Jump to content

ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா!

என்.கே.அஷோக்பரன்

Twitter: @nkashokbharan

 

spacer.png

எதிர்வரும்  பெப்ரவரி வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு 89 வயது கழிந்து, தனது 90வது ஆண்டில் அவர் அடியெடுத்து வைக்க இருக்கிறார். பிரித்தானிய முடியின் கீழான கொலனியாக இலங்கை இருந்தபோது பிறந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன். டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பிறந்தவர். இலங்கை 1948ல் சுதந்திரம் பெறும் போது அவருக்கு 15 வயது கழிய ஒரு நாள் குறைவு.

இலங்கைச் சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியாக பணிபுரிந்த அவர், 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலில், தனது 44 ஆவது வயதில், திருகோணமலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்கிறார். 1983 செப்டெம்பரில் பாராளுமன்ற ஆசனத்தை இழந்த இரா. சம்பந்தன், அதன் பின்னர் 1989, மற்றும் 1994 தேர்தல்களில் தோல்வியடைந்திருந்தார்.

1994 ஆம் ஆண்டு தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்த சட்டத்தரணி அருணாசலம் தங்கத்துரை, 1997 ஜூலை 5 ஆம் திகதி திருகோணமலை ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி நிகழ்வில் கலந்துகொண்டு வௌியேறும் போது அடையாளமறியா நபர்களினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகள்தான் படுகொலை செய்தார்கள் என்று பொலிஸ் விசாரணைகள் குறிப்பிட்டிருந்தன. அருணாசலம் தங்கத்துரையின் படுகொலையின் பின், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு 1997ஆம் ஆண்டு சம்பந்தன் நியமிக்கப்பட்டார். 1983ஆம் ஆண்டு பாராளுமன்ற ஆசனத்தை இழந்த சம்பந்தன் 1997 ஆம் ஏறத்தாழ 14 ஆண்டுகளின் பின் பாராளுமன்றம் ஏகினார். மறுபடியும் 2000ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட சம்பந்தன், 2001ஆம் ஆண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் 2004, 2010, 2015, மற்றும் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். 2015 – டிசெம்பர் 2018 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததன் மூலம், அந்தப் பதவியை வகித்த இரண்டாவது தமிழர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார். தனது 89 வருட வாழ்வில் 29 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார் இரா. சம்பந்தன்.

இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றின் முக்கிய காலகட்டங்கள், திருப்பு முனைகள் என்பவற்றை நேரடியாகப் பார்த்த, அதில் பலவற்றில் பங்காளியாக இருந்த பழுத்த அனுபவம் மிக்க தலைவர் இரா. சம்பந்தன் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதுபோலவே பாராளுமன்ற மரபுகளை, நடைமுறைகளை நன்கறிந்த, அனுபவம் மிக்க சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுள் இரா. சம்பந்தன் முக்கியமானவர் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இன்று கூட அவர் பாராளுமன்றத்தில் எழுந்து உரையாற்றினால், அந்த உரை பெருமளவிற்கு அமைதியாக கேட்கப்படுமளவிற்கு மதிப்பு மிக்க மனிதராகவே அவர் பார்க்கப்படுகிறார். அண்மை ஆண்டுகளில் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சந்தர்ப்பங்கள் குறைவு என்றாலும், அவர் ஆற்றியிருந்த ஒரு சில உரைகள் கூட ஆழமானதாகவும், அர்த்தபுஷ்டியுள்ளவையாகவும் அமைந்திருந்தன.

அவரது சில பாராளுமன்ற உரைகள், இலங்கைப் பாராளுமன்றம் கண்ட ஆகச் சிறந்த உரைகள் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும் தகை மிக்கவை. ஆனால் தற்போது அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதில்லை என்பது மட்டுமல்ல, பாராளுமன்றத்திற்கு செல்வது கூட மிகக் குறைவு என்பது வருத்தத்திற்குரிய விடயமாக இருக்கிறது.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பை அளவிடும் சுயாதீன இணையத்தளமான மந்த்ரி.எல்கே பங்களிப்பு அளவீடுகளின் படி சம்பந்தன் அவர்களை 225 உறுப்பினர்களில், 219வது இடத்தில் தரமிட்டுள்ளது. இந்த முறை சம்பந்தன் அவர்கள் வெறும் 3 முறையே பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது.

கொவிட்-19 அபாயம், அவரது வயது மூப்பு, உடல்நிலை என சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காததற்கு பல நியாயங்களும், காரணகாரியங்களும் சொல்லப்படலாம். அவை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் முதற் கடமை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளுதலாகும். அதற்காகத்தான் அவர்கள் மக்கள் பணத்தில் ஊதியம் பெறுகிறார்கள். பாராளுமன்ற அமர்விலும், செயற்பாடுகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காவிட்டால், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதன் நோக்கமும், பயனும்தான் என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

பாராளுமன்ற உறுப்பினருக்கு சம்பளம், பலவகைமைப்பட்ட கொடுப்பனவுகள், தனிப்பட்ட ஊழியர்கள் சிலருக்கான சம்பளங்கள், ஒவ்வோர் அமர்விலும் கலந்துகொள்ள கொடுப்பனவு, குறைந்த விலையில் பாராளுமன்றத்தில் உணவு, அவர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என ஏகப்பட்ட சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அளவு போதுமானதா இல்லையா என்ற விவாதம் ஒருபுறமிருக்க, பெறும் சம்பளத்திற்கும், சலுகைகளுக்கும் ஏற்ற பங்களிப்பை அவர்கள் வழங்குகிறார்களா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. குறிப்பாக இரா. சம்பந்தன் அவர்களைப் போன்ற பழுத்த அனுபவமிக்க பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஒருவேளை பலர் சொல்வது போல அவர் வயத மூப்பின் காரணமாக, அல்லது உடல்நிலையின் காரணமாக கலந்துகொள்ள முடியாத நிலையிலிருக்கிறார் என்றால், அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற விரும்பாவிட்டாலும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ஓய்வுபெற்று திருக்கோணமலையில் இன்னொரு இளம் அரசியல்வாதிக்கு வாய்ப்பளித்தலே உசிதமான காரியம்.

44 வயதில் பாராளுமன்றத்திற்கு வந்த இரா. சம்பந்தன், 89 வயதிலும், தன்னால் திருகோணமலை மக்களுக்கு களத்தில் நின்று முழுமையாகப் பணி செய்ய முடியாத நிலையிலும் கூட தனது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இறுகப்பற்றிக் கொண்டிருப்பது நியாயமா என்ற கேள்வியை அவரும், அவரது ஆதரவாளர்களும் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

அண்மையில் சம்பந்தன் அவர்கள் ஓய்வுபெற வேண்டும் என்ற கருத்து அதிகமாகப் பேசப்படும் நிலையில், “வசதிகளை அனுபவிப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காகவே அரசியலுக்கு வந்தவன் நான். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதை பெறாமல் அரசியலில் இருந்து நான் விடைபெறப் போவதில்லை” என்ற பகட்டாரவாரப் பதிலை வழங்கியிருந்தார். அரசியலிலிருந்து விலகுவதும், விலகாமல் இருப்பதும் அவர் விருப்பத்தின் பாற்பட்டது. ஆனால், பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ச்சியாகப் பங்குபற்ற முடியாத நிலையில்,  திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக மக்களை தொடர்ந்து சந்தித்து தனது கடமைகளை ஆற்ற முடியாத நிலையில் அவர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைத்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு விடயமல்ல.

அவரது அனுபவமும், அறிவும், அதன்பாலான ஆலோசனைகளும் தமிழர் அரசியலுக்கு தேவையான உரம். ஆனால் அவரது பங்களிப்பு அந்தளவில் அமைவதுதான் காலத்திற்கேற்றது. சம்பந்தன் அவர்களுக்கு பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிடும் வாய்ப்புள்ளது, அவர் ஓய்வுபெற்றால் அடுத்த தலைவர் யாரென்ற பிரச்சினை வரும் போன்றவை சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பதற்கான நியாயமாக காரணங்கள் அல்ல. சம்பந்தன் அவர்கள் அரசியலில் தொடரும் வரைதான் மேற்சொன்ன பிரச்சினைகள் ஏற்படாது என்பது, மேற்சொன்ன பிரச்சினைகளுக்கு தீர்வல்ல, மாறாக பிரச்சினையின் தீவிரத்தை தள்ளிப்போடும் வழி மட்டும்தான்.

தனது மிகநீண்ட அரசியல் வாழ்வில் தமிழர் அரசியலுக்கு கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ள சம்பந்தன் அவர்களின் சிறப்பை வரலாறு சொல்லும், ஆனால் அந்த வரலாற்றில் அவர் இளைஞர்களுக்கு வழிவிடாது, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தானே தன் இறுதிவரை பற்றிக்கொண்டிருந்தார் என்பது ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிடக்கூடாது.

சம்பந்தன் ஐயா, நீங்கள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை அரசியலில் இருக்க விரும்பினால், கூட்டமைப்பின் தலைவராக, ஆலோசகராக, வழிகாட்டியாக இருங்கள். ஆனால் பாராளுமன்றத்திற்கே போகாமல் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது ஏற்புடையதல்ல. யாழ்ப்பாணத்திற்கு அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளை அறிமுகப்படுத்திய நீங்கள், திருகோணமலை யில் அதைச் செய்யவில்லை. இனியும் அந்த திருகோணமலை ஆசனத்தை நீங்கள் பற்றிக்கொண்டிருந்தால், திருகோணமலை மக்கள் வரும் தேர்தலில் உங்களைத் தோற்கடித்து அதை உங்களுக்குப் புரிய வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆட்படுவர். அது தமிழருக்கும், தமிழர் அரசியலுக்கும் அழகானதொன்றாக இருக்காது.

ஆகையால் ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா!

 

 

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ஓய்வு-பெறுங்கள்-சம்பந்தன்-ஐயா/91-288032

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் சம்பந்தர்…. 89 வயது மட்டும், தமிழ் இனத்திற்காக,

மாடாக உழைத்து… ஓடாக தேய்ந்து போனார். 🤪

மிச்சத்தை… சுமந்திரன் பார்த்துக் கொள்வான்(ர்) 😂

இனியாவது… நீங்கள்  ஒய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்?

- மாவை, சுமந்திரன், ஸ்ரீதரன் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்?

- மாவை, சுமந்திரன், ஸ்ரீதரன் -

மாவையும், சுமந்திரனும்… பென்சன் எடுக்கிற வயசு தானே…… 😂🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனுடைய வயது காரணமாக அவர் ஓய்வு பெறுவது சிறந்ததாகக் கூறப்பட்டாலும் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு(தற்போதைய சூழலில் ) அவர் அரசியலில் இருப்பதுதான் நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kapithan said:

சம்பந்தனுடைய வயது காரணமாக அவர் ஓய்வு பெறுவது சிறந்ததாகக் கூறப்பட்டாலும் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு(தற்போதைய சூழலில் ) அவர் அரசியலில் இருப்பதுதான் நன்று.

இப்ப கொஞ்ச நாளா தம்பி ஒரு மார்க்கமாத்தான் போறாரு.

49 minutes ago, தமிழ் சிறி said:

மாவையும், சுமந்திரனும்… பென்சன் எடுக்கிற வயசு தானே…… 😂🤣

போட்ட முதல இன்னமும் எடுக்கல.

1 hour ago, goshan_che said:

அண்ணன் எப்ப சாவான், திண்ணை எப்ப காலியாகும்?

- மாவை, சுமந்திரன், ஸ்ரீதரன் -

இவர்கள் அடிபட்டு சாகாமல் இருக்க வேண்டுமென்றால் அவர் இருந்தாகணும்.

5 hours ago, தமிழ் சிறி said:

பாவம் சம்பந்தர்…. 89 வயது மட்டும், தமிழ் இனத்திற்காக,

மாடாக உழைத்து… ஓடாக தேய்ந்து போனார். 🤪

மிச்சத்தை… சுமந்திரன் பார்த்துக் கொள்வான்(ர்) 😂

இனியாவது… நீங்கள்  ஒய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா. 🤣

அவருக்கும் விருப்பம் தான்.

ஆனாலும் மக்கள் தீக்குளித்தா என்ன செய்வது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

மாவையும், சுமந்திரனும்… பென்சன் எடுக்கிற வயசு தானே…… 😂🤣

திமுகவில் இதுதான் இளைஞர் அணித்தலைவர் ஆக சரியான வயசு🤣.

ஆகவே ஆகலும் பிந்தி போடாமல், வயசு குறைவெண்டு பாக்காமல் மாவை ஐயா போன்ற துடிப்புள்ள இளைஞர்களிடம் தலைமை பொறுப்பை கொடுத்து சம்பந்தன் ஐயா இளம் தலைவர்களுக்கு வழி விட வேண்டும்.

29 minutes ago, Kapithan said:

சம்பந்தனுடைய வயது காரணமாக அவர் ஓய்வு பெறுவது சிறந்ததாகக் கூறப்பட்டாலும் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு(தற்போதைய சூழலில் ) அவர் அரசியலில் இருப்பதுதான் நன்று.

சித்திர குப்தனின் அக்கவுண்டை hack பண்ணினால்தான் உண்டு 🤣.

18 minutes ago, ஈழப்பிரியன் said:

இவர்கள் அடிபட்டு சாகாமல் இருக்க வேண்டுமென்றால் அவர் இருந்தாகணும்.

இல்லை - பிரிஞ்சால் மூவருக்கும் ஆபத்து. மாவைக்கு பெயரளவில் அதிகாரத்தை கொடுத்து சும் பூந்து விளாடப்பாப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஷோக்பரன் நல்ல நோக்கத்தில் தான் சொல்கிறார். ஆனால், கூட்டமைப்பிற்குள் நிகழும் சாதாரண விடயங்களைக் கூட தங்கள் தீவிர தமிழ் தேசிய அரசியலை முன்னிறுத்துவதற்குப் பாவிக்க ஒரு குழு எப்பவும் காத்திருக்கும்.

சம்பந்தர் பாராளுமன்றம் போய் பேசுவதால் மேலதிக நன்மைகள் எதுவும் கிடைத்துவிடாது, எனவே அதனால் இழப்பில்லை. ஆனால், ஒரு figurehead ஆக அவர் தான் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சிக்கு இருக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

சம்பந்தனுடைய வயது காரணமாக அவர் ஓய்வு பெறுவது சிறந்ததாகக் கூறப்பட்டாலும் அடுத்த ஓரிரு வருடங்களுக்கு(தற்போதைய சூழலில் ) அவர் அரசியலில் இருப்பதுதான் நன்று.

கட்டுரையும். அரசியலில் இருக்கும்படி தான் சொல்லுது......பதில் எழுதும் போது நன்றாக வாசித்து விளங்கிய பின் எழுதவும்     பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கும்படி. கேட்கின்றார்கள்.   ...சரியான கேள்வி இல்லையா  ?

2 hours ago, Justin said:

ஒரு figurehead ஆக அவர் தான் தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு கட்சிக்கு இருக்க வேண்டும். 

ஏன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kandiah57 said:

 

ஏன்?

பிராண்ட் பெறுமதி. சம்பந்தர் விலகினால் அடுத்து கூட்டமைப்பு சார்பில் உலகத்திற்கு முகமாக இருக்கப் போகிறவர்கள் இரு வகையினர்: 1. முயற்சிகள் செய்து சர்ச்சைக்குள்ளாவோர், 2. முயற்சியெதுவும் செய்யாமல் சர்ச்சைக்குள்ளாகாமல் இருப்போர்.

இந்த இரு தரப்பினரையும் உலகம் தமிழர்களின் முகமாகப் பார்க்காமல் இருக்க, சம்பந்தரின் தலைமை அவசியம்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Justin said:

பிராண்ட் பெறுமதி. சம்பந்தர் விலகினால் அடுத்து கூட்டமைப்பு சார்பில் உலகத்திற்கு முகமாக இருக்கப் போகிறவர்கள் இரு வகையினர்: 1. முயற்சிகள் செய்து சர்ச்சைக்குள்ளாவோர், 2. முயற்சியெதுவும் செய்யாமல் சர்ச்சைக்குள்ளாகாமல் இருப்போர்.

இந்த இரு தரப்பினரையும் உலகம் தமிழர்களின் முகமாகப் பார்க்காமல் இருக்க, சம்பந்தரின் தலைமை அவசியம்! 

நீங்கள் ஒரு டொக்டர் இப்படி சொல்லக்கூடாது காரணம் உயிர் மரணம் அடையும் எனபது உங்களுக்கு ஐயம்திரிபுறத்தெரியும்.   அடிபாடு.  கருத்து வேறுபாடு   எங்கேயும் எப்போதும் இருக்கும் அதற்காக 89 வயோதிபரை  அவசியம் என்று கூறக்கூடாது.   தொடர்ச்சியாக இளம் தலைவர்களை உருவாக்குவது அவசியம் என்று கூறலாம் இல்லையா   ? ஜேர்மனியில் அடிக்கடி கூறுவது உண்டு பயிற்சி ஒருவரை திறமைசாலியாக மாற்றும்    உதாரணம் சொன்னால்   ஜேர்மனியில் முதலாவது பந்து அடி அணியில் 18 குறுப்புண்டு  இவ்வருடம் 15...16...17...18....ஆம் இடத்தில் உள்ளது அடுத்த வருடம் 1...2...3....என வரும்    காரணம் பயிற்ச்சியாளர் மற்றும் பயிற்சி ஆகும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

பயிற்சி ஒருவரை திறமைசாலியாக மாற்றும்    உதாரணம் சொன்னால்   ஜேர்மனியில் முதலாவது பந்து அடி அணியில் 18 குறுப்புண்டு  இவ்வருடம் 15...16...17...18....ஆம் இடத்தில் உள்ளது அடுத்த வருடம் 1...2...3....என வரும்    காரணம் பயிற்ச்சியாளர் மற்றும் பயிற்சி ஆகும். 

திறமைகளை பயிற்சி செய்து மேலும் மேலும் மேம்படுத்த முடியும் கந்தையா அண்ணா  பயிற்சி பற்றி சொன்னதை முழுமையாக ஏற்று கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

பிராண்ட் பெறுமதி. சம்பந்தர் விலகினால் அடுத்து கூட்டமைப்பு சார்பில் உலகத்திற்கு முகமாக இருக்கப் போகிறவர்கள் இரு வகையினர்: 1. முயற்சிகள் செய்து சர்ச்சைக்குள்ளாவோர், 2. முயற்சியெதுவும் செய்யாமல் சர்ச்சைக்குள்ளாகாமல் இருப்போர்.

இந்த இரு தரப்பினரையும் உலகம் தமிழர்களின் முகமாகப் பார்க்காமல் இருக்க, சம்பந்தரின் தலைமை அவசியம்! 

நான் நினைக்கின்றேன் என்னைப்போல் சம்பந்தரோடு பல மேடைகளில் நேருக்கு நேர் சந்தித்து கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்த மனிதர்கள் யாழ்களத்தில் இல்லை என்று.......

நான் என்றுமே அவர்களுக்கு ஆதரவாளானகாவே இருந்துள்ளேன். சம்பந்தன் அனுபவம் உள்ள அரசியல் தலைவர். சர்வதேச அரசியல் வட்டாரங்களில் தெரிந்த முகம்.2009க்கு பின்னர் ஈழத்தமிழர் பிரச்சனையென்றால் சர்வதேச வட்டாரத்திற்கு தெரிந்த ஒரே விலாசம் சம்பந்தன் மட்டுமே.அது மட்டுமில்லாமல் எதிர்க்கட்சி கதிரை கூட அவருக்கு வந்து போயுள்ளது. அதன் பலமோ கொஞ்ச நஞ்சமல்ல.....ஈழத்தமிழர் பிரச்சனை சம்பந்தமாக இவரை மட்டுமே சர்வதேசம் இது வரைக்கும் சந்தித்துள்ளது. இவர் நினைத்திருந்தால் சிங்கள இனவாத அரசிற்கு 2012லையே சர்வதேச ஆதரவுடன் பல முட்டுக்கட்டைகளை போட்டிருக்கலாம். இவர் நினைத்திருந்தால் நல்லாட்சி காலத்திலையே பல பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டிருக்கலாம். 

புலிகளின் பயங்கரவாதத்தை அடக்குங்கள் அரசியல் ரீதியாக தீர்வு காண்போம். இந்த வசனம் யாருக்காவது ஞாபகம் இருக்கின்றதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kandiah57 said:

கட்டுரையும். அரசியலில் இருக்கும்படி தான் சொல்லுது......பதில் எழுதும் போது நன்றாக வாசித்து விளங்கிய பின் எழுதவும்     பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டுக்கொடுக்கும்படி. கேட்கின்றார்கள்.   ...சரியான கேள்வி இல்லையா  ?

ஏன்?

உங்களுக்கு என்ன பிரச்சனை  கந்தையர்?

அடசியலில் இருப்பதற்கும்(😏) நாடாழுமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் இடையிலான வேறுபாடு தெரியாதா உங்களுக்கு? 

தெரியாவிட்டால் தெரிந்துகொள்ளுங்கள். 

15 hours ago, goshan_che said:

திமுகவில் இதுதான் இளைஞர் அணித்தலைவர் ஆக சரியான வயசு🤣.

ஆகவே ஆகலும் பிந்தி போடாமல், வயசு குறைவெண்டு பாக்காமல் மாவை ஐயா போன்ற துடிப்புள்ள இளைஞர்களிடம் தலைமை பொறுப்பை கொடுத்து சம்பந்தன் ஐயா இளம் தலைவர்களுக்கு வழி விட வேண்டும்.

சித்திர குப்தனின் அக்கவுண்டை hack பண்ணினால்தான் உண்டு 🤣.

இல்லை - பிரிஞ்சால் மூவருக்கும் ஆபத்து. மாவைக்கு பெயரளவில் அதிகாரத்தை கொடுத்து சும் பூந்து விளாடப்பாப்பார்.

பிரம்மச் சுவடி என்ர பரணிலதான் இருக்கு சோசான் 🤣🤣

16 hours ago, ஈழப்பிரியன் said:

இப்ப கொஞ்ச நாளா தம்பி ஒரு மார்க்கமாத்தான் போறாரு.

ஏதோ ஒரு மாற்றம் வரப்போகின்றது என்கிற  நம்பிக்கைதான் பிரியன். வேறென்ன,சம்பந்தன் எனக்கு என்ன உறவு முறையானவரா...? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Kapithan said:

ஏதோ ஒரு மாற்றம் வரப்போகின்றது என்கிற  நம்பிக்கைதான் பிரியன். 

கடல் வத்தும்…. என்று, குடல் வத்தி செத்துதாம்… கொக்கு. 😂 🐟  🦢 🦆 🦥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

கடல் வத்தும்…. என்று, குடல் வத்தி செத்துதாம்… கொக்கு. 😂🐟  🦢🦆🦥

நீங்கள் கூறுவதும் உண்மைதான்  சிறி. ஆனால் இறுதியில்  நாங்கள் எல்லோரும் மனிதர்கள்தானே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

நீங்கள் கூறுவதும் உண்மைதான்  சிறி. ஆனால் இறுதியில்  நாங்கள் எல்லோரும் மனிதர்கள்தானே. 

சரி அப்ப நாங்களும் குடல் வற்றி சாவம் எண்டுறியள்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//“வசதிகளை அனுபவிப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காகவே அரசியலுக்கு வந்தவன் நான். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதை பெறாமல் அரசியலில் இருந்து நான் விடைபெறப் போவதில்லை” என்ற பகட்டாரவாரப் பதிலை வழங்கியிருந்தார்.//

 

👆இது அதுல்ல..👇

எல்லா கோட்டையும் அழிங்க... நா முதல்ல இருந்து சாப்புடுரன்…😂😂

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kapithan said:

உங்களுக்கு என்ன பிரச்சனை  கந்தையர்?

அடசியலில் இருப்பதற்கும்(😏) நாடாழுமன்ற உறுப்பினராக இருப்பதற்கும் இடையிலான வேறுபாடு தெரியாதா உங்களுக்கு? 

தெரியாவிட்டால் தெரிந்துகொள்ளுங்கள். 

எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை இலங்கைப் பாராளுமன்றத்துக்கும்  வயோதிபர் இல்லத்திற்க்கும். வேறுபாடு தெரியவில்லை உங்களால் விளக்கம் தர முடியுமா  ?வழக்கம் போல அரைகுறையாக வாசித்து விட்டு  பதில் எழுதவும் 🤣😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை இலங்கைப் பாராளுமன்றத்துக்கும்  வயோதிபர் இல்லத்திற்க்கும். வேறுபாடு தெரியவில்லை உங்களால் விளக்கம் தர முடியுமா  ?வழக்கம் போல அரைகுறையாக வாசித்து விட்டு  பதில் எழுதவும் 🤣😂

என்னை அரை குறை என்று கூறுகிறீர்களா கந்தையர் ? யோசிக்காதீர்கள், நான் உங்களை அவ்வாறு கூறமாட்டேன். 😉

1) அடுத்த ஓரிரு வருடங்களுக்குள் இலங்கையில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கிறேன்.

2) அவ்வாறான சூழலில் முதிர்ந்த, எல்லாத் தரப்பினர்களினாலும் ( எங்களைத் தவிர 🤪) ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு முதிர்ந்த அரசியல் தலைவராக உள்ள ஒருவர் எங்களுக்குத் தேவை என நம்புகிறேன். 

இந்தக் காரணங்களுக்காகத்தான் தற்சமயம் சம்பந்தன் அரசியலிலும் நாடாளுமன்றத்திலும் இருக்க வேண்டும்  என கூறுகிறேன். 

(அதுசரி, சம்பந்தன் அரசியலில் இருந்து விலகினால் சுமந்திரன்தான் அந்த இடத்தை நிரப்பப்போகிறார் என நம்புகிறேன். இது உங்களுக்கு உவப்பானதா கான்டியா ? [கான்டியா; கந்தையாவை ஆங்கிலத்தில் உச்சரித்துப் பார்த்தேன் அம்புட்டுதே 😉]

 

 

6 hours ago, Eppothum Thamizhan said:

சரி அப்ப நாங்களும் குடல் வற்றி சாவம் எண்டுறியள்! 

நிச்சயமாக 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, Kapithan said:

என்னை அரை குறை என்று கூறுகிறீர்களா கந்தையர் ? யோசிக்காதீர்கள், நான் உங்களை அவ்வாறு கூறமாட்டேன். 😉

1) அடுத்த ஓரிரு வருடங்களுக்குள் இலங்கையில் பல மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கிறேன்.

2) அவ்வாறான சூழலில் முதிர்ந்த, எல்லாத் தரப்பினர்களினாலும் ( எங்களைத் தவிர 🤪) ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு முதிர்ந்த அரசியல் தலைவராக உள்ள ஒருவர் எங்களுக்குத் தேவை என நம்புகிறேன். 

இந்தக் காரணங்களுக்காகத்தான் தற்சமயம் சம்பந்தன் அரசியலிலும் நாடாளுமன்றத்திலும் இருக்க வேண்டும்  என கூறுகிறேன். 

(அதுசரி, சம்பந்தன் அரசியலில் இருந்து விலகினால் சுமந்திரன்தான் அந்த இடத்தை நிரப்பப்போகிறார் என நம்புகிறேன். இது உங்களுக்கு உவப்பானதா கான்டியா ? [கான்டியா; கந்தையாவை ஆங்கிலத்தில் உச்சரித்துப் பார்த்தேன் அம்புட்டுதே 😉]

 

சாகும் வரைக்கும் விசுவாசம்......வாழ்க வளர்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

சாகும் வரைக்கும் விசுவாசம்......வாழ்க வளர்க.

எதி விசுவாசம் என்று கூறுங்கள்  கு சாமியார்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kapithan said:

எதி விசுவாசம் என்று கூறுங்கள்  கு சாமியார்? 

சாகும் வரைக்கும் ஐயாவின்ரை காலை சுத்தி சுத்தியே வருவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

சாகும் வரைக்கும் ஐயாவின்ரை காலை சுத்தி சுத்தியே வருவம்.

நான்  எழுதியதை திரும்பவும் ஒருமுறை  வாசியுங்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.