Jump to content

விடைகொடு எங்கள் நாடே' பாடிய பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார்


Recommended Posts

 

'விடைகொடு எங்கள் நாடே' பாடிய பாடகர் மாணிக்க விநாயகம் விடை பெற்றார். ஆழ்ந்த இரங்கல்!
பாடகரும், நடிகரும் , இசையமைப்பாளருமான மாணிக்க விநாயகம் அவர்கள் மறைந்த செய்தியினை முகநூல் வாயிலாக அறிந்தேன். இளம் நடிகர்கள் பலரின் படங்களுக்கு இவர் பாடிய பாடல்களைக் கேட்டபோது நான் அவரை ஓரிளைஞராகவே எண்ணியிருந்தேன். பின்னரே அவர் திரைத்துறைக்குப் பாட வந்ததே அவரது ஐம்பது வயதில் என்பதையறிந்து வியந்தேன். ஆழ்ந்த இரங்கல்.
இவர் பிரபல நாட்டிய ஆசிரியராக விளங்கிய வழுவூர் பி.இராமையாப்பிள்ளையின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரது நினைவாக அவர் பற்றியதொரு காணொளி. இக்காணொளியிலுள்ள பாடல் இவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுடன் இணைந்து பாடிய பாடல். மிகுந்த வரவேற்பைப்பெற்ற பாடல். 'கன்னத்தில் முத்தமிட்டால் ' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்:
 
 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் ......!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல். 

நான் இந்த பாடல் எம் எஸ் வி பாடியது என நினைத்திருந்தேன்.

Link to comment
Share on other sites

23 minutes ago, goshan_che said:

ஆழ்ந்த இரங்கல். 

நான் இந்த பாடல் எம் எஸ் வி பாடியது என நினைத்திருந்தேன்.

எம்.எஸ்.வி, மாணிக்கவிநாயகம், பால்ராம்,  வெபி(Febi) மணி, ஏ ஆர். ரெகானா ஆகியோர் சேர்ந்து பாடியுள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாவுக்கு புகழஞ்சலி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

காந்தக் குரல் மாணிக்க விநாயகம் மறைவு!

spacer.png

 

பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் உடல்நலக் குறைவு காரணமாக 26.12.2021 அன்று மாலை சென்னையில் காலமானார்.

பரதநாட்டிய ஆசிரியர் வழுவூர் இராமையா பிள்ளை மகன் மாணிக்க விநாயகம். மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். தொழில்முறையில் நாட்டுப்புறப் பாடல்களும், பக்தி பாடல்களைப் பாடியதன் மூலம் அடித்தட்டு மக்கள் வரை, இவரது பாடல்கள் சென்றடைந்தது.

தமிழ் சினிமாவில் எண்ணற்ற பின்னணிப் பாடகர்கள் இருந்தபோதிலும் மறைந்த சிதம்பரம் ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், டி.ஆர்.மகாலிங்கம் ஆகியோர் குரல்கள் தனித்துவமானது, காந்தம் போன்று பாடலைக் கேட்போரைக் கட்டிப் போடும் வலிமைமிக்கது.

அவர்களுக்குப் பின் மாணிக்க விநாயகம் சினிமாவில் பாடியது, நடித்தது குறைவு என்றாலும் ஒவ்வொரு பாடலும் காலம் கடந்து மனித மனங்களைக் கொள்ளை கொள்ளக்கூடிய காந்த குரலுக்குச் சொந்தக்காரர் அவர்.

2001ஆம் ஆண்டு வெளியான ‘தில்’ படத்தின் மூலம் மாணிக்க விநாயகம் தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். விக்ரம் - ஜோதிகா நடிப்பில் தரணி இயக்கிய இந்தப் படத்தில் இடம்பெறும் ‘கண்ணுக்குள்ள கெளுத்தி’ என்கிற பாடலை பாடியதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் மாணிக்க விநாயகம்.

இதையடுத்து எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் அருண் விஜய், ஷாம் நடிப்பில் வெளியான இயற்கை படத்தில் இடம்பெறும் ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு’ என்கிற பாடலும் மாணிக்க விநாயகம் பாடியதுதான். காதல் தோல்வியின் வலியைக் கேட்பவர்களும் உணரும் வண்ணம் தன்னுடைய காந்தக் குரலின் மூலம் வலியைக் கடத்தி இருப்பார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இவர் பாடிய ’விடைகொடு எங்கள் நாடே’ என்கிற பாடல் இன்றளவும் கேட்டால் மனித மனங்களைக் கலங்க வைத்து, சிலிர்ப்பை ஏற்படுத்தும். இந்தப் பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் உடன் இணைந்து பாடியிருந்தார் மாணிக்க விநாயகம்.

லிங்குசாமி இயக்கத்தில் 2002ஆம் ஆண்டு வெளியான ரன் படத்தில் ‘தேரடி வீதியில்’ என்கிற பாடலை பாடியிருந்தார். இந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டானது.

பேரரசு இயக்கத்தில் விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் இடம்பெறும் ‘கட்டுக் கட்டு கீர கட்டு’ என்கிற பாடலை பாடியவரும் மாணிக்க விநாயகம்தான்.

அமீர் இயக்கத்தில் வெளியான பருத்தி வீரன் படத்தில் இடம்பெறும் ரொமாண்டிக் பாடலான ‘ஐயய்யோ’ பாடல் இவரின் குரல் மூலம் ரசிகர்கள் மனதில் ஓங்கி ஒலித்தது என்றே சொல்லலாம்.

இதுதவிர ரஜினிகாந்த், நயன்தாரா நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் இடம்பெறும் ‘கொக்கு பற பற’ போன்று தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார் மாணிக்க விநாயகம்.

நடிக்க முடியாது என்று மறுத்து வந்தவரை இயக்குநர் சுப்பிரமணியம் சிவா இயக்கிய திருடா திருடி படத்தில் நடுத்தர வயதுடைய அப்பாவாக அறிமுகப்படுத்தினார். அவர் நடிகராக அறிமுகமான முதல் படம் தமிழ் சினிமாவில் வணிகரீதியாகப் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய வெற்றிப்படமானது.

அதனைத் தொடர்ந்து வேட்டைக்காரன், வா, குவாட்டர் கட்டிங், யுத்தம் செய், பேரழகன், திமிரு, கிரி, கள்வனின் காதலி, பலே பாண்டியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், “பல பாடல்களைப் பாடி, துன்பமானாலும், துள்ளலானாலும் தனது குரல் வளத்தால் ரசிகர்களுக்கு விருந்தளித்தவர். தலைவர் கலைஞர் மீதும் என் மீதும் அன்பைப் பொழிந்து, பெயரைப் போலவே பண்பிலும் மாணிக்கமாக ஒளிர்ந்த அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

https://minnambalam.com/entertainment/2021/12/27/14/singer-manicka-vinayakam-passes-away

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த் இரங்கல்கள்
யுத்தம் செய் மிஸ்கினின் திரில்லர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.
என்பீல்ட் நாகபூசணி அம்மன் வெளியிட்ட பல  இசை தட்டுகளில் ஐயாவின் பாடல்கள் பல உள்ளன.
இந்த மண் உங்களுக்கு விடை கொடுக்கின்றது,  ஆத்மா சாந்தி அடையட்டும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.