாதிபதி பிரதமர் முதற்கொண்டு டக்கி வரை செய்யாத ஊழலா…

அதன் பிரதிபலனை இன்று நாடே அனுபவிக்கின்றது

எல்லாரும் ஊழல்வாதிகள் ...நான் சொல்ல வருவது மணியை நோக்கி கையை காட்டும் முன் நான் சுத்தமானவரா என்று கஜன் தன்னை தானே கிள்ளி பார்க்க வேண்டும் ...மணி ,டக்கி ஊழல் செய்தாலும் மக்களுக்கு தங்களுக்கு முடிந்ததை செய்கிறார்கள் ...இவர்கள் மாதிரி மக்களை துண்டற பேய் காட்டவில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கஜன் செய்த ஊழல் என்ன?

25 minutes ago, ரதி said:

எல்லாரும் ஊழல்வாதிகள் ...நான் சொல்ல வருவது மணியை நோக்கி கையை காட்டும் முன் நான் சுத்தமானவரா என்று கஜன் தன்னை தானே கிள்ளி பார்க்க வேண்டும் ...மணி ,டக்கி ஊழல் செய்தாலும் மக்களுக்கு தங்களுக்கு முடிந்ததை செய்கிறார்கள் ...இவர்கள் மாதிரி மக்களை துண்டற பேய் காட்டவில்லை 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

கஜன் செய்த ஊழல் என்ன?

 

சந்தர்ப்பமே தராமல் கேள்விகேட்டால்  என்ன செய்வார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

கஜன் செய்த ஊழல் என்ன?

 

மணி செய்த ஊழல் என்ன என்று முதலில் நீங்கள் சொல்லுங்கோ 
எப்படியாவது பாதீட்டை தோக்கடித்து மணியை  வீட்டுக்கு அனுப்ப பாத்தினம் ...முடியல்ல என்டவுடன் ஒப்பாரி ...தேசியம் என்று கத்துறது மகிந்தாவை கண்டவுடன் கையை கட்டிக் கொண்டு நிக்கிறது ...இவர்களை விட டக்கி எவ்வளவோ மேல் ...தான் இப்படி தான் இருப்பேன் என்று சொல்லி அதே பாதையில் தொடர்ந்தும் பயணிக்கிறார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

மணி செய்த ஊழல் என்ன என்று முதலில் நீங்கள் சொல்லுங்கோ 
எப்படியாவது பாதீட்டை தோக்கடித்து மணியை  வீட்டுக்கு அனுப்ப பாத்தினம் ...முடியல்ல என்டவுடன் ஒப்பாரி ...தேசியம் என்று கத்துறது மகிந்தாவை கண்டவுடன் கையை கட்டிக் கொண்டு நிக்கிறது ...இவர்களை விட டக்கி எவ்வளவோ மேல் ...தான் இப்படி தான் இருப்பேன் என்று சொல்லி அதே பாதையில் தொடர்ந்தும் பயணிக்கிறார் 

சளாப்பாதீர்கள், மணி ஊழல் செய்தவர் என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை.

ஆனால் மணியை ஊழல் செய்தவர் என்று குறுப்பிட்டதும் இல்லாது

5 hours ago, ரதி said:

எல்லாரும் ஊழல்வாதிகள் ...நான் சொல்ல வருவது மணியை நோக்கி கையை காட்டும் முன் நான் சுத்தமானவரா என்று கஜன் தன்னை தானே கிள்ளி பார்க்க வேண்டும் ...மணி ,டக்கி ஊழல் செய்தாலும் மக்களுக்கு தங்களுக்கு முடிந்ததை செய்கிறார்கள் ...இவர்கள் மாதிரி மக்களை துண்டற பேய் காட்டவில்லை 

கஜனையும் ஊழல் செய்தவர் என்று நீங்கள் கூறிவிட்டு இப்போது ஓடுகிறீர்கள்.

5 hours ago, ரதி said:

எல்லாரும் ஊழல்வாதிகள் ...நான் சொல்ல வருவது மணியை நோக்கி கையை காட்டும் முன் நான் சுத்தமானவரா என்று கஜன் தன்னை தானே கிள்ளி பார்க்க வேண்டும் ...மணி ,டக்கி ஊழல் செய்தாலும் மக்களுக்கு தங்களுக்கு முடிந்ததை செய்கிறார்கள் ...இவர்கள் மாதிரி மக்களை துண்டற பேய் காட்டவில்லை 

என்ன எழுதுவது என்று புரியாமலே எழுதுகிறீர்கள்😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

கஜனையும் ஊழல் செய்தவர் என்று நீங்கள் கூறிவிட்டு இப்போது ஓடுகிறீர்கள்.

பாவம் மீரா அப்பாவியாக இருக்கிறாரே! அனுபவம் புதுசு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.