Jump to content

குட்டி தூக்கத்தால் அதிக பயன்கள் - வல்லுர்கள் வழங்கும் ஆச்சரிய தகவல்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குட்டி தூக்கத்தால் அதிக பயன்கள் - வல்லுர்கள் வழங்கும் ஆச்சரிய தகவல்கள்

5 மணி நேரங்களுக்கு முன்னர்
 

பெண் தூக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நீண்ட வேலை நேரம் - அதில் சில பணிகளை நாம் விரும்பி செய்கிறோம் சிலவற்றை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும், எது எப்படியோ நமது பணிகளின் பட்டியல் நீண்டு கொண்டுதான் செல்கிறது. எனவே நாள் முழுவதும் நமது ஆற்றலை தக்க வைத்து கொள்வது சிரமம்தான்.

கணினியில் இருப்பது போல நமது ஆற்றல் குறையும்போது ஒரு 'ரீஸ்டார்ட் பட்டனை' அழுத்தி மீண்டும் 'சார்ஜ்' செய்து கொண்டால் எப்படியிருக்கும்?

இம்மாதிரியான ஒரு ரீஸ்டார்ட் பட்டனாக 'நாப்' எனப்படும் 'குட்டித்தூக்கம்' இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நாம் இரவு தூக்கத்திலிருந்து விழித்து கொள்ளும் நேரம் முதல் நமது மூளையில் 'அடினோசின்' எனும் ரசாயனம் அதிகரித்து கொண்டே செல்லும்.

எனவே நீங்கள் அதிக நேரம் விழித்து கொண்டிருக்கும்போது உங்கள் மூளையில் அடினோசின் அதிகமாகும். அது தூக்க உணர்வை அதிகரிக்கும்.

"ஆனால் நாம் சிறிது நேரத்திற்கு தூங்கும்போது இந்த அடினோசின் குறைகிறது. எனவே நமது ஆற்றல் அதிகரித்து நாம் விழிப்புடன் இருப்போம்," என்கிறார் லண்டனில் உள்ள 'தி ஸ்லீப்' பள்ளியின் துணை நிறுவனர் கை மீடோவ்ஸ்.

இந்த குட்டித்தூக்கம் என்பது 10-20 நிமிடங்களுக்குட்பட்டதாக இருக்கும்.

ஆனால் இதுவே நாம் நமது நினைவாற்றல், புதுமையான சிந்தனை, புரிந்து கொள்ளும் திறன், ஆராயும் திறன் ஆகியவற்றை மேம்படுத்த குறைந்தது 90 நிமிடங்களாக தூங்க வேண்டும் என்கிறார் 'டேக் எ நேப்; சேங்ஜ் யுவர் லைஃப்' புத்தகத்தின் எழுத்தாளர் சாரா மெட்நிக்.

"இம்மாதிரியாக 60-90 நிமிடங்கள் தூங்கும்போது இரவில் தூங்குவது போன்ற நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன." என்கிறார் சாரா. இவர் தூக்கம் குறித்து கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.

குட்டித்தூக்கத்திற்கான பயிற்சிகள் என்ன?

 

பெண் தூக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குட்டித்தூக்கத்திற்கு மீண்டும் வருவோம். இந்த குட்டித்தூக்கம் என்பது நீச்சல் பயிற்சியில் ஈடுபடுவது போன்றோ அல்லது பைக் ஓட்டுவது போன்றோதான் என்கிறார் மீடோவ்ஸ்.

ஏனென்றால் இதற்கும் பயிற்சி தேவை ஆனால் குறுகிய காலத்தில் இதனை கற்றுக் கொள்ளலாம்.

"குட்டித்தூக்கம் மட்டுமே போதும் என்றால் பத்து நிமிடத்திற்கு நீங்கள் அலாரம் வைத்து கொள்ள வேண்டும். நீங்கள் தினமும் ஒரே நேரத்தில் தூங்கினால் உங்கள் உடலும் அதற்கு பழகிக் கொள்ளும்" என்கிறார்.

மூன்று மாதங்களில் இதில் நீங்கள் கை தேர்ந்தவர் ஆகிவிடலாம்.

முக்கியமான விஷயம் உங்களை நீங்களே தூங்க வேண்டும் என வற்புறுத்தக் கூடாது. மெத்தையிலோ அல்லது நாற்காலியிலோ அல்லது ஏதேனும் ஒரு வசதியான இடத்திலோ அமர்ந்து கொண்டோ அல்லது படுத்துக் கொண்டோ உறங்கலாம். அறை இருட்டாக இருக்க வேண்டும். உங்களின் கண்களை ஏதேனும் மாஸ்கை கொண்டு மூடிக்கொள்ளலாம். அந்த தருணத்தை பயன்படுத்தி ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்.

அதேபோன்று குட்டித்தூக்கத்திற்கு ஐந்து நிமிடங்கள் முன்பு அலைப்பேசி பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். மூச்சை இழுத்து விடுங்கள். தண்ணீர் குடிக்கலாம். சுருக்கமாக சொல்லப்போனால் 'வசதியாக ஓய்வெடுங்கள்'.

உங்களை மறந்து தூங்குவீர்கள்

 

பெண் தூக்கம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சிலர் தங்களுக்கு எளிதில் தூக்கம் வராது என்பதால் ஒரு நாளின் இடையில் 15 நிமிடங்களுக்கு மட்டும் தூங்குவது என்பது இயலாத காரியம் என்கின்றனர். ஆனால் நாம் நம்மை அறியாமலேயே தூங்கி விடுகிறோம் என்கிறார் மிடோவ்ஸ்.

"பலரை தூங்கச் செய்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், அவர்கள் தூக்கத்தின் முதல் கட்டத்தில் இருக்கும்போது அவர்களை எழுப்பி அவர்கள் விழித்து கொண்டிருந்தனரா அல்லது தூங்கிக் கொண்டிருந்தனரா என்று கேட்டபோது 65 சதவிதம் பேர் அவர்கள் விழித்துக் கொண்டிருந்ததாகதான் தெரிவித்தனர்."

"எனவே இம்மாதிரியான தூக்கத்தில் நாம் தூங்குகிறோம் என்பதை பலர் அறியவில்லை" என்கின்றனர் நிபுணர்கள்.

அதேபோல தூங்குவதால் மட்டும் நமக்கு பலன் அல்ல. 10-20 நிமிடங்கள் நமது கண்ணை மூடிக் கொண்டிருப்பதாலும் நமக்கு நன்மையே.

இது இரவில் தூங்கியவர்கள் தூங்காதவர்கள் என இருவருக்குமே நன்மை தரும்.

மாற்று வழிகள்

பல வலைத்தளங்களில் குட்டித்தூக்கத்திற்கு முன்பு காஃபி குடிப்பது பயன் தரும் என்கின்றனர். ஏனென்றால் குடித்த 20 நிமிடங்களுக்கு பிறகுதான் கெஃபைனின் தாக்கம் உடலில் தெரிய தொடங்கும்.

ஆனால் இது நல்ல யோசனை அல்ல என்கிறார் சார மெட்நிக்.

"இந்த குட்டித்தூக்கம் என்பதே ஆற்றல் பெறுவதற்குதான். ஆனால் மதிய வேளையில் காஃபி என்பது தவறான யோசனை" என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

மெட்நிக் மற்றும் அவரின் சக பணியாளர்கள் 2008ஆம் ஆண்டு நடத்திய ஒரு ஆய்வில் 200மிகி கெஃபைனின் தாக்கத்துடன் 60-90 நிமிட தூக்கத்தின் தாக்கத்தை ஒப்பிட்டனர்.

அதில் தூக்கம் மட்டுமே பலன் தந்தது என்றும் காஃபியால் எதிர்மறை தாக்கங்களே ஏற்பட்டன என்றும் கண்டறியப்பட்டது.

 

தியானம் செய்யும் பெண்

பட மூலாதாரம்,GETTY IMAGES

குட்டித்தூக்கம் போட இயலாதவர்களுக்கு சிந்தனை திறன் மேம்படும் பயன் கிடைக்கவில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மக்கள் குட்டித்தூக்கத்தை வெறுக்கிறார்கள் அல்லது நேசிக்கிறார்கள்.

சிலருக்கு இது தங்களின் நாளை மீண்டும் ஆற்றலுடன் தொடங்குவதற்கான உந்துதலை தருகிறது ஆனால் சிலருக்கு இது தவறான ஒரு ஓய்வு முறையாக தெரிகிறது.

எனவே இவர்கள், நடப்பது, உடற்பயிற்சியில் ஈடுபடுவது அல்லது தியானம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள் என மெட்நிக் தெரிவிக்கிறார்.

https://www.bbc.com/tamil/global-59796545

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.