Jump to content

வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த தீர்மானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நிலுவை சம்பளத்துடன் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த தீர்மானம்

சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் பணியில் இல்லாது விடுமுறையில் இருந்த காலத்துக்கான சம்பள நிலுவையையும் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டு  உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து சுமத்தப் பட்டு, இங்கே யாழிலும் "இவர் செய்து தான் இருப்பார்" என்று பலர் விவாதித்தது நினைவிருக்கிறது.

இவரது அரசியல் எமக்கு பாதகமாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக மருத்துவ, விஞ்ஞான ரீதியில் சாத்தியமேயில்லாத செயல்களைச் செய்தாரென்று வாதிட்டவர்களுக்கு அவர்களது அறியாமை இப்போது விளங்கியிருக்குமென நம்புகிறேன்.

Link to comment
Share on other sites

16 hours ago, Justin said:

அறியாமை இப்போது விளங்கியிருக்குமென நம்புகிறேன்.

மனித குலத்துக்கே ஒவ்வாத பெரும் கொலைகளையும், களவு, பாலியல் வல்லுறவுகளையும் மேற்கொண்டு பிடிபட்டோரை, மிருகங்களைவிடவும் கொடூரமானவர்களாக நாங்கள் எண்ணியிருந்த வேளையில்.... அவர்களை, அரச தலைவர்களும், அவர்கள் சார்பான நீதிபதிகளும் விடுதலை செய்தபோதுதான்! எங்கள் அறியாமையை நாங்களும் விளங்கிக்கொண்டோம்.!!🧐  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

மனித குலத்துக்கே ஒவ்வாத பெரும் கொலைகளையும், களவு, பாலியல் வல்லுறவுகளையும் மேற்கொண்டு பிடிபட்டோரை, மிருகங்களைவிடவும் கொடூரமானவர்களாக நாங்கள் எண்ணியிருந்த வேளையில்.... அவர்களை, அரச தலைவர்களும், அவர்கள் சார்பான நீதிபதிகளும் விடுதலை செய்தபோதுதான்! எங்கள் அறியாமையை நாங்களும் விளங்கிக்கொண்டோம்.!!🧐  

திரிமாறி எழுதி விட்டீர்கள் போல! இதற்கும் நான் குறிப்பிட்ட அறியாமைக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை. (அல்லது சிங்களவரைத் திட்டினால் ஷாபியை குற்றம் சாட்டிய நம் அறியாமையை ஒளித்து வைத்துக் கொள்ளலாம் என்ற திட்டமோ தெரியாது!😂)

Link to comment
Share on other sites

On 16/12/2021 at 15:19, பிழம்பு said:

சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

On 16/12/2021 at 17:32, Justin said:

இந்த அடிப்படையற்ற குற்றச்சாட்டு  உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து சுமத்தப் பட்டு, இங்கே யாழிலும் "இவர் செய்து தான் இருப்பார்" என்று பலர் விவாதித்தது நினைவிருக்கிறது.

இவரது அரசியல் எமக்கு பாதகமாக இருந்திருக்கலாம். ஆனால் அதற்காக மருத்துவ, விஞ்ஞான ரீதியில் சாத்தியமேயில்லாத செயல்களைச் செய்தாரென்று வாதிட்டவர்களுக்கு அவர்களது அறியாமை இப்போது விளங்கியிருக்குமென நம்புகிறேன்.

6 hours ago, Justin said:

திரிமாறி எழுதி விட்டீர்கள் போல! இதற்கும் நான் குறிப்பிட்ட அறியாமைக்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.

தொர்புடைய இடுகைகள்போல் தெரிந்ததால் என் கருத்தை இட்டேன். தவறானால் மன்னிக்கவும்.🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/12/2021 at 15:13, Paanch said:

 

தொர்புடைய இடுகைகள்போல் தெரிந்ததால் என் கருத்தை இட்டேன். தவறானால் மன்னிக்கவும்.🙏

செய்ததாகச் சொல்லப் பட்ட குற்றமே மருத்துவ ரீதியில் சாத்தியமில்லாதது என்பதை இன்னும் நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லை! அப்ப அறியாமைக்கு ஆயுள் நீளமென்று எடுத்துக் கொள்கிறேன்!😎

Link to comment
Share on other sites

5 hours ago, Justin said:

செய்ததாகச் சொல்லப் பட்ட குற்றமே மருத்துவ ரீதியில் சாத்தியமில்லாதது

வைத்தியர் அதனை குறித்த விதமும், மருந்தினை ஏற்றியவரின் கவனக் குறைவும் உயிரிழப்புக்கான காரணமாக அமைத்திருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.மனித உயிரானது மிகவும் பெறுமதியானது, அதனைப் பாதுகாப்பது கட்டாயமானது. இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது, குறித்த வைத்தியரும் சட்டத்தரணி வாயிலாக நீதிமன்றில் ஆஜர் ஆகி இருப்பதாக அறிய முடிகிறது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.  அது மருத்துவராக இருந்தாலும் சரி, அரசியல் வாதியாக இருந்தாலும் சரி சட்டத்தின் முன் யாவரும் சமமானவர்கள்தான்.

http://www.vtnnews.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Paanch said:

வைத்தியர் அதனை குறித்த விதமும், மருந்தினை ஏற்றியவரின் கவனக் குறைவும் உயிரிழப்புக்கான காரணமாக அமைத்திருக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.மனித உயிரானது மிகவும் பெறுமதியானது, அதனைப் பாதுகாப்பது கட்டாயமானது. இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது, குறித்த வைத்தியரும் சட்டத்தரணி வாயிலாக நீதிமன்றில் ஆஜர் ஆகி இருப்பதாக அறிய முடிகிறது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.  அது மருத்துவராக இருந்தாலும் சரி, அரசியல் வாதியாக இருந்தாலும் சரி சட்டத்தின் முன் யாவரும் சமமானவர்கள்தான்.

http://www.vtnnews.com/

என்ன பேசுகிறீர்கள் என விளங்கவில்லை! 

வைத்தியர் சாபி சட்ட விரோத கருத்தடை செய்தார் என்பது தான் வதந்தி. அது தான் பொய்யென நிரூபணமாகியிருக்கிறது. நீங்கள் நோயாளி இறந்தார் என்கிறீர்கள்? இது நிச்சயமாக வேறு கேசோடு குழம்பியிருக்கிறீர்கள் - மேலே செய்தியைப் பாருங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2021 at 14:19, பிழம்பு said:

நிலுவை சம்பளத்துடன் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த தீர்மானம்

சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் பணியில் இல்லாது விடுமுறையில் இருந்த காலத்துக்கான சம்பள நிலுவையையும் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image

 

சொறீலங்கா தற்போதைய சுகாதார அமைச்சின் முடிவு தான் இது.

அங்கால.. பவுதீன் குற்றமற்றவராம்.. இங்கால இவர் பணியில் அமர்வு.

குண்டு வெடிச்சதே கோத்தாவின் தேவைக்குத் தானே. 

இந்த டாக்குத்தரை சொறீலங்கா மருத்துவத்துறை சுத்தமுன்னு சொன்னதாகத் தெரியவில்லை..???!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, nedukkalapoovan said:

 

இந்த டாக்குத்தரை சொறீலங்கா மருத்துவத்துறை சுத்தமுன்னு சொன்னதாகத் தெரியவில்லை..???!

தவறான தகவல்.  நிரந்தரக் கருத்தடையை இவர் செய்யவில்லை, செய்திருக்கவும் வாய்ப்புகள் இல்லை என்று இவரோடு பணி செய்த பல சத்திர சிகிச்சை அறைத் தாதிகள் சாட்சி சொல்லியிருந்தனர்.

நோயாளிக்குத் தெரியாமல் சத்திர சிகிச்சை செய்து மலடாக்குவது சாத்தியமென்று நீங்களும் நம்புகிறீர்கள் போல!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Justin said:

நோயாளிக்குத் தெரியாமல் சத்திர சிகிச்சை செய்து மலடாக்குவது சாத்தியமென்று நீங்களும் நம்புகிறீர்கள் போல!

சிஸ்ட் (cyst) என்று அறுத்து விட்டிருந்தால்.. நோயாளிக்கு தெரியாவா போகுது.. அந்தளவுக்கு நோயாளிகளின் அறிவுமட்டத்தை உயர்த்த.. சொறீலங்கா வைத்தியவர்கள் விரும்புவார்களா..?! அப்படி உயர்த்திட்டால்.. அவைட அந்தஸ்து என்னாவுறது..?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

சிஸ்ட் (cyst) என்று அறுத்து விட்டிருந்தால்.. நோயாளிக்கு தெரியாவா போகுது.. அந்தளவுக்கு நோயாளிகளின் அறிவுமட்டத்தை உயர்த்த.. சொறீலங்கா வைத்தியவர்கள் விரும்புவார்களா..?! அப்படி உயர்த்திட்டால்.. அவைட அந்தஸ்து என்னாவுறது..?!

நெடுக்கர், ஒரிஜினல் திரியில் எல்லா சாத்தியங்களையும் பேசியாகி விட்டது. 

 "சூலகத்தை எடுத்து விட்டார்" என்று முறைப்பாடு செய்த சிங்களப் பெண்கள் ஆயிரம் பேருக்கு மேல்! பலரை வரவழைத்து அல்ட்ரா சவுன்ட் செய்தால் சூலகம் இருக்கிறது. இந்த நிலையில் தான் சத்திர சிகிச்சை அறையில் அவரோடு வேலை செய்த தாதிகள் அப்படி அவர் எதுவும் அறுக்கவில்லை என்று சாட்சியம் கூறியிருந்தனர். இலங்கை போன்ற ஒரு நாட்டில் பல விடயங்கள் அப்படி இப்படித் தான் - ஆனால் மருத்துவ சிகிச்சைத் துறை இன்னும் கீழ் நிலைக்குப் போகவில்லை. 

உங்கள் போல உயிரியல், மருத்துவம் தெரிந்த சிலர் கூட படித்த விஞ்ஞானத்தை மறந்து விட்டு "அப்படி ஊசி போட்டிருக்கலாம், இப்படி அறுத்திருக்கலாம்" என்று ஒரு முஸ்லிம் என்பதற்காகவே சும்மா அவித்துக் கொண்டிருந்தார்கள். இப்ப எங்க கொண்டு போய் முகத்தை வைத்திருக்கிறார்களோ அறியேன்!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

உங்கள் போல உயிரியல், மருத்துவம் தெரிந்த சிலர் கூட படித்த விஞ்ஞானத்தை மறந்து விட்டு "அப்படி ஊசி போட்டிருக்கலாம், இப்படி அறுத்திருக்கலாம்" என்று ஒரு முஸ்லிம் என்பதற்காகவே சும்மா அவித்துக் கொண்டிருந்தார்கள். இப்ப எங்க கொண்டு போய் முகத்தை வைத்திருக்கிறார்களோ அறியேன்!

இவர் மீதான குற்றச்சாட்டுக்களை ஒரு தாதி சாட்சியம் சொல்லி.. அதன் அடிப்படையில்.. இவர் மீள பதவியில் அமர்த்தப்படுவாராயின் அது தவறான செயலாகும்.

இலங்கை மருத்துவர் சங்கம் உட்பட பொறுப்பு வாய்ந்த மருத்துவ அமைப்புக்கள் முழு விசாரணைக்கும் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சார்ந்து எல்லா ஆதாரங்களும் சரியாக ஆராயப்பட்டு அதனடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதே சமூகத்துக்கு நல்லதாகும்.

மற்றும்படி.. கிழக்கு மாகாணத்திலும் உணவகம் ஒன்றில்.. தமிழ் பெண்களுக்கு கருத்தடை/கருக்கலைப்பு மாத்திரை கலந்த உணவு பரிமாறப்பட்டதாக செய்திகள் உலா வந்திருந்தன. அதேபோல்.. மலையகத்தில்.

எனவே இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்தவர்களை எள்ளி நகையாடிக் கொண்டு இருக்காமல்.... குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது சரியான நடுநிலை மற்றும் துறைசார் நிபுணத்துவ விசாரணைகளின் பகுப்பாய்வுகளின் பின் தான் திடமான முடிவுகள் எடுக்கப்பட்டு மீள் நியமனம் வழங்கப்பட வேண்டும். இன்றேல்.. அரசியல் காரணங்களுக்காக எடுப்படும் முடிவுகள்.. தவறான நிகழ்வுகள் தொடர்வதையே தூண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nedukkalapoovan said:

இவர் மீதான குற்றச்சாட்டுக்களை ஒரு தாதி சாட்சியம் சொல்லி.. அதன் அடிப்படையில்.. இவர் மீள பதவியில் அமர்த்தப்படுவாராயின் அது தவறான செயலாகும்.

இலங்கை மருத்துவர் சங்கம் உட்பட பொறுப்பு வாய்ந்த மருத்துவ அமைப்புக்கள் முழு விசாரணைக்கும் இவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சார்ந்து எல்லா ஆதாரங்களும் சரியாக ஆராயப்பட்டு அதனடிப்படையில் முடிவுகள் எடுக்கப்படுவதே சமூகத்துக்கு நல்லதாகும்.

மற்றும்படி.. கிழக்கு மாகாணத்திலும் உணவகம் ஒன்றில்.. தமிழ் பெண்களுக்கு கருத்தடை மாத்திர கலந்த உணவு பரிமாறப்பட்டதாக செய்திகள் உலா வந்திருந்தன. அதேபோல்.. மலையகத்தில்.

எனவே இதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு அடுத்தவர்களை எள்ளி நகையாடிக் கொண்டு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது சரியான நடுநிலை மற்றும் துறைசார் நிபுணத்துவ விசாரணைகளின் பகுப்பாய்வுகளின் பின் தான் திடமான முடிவுகள் எடுக்கப்பட்டு மீள் நியமனம் வழங்கப்பட வேண்டும். இன்றேல்.. அரசியல் காரணங்களுக்காக எடுப்படும் முடிவுகள்.. தவறான நிகழ்வுகள் தொடர்வதையே தூண்டும். 

மன்னிக்கவும் நெடுக்கர்: ஒரு தாதி அல்ல! அவரோடு வேலை செய்த பல தாதிகள். இலங்கை மருத்துவர் சங்கம் மூச்சே விடவில்லை. ஏன் தெரியுமா? நீங்கள் எப்படி மருத்துவ அறிவை ஒரு பக்கம் வைத்து விட்டு இவரை முஸ்லிம் என்று சந்தேகத்துடன் பார்க்கிறீர்களோ , அதே போலவே அவர்களும் பார்த்தார்கள்.

நீங்கள் சொன்ன ஆய்வுகளெல்லாம் செய்தார்கள். நிரந்தரமாக கருத்தடை செய்ய சூலகத்தை எடுக்க வேண்டும் அல்லது IUD வைக்க வேண்டும்! இவையிரண்டையும் செய்யவில்லை என்று கண்ட பின்னரே இந்த முடிவு.

இப்ப பாருங்கள், "உணவில் முஸ்லிம்கள் கருத்தடை  மாத்திரை கலந்தார்கள்" என்ற வதந்தியை செய்தி என்று நீங்களே நம்புகிறீர்கள் என்றால் பாமர மக்களின் நிலை என்ன? இந்த வதந்தி தான் இவரது வழக்கு! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

இப்ப பாருங்கள், "உணவில் முஸ்லிம்கள் கருத்தடை  மாத்திரை கலந்தார்கள்" என்ற வதந்தியை செய்தி என்று நீங்களே நம்புகிறீர்கள் என்றால் பாமர மக்களின் நிலை என்ன? இந்த வதந்தி தான் இவரது வழக்கு! 

அவை செய்திகள். வதந்திகள் என்று ஒரேயடியா மறுத்துக் கடந்து சென்றுவிட முடியாது. ஊடகங்கள் ஆதாரமின்றி செய்திகள் சொல்லி இருக்குமா என்ற கேள்வியை இலகுவாக மறைத்து விடுகிறீர்கள். 

மேலும் இவர் மீதான வழக்கு சட்ட ரீதியாக அணுகப்பட்டிருக்க வேண்டும். அதேவேளை இவர் மீதான துறைசார் விதி மீறல் குற்றச்சாட்டுக்கள்.. துறைசார் அமைப்புக்கள் மூலம் விசாரிக்கப்பட்டு இவர் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து இவர் ஆதார பூர்வமாக விடுவிக்கப்பட்டிருக்கவும் வேண்டும்.

ஆனால்.. இவர் மீதான மீள் நியமனத்தில் அப்படி எதுவும் தெளிவாக வரையறுத்துக் கூறப்படவில்லை. அதனால்.. இந்த மீள் நியமனமும் சந்தேகத்தையே உண்டு பண்ணுகிறது. 

இவர் முஸ்லிம் என்பதற்காக அல்ல.. மருத்துவத் துறையினர் தமது பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் என்பதே இங்கு முதன்மையானது. அது சமூக நலன் சார்ந்த விடயமாகும். இதில் முஸ்லிம் தமிழ் சிங்களப் பாகுபாடு அவசியமில்லை. அதைக் காட்டி தவறுகளை செய்துவிட்டு தப்பிக்க முயலக் கூடாது. 

On 16/12/2021 at 14:19, பிழம்பு said:

இன்று வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் சந்தேகத்தை அதிக்கப்படுத்துகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, nedukkalapoovan said:

அவை செய்திகள். வதந்திகள் என்று ஒரேயடியா மறுத்துக் கடந்து சென்றுவிட முடியாது. ஊடகங்கள் ஆதாரமின்றி செய்திகள் சொல்லி இருக்குமா என்ற கேள்வியை இலகுவாக மறைத்து விடுகிறீர்கள். 

மேலும் இவர் மீதான வழக்கு சட்ட ரீதியாக அணுகப்பட்டிருக்க வேண்டும். அதேவேளை இவர் மீதான துறைசார் விதி மீறல் குற்றச்சாட்டுக்கள்.. துறைசார் அமைப்புக்கள் மூலம் விசாரிக்கப்பட்டு இவர் மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து இவர் ஆதார பூர்வமாக விடுவிக்கப்பட்டிருக்கவும் வேண்டும்.

ஆனால்.. இவர் மீதான மீள் நியமனத்தில் அப்படி எதுவும் தெளிவாக வரையறுத்துக் கூறப்படவில்லை. அதனால்.. இந்த மீள் நியமனமும் சந்தேகத்தையே உண்டு பண்ணுகிறது. 

இவர் முஸ்லிம் என்பதற்காக அல்ல.. மருத்துவத் துறையினர் தமது பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் என்பதே இங்கு முதன்மையானது. அது சமூக நலன் சார்ந்த விடயமாகும். இதில் முஸ்லிம் தமிழ் சிங்களப் பாகுபாடு அவசியமில்லை. அதைக் காட்டி தவறுகளை செய்துவிட்டு தப்பிக்க முயலக் கூடாது. 

இதுதான் சந்தேகத்தை அதிக்கப்படுத்துகிறது. 

முகத்தில மூக்கு இருக்கிற ஒருவர் போய் பொலிசில் "டாக்டர் என் மூக்கை அகற்றி விட்டார்" என்று முறைப்பாடு செய்தால் அது கோர்ட்டுக்குப் போகாது நெடுக்கர்!😂

Link to comment
Share on other sites

14 hours ago, Justin said:

என்ன பேசுகிறீர்கள் என விளங்கவில்லை! 

வைத்தியர் சாபி சட்ட விரோத கருத்தடை செய்தார் என்பது தான் வதந்தி. அது தான் பொய்யென நிரூபணமாகியிருக்கிறது. நீங்கள் நோயாளி இறந்தார் என்கிறீர்கள்? இது நிச்சயமாக வேறு கேசோடு குழம்பியிருக்கிறீர்கள் - மேலே செய்தியைப் பாருங்கள்!

வைத்தியர்கள் தவறே செய்ததில்லை என்ற உங்கள் வாதம் புல்லரிக்கிறது.

குற்றவாளிகள் எனக்கண்டு தண்டனை கொடுக்கப்பட்டபின்பு, கோத்தபாய அரசும், அரசின் நீதிமன்றங்களும் அவை வதந்திகள் என்று கண்டுதான் பலரை விடுதலை செய்துள்ளனவா? குற்றவாளிகள் எனக் காணப்பட்ட அத்தனைபேரும்  உங்கள் வாதப்படி குற்றவாளிகள் அல்ல எனக் கொள்ளலாமா?? வைத்தியர் சாபி செய்தகுற்றத்தை அலசி ஆராயாமலே தண்டனை கொடுத்தார்களா???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

வைத்தியர்கள் தவறே செய்ததில்லை என்ற உங்கள் வாதம் புல்லரிக்கிறது.

குற்றவாளிகள் எனக்கண்டு தண்டனை கொடுக்கப்பட்டபின்பு, கோத்தபாய அரசும், அரசின் நீதிமன்றங்களும் அவை வதந்திகள் என்று கண்டுதான் பலரை விடுதலை செய்துள்ளனவா? குற்றவாளிகள் எனக் காணப்பட்ட அத்தனைபேரும்  உங்கள் வாதப்படி குற்றவாளிகள் அல்ல எனக் கொள்ளலாமா?? வைத்தியர் சாபி செய்தகுற்றத்தை அலசி ஆராயாமலே தண்டனை கொடுத்தார்களா???

😂பாஞ், சாபிக்கு

1) எந்த நீதிமன்றில்

2) எப்போது குற்றம் நிரூபிக்கப் பட்டு,

3) என்ன தண்டனை வழங்கப் பட்டது

என்று தகவலளை இங்கே பதியுங்கள்: மேற்கொண்டு பேசலாம்!

Link to comment
Share on other sites

On 20/12/2021 at 15:25, Justin said:

😂பாஞ், சாபிக்கு

1) எந்த நீதிமன்றில்

2) எப்போது குற்றம் நிரூபிக்கப் பட்டு,

3) என்ன தண்டனை வழங்கப் பட்டது

என்று தகவலளை இங்கே பதியுங்கள்: மேற்கொண்டு பேசலாம்!

கடந்த மே மாதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இரு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு குருணாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.

thinakaran.lk

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Paanch said:

கடந்த மே மாதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு இரு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு குருணாகல் நீதவான் சம்பத் ஹேவாவசம் முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த உத்தரவு வழங்கப்பட்டது.

thinakaran.lk

நீங்கள் சொன்னது போல நீதிமன்றில் தண்டனை வழங்கப்படவில்லையென்பது தெரிகிறதா இப்போது?

விளக்க மறியல் என்பது சிறைத்தண்டனை தான் என்று வாதிட மாட்டீர்களென நம்புகிறேன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Paanch said:

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பதை குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டார்.. என்று மாத்திறாங்கப்பா யாழ் களத்தில். ஒருவேளை யாழில் இந்த கள்ளக்கருத்தடை குற்றச்சாட்டுள்ள.. டாக்குத்தருக்கு நெருங்கிய நண்பர்கள் இருக்கினமோ என்னமோ..?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, nedukkalapoovan said:

பிணையில் விடுவிக்கப்பட்டார் என்பதை குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டார்.. என்று மாத்திறாங்கப்பா யாழ் களத்தில். ஒருவேளை யாழில் இந்த கள்ளக்கருத்தடை குற்றச்சாட்டுள்ள.. டாக்குத்தருக்கு நெருங்கிய நண்பர்கள் இருக்கினமோ என்னமோ..?!

பிரபல கருத்தடை  வைத்தியர் சிஹாப்தீனுக்கு… சிலர்,   வெள்ளை அடிக்கிறதை பார்த்தால்…

இரண்டு பேரும்…. இணை பிரியாத நண்பர்கள் போலுள்ளது. 😁 😂 🤣

ஹ்ம்ம்ம்ம்…. நடக்கட்டும்.  🤣🤣🤣🤣🤣

Link to comment
Share on other sites

16 hours ago, Justin said:

நீங்கள் சொன்னது போல நீதிமன்றில் தண்டனை வழங்கப்படவில்லையென்பது தெரிகிறதா இப்போது?

விளக்க மறியல் என்பது சிறைத்தண்டனை தான் என்று வாதிட மாட்டீர்களென நம்புகிறேன்!

சூதும் வாதும் வேதனைசெய்யும் என்று படித்ததால் நான் அதிகமாக வாதிட விரும்புவதில்லை ஐயா🙏

ஆனால் இந்த விக்கிப்பீடியாவை (https://ta.wikipedia.org/) என்ன செய்வது👇🤔

நீதிமன்றக் காவல் அல்லது விளக்க மறியல், (Remand (detention)) ஒரு குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரால் காவல் துறையின் விசாரணை பாதிக்கப்படும் என காவல்துறை நீதிமன்றத்தில் போதிய ஆதாரத்துடன் எடுத்துரைத்தால், காவல் துறையின் விசாரணை முடியும் வரையோ அல்லது நீதிமன்றத்தில் வழக்கு துவங்கும் வரையோ அல்லது வழக்கு முடியும் வரையோ குற்றம் சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தின் ஆணையின் பேரில் சிறையில் அடைக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.