Jump to content

ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா!

என்.கே.அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

 

spacer.png

எதிர்வரும்  பெப்ரவரி வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு 89 வயது கழிந்து, தனது 90வது ஆண்டில் அவர் அடியெடுத்து வைக்க இருக்கிறார். பிரித்தானிய முடியின் கீழான கொலனியாக இலங்கை இருந்தபோது பிறந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன். டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பிறந்தவர். இலங்கை 1948ல் சுதந்திரம் பெறும் போது அவருக்கு 15 வயது கழிய ஒரு நாள் குறைவு.

இலங்கைச் சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியாக பணிபுரிந்த அவர், 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில், தனது 44 ஆவது வயதில், திருகோணமலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்கிறார். 1983 செப்டெம்பரில் பாராளுமன்ற ஆசனத்தை இழந்த இரா. சம்பந்தன், அதன் பின்னர் 1989, மற்றும் 1994 தேர்தல்களில் தோல்வியடைந்திருந்தார்.

1994 ஆம் ஆண்டு தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்த சட்டத்தரணி அருணாசலம் தங்கத்துரை, 1997 ஜூலை 5 ஆம் திகதி திருகோணமலை ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி நிகழ்வில் கலந்துகொண்டு வௌியேறும் போது அடையாளமறியா நபர்களினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகள்தான் படுகொலை செய்தார்கள் என்று பொலிஸ் விசாரணைகள் குறிப்பிட்டிருந்தன. அருணாசலம் தங்கத்துரையின் படுகொலையின் பின், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு 1997ஆம் ஆண்டு சம்பந்தன் நியமிக்கப்பட்டார். 1983ஆம் ஆண்டு பாராளுமன்ற ஆசனத்தை இழந்த சம்பந்தன் 1997 ஆம் ஏறத்தாழ 14 ஆண்டுகளின் பின் பாராளுமன்றம் ஏகினார். மறுபடியும் 2000ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட சம்பந்தன், 2001ஆம் ஆண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் 2004, 2010, 2015, மற்றும் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். 2015 – டிசெம்பர் 2018 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததன் மூலம், அந்தப் பதவியை வகித்த இரண்டாவது தமிழர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார். தனது 89 வருட வாழ்வில் 29 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார் இரா. சம்பந்தன்.

இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றின் முக்கிய காலகட்டங்கள், திருப்பு முனைகள் என்பவற்றை நேரடியாகப் பார்த்த, அதில் பலவற்றில் பங்காளியாக இருந்த பழுத்த அனுபவம் மிக்க தலைவர் இரா. சம்பந்தன் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதுபோலவே பாராளுமன்ற மரபுகளை, நடைமுறைகளை நன்கறிந்த, அனுபவம் மிக்க சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுள் இரா. சம்பந்தன் முக்கியமானவர் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இன்று கூட அவர் பாராளுமன்றத்தில் எழுந்து உரையாற்றினால், அந்த உரை பெருமளவிற்கு அமைதியாக கேட்கப்படுமளவிற்கு மதிப்பு மிக்க மனிதராகவே அவர் பார்க்கப்படுகிறார். அண்மை ஆண்டுகளில் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சந்தர்ப்பங்கள் குறைவு என்றாலும், அவர் ஆற்றியிருந்த ஒரு சில உரைகள் கூட ஆழமானதாகவும், அர்த்தபுஷ்டியுள்ளவையாகவும் அமைந்திருந்தன.

அவரது சில பாராளுமன்ற உரைகள், இலங்கைப் பாராளுமன்றம் கண்ட ஆகச் சிறந்த உரைகள் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும் தகை மிக்கவை. ஆனால் தற்போது அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதில்லை என்பது மட்டுமல்ல, பாராளுமன்றத்திற்கு செல்வது கூட மிகக் குறைவு என்பது வருத்தத்திற்குரிய விடயமாக இருக்கிறது.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பை அளவிடும் சுயாதீன இணையத்தளமான மந்த்ரி.எல்கே பங்களிப்பு அளவீடுகளின் படி சம்பந்தன் அவர்களை 225 உறுப்பினர்களில், 219வது இடத்தில் தரமிட்டுள்ளது. இந்த முறை சம்பந்தன் அவர்கள் வெறும் 3 முறையே பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது.

கொவிட்-19 அபாயம், அவரது வயது மூப்பு, உடல்நிலை என சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காததற்கு பல நியாயங்களும், காரணகாரியங்களும் சொல்லப்படலாம். அவை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் முதற் கடமை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளுதலாகும். அதற்காகத்தான் அவர்கள் மக்கள் பணத்தில் ஊதியம் பெறுகிறார்கள். பாராளுமன்ற அமர்விலும், செயற்பாடுகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காவிட்டால், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதன் நோக்கமும், பயனும்தான் என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

பாராளுமன்ற உறுப்பினருக்கு சம்பளம், பலவகைமைப்பட்ட கொடுப்பனவுகள், தனிப்பட்ட ஊழியர்கள் சிலருக்கான சம்பளங்கள், ஒவ்வோர் அமர்விலும் கலந்துகொள்ள கொடுப்பனவு, குறைந்த விலையில் பாராளுமன்றத்தில் உணவு, அவர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என ஏகப்பட்ட சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அளவு போதுமானதா இல்லையா என்ற விவாதம் ஒருபுறமிருக்க, பெறும் சம்பளத்திற்கும், சலுகைகளுக்கும் ஏற்ற பங்களிப்பை அவர்கள் வழங்குகிறார்களா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. குறிப்பாக இரா. சம்பந்தன் அவர்களைப் போன்ற பழுத்த அனுபவமிக்க பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஒருவேளை பலர் சொல்வது போல அவர் வயத மூப்பின் காரணமாக, அல்லது உடல்நிலையின் காரணமாக கலந்துகொள்ள முடியாத நிலையிலிருக்கிறார் என்றால், அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற விரும்பாவிட்டாலும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ஓய்வுபெற்று திருக்கோணமலையில் இன்னொரு இளம் அரசியல்வாதிக்கு வாய்ப்பளித்தலே உசிதமான காரியம்.

44 வயதில் பாராளுமன்றத்திற்கு வந்த இரா. சம்பந்தன், 89 வயதிலும், தன்னால் திருகோணமலை மக்களுக்கு களத்தில் நின்று முழுமையாகப் பணி செய்ய முடியாத நிலையிலும் கூட தனது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இறுகப்பற்றிக் கொண்டிருப்பது நியாயமா என்ற கேள்வியை அவரும், அவரது ஆதரவாளர்களும் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

அண்மையில் சம்பந்தன் அவர்கள் ஓய்வுபெற வேண்டும் என்ற கருத்து அதிகமாகப் பேசப்படும் நிலையில், “வசதிகளை அனுபவிப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காகவே அரசியலுக்கு வந்தவன் நான். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதை பெறாமல் அரசியலில் இருந்து நான் விடைபெறப் போவதில்லை” என்ற பகட்டாரவாரப் பதிலை வழங்கியிருந்தார். அரசியலிலிருந்து விலகுவதும், விலகாமல் இருப்பதும் அவர் விருப்பத்தின் பாற்பட்டது. ஆனால், பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ச்சியாகப் பங்குபற்ற முடியாத நிலையில்,  திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக மக்களை தொடர்ந்து சந்தித்து தனது கடமைகளை ஆற்ற முடியாத நிலையில் அவர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைத்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு விடயமல்ல.

அவரது அனுபவமும், அறிவும், அதன்பாலான ஆலோசனைகளும் தமிழர் அரசியலுக்கு தேவையான உரம். ஆனால் அவரது பங்களிப்பு அந்தளவில் அமைவதுதான் காலத்திற்கேற்றது. சம்பந்தன் அவர்களுக்கு பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிடும் வாய்ப்புள்ளது, அவர் ஓய்வுபெற்றால் அடுத்த தலைவர் யாரென்ற பிரச்சினை வரும் போன்றவை சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பதற்கான நியாயமாக காரணங்கள் அல்ல. சம்பந்தன் அவர்கள் அரசியலில் தொடரும் வரைதான் மேற்சொன்ன பிரச்சினைகள் ஏற்படாது என்பது, மேற்சொன்ன பிரச்சினைகளுக்கு தீர்வல்ல, மாறாக பிரச்சினையின் தீவிரத்தை தள்ளிப்போடும் வழி மட்டும்தான்.

தனது மிகநீண்ட அரசியல் வாழ்வில் தமிழர் அரசியலுக்கு கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ள சம்பந்தன் அவர்களின் சிறப்பை வரலாறு சொல்லும், ஆனால் அந்த வரலாற்றில் அவர் இளைஞர்களுக்கு வழிவிடாது, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தானே தன் இறுதிவரை பற்றிக்கொண்டிருந்தார் என்பது ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிடக்கூடாது.

சம்பந்தன் ஐயா, நீங்கள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை அரசியலில் இருக்க விரும்பினால், கூட்டமைப்பின் தலைவராக, ஆலோசகராக, வழிகாட்டியாக இருங்கள். ஆனால் பாராளுமன்றத்திற்கே போகாமல் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது ஏற்புடையதல்ல. யாழ்ப்பாணத்திற்கு அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளை அறிமுகப்படுத்திய நீங்கள், திருகோணமலை யில் அதைச் செய்யவில்லை. இனியும் அந்த திருகோணமலை ஆசனத்தை நீங்கள் பற்றிக்கொண்டிருந்தால், திருகோணமலை மக்கள் வரும் தேர்தலில் உங்களைத் தோற்கடித்து அதை உங்களுக்குப் புரிய வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆட்படுவர். அது தமிழருக்கும், தமிழர் அரசியலுக்கும் அழகானதொன்றாக இருக்காது.

ஆகையால் ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா!

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஓய்வு-பெறுங்கள்-சம்பந்தன்-ஐயா/91-288032

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சம்பந்தர்…. 89 வயது மட்டும், தமிழ் இனத்திற்காக,

மாடாக உழைத்து… ஓடாக தேய்ந்து போனார். 🤪

மிச்சத்தை… சுமந்திரன் பார்த்துக் கொள்வான்(ர்) 😂

இனியாவது… நீங்கள்  ஒய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்?

- மாவை, சுமந்திரன், ஸ்ரீதரன் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்?

- மாவை, சுமந்திரன், ஸ்ரீதரன் -

மாவையும், சுமந்திரனும்… பென்சன் எடுக்கிற வயசு தானே…… 😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுடைய வயது காரணமாக அவர் ஓய்வு பெறுவது சிறந்ததாகக் கூறப்பட்டாலும் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு(தற்போதைய சூழலில் ) அவர் அரசியலில் இருப்பதுதான் நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

சம்பந்தனுடைய வயது காரணமாக அவர் ஓய்வு பெறுவது சிறந்ததாகக் கூறப்பட்டாலும் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு(தற்போதைய சூழலில் ) அவர் அரசியலில் இருப்பதுதான் நன்று.

இப்ப கொஞ்ச நாளா தம்பி ஒரு மார்க்கமாத்தான் போறாரு.

49 minutes ago, தமிழ் சிறி said:

மாவையும், சுமந்திரனும்… பென்சன் எடுக்கிற வயசு தானே…… 😂🤣

போட்ட முதல இன்னமும் எடுக்கல.

1 hour ago, goshan_che said:

அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்?

- மாவை, சுமந்திரன், ஸ்ரீதரன் -

இவர்கள் அடிபட்டு சாகாமல் இருக்க வேண்டுமென்றால் அவர் இருந்தாகணும்.

5 hours ago, தமிழ் சிறி said:

பாவம் சம்பந்தர்…. 89 வயது மட்டும், தமிழ் இனத்திற்காக,

மாடாக உழைத்து… ஓடாக தேய்ந்து போனார். 🤪

மிச்சத்தை… சுமந்திரன் பார்த்துக் கொள்வான்(ர்) 😂

இனியாவது… நீங்கள்  ஒய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா. 🤣

அவருக்கும் விருப்பம் தான்.

ஆனாலும் மக்கள் தீக்குளித்தா என்ன செய்வது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மாவையும், சுமந்திரனும்… பென்சன் எடுக்கிற வயசு தானே…… 😂🤣

திமுகவில் இதுதான் இளைஞர் அணித்தலைவர் ஆக சரியான வயசு🤣.

ஆகவே ஆகலும் பிந்தி போடாமல், வயசு குறைவெண்டு பாக்காமல் மாவை ஐயா போன்ற துடிப்புள்ள இளைஞர்களிடம் தலைமை பொறுப்பை கொடுத்து சம்பந்தன் ஐயா இளம் தலைவர்களுக்கு வழி விட வேண்டும்.

29 minutes ago, Kapithan said:

சம்பந்தனுடைய வயது காரணமாக அவர் ஓய்வு பெறுவது சிறந்ததாகக் கூறப்பட்டாலும் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு(தற்போதைய சூழலில் ) அவர் அரசியலில் இருப்பதுதான் நன்று.

சித்திர குப்தனின் அக்கவுண்டை hack பண்ணினால்தான் உண்டு 🤣.

18 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர்கள் அடிபட்டு சாகாமல் இருக்க வேண்டுமென்றால் அவர் இருந்தாகணும்.

இல்லை - பிரிஞ்சால் மூவருக்கும் ஆபத்து. மாவைக்கு பெயரளவில் அதிகாரத்தை கொடுத்து சும் பூந்து விளாடப்பாப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஷோக்பரன் நல்ல நோக்கத்தில் தான் சொல்கிறார். ஆனால், கூட்டமைப்பிற்குள் நிகழும் சாதாரண விடயங்களைக் கூட தங்கள் தீவிர தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்துவதற்குப் பாவிக்க ஒரு குழு எப்பவும் காத்திருக்கும்.

சம்பந்தர் பாராளுமன்றம் போய் பேசுவதால் மேலதிக நன்மைகள் எதுவும் கிடைத்துவிடாது, எனவே அதனால் இழப்பில்லை. ஆனால், ஒரு figurehead ஆக அவர் தான் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சிக்கு இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சம்பந்தனுடைய வயது காரணமாக அவர் ஓய்வு பெறுவது சிறந்ததாகக் கூறப்பட்டாலும் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு(தற்போதைய சூழலில் ) அவர் அரசியலில் இருப்பதுதான் நன்று.

கட்டுரையும். அரசியலில் இருக்கும்படி தான் சொல்லுது......பதில் எழுதும் போது நன்றாக வாசித்து விளங்கிய பின் எழுதவும்     பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கும்படி. கேட்கின்றார்கள்.   ...சரியான கேள்வி இல்லையா  ?

2 hours ago, Justin said:

ஒரு figurehead ஆக அவர் தான் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சிக்கு இருக்க வேண்டும். 

ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kandiah57 said:

 

ஏன்?

பிராண்ட் பெறுமதி. சம்பந்தர் விலகினால் அடுத்து கூட்டமைப்பு சார்பில் உலகத்திற்கு முகமாக இருக்கப் போகிறவர்கள் இரு வகையினர்: 1. முயற்சிகள் செய்து சர்ச்சைக்குள்ளாவோர், 2. முயற்சியெதுவும் செய்யாமல் சர்ச்சைக்குள்ளாகாமல் இருப்போர்.

இந்த இரு தரப்பினரையும் உலகம் தமிழர்களின் முகமாகப் பார்க்காமல் இருக்க, சம்பந்தரின் தலைமை அவசியம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Justin said:

பிராண்ட் பெறுமதி. சம்பந்தர் விலகினால் அடுத்து கூட்டமைப்பு சார்பில் உலகத்திற்கு முகமாக இருக்கப் போகிறவர்கள் இரு வகையினர்: 1. முயற்சிகள் செய்து சர்ச்சைக்குள்ளாவோர், 2. முயற்சியெதுவும் செய்யாமல் சர்ச்சைக்குள்ளாகாமல் இருப்போர்.

இந்த இரு தரப்பினரையும் உலகம் தமிழர்களின் முகமாகப் பார்க்காமல் இருக்க, சம்பந்தரின் தலைமை அவசியம்! 

நீங்கள் ஒரு டொக்டர் இப்படி சொல்லக்கூடாது காரணம் உயிர் மரணம் அடையும் எனபது உங்களுக்கு ஐயம்திரிபுறத்தெரியும்.   அடிபாடு.  கருத்து வேறுபாடு   எங்கேயும் எப்போதும் இருக்கும் அதற்காக 89 வயோதிபரை  அவசியம் என்று கூறக்கூடாது.   தொடர்ச்சியாக இளம் தலைவர்களை உருவாக்குவது அவசியம் என்று கூறலாம் இல்லையா   ? ஜேர்மனியில் அடிக்கடி கூறுவது உண்டு பயிற்சி ஒருவரை திறமைசாலியாக மாற்றும்    உதாரணம் சொன்னால்   ஜேர்மனியில் முதலாவது பந்து அடி அணியில் 18 குறுப்புண்டு  இவ்வருடம் 15...16...17...18....ஆம் இடத்தில் உள்ளது அடுத்த வருடம் 1...2...3....என வரும்    காரணம் பயிற்ச்சியாளர் மற்றும் பயிற்சி ஆகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

பயிற்சி ஒருவரை திறமைசாலியாக மாற்றும்    உதாரணம் சொன்னால்   ஜேர்மனியில் முதலாவது பந்து அடி அணியில் 18 குறுப்புண்டு  இவ்வருடம் 15...16...17...18....ஆம் இடத்தில் உள்ளது அடுத்த வருடம் 1...2...3....என வரும்    காரணம் பயிற்ச்சியாளர் மற்றும் பயிற்சி ஆகும். 

திறமைகளை பயிற்சி செய்து மேலும் மேலும் மேம்படுத்த முடியும் கந்தையா அண்ணா  பயிற்சி பற்றி சொன்னதை முழுமையாக ஏற்று கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

பிராண்ட் பெறுமதி. சம்பந்தர் விலகினால் அடுத்து கூட்டமைப்பு சார்பில் உலகத்திற்கு முகமாக இருக்கப் போகிறவர்கள் இரு வகையினர்: 1. முயற்சிகள் செய்து சர்ச்சைக்குள்ளாவோர், 2. முயற்சியெதுவும் செய்யாமல் சர்ச்சைக்குள்ளாகாமல் இருப்போர்.

இந்த இரு தரப்பினரையும் உலகம் தமிழர்களின் முகமாகப் பார்க்காமல் இருக்க, சம்பந்தரின் தலைமை அவசியம்! 

நான் நினைக்கின்றேன் என்னைப்போல் சம்பந்தரோடு பல மேடைகளில் நேருக்கு நேர் சந்தித்து கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்த மனிதர்கள் யாழ்களத்தில் இல்லை என்று.......

நான் என்றுமே அவர்களுக்கு ஆதரவாளானகாவே இருந்துள்ளேன். சம்பந்தன் அனுபவம் உள்ள அரசியல் தலைவர். சர்வதேச அரசியல் வட்டாரங்களில் தெரிந்த முகம்.2009க்கு பின்னர் ஈழத்தமிழர் பிரச்சனையென்றால் சர்வதேச வட்டாரத்திற்கு தெரிந்த ஒரே விலாசம் சம்பந்தன் மட்டுமே.அது மட்டுமில்லாமல் எதிர்க்கட்சி கதிரை கூட அவருக்கு வந்து போயுள்ளது. அதன் பலமோ கொஞ்ச நஞ்சமல்ல.....ஈழத்தமிழர் பிரச்சனை சம்பந்தமாக இவரை மட்டுமே சர்வதேசம் இது வரைக்கும் சந்தித்துள்ளது. இவர் நினைத்திருந்தால் சிங்கள இனவாத அரசிற்கு 2012லையே சர்வதேச ஆதரவுடன் பல முட்டுக்கட்டைகளை போட்டிருக்கலாம். இவர் நினைத்திருந்தால் நல்லாட்சி காலத்திலையே பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். 

புலிகளின் பயங்கரவாதத்தை அடக்குங்கள் அரசியல் ரீதியாக தீர்வு காண்போம். இந்த வசனம் யாருக்காவது ஞாபகம் இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

கட்டுரையும். அரசியலில் இருக்கும்படி தான் சொல்லுது......பதில் எழுதும் போது நன்றாக வாசித்து விளங்கிய பின் எழுதவும்     பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கும்படி. கேட்கின்றார்கள்.   ...சரியான கேள்வி இல்லையா  ?

ஏன்?

உங்களுக்கு என்ன பிரச்சனை  கந்தையர்?

அடசியலில் இருப்பதற்கும்(😏) நாடாழுமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் இடையிலான வேறுபாடு தெரியாதா உங்களுக்கு? 

தெரியாவிட்டால் தெரிந்துகொள்ளுங்கள். 

15 hours ago, goshan_che said:

திமுகவில் இதுதான் இளைஞர் அணித்தலைவர் ஆக சரியான வயசு🤣.

ஆகவே ஆகலும் பிந்தி போடாமல், வயசு குறைவெண்டு பாக்காமல் மாவை ஐயா போன்ற துடிப்புள்ள இளைஞர்களிடம் தலைமை பொறுப்பை கொடுத்து சம்பந்தன் ஐயா இளம் தலைவர்களுக்கு வழி விட வேண்டும்.

சித்திர குப்தனின் அக்கவுண்டை hack பண்ணினால்தான் உண்டு 🤣.

இல்லை - பிரிஞ்சால் மூவருக்கும் ஆபத்து. மாவைக்கு பெயரளவில் அதிகாரத்தை கொடுத்து சும் பூந்து விளாடப்பாப்பார்.

பிரம்மச் சுவடி என்ர பரணிலதான் இருக்கு சோசான் 🤣🤣

16 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப கொஞ்ச நாளா தம்பி ஒரு மார்க்கமாத்தான் போறாரு.

ஏதோ ஒரு மாற்றம் வரப்போகின்றது என்கிற  நம்பிக்கைதான் பிரியன். வேறென்ன,சம்பந்தன் எனக்கு என்ன உறவு முறையானவரா...? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

ஏதோ ஒரு மாற்றம் வரப்போகின்றது என்கிற  நம்பிக்கைதான் பிரியன். 

கடல் வத்தும்…. என்று, குடல் வத்தி செத்துதாம்… கொக்கு. 😂 🐟  🦢 🦆 🦥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கடல் வத்தும்…. என்று, குடல் வத்தி செத்துதாம்… கொக்கு. 😂🐟  🦢🦆🦥

நீங்கள் கூறுவதும் உண்மைதான்  சிறி. ஆனால் இறுதியில்  நாங்கள் எல்லோரும் மனிதர்கள்தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நீங்கள் கூறுவதும் உண்மைதான்  சிறி. ஆனால் இறுதியில்  நாங்கள் எல்லோரும் மனிதர்கள்தானே. 

சரி அப்ப நாங்களும் குடல் வற்றி சாவம் எண்டுறியள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//“வசதிகளை அனுபவிப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காகவே அரசியலுக்கு வந்தவன் நான். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதை பெறாமல் அரசியலில் இருந்து நான் விடைபெறப் போவதில்லை” என்ற பகட்டாரவாரப் பதிலை வழங்கியிருந்தார்.//

 

👆இது அதுல்ல..👇

எல்லா கோட்டையும் அழிங்க... நா முதல்ல இருந்து சாப்புடுரன்…😂😂

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

உங்களுக்கு என்ன பிரச்சனை  கந்தையர்?

அடசியலில் இருப்பதற்கும்(😏) நாடாழுமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் இடையிலான வேறுபாடு தெரியாதா உங்களுக்கு? 

தெரியாவிட்டால் தெரிந்துகொள்ளுங்கள். 

எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை இலங்கைப் பாராளுமன்றத்துக்கும்  வயோதிபர் இல்லத்திற்க்கும். வேறுபாடு தெரியவில்லை உங்களால் விளக்கம் தர முடியுமா  ?வழக்கம் போல அரைகுறையாக வாசித்து விட்டு  பதில் எழுதவும் 🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை இலங்கைப் பாராளுமன்றத்துக்கும்  வயோதிபர் இல்லத்திற்க்கும். வேறுபாடு தெரியவில்லை உங்களால் விளக்கம் தர முடியுமா  ?வழக்கம் போல அரைகுறையாக வாசித்து விட்டு  பதில் எழுதவும் 🤣😂

என்னை அரை குறை என்று கூறுகிறீர்களா கந்தையர் ? யோசிக்காதீர்கள், நான் உங்களை அவ்வாறு கூறமாட்டேன். 😉

1) அடுத்த ஓரிரு வருடங்களுக்குள் இலங்கையில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கிறேன்.

2) அவ்வாறான சூழலில் முதிர்ந்த, எல்லாத் தரப்பினர்களினாலும் ( எங்களைத் தவிர 🤪) ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு முதிர்ந்த அரசியல் தலைவராக உள்ள ஒருவர் எங்களுக்குத் தேவை என நம்புகிறேன். 

இந்தக் காரணங்களுக்காகத்தான் தற்சமயம் சம்பந்தன் அரசியலிலும் நாடாளுமன்றத்திலும் இருக்க வேண்டும்  என கூறுகிறேன். 

(அதுசரி, சம்பந்தன் அரசியலில் இருந்து விலகினால் சுமந்திரன்தான் அந்த இடத்தை நிரப்பப்போகிறார் என நம்புகிறேன். இது உங்களுக்கு உவப்பானதா கான்டியா ? [கான்டியா; கந்தையாவை ஆங்கிலத்தில் உச்சரித்துப் பார்த்தேன் அம்புட்டுதே 😉]

 

 

6 hours ago, Eppothum Thamizhan said:

சரி அப்ப நாங்களும் குடல் வற்றி சாவம் எண்டுறியள்! 

நிச்சயமாக 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

என்னை அரை குறை என்று கூறுகிறீர்களா கந்தையர் ? யோசிக்காதீர்கள், நான் உங்களை அவ்வாறு கூறமாட்டேன். 😉

1) அடுத்த ஓரிரு வருடங்களுக்குள் இலங்கையில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கிறேன்.

2) அவ்வாறான சூழலில் முதிர்ந்த, எல்லாத் தரப்பினர்களினாலும் ( எங்களைத் தவிர 🤪) ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு முதிர்ந்த அரசியல் தலைவராக உள்ள ஒருவர் எங்களுக்குத் தேவை என நம்புகிறேன். 

இந்தக் காரணங்களுக்காகத்தான் தற்சமயம் சம்பந்தன் அரசியலிலும் நாடாளுமன்றத்திலும் இருக்க வேண்டும்  என கூறுகிறேன். 

(அதுசரி, சம்பந்தன் அரசியலில் இருந்து விலகினால் சுமந்திரன்தான் அந்த இடத்தை நிரப்பப்போகிறார் என நம்புகிறேன். இது உங்களுக்கு உவப்பானதா கான்டியா ? [கான்டியா; கந்தையாவை ஆங்கிலத்தில் உச்சரித்துப் பார்த்தேன் அம்புட்டுதே 😉]

 

சாகும் வரைக்கும் விசுவாசம்......வாழ்க வளர்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

சாகும் வரைக்கும் விசுவாசம்......வாழ்க வளர்க.

எதி விசுவாசம் என்று கூறுங்கள்  கு சாமியார்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

எதி விசுவாசம் என்று கூறுங்கள்  கு சாமியார்? 

சாகும் வரைக்கும் ஐயாவின்ரை காலை சுத்தி சுத்தியே வருவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சாகும் வரைக்கும் ஐயாவின்ரை காலை சுத்தி சுத்தியே வருவம்.

நான்  எழுதியதை திரும்பவும் ஒருமுறை  வாசியுங்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.