Jump to content

அடிப்படையில் பழுதுகள் நிறைந்த 13 ஐ தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது - தமிழரசுக் கட்சி மக்கள் ஆணையை மீறாது என்கிறார் - சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையில் பழுதுகள் நிறைந்த 13 ஐ தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது - தமிழரசுக் கட்சி மக்கள் ஆணையை மீறாது என்கிறார் - சுமந்திரன்

(ஆர்.ராம், எம்.நியூட்டன்)

 

13 ஆவது திருத்தச் சட்டம் அடிப்படையில் பழுதுகள் நிறைந்தது என்பதை தென்னிலங்கை தலைவர்களே ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் அதனை தீர்வாக எம்மால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

sumanthiran.JPG

தமிழரசுக் கட்சி மக்களிடத்தில் சமஷ்டி தீர்வுக்காக பெற்றுக் கொண்ட ஆணையை மீறிச் செயற்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நேற்று சனிக்கிழமை சிதைந்து போகிற தமிழ்த் தேசியமும் சிந்திக்காத தலைமைகளும் எனும் தலைப்பில் கருத்துப்பகிர்வுறவாடல் நிகழ்வு யாழ் கலைத்தூது மண்டபத்தில் நடைபெற்றது.

இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

அவர் மேலும் தெரிவிக்கையில்,

1949 ஆம் ஆண்டு இலங்கை தமிழரசுக் கட்சி உருவாக்கப்பட்ட போது தமிழ் மக்களுக்கான கொள்கை நிலைப்பாடு முதன் முதலாக ஏற்படுத்தப்பட்டது. இதன் போது தந்தை செல்வா ஆற்றிய உரையானது பின்னர் 1951 ஆம் ஆண்டு திருகோணமலை மாநாட்டில் கட்சித் தீர்மானமாக அறிவிக்கப்பட்டது. 

அன்றிலிருந்து தமிழரசுக் கட்சி அந் நிலைப்பாட்டிலேயே தொடர்ச்சியாக பயணித்துக் கொண்டிருக்கின்றது. எமது நிலைப்பாட்டிற்கான மக்களின் ஆதரவும் ஆணையும் தற்போது வரையில் காணப்படுகின்றது.

அதாவது, சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுடனான தீர்வு என்பதே எம்முடையதும் மக்களுடையதும் நிலைப்பாடாகும். போரின் பின்னர் 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையில் மக்கள் முன்னிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக் கொள்கையை முன்வைத்து அனைத்து தேர்தல்களிலும் ஆணை பெற்று வந்திருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பல கட்சிகள் அங்கம் வகித்துள்ளன. வெவ்வேறு காலப்பகுதியில் அவை உள்வருவதும் வெளிச்செல்வதுமாக இருந்துள்ளன. ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி கட்டமைப்பிலான அதிகாரப் பகிர்வுடனான தீர்வு என்ற விடயத்தில் மாற்றுக் கருத்துக்களை கொண்டிருக்கவில்லை.

கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளும் இதனை ஏற்றுக் கொண்டு மக்கள் முன்னிலையில் வெளிப்படுத்தி அவர்களின் ஆணையைப் பெற்றுள்ளன. கூட்டமைப்பிற்கு வெளியில் இருக்கின்ற கஜேந்திரகுமார் தரப்புரூபவ் விக்னேஸ்வரன் தரப்பு ஆகியனவும் இக் கோரிக்கையையே முன்வைத்து ஆணை பெற்றுள்ளன.

அவ்வாறிருக்க தற்போது தமிழ் பேநும் தரப்புக்களாக ஒன்றுகூடி 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்குமாறு கோருவதற்கு முயற்சிக்கப்படுறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சி இந்த விடயத்தை முன்னெடுகின்றது. அந்தக் கட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணை 13 ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கானதல்ல. அப்படியிருக்கும்போது எவ்வாறு அக்கட்சி இந்த விடயத்தை முன்னெடுக்கலாம் அது மக்களின் ஆணைக்கு மாறானதாகும். 

சுமஷ்டிதான் இறுதி தீர்வு என அக்கட்சியினர் குறிப்பிட்டாலும் தற்போது தமிழ் பேசும் கட்சிகள் கையொப்பமிடுவதற்காக தயாரிக்கும் வரைவில் 13 ஐ அமுல்படுத்துதல் என்றே தலைப்பிடப்பட்டுள்ளது. நான் அந்த வரைபை பார்வையிட்டுள்ளேன். தமிழரசுக் கட்சி இந்த நிலைப்பாட்டுக்கு செல்ல முடியாது. ஆகவேரூபவ் எமது நிலைபாடு என்ன என்பதை 21 ஆம் திகதி வெளிப்படுத்துவோம். 1997 ஆம் ஆண்டு இராணி சட்டத்தரணி நவரட்ணராஜாவின் நிவைவுரையில் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் 13 ஆவது திருத்தச் சட்டம் அடிப்படையிலேயே பழுதுபட்டது. அதனை திருத்தமுடியாது என்று கூறிவிட்டார்.

அதே நேரம் தற்போது அட்சியிலுள்ள ராஜபக்ஷ தரப்பினர்தான் 13 ஆவது திருத்தச்சட்டத்தை அர்த்தமுள்ளதாக மாற்றி முழுமையாக அமுல்படுத்துவதோடு அதற்கு அப்பால் செல்வோம் என்று நான்கு தடவைகள் வாக்குறுதி அளித்துள்ளனர். நாங்கள் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையோ முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கையோ சந்திதத்த போது 13 ஐ வலியுறுத்தவில்லை. அப்படியிருக்கையில் வாக்குறுதியளித்த ராஜபக்ஷக்கள் வேண்டுமானால் 13 ஆம் திருத்தச்சட்டத்தை அர்த்தமுள்ளதாக மாற்றி அமுலாக்கட்டும். அது அவர்கள் சம்பந்தப்பட்ட விடயமாகும்.

நாங்கள் வலிந்துபோய் அடிப்படையில் பழுதான திருத்தமுடியாத 13 ஆவது சட்டத்தை அமுலாக்கவேண்டிய தேவை கிடையாது. பிறிதொரு நிகழ்ச்சி நிரலில் 13 ஐ அமுல்படுத்தும் சில தரப்புக்களின் செயற்பாட்டிற்கு ஆதரவினை வழங்க முடியாது. தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் உறுதியாக உள்ளது என்றார்.

 

https://www.virakesari.lk/article/119295

 

Link to comment
Share on other sites

அதற்காக உலக நாடுகளின் அழுத்தத்தாலோ அல்லது வேறு ஏதும. காரணத்தாலேயோ 13 வது திருத்தத்தை அரசாங்கம் முழுமையாக அமுல் படுத்த முன்வந்தால் முன்பு போல் அதை நிராகரித்து  சமஸ்டிக்காக காத்திருப்பது மடமை. கிடைப்பதை பெற்றுக்கொண்டு அடுத்த கட்டம் நோக்கி மெதுவாக வெனிலும் நகர்வதே புத்திசாலித்தனம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கிருபன் said:

நாங்கள் வலிந்துபோய் அடிப்படையில் பழுதான திருத்தமுடியாத 13 ஆவது சட்டத்தை அமுலாக்கவேண்டிய தேவை கிடையாது. பிறிதொரு நிகழ்ச்சி நிரலில் 13 ஐ அமுல்படுத்தும் சில தரப்புக்களின் செயற்பாட்டிற்கு ஆதரவினை வழங்க முடியாது. தமிழரசுக் கட்சி இந்த விடயத்தில் உறுதியாக உள்ளது என்றார்.

அதாவது ஐயா என்ன சொல்லவர்றார் என்றால் ...இந்திய தேய்வழக்கான 13 ஐ அமுல்படுத்துவோம் என்று சொல்லும்போது நாங்கள் வேண்டாமென்போம், திரும்ப எல்லாம் அடங்கியதும் 13 யாவது அமுல்படுத்து என்று இந்தியாவை நோண்டுவோம், இப்படியே ஈழத்தமிழர் அரசியல் தீர்வுவிடயத்தை கொதிநிலையில் வைத்திருந்து மக்களை மந்தைகளாக்கி இந்திய அரசியலை இலங்கையில்  செய்துகொண்டிருப்போம், அதாவது நீங்க இப்பிடிக்கா சுத்தினால் நாங்க அப்படிக்கா சுத்துவோம், நீங்க அப்பிடிக்கா சுத்தினால் நாங்க இப்பிடிக்கா சுத்துவோம் மொத்தத்தில் ஈயம் பூசுன மாதிரியும் இருக்க பூசாத மாதிரியும் இருக்க ஆகவேண்டியதை  Proxy தேசிக்காய்கள் நாங்கள் செய்துகொள்வோம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2021 at 21:25, tulpen said:

அதற்காக உலக நாடுகளின் அழுத்தத்தாலோ அல்லது வேறு ஏதும. காரணத்தாலேயோ 13 வது திருத்தத்தை அரசாங்கம் முழுமையாக அமுல் படுத்த முன்வந்தால் முன்பு போல் அதை நிராகரித்து  சமஸ்டிக்காக காத்திருப்பது மடமை. கிடைப்பதை பெற்றுக்கொண்டு அடுத்த கட்டம் நோக்கி மெதுவாக வெனிலும் நகர்வதே புத்திசாலித்தனம். 

13 ஆம் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை அப்படியே அமுல்ப்படுத்த வேண்டும்.

ஆனால், 1987 இற்குப் பின்னர் இன விகிதாசாரத்தை மிகவும் நேர்த்தியாக சிங்கள அரசுகள் வடக்குக் கிழக்கில் மாற்றிவிட்டனவே? அதுமட்டுமல்லாமல் 1987 இல் இருந்ததைக் காட்டிலும் மிகவும் அதிகளவான ராணூவ முகாம்களும், ராணுவத்தினரின் பிரசன்னமும் வடக்குக் கிழக்கில் இருக்கிறது. இவையும் அகற்றப்பட வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணத்தின் காணி மற்றும் பொலீஸ் அதிகாரம் தமிழரிடம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இன்று அடாத்தாக இந்த அதிகாரங்களை தன்னகத்தே வைத்துக்கொன்டுதான் நில ஆக்கிரமிப்பையும், பொலீஸ் அடக்குமுறையினையும் சிங்களம் செய்கிறது.

இவை எல்லாவற்றையும் இலகுவில் விட்டுக்கொடுக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரஞ்சித் said:

13 ஆம் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை அப்படியே அமுல்ப்படுத்த வேண்டும்.

ஆனால், 1987 இற்குப் பின்னர் இன விகிதாசாரத்தை மிகவும் நேர்த்தியாக சிங்கள அரசுகள் வடக்குக் கிழக்கில் மாற்றிவிட்டனவே? அதுமட்டுமல்லாமல் 1987 இல் இருந்ததைக் காட்டிலும் மிகவும் அதிகளவான ராணூவ முகாம்களும், ராணுவத்தினரின் பிரசன்னமும் வடக்குக் கிழக்கில் இருக்கிறது. இவையும் அகற்றப்பட வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணத்தின் காணி மற்றும் பொலீஸ் அதிகாரம் தமிழரிடம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இன்று அடாத்தாக இந்த அதிகாரங்களை தன்னகத்தே வைத்துக்கொன்டுதான் நில ஆக்கிரமிப்பையும், பொலீஸ் அடக்குமுறையினையும் சிங்களம் செய்கிறது.

இவை எல்லாவற்றையும் இலகுவில் விட்டுக்கொடுக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 

மிகவும் நியாயமான கேள்வி ரஞ்சித்.

நிச்சயம் இராணுவம் குறைந்தளவு 1987 இல் இருந்த அளவுக்குகாவது குறைக்கப்பட வேண்டும்.

குடியேற்றத்தை திருப்புவது கடினம். ஆனால் வடக்கு-கிழக்கை இணைத்தால் நாம் இன்றும் 60% க்கு மேல் என நினைக்கிறேன். ஒட்டு மொத்த இலங்கையில் சிங்களவர் 70% தானே? ஆகவே அதிகாரம் கையில் வந்தால் சிறுகச், சிறுக சாதிக்கலாம்.

காணி, பொலிஸ் அதிகாரங்கள் மிக முக்கியம்.

இதை விட இப்போதைக்கு நாம் மேலதிகமாக எதையும் கோரத்தேவையில்லை. 

ஏன் தெரியுமா?

இவை எதையும் சிங்களம் கொடாது.

அந்த நிலையில் மேற்கு+இந்தியாவுடன் அவர்களை கொழுவி விட்டு நாம் அலுவல் பார்க்க முடியும். அதன் பலனான 13 ஐ விட அதிகமாக கூட நமக்கு கிடைக்கலாம்.

இது என் எண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2021 at 04:49, கிருபன் said:

அடிப்படையில் பழுதுகள் நிறைந்த 13 ஐ தீர்வாக ஏற்றுக்கொள்ள முடியாது - தமிழரசுக் கட்சி மக்கள் ஆணையை மீறாது என்கிறார் - சுமந்திரன்

தமிழீழம் என்பதும் புலிகளால் வைக்கப்பட்ட கோரிக்கையல்ல.

77 இல் தமிழ் மக்களால் தந்த ஆணையே.

On 19/12/2021 at 05:25, tulpen said:

அதற்காக உலக நாடுகளின் அழுத்தத்தாலோ அல்லது வேறு ஏதும. காரணத்தாலேயோ 13 வது திருத்தத்தை அரசாங்கம் முழுமையாக அமுல் படுத்த முன்வந்தால் முன்பு போல் அதை நிராகரித்து  சமஸ்டிக்காக காத்திருப்பது மடமை. கிடைப்பதை பெற்றுக்கொண்டு அடுத்த கட்டம் நோக்கி மெதுவாக வெனிலும் நகர்வதே புத்திசாலித்தனம். 

எதை தீர்வாக பெறுகிறோமோ

அது தான் நிரந்தரம்.

1 hour ago, goshan_che said:

அந்த நிலையில் மேற்கு+இந்தியாவுடன் அவர்களை கொழுவி விட்டு நாம் அலுவல் பார்க்க முடியும். அதன் பலனான 13 ஐ விட அதிகமாக கூட நமக்கு கிடைக்கலாம்.

இலங்கையில் பிரச்சனை இல்லை என்றால் இந்தியாவும் மேற்கும் எப்படியாம் மூக்கை நுழைப்பது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

இலங்கையில் பிரச்சனை இல்லை என்றால் இந்தியாவும் மேற்கும் எப்படியாம் மூக்கை நுழைப்பது.

மிக சரியான கேள்வி அண்ணா. 

13 ஐ இலங்கை தராவிட்டால் - மேலே சொன்னது போல் வெட்டி ஆட வேண்டும்?

தந்துவிட்டால்?

இப்போ 13 ஆ? 13+ ஆ ஒன்றும் இல்லையா என்பதே கேள்வி.

13 ஐ முழுமையாக தந்து விட்டால், அதன் பின் இலங்கையை அவர்கள் மீள அடக்க வேண்டி வந்தால் அப்போ நாம் சமஸ்டி, confederation என ஏறலாம்.

Scotland ஐ பாருங்கள். 97 இல் devolution, பிறகு devo max, ஆனாலும் பிரிந்து போவோம் என்ற மிரட்டலும் உண்டு.

இனவாத இலங்கை அரசை பிரித்தானியாவுடன் ஒப்பிட முடியாது, ஆனால் அமெரிக்க படைகள் இலங்கையில் ஒரு தளம் அமைத்தால் - பிறகு இவர்களையும் பிக்குக்களையும், இந்தியாவையும் வெட்டி ஆடல் இலகு.

இது ஒன்றும் blue print அல்ல. என் எண்ணம் மட்டுமே.

ஆனால் நாம் காத்திருக்க முடியாது. இனப்பரம்பலை இன்னும் மோசமாக்கி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

மிக சரியான கேள்வி அண்ணா. 

13 ஐ இலங்கை தராவிட்டால் - மேலே சொன்னது போல் வெட்டி ஆட வேண்டும்?

தந்துவிட்டால்?

இப்போ 13 ஆ? 13+ ஆ ஒன்றும் இல்லையா என்பதே கேள்வி.

13 ஐ முழுமையாக தந்து விட்டால், அதன் பின் இலங்கையை அவர்கள் மீள அடக்க வேண்டி வந்தால் அப்போ நாம் சமஸ்டி, confederation என ஏறலாம்.

Scotland ஐ பாருங்கள். 97 இல் devolution, பிறகு devo max, ஆனாலும் பிரிந்து போவோம் என்ற மிரட்டலும் உண்டு.

இனவாத இலங்கை அரசை பிரித்தானியாவுடன் ஒப்பிட முடியாது, ஆனால் அமெரிக்க படைகள் இலங்கையில் ஒரு தளம் அமைத்தால் - பிறகு இவர்களையும் பிக்குக்களையும், இந்தியாவையும் வெட்டி ஆடல் இலகு.

இது ஒன்றும் blue print அல்ல. என் எண்ணம் மட்டுமே.

ஆனால் நாம் காத்திருக்க முடியாது. இனப்பரம்பலை இன்னும் மோசமாக்கி விடுவார்கள்.

ஏதாவது ஒரு தீர்வு வந்தா சந்தோசமே.

இலங்கையை ஒரு கொதிலையில் வைத்திருக்கவே வெளிநாடுகள் விரும்புகின்றன.

இல்லாவிட்டால் 2009 இன் பின் வெளிநாடுகளின் கையிலே பந்துகள் இருந்தும் எதுவுமே செய்யவில்லை.
இலங்கைக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.

இப்ப கூட சீனர்களின் முன்னேற்றத்தை எதிர் கொள்ள முடியாமையே தமிழர்களின் பிரச்சனையை கையிலெடுக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 19/12/2021 at 10:49, கிருபன் said:

தமிழரசுக் கட்சி மக்களிடத்தில் சமஷ்டி தீர்வுக்காக பெற்றுக் கொண்ட ஆணையை மீறிச் செயற்படாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அது மக்கள் ஆணையில்லை தமிழரசுக்கட்சியின...தமிழ்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் வாக்குறுதி  அதாவது வாக்குகள் அறுவடை செய்ய பயன்படுத்திய வாக்குறுதியாகும்  உங்களுக்கு நன்றாக தெரியும் பெற்றுக் கொள்ள முடியாது என்று  ஆனாலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகமாகக் பெற இதனைத் தவிர உங்களிடம் வேறு என்ன உண்டு.  ?...மக்கள் உங்களிடம் வந்து சமஷ்டியைப் பெற்று தா என்று கேட்டார்களா. ?இன்றைய நிலையில் உங்கள் போன்றோர் அரசியலை விட்டு விலகுவது தான் தமிழ் மக்களுக்கு சிறந்த தீர்வு ஆகும்

Link to comment
Share on other sites

10 hours ago, ரஞ்சித் said:

13 ஆம் திருத்தச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதை அப்படியே அமுல்ப்படுத்த வேண்டும்.

ஆனால், 1987 இற்குப் பின்னர் இன விகிதாசாரத்தை மிகவும் நேர்த்தியாக சிங்கள அரசுகள் வடக்குக் கிழக்கில் மாற்றிவிட்டனவே? அதுமட்டுமல்லாமல் 1987 இல் இருந்ததைக் காட்டிலும் மிகவும் அதிகளவான ராணூவ முகாம்களும், ராணுவத்தினரின் பிரசன்னமும் வடக்குக் கிழக்கில் இருக்கிறது. இவையும் அகற்றப்பட வேண்டும்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக வடக்குக் கிழக்கு இணைந்த மாகாணத்தின் காணி மற்றும் பொலீஸ் அதிகாரம் தமிழரிடம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால், இன்று அடாத்தாக இந்த அதிகாரங்களை தன்னகத்தே வைத்துக்கொன்டுதான் நில ஆக்கிரமிப்பையும், பொலீஸ் அடக்குமுறையினையும் சிங்களம் செய்கிறது.

இவை எல்லாவற்றையும் இலகுவில் விட்டுக்கொடுக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? 

எனது கருத்து, இப்படியே எல்லாவற்றையும் நிராகரித்து சென்றால் எமது மக்கள் மேலும் பலவீனமடைந்து அடுத்த தலைமுறை எதையுமே பெற்று கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். அதனால் தான் இயன்றளவு கிடைப்பதை பெற்று அதை பலப்படுத்தி செல்லும் தந்திரோபாயத்தை மேற்கொள்ள வேண்டும். 

தொடர்ந்து பலவீனமடையும் ஒரு மக்கள் கூட்டமாக தமிழர்கள்  சென்று கொண்டிருப்பதை தடுப்பதற்கு எமது தந்திரோபயாயங்களை மாற்ற வேண்டிய தேவை உண்டு. இல்லை என்றால் இப்படியே,  கிடைக்கும் கிடைக்கும் என்று வெட்டியாக அரசியல் ஆய்வுகளை மேற்கொண்டு பொழுது போக்கிவிட்டு அடுத்த தலைமுறையிடம் வெறுமையை கையளிக்க வேண்டி ஏற்படும்.  அதை தான் 1950 ம் ஆண்டுல் இருந்து தமிழர் தலைமையை அலங்கரித்த அனைத்து தலைமைகளும் செய்தனர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 ஐ மிஸ்டர் அமிர்தலிங்கமே நிராகரிச்சிட்டார். சமஸ்டியை செல்வா காலத்திலேயே சிங்களவன் நிராகரிச்சிட்டான். தமிழீழத்தை நீங்களா புலிகளைக் காட்டிக்கொடுத்து அதையும் இல்லாமல் ஆக்கிட்டீங்கள்.

இப்ப.. அப்ப என்ன தான் உங்கட யோசனை. அதைச் சொல்லுங்களேப்பா..???!

ஒத்தராச்சியத்துக்குள் சிங்களவரோடு வாழ்வது பாக்கியம்.. இது தானே.

இதை கோத்தா வாயாலேயே சொல்ல வைச்சிடலாமே. இதில இவர் எதுக்கு தனிய கிடந்து முக்கணும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, tulpen said:

எனது கருத்து, இப்படியே எல்லாவற்றையும் நிராகரித்து சென்றால் எமது மக்கள் மேலும் பலவீனமடைந்து அடுத்த தலைமுறை எதையுமே பெற்று கொள்ள முடியாத நிலை ஏற்படலாம். அதனால் தான் இயன்றளவு கிடைப்பதை பெற்று அதை பலப்படுத்தி செல்லும் தந்திரோபாயத்தை மேற்கொள்ள வேண்டும். 

தொடர்ந்து பலவீனமடையும் ஒரு மக்கள் கூட்டமாக தமிழர்கள்  சென்று கொண்டிருப்பதை தடுப்பதற்கு எமது தந்திரோபயாயங்களை மாற்ற வேண்டிய தேவை உண்டு. இல்லை என்றால் இப்படியே,  கிடைக்கும் கிடைக்கும் என்று வெட்டியாக அரசியல் ஆய்வுகளை மேற்கொண்டு பொழுது போக்கிவிட்டு அடுத்த தலைமுறையிடம் வெறுமையை கையளிக்க வேண்டி ஏற்படும்.  அதை தான் 1950 ம் ஆண்டுல் இருந்து தமிழர் தலைமையை அலங்கரித்த அனைத்து தலைமைகளும் செய்தனர். 

அண்ணை,

இப்ப இருக்கிற மாகாணசபையால ஒரு பிரியோசனமும் இல்லையெண்டு உங்களுக்குத் தெரியும். அதை இப்ப இருக்கிற மாதிரியே ஏற்றுக்கொண்டால் என்ன பிரியோசனம்?

அதனாலதான் 13 ஆவது திருத்தச் சட்டத்தில தாங்கள் செய்யிறதாய் சிங்களவர்கள் ஒப்புக்கொண்ட விடயங்களைச் செய்யச் சொல்லிக் கேட்கலாம். அதைக் கேட்க எங்களிடம் பலம் இல்லை. ஆரோ ஒரு வெளித்தரப்புத்தான் இதைச் செய்ய வேணும்.

போதாக்குறைக்கு வடக்கும் கிழக்கும் பிரிக்கப்படவேணும் எண்டு நீதிமன்றத்தாலும் சட்டம் இயற்றியிருக்கிறாங்கள். 

அதனாலதான், ஒரிஜினல் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்தவேண்டும் எண்டு கேட்கிறன். அது ஒண்டும் பிழையில்லையே? 

இப்பவிருக்கிற ஒண்டுமேயில்லாத மாகாணசபையை ஏற்றுக்கொண்டால், பிறகு எதையுமே மேலதிகமாகக் கேட்க இயலாது. 

இது என்னுடைய அபிப்பிராயம். 

Link to comment
Share on other sites

10 minutes ago, ரஞ்சித் said:

அண்ணை,

இப்ப இருக்கிற மாகாணசபையால ஒரு பிரியோசனமும் இல்லையெண்டு உங்களுக்குத் தெரியும். அதை இப்ப இருக்கிற மாதிரியே ஏற்றுக்கொண்டால் என்ன பிரியோசனம்?

அதனாலதான் 13 ஆவது திருத்தச் சட்டத்தில தாங்கள் செய்யிறதாய் சிங்களவர்கள் ஒப்புக்கொண்ட விடயங்களைச் செய்யச் சொல்லிக் கேட்கலாம். அதைக் கேட்க எங்களிடம் பலம் இல்லை. ஆரோ ஒரு வெளித்தரப்புத்தான் இதைச் செய்ய வேணும்.

போதாக்குறைக்கு வடக்கும் கிழக்கும் பிரிக்கப்படவேணும் எண்டு நீதிமன்றத்தாலும் சட்டம் இயற்றியிருக்கிறாங்கள். 

அதனாலதான், ஒரிஜினல் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்ப்படுத்தவேண்டும் எண்டு கேட்கிறன். அது ஒண்டும் பிழையில்லையே? 

இப்பவிருக்கிற ஒண்டுமேயில்லாத மாகாணசபையை ஏற்றுக்கொண்டால், பிறகு எதையுமே மேலதிகமாகக் கேட்க இயலாது. 

இது என்னுடைய அபிப்பிராயம். 

நிச்சயமாக பிழை இல்லை ரஞ்சித்.  அதுவே எனது எண்ணமும். இதை அடைய எப்படியான தந்திரோபாயங்களை பிரயோகிக்க வேண்டும் என்பது அங்குள்ள அனைத்து கட்சிகளும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற புரிந்துணர்வுடன் பேற்கொள்ளப்பட வேண்டிய விடயம். ஒருவரை ஒருவர் துரோகியாக குற்றம் சாட்டும் நிலை வேலைக்காகாது. 

உதாரணமாக 13 ம் திருத்தத்தை தீர்வாக ஏற்றுகொள்ள முடியாது எனினும் அதை வெளிப்படையாக சுமந்திரன் சொல்வது தீர்வை நோக்கிய நகர்வை கெடுக்கும் என்றே நினைக்கிறேன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.