Jump to content

ஊடகவியலாளர்களை விமர்சித்த சுமந்திரனுக்கு செருப்படி கொடுத்தார் ஆய்வாளர் நிலாந்தன்


Recommended Posts

 

ஊடகவியலாளர்களை விமர்சித்த சுமந்திரனுக்கு செருப்படி கொடுத்தார் ஆய்வாளர் நிலாந்தன்

 

அரசியல்வாதிக்கு பக்குவம் வேண்டும்! அவையடக்கத்துடன் நடக்க வேண்டும்!
சண்டைக்கோழிபோல ஒரு வெள்ளரியன் சேவல்போல இருக்கக்கூடாது எனவும் அறிவுரை

 

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலாந்தன் ஊரிலா வெளியிலா ஊரில் என்றால் கவனமாக இருக்க சொல்லுங்க பீற்றர் இளம் செழியனுக்கு தாடை பெயர்ந்தவர்கள் நிலாந்தனை சிலுவையில் தூக்கி அறைந்து  விடுவினம் என்று .🤣

Link to comment
Share on other sites

16 minutes ago, பெருமாள் said:

இந்த நிலாந்தன் ஊரிலா வெளியிலா ஊரில் என்றால் கவனமாக இருக்க சொல்லுங்க பீற்றர் இளம் செழியனுக்கு தாடை பெயர்ந்தவர்கள் நிலாந்தனை சிலுவையில் தூக்கி அறைந்து  விடுவினம் என்று .🤣

நீங்க சொல்வது சரி தான். ஆனால் இதே நிலாந்தன் புலிகளை விமர்சித்திருந்தால் நினைவு தினம் கூட கொண்டாட முடியாமல் துரோகி முத்திரையுடன் போய் சேர்ந்திருப்பார் என்பது ஈழத்து அரசியலை அறிந்த கற்று குட்டிக்கு கூட தெரிந்த உண்மை. 

புலிகளை மட்டுமல்ல ஆயுத போராட்டத்தை நடத்திய எந்த இயக்கத்தை விமர்சித்திருந்தாலும் அது தான் நடந்திருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, tulpen said:

நீங்க சொல்வது சரி தான். ஆனால் இதே நிலாந்தன் புலிகளை விமர்சித்திருந்தால் நினைவு தினம் கூட கொண்டாட முடியாமல் துரோகி முத்திரையுடன் போய் சேர்ந்திருப்பார் என்பது ஈழத்து அரசியலை அறிந்த கற்று குட்டிக்கு கூட தெரிந்த உண்மை. 

புலிகளை மட்டுமல்ல ஆயுத போராட்டத்தை நடத்திய எந்த இயக்கத்தை விமர்சித்திருந்தாலும் அது தான் நடந்திருக்கும். 

ஆயுத இயக்கங்களும் சுமத்திரன்  குழுவும் ஒன்று என்கிறீர்கள் நல்லதொரு திருப்பம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. மக்களை திரட்டும் ஆற்றலோ பக்குவமோ சுமந்திரனுக்கு இல்லை. அதை வளர்க அவர் முயல்வதாயும் தெரியவில்லை. அது தேவையில்லை. எனக்கு எல்லாம் தெரியும் எண்ட அதிமேதாவித்தனமே அவரிடம் தெரிகிறது.

2. ஆனால் நிலாந்தன் சொல்வது போல் வெளியுறவு கொள்கையின் எல்லா அம்சமும் மேடையில் சொல்ல கூடியது அல்ல. இதை முன்னர் ஒரு தரம் பாலா அண்ணையும் சொல்லி இருந்தார்.

3. பத்தி எழுத்தாளர் பற்றி சுமந்திரன் பார்வை சரியானதே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊடகவியலாளர்கள் என்றால் யார்? சுமந்திரனை குறிவைத்து எழுதும் தமிழ்வின் நிருபர்களும் அவர்கள் பதிவுகளை பின்தொடர்ந்து பகிரும் யாழ் இணையம் தொடுப்பு புயல் @பெருமாள் அவர்களும் தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

ஊடகவியலாளர்கள் என்றால் யார்? சுமந்திரனை குறிவைத்து எழுதும் தமிழ்வின் நிருபர்களும் அவர்கள் பதிவுகளை பின்தொடர்ந்து பகிரும் யாழ் இணையம் தொடுப்பு புயல் @பெருமாள் அவர்களும் தானே?

அவர் நல்லது தமிழ் மக்களுக்கு செய்யணும் என்றுதான் நீங்க குறிப்பிடுபவர்களுக்கு விருப்பம் ஆனால் நடப்பது என்ன ?

இதே சுமத்திரன் பின்கதவால் உள்ளே வரும்போது தைரியமான ஆளுமையுள்ள அரசியலில் அவர் இவர் என்றெல்லாம் புகழ்ந்து தானே உள்ளெ கொண்டுவந்திங்க ஆனால் அவர் செய்வது இந்த 12 வருடத்தில் நேரே பார்த்து அறிந்தும் விளங்கவில்லையா உங்களுக்கு அவர் யார் என?

அல்லது இனியும் அவர் நல்லது செய்வார் என்று நம்புகிறீர்களா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கம் அருமை..

🤮

எமது மக்கள் சிந்திய இரத்தத்தில் இந்த so called  ஆய்வாளர்களுக்கு மிகப் பெரிய பங்கிருப்பதை மனதில் இருத்துதல் நன்று. 

Link to comment
Share on other sites

நிலாந்தன் அவர்கள் இயக்கத்துடன் இருக்கும் போது  அவருடைய 3Js (Japanese, Jews, and Jaffnaites) கோட்ப்பாடு பிரபலியமானது. தற்போது ஆய்வாளர்கள் என தம்பட்டம் அடிப்பவர்களின்,  2009 முன்னைய  ஆய்வுகளை படித்தால் தெரியும், இவர்களுடைய ஆய்வுகள்  எப்படி அபத்தமானதும் என்பது.

Link to comment
Share on other sites

10 hours ago, nunavilan said:

 

ஊடகவியலாளர்களை விமர்சித்த சுமந்திரனுக்கு செருப்படி கொடுத்தார் ஆய்வாளர் நிலாந்தன்

 

அரசியல்வாதிக்கு பக்குவம் வேண்டும்! அவையடக்கத்துடன் நடக்க வேண்டும்!
சண்டைக்கோழிபோல ஒரு வெள்ளரியன் சேவல்போல இருக்கக்கூடாது எனவும் அறிவுரை

 

சுமந்திரன் தான் ஆய்வாளர் நிலாந்தனுக்கு  செருப்படி கொடுத்திருக்கின்றார் போல் தெரிகின்றது.

நிலாந்தனின் உரை 

 

Link to comment
Share on other sites

10 hours ago, goshan_che said:

மக்களை திரட்டும் ஆற்றலோ பக்குவமோ சுமந்திரனுக்கு இல்லை. அதை வளர்க அவர் முயல்வதாயும் தெரியவில்லை. அது தேவையில்லை. எனக்கு எல்லாம் தெரியும் எண்ட அதிமேதாவித்தனமே அவரிடம் தெரிகிறது.

கோஷான், சுமந்திரன் அரசியலுக்கு வரும் போது தைரியமான ஆளுமையாக தான் இருந்தார்.  ஐந்து தசாப்தமாக இருந்த தமிழ் அரசியல்வாதிகளை போல் உசுப்பேற்றும் அரசியலை செய்யாமல்,   நடைமுறைச் சாத்தியமான வெளிப்படையான, தந்திரோபாயமான அரசியல் செய்யும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.  அதுவே இத்துபோன பழைய தமிழ் தேசிய அரசியலில்  பல தசாப்தங்களாகத் ஊறித்திளைத்தவர்களுக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்கியது.  

ஆனால்,  காலப்போக்கில் வழமையான தமிழர் தேசியத்தை பேசும் மனநோய் அரசியல் அவரையும் பலமாக தொற்றிக்கொள்ளத் தொடங்கியது.  அசல் பழமை பேண் தமிழ் தேசியவாதியாக சுமந்திரன் மாறிவருவதை அவரது அண்மைய சில செயற்பாடுகள் உணர்ததி வருகிறது. தமிழரிடையே ஒரு அரசியல்வாதியாக நிலைத்திருக்க இப்படியான அரசியல்தான் சரியானது என்று தனிப்பட்ட ரீதியில் கருதுகிறாரோ தெரியவில்லை. 

இப்போதைய நிலையில் சுமந்திரனை எதிப்பவர்களுக்கும் சுமந்திரனுக்கும் உள்ள முரண்பாடு தனிப்பட்ட வன்மம் மட்டுமே.  மற்றபடி சுமந்திரனை வன்மத்தைடன் எதிர்ககும் பெருமாள் போன்றவர்களுக்கும் சுமந்திரனுக்கும் கருத்தியல் ரீதியில் பெரிய வேறுபாடு இல்லை. அல்லது அந்த வேறுபாடு day by day குறைந்து வருகிறது என்றே நான் உணர்கிறேன். 13 வது திருத்தத்தை நிராகரிக்க வேண்டும் என்பது போன்ற சுமந்திரனின் கருத்து அதையே உணர்த்துகிறது என்பது எனது எண்ணம்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, tulpen said:

கோஷான், சுமந்திரன் அரசியலுக்கு வரும் போது தைரியமான ஆளுமையாக தான் இருந்தார்.  ஐந்து தசாப்தமாக இருந்த தமிழ் அரசியல்வாதிகளை போல் உசுப்பேற்றும் அரசியலை செய்யாமல்,   நடைமுறைச் சாத்தியமான வெளிப்படையான, தந்திரோபாயமான அரசியல் செய்யும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.  அதுவே இத்துபோன பழைய தமிழ் தேசிய அரசியலில்  பல தசாப்தங்களாகத் ஊறித்திளைத்தவர்களுக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்கியது.  

தமிழர்களுக்கு எவ்வகையான அரசியல் இன்று தேவைப்படுகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சிங்கள அரசியல்வாதிகளோ அல்லது தமிழக அரசியல்வாதிகளோ செய்யும் அரசியல் போன்றதொரு அரசியல் போதுமானதென்று நீங்கள் கருதுகிறீர்களா? அதாவது, மக்கள் சுதந்திரமாக, பிற அழுத்தங்களின்றி, தமது பிரதேசத்தில் தமது உரிமைகளை தங்கு தடையின்றி பாவிக்கக் கூடிய சூழ்நிலையின் அடிப்படையில் அமைந்த வாழ்வின் அன்றாட பிரச்சினைகளுக்கான தீர்வுகளைத் தமக்குத் தரும் சாதாரண அரசியல்வாதிகள் தமிழர்களுக்குப் போதுமானவர்கள் என்று நினைக்கிறீர்களா? 

நீங்கள் கூறும் சுமந்திரனின் ஆரம்பகால யதார்த்தமான, தந்திரோபாயமான அரசியல் என்பது இன்று சிங்களவர்களாலும், தமிழகத்தவர்களாலும் நடத்தப்படும் அன்றாட சிக்கல்களுக்கான அரசியல்தான் என்பது எனது எண்ணம்.

ஆனால், தமிழர்கள் தேடும் அரசியல் என்பது, சுமந்திரனாலும் (உங்களின் பார்வையில் போலியான தேசியவாதமற்ற), சிங்களவர்களாலும் தமிழகத்தார்களாலும் செய்யப்படும் அரசியலிலிருந்து வேறுபட்டது. ஒரு மிகவும் திட்டமிட்ட, அரசியல் மயப்படுத்தப்பட்ட இனவழிப்பிற்கு முகம்கொடுத்துக்கொண்டு, தமது அன்றாட வாழ்வை தொடர்ச்சியான ராணுவ ஆக்கிரமிப்பிற்குள் நடத்திவரும் இவர்கள் எதிர்பார்ப்பது சுமந்திரன் கொடுக்கும் அரசியலினை அல்ல. 

எம்மக்களுக்கு தம்மீது இன்று பலவந்தமாக திணிக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்டு, தமது வாழ்வினை உலகின் ஏனைய சுதந்திர மக்கள் கூட்டங்கள் போன்று அனுபவிப்பதற்கான அவசியம் இருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ளாமல், சமரசம் என்றும், சாணக்கியம் என்று பேசும் அரசியல் அம்மக்களுக்கு எதனையும் பெற்றுக்கொடுக்காது. 

ஆகவேதான், நீங்கள் தேசிய அரசியலைக் கீழ்த்தரமாகச் சித்தரித்தாலும் கூட, மக்களுக்கு அந்த அரசியல் தேவைப்படுகிறது. தம்மை ஒருங்கிணைத்து, ஒரு அணியாகத் திரளச் செய்ய தமிழ்த் தேசியம் உதவும் என்று கருதுகிறார்கள். 

உங்களின் கூற்றுப்படி செல்வாவோ, அமீரோ, சிவசிதம்பரமோ தமது அரசியல் நலனுக்காகவே தமிழ்த் தேசியம் பேசினார்கள் என்று வைத்துக்கொண்டாலும்கூட மக்களுக்கு அதுவே தேவையாகவிருந்தது. தமது இனத்திற்காகவும், மொழிக்காகவும் தாம் இரண்டாம் பிரஜைகளாக நடத்தப்படுகிறோம் என்கிற ஆத்திரமே அவர்களை தேசிய அரசியலின்பால் ஈர்த்துவைத்திருக்கிறது. இதனை, சுமந்திரன் புரிந்துகொள்வது அவசியம்.

50 minutes ago, tulpen said:

ஆனால்,  காலப்போக்கில் வழமையான தமிழர் தேசியத்தை பேசும் மனநோய் அரசியல் அவரையும் பலமாக தொற்றிக்கொள்ளத் தொடங்கியது.  அசல் பழமை பேண் தமிழ் தேசியவாதியாக சுமந்திரன் மாறிவருவதை அவரது அண்மைய சில செயற்பாடுகள் உணர்ததி வருகிறது. தமிழரிடையே ஒரு அரசியல்வாதியாக நிலைத்திருக்க இப்படியான அரசியல்தான் சரியானது என்று தனிப்பட்ட ரீதியில் கருதுகிறாரோ தெரியவில்லை. 

சுமந்திரன் தன்னையொரு தமிழ்த் தேசியவாத அரசியல்வாதியாக மாற்றிவருகிறார் என்றால், அது வரவேற்கப்படவேண்டியதே. அதை ஏன் பிழை என்கிறீர்கள்? ஆனால், பிரச்சினை என்னவென்றால், அவர் அவ்வாறு மாறிவருவது தனது அரசியல் ஆதாயத்துக்காகத்தானேயன்றி, மக்களின் உண்மையான விடிவிற்காக அல்ல என்பது.

அமீரோ, சம்பந்தனோ செய்தவை தேசிய அரசியல் எனும் போர்வையில் தமது இருப்பிற்கான அரசியல்தான். அதைத்தான் சுமந்திரனும் செய்கிறார் என்று நினைக்கிறேன். 

ஆனால், தமிழரிடையே ஒரு அரசியல்வாதியாக நிலைத்து நிற்கத்தான் அவர் இதனைச் செய்கிறார் என்றால், விரைவில் மக்கள் அவரையும் நிராகரித்துவிடுவார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, tulpen said:

இப்போதைய நிலையில் சுமந்திரனை எதிப்பவர்களுக்கும் சுமந்திரனுக்கும் உள்ள முரண்பாடு தனிப்பட்ட வன்மம் மட்டுமே.  மற்றபடி சுமந்திரனை வன்மத்தைடன் எதிர்ககும் பெருமாள் போன்றவர்களுக்கும் சுமந்திரனுக்கும் கருத்தியல் ரீதியில் பெரிய வேறுபாடு இல்லை. அல்லது அந்த வேறுபாடு day by day குறைந்து வருகிறது என்றே நான் உணர்கிறேன். 13 வது திருத்தத்தை நிராகரிக்க வேண்டும் என்பது போன்ற சுமந்திரனின் கருத்து அதையே உணர்த்துகிறது என்பது எனது எண்ணம்.  

சுமந்திரனை எதிர்ப்பவர்களுக்கும், அவருக்கும் இடையிலிருப்பது தனிப்பட்ட வன்மமாக இருக்கலாம். ஆனால், சுமந்திரன் மீது முன்வைக்கப்படும் பல உண்மையான விமர்சனங்களை வெறுமனே தனிப்பட்ட வன்மம் என்று கூறிவிட்டு கடந்துசெல்வதும் ஆபத்தானது.

சுமந்திரன் இன்று விரும்பியோ விரும்பாமலோ தமிழ் மக்கள் சார்பாகப் பேசும் ஒரு நிலையில், குறைந்தது சர்வதேச அதிகாரிகள் அவரை அவ்வாறு ஏற்றுக்கொண்டு பேசும் நிலையில் இருக்கிறார். ஆகவே அவர் பேசுவதும், செய்வதும் தமிழர் நலன் சார்ந்து அமையவேண்டும் என்பது அவசியம். அவ்வாறு அமையாதவிடத்து அதுபற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதும் அவசியம்.

13 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பான சுமந்திரனின் கருத்து இருவகையில் பார்க்கபடல் வேண்டும். முதலாவது , அச்சட்டமூலம் தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யப்போவதில்லையென்கிற உண்மையான முடிவிற்கு அவர் வந்திருந்தால், அது நல்ல விடயமே. ஏனென்றால், பிற சக்திகளின் அழுத்தங்களூடாக அதனை நாம் மெருகூட்டலாம்.

ஆனால், யதார்த்தத்தின்படி, இன்று 13 ஆம் திருத்தச் சட்டம் இன்று செல்லுபடியாகாது. அது சிங்களவரைக் கோபப்படுத்திவிடும், ஆகவே அவர்கள் விரும்பும் தீர்வைத் தரட்டும், இது வேண்டாம் என்று அவர் நினைத்தால் அது ஆபத்தானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, tulpen said:

இப்போதைய நிலையில் சுமந்திரனை எதிப்பவர்களுக்கும் சுமந்திரனுக்கும் உள்ள முரண்பாடு தனிப்பட்ட வன்மம் மட்டுமே.  மற்றபடி சுமந்திரனை வன்மத்தைடன் எதிர்ககும் பெருமாள் போன்றவர்களுக்கும் சுமந்திரனுக்கும் கருத்தியல் ரீதியில் பெரிய வேறுபாடு இல்லை. அல்லது அந்த வேறுபாடு day by day குறைந்து வருகிறது என்றே நான் உணர்கிறேன். 13 வது திருத்தத்தை நிராகரிக்க வேண்டும் என்பது போன்ற சுமந்திரனின் கருத்து அதையே உணர்த்துகிறது என்பது எனது எண்ணம்.  

விட்டால் யாழில் நான்மட்டுமேதான் சுமத்திறனை எதிர்க்கிறேன் என்பீர்கள் போல் உங்கள் கதை பலதடவை எழுதியது மறுபடியும் காரணம் பெருமாள் எனும் விம்பத்தை மட்டுமே பார்க்கிறீர்கள் கருத்துக்களை புரிந்துகொள்வதில்லை அல்லது புரியாதது போல் நடிக்கிறீர்களோ தெரியவில்லை.

சுமத்திரனை பின்கதவால் கொண்டுவரும்போது ஆளுமையான அரசியலில் உங்கள் பெரியவர் போல் என்றுதான் கொண்டுவந்தார்கள் அப்போது யாழில் அரசியல் எழுதுவதில்லை அரசியல் பற்றி கருத்தாடுவதும் இல்லை டேவிட் கமரூன் வியத்தின் போதுதான் உண்மையான சுமத்திரனின்  சுயரூபம்  தெரியவர அதன்பின்பே இங்கு அரசியல் எழுத வெளிக்கிட்டது அதை வன்மம் என்று சொல்வது தவறு ஆனால் இவ்வளவு 12 வருடகாலப்பகுதிக்கு பிறகும் சுமத்திரன் தீர்வு கொண்டுவருவார் என்று நம்பும் முட்டாள்  இல்லை என்பதில் பெருமையே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13ஆம் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று அரசாங்கம் சொன்னால் அதனை செய்து காட்ட வேண்டும் – எம் .ஏ. சுமந்திரன்

அடிப்படையிலேயே பழுதுப்பட்டது 13ம் திருத்தச் சட்டம்

நேரத்துக்கு ஒன்றை சொல்லி தமிழ்மக்களை முட்டாள் ஆக்குபவர் என்ற உண்மையை மக்களுக்கு சொல்வதுக்கு  பெயர் வன்மம் என்றால் அதை தொடர்ந்து செய்யலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் சுமந்திரன் பொது மேடையில் சொல்ல வேண்டுமென்று எதிர்பார்க்கும் நிலாந்தன் இறுதிப் போர்க்காலத்தில் வன்னியில் நடந்த சம்பவங்களைப் பற்றிப் பேசுவதேயில்லையாம். ஏன் என்று கேட்டால் "நான் உண்மைகளை அடைகாக்கிறேன்" என்பாராம்!

இதனாலேயே எழுத்தாளர் கற்சுறா நிலாந்தனை ஒரு "அடை காக்கும் கோழி" என்று அழைத்தார் ஓரிடத்தில்! 😎

12 hours ago, பெருமாள் said:

அவர் நல்லது தமிழ் மக்களுக்கு செய்யணும் என்றுதான் நீங்க குறிப்பிடுபவர்களுக்கு விருப்பம் ஆனால் நடப்பது என்ன ?

இதே சுமத்திரன் பின்கதவால் உள்ளே வரும்போது தைரியமான ஆளுமையுள்ள அரசியலில் அவர் இவர் என்றெல்லாம் புகழ்ந்து தானே உள்ளெ கொண்டுவந்திங்க ஆனால் அவர் செய்வது இந்த 12 வருடத்தில் நேரே பார்த்து அறிந்தும் விளங்கவில்லையா உங்களுக்கு அவர் யார் என?

அல்லது இனியும் அவர் நல்லது செய்வார் என்று நம்புகிறீர்களா ?

நீங்க "பின் கதவால்" எனும் போது மாமனிதர் பட்டம் பெற்ற அமரர் யோசப் ஐயாவையும், தற்போது "பின் கதவால்" வந்திருக்கும் கஜேந்திரனையும் சேர்த்தே திட்டுகிறீர்கள் என்று புரிவதில்லைப் போல?😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Justin said:

நீங்க "பின் கதவால்" எனும் போது மாமனிதர் பட்டம் பெற்ற அமரர் யோசப் ஐயாவையும், தற்போது "பின் கதவால்" வந்திருக்கும் கஜேந்திரனையும் சேர்த்தே திட்டுகிறீர்கள் என்று புரிவதில்லைப் போல?😂

இங்கு உங்களை போல ஆட்களிடம் கேள்வி கேட்டால் பதில் தரப்பட்டுள்ளது என்கிறீர்கள் நானும் மண்டையை உடைத்து எங்கடா பதில் தரப்பட்டுள்ளது என்று தேட வேண்டி கடைசியில் பார்த்தால் உங்களுடன் ஒத்த கருத்துள்ள உறவொன்று பதிலையே பதில் பதில் என்று தூக்கி பிடிதீர்கள் .அதன் பெயர் என்ன தெரியுமா பச்சையாய் சொன்னால் குழு மோதல் என்பது அது யாழில் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டிக்கொண்டு உங்கள் கருத்துக்கு வருவம் .

அவர்களும் வந்தார்கள் வந்ததுக்கு யோசப் ஐயா வை அய்யா என்று மரியாதையாக நடந்து கொண்டார் தமிழர்களிடம். கஜேந்திரனை பற்றி முன்பே சொல்லியாயிற்று துல்பனிடம் கேட்டு தெரிந்து கொள்க . தெரிந்துகொண்டு சுமத்திரனை கோசத்தில் இருந்து மடை மாற்றல் வேண்டாமே இங்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

இங்கு உங்களை போல ஆட்களிடம் கேள்வி கேட்டால் பதில் தரப்பட்டுள்ளது என்கிறீர்கள் நானும் மண்டையை உடைத்து எங்கடா பதில் தரப்பட்டுள்ளது என்று தேட வேண்டி கடைசியில் பார்த்தால் உங்களுடன் ஒத்த கருத்துள்ள உறவொன்று பதிலையே பதில் பதில் என்று தூக்கி பிடிதீர்கள் .அதன் பெயர் என்ன தெரியுமா பச்சையாய் சொன்னால் குழு மோதல் என்பது அது யாழில் முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டிக்கொண்டு உங்கள் கருத்துக்கு வருவம் .

அவர்களும் வந்தார்கள் வந்ததுக்கு யோசப் ஐயா வை அய்யா என்று மரியாதையாக நடந்து கொண்டார் தமிழர்களிடம். கஜேந்திரனை பற்றி முன்பே சொல்லியாயிற்று துல்பனிடம் கேட்டு தெரிந்து கொள்க . தெரிந்துகொண்டு சுமத்திரனை கோசத்தில் இருந்து மடை மாற்றல் வேண்டாமே இங்கு .

பெருமாள்: உலகம் என்ன ஷேப்? 

ருல்பென்: கோளம், மேலே கீழே கொஞ்சம் தட்டை!

ஜஸ்ரின்: ருல்பென் சொன்னது தான் என் பதிலும்!

பெருமாள்: ஆ..அது செல்லாது , இன்னொருவர் பதிலை ஏற்றுக் கொள்வது குழுவாதம்- உது விதி மீறல்!

ஜஸ்ரின்: 🤦‍♂️

விடுங்க, பெருமாள் மீண்டும் மீண்டும் பொல்லோடு வராமல்!😂

மடை மாற்றல் இல்லை: யோசப் ஐயா, கஜேந்திரன் வேறு வழி. சுமந்திரன் வேறு வழி. அச்சில் வார்த்தது போல எல்லாரும் இருந்தால் நின்ற இடத்திலேயே நிற்க வேண்டியது தான்!

தெரிவு செய்த மக்கள் பிடிக்கா விட்டால் அகற்றுவர். இது தான் ஜனநாயகம்! உங்களுக்கு கொஞ்சம் புதிசு தான், புரிகிறது!😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்தி எழுத்தாளர் அரசியல் ஆய்வாளர் எண்டது நிலாந்தனுக்கும் சுட்டுப்போட்டுது போல…😂 இந்த அரசியல் ஆய்வாளர்களை எனக்கும் கண்ணிலையும் காட்டகூடாது.. இவனுங்கதான தேளவடிவ வட்டவடிவ சதுரவடிவ தாக்குதல் எண்டு பீலா விடுரவனுங்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

பெருமாள்: உலகம் என்ன ஷேப்? 

ருல்பென்: கோளம், மேலே கீழே கொஞ்சம் தட்டை!

ஜஸ்ரின்: ருல்பென் சொன்னது தான் என் பதிலும்!

பெருமாள்: ஆ..அது செல்லாது , இன்னொருவர் பதிலை ஏற்றுக் கொள்வது குழுவாதம்- உது விதி மீறல்!

ஜஸ்ரின்: 🤦‍♂️

 

ருள்பென் சொன்னதுதான் உங்கள் பதில் என்று இங்குதான் கூறுகிறீர்கள்  நல்லது உலகம் உருண்டை தானே .......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

தெரிவு செய்த மக்கள் பிடிக்கா விட்டால் அகற்றுவர். இது தான் ஜனநாயகம்! உங்களுக்கு கொஞ்சம் புதிசு தான், புரிகிறது!

அகற்றினாலும் மற்றவரின் ஓட்டை சுத்து மாத்து  பண்ணி உள்ளே வரும் வித்தை தெரிந்தவர் .ஜனநாயகம் எங்களுக்கு புதிதில்லை இங்கிலாந்து சர்வாதிகார ஆட்சியிலா இருக்கிறது ?

ஆனால் ஜனநாயக நாடுகளுக்கு  விளக்கம் தருகிறோம் என்று ஓடிவரும் சுமத்திரனின் கும்பல் தான் பீற்றர் இளம் செழியனின் தாடை உடைத்தது பற்றி ஒரு திரியில் சொல்ல இன்னும் மோசமாக தாக்கி இருக்கனும் என்று நக்கல் அடித்தது நீங்கள் தான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளாது, அக்கருத்துக்களை இடுவோரை எள்ளிநகையாடி தனிமனித தாக்குதலாக மாற்றுவது நடக்கிறது. இதைத் தவிர்க்கலாமே? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

கோஷான், சுமந்திரன் அரசியலுக்கு வரும் போது தைரியமான ஆளுமையாக தான் இருந்தார்.  ஐந்து தசாப்தமாக இருந்த தமிழ் அரசியல்வாதிகளை போல் உசுப்பேற்றும் அரசியலை செய்யாமல்,   நடைமுறைச் சாத்தியமான வெளிப்படையான, தந்திரோபாயமான அரசியல் செய்யும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.  அதுவே இத்துபோன பழைய தமிழ் தேசிய அரசியலில்  பல தசாப்தங்களாகத் ஊறித்திளைத்தவர்களுக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்கியது.  

ஆனால்,  காலப்போக்கில் வழமையான தமிழர் தேசியத்தை பேசும் மனநோய் அரசியல் அவரையும் பலமாக தொற்றிக்கொள்ளத் தொடங்கியது.  அசல் பழமை பேண் தமிழ் தேசியவாதியாக சுமந்திரன் மாறிவருவதை அவரது அண்மைய சில செயற்பாடுகள் உணர்ததி வருகிறது. தமிழரிடையே ஒரு அரசியல்வாதியாக நிலைத்திருக்க இப்படியான அரசியல்தான் சரியானது என்று தனிப்பட்ட ரீதியில் கருதுகிறாரோ தெரியவில்லை. 

இப்போதைய நிலையில் சுமந்திரனை எதிப்பவர்களுக்கும் சுமந்திரனுக்கும் உள்ள முரண்பாடு தனிப்பட்ட வன்மம் மட்டுமே.  மற்றபடி சுமந்திரனை வன்மத்தைடன் எதிர்ககும் பெருமாள் போன்றவர்களுக்கும் சுமந்திரனுக்கும் கருத்தியல் ரீதியில் பெரிய வேறுபாடு இல்லை. அல்லது அந்த வேறுபாடு day by day குறைந்து வருகிறது என்றே நான் உணர்கிறேன். 13 வது திருத்தத்தை நிராகரிக்க வேண்டும் என்பது போன்ற சுமந்திரனின் கருத்து அதையே உணர்த்துகிறது என்பது எனது எண்ணம்.  

நான் சுமந்திரனை ஆதரித்த போது அவர் சில அடிப்படைகளை விட்டு கொடுக்காமல், ஆராவாரம் செய்யாமல், சம்பந்தர் சிவி யை முன்வைத்து செயல்படும் ஒரு பின் தள ஆலோசகராக இருப்பார் என நினைத்தேன். அப்படித்தான் அவரின் ஆரம்ப நகர்வுகள் இருந்தன.

ஆனால் அவரோ தன்னையே ஒரு தலமையாக முந்தள்ளி, தாந்தோன்றி தனமாக நடக்க முற்பட்டார். குறிப்பாக சிவி யின் வெளியேற்றம். அதுக்கு இவர்களிருவரினதும் personality clash மட்டுமே பிரதானமான காரணம்.

ஜனரஞ்சக அரசியலுக்கு வந்தவுடன் பொய் சொல்லவும் ஆரம்பித்தார்.

தீபாவளிக்குள் தீர்வு என்றார். நல்லாட்சி அரசு காலத்தில் ஒரு aim இல்லாமல், அந்த அரசை காப்பாற்றுவதுதான் தன் தலையாக கடமை, தீர்வு அடுத்த பட்சம் என்பது போல் இருந்தது இவரின் செயல். கல்முனை விவகாரத்தில் நேர்மையின்றி நடந்தார்.

புதிய அரசமைப்பை அமைக்க பாடுபட்டார். சரி அதை செயலாக்கினாரா? இல்லை. (இதற்கு இவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது) அடுத்து இனவாத அரசு வந்தவுடன் அத்தனையும் பாழ்.

இலங்கை இனவாத அரசுகளின் வரலாற்று போக்கை அறிந்திருந்தால், உள்ளே அரசமைப்பை மாற்றி மட்டும் தீர்வு சாத்தியமில்லை, ஒரு கடும் வெளி அளுத்தம் தேவை என உணர்ந்து எப்போதோ, எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து, வெளி அளுத்தம் வர உழைத்திருக்கலாம் ( இதில் டிரம் வந்தது உட்பட வேறு காரணிகளும் உண்டு).

கடைசியாக வயலில் இறங்கியது அடுத்த கட்ட பம்மாத்து.

அதேபோல் தனது தாந்தோன்றி விறுக்கு தனத்தால் பல உள்ளூர் அரசியல்வாதிகளையும் குழப்பி அடித்து, கூட்டமைப்பை மேலும் கூழாம்பாணியாக்கினார்.

ஆகவே இவரும் பழைய “இரத்த பொட்டு” கோஸ்டிதான் என்பது என் தீர்மானம்.

ஆனாலும் தீர்வு வரும் போது இவருக்கு ஒரு பெரிய வகிபாகம் இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. 

இவரின் அண்மைய சுருதி மாற்றம் - எனக்கும் குழப்பம்தான்.

இலங்கை -13 எண்டும்.

இந்தியா+ மேற்கு 13 எண்டு தொடங்கும்.

கூட்டமைப்பு 13+ எண்டும்

சீவி federal என்பார்

கஜன் confederal என்பார்.

முடிவு 13 - 13+ க்கு இடையில் வரலாம் என்றே நான் எண்ணி இருந்தேன்.

இப்போ

சிவி 13 என்கிறார் 

சுமந்திரன் 13+ என்கிறார். அல்லது federal என்கிறாரோம் தெரியாது. 

இது negotiating positioning ஆ? அல்லது 13 க்கு மேலே கேளுங்கள் என யாரும் வெளிச்சக்திகள் கூறினவா? தெரியவில்லை.

 

5 hours ago, பெருமாள் said:

13ஆம் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று அரசாங்கம் சொன்னால் அதனை செய்து காட்ட வேண்டும் – எம் .ஏ. சுமந்திரன்

அடிப்படையிலேயே பழுதுப்பட்டது 13ம் திருத்தச் சட்டம்

நேரத்துக்கு ஒன்றை சொல்லி தமிழ்மக்களை முட்டாள் ஆக்குபவர் என்ற உண்மையை மக்களுக்கு சொல்வதுக்கு  பெயர் வன்மம் என்றால் அதை தொடர்ந்து செய்யலாம் .

இதில் ஏறுக்கு மாறாக ஏதும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

சோறும் சம்பலும் சாப்பாடு போடுவோம் -  அரசு. (ஆனால் தட்டில் எதுவும் போடவில்லை). 

எமக்கு சோறும்+ ஆட்டுக்கறியும் வேண்டும் - சுமந்திரன்.

சோறும் சம்பலும் போடுவோம் என்று சொல்லும் அரசு முதலில் அதையாவது தட்ட்டில்  போடட்டும் - சுமந்திரன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சோறும் சம்பலும் போடுவோம் என்று சொல்லும் அரசு முதலில் அதையாவது தட்ட்டில்  போடட்டும் - சுமந்திரன்.

இப்படி ஒருக்கா சொல்றார் பின்பு அதெல்லாம் சரிவராது என்கிறார் இவரே சரி என்று பின்பு அதே வாயால் பிழை என்கிறார் அதுக்கு பெயர்தான் சுத்துமாத்து என்கினம் .

1 hour ago, goshan_che said:

நான் சுமந்திரனை ஆதரித்த போது அவர் சில அடிப்படைகளை விட்டு கொடுக்காமல், ஆராவாரம் செய்யாமல், சம்பந்தர் சிவி யை முன்வைத்து செயல்படும் ஒரு பின் தள ஆலோசகராக இருப்பார் என நினைத்தேன். அப்படித்தான் அவரின் ஆரம்ப நகர்வுகள் இருந்தன.

ஆனால் அவரோ தன்னையே ஒரு தலமையாக முந்தள்ளி, தாந்தோன்றி தனமாக நடக்க முற்பட்டார். குறிப்பாக சிவி யின் வெளியேற்றம். அதுக்கு இவர்களிருவரினதும் personality clash மட்டுமே பிரதானமான காரணம்.

ஜனரஞ்சக அரசியலுக்கு வந்தவுடன் பொய் சொல்லவும் ஆரம்பித்தார்.

தீபாவளிக்குள் தீர்வு என்றார். நல்லாட்சி அரசு காலத்தில் ஒரு aim இல்லாமல், அந்த அரசை காப்பாற்றுவதுதான் தன் தலையாக கடமை, தீர்வு அடுத்த பட்சம் என்பது போல் இருந்தது இவரின் செயல். கல்முனை விவகாரத்தில் நேர்மையின்றி நடந்தார்.

புதிய அரசமைப்பை அமைக்க பாடுபட்டார். சரி அதை செயலாக்கினாரா? இல்லை. (இதற்கு இவரை மட்டும் குற்றம் சொல்ல முடியாது) அடுத்து இனவாத அரசு வந்தவுடன் அத்தனையும் பாழ்.

இலங்கை இனவாத அரசுகளின் வரலாற்று போக்கை அறிந்திருந்தால், உள்ளே அரசமைப்பை மாற்றி மட்டும் தீர்வு சாத்தியமில்லை, ஒரு கடும் வெளி அளுத்தம் தேவை என உணர்ந்து எப்போதோ, எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை எடுத்து, வெளி அளுத்தம் வர உழைத்திருக்கலாம் ( இதில் டிரம் வந்தது உட்பட வேறு காரணிகளும் உண்டு).

கடைசியாக வயலில் இறங்கியது அடுத்த கட்ட பம்மாத்து.

அதேபோல் தனது தாந்தோன்றி விறுக்கு தனத்தால் பல உள்ளூர் அரசியல்வாதிகளையும் குழப்பி அடித்து, கூட்டமைப்பை மேலும் கூழாம்பாணியாக்கினார்.

ஆகவே இவரும் பழைய “இரத்த பொட்டு” கோஸ்டிதான் என்பது என் தீர்மானம்.

ஆனாலும் தீர்வு வரும் போது இவருக்கு ஒரு பெரிய வகிபாகம் இருக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை. 

இவரின் அண்மைய சுருதி மாற்றம் - எனக்கும் குழப்பம்தான்.

இலங்கை -13 எண்டும்.

இந்தியா+ மேற்கு 13 எண்டு தொடங்கும்.

கூட்டமைப்பு 13+ எண்டும்

சீவி federal என்பார்

கஜன் confederal என்பார்.

முடிவு 13 - 13+ க்கு இடையில் வரலாம் என்றே நான் எண்ணி இருந்தேன்.

இப்போ

சிவி 13 என்கிறார் 

சுமந்திரன் 13+ என்கிறார். அல்லது federal என்கிறாரோம் தெரியாது. 

இது negotiating positioning ஆ? அல்லது 13 க்கு மேலே கேளுங்கள் என யாரும் வெளிச்சக்திகள் கூறினவா? தெரியவில்லை.

இந்ததெளிவு சுமத்திரன் சின்ராசுகளுக்கு கூட இல்லை நன்றி கோசான் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, tulpen said:

ஐந்து தசாப்தமாக இருந்த தமிழ் அரசியல்வாதிகளை போல் உசுப்பேற்றும் அரசியலை செய்யாமல்,  நடைமுறைச் சாத்தியமான வெளிப்படையான, தந்திரோபாயமான அரசியல் செய்யும் வகையில் கருத்துக்களை தெரிவித்திருந்தார்.  அதுவே இத்துபோன பழைய தமிழ் தேசிய அரசியலில்  பல தசாப்தங்களாகத் ஊறித்திளைத்தவர்களுக்கும் அவருக்கும் இடையில் முரண்பாடுகளை உருவாக்கியது.  

ஆனால்,  காலப்போக்கில் வழமையான தமிழர் தேசியத்தை பேசும் மனநோய் அரசியல் அவரையும் பலமாக தொற்றிக்கொள்ளத் தொடங்கியது.  அசல் பழமை பேண் தமிழ் தேசியவாதியாக சுமந்திரன் மாறிவருவதை அவரது அண்மைய சில செயற்பாடுகள் உணர்ததி வருகிறது. தமிழரிடையே ஒரு அரசியல்வாதியாக நிலைத்திருக்க இப்படியான அரசியல்தான் சரியானது என்று தனிப்பட்ட ரீதியில் கருதுகிறாரோ தெரியவில்லை. 

சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.

இந்த தமிழ் ஆய்வாளர்கள் தொல்லைகள் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.