Jump to content

பிரதமரின் தலைமையில் “நாவலர் ஆண்டு” பிரகடனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, உடையார் said:

 

 

எமது வராலறுகளை சிதைக்க வேண்டுமென்றே கிளம்பியுருக்கும் சிலரை இனம் காண்பது யாழ்கள வாசகர்களுக்கு நன்று, 🙂

அவர்கள் சிங்சங் தமிழர்கள்

தாளம் (இசைக்கருவி) - தமிழ் விக்கிப்பீடியா

இது ஒரு பக்க வாத்திய கருவி அல்லவா? இது சிலருக்கு அலேர்ஜி😂

Link to comment
Share on other sites

  • Replies 191
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Nathamuni said:

கத்தோலிக்க மதத்தினை தழுவியவர்களும், கத்தோலிக்க பாடசாலைகளில் மண்டை கழுவுபட்டவர்களும், நாவலரை எந்த புள்ளியில் தாக்குகிறார்கள் என்று பார்க்க.... நோக்கம் புரிகிறது. 😇

🤣கத்தோலிக்க பாடாசாலையில் மண்டை கழுவுபட்டது என்றே வைத்தாலும் - அப்படி மண்டை கழுவுபட்டவர் எப்படி அக்னோஸ்டிக் ஆவார்? அவர் கதோலிக்கராய் அல்லவா ஆகி இருப்பார்🤣

கத்தோலிக்க பாடசாலையில் “கணிசமான” காலம் கற்றேன். பெரும்பாலான காலம் மதம் சாரா கல்வி நிலையத்தில்தான்.

அது சரி எப்போதுதான் எழுதியதை வாசித்தீர்கள். நீங்கள் விரும்புவதை வாசிப்பதுதானே உங்கள் பழக்கம்🤣.

பிகு

மதரசாக்களில் தமிழை கட்டாயபாடம் ஆக்க வேண்டும். ரொம்ப தடுமாறுது தமிழ் வாசிப்பு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண்டை கழுவுபட்டு தானே அக்னோஸ்டிக் ஆனீர்கள்...

அப்பறம்? 

நாவலர் குறித்த சைவர்கள் அல்லாத  சிலரது பெரும் கவலையினை  தமிழில் முதலைக் கண்ணீர் என்று சொல்வார்கள். 😁 

எப்பவும், கமா எல்லாமே இப்ப, முக்கிய சொற்கள் ஆகி விட்டன...

20 minutes ago, goshan_che said:

🤣கத்தோலிக்க பாடாசாலையில் மண்டை கழுவுபட்டது என்றே வைத்தாலும் - அப்படி மண்டை கழுவுபட்டவர் எப்படி அக்னோஸ்டிக் ஆவார்? அவர் கதோலிக்கராய் அல்லவா ஆகி இருப்பார்🤣

கத்தோலிக்க பாடசாலையில் “கணிசமான” காலம் கற்றேன். பெரும்பாலான காலம் மதம் சாரா கல்வி நிலையத்தில்தான்.

அது சரி எப்போதுதான் எழுதியதை வாசித்தீர்கள். நீங்கள் விரும்புவதை வாசிப்பதுதானே உங்கள் பழக்கம்🤣.

பிகு

மதரசாக்களில் தமிழை கட்டாயபாடம் ஆக்க வேண்டும். ரொம்ப தடுமாறுது தமிழ் வாசிப்பு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

1) வாழைப்பழத்தில் ஊசி அடிப்பது போல, அந்நிய மத ஆதரவாளர்களும், மத நம்பிக்கை இல்லாதவர்களும், நாவலரின் இருநூறாண்டுகளுக்கு முன்னான கருத்தினை தூக்கிப் பிடித்து கொண்டு வருவது தெளிவாகிறது.

2) கோபம் வேறு வருகிறது...

3)  ஒன்று சாதியம் குறித்து பேசுவது. அடுத்து, பௌத்த எதிர்ப்பினை இழுப்பது....

4) நீங்கள் சொன்னது போல, இன்று ஆட்சியில் சிங்களவர்கள்... அவர்களிடமே போய் நாவலர் ஆண்டாக பிரகடனம் செய்ததில்... தவறு இல்லையே... உடனே... பௌத்தன்.... இனத்தை அழித்தவன் என்று கூப்பாடு வேறு.

அழித்தவன் தான்... அதுக்காக கொழும்பில் அதிகாரம் என்ற நிதர்சனம் ஒன்று உள்ளதே... அதனை மறுக்க முடியாதே.

""அழித்தவன் தான்... அதுக்காக கொழும்பில் அதிகாரம் என்ற நிதர்சனம் ஒன்று உள்ளதே... அதனை மறுக்க முடியாதே.""

அர்றா சக்கை .. அர்றா சக்கை..🤣😂😀இது எங்கேயோ இடிக்குதே..🧐

1) உத நீங்க ஊரில இருந்தெல்லோ சொல்லோணும். அன்னிய நாட்டில இருந்து சொல்லுறது சரியே

2)கோபம் வரத்தானே செய்யும்

3) சாதியைப் பற்றிய பேச்சு வந்தால் பெளத்தத்திடம் சரணடைவீர்கள். இலங்கை அரசியல் பிரச்சனை என்பது மலைநாட்டு கொவிகம - தென்மேற்கு கரையோர கரவா பிரச்சனைதான் எனும் பார்வையும் ஒன்று உண்டு. இவர்களுக்கிடையே ஏற்படும் போட்டியில் யாழ் வெள்ளாளர்(எங்கள் ஆரம்ப காலத்து அரசியல்வாதிகள்) எப்போதுமே கண்டிய கொவிகமவிற்கு ஆதரவாக நின்றார்கள் என்றும் கூறப்படுகிறது. சாதி அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக பெளத்த அரசுகளிடம் இவர்கள் சரணடைந்து இனத்தை விற்றதாகவும் பார்வைகள் உண்டு.  

உப்போதும் இதுதான் நடப்பதாக..........

😔

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கத்தோலிக்க மதத்தினை தழுவியவர்களும், கத்தோலிக்க பாடசாலைகளில் மண்டை கழுவுபட்டவர்களும், நாவலரை எந்த புள்ளியில் தாக்குகிறார்கள் என்று பார்க்க.... நோக்கம் புரிகிறது. 😇

கத்தோலிக்க பாடசாலைகளில் கல்விகற்கவில்லையென்ற கவை நாத்ர்ஸ்க்கு ?.....ம்ம்ம 🤪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kapithan said:

""அழித்தவன் தான்... அதுக்காக கொழும்பில் அதிகாரம் என்ற நிதர்சனம் ஒன்று உள்ளதே... அதனை மறுக்க முடியாதே.""

அர்றா சக்கை .. அர்றா சக்கை..🤣😂😀இது எங்கேயோ இடிக்குதே..🧐

1) உத நீங்க ஊரில இருந்தெல்லோ சொல்லோணும். அன்னிய நாட்டில இருந்து சொல்லுறது சரியே

2)கோபம் வரத்தானே செய்யும்

3) சாதியைப் பற்றிய பேச்சு வந்தால் பெளத்தத்திடம் சரணடைவீர்கள். இலங்கை அரசியல் பிரச்சனை என்பது மலைநாட்டு கொவிகம - தென்மேற்கு கரையோர கரவா பிரச்சனைதான் எனும் பார்வையும் ஒன்று உண்டு. இவர்களுக்கிடையே ஏற்படும் போட்டியில் யாழ் வெள்ளாளர்(எங்கள் ஆரம்ப காலத்து அரசியல்வாதிகள்) எப்போதுமே கண்டிய கொவிகமவிற்கு ஆதரவாக நின்றார்கள் என்றும் கூறப்படுகிறது. சாதி அதிகாரத்தைப் பாதுகாப்பதற்காக பெளத்த அரசுகளிடம் இவர்கள் சரணடைந்து இனத்தை விற்றதாகவும் பார்வைகள் உண்டு.  

உப்போதும் இதுதான் நடப்பதாக..........

😔

 

கப்பிதான்,

முதலில் ஒரு விடயத்தில் தெளிவாக இருங்கள். குழம்பாதீர்கள்.

நாவலரின் சாதியம் குறித்த பார்வை தவறு என்று சொல்லி தான் கருத்தாடிக்கொண்டிருக்கிறேன்.

எனது கவலை, கத்தோலிக்கர்களும், மத நம்பிக்கை இல்லாதவர்களும், சாதிய கோணத்தில் உள்ளே புகுந்து, சைவத்துக்கு எதிராக கருத்து வைப்பது மட்டுமே.

நல்லது, நீங்கள், சைவரா, இல்லையா என்று சொல்ல முடியுமா என்று கேட்கப்போவதில்லை.

கேட்டால், நான் எந்த சமயமும் இல்லை என்று சொல்வீர்கள், சரியா? 

6 minutes ago, Kapithan said:

கத்தோலிக்க பாடசாலைகளில் கல்விகற்கவில்லையென்ற கவை நாத்ர்ஸ்க்கு ?.....ம்ம்ம 🤪

உங்கள் பிரச்சனை தான் என்ன? 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

அழித்தவன் தான்... அதுக்காக கொழும்பில் அதிகாரம் என்ற நிதர்சனம் ஒன்று உள்ளதே... அதனை மறுக்க முடியாதே.""

அர்றா சக்கை .. அர்றா சக்கை..🤣😂😀இது எங்கேயோ இடிக்குதே..🧐

ஆஹா… வி டி வி கணேஸ் மாரி உங்களுக்கும் அங்க அதுதான் சொல்லுதா?🤣.

அது பாருங்கோ …இனபடுகொலையை செய்தவர்கள், தமிழ் ஆண்களை கடலுக்கும், பெண்களை இச்சைக்கும் இரையாக்குங்கள் என சொன்னவர்களுடன் கொஞ்சி குலாவி நாவலர் விழா கொண்டாடுவார்களாம்.

ஆனால் இந்தியாவை நம்பி நடவாமல் ஆனால் விவேகமாக கையாண்டு எமக்கு ஒரு தீர்வை எடுப்போம் என சொன்னால் அது முடியாதாம். ஏனென்றால் அவர்கள் படுகொலைக்கு துணை போனவர்களாம்.

எப்படியோ ஈழ தமிழர்களை தனிமரமாக்கி அவரே சொன்னது போல் “சிங்களவன் காலில் விழுந்துவிட்டோம்/விழுவோம்” என்ற மனநிலைக்கு தள்ளுவதுதான் இங்கே கிடந்து குத்தி முறிவதன் முழு நோக்கம்.

1990 வெளியேற்றத்துக்கு நல்லாகவே பழி தீர்க்கிறார்கள்.

பிகு

1990 க்கு முன் யாழ் இந்துவில் படித்த இஸ்லாமிய சகோததர்கள் பலர் உள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

கப்பிதான்,

1) முதலில் ஒரு விடயத்தில் தெளிவாக இருங்கள். குழம்பாதீர்கள்.

2) நாவலரின் சாதியம் குறித்த பார்வை தவறு என்று சொல்லி தான் கருத்தாடிக்கொண்டிருக்கிறேன்.

3) எனது கவலை, கத்தோலிக்கர்களும், மத நம்பிக்கை இல்லாதவர்களும், சாதிய கோணத்தில் உள்ளே புகுந்து, சைவத்துக்கு எதிராக கருத்து வைப்பது மட்டுமே.

4) நல்லது, நீங்கள், சைவரா, இல்லையா என்று சொல்ல முடியுமா என்று கேட்கப்போவதில்லை.

கேட்டால், நான் எந்த சமயமும் இல்லை என்று சொல்வீர்கள், சரியா? 

5) உங்கள் பிரச்சனை தான் என்ன? 🤔

1) மிகத் தெளிவாகவே இருக்கிறேன். உங்கள் ஆர்வத்திற்கு நன்ற.

2) அதைத்தான் நானும் சொல்கிறேன். சாதிய கட்டமைப்பு அநீதியானது. எங்கள் இன ஒற்றுமைக்கு எதிரானது. எங்களைப் பலவீனப்படுத்துவது

3) உங்கள் புரிதல் தவறானது. கிறீத்தவர்கள் யாராவது, இந்தத் திரியில் சைவ சமயத்திற்கு எதிராக கருத்திட்டதைக் காட்ட முடியுமா ? தனிப்பட்ட ரீதியில் சைவ சமயத்தை மிகவும் மதிப்பவன் நான். 

4) உங்கள் ஆசையை ஏன் மறுப்பான். நான் கத்தோலிக்கன். (அதற்காக கத்தோலிக்கம் சிறந்தது என்று ஒருபோதும் வாதாடப்போவதில்லை. ஏனெனில் அல்லா சமயங்கலைப் போலவே RC யிலும் பல்வேறு குறைபாடுகள், மற்றும்பல மோசமான தவறுகள்/மோசடிகள் ? அதிலும் உண்டு என நம்புபவன்  😀)

5) உங்களுக்கு உள்ள அதே பிரச்சனைதான். (தவறான புரிதல்/...May be ? ) 😔

13 hours ago, MEERA said:

ஸ்ரீஸ்ரீ ஆறுமுகநாவலர் சபை உடன் தொடர்பு கொண்டு அடுத்த வருடம் பாரிய அளவில் செய்ய வேண்டும். சபையின் செயற்பாடுகளையும் விஸ்தரிக்க வேண்டும்.

ஏன் அவர்களிடம் போவான், பேசாமல் மகிந்தவிடம் போனால் பிரச்சனை முடிந்தது..? 😏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

⬆️  இதனைத்தான்…. எதிர் பார்த்தோம். 👍🏼🙂

ஆறுமுக நாவலரின் புகழை…. மேலும் பரப்பிய… ருல்பன், ஜஸ்ரின், கோசான் போன்ற உறவுகளுக்கு நன்றி. 🙏🏽

நாவலரின் புகழை வெள்ளாள சாரியினரிடம் மட்டும்தான் பரப்ப முடியும். ஏனென்றால் உங்கள் நோக்கம் சைவ சமயத்தையும் சைவ சமயத்தையும் காப்பது, வளர்ப்பது என்பதற்குப்பதிலாக நாவலரின் புகழைத்தானே பரப்புவதாய் இருக்கிறது. அதுகூட போட்டி மனப்பான்மையில்.

சைவ சமயத்தை வளர்க்க, பாதுகாக்க வேண்டுமென்றால் முதலில் பல தவறுகள் களையப்பட வேண்டும். சைவ சமயத்தோர் எல்லோரும் ஒன்றாக உணர வேண்டும். இது எல்ல சமயங்களுக்கும் பொருந்தும். 

என்னால் ஆயிரம் உதாரணங்களை என்னால் கூற முடியும். ஆனால் அது தவறாகப் புரிந்துகொள்ளப்படும் என்பதனால் தவிர்க்கிறேன். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Kapithan said:

ஏன் அவர்களிடம் போவான், பேசாமல் மகிந்தவிடம் போனால் பிரச்சனை முடிந்தது..? 😏

அங்க போனா நாவலர் சபைக்காரனே அடிப்பான் நான் பிச்சை எடுக்குர இடத்துல நீ ஏன் துண்டை போடுராய்னு..😂😂

15 hours ago, ரஞ்சித் said:

அது பாரதரத்னா இல்லை, “இலங்காரத்ணா” !

ஆமால்ல.. ஒரு புலோவில வந்துட்டு ஜீ.. அந்த மானங்கெட்ட பட்டத்துக்கு பேரு ஒரு கேடு..😂😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

🤣 மகிந்த, அங்கயன், சுரேன் இராகவனுக்கு பிறகுதான் நாங்கள் என்பதை பணிவன்புடன் தெரிவிக்கிறோம்😁.

நீங்க வேர… அவிங்க எல்லாம் கமிட்டி மெம்பர்ஸ்.. சங்கமே அவங்களோடதான் ஜீ.. 😂😂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:
11 hours ago, தமிழ் சிறி said:

ஆறுமுக நாவலரின் புகழை…. மேலும் பரப்பிய… ருல்பன், ஜஸ்ரின், கோசான் போன்ற உறவுகளுக்கு நன்றி. 🙏🏽

🤣 மகிந்த, அங்கயன், சுரேன் இராகவனுக்கு பிறகுதான் நாங்கள் என்பதை பணிவன்புடன் தெரிவிக்கிறோம்😁.

சரியாகச் சொன்னீர்கள்.  ஆறுமுக நாவலரின் புகழை மேலும் பரப்பியதற்காக  Tulpen, ஜஸ்ரின் அண்ணா , கோஷான் சேக்கு நன்றி தெரிவிப்பதானது ஸ்ரலின் செய்யும் நல்ல செயல்களுக்காக சீமானுக்கு நன்றி தெரிவிப்பதை போன்றதாகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடக்கூடாது, சாப்பிடக்கூடாது நான் நாவலருக்குத்தான் ஆதரவு ஏனெண்டா நானும் அவரும் ஒரே **. அதுவும் *** ** *****.  எண்ட சீவுளிக்கூடென்ன ?தழைநாரென்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கஜனும் மகிந்தவும் ஆறுமுகநாவலரை தூக்கி பிடிப்பதால் ஆறுமுகநாவலரை நாங்கள் துரோகி போல் கதைக்க முடியாது. எனக்கு சிங்கள இனவாதிகளை பிடிக்காது. அதனால் புத்தன் எனக்கு விரோதியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

அங்கஜனும் மகிந்தவும் ஆறுமுகநாவலரை தூக்கி பிடிப்பதால் ஆறுமுகநாவலரை நாங்கள் துரோகி போல் கதைக்க முடியாது. எனக்கு சிங்கள இனவாதிகளை பிடிக்காது. அதனால் புத்தன் எனக்கு விரோதியல்ல.

ஆறுமுக நாவலரை துரோகியென்று இங்கு யாருமே கூறவில்லை. அவரது சமய, தமிழ்த் தொண்டை யாரும் குறைத்து எடைபோட முடியாது.

அவரது சில சிந்தனைகள் எமது சமூகத்திற்கு ஏற்புடையது அல்ல என்று கூறுவது சிலருக்கு உவப்பானதாக இல்லை.. 

அவர்கள் சைவ சமயத்தினை காப்பதற்கு முனையவில்லை. ஆறுமுக நாவலரின் சமூகத்தை பலவீனப்படுத்தும், நீதியற்ற சிந்தனைகளை காப்பதற்கு முனைகின்றனர். அதுதான் பிரச்சனையே...

☹️

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, Kapithan said:

அவர்கள் சைவ சமயத்தினை காப்பதற்கு முனையவில்லை. ஆறுமுக நாவலரின் சமூகத்தை பலவீனப்படுத்தும், நீதியற்ற சிந்தனைகளை காப்பதற்கு முனைகின்றனர். அதுதான் பிரச்சனையே.

உண்மையில் இங்கு அது தான் நடக்கிறது.

தமிழ இனத்தின் உள்ளே  சாதி பாகுபாடு என்ற, வர்ணாசிரம நச்சு கருத்தியலை ஒரு நன்நெறி போல் கூறி அதைப் பலப்படுத்த விழைந்த நாவலரின் செய்கை மட்டுமே இங்கு விமர்சிக்கப்படுகிறது. 

இங்கு விவாதிப்பவர்களுக்கு அது தெரியாததல்ல. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2021 at 04:44, நியாயத்தை கதைப்போம் said:

வசதி, வாய்ப்புக்களை மனதில்கொண்டு மதம் மாறினார்கள். வசதி, வாய்ப்புக்களை காண்பித்து மதம் மாற்றப்பட்டார்கள், மதம் மாற்றப்படுகின்றார்கள்.

வசதி வாய்ப்புகளை காண்பித்து மதம் மாறியிருந்தாலோ, மாற்றியிருந்தாலோ இன்று ஆறுமுகாவலரைப்பற்றி இவ்வளவு விவாதம் வளர வாய்ப்பிருந்திருக்காது. கிறிஸ்தவ கல்லூரிகளில் கற்றுத்தேறிய எத்தனையோ சட்டவல்லுனர்கள், சைவ பெரியார்களும் அடங்கும். வசதி வாய்ப்புகளுக்காக மதம் மாறியோர் தேவை முடிந்தவுடன் தமது மதத்திற்கு திரும்பி விட்டார்கள். சிலர் மதம் மாறவில்லை, மாற்றவும் இல்லை கல்வியை கற்றுத் தேறி தம்பணியை செய்தார்கள், யாரும் தடுக்கவில்லை. ஆறுமுகநாவலர், விபுலானந்தர் இப்படி பலருண்டு. கிறிஸ்தவர்களின் போதனை, வாழ்க்கை முறையால் கவரப்பட்டு பின்பற்றியவர்கள் எத்தனை இடர்வந்தபோதும் தாங்கி தொடர்ந்து இருப்பதாலே கிறிஸ்தவம் இன்னும் வாழுது. ஒருசிலர் ஆறுமுகநாவலர் தமிழுக்கு செய்த நன்மைகளை மறைத்து, சில சாக்கடைகளை கங்கை என விழிப்பதன் மூலம் சாக்கடைகளை கங்கையாக்க முயற்சிக்கிறார்களா அல்லது கங்கையை சாக்கடையாக்க  முயற்சிக்கிறார்களா என்பது புரியவில்லை. தமிழினம் அழிய துணைபோனவர்களை எங்கே வசை பாடி  விடுவார்களோ என்கிற ஏக்கம் அவர்களுக்கு. அதற்காக நாவலரை துணைக்கு அழைக்கிறார்கள். மொத்தத்தில் யாரை எங்கு வைப்பது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏன் நாவலரை அழைக்கிறீர்கள்? கோவில்களில் இன்னும் ஏற்றத் தாழ்வு வளர்ப்பவர்கள், மதம் மாறுவோரை வசை பாடுவோர் இருக்கிறார்கள். அவர்களையும் சேர்த்து தாக்குங்கள். திரி திசை திரும்ப வேண்டாம் என்பதற்காக தொடர்ந்து கருத்தெழுத விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 18/12/2021 at 23:11, satan said:

போல வேண்டாம். நீங்கள் அவர் விட்ட தவற்றை சொல்லிக்கொண்டு திரிவதை விட மாற்றிக்காட்டுவதிலேயே "தில்" இருக்கிறது. பகுத்தறிவு உள்ளவர்கள் செயலும் அதுவே. சொல் வீரர் அல்ல செயல் வீரர் என்று எதிர்கால சந்ததி உங்களையும் கொண்டாடும். 

நாங்கள் செய்தெல்லாம் காட்டமாட்டம். அறிக்கை மட்டும்தான் விடுவமாக்கும்!!😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2021 at 16:57, Justin said:

 

அன்று கல்விக்காக மதத்தை தமிழர்கள் மாற்றியிருக்கா விட்டால், இன்று குஜராத் போல அறிவற்ற சாதி , மத வெறியர்கள் நிறைந்த ஒரு பிரதேசமாக இருந்திருப்போமென நினைக்கிறேன். 

ஏன் சைவசமயத்தை பின்பற்றியவர்களில் படித்தவர்கள் யாருமே இல்லையா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2021 at 02:41, Justin said:

 

மிகச்சரியான சில கருத்துகள், ஆனால் சொல்ல வேண்டியது எனக்கல்ல! - மாம்பழத்தை விபரிக்கும் போது அதில் இருக்கும் கொட்டை, புழுத்துளை என்பன சேர்த்தே விபரிக்குமாறு இங்கே "வெள்ளையடிக்க" முயலும் ஆட்களுக்குத் தான் நீங்கள் சொல்ல வேண்டும்!

 

மாம்பழத்தை சாப்பிடும்போது புழு, பழுதடைந்த பகுதிகள், விதை என்பவற்றை தவிர்த்து நல்லவற்றை மட்டும்தான் சாப்பிடுவோம். அதைத்தான் சொல்லுவது இயல்பறிவு என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

B426-DE24-970-F-4-E2-B-A86-B-C0016-C58-E

“இணைய வழி” மூலமான வகுப்புகள் என்ற படியால்,
சுவிற்சலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா என்று….
உலகின் எந்தப் பகுதியில் வசிப்பவர்களும் கலந்து கொள்ளலாம். 👍🏽
தகவலுக்கு… நன்றி மீரா. 🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/12/2021 at 12:24, goshan_che said:

🤣 மகிந்த, அங்கயன், சுரேன் இராகவனுக்கு பிறகுதான் நாங்கள் என்பதை பணிவன்புடன் தெரிவிக்கிறோம்😁.

அப்ப நீங்களும் இந்த கூட்டத்தில் ஒருவர் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்! நன்றி.🙏

Link to comment
Share on other sites

14 hours ago, MEERA said:

B426-DE24-970-F-4-E2-B-A86-B-C0016-C58-E

 

அது என்னையா ஆன்மிக முன்னேற்றத்திற்குத் துணை செய்யும் தெய்வீக கலை?. நாவலர் கடைசி வரை பிரம்சாரியாக தான் வாழ்ந்தவர், தனது பாலியல் தேவைகளை பூர்த்தி செய்ய வண்ணார்பண்ணை  கனகியிடம் அடிக்கடி சென்று வந்ததாக யாழ்ப்பாணத்து வாய்மொழி வரலாறு கனகி புராணம்  சொல்லுகின்றது. கனகியிடம் கற்ற கலைகள் பற்றி எதாவது கற்கைகள் இருந்தால் அறியத்தரவும், யாம் கற்க ஆவலாய் உள்ளோம். 

https://noolaham.org/wiki/index.php/கனகி_புராணம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.