Jump to content

தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு


Recommended Posts

தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு

 

 

 

இணைப்பிற்கு நன்றி தம்பி நுணாவில்.


தமிழரசு கட்சியும்.....தமிழர் விடுதலை கூட்டணியும்......தமிழர் கூட்டமைப்பும் ஈழத்தமிழர்களுக்கு செய்த துரோகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

நான் அப்பவே சொன்னேன்   உந்த  கறுப்பு சட்டை போட்ட அப்புக்காத்துமார்களினால் தான் தமிழினமே அழிந்தது என்று....நான் சொன்னால் யார் கேட்கின்றார்கள்? 😂

சேர் பொன் இராமநாதனாம்......அவர் தொடக்கி வைச்ச அழிவு இன்று வரைக்கும் தொடர்கின்றது.......அன்று ஒரு ஈழத்து ஜின்னா இருந்திருந்தால் எமக்கெல்லாம் இந்த அழிவுகள் வந்திருக்குமா? :cool:

Link to comment
Share on other sites

23 hours ago, குமாரசாமி said:

நான் அப்பவே சொன்னேன்   உந்த  கறுப்பு சட்டை போட்ட அப்புக்காத்துமார்களினால் தான் தமிழினமே அழிந்தது என்று....நான் சொன்னால் யார் கேட்கின்றார்கள்? 😂

நீங்கள் சத்தமாக சொல்லேல்ல போல. அதுதான் யாரும் கேட்கேல்லப் போல. 🤭🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

"மக்களுக்கு தேசியம் பற்றிய சிந்தனை குறைந்துவிட்டது"

"தமிழர் என்ற அடையாளத்தோடு வாழ வேண்டும் என்ற சிந்தனை எங்களில் பெரும்பாலானோருக்கு இல்லாமல் போய்விட்டது"

1000 வீதம் உண்மை!

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, shanthy said:

நீங்கள் சத்தமாக சொல்லேல்ல போல. அதுதான் யாரும் கேட்கேல்லப் போல. 🤭🤣

சத்தமாய் சொன்னாலும் சொல்லாட்டிலும் உண்மை அதுதான்....:cool:

முககவசம் வடிவுக்கு போடுறேல்லை பாதுகாப்புக்கு.......சண்கிளாசை தலைக்கு மேலை தூக்கி விடுற மாதிரி  இப்ப மாஸ்கை தாடைக்கு கீழை இறக்கி.....ஸ்டையிலாக்கும்.😂

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

சத்தமாய் சொன்னாலும் சொல்லாட்டிலும் உண்மை அதுதான்....:cool:

முககவசம் வடிவுக்கு போடுறேல்லை பாதுகாப்புக்கு.......சண்கிளாசை தலைக்கு மேலை தூக்கி விடுற மாதிரி  இப்ப மாஸ்கை தாடைக்கு கீழை இறக்கி.....ஸ்டையிலாக்கும்.😂

ஏதோ இந்த உலகத்துக்கு சொல்ல வாறியள் கோதாரி எனக்கு தான் விளங்கேல்ல. வித்தியாசதரனின் பேச்சுக்கு கொரோனா பாதுகாப்பு எச்சரிக்கை சொல்றீங்கள்.😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நன்னிச் சோழன் said:

"மக்களுக்கு தேசியம் பற்றிய சிந்தனை குறைந்துவிட்டது"

"தமிழர் என்ற அடையாளத்தோடு வாழ வேண்டும் என்ற சிந்தனை எங்களில் பெரும்பாலானோருக்கு இல்லாமல் போய்விட்டது"

1000 வீதம் உண்மை!

 

 

வயிறு பசிக்கும்போது, (பைபிள்) போதனை செவியில் ஏறாது என்பதுதான் நியதி. ☹️

Link to comment
Share on other sites

3 hours ago, Kapithan said:

வயிறு பசிக்கும்போது, (பைபிள்) போதனை செவியில் ஏறாது என்பதுதான் நியதி. ☹️

இரத்தின சுருக்கமான,  குறியீட்டு வரிகள். நன்றி கபிதன். ஆனால்,  போதனை செய்பவர்கள் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு சுக போகத்துடன் வாழ்பவர்களாதலால் நீங்கள் சொன்ன ஜதார்த்தத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kapithan said:

வயிறு பசிக்கும்போது, (பைபிள்) போதனை செவியில் ஏறாது என்பதுதான் நியதி. ☹️

பசி வந்தபோதும்  கச்சையை  எவரும்  களட்டி  வீசுவதில்லை

Link to comment
Share on other sites

12 hours ago, நன்னிச் சோழன் said:

"தமிழர் என்ற அடையாளத்தோடு வாழ வேண்டும் என்ற சிந்தனை எங்களில் பெரும்பாலானோருக்கு இல்லாமல் போய்விட்டது"

சந்திரிகா சனாதிபதியாக இருந்த போது, சரியாக ஞாபகமில்லை, ஒரு பிக்கு என்று எண்ணுகிறேன், சிங்கள அரசுக்கு அறிவுரை செய்த செய்தியை மட்டும் வாசித்த ஞாபகமுள்ளது. "தமிழர்கள் கேட்பதைக் கொடுத்துவிடுங்கள், அவர்கள் கிடைத்ததை வாங்கிப் பங்குபோட்டுக்கொள்ள முடியாமல், தங்களுக்குள் அடிபட்டுக், குத்துப்பட்டு வாங்கியதைத் திரும்பவும் தாம்பாளத்தில் வைத்து எங்களிடமே கொண்டுவந்து தருவார்கள்".   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

பசி வந்தபோதும்  கச்சையை  எவரும்  களட்டி  வீசுவதில்லை

நீங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால் தேசியம் என்பது கச்சையா அல்லது (பைபிள்) போதனையா என்பதை   இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பவர்கள் கூறுவதுதான் சரியானதாக இருக்கும் என நம்புகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

நீங்கள் கூறுவது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கலாம். ஆனால் தேசியம் என்பது கச்சையா அல்லது (பைபிள்) போதனையா என்பதை   இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பவர்கள் கூறுவதுதான் சரியானதாக இருக்கும் என நம்புகிறேன்.

 

நான் கச்சை  என்று  குறிப்பிட்டது

தமிழரின்  ஆகக்குறைந்த சுயமரியாதையை...

தமிழர்கள்  இதை  இழக்கவேமாட்டார்கள்

அவ்வாறு  நீங்கள் எதிர்பார்ப்பது  அல்லது  நினைப்பதே மாபெரும்  தவறு  தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேசியம் சிதைவதற்கு மக்களைக் குறை சொல்லும் வித்தி போன்ற ஊடகவியலாளர் சுமத்திரன் போன்ற அரசியல்வாதிகளுக்குகாவடி எடுக்கிறதை விட்டு விட்டு மக்களுக்குத் தேசியத்தை போதிக்கலாமே!

Link to comment
Share on other sites

4 hours ago, Kapithan said:

   இலங்கையில் போரால் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பவர்கள் கூறுவதுதான் சரியானதாக இருக்கும் என நம்புகிறேன்.

 

அவர்கள் வாய்பேச முடியாத குரலற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் குரலாக நாங்கள் தான் முடிவு எடுப்போம். பசித்த வயிற்றுக்கு தான் தெரியும் அதன் பெறுமதி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, விசுகு said:

நான் கச்சை  என்று  குறிப்பிட்டது

தமிழரின்  ஆகக்குறைந்த சுயமரியாதையை...

தமிழர்கள்  இதை  இழக்கவேமாட்டார்கள்

அவ்வாறு  நீங்கள் எதிர்பார்ப்பது  அல்லது  நினைப்பதே மாபெரும்  தவறு  தான்.

 

சுயமரியாதையை இழக்க யாரும் விரும்புவதில்லை என்பது உண்மைதான்  விசுகர். சுயமரியாதையை இழக்கச் சொல்லி யாரும்கோரப்போவதும் இல்லை. 

ஆனால் அங்குள்ளவர்களுக்கு அதனை நாங்கள் போதிக்க முடியாது. தேவையோடிருப்பவர்களுக்கு தேவையானவற்றைச் செய்து முடித்த பின்னர் அதனை நாங்கள் கூற முடியும். 

முல்லைத்தீவு பக்கமாக ஒருதரம் போய் வந்தபின்னர் இதனைக் கூறுவது நன்று. 

Link to comment
Share on other sites

பிரஜாவுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்த தமிழ்ப் பிரதிநிதிகள்.
16.11.1952 வெளியான சுதந்திரன் பத்திரிகையில் இலங்கைப் பாராளுமன்றத்து மேற்படி பிரஜாவுரிமைச் சட்டத்தை ஆதரித்து, எதிர்த்து வாக்களித்த தமிழ்ப்பிரதிகளின் விபரங்கள் வெளியாகியுள்ளன. இது பற்றிச் சுதந்திரனில் வெளியான சிறு தகவற் குறிப்பினையே இங்கு காண்கின்றீர்கள்.

 

269608970_10158513235473372_174261652226

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2021 at 20:43, nunavilan said:

தமிழ் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி கழுத்தில் சைனட் கட்டியது தப்பு! பகிரங்க குற்றச்சாட்டு

அப்படின்னா.. அந்த தமிழ் மக்களுக்கு.. தமிழ் தேசியப் பரப்பில் போதிய அறிவூட்டாமைக்கு.. பல பேப்பர்களின் சொந்தக்காரரான தங்களின் பங்களிப்பு என்ன மாதிரி வித்தியாதரன்..???!

தமிழ் மக்களில் ஒரு தொகுதிக்கு.. உலகத்தில என்ன நடக்குன்னே தெரியாது. பிறந்தமா.. வளர்ந்தமா.. வாழ்ந்தமா.. செத்தமான்னு இருக்குதுங்க. அதுகளுக்கு நீங்கள் எதனையும் போதிக்க முடியாது. 

ஆனால்.. சிங்களவர்களோடு வாழக்கிடைத்தது வாழ்வின் பெரும் பாக்கியமே கூட்டத்திடமிருந்து மக்களுக்கு தமிழ் தேசிய உணர்வு ஊட்டப்படும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது. அது உங்களின் தெருக்கடை நண்பராக இருப்பினும்.. வித்தியாதரன். இதனையும் நீங்கள் உள்வாங்கிட்டுப் பேசனும்.

ஏன்னா.. நீங்களோ.. உங்கள் குடும்பமோ.. நஞ்சு மாலை சுமக்கவில்லை.. கருவி மாலை சுமக்கவில்லை.. சுமந்தவர்கள் இன்று துன்பமாலை தான் சுமக்கிறார்கள்.. அவர்களை சுமந்தவர்களுக்கும் அதே தான் கதி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Kapithan said:

வயிறு பசிக்கும்போது, (பைபிள்) போதனை செவியில் ஏறாது என்பதுதான் நியதி. ☹️

 

4 hours ago, Kapithan said:

சுயமரியாதையை இழக்க யாரும் விரும்புவதில்லை என்பது உண்மைதான்  விசுகர. சுயமரியாதையை இழக்கச் சொல்லி யாரும்கோரப்போவதும் இல்லை. 

இதில் எந்தக் கருத்து சரியாது 

Just now, Kandiah57 said:

 

இதில் எந்தக் கருத்து சரியாது 

சரயானது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kandiah57 said:

 

இதில் எந்தக் கருத்து சரியாது 

சரயானது 

கந்தையர்,

எனக்கென்னமோ நீங்கள் பழைய / வேறு கறளை இங்கே தீர்ப்பதாகத் தோன்றுகிறது.

எனது யூகம் சரியா ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
19 hours ago, Kapithan said:

வயிறு பசிக்கும்போது, (பைபிள்) போதனை செவியில் ஏறாது என்பதுதான் நியதி. ☹️

ஐயனே,
வாழவே வழியில்லாதபோது தேசியம் ஏன் எனக் கேட்கிறீர்கள். ஓம், நியாயம் உள்ளதுதான். எம்மக்களில் சில பேர் அவ்வாறு உள்ளனர்.

யாழில் அங்கயன் வென்றுள்ளார். ஆனால், யாழில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு தாங்கள் சொல்வது பொருந்தாதே! அவர்கள் ஏன் தேசியத்தை விட்டனர்?  

சம நேரத்தில், வாழ உத்தினை வசதியும் இருந்தும் தன்னின அடையாளங்களை தொலைத்துவிட்டு, அதை மீட்டெடுக்க வசதிகள் இருந்தும் செய்யாமல், தாம் வாழும் இடத்தின் இனத்தோடு கரைந்து போய் வாழும் கொழும்புத் தமிழர்கள், பல புலம்பெயர் தமிழர்களின் இளந்தலைமுறைகளுக்கு (மப்பிள் நாட்டில் வாழும் பலதுக்கு மாவீரர் நாள் என்றாலே என்னவென்று தெரியாது! நான் நேரடியாகக் கண்டது) தாங்கள் சொல்வது பொருந்தாதே! 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நன்னிச் சோழன் said:

ஐயனே,
வாழவே வழியில்லாதபோது தேசியம் ஏன் எனக் கேட்கிறீர்கள். ஓம், நியாயம் உள்ளதுதான். எம்மக்களில் சில பேர் அவ்வாறு உள்ளனர்.

யாழில் அங்கயன் வென்றுள்ளார். ஆனால், யாழில் வாழும் பெரும்பாலான மக்களுக்கு தாங்கள் சொல்வது பொருந்தாதே! அவர்கள் ஏன் தேசியத்தை விட்டனர்?  

சம நேரத்தில், வாழ உத்தினை வசதியும் இருந்தும் தன்னின அடையாளங்களை தொலைத்துவிட்டு, அதை மீட்டெடுக்க வசதிகள் இருந்தும் செய்யாமல், தாம் வாழும் இடத்தின் இனத்தோடு கரைந்து போய் வாழும் கொழும்புத் தமிழர்கள், பல புலம்பெயர் தமிழர்களின் இளந்தலைமுறைகளுக்கு (மப்பிள் நாட்டில் வாழும் பலதுக்கு மாவீரர் நாள் என்றாலே என்னவென்று தெரியாது! நான் நேரடியாகக் கண்டது) தாங்கள் சொல்வது பொருந்தாதே! 

 

 

நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றாய் கலந்து குழப்பிக்கொள்கிறீர்கள்.

இங்கே எவருமே தேசியத்தைக் கைவிட வேண்டும் எனக் கூறவில்லை. தேசியத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அன்றாட தேவைகளுக்காக, நாளாந்தம்  அலைந்து திரியும் அழிந்துபோன எம் மக்களுக்கு கொடுப்பதில்லை என்பதுதான் இங்கே தொக்கி நிற்கும் விடயம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+
2 minutes ago, Kapithan said:

நீங்கள் எல்லாவற்றையும் ஒன்றோடு ஒன்றாய் கலந்து குழப்பிக்கொள்கிறீர்கள்.

இங்கே எவருமே தேசியத்தைக் கைவிட வேண்டும் எனக் கூறவில்லை. தேசியத்திற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, அன்றாட தேவைகளுக்காக, நாளாந்தம்  அலைந்து திரியும் அழிந்துபோன எம் மக்களுக்கு கொடுப்பதில்லை என்பதுதான் இங்கே தொக்கி நிற்கும் விடயம். 

 

ஐயனே,
என்னைப் பொறுத்தவரை நான் தெளிவாகத்தான் வினவுகிறேன். அதாவது,

  1. நான் முதலில் அந்த கதைத்தவர் கூறியவற்றை மேற்கோள்காட்டி '1000 வீதம் உண்மை' என்றேன்.
  2. நீங்கள் அதை மேற்கோளிட்டு 'வாழ வழியில்லாதபோது தேசியம் பற்றிக் கவலைப்படமாட்டினம்' என்ற பொருள்பட கருத்தெளுதினீர்கள். 
  3. நான் அதை மேற்கோளிட்டு 'வாழ வழியுள்ளவர்களும் ஏன் தேசியத்தைக் கைவிட்டனர்' என்று வினவினேன்.

மேலும் நான் தங்களிடம் 'தேசியத்தைக் கைவிட வேண்டும்' என்ற பொருள்படும் மறுப்பறுப்பினை முன்வைக்கவில்லை. நீங்கள் 'வாழ வழியில்லாதபோது தேசியம் பற்றிக் கவலைப்படமாட்டினம்' என்றபோது, ஏன் வாழ வழியுள்ளவர்கள் விட்டார்கள் என்றே வினவுகிறேன்!

தெளிவான கேள்வி, தாங்கள் கூறியதை வைத்து!

 

Link to comment
Share on other sites

5 hours ago, நன்னிச் சோழன் said:

ஐயனே,
என்னைப் பொறுத்தவரை நான் தெளிவாகத்தான் வினவுகிறேன். அதாவது,

  1. நான் முதலில் அந்த கதைத்தவர் கூறியவற்றை மேற்கோள்காட்டி '1000 வீதம் உண்மை' என்றேன்.
  2. நீங்கள் அதை மேற்கோளிட்டு 'வாழ வழியில்லாதபோது தேசியம் பற்றிக் கவலைப்படமாட்டினம்' என்ற பொருள்பட கருத்தெளுதினீர்கள். 
  3. நான் அதை மேற்கோளிட்டு 'வாழ வழியுள்ளவர்களும் ஏன் தேசியத்தைக் கைவிட்டனர்' என்று வினவினேன்.

மேலும் நான் தங்களிடம் 'தேசியத்தைக் கைவிட வேண்டும்' என்ற பொருள்படும் மறுப்பறுப்பினை முன்வைக்கவில்லை. நீங்கள் 'வாழ வழியில்லாதபோது தேசியம் பற்றிக் கவலைப்படமாட்டினம்' என்றபோது, ஏன் வாழ வழியுள்ளவர்கள் விட்டார்கள் என்றே வினவுகிறேன்!

தெளிவான கேள்வி, தாங்கள் கூறியதை வைத்து!

 

“வயிறு பசிக்கும் போது”, என்று @Kapithan கூறியது மக்களின் வாழ்வு நிலை சம்பந்தப்பட்டதாக கூறிய குறியீடு. அதை நேரடியாக பசி என்று  பொருள் கொள்ளக் கூடாது.

தேசியம் தன்னாட்சி என்று தீவிர நிலை எடுத்தவர்கள் மக்களின் பாதுகாப்பு குறித்த அக்கறையை எந்த காலத்திலும் செலுத்தவில்லையென்பதுடன் இனியும்  செலுத்தமாட்டார்கள்,   என்பதை மக்கள் நன்கு அறிவார்கள். 

வாழ வேண்டிய வயதில் தமது பிள்ளைகளுக்கு விளக்கு வைக்கவேண்டிய நிலையை தீவிர தமிழ் தேசியர்கள் உருவாக்குவார்களே தவிர, தமது பிள்ளைகளின் தியாகத்தை பலமாக கொண்டு தமிழ் தேசியத்தை வலுப்படுத்தமாட்டார்கள்.  மாறாக அதை விழலுக்கிறைத்த நீராக்குவர். தமது( தமக்குள்) வெட்டி வீர கதைகள் கூறி/ எழுதி பொழுது போக்கவே  தமது பிள்ளைகளின் அர்பணிப்பை உபயோகிப்பரே தவிர, அவர்களின் அர்ப்பணிப்பை பொறுப்புடணச்சியுடன் உணர மாட்டார்கள்,  என்பதை மக்கள் தமது பட்டறிவு மூலம் புரிந்து கொண்டனர். 

விட்டில் பூச்சிகள் போல் மீண்டும் விளக்கில் வந்து விழும் முட்டாள்களாக இருக்க மக்கள் தயாரில்லை என்பது தான் நிதர்சனம். 

இன்று புலம் பெயர் நாடுகளில் ஓவராக சவுண்டு விடும் பல so call தமிழ் தேசியர்கள் கூட இப்படியான விடயங்களில் நேரத்தை செலவிட்டு தமது சொந்த பிள்ளைகள் கல்வியில் சிறிதளவு பின்னடைவைக் கூட சந்திக்கக் கூடாது,  என்பதில் மிக உறுதியாக இருப்பதை மக்கள் நேரடியாகக் காண்கிறார்கள். 

ஆகவே தமிழ் தேசியத்தை விரும்பும் மக்கள் கூட தீவிர தமிழ் தேசியம் என்று வாய்சசவடால் விடுபவர்கள் குறித்து அச்சப்படுகிறார்கள் என்பதே உண்மை. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? - ஏஐ ரோபோவிடம் ஜோதிடம் கேட்ட தமிழிசை 16 APR, 2024 | 02:27 PM   தென்சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ரோபோவிடம் கலந்துரையாடினார்: தமிழிசை: வணக்கம் என் பெயர் தமிழிசை சவுந்தரராஜன். ஏஐ ரோபோ: எனக்கு நன்றாகவே தெரியும். இரண்டு மாநில ஆளுநர் பதவியை விட்டுவிட்டு, மக்கள் பணியாற்ற வந்துள்ளீர்கள். உங்கள் மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். தமிழிசை: பாஜகவுக்கும், தமிழ் மொழிக்கும் உள்ள உறவு எப்படி இருக்கிறது? ஏஐ ரோபோ: தமிழ் மொழிக்கு பாஜக தரும் முக்கியத்துவம் மக்களை கவர்ந்துள்ளது. தற்போதைய தேர்தல் அறிக்கையில் தமிழக கட்சிகளே இதுவரை கொடுக்காத தமிழை மேன்மைப்படுத்தும் வாக்குறுதிகள், தமிழ் மக்களை கவரும். அதனால், தமிழ் வளரும். தமிழிசை: தென் சென்னை தொகுதியில் எனக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? ஏஐ ரோபோ: தென்சென்னை மக்கள் நல்ல திட்டங்களுக்காக ஏங்குகிறார்கள். உங்களால் தான் அதனை தர முடியும் என்று நம்புகிறார்கள். நிச்சயம் வெற்றி பெறுவீர்கள். வாழ்த்துகள். தென்சென்னைக்கு அக்கா வந்தாச்சி. முன்னேற்ற வேலையை ஆரம்பிச்சாச்சி. ஏஐ ரோபோவுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. https://www.virakesari.lk/article/181229
    • அது சரிதான். எனக்கும் கோபம் எதுவும் இல்லை.  தாபம் இருக்கு - ஆனால் உங்கள் மேல் அல்ல, ஜான்வி கபூர், அனுபமா பரமேஸ்வரன், ராஷ்மிக்கா மந்தானா……. ஆனால் ஒருவர் மீது கோபப்பட என்றே கருத்துக்களம் வரும் போக்கும், சம்பந்தபட்டவர்களே பெரிதாய் எடுக்காதவற்றிக்காக கதறுவதும், கொஞ்சம் OCD & OTT யாக தெரிந்தது, அதையே சொன்னேன்.
    • எனக்கு மட்டும் அல்ல துணைக்கும் தயார் படுத்தல் செய்வதால் தான் தொடர்ந்து ஏகபத்தினி விரதனாக இருக்க முடிகிறது.😜
    • பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் - அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் - காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டிஸ் மருத்துவர் Published By: RAJEEBAN   16 APR, 2024 | 11:40 AM   சமீபத்தில் காசாவிலிருந்து திரும்பிய பிரிட்டனை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தான் யுத்தத்தினால் காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரகிசிச்சை செய்ததாக தெரிவித்துள்ளார். காயமடைந்த பெருமளவு சிறுவர்களிற்கு சத்திரசிகிச்சை செய்தேன் அந்த எண்ணிக்கை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். 16 வயதிற்கு உட்பட்ட பலருக்கு சத்திரசிகிச்சை செய்ததாக தெரிவித்துள்ள அவர் அவர்களில் பலர் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள் எனவும் தெரிவித்துள்ளார். துப்பாக்கி சூட்டு காயங்கள் எரிகாயங்கள் ஏனைய காயங்களால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சிகிச்சையளித்தேன் என அவர்தெரிவித்துள்ளார். போதிய உணவு இன்மையால் காசாவில் காயமடைந்தவர்களின் காயங்கள் குணமாவது பிரச்சினைக்குரிய விடயமாக காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ள அவர் காசாவில் மருத்துவமபணியில் ஈடுபட்டிருந்தவேளை என்னை விட வயது கூடிய ஒருவருக்கு மாத்திரமே -53 -சத்திரகிசிச்சைசெய்தேன் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் ஏனையவர்கள் அனைவரும் என்னை விட வயது குறைந்தவர்கள் பலர் 16வயதிற்கு உட்பட்டவர்கள் அதிகளவானவர்கள் ஆறுவயதிற்கு உட்பட்டவர்கள்இது அதிக கவலையளித்தது என அவர்தெரிவித்துள்ளார். எரிகாயங்கள் துப்பாக்கிசூட்டு காயங்கள்  திசுக்களில் காணப்பட்ட வேறு பொருட்களை அகற்றுதல் முகங்களில் காணப்பட்ட பாதிப்புகளை சத்திரகிசிச்சை மூலம் சரிசெய்தல் தாடையில் காணப்பட்ட துப்பாக்கி ரவைகளை அகற்றுதல் போன்றவற்றில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். காசாவில் பட்டினி நிலைமை எவ்வேளையிலும் உருவாகலாம் என ஐநா எச்சரித்துள்ளது போதிய உணவின்மை காணப்படுகின்றது  இதன் காரணமாக காயமடைந்தவர்கள் நோயாளிகள் அதிலிருந்து உடனடியாக மீள்வது கடினமாக உள்ளது என  என மருத்துவர் விக்டோரியா ரோஸ் தெரிவித்துள்ளார். எனது சத்திரசிகிச்சை மேசையில் காணப்பட்டவர்கள் போசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181212
    • "முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     "இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் இரவு மெல்ல கீழே இறங்க இனிய விடியலில் நானும் எழும்ப இருவானரமும் ஒருமழலையும் இறங்கும் நேரமிது!"   "சிறிய கால்களின் காலடி ஓசை சிறுவர் அறையில் மெல்ல ஒலிக்க சிரமப்பட்டு திறக்கும் கதவின் ஒலி, சித்தம் குளிர என்னைத் தழுவுது!"   "கூடத்தில் இருந்த விளக்கில் பார்க்கிறேன் கூரையில் இருந்து படிக்கட்டில் இறங்கினம் கூத்தாடி கண்ணனுடன் நடன ராதை கூற்றுவன் பறித்த அம்மம்மாவாய் வாறா!"   "அம்மம்மாவின் பெயரை தனது ஆக்கி பத்தாம் நினைவாண்டில் பிறந்த 'ஜெயா' பெரிய தம்பி 'கலை'யின் கைபிடித்து எதோ ரகசியம் இருவரும் பேசினம்!"   "அம்மாவின் நெஞ்சில் சாய்ந்த படி குட்டிமழலை 'இசை' யும் பின்னால் வாரான் என் மடியில் படுத்து சிரிக்கிறான் ஆட்டி ஆட்டி நித்திரை ஆக்கிறேன்!"   "சில கிசுகிசு, பின்னர் மௌனம் சின்னஞ் சிறுசுகள் ஒன்றாய் சேர்ந்து சிறுசதி ஒன்றைத் திட்டமிடுகிறார்கள் சிறுஆச்சரியம் தந்து மகிழ்ச்சி தரவே!"   "படிக்கட்டில் இருந்து திடீரென விரைந்து பதுங்கி இரண்டு கதவால் வந்து பகலோன் நேரே வந்தது போல பக்கத்தில் வந்து திகைக்க வைத்தனர்!"   "மடியின் மேல் 'இசை'க்கு முத்தமிட்டு மற்றவர் நாற்காலியின் கையில் எற மடக்கி பிடித்தனர் தப்ப முடியவில்லை மத்தியில் அகப்பட்டு மருண்டு விழிக்கிறேன் !"   "முத்தங்களால் என்னை விழுங்கி விட முதுகில் ஒருவர் ஏறிக் கொள்ள முழக்கமிட்டு மற்றவர் துள்ளிக் குதிக்க முனிவராய் இருந்தவனுக்கு சொர்க்கம் காட்டினர்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.