Jump to content

20 வருடத்தில் கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் இல்லாத நிலை ஏற்படலாம்; சாணக்கியன் எச்சரிக்கை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

20 வருடத்தில் கிழக்கில் தமிழ் பேசும் மக்கள் இல்லாத நிலை ஏற்படலாம்; சாணக்கியன் எச்சரிக்கை

 

கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களுக்கு தமிழ் மக்களுடன் இணைந்துவாழ விரும்பம் இல்லையென்றால் இன்னும் 20வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களே இல்லாதநிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

வடகிழக்கில் நாங்கள் நிரந்தரமான தீர்வொன்றை அடைவதாகயிருந்தால் முஸ்லிம் மக்கள் இல்லாமல் எந்த தீர்வினையும் அடையமுடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக்குழுவினால் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 16வது நினைவு தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது.

269923000_460939208733410_58036179872954

25-12-2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது இவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தார்.

அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 16வது நினைவு தினம் நேற்று மாலை மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டது.

நிகழ்வுக்கு முன்பாக அன்னாரின் படுகொலைக்கு நீதிவேண்டி மட்டக்களப்பு நகரின் உயிர்நீர்த்த ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகிலிருந்து நிகழ்வு நடைபெறும் சார்ள்ஸ் மண்டபம் வரையில் கையில் கைகளிலும் கழுத்திலும் கறுப்பு பட்டியணிந்து பேரணி நடைபெற்றது.

பேரணி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலைசெய்யப்பட்ட புனித மரியால் பேராலயம் வரையில் வருகைதந்து அங்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.

அதனை தொடர்ந்து சார்ள்ஸ் மண்டபத்தில் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தீபாகரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.மலர் மாலையினை இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் கி.சோயோன்,மட்டக்களப்பு மாவட்ட தலைவர் தீபாகரன் ஆகியோர் அணிவித்தனர்.

இந்த நிகழ்வில் தமிழ் தேசிய வரலாற்று பாதையில் வேதனைகள்,சோதனைகள்,சாதனைகள் என்னும் தலைப்பில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் அருட்பணி அ.நவரெட்னம் அடிகளார் சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் பொன்.செல்வராஜா,தமிழரசுக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சி முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் அண்மையில் காலமான மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் மண்முனை வடக்கு பிரதேச முக்கியஸ்தருமான தவராஜாவுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன்,

மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு காரணமாக அமைந்தவர்கள் இன்று சுதந்திரமாக நடமாடித்திரிகின்றனர்.இந்த நாட்டில் நிதியும் இல்லை, நீதியும் இல்லாத சூழ்நிலையே இன்று உள்ளது.

இந்த நாட்டில் நீதியமைச்சர் இராஜினாமா செய்யும் நிலையில் இந்தநாடு உள்ளது.அவ்வாறான நிலையில் மாமனிதர் அமரர் ஜோசப்பரராஜசிங்கத்திற்கு இந்த அரசாங்கம் நீதியைத்தரும் என்று எதிர்பார்க்கமுடியாது.

இவ்வாறான நிலையில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பெண்களுக்கு நடந்த அநீதிகள் தொடர்பாக ஊடகங்களில் பேசியிருந்தார். இன்று அவரெல்லாம் தூயவராக வந்து மட்டக்களப்பில் பெண்களுக்கு எதிரான அநீதிகள் பற்றி பேசுவது என்பது கவலையான விடயமாகும்.இவ்வளவு நீதிகோரும் அவர் ஏன் அன்று ஜோசப்பரராஜசிங்கம் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது நீதிகோரவில்லை.அவருக்கு அந்த குற்றச்சாட்டு இருந்தது ஆனால் நீதிமன்றம் ஊடாக ஏதோவொரு வகையில் வெளிவந்துவிட்டார்.அவர் அந்த கொலையினை செய்யவில்லையென்றால் ஏன் அந்த கொலைக்கு எதிரான நீதிகோரமுடியாது.

ஜோசப்பரராஜசிங்கம் ஐயாவினை நினைவுகூரப்படும் இந்த வேளையில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் ஒரு பட்டியலே நீதிகோரப்படாத நிலையில் உள்ளது.கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்திரநாத், பிரேமினி என்னும் அரசார்பற்ற நிறுவனத்தில் வேலைசெய்த பெண் ஒருவர் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

இவர்களுக்காக ஏன் நீதிகோரமுடியாது.தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய நாங்கள் நீதிகோரியே வருகின்றோம். இதேபோன்று வர்சா ரூத் ரெஜி என்னும் 06வயது சிறுமி பணத்திற்காக கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

தினேஸிகா சதீஸ்குமார் எட்டு வயது சிறுமி மட்டக்களப்பில் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். இன்று தூயவர்களாக மாறி நீதிகோருகின்றவர்கள் ஏன் இவர்களுக்காக நீதிகோரமுடியாது.

270035545_460939072066757_85528157161277

நீளமான படுகொலைசெய்யபட்டவர்களின் பட்டியலே உள்ளது.நாங்கள் இவர்களுக்கான நீதியை கோரிவருகின்றோம். நீங்கள் தூயவர்களாகயிருந்தால் எங்களுடன் இணைந்து இவர்களுக்கான நீதியைப்பெற்றுக்கொடுக்க எங்களுடன் வாருங்கள் என்று பகிரங்கமாக அழைக்கின்றேன். இந்த மாவட்டத்தில் மீண்டும் அராஜகம் ஏற்பட்டுவருகின்றது. இதற்கு காரணம் பொலிஸாருக்கும் அரசாங்த்துடன் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் உள்ள நல்ல உறவாகும்.இதற்கு காரணம் மண்மாபியாக்களும் மண் வியாபாரங்களுமாகும்.அவர்கள் வியாபாரம் செய்யும்போது பொலிஸார் கண்டுகொள்ளாமல் இருக்கவேண்டும் என்பதற்காக பொலிஸார் தவறு செய்யும்போது இவர்கள் கண்டுகொள்ளாமலிருக்கின்றனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினைப்பொறுத்தவரை சிங்களவராகயிருக்கலாம்,முஸ்லிம்களாக இருக்கலாம்,தமிழர்களாக இருக்கலாம் எந்த இடத்தில் எவருக்கு அநீதி நடந்தாலும் அவர்களுக்கு நீதிகோரவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாகயிருக்கின்றோம்.

தமிழர்கள் மீது இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த அடக்குமுறை செயற்பாடுகளை இன்று முஸ்லிம் மக்கள் மீது காட்டப்படுகின்றது.1980 காலப்பகுதிக்கு பின்னரும் முன்னரும் தமிழர்கள் மீது எவ்வாறான அடக்குமுறைகளை முன்னெடுத்தார்களோ அதே அடக்குமுறையினை இன்று முஸ்லிம்கள் மீது பிரயோகிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றனர். அதனை பார்த்து நாங்கள் சந்தோசப்படமுடியாது.

அதற்கு நாங்கள் நீதிகோராவிட்டால் இன்று நாங்கள் ஜோசப் ஐயாவின் மரணத்திற்கு நீதிகோருவதற்கு தகுதியில்லாதவர்களாக மாறிவிடுவோம். நாங்கள் எங்களுக்கு நடந்த அநீதிகளுக்கு நீதிகோரும்போது இன்று நடக்கும் அநீதிகளுக்கும் நாங்கள் நீதிகோரவேண்டும்.அதனை எங்களது கட்சியின் ஒரு நிலைப்பாடாக எடுக்கவேண்டும்.இன்று முஸ்லிம்களுக்கு அநீதிகள் நடக்கும்போது அதனை ஆதரிக்கின்றனர்.

வடக்கு கிழக்கில் நாங்கள் நிரந்தர தீர்வொன்றினை அடைவதாகயிருந்தால் அதில் இஸ்லாமிய மக்கள் இல்லாமல் தீர்வு ஒன்றும் இல்லை.வடகிழக்கில் தமிழர்களுக்கு மட்டும் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்று நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது. அதனை நாங்கள் அனைவரும் உணரவேண்டும்.எம்மவர்களே முஸ்லிம் மக்களுக்கு எதிராக போராடவேண்டும் என்று கூறுவார்கள்.

இன்னுமொரு சமூகம் எவ்வாறு எமக்கு அநீதிகள் செய்ததோ நாங்களும் இன்னுமொரு சமூகத்திற்கு எதிராக அநீதிசெய்யக்கூடாது.அதுவே எனது நிலைப்பாடாகும்.தமிழரசுக்கட்சியின் நிலைப்பாடும் அதுவாகத்தான் இருக்கும்.தமிழ்-முஸ்லிம் இரு சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வே தேவையென கட்சி யாப்பிலும் உள்ளது.பிள்ளையான்,வியாழேந்திரன் போன்றவர்கள் செய்கின்றார்கள் என்பதற்காக நாங்கள் அந்த அரசியலை செய்யமுடியாது.அவ்வாறு செய்வதாகயிருந்தால் கட்சி யாப்பில் திருத்தம்கொண்டுவரப்பட்டு முன்கொண்டுசெல்லவேண்டும்.

மயிலத்தமடு-மாதவனை பகுதியை பாதுகாப்பதற்கு அரசாங்கத்துடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை எங்களுக்கு ஒத்துழைக்குமாறு கோரியிருந்தோம்.அவர்கள் இதுவரைக்கும் எந்த ஒத்துழைப்பினையும் வழங்கவில்லை.பட்டிப்பளையில் வனஇலாகா காணிகள் அபகரிக்கப்படுகின்றன.அவற்றினை தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரம் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருக்கு இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் பெரும்பான்மை சமூகத்தினால் அபகரிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.அரசாங்கத்தின் பக்கமுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக துவேசங்களை வளர்த்துக்கொண்டிருந்தாலும் அதனை நாங்கள் செய்யமுடியாது.

அவ்வாறு செய்தால் வடகிழக்கில் தமிழ் மக்களுக்கான தீர்வினை மறக்கவேண்டும்.

 

இதேபோன்று முஸ்லிம் மக்களுக்கும் சொல்கின்றார்கள், கிழக்கில் நாங்கள்தான் பெரும்பான்மை சமூகம்,நாங்கள் எதற்கு தமிழ் மக்களுடன் இணைந்து வாழவேண்டும் என்று கூறுகின்றார்கள். அவர்களுக்கு தமிழ் மக்களுடன் இணைந்துவாழ விரும்பம் இல்லையென்றால் இன்னும் 20வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களே இல்லாதநிலையேற்படும். அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.மாகாணசபை தேர்தல் வந்தால் அம்பாறையை சேர்ந்த தமிழ் பேசாதவர் ஒருவரை முதலமைச்சராக கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஒரு பெரும்பான்மை சமூகத்தினைக்கொண்ட ஆளுநரை வைத்துக்கொண்டே பல கஸ்டங்களை எதிர்கொண்டுவருகின்றோம் என்றும் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்
 

 

https://thinakkural.lk/article/157165

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் சமுகம் தமிழ்பேசும் சமுகமாக இருப்பது வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட ஓர் துன்பியல் நிகழ்வு. இச்சமுகத்தினர் சிங்களம் பேசும் சமுகமாக இருந்திருந்தால் ஒருவேளை தீர்வு எப்போதோ கிடைத்திருக்கக்கூடும். சிங்களப் பிராமணர்களும், சிங்கள முஸ்லிம்களும் இல்லாதிருப்பதே சிங்களச் சமுகத்தின் பெரும் வெற்றிகளுக்குக் காரணம். 

முதலில் சாணக்கியன் சுமந்திரன் போன்றவர்கள் முஸ்லிம் சமுகத்துக்காக குரல் கொடுப்பதை நிறுத்தவேண்டும். தமிழர் தரப்பில் 50 எம்பிகள் இருந்து பாராளுமன்றில் சாதிப்பதைவிட 1 முஸ்லிம் எம்பி பல விடயங்களை  சாதித்து விடுவார். இப்பொது பராளுமன்றில் கிட்டத்தட்ட 10-15 முஸ்லிம் எம்பிக்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை போதுமானதைவிட மிகவும் அதிகமானது.

நிவாகத் திறன் சற்றுமே இல்லாத முன்னாள் வடமாகாண முதல்வர் விக்கி, கஜே1, கஜே2 போன்றோர் செய்வது போல பாராளுமன்ற இருக்கைகளை அலங்கரிப்பதுடன் சும்மா சாக்கு போக்கிற்காக பாராளுமன்ற அமர்வுகளில் உரை நிகழ்த்திவிட்டு சாணக்கியன் சுமந்திரன் போன்றோர் இருந்துவிட வேண்டும். முஸ்லிம் சமுகம் தமக்காக குரல்கொடுத்துகொள்ளும். பிழைத்துக்கொள்ளும். இவர்கள் அவர்களுக்காக தேவையில்லாமல் ஆணி ஒன்றையும் புடுங்கத் தேவையில்லை.  இப்பவும் கோட்டாவின் கடைக்கண் பார்வைக்காக முஸ்லிம் சமுகம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. அடுத்த பாராளுமன்றம் மகிந்தவுக்கு அறுதிப் பெரும்பான்மையைத் தராது. அப்போது மகிந்தவுக்கு கைகொடுக்க முஸ்லிம் சமுகம் தேவை கூடவே மலையக சமுகமும் தேவை. எனவே முஸ்லிம் சமுகம் குறித்த தமது கடும்போக்கு நிலையில் இருந்து கோட்டா இறங்கி வரக்கூடும். 

அதுக்குப் பிறகு முஸ்லிம் சமுகமும் சிங்கள சமுகமும் கிரிபத்தும் கட்டுசம்பலும் போல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நிலைமை அப்படி இருந்தும்….

கிழக்கு மாகாண முதல் அமைச்சர் பதவியை, சம்பந்தர் ஏன் முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுத்தவர் என்று கேட்டுச் சொல்லுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

 நிலைமை அப்படி இருந்தும்….

கிழக்கு மாகாண முதல் அமைச்சர் பதவியை, சம்பந்தர் ஏன் முஸ்லீம்களுக்கு விட்டுக் கொடுத்தவர் என்று கேட்டுச் சொல்லுங்கள்.

அது சம்பந்தரின் அரசியல் ராஜதந்திரம். எந்த தந்திரமும் முஸ்லிம்களிடம் எடுபடாது. அவர்கள் எங்களை வைத்து தாங்கள் பிழைத்துக்கொள்வார்கள், நாமோ எல்லாவற்றையும் இழந்த பூனைகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டோன்ட் ஒரி மிஸ்டர் சான்ஸ் 
தமிழர்கள் இல்லாமல் போனால் என்ன முஸ்லிம்கள் இருக்கிறார்கள் தானே அவர்கள் வோட்டு போடுவினம் 
அடுத்த காத்தான்குடி சனாதிபதி நீங்கள் தானாமே, பாராளுமன்றில் முஸ்லிம்களுக்காக  நீங்கள் கத்திய சத்தத்தை கேட்டு  உச்சிகுளிர்ந்த ஒரு பட்சி சொல்லுது. நீங்கள் பா.உ  ஆனது எங்களுக்கு கிடைத்த வரம் என்று தமிழர்கள் சொல்லவில்லை முஸ்லிம்கள் சொல்லுகிறார்கள் என்றால் பாருங்கோவன். உங்களை போன்ற கூத்தாடிகளுக்கு பின்னால் இன்னும்  இழுபடும் வால்களுக்கு சமர்ப்பணம்     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்களோடு வாழக்கிடைத்தது பாக்கியமே புகழ் சுமந்திரன் இன்னும் ஒரு 5  வருசம் அரசியல் பரப்பில் இருந்தாலே போதும்.. வடக்குக் கிழக்கு பூரண சிங்கள.. பெளத்த மயமாகிடும்.

கடந்த 2009 இல் இருந்து.. சுமந்திரன் சம்பந்தன்.. வகையறாக்கள் தமிழ் மக்களுக்கு ஆற்றிய பணியே இதுதானே.

எந்த உலகப் பரப்பில்.. சிங்கள பெளத்த ஆதிக்கம் இலங்கையில் தமிழர் பூர்வீக நிலத்தில் நடக்குது.. அதை தடுத்து நிறுத்துக்கோண்ணு இவர்கள் தொடர் விண்ணப்பத்தை வைச்சிருக்கினம். வைக்கேல்லையே.. மாறாக தேவையில்லாத 13.. 13+..13-, ஒத்த நாடு.. எல்லாரும் ஒண்டுக்கு இருங்கோ.. இதை தானே சொல்லிக்கிட்டு இருக்கினம்.

இப்படியே போனா. 20 வருசம் தேவையில்லை. கோத்தாவின் இந்த ஆட்சி முடிவதற்குள் வடக்குக் கிழக்கு பூரண சிங்கள பெளத்த பூமி ஆகிடும். சம் சும் கும்பலின்.. ஆதரவு.. நல்லாட்சி அரசிலும் இதற்கு குறைவிருக்கவில்லை.. வேகம் மத்திமமானதை தவிர. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.