Jump to content

``முதல்வரான மறுநொடி, தாய் மீது சத்தியமாக..!" - எழுவர் விடுதலை குறித்து சீமான்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

`நாட்டையே ஆளத் துடிப்பவனுக்கு, சொந்த வீடு இல்லாதது எவ்வளவு பெரிய வரலாற்றுத் துயரம்' என பொதுக்கூட்ட மேடையிலேயே சென்டிமென்ட் டச் கொடுப்பதாகட்டும், 'தி.மு.கதான்டா உண்மையான சங்கி' என்று செருப்பைத் தூக்கிப் பிடித்து விமர்சிப்பதாகட்டும்... எப்போதுமே தமிழக அரசியலின் ஹாட் டாபிக் சீமான்!

பரபரப்பான இந்த நேரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை நேரில் சந்தித்தேன்...

``மாரிதாஸின் பதிவு கருத்துரிமைக்கு ஆதரவாக நீங்கள் குரல் கொடுக்கிறீர்கள். ஆனால், கருத்தைப் பதிவிட்ட மாரிதாஸே சிறிது நேரத்தில் அந்தப் பதிவை நீக்கிவிட்டார் என்றால் என்ன அர்த்தம்?''

``கல்புர்கி, நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ், ஸ்டேன் லூர்து சாமி போன்றோரை பா.ஜ.க-வினர் என்ன பாடுபடுத்தினார்கள் என்பதையெல்லாம் நாம் பார்த்தோம்தான். ஆக, பா.ஜ.க-வின் இந்தச் செயல்களுக்கும் 'எதிர்த்து பேசினாலே உள்ளே தூக்கிப் போட்டுவிடுவோம்' என்ற தி.மு.க-வின் செயலுக்கும் என்ன வித்தியாசம்?

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த துரைமுருகன், பொதுக்கூட்ட மேடையில் 'நல்ல அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்தவன் எனப் பேசிவிட்டார்' என்று அவரைக் கைதுசெய்தார்கள். எதிர்த்து பேசினால், நீங்களும் எதிர்த்து பேசிவிட்டுப் போங்களேன்... ஏன் கைதுசெய்கிறீர்கள்?

இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினே கடந்தகாலத்தில், 'நல்ல அப்பனுக்குப் பிறந்திருந்தால் என்னைக் கைதுசெய்து பார்' என்று அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்துப் பேசியிருக்கிறாரே... அப்படியென்றால், அவரே சிறைக் கதவைத் திறந்துபோய் படுத்துக்கொள்வாரா?''

``உங்களுக்குச் சொந்த வீடு இல்லாதது குறித்து பொதுக்கூட்ட மேடையிலேயே பேசியிருக்கிறீர்களே..?''

'' 'அண்ணன் ஏன் ஆலப்பாக்கத்திலிருந்து இப்போது வீடு மாறுகிறார்' என்று என் தம்பிகளுக்குத் தெரிய வேண்டும். 'வாடகைக்குத்தான் குடியிருந்தோம்... இப்போது போய்த்தான் ஆக வேண்டும்' என்பதையெல்லாம் அவர்களுக்கும் சொல்ல வேண்டும் இல்லையா... ஒவ்வொருவரையா கூப்பிட்டு வைத்து இதைப் பற்றிப் பேச முடியாது. அதனால், இருக்கிற இடத்திலேயே பேசிவிட வேண்டியதுதானே!''

ஹெச்.ராஜா
 
ஹெச்.ராஜா

``என்னைப் பார்த்து 'பீகாரி' என்று சொல்கிற பைத்தியக்காரர்களுக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்று ஹெச்.ராஜா உங்களை விமர்சிக்கிறாரே?''

``உலகத்துக்கே தெரியும் ஹெச்.ராஜா பீகாரைச் சேர்ந்தவர்தான் என்று. சரி... அவர் இந்த மண்ணின் மகனாகவே இருக்கட்டும். இந்த மக்களின் மொழி, இனம், நிலம், வளம் உரிமைகளுக்காக ஹெச்.ராஜா இதுவரை என்ன பேசியிருக்கிறார்... மதத்தைப் பற்றிப் பேசியதைத் தவிர.''

``உங்களுக்குச் சொந்த வீடு இல்லாதது குறித்து பொதுக்கூட்ட மேடையிலேயே பேசியிருக்கிறீர்களே..?''

'' 'அண்ணன் ஏன் ஆலப்பாக்கத்திலிருந்து இப்போது வீடு மாறுகிறார்' என்று என் தம்பிகளுக்குத் தெரிய வேண்டும். 'வாடகைக்குத்தான் குடியிருந்தோம்... இப்போது போய்த்தான் ஆக வேண்டும்' என்பதையெல்லாம் அவர்களுக்கும் சொல்ல வேண்டும் இல்லையா... ஒவ்வொருவரையா கூப்பிட்டு வைத்து இதைப் பற்றிப் பேச முடியாது. அதனால், இருக்கிற இடத்திலேயே பேசிவிட வேண்டியதுதானே!''

ஹெச்.ராஜா
 
ஹெச்.ராஜா

``என்னைப் பார்த்து 'பீகாரி' என்று சொல்கிற பைத்தியக்காரர்களுக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்று ஹெச்.ராஜா உங்களை விமர்சிக்கிறாரே?''

``உலகத்துக்கே தெரியும் ஹெச்.ராஜா பீகாரைச் சேர்ந்தவர்தான் என்று. சரி... அவர் இந்த மண்ணின் மகனாகவே இருக்கட்டும். இந்த மக்களின் மொழி, இனம், நிலம், வளம் உரிமைகளுக்காக ஹெச்.ராஜா இதுவரை என்ன பேசியிருக்கிறார்... மதத்தைப் பற்றிப் பேசியதைத் தவிர.''

``எழுவர் விடுதலை குறித்துப் பேசுகிறபோது, 'ஏழு பேரையும் ஏன் விடுதலை செய்ய வேண்டும்' என்று எதிர்க்கேள்வி கேட்கிறாரே ஹெச்.ராஜா?''

``இதுவே தமிழக முதல்வராக நான் இருந்திருந்தால், ஹெச்.ராஜா இப்படிக் கேட்பாரா? ஹெச்.ராஜா இந்த மண்ணின் மைந்தராக இருந்தால், என் தம்பி பேரறிவாளனின் கண்ணீரும் ஆத்தா அற்புதம்மாளின் வலியும் தெரிந்திருக்கும். நான் முதல்வரானால், மறு நொடியே ஏழு பேரையும் சிறைக் கதவைத் திறந்து வெளியே அனுப்பிடுவேன்.''

எழுவர் விடுதலை
 
எழுவர் விடுதலை

``இந்திய ஒன்றியக் கட்டமைப்புக்குள் ஒரு மாநில முதல்வரால் சாத்தியமில்லாத விஷயங்களையெல்லாம் தொடர்ச்சியாகப் பேசிவருகிறீர்களே?''

``எது சாத்தியப்படாது... சிறைக் கதவைத் திறந்து எல்லோரையும் வெளியில் விட்டுவிட்டேன். நீங்கள் என்ன பண்ணிவிடுவீர்கள்... ஆட்சியைக் கலைப்பீர்களா? மறுபடியும் தேர்தலில் நின்று, அதிக இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைப்பேன்.

ஆனால், இப்போது ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் என் ரத்தம் அல்ல. அதனால்தான் அவர்களுக்குக் கொதிக்க மாட்டேன் என்கிறது. நான் முதல்வரானால், என் தாய்மீது சத்தியமாக இவர்களையெல்லாம் சிறையிலிருந்து விடுவித்துவிடுவேன். என்ன என்மீது வழக்கு தொடுப்பார்களா? தொடுக்கட்டும்... எத்தனை லட்சம் வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். சட்டம் இருக்கிறது. பார்த்துக்கொள்கிறேன்.

இந்தியா என்பது ஒரு நாடு அல்ல. இது நாடுகளின் நாடு. எப்படி இவர்களுக்கெல்லாம் கட்டுப்படாமல் மம்தா பானர்ஜி, தான் நினைப்பதைச் செய்கிறாரோ... அதுபோல நானும் செயல்படுவேன். உலகத்தில் எதுவொன்றும் சாத்தியத்திலிருந்து பிறக்கவில்லை. தேவையிலிருந்துதான் பிறக்கிறது. எனவே சாத்தியமா, கீத்தியமா என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்காதீர்கள்!''

`` 'ராஜீவ் காந்தியை நாங்கள்தான் கொன்றோம், சோனியா காந்தியின் சக்களத்தி பிள்ளைகள்' என்றெல்லாம் உணர்ச்சிக் கொந்தளிப்பில் வார்த்தைகளைக் கொட்டிவிடுகிறீர்களே...?''

``சரி... ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை. அவர் மரணத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இதைத்தானே 30 வருடங்களாகக் கத்திக்கொண்டிருந்தோம்... என்ன செய்தீர்கள். 'நாங்கள்தான் கொன்றோம்' என்று சொல்லி, எங்களைத் தடை செய்தீர்கள், சிறைப்படுத்தினீர்கள், எங்களை அழித்தொழிப்பதற்கு ஆயுதமும் கொடுத்துக் கொன்றொழித்தீர்கள்.

எல்லாவற்றையும் பார்த்துவிட்ட உச்சத்தில்தான், 'ஆமாம்டா நாங்கள்தான் கொன்றோம்... இப்ப என்னடா?' என்று கேட்கிறோம். இப்போது, 'விடுதலைப் புலிகளே க்ளெய்ம் பண்ணாத விஷயத்தை, நீங்கள் எப்படி க்ளெய்ம் செய்கிறீர்கள்' என்று கேட்கிற இடத்துக்கு வந்திருக்கிறார்கள். 'ராஜீவ் காந்தி மரணத்தை விடுதலைப் புலிகளே க்ளெய்ம் பண்ணவில்லையே... பின்னர் எதற்காக அந்த இயக்கத்தைத் தடை செய்தீர்கள்?' என்று இப்போது நாங்கள் கேட்கிறோம்.''

ராஜீவ் காந்தி - சோனியா காந்தி
 
ராஜீவ் காந்தி - சோனியா காந்தி

``ஆனால், 'ஈழத் தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்துகிறார் சீமான்' என இலங்கை நாடாளுமன்றத்திலேயே பேச்சு எழுந்திருக்கிறதே?''

``அந்தக் காணொலியை நானும் பார்த்து ரசித்துச் சிரித்தேன். அப்படிப் பேசியவர் டக்ளஸினுடைய ஆள். தனிப்பட்ட முறையில் டக்ளஸுக்கும் பிரபாகரனுக்குமே பிடிக்காது. எனவே, என்னையும் அவர்களுக்குப் பிடிக்கலை. உலகத் தமிழர்கள் என் மேல் அன்பு வைத்திருக்கிறார்கள். என் பின் திரள்கிறார்கள். எனவே என்மீது அவர்களுக்கெல்லாம் ஆற்றாமை. என்னைப் பற்றி இலங்கைப் பாராளுமன்றத்திலேயே பேசுகிறார்கள் என்பதில், என் பிள்ளைகளுக்கெல்லாம் மகிழ்ச்சிதான்.

'சீமானிடம்தான் விட்டுவிட்டுச் செல்கிறோம். எனவே தொடர்ச்சியாக அவரை முன்னெடுத்துச்செல்லச் சொல்லுங்கள்' என அண்ணன் சூசை, தன்னுடைய மரண வாக்குமூலமாகக் கடைசி நேரத்தில் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். இதுதான் எனக்கு இவ்வளவு நெருக்கடியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது!''

``முதல்வரான மறுநொடி, தாய் மீது சத்தியமாக..!" - எழுவர் விடுதலை குறித்து சீமான் | naam tamilar katchi co ordinator Seeman interview (vikatan.com)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2016 , 2019 , 2021 இந்த‌ மூன்று தேர்த‌ல்க‌ளை விட‌ இந்த‌ தேர்த‌லில் மோடியின் க‌ட்டு பாட்டில் இய‌ங்கும் தேர்த‌ல் ஆணைய‌த்தின் செய‌ல் பாடு ப‌டு கேவ‌ல‌ம்............... 2019க‌ளில் விவ‌சாயி சின்ன‌ம் கிடைச்ச‌ போது ஈவிம் மிசினில் விவ‌சாயி சின்ன‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று ப‌ல‌ருக்கு தெரிந்து  திராவிட‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ளே அண்ண‌ன் சீமானுக்கு ஆத‌ர‌வு தெரிவித்த‌வை சின்ன‌ விடைய‌த்தில் 2019தில்  2024 விவ‌சாயி சின்ன‌ம் ஈவிம் மிசினில் குளிய‌ரா தெரியுது ஆனால் மைக் சின்ன‌த்தை வேறு மாதிதி க‌ருப்பு க‌ல‌ர் ம‌ற்றும் சின்ன‌த்தை ஈவிம் மிசினில் வேறு மாதிரி தெரியுது 2019 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லின் போதும் விவ‌சாயி சின்ன‌ம் கிளிய‌ர் இல்லாம‌ இருந்த‌து   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்த‌ போது அவ‌ர்க‌ள் 40தொகுதிக‌ளிலும் போட்டியிடுகிறோம் என்று சொல்லி விட்டு இப்போது 19 தொகுதில‌ தான் போட்டியிடுகின‌ம் மீதி தொகுதிக்கு விவ‌சாயி சின்ன‌த்தை சுய‌ற்ச்சி முறையில் போட்டியிட‌ மோடியின் தேர்த‌ல் ஆணைய‌ம் விட்டு இருக்கு   ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு விவ‌சாயி சின்ன‌ம் கொடுத்தும் அவ‌ர்க‌ள் தேர்த‌ல் பிர‌ச்சார‌ம் செய்த‌தாக‌ ஒரு தொலைக் காட்சியிலும் காட்ட‌ வில்லை அவ‌ர்க‌ள் பிஜேப்பி பெத்து போட்ட‌ க‌ள்ள‌ குழ‌ந்தைக‌ள் இப்ப‌டி ஒவ்வொரு  மானில‌த்திலும் ப‌ல‌ர் இருக்கின‌ம் இந்தியாவை அழிக்க‌ சீன‌னோ பாக்கிஸ்தானோ தேவை இல்லை மோடிட்ட‌ இன்னும் 10 ஆண்டு ஆட்சி செய்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிழ‌வு ப‌டுவார்க‌ள்🤣😁😂.................................
    • களுத்தற, 2 வருட ஊசி போன வடை விடயத்தில் கூட்டி வந்தவர் கைதாம். சைவ கடை உரிமையாளர் மீதும் வழக்கு பதிவாம். பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பாம்.
    • அடுத்த அடுத்த வரிகளில் எப்படி இப்படி 180 பாகை எதிராக எழுத முடிகிறது? 👆🏼👇 2016 இல் இறங்கினார் சரி.  2021 வரை அனுபவம் ஜனநாயகம் செயல் அளவில் இல்லை என சொன்னபின்னும் ஏன் அதையே 2024 இல் செய்கிறார்? The definition of  insanity is doing the same thing again and gain and expecting a different outcome. அண்ணன் என்ன லூசா? அல்லது கமிசன் வாங்கி கொண்டு வாக்கை பிரிக்க இப்படி செய்கிறாரா? நான் என்ன ரோ எஜெண்டா அல்லது பிஜேபி பி டீமா? எனக்கு எப்படி தெரியவரும்? உங்களை சவுத் புளொக் கூப்பிட்டு காதுக்குள் ஐபி டைரக்டர் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன்? மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. நேற்று டவுனிங் ஸ்டிரீட் பக்கம் சும்மா வாக்கிங் போனேன். உங்களை பற்றி இந்த வகையில்தான் பேசி கொண்டார்கள். நான் கேள்விபட்ட வரையில் டிரம்ப் தான் வென்றதாம்….நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்பதால், தேர்தல் முடிவை குளறுபடி செய்து மாற்றினார்களாம்.
    • உங்க‌ட‌ அறிவுக்கு நீங்க‌ள் இப்ப‌டி எழுதுறீங்க‌ள் அவ‌ர்க‌ள் ஜ‌ன‌நாய‌க‌த்தின் மீது ந‌ம்பிக்கை இருந்த‌ ப‌டியால் தான் அர‌சிய‌லில் இற‌ங்கின‌வை இந்தியாவில் ஜ‌ன‌நாய‌க‌ம் என்ற‌து சொல் அள‌வில் தான் இருக்கு செய‌லில் இல்லை................ 2023 டெல்லிக்கு உள‌வுத்துறை கொடுத்த‌ த‌க‌வ‌ல் உங்க‌ளுக்கு வேணும் என்றால் தெரியாம‌ இருக்க‌லாம் இது ப‌ல‌ருக்கு போன‌ வ‌ருட‌மே தெரிந்த‌ விடைய‌ம்.........................நீங்க‌ள் யாழில் கிறுக்கி விளையாட‌ தான் ச‌ரியான‌ ந‌ப‌ர்.............................என‌க்கும் த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் அமெரிக்கா அர‌சிய‌ல் டென்மார்க் அர‌சிய‌ல் ப‌ற்றி ந‌ங்கு தெரியும் ஆனால் நான் பெரிதாக‌ அல‌ட்டி கொள்வ‌து கிடையாது.................   ந‌ண்ப‌ர் எப்போதும் த‌மிழ‌ன் ம‌ற்றும் விவ‌சாயிவிக் அண்ணா இவ‌ர்க‌ள் இருவ‌ரும் 2020ம் ஆண்டு ர‌ம் தான் மீண்டும் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்ன‌வை  நான் அதை ம‌றுத்து பைட‌ன் தான் ஆட்சிக்கு வ‌ருவார் என்று சொன்னேன் அதே போல் நான் சொன்ன‌ பைட‌ன் அமெரிக்கன் ஜனாதிபதி ஆனார்😏............................ ஆர‌ம்ப‌த்தில் தாங்க‌ளும் வீர‌ர்க‌ள் தான் என்று வார்த்தைய‌ வீடுவின‌ம் ஒரு சில‌ர் அடிக்கும் போது  அடிக்கு மேல் அடி விழுந்தால் ப‌தில் இல்லாம‌ கோழை போல் த‌ங்க‌ளை தாங்க‌ளே சித்த‌ரிப்பின‌ம்🤣😁😂..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.