Jump to content

கடைசீல பிரியாணி விமர்சனம்: சிறுத்தையிடம் முயல் மாட்டினால் பிரியாணி யாருக்கு..?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடைசீல பிரியாணி விமர்சனம்: சிறுத்தையிடம் முயல் மாட்டினால் பிரியாணி யாருக்கு..?Kadaseela Biriyani Review

News

ழிக்குப்பழி ரத்தத்துக்கு ரத்தம் எனக் கிளம்புகிறார்கள் பாண்டியா சகோதரர்கள். யாரைப் பழி தீர்க்கிறார்கள், என்ன நடக்கிறது என்பதை வித்தியாசமான முறையில் அணுகி, புதிய அனுபவத்தைத் தந்திருக்கிறது படக்குழு.

ADVERTISEMENT

விரும்பாத இடத்தில் தவறான நேரத்தில் சிக்கிக்கொள்ளும் ஒரு இளைஞன் தப்பிக்க எடுக்கும் முடிவுகளே 'கடைசீல பிரியாணி. '
பாண்டியா சகோதரர்களில் கடைக்குட்டி சிக்குப்பாண்டி. முரட்டுச் சண்டைக்காரர்களும், முன்கோபிகளும் நிறைந்த வீட்டில், சிக்குப்பாண்டியை மட்டுமாவது அப்பாவியாய் வளர்க்க விரும்பி, வீட்டை விட்டு சிக்குவுடன் வெளியேறிவிடுகிறார் தந்தை. சாதாரண வாழ்க்கையை வாழ்வது என்பது அவ்வளவு சாதாரணம் அல்லவே. சோதனைகள் துரத்துகின்றன. பழிக்குப்பழி ரத்தத்துக்கு ரத்தம் எனக் கிளம்புகிறார்கள் பாண்டியா சகோதரர்கள். யாரைப் பழி தீர்க்கிறார்கள், அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்பதை வித்தியாசமான முறையில் அணுகி, புதிய அனுபவத்தைத் தந்திருக்கிறது படக்குழு.

Kadaseela Biriyani Review

 

சிக்குப் பாண்டியாக விஜய் ராம். 'சூப்பர் டீலக்ஸ்' படத்தில் காஜி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர். ஜோன் கரியாவாக ஹக்கிம் ஷாஜஹான். நாயாட்டு, கூடே போன்ற மலையாள படங்களில் நடித்திருப்பவர். இந்த இருவரைத் தவிர படத்தில் பல புதிய முகங்கள். பெரிய பாண்டியாக வரும் வசந்த் செல்வம் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டியிருக்கிறார். தனக்கு இருக்கும் அந்த வெறி‌ ஏன் தம்பிகளிடம் இல்லை என மூர்க்கத்தோடு அணுகும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிக்க வைக்கிறார். அவர் போடும் ஸ்கெட்சுகளும் வேற லெவல். மிகவும் கேசுவலான வில்லனாக வந்து அசத்துகிறார் ஹக்கிம். இவ்வளவு கூலாக ஒரு எதிர்மறை கதாபாத்திரம் பார்த்து பல மாதங்கள் ஆகிவிட்டன. அதிலும் சீரியஸான காட்சிகளில் அவரின் குரூர நகைச்சுவை ரசிக்க வைக்கிறது. அதிலும் அந்த டீசர்ட் ஜோக், செம ரகளை! படத்தின் கதை சொல்லும் நாயகனாக வருகிறார் விஜய் சேதுபதி.

 

 

அந்த ஊரிலிருக்கும் எதிர் கோஷ்டிக்கு வித்தியாசமான (?) பெயர்கள் வைப்பதில் தொடங்கி, டைட்டில் கார்டை ரெட்ரோ 80'ஸ் டிசைனில் கொண்டுவந்தது வரை அறிமுக இயக்குநராக அட சொல்ல வைக்கிறார் நிஷாந்த் களிதிண்டி. ஒரு திரைப்படத்தில் கதையும் கதை சொல்லும் விதமும்தான் பிரதானம். அதன்பின்தான் நடிகர்கள் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறது 'கடைசீல பிரியாணி'. எடுத்துக்கொண்ட பழிதீர்க்கும் கதையுடன் டார்க் காமெடியும் நன்றாக வந்திருக்கிறது. ஒரு காடு அதைச் சுற்றி நடக்கும் கதை. எந்தத் துறுத்தலும் இல்லாமல் வரும் அந்தக் காடும் காடு சார்ந்த வீடுமே ஒரு தனிக்கதை சொல்கிறது. அந்தச் சூழலிலிருக்கும் ஒலிகளை வைத்தே பின்னணி இசை உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் புதியதொரு அனுபவத்தைத் தந்திருக்கிறார் பின்னணி இசை அமைத்திருக்கும் வினோத் தணிகாசலம். கதை செல்லும் போக்கில் அதை வித்தியாசமான கோணங்களில் படமாக்கியிக்கிறார்கள் ஒளிப்பதிவாளர்கள் ஹெஸ்டின் ஜோசபும், அஜீம் மொஹமதும்.

Kadaseela Biriyani Review
 
Kadaseela Biriyani Review

படத்தின் பட்ஜெட் போதாமைகள் சில இடங்களில் தெரிகின்றன. அதேபோல், துருத்திக்கொண்டு தெரியும் கடைசி காட்சியும் படத்தை ஒருபடி கீழிறக்கிவிடுகிறது. மற்றபடி எடுத்துக்கொண்ட கதைக்கு, நேர்மையாக ஒரு புதிய குழு அட்டகாசமாக உழைத்திருக்கிறது. அதை சிறந்த திரை அனுபவமாகவும் மாற்றி வெற்றி கண்டிருக்கிறது.

 

https://cinema.vikatan.com/tamil-cinema/kadaseela-biriyani-review-a-must-watch-for-movie-lovers

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.